இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா பள்ளி வளாகத்தில் அனைத்து சமுதாய மக்கள் சார்பாக இப்தார் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கைராத்துல் ஜலாலியா பள்ளி தாளாளர் டாக்டர்.சாதிக் தலைமை வகித்தார்.
இஸ்லாமியா பள்ளி தாளாளர் முகைதீன் இப்ராகிம் முன்னிலையில் வகித்தார். மேலும் தொழிலதிபர் கே.ஆர்.டி.கிருஷ்ண மூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார். கீழக்கரை தாசில்தார் தமீம்ராஜா, ஆணையர் வசந்தி, தொழிலதிபர் உமர் அப்துல் காதர் மற்றும் விசிக, எஸ்.டி.பி,ஐ, காங்கிரஸ், மஜக, உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.