ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 04 ல் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அன்பு கிளினிக் எதிர்புற பகுதியில் 8 நபர்களை நாய் கடித்தது தொடர்பாக பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் அடிப்படையில் நகராட்சி பணியாளர்களைக் கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 7 நாய்கள் பிடிக்கப்பட்டு நகராட்சிக்கு சொந்தமான பள்ளமோர்க்குளம் ABC மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் கீழக்கரை கால்நடை மருத்துவமனை மருத்துவரிடம் நாய்களுக்கு ரேபீஸ் நோய் தொற்று ஏதும் உள்ளதா என்று கண்டறிந்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நகராட்சி சார்பாக வேண்டுகோள் விடப்பட்டது . அதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர் நேரில் பார்வையிடப்பட்டு இராமநாதபுரம் மண்டல இணை இயக்குநர் கால்நடை மருத்துவதுறை அலுவலர் முன்னிலையில் ரேபீஸ் நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் உணவு வழங்கப்பட்டு (10 நாட்கள்) கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது . இதில் கீழக்கரை நகராட்சி சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா கால்நடை மருத்துவர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Category:
மருத்துவம்
செய்திகள்கீழக்கரை செய்திகள்கீழக்கரை மக்கள் களம்நகராட்சிநிர்வாகம்மருத்துவம்மாநில செய்திகள்மாவட்ட செய்திகள்
சேப்பங்கிழங்கில்,இவ்ளோ இருக்கா.?ரத்த சோகை முதல் நீரிழிவு வரை போக்கும் சேப்பங்கிழங்கு..
by Askar
written by Askar
சேப்பங்கிழங்கில்,
இவ்ளோ இருக்கா.?
ரத்த சோகை முதல் நீரிழிவு வரை போக்கும் சேப்பங்கிழங்கு..
சேப்பங்கிழங்கை சாப்பிட்டு வந்தால், சாகும்வரை கண்களுக்கு எந்தவிதமான கோளாறுகளும் நெருங்காதாம்.. அந்தவகையில், கிழங்கு மட்டுமல்ல, சேப்பங்கிழங்கின் இலைகளும் பெருத்த நன்மைகளை தரக்கூடியவை.
சேப்பங்கிழங்கை வைத்து அமெரிக்காவில் ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அந்த ஆய்வில், புற்றுநோய்க்கு எதிராக சேப்பங்கிழங்கு செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக, சேப்பங்கிழங்கில் உள்ள கிரிப்டோக்சாந்தின், நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், வாய் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை குறைக்கிறதாம்.
அதேபோல, சேப்பங்கிழங்கை சாப்பிட்டு வருபவர்கள் கண் கண்ணாடி அணிய வேண்டிய அவசியமே ஏற்படாது.. காரணம், பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டிஆக்சிடெண்ட் இந்த சேப்பங்கிழங்கில் உள்ளதால், கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது..
புரதம், கொழுப்பு, தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்களை கொண்டது இந்த சேப்பங்கிழங்கு. 132 கிராம் வேகவைத்த ஒரு கப் சேப்பங்கிழங்கில் 187 கலோரிகள் இருகிறது.. இதர சத்துகளும் இதில் அடங்கும். கால்சியம் நிறைந்த சேப்பங்கிழங்கு, பற்களுக்கும் எழும்புகளுக்கும் நல்லது.. நார்ச்சத்து நிறைந்த உணவு என்பதால், அஜீரண கோளாறுகள் நீங்குகிறது.. இதனால் மலச்சிக்கல் தீர்கிறது.. இதனால் உடல் எடையும் குறைகிறது.
நரம்பு தளர்ச்சியையும், சரும சுருக்கத்தை இந்த சேப்பங்கிழங்கு சரி செய்கிறது.. உடல் பலவீனமாக இருப்பவர்கள், வாரம் ஒருமுறையாவது இந்த கிழங்கை சமைத்து சாப்பிட்டு வரலாம். இதிலுள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்வதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்குகிறது.
வயிற்றிலுள்ள பூச்சிகளை ஒழிக்க இந்த கிழங்கு துணைபுரிகிறது.. அரிப்பு, அலர்ஜி போன்ற தோல் பிரச்சனைகள் குழந்தைகளுக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், 2 வயதுக்கு பிறகு அவர்களுக்கு சாப்பிட தரலாம்.
சேப்பங்கிழங்கை போலவே, அதிக சத்துக்களை கொண்டது அதன் இலைகள்.. சேப்பங்கிழங்கு இலையில் புரதம், இரும்புச்சத்து, துத்தநாகம், தாமிரம், மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.. பாம்புக்கடி, தேள்கடி போன்ற நச்சுத்துன்மையை முறிக்கும் தன்மை இந்த இலைக்கு உள்ளது.
பெண்களுக்கு வரும் மார்பக புற்று நோய் வராமல் தடுக்கவும் இந்த இலை துணைபுரிகிறது.. முக்கியமாக, உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் இந்த இலையை சமைத்து சாப்பிட்டு வரலாம். அதேபோல, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதால், நீரிழிவு நோயாளிகளும் இந்த கிழங்கை எடுத்து கொள்ளலாம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மாரடைப்பால் நின்று போன இதயத்துடிப்பை சீராக்கும் கருவி மதுரை ரயில்வே ஜங்ஷனுக்கு வழங்கல்
by mohan
written by mohan
மாரடைப்பால் நின்றுபோன இதயத்துடிப்பை சீராக்கும் கருவி சாமானியர்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் இக்கருவியை ரயில் பயணிகளின் பயன்பாட்டிற்காக தெற்கு ரயில்வே கோட்டம் மதுரை ரயில் நிலையத்தில் ஆக்டிவ் ஹார்ட் பவுண்டேஷன் நிறுவனம் (வேலம்மாள் மருத்துவமனை) சார்பில் நிறுவப்பட்டுள்ளது. இக்கருவி மூலம் நின்றுபோன நோயாளியின் இதயப் பகுதியில் ஷாக் கொடுத்து இதயத்துடிப்பை சீராக்க முயற்சி செய்வர். இச்சிறிய கருவி விபத்து போன்ற அவசர நேரங்களில் மருத்துவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இக்கருவியை மருத்துவ பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் . ஆனால் இப்பொழுது சாதாரண மக்கள் கூட ஒரு சிறிய பயிற்சியின் மூலம் அவசர காலத்தில் இக் கருவியை பயன்படுத்த முடியும். இக்கருவியில் உள்ள பட்டைகளை பாதிக்கப்பட்டவரின் நெஞ்சின் மீது வைத்து அழுத்த செய்யும்பொழுது அவர்களின் இதயத்துடிப்பை கணித்து இதயத்துடிப்பு சீராக இல்லை என்றால் அதற்கேற்ப மின் அதிர்ச்சியை ஏற்படுத்தி இதயத் துடிப்பை சீராக்கும். இதன் மூலம் சிறந்த இதயத் துடிப்பு அல்லது இதயம் திடீரென்று நின்று விட்டால் மீண்டும் இதயத்தை இயக்க வைக்க முடியும்.
