Home கட்டுரைகள் இன்று தியாகிகள் தினம், சுதந்திர தியாகத்தில் இஸ்லாமியர் பங்கு..

இன்று தியாகிகள் தினம், சுதந்திர தியாகத்தில் இஸ்லாமியர் பங்கு..

by ஆசிரியர்

ஜனவரி 30 இந்திய நாட்டின் தந்தை என்றழைக்கப்படும் காந்தியடிகள் மூச்சு நிறுத்ப்பட்ட நாள். அதுவே இன்று தியாகிகளின் திருநாளாக நினைவு கூறப்படுகிறது. ஆனால் அதே நாளில் மூச்சை நிறுத்தியவர்களின் பேரணியும் நடத்துவது அந்த தியாகத்தினை கொச்சைப் படுத்துவதாகவே இருக்கிறது. நம் நாட்டின் சுதந்திர போராட்ட தியாகிகளின் ஒவ்வொருவரின் தியாகத்தின் பின்னாலும் நிச்சயமாக ஒரு இஸ்லாமியனின் பங்களிப்பு உறுதியாக இருந்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.

நம் ஊர் கப்பலோட்டிய தமிழனுக்கு முதலில் பொருளாதாரத்தை வாரி வழங்கியவர் ஹாஜி பக்கிர் அகமது எனும் இஸ்லாமியர். அவர்கள் கொடுத்த தொகை அந்த காலத்தில் இரண்டு லட்ச ரூபாய் என்பது சரித்திரம் படித்தவர்களுக்கு தெரியும்.

காந்தியடிகள் வெள்ளையர்கள் கொடுத்த பட்டத்தை துறக்க வேண்டும் என்று அறிவுறுத்திய பொழுது அதிகளவில் பட்டங்களைத் துறந்தர்வர்கள் முஸ்லிம் சமுதாயம்தான். ஆங்கிலேயர் பட்டத்தை துறக்க மனமில்லாமல் பலர் இருந்த நேரத்தில் காயிதே மில்லத் அவர்கள் தன்னுடைய சட்டப்படிப்பை பாதியில் நிறுத்தி தேச பக்தியை வெளிகாட்டினார் அவ்வாறு அவர் செய்யாமல் இருந்திருந்தால் அவரும் ஒரு பாரிஸ்டர் ஆகியிருப்பார்.

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அமைத்த இந்திய தேசிய ராணுவத்தின் முதல் ராணுவ ஜெனரலாக நியமிக்கப்பட்டவர் ஷா நவாஸ் கான் என்ற இஸ்லாமியர். அதே போல் இவருடைய ராணுவ படை அமைக்க பொரும் பொருள் உதவி செய்தவர் ரங்கூனில் இருந்த இந்திய வியாபாரி வள்ளல் ஹபீப் அவர்கள் கொடுத்த தொகை அந்த காலத்தில் ஒரு கோடி ரூபாய். நேதாஜி அவர்கள் அமைத்த மாதிரி மந்திரி சபையில் இருபது மந்திரிகள் இருந்தனர் அதில் ஐந்து பேர் இஸ்லாமியர் என்பதும் வரலாறு.

மகாத்மா காந்தி கள்ளுக் கடை மறியல் அறிவித்த பொழுது மதுரையில் பங்கேற்றவர்கள் பத்தொன்பது பேர் இதில் இஸ்லாமியர் பத்து பேர் என்பது குறிப்பிடதக்கது.

இந்திய நாட்டின் விடுதலைக்கு இஸ்லாமியப் பெண்களம் குறிப்பிடதக்க பங்களிப்பைச் செய்துள்ளார்கள். உதாரணமாக சுதந்திர இந்தியாவின் தேசிய கொடியை வடிவமைத்தவர் திருமதி.பத்ருதீன் தியாப்ஜி ஆவார்.

இஸ்லாமியர்களின் இத்தகைய அர்பணிப்பினாலயே இந்தியா விடுதலைப் போராட்டம் முக்கயத்தும் பெற்றது என்பதை குறிப்பிட எழுத்தாளர் குஷ்வந்த சிங் பின்வருமாறு எழுதுகிறார் “இந்திய விடுதலைக்காக சிறை சென்றவர்களிலும் உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாசாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிமாகவே இருந்தது. ” ( இல்லஸ்டிரேட் வீக்லி 2912-1975).

அதே சமயம் மௌலானா அபுல் கலாம் ஆசாத், ரபிக் அகமத் கித்வாய், காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் போன்றவர்கள் இந்திய விடுதலைக்காக போராடியது மட்டும் அல்லாமல் நம் தேசத் தந்தையான காந்தியடிகளுடன் ஹிந்து முஸ்லிம் நல்லிணக்த்திற்காக பொரும் பாடுபட்டிருக்கிறார்கள் என்றால் மிகையாகாது. நாம் இங்கு உதாரணத்திற்காக சில பேர்களுடைய சரித்திரத்தைக் குறிப்பிட்டுள்ளோம், அனைவருடைய சரித்திரத்தையும் பட்டியலிட்டால் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் காலத்தின் கோலம் உண்மையாக விடுதலைக்காக தியாகம் செய்தவர்களின் வரலாறு மறக்கடிக்கப்பட்டு இருட்டடிக்கப்பட்டு இன்று வெள்ளையனுக்கு துணை போனவர்கள் விடுதலை தியாகிகளாக சித்தரிக்கப் படுவது மிகவும் வேதனைக்குரிய விசயம் ஆனால் உண்மைளை உரக்கச் சொல்வது ஒவ்வொரு உண்மையான இந்தியனின் தலையாய கடமையாகும்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!