திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை பிரிவு அருகே பாளையங் கோட்டை செல்லும் வழியில் உள்ள யோகம் நகரில் சந்திரன் S/O பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல்- கொடைக்கானல் தனியார் பேருந்தில் பயணச்சீட்டு பரிசோதகராக பனியாற்றி வருகிறார். இவர் பனிக்கு செல்லும் நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்துகொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் அவரது வீட்டில் ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக வைத்திருந்த சுமார் 15,000 ரூபாய் மதிப்புள்ள கம்பர்சன் மின் மோட்டாரை இரவில் திருடிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செம்பட்டி காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளார்.
Category:
செய்திகள்
உசிலம்பட்டியில் தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு ஊழல் ஒழிப்பு சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு ஊழியர்கள் சங்கம் அலுவலகத்தில் தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு ஊழல் ஒழிப்பு சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் வெற்றிவேல் தலைமையில் நடைபெற்றது . இதில் உசிலம்பட்டியில் உள்ள கண்மாய் கரை பகுதியை நடைப் பயிற்சி மேற்கொள்ள வசதி செய்துதர கோரியும், 58 கிராம பாசன கால்வாய் தண்ணீர் திறக்க நிரந்தர அரசாணை வழங்க வலியுறுத்தியும், அசுவமாநதி ஓடையை சீரமைக்க வலியுறுத்தல் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் வெற்றிவேல், மாவட்ட ஆலோசகர் ஆதிசேடன், உசிலம்பட்டி நகர தலைவர் முருகன், உசிலம்பட்டி நகர செயலாளர் ரமேஷ், நகரத் துணைத் தலைவர் மதிவண்ணன், நகர பொருளாளர் காட்டுராஜா, நகர அமைப்பாளர் சுருளிவேல், ஒன்றியச் செயலாளர் சின்னக்கொடி, கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் பழனிவேல், உறுப்பினர் ராமர், கண்ணன். மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
குறைபாடுகளை களைந்து தேர்தல் அறிவிப்பினை வெளியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
by mohan
written by mohan
தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் டிச.02 இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு குழப்பங்கள், குளறுபடிகள் நிறைந்துள்ளது. இந்த அறிவிப்பு மோசடியானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.கடந்த 3 ஆண்டுகளாக சொத்தையான காரணங்ளை கூறி உள்ளாட்சி தேர்தல்களை தள்ளிப்போட்டு வந்த அதிமுக அரசு உச்சநீதிமன்றத் தலையீட்டின் காரணமாக வேறு வழியின்றி தற்போது தேர்தல் அட்டவணையை வெளியிட்டுள்ளது. இவ்வறிவிப்பில் உள்ள குளறுபடிகள், குழப்பங்கள் காரணமாக நீதிமன்றத் தலையீட்டின் மூலம் தேர்தலை மீண்டும் தள்ளிப்போட வாய்ப்பு கிடைக்காதா என்ற உள்நோக்கத்தோடு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் முடிந்த பின்னர் நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்பது தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத நடைமுறையாகும். இந்திய நாட்டில் பல கட்டங்களாக நாடாளுமன்றத்தேர்தல் நடத்தப்பட்டாலும், கடைசி கட்டத்தேர்தல் முடிந்த பின்னரே மொத்தமாக வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும். காரணம் ஒரு கட்டத் தேர்தல் முடிவுகள் அடுத்த கட்ட தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு விரோதமானது என்பதால்தான்.