டாக்டர் மாதவன் ஆக்டிவ் ஹார்ட் பவுண்டேஷன் (வேலம்மாள் மருத்துவமனை) வரவேற்றார். கூடுதல் கோட்ட மேலாளர் ஓ.பி.ஷா டிக்பிப்ரிலேட்டர் கருவியை பெற்றுக்கொண்டார் .
தலைமை மருத்துவ அதிகாரிடாக்டர் ஜீ. சாஹு கூடுதல் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பத்மலமா, மதுரை ரயில் நிலைய இயக்குனர் சச்சின் குமார், மற்றும் ரயில்வே அதிகாரிகள்ல் பங்கு கலந்துகொண்டனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அனைத்து பூச்சி மற்றும் பிற விஷ உயிரினங்கள் கடிகளுக்கான எளிய இயற்கை மருத்துவம். மிக முக்கிய குறிப்பு குறிப்பெடுத்து பாதுகாத்து கொள்ளுங்கள்*
எந்த விஷ கடிக்கும் உடனே அலோபதி மருத்துவத்தை நாடும் சூழலில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய எளிய அனுபவ மருத்துவ
குறிப்புகளை தொகுத்துள்ளேன்.. பயன்படுத்தி பலன் பெறுங்கள்…எளிதில்
கிடைக்காத சில மூலிகை செடிகள் இருந்தால் அவற்றை வீட்டில் வளர்ப்பது நல்லது.
தேன் குளவி கொட்டியதற்கு…….*
தேய்க்க கூடாது விஷம் இறங்கி வலி அதிகமாகும்.முள்ளை எடுத்துவிட்டு கொடுக்கு இருந்தாலும் எடுத்துவிட்டு மண்ணெண்ணெய் கடித்த இடத்தில் தேய்க்கவும்…
பூரான் கடிக்கு………*
பூராண் கடித்து விட்டால் விஷம் பரவி தடிப்பு ஏற்படும் அரிப்பு எடுக்கும்….சுண்ணாம்பு மஞ்சள், உப்பு 3 ஐயும் சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் தேய்த்து கொண்டே இருந்தால் விஷம் இறங்கும்…
பூனை கடித்து விட்டால்….*
பூனை கடித்து விட்டால் மஞ்சள் சுண்ணாம்பு இவைகளை சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் பூச குணமாகும்…
கம்பளி பூச்சி கடி…*
ரோமம் பட்ட இடத்தில் அரிப்பு விக்கம் ஏற்படும்.
நல்லெண்ணெய் தேய்த்து வர அரிப்பு குறையும்.
அல்லது
முருங்கை இலை சாறு தேய்க்கவும் அல்லது வெற்றிலை சாறு தேய்க்க குணமாகும்
எறும்பு கடிக்கு*
கடித்த இடத்தில் வெங்காயத்தை தேய்த்து வர குணமாகும்.
வண்டு கடித்து விட்டால்…..*
பப்பாளி இலையை கசக்கி கடித்த இடத்தில் தேய்த்து தடிமனாக பற்று போல குணமாகும்..3 நாட்கள் செய்ய வேண்டும்…
அல்லது துளசி சாறு எலுமிச்சை சாறு சம அளவு எடுத்து தடவ குணமாகும்.
சிலந்தி கடித்து விட்டால்…..*
தானாக வந்து கடிக்காது.உடலில் ஏறினால் கடித்து விடும். ஆடாதோடை இலை 25 கிராம் எனில் பச்சை மஞ்சள்+ மிளகு இரண்டும் சேர்த்து 25 கிராம் அரைத்து கடித்த இடத்தில் தேய்க்க குணமாகும்…
தேள் கொட்டியதற்கு மற்றும் பொதுவான விஷ முறிவு*
இரண்டு வெற்றிலை 6 மிளகு மென்று சாப்பிட உடன் விஷம் இறங்கும்.
எலி கடித்தால்….*
உடல் அரிப்பு இருக்கும் கண் சிவந்து காணப்படும்.
குப்பைமேனி இலையை நன்றாக அரைத்து எலி கடித்த இடத்தில் தினமும் காலையும் மாலையும் பூசி வந்தால், எலி கடி விஷம் இறங்கும்.
பெருச்சாளி கடி விஷம் குறைய*
திப்பிலி, செஞ்சந்தனம் இவ்விரண்டையும் இடித்துப் பொடித்துச் சலித்து சூரணத்தை பத்திப்படுத்திக் கொண்டு அதில் கால் டீஸ்பூன் அளவாகத் தேனில் குழைத்து ஒருநாள் இருவேளை வீதம் ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் பெருச்சாளி கடி விஷம் குறையும்.
அரணை கடித்தால்..*
பனை வெல்லம் 100 கிராம் சாப்பிட விஷம் முறியும்
குரங்கு கடித்தால் *
கொழுஞ்சி வேர் ,சுக்கு சம அளவு எடுத்து 5 கிராம் 3 நாட்கள் சாப்பிட குணமாகும்.
குதிரை கடி*
அமுக்கிரா கிழங்கு சூரணம் செய்து 2 வேளை சிட்டிகை அளவு தேனில் கலந்து சாப்பிடவும்…அவுரி சமூலம் எடுத்து அரைத்து சாறு எடுத்து கடித்த இடத்தில் பற்று போட சில நாட்களில் குணமாகும்.
