ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மூணாவது வார்டுக்கு உட்பட்ட சதக்கத்துல் ஜாரியா நடுநிலைப் பள்ளியில் எதிர்ப்புற சந்தில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய பாதை உள்ளது . இப்பாதை இரவு நேரங்களில் இருளடைந்து காணப்படுவதால் பெண்களும் குழந்தைகளும் அவ்வழியில் செல்வதற்கு அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் வயதானவர்கள் அவ்வழியில் பலமுறை விழுந்ததாகவும் சொல்லப்படுகிறது . நகர்மன்ற உறுப்பினர் கண்டும் காணாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அப்பகுதியில் நீண்ட காலமாக பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி நிதியிலிருந்து சூரிய ஒளி மின்விளக்கு பொருத்தப்பட்டு பொதுமக்களுக்கு பயன்பாடு இல்லாமல் இருந்து வருகிறது . கீழக்கரை நகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தி மக்கள் பயன்படும் வகையில் அப்பகுதியில் மின்விளக்கு பொருத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சார்பாகவும் சமூக ஆர்வலர்கள் சார்பாகவும் வேண்டுகோள் விடப்படுகிறது.
Category:
பிரச்சனை
செய்திகள்கவுன்சிலர்கீழக்கரை செய்திகள்கீழக்கரை மக்கள் களம்நகராட்சிநிர்வாகம்பிரச்சனைமாநில செய்திகள்மாவட்ட செய்திகள்
அராஜக போக்கை கையாளும் கீழக்கரை நகராட்சி.. மக்களை அச்சுறுத்தும் பணியில் நகராட்சி மேலாளர்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரையில் விதிக்கப்பட்டு வரும் சட்டவிரோதமான வரிவிதிப்பை கண்டித்து கடந்த 18/03/2019 அன்று அனைத்து ஐக்கிய ஜமாத் சார்பாக நிரந்தரமான புதிய ஆணையர், சொத்து வரிக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காணுதல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த முடிவுகள் அனைத்து முறையான ஆவுணங்கள் மற்றும் முகாந்திரத்தின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் மதுரையில் வீட்டு வரி சம்பந்தமான வேறு வழக்குக்கு நீதிமன்றம் 5000/- அபாரதம் விதித்த செய்தியின் நகலை எடுத்து மக்களை பயமுறுத்தும் நோக்கில் நகராட்டி அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. இது சம்பந்த மக்கள் டீம் அமைப்பின் காதர் கூறுகையில், ” இது முழுக்க முழுக்க நகராட்சி நிர்வாத்தின் அராஜக போக்காகும், மேலும் பொதுமக்களின் உரிமைகளை மீறுவதாகவும், அச்சுறுத்தும் வகையிலும் உள்ளது. இச்செயல் மிகவும் கண்டிக்கப்பட கூடியது. நகராட்சி நிர்வாகம் எவ்வகையான அச்சுறுத்தல் நடவடிக்கை எடுத்தாலும், சட்ட ரீதியாக சந்திக்க கீழக்கரை மக்கள் தயாராக உள்ளனர்” என்று கூறி முடித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சுகாதார சீர்கேட்டின் உச்சக்கட்டத்தில் கீழக்கரை அரசு மருத்துவமனை, நகராட்சி – அரசாணையை ஊதாசினப்படுத்திய நகராட்சி நிர்வாகம்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட நகராட்சி அலுவலகம் மற்றும் அரசு மருத்துவமனையில் நிலவி வரும் அவல நிலையை கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகம், சட்ட விழிப்புணர்வு இயக்கம் மற்றும் பல் வேறு அமைப்புகள் முதலமைச்சர் தனிப் பிரிவுக்கு மனுக்கள் பதிவு செய்தனர். ஆனால் அதற்கும் முறையான நடவடிக்கை எடுக்காததால் தகவல் அறியும் உரிமை ஆணை மூலமாக நீதிமன்றம் மூலமாக நகராட்சி அலுவலகத்தை நேரடியாக ஆய்வு செய்ய அனுமதி பெறப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த வாரம் சட்ட விழிப்புணர்வு இயக்கம் உறுப்பினர்கள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது மருத்துவமனையின் அவல நிலைகள் மிகவும் கவலைக்குரிய நிலையில் இருப்பது அங்கு வந்திருந்தவர்கள் கூறிய கருத்துக்களே சாட்சியாகும். உதாரணத்திற்கு நோயாளிகளுக்கு மருந்துகளை முறையாக விளக்கி வழங்குவதில்லை, அனைத்து மருந்துகளையும் ஒரு பையில் குப்பையை போல் கொட்டி கொடுப்பது, அசுத்தம் நிறைந்த பிணவறை, விபத்துக்குள்ளாகி பிரேத பரிசோதனைக்கு வரும் உடல்களில் இருந்து பிரிக்கப்பட்ட இரத்தம் தோய்ந்த துணிகள் எந்த சுகாதாரமும் இல்லாமல் வெளி பகுதிகளில் தூக்கி எறியப்பட்டிருந்து, அப்பகுதியே அருகில் செல்ல முடியாத அளவு துர்நாற்றம். (கீழே வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)
அதேபோல் நகராட்சி பொதுத்தகவல் அலுவலர் நம்முடைய ஆய்வின் போது முறையான ஒத்துழைப்பினை வழங்காமலும், ஆய்வு செய்ய கோரிய கோப்புகளை வழங்காமலும் ஆணையத்தின் உத்தரவை மதிக்காமல் மெத்தனப்போக்கில் நடந்து கொண்டனர்.
