6
கீழக்கரை கிழக்கு தெரு ஹைராத்துல் ஜலாலியா மேனிலை பள்ளியில் இன்று தடுப்பூசி போடப்பட்டதாகவும், பிஸ்கட் சாப்பிட்டதாகவும், அதனால் பள்ளி மாணவ மாணவிகள் மயங்கி விழுந்ததாகவும் பீதி கிளம்பியுள்ளது. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் உண்மை நிலையை அறிய பள்ளிக்கு வந்து தங்கள் பிள்ளைகளை பார்த்து சென்றனர்.
இது குறித்து பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ”வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இன்று யாருக்கும் தடுப்பூசி போடவில்லை. எவ்வித அசம்பாவித சம்பவமும் இங்கு நிகழவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக கீழக்கரை காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி மற்றும் காவல் துறை அதிகாரிகள் பள்ளிக்கு வருகை தந்து பீதி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
You must be logged in to post a comment.