நாய் கடி*
சுக்கு 10 கிராம், மிளகு 10 கிராம், வசம்பு 10 கிராம், முருங்கை ஈர்க்கு 10 கிராம் ஆகியவற்றை 500 மில்லி தண்ணீரில் போட்டு எட்டில் ஒன்றாய் கஷாயம் செய்து எடுத்து குடித்து வந்தால் வாந்தி நின்று நாய் கடி விஷம் குறையும்.
அல்லது
வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி பிறகு வெங்காய சாறை குடிக்க நாய்க்கடி விஷம் குறையும்.
பாம்பு கடிக்கு…*
கடித்த பாம்பை பொறுத்து மருந்தும் மருத்துவமும் மாறுபடும்.
பொதுவாக கடிபட்ட இடத்தில் பாம்பின் ஒரு பல் பதிந்திருந்தால் அது தோலை மட்டும் தான் பாதித்திருக்கிறது என்றும், இரண்டு பல்லும் பதிந்திருந்தால் அது சதையை பாதிக்கும் என்றும், மூன்று பல் பட்டால் அது எலும்பை பாதிக்கும் என்றும், நான்கு பல் பட்டால் மூளையை பாதிக்கும் என்றும் சொல்வார்கள். பொதுவாக பற்குறி அழுத்தமாக தெரிந்தாலோ, கடிபட்ட இடம் கூர்மையான தீக்கனலில் காட்டிய ஊசியை இறக்கியது போல் எரிச்சலாக இருந்தாலே கடியின் வேகம் அதிகம் என்று தெரிந்து கொள்ளலாம்.
இப்படி இருக்கும் நிலையில் கிராமப்புறங்களில் விரலி மஞ்சளை நெருப்பில் காட்டி அது தணலாக இருக்கும் போது இந்த மஞ்சளின் எரிந்து கொண்டிருக்கும் பகுதியை வைத்து கடிவாயில் அழுத்துவார்கள். இதனால் பாம்பின் நஞ்சு முறிந்து விடும் என்கிறார்கள் அனுபவ வைத்தியர்கள்.
பாம்பு கடிபட்டவருக்கு ஆமணக்கு இலைகளுடன், ஏழு மிளகை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து உள்ளுக்குள் கொடுத்தால் பாம்பின் நஞ்சு ஏறாது. மணிக்கு ஒரு தடவை இந்த மருந்தை கொடுத்து வரவேண்டும். இந்த பச்சிலை மருந்து வாந்தியை ஏற்படுத்தி நச்சை நீங்க செய்யும். பாம்பு கடித்த நபரை எக்காரணம் கொண்டும் தூங்க விடக்கூடாது. உப்பு, புளி, காரம், எண்ணெய் நீக்கிய வெறும் பச்சரிசியும், பாசிப்பயறும் சேர்த்து பொங்கல் செய்து சாப்பிட தரவேண்டும். பாம்பு கடி பட்டவர் மூர்ச்சையாகி விட்டால் தும்பை செடியை கசக்கி பிழிந்து சாறு எடுத்து அவரது மூக்கினுள் சிறிது விட வேண்டும். இதனால் மூர்ச்சை தெளிந்து விடும். இது தவிர அருகம் புல்லை வெண்ணெய் போல் அரைத்து கடிபட்ட இடத்தில் வைத்து கட்டினால் பாம்பின் நஞ்சு இறங்கி விடும். அருகம்புல்லின் வாசனை மூர்ச்சையை தெளிய வைக்கும்.
நஞ்சு இறங்கி கடிபட்டவர் ஒரளவு தெளிவான நிலையில் இருந்தால் அவருக்கு வேப்பிலையை வாயில் போட்டு மெல்ல சொல்ல வேண்டும். அப்போது கசப்பு தெரிந்தால் நஞ்சு வெளியாகி விட்டது என்று தெரிந்து கொள்ளலாம். இந்த நிலையில் தும்பை இலை, தும்பை பூ ஆகிய இரண்டையும இடித்து சாற்றை குடிக்க தரவேண்டும். இப்படியான நாட்டு வைத்திய முறையில் பாம்பு கடிபட்டவரை முதலுதவி செய்து காப்பாற்றி விடலாம்.
பாம்பு கடித்த பிறகு இந்த முதலுதவி செய்த பின் பாரம்பரிய மருத்துவரை சந்தித்து விஷ முறிவு சிகிச்சை பெறுவது நல்லது.
மனித கடிக்கு….*
மனிதர்கள் சில நேரம் தற்காப்பிற்காக சண்டை போடும் போது கடித்து விடுவதுண்டு.விஷம் ஏறும் வாய்ப்பும் உள்ளது. அப்படி கடிப்பட்டால் கடிவாயில் கடுகடுப்பு எரிச்சல் தலைவலி மயக்கம் வந்தால் அவுரி வேர் 10 கிராம் நன்னாரி 10 கிராம் என சம அளவு எடுத்து அரைத்து கடிபட்ட இடத்தில் பூசி வர குணமாகும்.
கை மேல் பலன் கண்ட இந்த எளிய மருத்துவ முறைகளை படித்து பலன்பெறுங்கள்
குறிப்புகளை பாதுகாத்து வைத்து கொள்ளுங்கள்
மேலும் பல மருத்துவ ஆலோசனைகள் பெற எங்கள் ஆண்கள் பெண்களுக்கான தனித்தனி மருத்துவ ஆலோசனை குழுவில் இணையலாம்
நன்றி மருத்துவர்.அப்துல் ஜலீல்
தொகுப்பு
அ.சா.அலாவுதீன்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மரண வலி, இது புற்றுநோய்க்கே உரித்தான வலியின் மொழி. மாத்திரை, மருந்து, ஊசி என எதற்கும் கட்டுப்படாத கொடுமையான வலி புற்றுநோய் தரும் துயரம்.
இந்தியாவில் ஆண்டுதோறும் பத்து லட்சம் பேர் புதிதாக ஏதாவது ஒரு புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்; ஏழு லட்சம் பேர் புற்றுநோயால் இறக்கின்றனர்; 2020-ல் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என எச்சரிக்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR.).
ஏன் இந்த நிலை?