இது சம்பந்தமான நமது புகார் மனு தற்போது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை நகராட்சியின் மெத்தனப் போக்கு… ஹமீதியா தொடக்கப்பள்ளி அருகாமையில் குவிந்து கிடக்கும் குப்பைகள்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரையில் சுகாதாரம் என்பது கேள்வி குறியாகவே மாறிவிட்டது, நகராட்சியின் மெத்தனப் போக்கால். கடந்த பல வருடங்களாக தனியார் நிறுவனத்தால் சேவை நோக்கில் செய்து வந்த சுகாதார பணியையும் நிறுத்திவிட்டார்கள். அரசாங்கமே தன் பணியை செய்வது பாராட்டுக்குரியது, ஆனால் கீழக்கரையில் நிலைமை தலைகீழ், சுகாதாரம் என்பது சீர்குலைந்து கொண்டே வருகிறது.
மேலே நீங்கள் காணும் புகைப்படங்கள் சிறுவர்கள் அதிகமாக செல்லும் ஹமீதியா தொடக்கப்பள்ளி பகுதி. இது போன்ற இடங்களே கவனிப்பாரற்று கிடக்கும் பொழுது வேறு இடங்களைப் பற்றி கூற வேண்டிய அவசியம் இல்லை. என்று நகராட்சி உறக்கத்தில் இருந்து விழிக்கிறது என்று பார்ப்போம்.
செய்தி:- J.சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மழையால் கீழக்கரை சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமா நகராட்சி??
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பருவ மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் பல இடங்களில் மரங்கள் விழுந்து பொதுமக்கள் நடப்பதற்கு மிகவும் சிரம்ப்பட்டு வருகிறார்கள்.
நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் இன்று (ஞாயிறு) விடுமுறை என்பதால் அடுத்த நாள் சாலையை சரி செய்வதாக பதில் தருகிறார்கள். இராமநாதபுரத்தில் மழைக்காக செய்த முன்னேற்பாடு பணிகள் கீழக்கரைக்கு பொருந்தாதா??? அல்லது பணியாளர்கள் விடுமுறை கழிந்து வரும் வரை பொது மக்கள் அவதிப்பட வேண்டுமா??.
தகவல்:- மக்கள் டீம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்புல்லானியில் இருந்து சேதுக்கரை செல்லும் வழியில் அதிகரிக்கும் மணல் கொள்ளை…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
திருப்புல்லாணியில் இருந்து சேதுக்கரை செல்லும் ரோட்டில் மேலப்புதுக்குடி அருகே அனுமதியில்லாமல் மணல் கொள்ளையடிப்பதாக அங்குள்ள மக்கள் கூறுவதை அறிந்து கொள்ள அங்கு சென்ற பொழுது, 30 அடி அகலம், ஆறடி பள்ளத்தில் கிலோ மீட்டர் தூரத்துக்கு மண் அள்ளப்பட்டு அங்குள்ள பல பனை மரங்கள் வீழ்ந்தும், இன்னும் பல வீழக்கூடிய நிலையிலும் இருந்தது வேதனையான காட்சியாக இருந்து. நீங்கள் காணும் புகைப்படம் அனைத்தும். 10/09/2018 அன்று காலையில் எடுக்கப்பட்டது.
அப்பகுதியில் பிள்ளையார் கூட்டம் ஊரணியில் தண்ணீர் பிடிக்க வந்தவர்களிடம் கேட்ட பொழுது, அவர்கள் காட்டியது போல் அரை கிலோ மீட்டர் தூரம் சென்ற பொழுது மண் அள்ளுவதற்கு சாட்சியாக பொக்லைன் இயந்திரம் சாட்சியாக நின்றது.
அங்குள்ள பனை மரங்கள் தன் வேர்களை இழந்து தண்ணீர் வளத்தையும் இழந்த வண்ணம் காட்சியளித்தன. அரசு அதிகாரிகளுக்கு இந்த ஈவு இரக்கமற்ற மிருகங்கள் மீது கண் படுமா?? இயற்கை வளம் காக்கபடுமா??
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையும் சுகாதாரமின்மையும் நகமும் சதையும் போல் பிரிக்க முடியாத ஒன்றாகி வருகிறது. எத்தனை களப் பணியாளர்கள் நியமித்தாலும், சுகாதாரம் என்பது கேள்வி குறியாகவே உள்ளது.