இந்த நடைமுறைக்கு மாறாக ஊராட்சி, நகராட்சி அமைப்புகளுக்கு தனித்தனியான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இரண்டு கட்டத்தேர்தல் நடைபெறும் காலங்களில் தேர்தல் விதிமுறை அமலின் காரணமாக மக்களின் அன்றாட மற்றும் அடிப்படை பணிகளை அரசு நிர்வாகம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டு மக்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படும்.ஏற்கனவே வார்டு வரைமுறை மேற்கொண்டதில் ஏராளமான முறைகேடுகள் குறித்த புகார்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், தேர்தல் ஆணையத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஆனால் அந்த புகார்கள் சரி செய்யப்படவில்லை. இதனால் வாக்குப்பதிவின் போது தமிழகம் முழுவதும் பல குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைப்பயன்படுத்தி அதிமுக பல முறைகேடுகளை மேற்கொள்ளவும், தேர்தல் முடிவுகளை தானடித்த மூப்பாக வெளியிடவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒரேமாவட்ட ஊராட்சிக்கு தேர்தல் நடைபெறும் என்பது தேர்தலுக்குப் பின்னரும் பல நிர்வாக சீர்கேடுகளை ஏற்படுத்தும். பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தனித்தனியான மாவட்ட ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு தேர்தல் நடத்த வேண்டும் போன்ற பல கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாமலே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊராட்சி, நகராட்சி, சட்ட விதிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றி தேர்தல் கால அட்டவணையை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாறாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே, மேற்கண்ட குழப்பங்கள் மற்றும் குளறுபடிகளோடு உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பானது மோசடியானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக் காட்டுவதோடு, இவ்வறிப்பினை தேர்தல் ஆணையம் திரும்பப்பெற்று அனைத்து சட்ட விதிமுறைகளுக்கும் உட்பட்டு ஏற்கனவே எழுப்பபட்டுள்ள அனைத்து குறைபாடுகளையும் களைந்து முறையான தேர்தல் அறிவிப்பினை வெளியிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் கே.பாலகிருஷ்ணன்(மாநிலச்செயலாளர்) தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கீல்பார்த்தி அப்பல நாயுடு என்ற நபர், துர்கை அம்மன் கோவில் அருகே உள்ள எம்பி எலக்ட்ரிக்கல் கடை அருகில் உள்ள இரும்பு படிக்கட்டில் ஏறி மின் கம்பத்தின் வழியே செல்லும் மின் வயரை பிடித்து, சம்பவ இடத்திலேயே தற்கொலை செய்துகொண்டார்.தற்கொலை செய்து கொண்டவர் தன்னுடன் தனது ஆதார் கார்டை வைத்திருந்தார். அதனை வைத்து தற்கொலை செய்து கொண்டவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த கீல்பார்த்தி அப்பல நாயுடு என்பது தெரியவந்துள்ளது.இவர் எதற்காக யாருடன் திருவண்ணாமலை வந்தார். எதனால் தற்கொலை செய்துகொண்டார் என்ற விபரம் இதுவரை எதுவும் தெரியவில்லை.இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய கோ.அண்ணா துரை, செய்தி துறை உதவி இயக்குநராக பதவி உயர்வு பெற்று சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக இருந்த எஸ்.மகேஸ்வரன், இராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக இட மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து இன்று (02/12/19) காலை அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஒட்டன்சத்திரம் பகுதியில் பூட்டிய வீடுகளில் திருடியவர் கைது: 80 பவுன் நகைகள் மீட்பு
by mohan
written by mohan
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் பூட்டப்பட்டிருந்த வீடுகளில் திருடும் சம்பவங்கள் அதிகரித்து வந்தது. இந்த சம்பவங்கள் அனைத்திலும், ஒரேநபர் மட்டும் ஈடுப்பட்டு வருவது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. சம்பவ இடங்களில் பதிவான கைரேகை மற்றும் சிசிடிவி கேரமாவில் பதிவாகி இருந்த நபரின் அடையாளங்களை வைத்து போலீஸார் அந்த நபரைத் தேடி வந்தனர்.இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு ஒட்டன்சத்திரம் சோதனைச்சாவடி அருகே போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.அந்த நபர், செம்மடைப்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகரன் (55) என்பதும், ஒட்டன்சத்திரம் பகுதியில் வீடுகளில் திருடியவர் என்பதும் தெரியவந்ததுள்ளது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து 80 பவுன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். அவர் மீது திருச்சி, சேலம், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.ஒட்டன்சத்திரம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுப்பட்ட நபர் பிடிபட்டதால் பொதுமக்களும், காவல்துறையினரும் நிம்மதி அடைந்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் லிப்ட் வேலை செய்யாததால் மாற்றுத்திறனாளிகள் முதியோர் கடும் அவதி..
