தமிழகமெங்கும் சமீப காலமாக ரூபெல்லா தடுப்பூசி பற்றிய சரியான புரிதல்கள் இல்லாமல் மக்கள் மத்தியில் ஒரு வகையான குழப்ப நிலை நிலவி வருகிறது. அதை நிவர்த்தி செய்யும் வண்ணம் இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் இன்று (01.02.2017) பகல் 2 மணியளவில், ரூபெல்லா தடுப்பூசி பற்றிய விவரங்கள் மற்றும் பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விரிவான விளக்கம் அளிக்க விழுப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த விளக்க கூட்டத்தில் மாவட்ட சுகாதார துறை அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் திரு மீனாட்சிசுந்தரம், திரு ராசிக்தீன் (BMO), திருமதி முவாபியா (MO) ஆகியோர் மற்றும் பள்ளி உயர்நிலை நிர்வாகிகளும் பங்கேற்று பொதுமக்கள் மற்றும் பெற்றார்களுக்கு தடுப்பூசி சம்பந்தமான சந்தேகங்களுக்கு நீக்கும் வண்ணம் விளக்கங்களை அளித்தனர்.
இக்கூட்டத்தில் ஏராளமான பள்ளியின் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பெருவாரியான பொதுமக்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இந்நிகழ்ச்சியை பள்ளி நிர்வாகத்தினர் சிறந்த முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர்.
You must be logged in to post a comment.