கீழக்கரையின் முக்கிய பகுதியான முஸ்லிம் பஜார் ரிஃபாய் தைக்கா கிட்டத்தட்ட சாக்கடையில் மூழ்கும் நிலையில் உள்ளது. எத்தனையோ தெருக்களுக்கு வலிய சென்று சுத்தம் செய்யும் நகராட்சி ஊழியர்கள், தேவையுடைய இந்த தெருவை கவனிப்பார்களா??
இதற்கு முக்கிய காரணம் அப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான குப்பை கிடங்குதான் என்று அத்தெரு மக்கள் கூறுகிறார்கள். அந்த இடத்தின் உரிமையாளரிடம் பல முறை கூறியும் எந்த பலனும் இல்லை என்கிறார்கள் அத்தெருவாசிகள். நகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும்.
—————————————————-
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தூய்மை இந்தியா திட்டம் கீழக்கரைக்கு விதி விலக்கா?? நாறி கிடக்கும் தெருக்கள்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரை நகராட்சி இருந்தும், பகுதி நேர ஆணையர் போலவே அங்குள்ள செயல்பாடுகளும் முறையில்லாத வகையில் செயல்பட்டு வருகிறது. கீழக்கரை நகராட்சியில் சுகாதாரம் என்பது ஒரு பெரிய கேள்வி குறியாகவே உள்ளது.
கீழக்கரையில் சொக்கநாதர் ஆலயம் எதிர்புரம், மேலத்தெரு செய்யிதினா அபுபக்கர் சித்திக் பள்ளி வாசல் பகுதி, வடக்குத் தெரு CSI பள்ளி பகுதி, கொந்த கருணை அப்பா பள்ளி செல்லும் வழி, புதுக்குடி, வண்ணாங்குடிருப்பு, தட்டாந்தோப்பு, சதக்கதுல்லா அப்பா வளாகம் பின்புறம் மற்றும் இன்னும் பிற பகுதிகளிலும் குப்பை கிடங்குகள் நிறைந்த பகுதிகளாக காட்சியளிக்கின்றது.
நமது பாரத பிரதமரின் தூய்மை இந்தியா என்ற வார்தை முழக்கம் ஏட்டு சுரக்காய் போல் நகராட்சின் முன்பு கம்பீரமாக காட்சியளிக்கின்றது . இந்த தூய்மை இந்தியா என்ற முழக்கம் எப்பொழுது நடைமுறைக்கு வர போகின்றது என்பது தான் சமூக ஆர்வலர்களின் ஏக்கம்.
அதே சமயம் தனி மனிதன் ஒழுக்கம் இல்லாதது தான் இதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டை வைத்தாலும், நகராட்சியும் தான் செய்ய வேண்டிய பணியை முழுமையாக செய்தால் நிச்சயம் மாற்றம் வரும்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அனைத்து பணிக்கும் நகராட்சி தேவையில்லை – களத்தில் இறங்கிய அல் அமீன் சகோதரர்கள் ..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இன்று (30/07/2018) சில மணிக்கு முன்னால் சாக்கடையில் கலக்கும் குடிநீர் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அச்செய்தியை பார்த்தவுடன் கீழக்கரை வடக்குத் தெரு அல் அமீன் அமைப்பைச் சார்ந்த சகோதரர்கள் உடனடியாக நகராட்சியை எதிர்பார்க்காமல், கையில் இருந்து செலவு செய்து புதிய குழாய் பொறுத்தியுள்ளார்கள்.
மேலும் இது சம்பந்தமாக கூறிய அல் அமீன் அமைப்பு உறுப்பினர் ஒருவர், தற்காலிமாக குடிநீர் வீணாவதை தடுக்க ஏற்பாடு செய்துள்ளோம். இன்னும் ஒரு சில நாட்களில் நிரந்தரமாக தீர்வு காணும் வண்ணம், வாருகால் மூடியை சிமெண்ட் வைத்து மூடி, நல்ல தரமான இரும்பு குழாய் பதிக்க முயற்சி செய்துள்ளோம் என்றார்.
உடனடியாக பிரச்சினைக்கு தீர்வு கண்ட அல்அமீன் சகோதரர்களின் பணி நிச்சயமாக பாராட்ட பட வேண்டிய ஒன்று.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் வீணாகும் குடிநீர் – சாக்கடையுடன் கலக்கும் அவலம்.. வீடியோ பதிவு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரை தெற்குத் தெவில் இருந்து வடக்குத் தெருவை நோக்கி செல்லும் முச்சந்தி சந்திப்பில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து பல நாட்களாக குடிநீர் வீணாகிய வண்ணம் உள்ளது. அவ்வழியாக தினமும் பல நகராட்சி ஊழியர்கள் கடந்து சென்ற வண்ணம்தான் உள்ளனர். ஆனால் யாரும் இதை சீர் செய்ய முயற்சி எடுக்கவில்லை என்பது மிகவும் வேதனையான விசயம்.