பல காரணங்கள்! முக்கியக் காரணம் புகைப்பழக்கம். நாட்டில் பதின்பருவத்திலிருந்தே பலரும் புகைபிடிக்கத் தொடங்குவதாகப் புள்ளிவிவரம் கூறுகிறது. நிகோடின், தார், அமோனியா, பீனால், கார்பன் மோனாக்ஸைடு, பாலிசைக்ளின் அரோமேட்டிக் ஹைட்ரோ கார்பன். இப்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட நச்சுகள் சிகரெட்டில் உள்ளன. இரும்புத் துருபோல் இவை உடல் செல்களை உறுத்திக்கொண்டே இருப்பதால், அங்குள்ள மரபணுக்களில் மாற்றம் ஏற்படுகிறது. அதனால் செல்கள் தங்கள் இயல்பான வளர்ச்சிப் படிகளைக் கடந்து, வரம்பு மீறிய வளர்ச்சிக்கு உள்ளாகி, புற்றுநோயை ஏற்படுத்துகின்றன. நுரையீரலில் புற்றுநோய் வருவது இப்படித்தான்.
பாக்கில் உள்ள நச்சுகள் வாய், நாக்கு, கன்னம், தொண்டை, உணவுக்குழாய் ஆகிய இடங்களில் புற்றுநோய் குடியேற ஏற்பாடு செய்கின்றன. குடிக்கும் மதுவின் நச்சுகள் கல்லீரல், இரைப்பை, குடல், மலவாய் ஆகியவற்றில் புற்றுநோயைக் குடிவைக்கின்றன. முன்பெல்லாம் வெயிலில் உழைத்துக் களைத்த பெண்கள் நீராகாரம், மோர்; ஆண்கள் பனைமரத்திலிருந்து இறக்கப்பட்ட சுத்தமான கள், பதநீர் ஆகியவற்றைக் குடித்து உடல் அலுப்பைக் குறைத்துக்கொண்டனர்.
இன்றைக்கோ உழைத்தாலும் உழைக்காவிட்டாலும், சாமானியர்களுக்கு டாஸ்மாக், சரக்கை வயிற்றில் இறக்கினால்தான் உறக்கம் வருகிறது. மத்தியமர்களுக்கு மாலை நேரக் கேளிக்கை விருந்துகளுக்குச் செல்வது வழக்கமாகிவருகிறது. இதனால், புற்றுநோய் எனும் கொடிய நோய்க்குக் கொண்டாட்டம் கூடிவிட்டது. கடந்த அரை நூற்றாண்டில் நாட்டில் உணவுச் சந்தை பெரிய மாற்றம் கண்டுள்ளது. வீதி தோறும் பன்னாட்டு உணவுக் கடைகள். நம் பாரம்பரிய உணவுக் கடைகளையோ தேட வேண்டியுள்ளது. சில்லி பரோட்டாக்களின், சிக்கன் மஞ்சூரியன்களின் அந்நியச் சுவைதான் நமக்குப் பிடிக்கிறது. இதனால் இரைப்பை, குடல், மார்பு ஆகிய இடங்களில் புற்றுநோய் வருகிறது.
மேற்கத்திய நவீன உணவுகள் அனைத்தும் செயற்கை நிறமூட்டிகள், மணமூட்டிகள், இனிப்பூட்டிகள் போன்றவற்றால் தயாரிக்கப்படுபவை. நார்ச்சத்து இல்லவே இல்லை. வைட்டமின்கள் ரொம்பவும் குறைவு. இவற்றில் உள்ள அனிலின், ஆக்சைம், அமைட் போன்ற ரசாயனங்கள் நம் மரபணுக்களைச் சிதைக்கும் விஷங்கள். இதனால், பெருங்குடலில் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. பி.டி. விதைகள், பி.டி. பயிர்கள், பூச்சிக்கொல்லிகள்/ களைக்கொல்லிகள் எல்லாமே நம் மண்ணை மட்டும் அழிக்கவில்லை, மனிதர்களையும்தான்.
இன்று, நாட்டில் ஊட்டச்சத்துக் குறைவால் ஏற்படும் மரணங்களைவிட உடற்பருமனால் விளையும் மரணங்களே அதிகம். நம் உணவுக் கலாச்சாரம் சிதைந்துபோனது உடல் எடை அதிகரிப்புக்கு முக்கியமான காரணம். நம் உயரத்துக்குப் பொருத்தமற்ற வகையில் கூடும் எடையானது புற்றுநோய்க்கோ, நீரிழிவுக்கோ மாரடைப்புக்கோ விதை போடுகிறது.
புற்றுநோய் ஏற்படுவதற்கு வம்சாவளியும் ஒரு காரணம்தான். பெற்றோர், உற்றார் உறவினர்களில் யாருக்காவது புற்றுநோய் வந்திருக்குமானால், அவர்கள் வம்சத்தில் பிறப்பவர்களுக்கும் புற்றுநோய் வருகிற வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கிறது. மொத்தமுள்ள புற்றுநோய்களில் 4% இந்த வழியிலேயே வருகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது ஏற்கெனவே இருந்த சாதாரணக் கட்டிகள் புற்றுக் கட்டிகளாக மாற வாய்ப்புண்டு. வயதான காலத்தில் புற்றுநோய் வருவது இந்த வழியில்தான். சூரிய ஒளியின் புற ஊதாக்கதிர்கள் உடலுக்குள் அதிக நேரம் தங்கும் அளவுக்கு வெயிலில் அலைந்தால், சருமப் புற்றுநோய் வருவதுண்டு. எக்ஸ் கதிர்வீச்சு, அணுக்கதிர் வீச்சு காரணமாக ரத்தப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அணு உலை எதிர்ப்புகளுக்கு இதுதான் காரணம். நிக்கல், ஈயம், பித்தளை, இரும்பு, அலுமினியம் போன்ற உலோகங்களைத் தயாரிக்கும் தொழிலாளி.
பெண்களுக்கு சருமப் புற்றுநோய் வருவதற்கும், அமிலம், சாயம், ரப்பர், பென்சீன், ஆர்சனிக், காட்மியம், குரோமியம் போன்ற ரசாயனங்களைத் தயாரிக்கும் தொழிலாளிகளுக்கு நுரையீரல், குரல்வளை ஆகியவற்றில் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம். கடைசியாக ஒன்று. கால்வாசி புற்றுநோய்களுக்குக் காரணமே தெரிவதில்லை என்பதுதான் இன்றைய மருத்துவ உலகம் எதிர்கொள்ளும் சவால்!