by mohan
written by mohan
திண்டுக்கல் ரயில் நிலையம் தமிழகத்தின் மிக முக்கிய ரயில் நிலையமாக உள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் முப்பதுக்கும் மேற்பட்ட ரயில்கள் தினசரி வந்து செல்கின்றன.இந்த ரயில்களில் பயணிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினசரி வந்து செல்கிறார்கள். இவர்களில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் அடக்கம். இவ்வாறு வருகைதரும் மாற்றுத்திறனாளிகள் அனைத்து நடைமேடைகளுக்கும் சென்றுவர லிப்ட் வசதி இல்லாமல் இருந்தது.எந்த நடைமேடைக்கு செல்ல வேண்டும் என்றாலும் முப்பதுக்கும் மேற்பட்ட படிகளை ஏறி இறங்க வேண்டிய நிலை இருந்தது.
மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் எளிதாக வந்து செல்ல வசதியாக லிப்ட் வசதி ஏற்ப்படுத்தி தர வேண்டும் என திண்டுக்கல் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் தொடர்ச்சியாக போராடியதன் பலனாக கடந்த ஆண்டு லிப்ட் வசதி அனைத்து நடைமேடைகளுக்கும் செல்லும் வகையில் ஏற்ப்பாடு செய்யப்பட்டது.இந்நிலையில் தற்போது பலகட்ட போராட்டங்களை நடத்தி பெறப்பட்ட லிப்ட் வசதி பலநேரங்களில் பழுதாகி யாருக்கும் பயன்படாமல் உள்ளது. கடந்த 30.11.19 அன்று டெல்லியில் மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி TARATDAC சங்கத்தின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பகத்சிங் தலைமையில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் நாற்பதுக்கும் மேற்ப்பட்டோர் இரவு 03.00 மணியளவில் திண்டுக்கல் திரும்பினர். கை, கால் ஊனமுற்றவர்கள், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என கடுமையாக ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் நான்காவது நடைமேடையில் இருந்து ரயில் நிலையத்திற்கு வெளியே வர நாற்பதுக்கும் மேற்ப்பட்ட படிக்கட்டுகளை ஏறி இறங்குவதற்குள் ஒவ்வொரு மாற்றுத்திறனாளியும் அதுவும் தான் கொண்டுவந்த பைகளையும் தூக்கிக்கொண்டு, கொட்டும் மழையில் நனைந்துகொண்டு வெளியே வருவதற்குள் மிகப்பெரிய கஷ்டத்தை அனுபவிக்க வேண்டி வந்தது.
யாருடைய தேவைக்காக லிப்ட் வசதி ஏற்ப்படுத்தப்பட்டதோ அவர்களுக்கு அது பயன்படாமல் வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே உள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் படும் இன்னல்களை கருத்தில்கொண்டு உடனடியாக போர்க்கால அடிப்படையில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் லிப்ட் சரிசெய்யப்பட வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளை திரட்டி திண்டுக்கல் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம் என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் P.செல்வநாயகம் – மாவட்ட தலைவர்
S.பகத்சிங் – மாவட்ட செயலாளர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல் மாவட்டத்தில் நீர் பாதுகாப்பு திட்டத்தின் 4 ஆம் கட்டத்தை இணைந்து அறிவிக்கின்றன
by mohan
written by mohan
ஆம்வே இந்தியாவும், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் நீர் பாதுகாப்பு திட்டத்தின் 4 ஆம் கட்டத்தை இணைந்து அறிவிக்கின்றன.இத்திட்டத்தை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் ஸ்ரீ திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள், மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியாளர் மற்றும் மாவட்ட நீதிபதி எம். விஜயலட்சுமி ஐ.ஏ.எஸ்., ஆகியோர் ஆம்வே இந்தியா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் திட்டங்களின் துணைத் தலைவர் திரு. ராஜீவ் தாஸ் குப்தாவுடன் இணைந்து திறந்துவைத்தனர்.