அப்பகுதி மக்களும் தங்களால் இயன்ற அளவு தண்ணீர் வீணாவதை தடுக்க முயற்சி செய்தாலும், தண்ணீர் சாக்கடையில் கலந்த வண்ணம்தான் உள்ளது. அதே சமயம் பொதுமக்களும் வாருகால் மூடிகளை திறந்து குப்பைகளை கொட்டும் பழக்கத்தை விட்டொழித்தாலே சுகாதாரக் கேட்டில் இருந்து மீளலாம். சுகாதாரத்திற்கு தனி மனித ஒழுக்கமும் மிக அவசியம் என்பதை பொதுமக்களும் உணர வேண்டும்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
“வாழ தகுதியற்ற ஊராக மாறுகிறதா கீழக்கரை??”- மருத்துவர்கள் எச்சரிக்கை.. சமூக ஆர்வலர்களின் முயற்சிகளை அலட்சியப்படுத்தும் நகராட்சி ..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
“SMART CITY – KILAKKARAI” கேட்பதற்கு மிகவும் இனிமையாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது. ஆனால் எப்பொழுது ஆகப் போகிறது என்பது யாருக்கும் தெரியாத விடை. ஆனால் மறுபுறம் கீழக்கரையோ தினம், தினம் சுகாதாரத்தில் பின்னோக்கி சென்ற வண்ணமே உள்ளது.
கீழக்கரையில் எங்கு திரும்பினாலும் சாக்கடை, குப்பை மேடுகள், கடற்கரையில் கலக்கும் கழிவு நீர், தெருக்களில் சாக்கடை வாருகால் மூடிகள் உடைந்து ஓடும் சாக்கடை, தேங்கி நிற்கும் கழிவு நீர், சொறி நாய்கள் மற்றும் பன்றிகளின் நடமாட்டம். ஊரெங்கும் நிறைந்திருக்கும் மருத்துவமனைகளால் சுகாதாரமற்ற முறையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் என அடுக்கி கொண்டே போகலாம். சமீபத்தில் கீழக்கரையைச் சார்ந்த சமூக சேவகர் ஒருவர் கீழக்கரையில் வீடுகளின் சுத்தத்தை ஆய்வு செய்ய வரும் அரசு அலுவலர்கள் சுகாதாரமானவர்களா?? என்ற கேள்வியை பொதுதளங்களில் எழுப்பியருந்தார். நிச்சயமாக சிந்திக்க வேண்டிய கேள்வி. தீர்வு காண இயலாத அரசு அதிகாரிகளை “இனி வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம்” என்ற ஆதங்கத்தையும் வெளியிட்டிருந்தார்.
கீழக்கரையில் தினமும் பல குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிப்புக்குள்ளான வண்ணம் உள்ளனர். டெங்கு காய்ச்சல் வந்தாலே பரிசோதனைக்கு இராமநாதபுரம் அல்லது மதுரை செல்லும் நிலைக்கே தள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த காய்ச்சலால் பல நடுத்தர மக்கள் நகைகளை விற்றும், கடன் வாங்கியும் வைத்தியம் பார்க்கும் சூழலுக்கு ஆளாகிறார்கள். மேலும் இன்னும் கீழக்கரை மக்கள் மருத்துவ காப்பீடு திட்டம் பற்றிய தவறான புரிதலும், அறியாமையுமே பொருளாதாரத்தை அதிகமாக செலவு செய்ய வேண்டிய சூழல் உள்ளது.
கடந்த வாரம் கீழக்கரை பழைய குத்பா பள்ளி தெருவைச் சார்ந்த பரக்கத் அலி என்பவரின் இரு குழந்தைகளும் ஒரே நேரத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் பல ஆயிரங்கள் செலவு செய்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, “என்னுடைய குழந்தைகளுக்கு அடிக்கடி டெங்கு போன்ற காய்ச்சல் வருகிறது. இதற்கான காரணத்தை மருத்துவரிடம் கேட்ட பொழுது, கீழக்கரையில் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாக உள்ளது .உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் ஊரை மாற்றுங்கள் என்றார். இது விளையாட்டாக சொல்லப்பட்டாலும், இதுதான் இன்றைய கீழக்கரை நிலவரம் என்பதை பாதிக்கப்பட்டவர்கள் மறுக்க முடியாது, ஆனால் ஊரை விட்டு போக முடியாது, ஆகையால் என் வீட்டை விட்டு சுகாதாரமான இடத்திற்கு மாறலாம் என எண்ணியுள்ளேன்” என வருத்தத்துடன் கூறி முடித்தார்.
நகராட்சி நிர்வாகம் சுகாதாரம் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதிக்கும் மட்டுமல்ல, கீழக்கரையில் உள்ள அனைத்து மக்களுக்கும் தேவை என்பதையும் உணர்ந்து செயல்பட வேண்டும். அதே சமயம் நகராட்சியின் அலட்சிய போக்கு முக்கிய காரணமாக இருந்தாலும், தனி மனித ஒழுக்கமும், சமூக பொறுப்பும் மிகவும் அவசியமானதாகும். இந்த விழிப்புணர்வு ஏற்படும்பட்சத்தில் அதிக அளவிளான சுகாதார பிரச்சினைகள் தீர்ந்து விடும்.
