குளு குளு குற்றால சீசன் ஆரம்பம்.. மக்கள் ஆர்வத்துடன் படையெடுப்பு …

கடந்த இரண்டு வாரங்களாக கேரள பகுதி மற்றும் தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், புளியரை, மேக்கரை, அச்சன்புதூர், வடகரை உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

இந்த மழையின் காரணமாக வறண்டு கிடந்த குற்றாலம் மெயின் அருவியிலும், ஐந்தருவியிலும் நீர்விழத் தொடங்கியுள்ளது. வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் கடும் கோடை வெயிலினால் அவஸ்தை பட்டு வந்த மக்கள் இந்த அருவிகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். இந்த வருடம் குற்றால அருவியின் விருந்து குறைந்தது 4 மாதங்களுக்காவது இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..