உடலில் தோன்றும் கட்டிகள் எல்லாம் புற்றுநோய் ஆவதில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள்! அவற்றில் பெரும்பாலானவை கொழுப்புக் கட்டிகள், நீர்க்கட்டிகள், சருமச் சுரப்புக் கட்டிகள் என்று சாதாரணக் கட்டிகள்தான். இவை எந்தக் கெடுதலும் செய்வதில்லை. சில கட்டிகளைத் தவிர, மற்றவற்றை உடனடியாக அகற்றப்பட வேண்டிய அவசியமும் இல்லை. அதே நேரம், புற்றுக்கட்டி அப்படியில்லை. உடலுக்குப் பல வழிகளில் கெடுதல் செய்யும்; அருகிலுள்ள திசுக்களைப் பாதிக்கும்; உடலில் பல இடங்களுக்குப் பரவி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.
மரண வலி, மரண பயம் எனும் கொடுந்துயரங்களைக் கொடுக்கும். ஆனாலும், கொஞ்சம் கவனமாக இருந்தால், புற்றுக் கட்டிகளையும் கட்டுப்படுத்தலாம். எப்படி? அது அடுத்த வாரம்.
வேண்டாமே!
சாக்லேட் சாப்பிடுவது ஆபத்தை நாமாக வரவழைத்துக்கொள்ளும் செயல். 100 கிராம் சாக்லேட் 540 கலோரி தருகிறது. இது ஐந்து இட்லி சாப்பிடுவதற்கு சமம். இதில் 50 கிராம் சர்க்கரைஉள்ளது. இது ஐந்து கரண்டி வெள்ளைச் சர்க்கரையை அப்படியே வாயில் போடுவதற்குச் சமம். இதில் 30 கிராம் கொழுப்பு உள்ளது.சிக்கன் லெக் பீஸ் ஒன்று சாப்பிடுவதற்குச் சமம். இன்றைய குழந்தைகளுக்குப் பல்சொத்தை, உடற்பருமன், நீரிழிவு போன்றவை ஏற்படுவதற்கும் அதிகரிப்பதற்கும் சாக்லேட் ஒரு முக்கியக் காரணம்.
சாக்லேட்டில் உள்ள கஃபீன், மத்திய நரம்புகளைச் சிதைத்து இதயப் படபடப்பு, பதற்றம், விரல் நடுக்கம், ஒற்றைத் தலைவலி, மனச்சோர்வு, தூக்கமின்மை, மலச்சிக்கல் போன்ற பல பிரச்சினைகளைக் கொண்டுவரும். கர்ப்பிணிகளுக்குக் குறைப்பிரசவம் ஆவதற்கும் குழந்தை குறைவான எடையில் பிறப்பதற்கும் சாக்லேட் காரணமாகலாம். தாய்ப்பால் ஊட்டும் அம்மாக்கள் சாக்லேட் சாப்பிட்டால், குழந்தைக்கு அடிக்கடி மலம் போகும்.
அடுத்ததாக, தியோபுரோமின். இது உணவுக்குழாய் வால்வை சிதைத்துவிடும். இதனால் அடிக்கடி நெஞ்செரிச்சல் தலைதூக்கும். வயிற்றுப்புண் வரத் தொடங்கும். இதிலுள்ள ஆக்சலேட், சிறுநீரகக் கல்லை வெற்றிலைப்பாக்கு வைத்துக் கூப்பிடும்.
பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்!
புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, மார்பகப் புற்றுநோய் வராமல் தற்காத்துக்கொள்ள தன் இருபக்க மார்பகங்களையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றிக்கொண்ட செய்தியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தன் 37 வயதில் அவர் இத்தகைய வருமுன் காக்கும் சிகிச்சையை மேற்கொண்டதன் பின்னணியில் இருந்த மருத்துவக் காரணம் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் அதிகப்படுத்தியது.
ஏஞ்சலினா ஜோலியின் தாயார் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, பத்து வருடங்கள் கடுமையாகப் போராடி, 2007-ல் இறந்தார். இதனால் எச்சரிக்கை அடைந்த ஏஞ்சலினா ஜோலி, ஸ்கிரீனிங் எனப்படும் முன்னறிதல் பரிசோதனைகளை அடிக்கடி செய்துவந்தார். அப்போது, அவருக்கு பி.ஆர்.சி.ஏ.1மரபணுக்களில் குறைபாடு இருந்தது தெரியவந்தது. பி.ஆர்.சி.ஏ. 1&2 மரபணுக்களில் குறைபாடு காணப்பட்டால், பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய்க்கு 90% வாய்ப்பும், சினைப்பை புற்றுநோய் வருவதற்கு 50% வாய்ப்பும் உள்ளன. இதனால், ஏஞ்சலினா, வருமுன் காக்க மார்பகங்களை அகற்றும் அறுவை சிகிச்சையையும், அதைத் தொடர்ந்து மார்பக மறுசீரமைப்பு சிகிச்சையையும் (BREAST RECONSTRUCTION) மேற்கொண்டார்.
Dr.K.Ganesan
Source:- www.kamadenu.in
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு NASA சார்பாக வரும் செப்டம்பர் 8ம் தேதி ORGANIC BABY எனும் மெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி பெண்களுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி புதிதாக திருமணமான பெண்கள், குழந்தைப்பேறுக்காக காத்திருக்கும் பெண்கள், திருமண வாழ்கையில் அடி எடுத்து வைக்க போகும் பெண்கள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சி. பெண்களுக்காக இத்துறையில் அனுபவம் வாய்ந்த பெண்ணால் நடத்தப்படும் நிகழ்ச்சி. இந்நிகழ்வில் கலந்து கொண்ட பின் பெண்கள் பிரசவம் என்பது ஒரு சுகமான சுமைதான் தவிர, இன்று மருத்துவ உலகம் உருவாக்கியிருக்கும் கடினம் என்பது ஒரு மாயைதான் என்பதை உணர வைக்கும்.