மேலே உள்ள புகைப்படத்தை சுட்டிக்காட்டி பள்ளி குழந்தைகளுக்கு ஒரு வழி பாதையாவது கிடைக்குமா என ஏக்கத்துடன் கேட்கிறார் பள்ளியின் தாளாளர்.
சிந்திப்போம்!!! செயல்படுவோம்!!
போட்டோ:- மக்கள் டீம், சமூக வலைதளம் ..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் கிட்டதட்ட நாற்தாயிரத்திற்கு மேலான மக்கள் 21 வார்டுகளில் வசித்து வருகின்றனர். அதே போல் கீழிக்கரையில் மின்சார வினியோகமும் விடுமுறை மற்றும் பெருநாள் காலங்களில் அதிகமாக இருக்கும். இதை அடிப்படையாக வைத்து மாதந்தோறும் பராமரிப்பு என ஒரு மின் தடை உண்டு, ஆனால் எந்த வகையான பராமரிப்பு என்று யாரும் புரிந்து கொள்ள முடியாது காரணம் அதையும் தாண்டி பல நாட்கள் அறிவிக்கப்படாத மின் வெட்டுக்கள் உண்டாகும். ஆனால் பொதுமக்கள் மத்தியில் எப்பொழுதுமே இது மின்சார சேமிப்புக்கான தடை என்றே கூறப்படுவதுண்டு.
ஆனால் அதை பொய்ப்பிக்கும் வகையில் சில இடங்களில் பகல் நேரத்திலும் தெரு விளக்குகள் எரிந்த வண்ணமே உள்ளது. ஆனால் பல முக்கிய தெருக்கள் வெளிச்சம் இல்லாமல் இருளடைந்து கிடக்கிறது. . கீழக்கரை மின்சார வாரியம் இது போன்ற வீண்விரயங்களை குறைத்து இருண்டு கிடக்கும் பகுதிகளுக்கு விளக்குகளை பொருத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நாய்களுக்கும், கால்நடைகளுக்கும் கூடாரமாக மாறி வரும் கீழக்கரை தெருக்கள்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரை நகர் வீதிகளில் உல்லாசமாக திரியும் தெரு நாய்களும், ஒய்யாரமாக சுற்றி வரும் கால்நடைகளும் நாளுக்கு நாள் பெருகிய வண்ணம் உள்ளது. கீழக்கரையில் சில மாதங்களுக்கு முன்பு தெரு நாய்களை அப்புறப்படுத்த மனுக்கள் கொடுக்கப்பட்டு சில நாட்கள் நடவடிக்கை எடுக்கப்பட்டது, பின்னர் மீண்டும் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது.
அதே போல் கீழக்கரை நகர் முழுதும் உள்ள ரோடு மற்றும் வீதிகளில் ஒய்யாரமாக சுற்றித் திரியும் மாடுகளால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். இந்த கால்நடைகள் சாலைகளில் ஏற்படுத்தும் தடங்கலால் பல நேரங்களில் போக்குவரத்தும் பாதிப்புக்குள்ளாகிறது.
அதே போல் வேலை நேரங்களில் சாலைகளில் செல்லும் கால்நடைகளால் சாலையோர வியாபாரிகள், வியாபார ஸ்தலங்களில் வைத்திருக்கும் பொருட்களும் நாசப்படுத்தப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் சாலை நடுவில் கால்நடைகள் படுத்து இருப்பதால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது.
இந்த விசயத்தில் கீழக்கரை நகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீழக்கரை பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
செய்தி மூலம்:- மக்கள் டீம் & சட்ட விழிப்புணர்வு இயக்கம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் ஈத் பெருநாளன்று சிறுமிகளை ஈவ் டீசிங் செய்த பிரச்சனையில் இரு தரப்பினரிடையே மோதல் – இருவர் படுகாயம்..பெருகி வரும் வன்முறை கலாச்சாரம்….
by keelai
written by keelai
கீழக்கரை பழைய குத்பா பள்ளி தெரு பகுதியில் நேற்று முன் தினம் பிற்பகலில் சிறுமிகளை ஈவ் டீசிங் செய்த பிரச்சனையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 16/06/2018 அன்று ஈத் பெருநாளன்று பிற்பகலில் சேரான் தெருவை தேர்ந்த முஹம்மது நபீல் என்பவர் தன்னுடைய 12 வயது சகோதரியை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு பழைய மீன் கடை வழியாக வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த கஸ்டம்ஸ் தெருவை சேர்ந்த வாலிபர்கள் சிலர் முஹம்மது நபீலின் சகோதரியிடம் ஈவ் டீசிங்கில் ஈடுபட்டுள்ளனர். இதனை தட்டிக் கேட்ட முஹம்மது நபீலை இரும்பு ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதனையடுத்து இரண்டு தரப்பினருக்குமிடையே ஏற்பட்ட மோதலில் ரம்சித் சில்மான் மற்றும் முஹம்மது நபீல் படுகாயம் அடைந்து இராமநாதபுரம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது ரம்சித் சில்மான் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கீழக்கரை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணம் ஊரில் பெருகி வரும் கஞ்சா தொழில் என்பதே பொதுமக்களின் பரவலான கருத்தாக உள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை நகராட்சி நிர்வாகமும் சுகாதாரத்துறையும் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரை நகர் ரமலான் முழுவதும் பரபரப்பாக இருக்கும் மாதம். அதில் மிகவும் முக்கியமாக உணவகங்கள், அதிலும் மாலை நேரத்தில் நோன்பு திறப்பதற்காக விற்கப்படும் உணவு வகைகளான போண்டா, பஜ்ஜி, பஃப் போன்ற வகைகள் அமோகமாக விற்கப்படும்.
