இன்று (15-03-2017) உலகம் முழுவதும் சர்வதேச நுகர்வோர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இது தொடர்மாக அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் நுகர்வோரின் உரிமை மற்றும் அதன் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செய்து வருகிறார்கள்.
அதன் தொடர்பாக இன்று கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி சார்பில் சர்வதே நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்ந கருத்தரங்கு வணிகவியல் துறை ( Department of Business Administration) சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் சுமையா தாவூத் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பரமக்குடி நுகர்வோர் பாதுகாப்பு கழகத்தின் நிர்வாகி மாதவன் கலந்தது கொண்டு சிறப்புரை வழங்கினார். மேலும் நிகழ்ச்சியின் முக்கிய பகுதியாக துறை வல்லுனர்களும், கல்லூரி மாணவிகளும் சிறப்புரையாற்றினர்.
மேலும் இந்நிகழ்ச்சியின் பல்வேறு துறை பேராசிரியர்கள், மாணவிகள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.