இந்நிகழ்ச்சி கீழக்கரை வடக்குத் தெரு சமூக அமைப்பினரால் வரும் செப்டம்பர் 8ம் தேதி, *வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி வளாகத்தில்* ^மாலை 6 மணிக்கு* ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிற்ப்பு நிகழ்ச்சியை சகோதரி. லயான் நிஷா தொகுத்து வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சி நீங்கள் சாதாரணமாக கேட்கும் சொற்பொழிவு நிகழ்ச்சி அல்ல, ஆனால் உங்கள் வாழ்கை முறையை மாற்ற எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். அனைவரும் கலந்நு கொள்ளுங்கள் மற்றவருக்கும் பகிருங்கள்.
*அனுமதி இலவசம்*
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமியா பள்ளி மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் மருத்துவ முகாம்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மற்றும் மதுரை அகர்வால் கண் மருத்துவமனையும் இணைந்து இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம் வரும் சனிக்கிழமை (12-08-2017) அன்று தெற்கு தெரு இஸ்லாமியா பள்ளி வளாகத்தில் காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை முகாம் நடத்துகிறது.
இம்முகாமை கீழக்கரை துணை காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி துவக்கி வைக்கிறார். இஸ்லாமியா பள்ளி தாளாளர் MMK.இபராஹிம் தலைமை தாங்குகிறார்.
இம்முகாமில் கண்புரை, விழித்திரை விலகல், கண் கருவிழி மாற்று, கண் நீர் அழுத்த நோய் மற்றும் பிற நோய்களுக்கு ஆலோசனை வழங்குவதுடன் இலவச சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. மேலும் பெண்களுக்கு பெண் மருத்துவர்கள் பரிசோதனை செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் ‘மக்கள் மருந்தகம்’ திறப்பு – சகாயம் IAS வழிகாட்டுதலில் விற்பனை துவக்கம்
by keelai
written by keelai
ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் தரமான மருந்துகளை கிடைக்க செய்யும் உயரிய நோக்கில் தற்போது தமிழகம் முழுவதும் சகாயம் IAS வழிகாட்டுதலின் படி மக்கள் பாதை இயக்கத்தினரின் ஒத்துழைப்போடு ‘மக்கள் மருந்தகம்’ என்கிற பெயரில் ஜெனரிக் மெடிக்கல் திறக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கீழக்கரை கிழக்கு தெரு சிட்டி யூனியன் வங்கி அருகாமையில் நேற்று 28.04.17 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் மக்கள் மருந்தகம் திறப்பு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மக்கள் பாதை இயக்கத்தின் மாநில கள பணி ஒருங்கிணைப்பாளர் உமர் முக்தார் கலந்து கொண்டு மக்கள் மருந்தகத்தை திறந்து வைத்தார்.
கிழக்குத் தெரு ஜமாஅத் துணை தலைவர் ரமீஸ் தலைமை தாங்கினார். கிழக்குத் தெரு ஜமாஅத் துணை பொருளாளர் அஜிஹர் முன்னிலை வகித்தார். கீழக்கரை மக்கள் மருந்தகத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் முஹம்மது சாலிஹ் ஹுசைன், சட்டப் போராளி கல்வியாளர் ஜாபிர் சுலைமான் ஆகியோர் வரவேற்றனர். மக்கள் மருந்தகத்தின் மாநில ஆலோசகர் கண்ணன், இராமநாதபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சகோதரர் துரை,
மக்கள் பாதை இயக்கத்தின் இராமநாதபுரம் ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன், டாக்டர். அகமது யாசீன் (ஏர்வாடி மருந்தகம்), டாக்டர் ராஜா (மேலக்கிடாரம் மக்கள் மருந்தகம்), தஞ்சை ஷாஜஹான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கீழக்கரை மக்கள் மருந்தகத்தின் அட்மின் நதீர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு மக்கள் மருந்தகத்தின் திறப்பு விழா நிகழ்ச்சியை நிகழ்ச்சியை சிறப்பித்தனர். கீழக்கரை நகரில் மக்கள் மருந்தகத்தின் சேவைகள் சிறக்க கீழை நியூஸ் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சித்திரை வெயில்.. அக்னி நட்சத்திரம்.. நம் உடல் நலத்தில் அதிக சிரத்தை கொள்ள வேண்டிய மாதம்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் சித்திரை மாதத்துடன் அக்னி வெயிலும் தொடங்க இருக்கிறது. இந்த வருடம் பருவ மழை பொய்திருக்கும் நிலையில் வெயிலின் தாக்கமும் மிக உக்கிரமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் அக்னி வெயிலை எதிர்கொள்ள நம்மை நாமே இயற்கையான உணவு வகைகளுடன் தயார் படுத்திக்கொள்வது நலம். அக்னி உக்கிரத்தில் உடலை குளுமைப்படுத்தும் உணவு வகைகள் உங்கள் பார்வைக்கு:-
ஆரோக்கியமான கோடை கால உணவுகள், பயனுள்ள வழிமுறைகள்:-
தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலை குளிர்ச்சியாக்க முடியும். தண்ணீர் அதிகம் பருகுவதன் மூலம் ஈரப்பதம் எளிதில் ஆவியாவதை தவிர்க்க முடியும். ஏனெனில் வெப்பம் ஈரப்பதத்தின் மூலமாக வெளியாகி உடலை குளிர்ச்சியடையச் செய்கிறது. உங்களுக்கு தாகம் எடுக்கும் போது தான் தண்ணீர் பருக வேண்டும் என்று நினைப்பது சிறந்த சிந்தனை அல்ல. அவ்வப்போது ஹைட்ரேட் நிறைந்த தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களுடைய செயல் பாடுகள் நீங்கள் பருகும் தண்ணீர் மூலம் தான் அதிகரிக்கும். தண்ணீர் பருகாமல் இருந்தால் அது சோம்பேறித்தனத்தை ஏற்படுத்தும் ஆதலால் தண்ணீரை அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
கார்பனேற்றப்பட்ட பானங்கள், மது பானங்கள் போன்றவை கெட்டுப்போகாமல் இருக்கும் விதமாக வண்ணங்கள் மற்றும் சர்க்கரைகளை சேர்க்கின்றனர். அதனை பருகுவதன் மூலம் அமிலத்தன்மை நீர்ப்பெருக்கியாக செயல்பட்டு சீறுநீர் மூலமாக இழப்பை ஏற்படுத்தும். மிகுந்த குளிர்பானங்கள் செரிமானத்தை ஏற்படுத்தும் விதமாக நீர்த்த போஸ்பாரிக் என்ற அமிலத்தை கொண்டிருக்கிறது.