ஆனால் இந்த உணவு வகைகள் அனைத்தும் சுகாதார முறைப்படி விற்கப்படுகிறதா என்பது பெரிய கேள்வி குறியாகும். ஏற்கனவே கலப்பட பொருட்கள் மிகுந்து கிடக்கும் இந்த உணவு சந்தையில் ஆரோக்கியிமில்லாமல் சமைக்கப்படும் உணவுகளால் பொதுமக்கள் பல் வேறான நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை.
நேற்று (25/05/2018) கீழக்கரை நகரில் உள்ள சர்வதேச உணவை பெயராக கொண்டு இயங்கி வரும் பேக்கரியில் வாங்கப்பட்ட கோழி ரோலில் (Chicken Roll) கழிவாக கருதப்படும் கோழியின் குடலை, அதில் உள்ள கழிவுகளை கூட நீக்காமல் வைத்து தயார் செய்துள்ளார்கள். அதை வாங்கிய வாடிக்கையாளர் ருசியில் மாற்றமும், வாடையும் வருவதை கண்டு, முழுமையாக பார்த்த பொழுது கழிவு பொருட்களும் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இந்த விசயத்தில் புனித மாதத்தை கருத்தில் கொண்டு வியாபாரிகள் மக்களை ஏமாற்ற எத்தனிக்கிறார்கள். இத்தருணத்தில் கீழக்கரை நகராட்சியின் சுகாதாரத்துறை அலுவலகம், நகரில் இயங்கும் உணவகங்களை ஆய்வு செய்து, முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்பாக உள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நேற்று கீழை நியூஸ் செய்தி – இன்று தெரு விளக்கு சரி செய்யப்பட்டது- மின்சார வாரியத்துக்கு நன்றி..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரை வடக்குத் தெரு தைக்கா அருகில் முக்கிய பகுதியில் தெரு விளக்கு பல மாதங்களாக எரியவில்லை என்று செய்தி வெளியிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து இன்று மின்சார வாரியத்தால் தெரு விளக்கு சரி செய்யப்பட்டது. நோன்பு நேரத்தில் இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாமல் அவதிப்பட்ட மக்களுக்கு தெரு விளக்கு சரி செய்யப்பட்டது நிம்மதியை தந்துள்ளது. இப்பகுதி மக்கள் மின்சார வாரியத்திற்கும் நன்றிகளை தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு ‘சட்டப் போராளிகள்’ஆஜர் – கீழக்கரை தாலுகா அதிகாரிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்
by keelai
written by keelai
கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி நேரத்தில் அதிகாரிகள் தங்கள் இருக்கைகளில் இல்லாததால் தாலுகா அலுவலகத்திற்கு பல்வேறு அரசு நலத் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்காக வரும் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருவதை சுட்டிக் காட்டி கடந்த மாதம் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு கீழக்கரை ‘சட்ட விழிப்புணர்வு இயக்கம்’ சார்பாக 65 க்கும் மேற்பட்ட சட்டப் போராளிகள் மனு செய்திருந்தனர்.
அதே போல் கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகம், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட சமூக நல அமைப்பினர் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் நாளில் கீழக்கரை தாலுகா அலுவலக அதிகாரிகள் சம்பந்தமாக புகார் அளித்து இருந்தனர்.
இந்நிலையில் இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் ஆஜராகி மனுதாரர்கள் விளக்கமளிக்க அழைப்பு தரப்பட்டு இருந்தது. இதனையடுத்து நேற்று 09.05.2018 புதன் கிழமை காலை 10.30 மணியளவில் வருவாய் கோட்டாட்சியர் திரு ரெ.சுமன் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரான சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் சட்டப் போராளிகள், கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி நேரத்தில் அதிகாரிகள் இல்லாதது குறித்து தமிழக முதல்வரின் தனிப் பிரிவிற்கு செய்யப்பட்ட புகார் மனு மீது உரிய மேல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் வருவாய் கோட்டாட்சியரிடம் கீழக்கரை தாலுகா அலுவலக அதிகாரிகள் குறித்து பின் வரும் குற்றச்சாட்டுக்களையும் கோரிக்கைகளையும் முன் வைத்து விளக்கமான மனு அளித்துள்ளனர். அதன் சாராம்சம் பின்வருமாறு :
மனுதாரர்களின் குற்றச்சாட்டுகள் :
1. கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் தங்கள் பணிக்கு காலை 11 மணிக்கு மேல் மிக தாமதமாக அலுவலகத்திற்கு வருகின்றனர்.