ஆம்வே இந்தியாவின் சி.இ.ஓ.வான அன்ஷு புத்ராஜா, திட்டத்தின் நான்காம் கட்டத்தை அறிவித்துவிட்டுக் கூறினார், “ஆம்வேயில் சமூகத் தொழில்முனைவோரை உருவாக்கவும் தண்ணீர்த் தேவையால் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கவும், மாவட்டத்தின் 4000 கிராமவாசிகளுக்கும் மேலானவர்களுக்குப் பயனளிக்கும் பணியைப் புரியவும் உதவிபுரிந்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியாளர் மற்றும் மாவட்ட நீதிபதி எம். விஜயலட்சுமி ஐ.ஏ.எஸ். அவர்கள் மற்றும் முழுமையான நிர்வாகத்தின் கூட்டாண்மை மற்றும் உறுதிப்பாட்டுக்கு நாங்கள் நன்றிக் கடன் பட்டுள்ளோம்.”
ஆம்வேயின் நீர்ப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், மாவட்டத்தின் நீர் கொண்டுவரும் காலவாய்களைத் தூர் வாருவதில் இருந்து தடுப்பு மற்றும் கல்லணைகளை கட்டுவது வரை, இந்தத் திட்டம் திண்டுக்கல் மாவட்ட கிராமங்களின் நீர்ப் பற்றாக்குறையை குறைத்ததோடு மட்டுமல்லாமல், மழைநீர் சேமிப்போடு அப்பகுதியில் இருக்கும் கிணறுகளில் நீரை மீட்டமைக்கவும் செய்தது.
ஆம்வே இந்தியாவின் உற்பத்தி மற்றும் சிறப்புத்திட்டங்களின் துணைத் தலைவர் ராஜிவ் தாஸ் குப்தா, நீர் திட்டத்தின் 3 வது கட்டத்தில், மாவூர் கண்வாய் முதல் ஓணான் ஓடை வரை – தோராயமாக 21கி.மீ. நீளமுள்ள நீர் கொண்டுவரும் ஆறு கால்வாய்களை மீட்டமைத்துள்ளோம். மேலும், நாங்கள் பொந்துப்புளி ஓடையில் கேபியன் அமைப்போடு கூடிய ஒரு தடுப்பு அணையும், மழை பெய்யும் போது தண்ணீரைத் தடுக்க ஒரு கல் அணையும் அமைத்துள்ளோம். இத்திட்டத்தின் மூலம் 19 கோடி லிட்டர் மழை நீரைத் தேக்க முடியும். இதனுடன் அப்பகுதியில் உள்ள 384 திறந்த கிணறுகளையும் 295 ஆழ்துளைக் கிணறுகளையும் நிரப்பலாம். “
நீர்ப்பாதுகாப்புத் திட்டத்தை 2016 இல் ஆம்வே முன்னெடுத்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆம்வேயின் உற்பத்தி நிலையத்தின் அருகில் உள்ள ஏழு கிராமங்கள் இதன் மூலம் பயனடைகின்றன. முதல் இரண்டு கட்டங்களால் நிலத்தடி நீர் மட்டம் 2016 ஜனவரியில் 490 அடியிலிருந்து 2017 டிசம்பரில் 255 அடியாக உயர்ந்தது. இந்த திட்டம் 1000 ஹெக்டேர் பரப்பளவுக்குப் பரந்து 2,000 கிராம மக்களுக்குப் பயனளித்தது. திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தைத் திண்டுக்கல்லில் செயல்படுத்த, நீர்ப் பாதுகாப்பில் தனிச்சிறப்பு வாய்ந்த கிரீன் வென்ச்சர் என்ற நிறுவனத்துடன் ஆம்வே இந்தியா கூட்டு சேர்ந்துள்ளது.இந்நிகழ்வில் ஆம்வே நிறுவனம் சார்பில் திரு.ராஜ் நரேன், திரு.சிவகுமார் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி விஜயலட்சுமி மற்றும் அரசு உயர் அதிகாரிகள்,பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கீழை நியூஸுக்காக மதுரை கனகராஜ்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லையில் கனமழை எதிரொலி-மண் சுவர் இடிந்து இடிபாடுகளுக்குள் சிக்கி முதியவர் உயிரிழந்த பரிதாபம்
by mohan
written by mohan