அதிகளவில் குளிர்பானங்கள் பருகும் போது இரத்தத்தில் பாஸ்பரஸ் அளவை அதிகரிக்கிறது. அதனால் பிரிக்கும் தன்மையுடைய கால்சியம் இரத்தத்திற்கு நகர்கிறது. உந்து விளைவை ஏற்படுத்தும். எலும்புகள் மற்றும் கால்சியம் இடப்பெயர்ச்சி நுண்துகள்களுடைய சிதைவு ஏற்படுகிறது. இதனால் பற்கள், சிறுநீரக கற்கள், கீல்வாதம் மற்றும் எலும்பு துருத்த மீது பிளேக் நோயை ஏற்படுகிறது. குளிர் பானங்களினால் என்சைம்கள் அஜீரணமாக்கப்பட்டு அதன் விளைவாக, உடல் இயங்க முடியாமல் தாது அளவு குறைகிறது..
நல்ல குளிரூட்டப்பட்ட திரவத்தை குடிக்காதீர்கள்.
கோடைகாலத்தில் அனைவரும் குளிர்ச்சியுடன் தான் இருக்க விரும்புவார்கள். அக்காலத்தில் புழுக்கமான சூழ்நிலையில் குளிர்ந்த திரவங்களை உட்கொள்வதன் மூலம் தோல் இரத்த நாளங்களில் சுருக்கம் ஏற்பட்டு வெப்ப இழப்பை ஏற்படுத்தும்.
சத்தான கொழுப்பு அல்லாத உணவுகளை சாப்பிடுங்கள்.
ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகம் உட்கொள்ளுதலை குறைத்தல் . அதாவது பசலை கீரை, முள்ளங்கி, சூடான மிளகுத்தூள், வெங்காயம், பூண்டு, பீட்ரூட், அன்னாசி, கிரேப் ப்ரூட் மற்றும் மாம்பழம், ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்கொள்ளுதலை குறைத்தல் வேண்டும். மாம்பழம் சாப்பிடவேண்டும் என்று தோன்றும் போது மாம்பழச்சாறு சாப்பிட்டுக் கொள்ளலாம்.
உலர்ந்த பழங்கள் உட்கொள்வது குறைத்து. புதிய பழங்கள் உட்கொள்வதை அதிகரிக்கலாம். குடி நீரில் துளசி விதைகள் போட்டு தண்ணீர் பருகுவதன் மூலம் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும். உண்ணும் உணவில், சர்க்கரை இல்லாமல், சாலட்டுகள் மற்றும் புதிய சாறுகள் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைய எடுத்துக்கொள்ளலாம். எலுமிச்சை சாறு, தேங்காய் தண்ணீர் மற்றும் மெல்லிய மோர் குடிப்பதன் மூலம் வியர்வையை தவிர்க்க முடியும்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சமூக வலை தளம் மூலம் மருத்துவ ஆலோசனையால் ஏற்படும் விபரீதம்-அமீரக டாக்டர்கள் எச்சரிக்கை
by Mohamed
written by Mohamed
இன்றைய நவீன உலகில் மருத்துவ ஆலோசனைகளை சமூக வலைதளத்தின் மூலம் பெறக்கூடிய மக்களின் எண்ணிக்கை பெருகி வருவதாக அமீரகத்தில் பணி புரியும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். உடலில் ஏற்படும் நோய்களுக்கு உடனடி தீர்வை தேடி சமூக வலை தளத்தை நாடுபவர்கள் மோசமான விளைவுகளை சந்திப்பதாகவும் தவறான நபர்களிடம் பாதுகாப்பை தேடுகிறார்கள் என்றும் எச்சரித்துள்ளார்கள்.
இது குறித்து டாக்டர். ஶ்ரீரிஹரி.கே.பிள்ளை கூறுகையில், கடந்த 4 வருடமாக அவரை அணுகும் நோயாளிகள் உடனடி நிவாரனத்தையே நாடுகிறார்கள், ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் முறையான மருத்துவம் மட்டுமே நீண்ட கால நிவாரணத்துக்கு ஏதுவாக அமையும் என்று கூறியுள்ளார்.
தற்போதய அதீநவீன யுகத்தில் வலைதளத்தில் ஒரு பட்டனை அழுத்தினால் போதும் ஒரு பொருளை குறித்து லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் கருத்துகளையும், அறிவுரைகளையும் பெற முடிகிறது, ஆனால் அவையெல்லாம் உண்மையென்று எண்ணி மருத்துவரை நாடாமல் மருந்துகளை உட்கொள்வது பல பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது.
அவ்வாறு பிற நோயாளிகள் உட் கொள்ளும் மருந்துகள் மற்ற நோயளிகளுக்கு பொருந்தாது என்பதை மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்று நியூ மெடிக்கல் செண்டரில் பணி புரியும் டாக்டர் கே.பிள்ளை அறிவுறுத்தியுள்ளார்.
சமூக வலை தளத்தில் சில நிறுவனங்களின் பக்கங்களுக்கு லட்சக்கணக்கான நபர்கள் தொடருவதால் (Followers), அதில் பதிவாகும் கருத்துக்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை எற்படுத்துகிறது.
இயற்கையாக, டீன் ஏஜ் பருவத்தை அடைந்தவர்கள் வெளித்தோற்றத்தை அழகாக வைத்து கொள்ள அதிக கவனம் செலுத்துவதால் பெற்றோர்கள் அவர்களை கண்கானித்து தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று டாக்டர்கள் கேட்டு கொள்கிறார்கள்.