2. வேலை நேரத்தில் அதிகாரிகள், தங்கள் இருக்கைகளில் அரை மணி நேரம் கூட அமர்ந்து பணி செய்வது இல்லை.
3. வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் பணி நேரங்களில் எங்கு இருக்கின்றனர் என்று பொதுமக்களுக்கு தெரியவில்லை.
4. இளநிலை அதிகாரிகள், கணக்காளர்கள் மற்றும் உதவியாளர்கள் அலுவலக வேலை நேரங்களில் அலுவலகத்தில் பணி செய்யாமல், சொந்த வேலைகளை செய்ய வீட்டுக்கு சென்று விடுகின்றனர்.
5. பல்வேறு அரசு சான்றிதழ்கள் மற்றும் அரசின் நலத் திட்ட உதவிகள் பெறுவதற்காக கீழக்கரை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம ஊராட்சிகளில் இருந்து கீழக்கரை தாலுகா அலுவலகம் வரும் பாமர மக்கள் நாள்தோறும் அலைக்கழிக்கப்பட்டு சொல்லொண்ணா துயரம் அடைந்து வருகின்றனர்.
6. கீழக்கரை தாலுகா அலுவலகம் வரும் பொதுமக்களின் கோரிக்கைகளை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கனிவுடன் விசாரித்து நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப் போக்கில் செயல்படுகின்றனர்.
மனுதாரர்களின் கோரிக்கைகள் :
1. கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் வேலை நேரத்தில் தாலுகா அதிகாரிகள் அனைவரும் சரியான நேரத்தில் அலுவலகத்திற்கு வருவதை உறுதி செய்ய பயோமெட்ரிக் வருகை பதிவினை பொருத்த வேண்டும்.
2. அதிகாரிகள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்து பணியாற்றுவதை கண்காணிக்க தாலுகா அலுவலகத்தில் முப்பரிமாண CCTV கேமரா அமைக்க வேண்டும்.
3. அலுவலக வேலை நேரங்களில், தாலுகா வேலை காரணமாக வெளியே செல்லும் இளநிலை அலுவலர்களை கண்காணிக்க உரிய பதிவேட்டில் அலுவலகத்தை விட்டு வெளியே செல்வதற்கான காரணத்தை பதிவதற்கு உத்தரவிட வேண்டும்.
4. கீழக்கரை தாலுகாவில் களப் பணிகள் மற்றும் சிறப்பு தளப் பணிகள் ஆற்றுவதற்காக அலுவக வேலை நேரங்களில் வெளியே செல்லும் வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் உரிய அறிவிப்புப் பலகையில், தான் வெளியே செல்வதற்கான காரணம், தாலுகா அலுவலகத்திற்கு திரும்பி வரும் நேரம் குறித்து அறிவிப்பு செய்து பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
5. கீழக்கரை தாலுகா அலுவலகத்திற்கு வந்து செல்லும் பொதுமக்களை, அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகாத வண்ணம், உரிய அதிகாரிகள் கனிவுடன் விசாரித்து, சரியான வழிமுறைகளை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கி, தாலுகா அலுவலக புரோக்கர்களிடம் ஏமாறுவதில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற வேண்டும்.
அதே போல் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில், திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு, வேலை நேரத்தில் பணியில் இல்லாத அதிகாரிகளை கண்டறிந்து துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உரிய விசாரணை செய்து பொதுமக்களின் மன உளைச்சலை போக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் உச்ச நீதிமன்ற வழக்கு எண் 6237/1990 தீர்ப்பு நாள் : 05.11.1993 லக்னோ வளர்ச்சி அதிகாரக் குழு -Vs- M.K.குப்தா என்பவர் வழக்கில் ‘ஒரு அரசாங்க பணிக்கு யார் பொறுப்பு’ என்பதனை சட்டப் பூர்வமாக அறிவித்துள்ளது. ஆகவே மரியாதைக்குரிய வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் பொதுநலன் சார்ந்த இந்த மனு மீது உரிய மேல் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.” இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விடாது துரத்தும் டெங்கு.. அச்சத்தில் கீழக்கரை மக்கள்.. என்றும் போல் உறக்கத்தில் நகராட்சி…:
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைக்கும் டெங்கு காய்ச்சலுக்கும் தொடரும் பந்தம் போல் தொடர்ச்சியாக பொது மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதித்த வண்ணம் உள்ளனர். இதற்கு முக்கிய கீழக்கரை நகரில் ஆங்காங்கே மழை போல் உருவெடுத்தது கிடக்கும் குப்பை கிடங்குகள். இது சம்பந்தமாக 6 மாதங்களுக்கு முன்பே SDPI, மக்கள் டீம், சட்ட போராளிகள், விடுதலை சிறுத்தை, நகர் நல இயக்கம், நாம் தமிழர் மற்றும் இன்னும் பல சமூக அமைப்புகளும் புகார் மனுக்களை அளித்தனர். அச்சமயத்தில் மாவட்ட ஆட்சி தலைவரும் கீழக்கரைக்கு வந்து நகராட்சி செய்ய வேண்டிய வேலைக்கு தனி நபர் மீது பல லட்சங்களை வசூல் செய்து விட்டு சென்றார், ஆனால் டெங்கு காய்ச்சலை நிரந்தரமாக ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கீழக்கரையில் பழைய காவல் நிலையத்தில் இருந்து வடக்கு தெரு செல்லும் வழியில் உள்ள குப்பை கிடங்கு மற்றும் 3வது வார்டுக்குட்பட்ட முகமது காசிம் அப்பா தர்கா ரோடு பகுதியில் சுவர் இடிந்து கிடக்கும் பழைய குப்பை கிடங்கு ஆகியவைகளை உதாரணமாக சொல்லலாம். ஆனால் கவனிப்பாரற்று கிடக்கும் குப்பை கிடங்குகள் ஏராளம். அதேபோல் இந்த குப்பை கிடங்கு அருகில் வழிபாட்டு தலங்கள் கோயில்,மசூதி, வீடுகள் அதிகம் உள்ளதால், குப்பைகளினால் வரும் துர்நாற்றத்தால் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள்.