நெல்லை மாவட்டம் முழுவதிலும் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆறு உட்பட பல இடங்களில் நீர் கரை புரண்டு ஓடுகிறது.இந்நிலையில் மழையால் மண் குடிசையின் சுவர் இடிந்து முதியவர் உயிரிழந்துள்ள பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.நாங்குநேரி அருகே உள்ள குசவன் குளத்தை சேர்ந்த முதியவர் கந்தசாமி (81). இவர் நேற்று இரவு தனக்கு சொந்தமான மண் குடிசை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது பெய்த மழையினால் வீட்டின் மண் சுவர்கள் இடிந்து விழுந்தன. இன்று காலை அக்கம்பக்கத்தினர் வீடு இடிந்து இருப்பதை கண்டு இடிபாடுகளை அகற்றினர். அப்போது இடிபாடுகளுக்குள் கந்தசாமி சிக்கியிருப்பதை கண்டு மீட்டனர். இருப்பினும் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதனை அடுத்து தகவலறிந்து வந்த நாங்குநேரி போலீசார் அவரது உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் கீழமாசி வீதி வெங்களகடை தெருவில் மளிகை கடை நடத்தி வரும் சக்கரவர்த்தி என்பவர் 29-ஆம் தேதி இரவு கடையை அடைத்துவிட்டு பணப்பையை இருசக்கர வாகனத்தில் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்பொழுது அலங்கார் தியேட்டர் ஆறுமுகம் மருந்தகம் அருகே வரும்போது பணப்பை கீழே விழுந்து உள்ளது. இதைக் கவனிக்காமல் வீட்டுக்கு சென்று பார்த்த போது பணப்பை கீழே விழுந்துள்ளது தொியவந்தது. பின் அங்கே சென்று வரிசையாக தேடும் பொழுது அங்குள்ள ஒரு சிசிடிவியில் பணப்பை விழுங்கும் காட்சி தெரிந்துள்ளது.அந்த பணப்பையை ஒரு தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் வந்து எடுத்துச் செல்வதாக தெளிவாக உள்ளது.அவர் வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால் அவருடைய வாழ்க்கையே இந்த பணத்தில்தான் உள்ளது. எனவே தயவு செய்து யாரும் எடுத்திருந்தாலும் இவரைப் பற்றி தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றார் .மேலும் இது குறித்து அவர் தெப்பக்குளம் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து இரவு வரை மழை பெய்தது அரக்கோணத்தில் 45.6 மி.மீ மழை அதிகயளவு பதிவாகி உள்ள நிலையில் இன்று வானம் வெய்யில் மற்றும் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மழையால் ஏற்படும் வெள்ளத்தை சமாளிக்க போதுமான மீட்பு ரப்பர் படகுகள், உபகரணங்கள் தயார்; மாவட்டம் தோறும் 21 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் 101 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.- தீயணைப்புத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அமீரகம் வருகை புரிந்த இராமநாதபுரம் பாரளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனிக்கு துபாய் ஈமான் அமைப்பு சார்பாக லேண்ட் மார்க் ஹோட்டலில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்சியில் கீழக்கரை மற்றும் இராமநாதபுர மாவட்டத்தை சார்ந்த பொது மக்கள் கலந்து கொண்டு முன் வைத்த கோரிக்கைகளின் விவரம் பின் வருமாறு:
1. கீழக்கரையில் இரயில் நிலையம் அமைப்பது.
2. கடல் நீரை குடி நீராக்கும் திட்டத்தை அமல்படுத்துதல்
3. சுகாதார மேம்பாட்டு திட்டத்தை அறிமுகப்படுத்துதல்.
4. முன் மாதிரி மாவட்டமாக உருவாக்குதல்.
5. தொழிற்பேட்டை அமைத்து வேலை வாய்ப்பை உருவாக்குதல்.
6. கீழக்கரை ஜின்னா தெருவில் அமைந்துள்ள பால சுப்ரமணியம் கோயிலை பராமரித்தல்.
போன்ற பல வகையான கோரிக்கைகளை ஈமான் தலைவர் ஹபீபுல்லாஹ், பொதுச் செயளாலர் ஹமீது யாசின் மற்றும் பொது மக்கள் சார்பாக வைப்பட்டது.
இந்நிகழ்சியில் பேசிய எம்.பி நவாஸ் கனி கோர்க்கைளை நிறைவேற்ற முயற்சி எடுப்பேன் என்ற உறுதி மொழியோடு முன் மாதிரி எம்.பி யாக திகழ்ந்து முன்னேறிய மாவட்டமாக உருவாக பாடுபடுவேன் என்று உறுதியளித்தார்.
