கீழக்கரை நகரில் இந்திய தவ்ஹீத் ஜமா அத் சார்பாக நேற்று (26-03-2017) தெற்குத் தெருவில் மாலை 07.00 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் தக்வா முகைதீன் தலைமை ஏற்றிருந்தார். மாநில செயலாளர் ரஸ்தா செல்வம் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் மாநில தலைவர் எஸ்.எம். பாக்கர், மாநில செயலாளர் முகம்மது முஹிய்யித்தீன், மாவட்ட பேச்சாளர் முகம்மது யூசுஃப் ஆகியோர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள், துணை செயலாளர்கள், மாவட்ட துணைத் தலைவர்கள், பொருளாளர் மற்றும் பொதுமக்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.
மேலும் இந்தப் பொதுக் கூட்டத்தில் கீழக்கரை நகர் சார்ந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாகவும் இந்திய முஸ்லிம்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக அரசாங்கத்தின் பார்வைக்கு எட்டும் வகையில் மிஸ்ரா அறிக்கை பாபரி மசூதி இடிப்பு சம்பவம் முஸ்லிம்களின் வாழ்வுரிமை கீழக்கரை நகராட்சியின் முறைகேடுகளை சுட்டிக் காட்டி பொதுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
You must be logged in to post a comment.