Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை தாலுகாவில் குடும்ப அட்டையுடன் ஆதார் இணைக்கும் பணிகள் மும்முரம் – ஏப்ரலில் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு

கீழக்கரை தாலுகாவில் குடும்ப அட்டையுடன் ஆதார் இணைக்கும் பணிகள் மும்முரம் – ஏப்ரலில் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு

by ஆசிரியர்

கீழக்கரையில் தற்போது தாலுகா வட்ட வழங்கல் அலுவலகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்திற்காக ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து துணை வட்டாட்சியர் தமீம் ராசா கூறுகையில் ”ஆதார் எண்ணை இணைக்காத குடும்ப அட்டைதாரரர்களுக்கு உணவுப் பொருள் வழங்குவது தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக கடந்த டிசம்பர் மாதம் 15 தேதிக்கு முன்னதாக பெறப்பட்ட மனுக்களுக்கு மட்டுமே தற்போது பதிவு நடைபெற்று வருகிறது. 15ஆம் தேதிக்கு பின்னர் பெறப்பட்ட மனுக்களும் விரைவில் இணைக்கும் பணிகள் நடைபெற்று அனைவருக்கும் தங்கு தடையின்றி உணவுப் பொருள்கள் விநியோகம் செய்யப்படும். குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்தார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!