இறுதியாக வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் நல்ல வேட்பாளர்களை அடையாளம் கண்டு நகர் மன்றத்துக்கு தேர்வு செய்து அனுப்ப வேண்டும் என்றும் ஊழலற்ற நகராட்ச்சியை இருக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு உரையை நிறைவு செய்தார்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக ஜமால் முஹம்மது கல்லூரி துணை முதல்வர், ஈமான் அமைப்பின் தலைவர் ஹபீபுல்லாஹ், ஈமான் அமைப்பின் பொதுச்செயளாலர் ஹமீது யாசின், அலைட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் டைரக்டர் கமால் மற்றும் முஸ்லிம் லீக் நிர்வாகிகள், கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) நிர்வாகிகள் சார்பாக பொன்னாடை போர்தப்பட்டது மற்றும் பல கீழக்கரை சமூக நல அமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுர மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் தொடர்ந்து பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் நாளை (2.12.2019) ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பாரம்பரிய பொருட்களின் கண்காட்சி துவங்கி நவ.30 முதல் நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் நெல்லை மாவட்ட மக்களின் பழமையான பாரம்பரிய பொருட்கள் 200 க்கும் மேற்பட்டவை இடம் பெற்றிருந்தன .அதில் உலோகப் பொருள்கள், மரச்சாமான்கள், பனை ஓலை பொருட்கள் போன்றவை இடம் பெற்றிருந்தன.நவ.30 அன்று துவங்கி உள்ள இக்கண்காட்சி டிசம்பர் 6 ஆம் தேதி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.முன்னோர்களின் பாரம்பரிய பெருமையினை விளக்கும் இக்கண்காட்சி அனைவரும் கண்டு ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது.அந்த வகையில் எராளமான பள்ளி மாணவ மாணவிகள் இக்கண்காட்சி யினை கண்டு ரசித்தனர். இக் கண்காட்சியில் எழுத்தாளர் நாறும்பூநாதன், பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர். பேரா, கவிஞர்.சுப்பையா,அம்பை கல்லூரி பேராசிரியர்கள் தங்க செல்வி,மாரியம்மாள், கலை ஆசிரியர் சொர்ணம், சங்கரன் கோவில், வீரசிகாமணி விவேகானந்தா பள்ளி முதல்வர் கோமு செல்லம், சிவந்தி பட்டி தாயுமானவர் பள்ளி முதல்வர் தங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி சிறப்பாக செய்திருந்தார்.இந்த கண்காட்சி குறித்து பொதிகை தமிழ்ச்சங்கத்தின் தலைவர் கவிஞர் பேரா கூறியதாவது:
அரசு அருங்காட்சியகத்தில் அறிய வேண்டிய அரும் பொருட்கள் ஏராளமாக உள்ளன. நமது பழமையைப் போற்ற வேண்டியது அவசியம் ஆகும். பழமை மாறாமல் புதுமையைப் படைக்கலாம்.பழமை என்பது செடியை,மரத்தைத் தாங்கும் வேர்களாகும். வேர்களைக் காக்க வேண்டிய அவசியத்தை இன்றைய இளம் தலை முறையினரிடையே கொண்டு செல்ல வேண்டியது மூத்தோர்களாகிய நமது கடமையாகும். அந்த விழிப்புணர்வை ஏற்படுத்திட காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி எடுத்துவரும் தொடர் நடவடிக்கைகளுக்கும் முயற்சிகளுக்கும் துணையாக மட்டுமின்றி தூணாகவும் பொதிகைத் தமிழ்ச் சங்கம் இருக்கும்” என கவிஞர்.பேரா தெரிவித்தார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செங்கத்தில் கிணற்றில் தவறிவிழுந்த கன்று குட்டியை உயிருடன் மீட்டெடுத்த தீயணைப்பு துறை.