தற்சமயம் கீழக்கரையைச் சார்ந்த பலர் இராமநாதபுரம் மற்றும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்காக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதில் கீழக்கரையில் 3/199 வார்டுக்குடபட்ட புது கிழக்கு தெரு பகுதியே சார்ந்த முஹைதீன் மகன் 10_வது படிக்கும் பள்ளி மாணவர் அப்சல், மீன் கடைத் தெரு 10/46வது வார்டு ஜெமில் கான் மகள் நஸ்மீன், 10/59 வது வார்டுக்குட்பட்ட சேரன் தெரு பகுதியில் சுல்தான் தஸ்தகீர் மகள் அபுரோஸ் நிஷா மற்றும் வடக்குத்தெரு 20வது வார்டு பகுதியில் முஹம்மது ஹுசைன் மகன் அப்துல் ரஹ்மான் ஆகியோர் இராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக அறியப்படுகிறது. இன்னும் பல நபர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என அத்தெரு மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது சம்பந்தமாக கீழக்கரை நகர் SDPI கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் “நகராட்சி நிர்வாகம் நகருக்குள் உள்ள குப்பை கிடங்குகளை நீக்காவிட்டால் மக்களை திரட்டி பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என கூறியுள்ளனர். மக்கள் வெகுண்டெழும் முன்பு தூக்கதில் இருந்து களையுமா???
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அமைப்புகளும், மனுக்களும் கூடினாலும் பிரச்சினைகளுக்கு கீழக்கரையில் தீர்வில்லை.. கீழக்கரை ஊர்மக்கள் / கூட்டமைப்பு சார்பாக மனு…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரை நகராட்சியில் நடைபெற்று வரும் நிர்வாகச் சீர்கேடுகள் என்பது சீர் செய்வது கடினம் என்ற அளவுக்கு புற்று நோய் போல் முற்றி கொண்டேதான் வருகிறது. கீழக்கரையில் உள்ள அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த அமைப்புகள் மனுக்கள் கொடுத்தாலும் செவிடன் காதில் சங்கு ஊதிய கதையாகவே உள்ளது.
கடந்த 31.01.2018 அன்று கீழக்கரை நகராட்சி ஆணையாளராக இருந்த வசந்தி குறுகிய காலத்திலேயே பல அதிருப்பதிகளுடன் பணியிடம் மாறுதலுக்கு பின் பரமக்குடி ஆணையாளர் நாராயணன் கீழக்கரை நகராட்சிக்கு கூடுதல் பொறுப்பேற்று பணி புரிந்து வருகிறார், அவரிடமும் மனுக்கள் குவிந்த வண்ணம்தான் உள்ளது.
இன்று (07/05/2018) கீழக்கரை ஊர்மக்கள் மற்றும் கீழக்கரை மக்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் மக்கள் நல பாதுகாப்பு கழகம், மக்கள் டீம், SDPI கட்சி, நிஷா பவுண்டேசன், விடுதலை சிறுத்தை ஹமீது யூசுஃப், கீழை பிரபாகரன், MSS.முகைதீன், முகைதீன் இபுராஹிம் மற்றும் இன்னும் பல சமூக ஆர்வலர்கள் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கீழக்கரை நகராட்சியில் ஏற்பட்டுள்ள நிர்வாக கேடுகளை பட்டியலிட்டு புகார் மனு அளித்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் நாளை (26/04/2018-வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பை முன்னிட்டு காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வெட்டு இருக்கும்.
இச்சமயத்தில் கீழக்கரை நகர், மாயாகுளம் கல்லூரி பகுதி, மோர்குளம், காஞ்சிரங்குடி, உத்திரகோசமங்கை இன்னும் இதன் எல்லைக்குள் உள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
Newer Posts
You must be logged in to post a comment.