வலை தளம் மூலம் பகிரப்படும் தகவல்கள் நொடி பொழுது மக்களை சென்றடைந்தாலும், அதனால் ஏற்படும் விபரீதங்கள் சில நேரங்களில் ஈடு செய்ய முடியாத இழப்பாக மாறி விடுகிறது என்பதை மனதில் கொண்டு சமுதாய உணர்வோடு செயல்பட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
டெங்கு நோயைக் கட்டுப்படுத்தக் கூடிய மருந்தை இலவசமாக வழங்கும் நிறுவனம்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இந்தியாவில் அதுவும் கீழக்கரையில் டெங்கு காய்ச்சலின் வீரியம் மிக கடுமையாக நிலவி வருகிறது. இது சம்பந்தமாக கீழக்கரையில் நகராட்சி நிர்வாகம் தவிர்த்து பல் வேறு சமூக அமைப்புகளும் டெங்கு காய்ச்சல் பற்றிய விழுப்புணர்வு செயல்பாடுகள் மற்றும் நிலவேம்பு கசாயம் வினியோகம் போன்ற செயல்களை மிக வீரியமாக செய்து வருகிறார்கள். ஆனால் டெங்கு கொசுவின் வீரியமோ அதைவிட வேகமாக கீழை நகரில் பரவி வருவது மிகவும் வேதனையான செய்தி.
இந்த மன வேதனைக்கு இதம் தரும் விதமாக சென்னையை மையமாக வைத்து செயல்படும் BRIOBLISS எனும் மருந்துகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று THROMBOBLISS Syrup எனும் இரத்த அணுக்களை 72 மணி நேரத்தில் அதிகரிக்கும் மருந்தை ஏழை, எளியவர்களுக்கு இலவசமாக கொடுக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். மேலும் இது சம்பந்தமாக கீழை நியூஸ் சார்பாக அந்நிர்வாகத்தை தெடர்பு கொண்ட பொழுது இந்நிறுவனத்தின் நிர்வாகிகளின் ஒருவரான R.சத்தியநாராயனண் என்பவர் இத்தகவலை உறுதி செய்ததுடன், ஏழை எளிய மக்களுக்கு இச்செய்தியை எத்தி வைக்குமாறும் கேட்டு கொண்டுள்ளார்.
மேலும் மருந்துகளின் தேவைகளுக்கு கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
Admin Office: No. 14,
Elliots Beach Road,
North End, Besant Nagar,
Chennai – 600090.
Ph : 044 – 42646010.
Fax : 044 – 42646011.
Mob : 09444320704
Email :[email protected]
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை புதுத்தெரு முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரையில் 17-03-2017 (வெள்ளிக்கிழமை) அன்று, கீழக்கரை புதுத்தெருவில் பல்வேறு சமுதாய பணிகளை பொதுமக்கள் நலனுக்காக செய்து வரும் முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
இச்சிகிச்சை முகாமுக்கு முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கத்தின் (MYFA) தலைவர்.S.A.C.பவுசுல் அலியூர் ரஹ்மான் தலைமை வகிக்கிறார், மேலும் முன்னாள் MYFA & தெற்கு தெரு முன்னாள் செயலாளர்.S.M.சீனி அப்துல் காதர் வாழ்த்துரை வழங்குகிறார். நன்றியுரையை நூரானியா பள்ளியின் தாளாளர். S.M. சுபைர் அவர்கள் வழங்குகிறார்கள்.
இம்முகாம் புதுத்தெரு நூரானியா பள்ளி வளாகத்தில் உள்ள பல்லாக்கு ஹாஜியார் அரங்கில் நடைபெறுகிறது. இம்முகாம் காலை 09.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை நடைபெறுகிறது. மேலும் முகாமின் ஏற்பாடுகளை MYFA சங்க உறுப்பினர்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
மேலும் இம்மருத்துவ முகாம் மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி நிறுவனர்.சேதுராமன் மற்றும் அவருடைய மருத்துவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
டிசம்பர் மாதம் உலமெங்கும் காலைப்பொழுது இனிதாக பனியுடன், குளிர்ச்சியுடன் துவங்குகிறது. கீழக்கரையிலோ காலைப்பொழுது புகையிலும், தூசியிலும் விடிகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கீழக்கரை முக்குரோட்டில் இருந்து கடற்கரை வரை சாலை சீரமைக்கும் பணி துவங்கியது. ஆனால் தொடங்கிய சில நாட்களிலேயே தொடரப்பட்ட பணி அரைகுறையாக நிற்கிறது. ஆகையால் நெடுஞ்சாலை முழுவதும் தூசியும் புகை மண்டலமுமாக காட்சியளிக்கிறது. நோயாளிகள் முக்கியமாக ஆஸ்துமா நோயாளிகள் இதனால் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். இது தொடர்பாக இன்று காலை 08.00 மணியளவில் முஸ்லிம் பஜார் பிட்சா பேக்கரி அருகில் ஆஸ்துமா நோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மதுரை நிசா ஃபவுண்டேசன், இராமநாதபுரம் பயோனியர் மருத்துவமனை, தென்னிந்திய பத்திரிக்கையாளர் சங்கம், போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கம் மற்றும் SDTU – (Social Democratic Trade Union) சோசியல் டெமாகரடிக் டிரேட் யூனியன் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்து இருந்தார்கள். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக முகமூடி (Face Mask) வழங்கப்பட்டது. மெத்தனமாக இருக்கும் நெடுஞ்சாலைத்துறைக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது, சாலைகளில் அமைந்திருக்கும் உணவு விற்பனையாளர்களுக்கு உணவு பண்டங்களை முறையாக பாதுகப்பாக விற்பனை செய்வது பற்றிய அறிவுரைகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கீழ்க்கரை நிசா .ஃபவுன்டேசனை சார்ந்த சகோ. சித்திக் அவர்கள் ஆஸ்துமா விழிப்புணர்வு சம்பந்தமான வாசகங்கள் அடங்கிய பிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்தார். இந்நிகழ்ச்சிக்கு கீழக்கரையை சார்ந்த பல சமூக நல அமைப்புகளும் உதவிகளை வழங்கின. தேவையான நேரத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய ஏற்பாட்டளர்களுக்கு கீழக்கரை மக்கள் களம், கீழக்கரை சட்டப்போராளிகள் குழுமம் மற்றும் கீழை நியூஸ் சார்பாக மனமார்ந்த நன்றிகள் தெரிவத்துக் கொள்ளப்படுகிறது.
You must be logged in to post a comment.