by mohan
written by mohan
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள செந்தமிழ் நகரில் மூடப்படாத பாழடைந்த கிணறு ஒன்றில் கன்று குட்டி தவறி விழுந்தது, இதனை கண்ட பொதுமக்கள் கன்று குட்டியை கயிறுகள் மூலம் மேலே தூக்க முயற்சி செய்தார்கள், கிணற்றின் ஆழம் அதிகமாக இருந்ததனால் கன்று குட்டியை அவர்களால் கிணற்றிலிருந்து தூக்க முடியவில்லை. அதனால் செங்கம் தீயணைப்பு துறைக்கு கைப்பேசி வாயிலாக அழைப்பு விடுத்தனர், இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக தீயணைப்புத் துறையினர் வந்து கிணற்றில் இறங்கி கயிறுகளால் கன்றுக்குட்டியை இறுகக் கட்டி காயங்கள் ஏற்படாதவாறு உயிருடன் மீட்டெடுத்தனர், கன்று குட்டியை திறம்பட செயல்பட்டு உயிருடன் மீட்டு எடுத்த தீ அணைப்பு துறையினரை பொதுமக்களும் விலங்கின ஆர்வலர்களும் பாராட்டினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விடா மழையிலும் கொல்கத்தா முதல் குமரி வரை பிளாஸ்டிக் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ள இளைஞர்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்தவர் இமானுவல் ஜோசப், வயது 21. இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் கொல்கத்தாவில் தொடங்கி தற்சமயம் கீழக்கரை வழியாக விடாத மழையிலும் குமரியை நோக்கி “பிளாஸ்டிக்” உபயோகத்தினால் ஏற்படும் தீங்கு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதாமக நடை பயணம் மேற்கொண்டுள்ளார்.
இன்று (01/12/2019) கீழக்கரையை கடந்து சென்றவருக்கு கீழக்கரை நல இயக்கம் சார்பாக சேகு பசீர் அஹமது வாழ்த்துக்கள் தெரிவித்து உற்சாகப்படுத்தினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
“கிணற்றை காணோம்” என்ற ரீதியில் பெய்த மழைக்கு காணாமல் போன பெரியபட்டிணம் கப்பலாற்று தடுப்பணை…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் பெரியபட்டிணம் கிராமத்தில் பெய்த கனமழையின் காரணமாக நீர்வளம் பாதுகாப்பு அரணாக விளங்கக்கூடிய கப்பலாற்று தடுபாணை சரியான வழுமுறைகள் பின்பற்றி தரமாக கட்டமைக்கப்படாத காரணத்தால் நேற்று (30-11-19) இரவு பெய்த மழையில் உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில் உடைக்கப்பட்ட கப்பலாற்று தடுபாணையை சரிசெய்யும் பணியில் இன்று (01-12-19) பெரியபட்டிண ஊராட்சி செயலாளர் சேகு ஜலால் , முத்துப்பேட்டை ஊராட்சி செயலாளர் அம்மாசி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தலைமையில் JCB இயந்திரத்தை தயார்செய்து, பெரியபட்டிண இளைஞர்கள் மற்றும் பெரியோர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து கூடுதல் சேதம் அடையாமல், இயன்ற அளவு நீர்வளத்தை பாதுகாக்க உடைந்த கப்பலாற்று தடுபாணையை சரி செய்யும் பணியை செய்து வருகின்றனர்.
ஆனால் இப்பணிநம் தரமில்லாமல் செய்த ஒப்பந்தகாரர் மற்றும் ஊராட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா??..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் சமயநல்லூர் உட்கோட்டம் சமயநல்லூர் நெடுஞ்சாலை Traffic RI மணிமாறன் மற்றும் போலீசார் இணைந்து நெடுஞ்சாலையில் விபத்துக்கள் அதிகம் நடைபெறும் இடங்களில் தடுப்புகளை அமைத்து தடுப்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம பட்டணம்காத்தான் கிழக்கு தெரு கருப்பையா, 65. இவர் பாம்பனில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை செய்து வந்தார்.
நேற்று ( 30.11.19) இரவு இவர் வேலை முடித்து மது போதையில் வீடு திரும்பினார். பாம்பன் ரயில் நிலையம் அருகே உள்ள நண்டு கம்பெனி அருகே தேங்கிய மழை தண்ணீரில் விழுந்து இறந்தார். இது குறித்து பாம்பன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.