தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு திமுக சார்பில் பேரூர் கழக செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் திரு பி. கே .முரளி அவர்களின் தலைமையில் கொரோனா வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய நழிவுற்ற பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இவர்களின் நலனை கருத்தில் கொண்டு திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் ‘ஒன்றிணைவோம்வா’ என்ற அறிவுரை படியும் ரம்ஜான் நோம்பு பண்டிகையை முன்னிட்டு பிரியாணிக்கு சாப்பாட்டிற்கு தேவையான 15வகையான மளிகை பொருட்களை பாலக்கோடு பேரூராட்சி பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் சூடப்பட்டி சுப்பிரமணி மாவட்ட துணை செயலாளர், முருகன், வழக்கறிஞர் பிரிவு, பட்டு அஜிஸ்வுல்லா, அமிர்ஜான், ஆசிப், பாபு(எ)முத்துஜா, அமன்,ராஜி,விஜயன்,பெரியசாமி, மாலிக்புரான், பத்தேகான், அன்வர், மோகன், செந்தில், சின்னசாமி, ஆறுமுகம், ரகிம், குஷ்காமியான், முயின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Category:
செய்திகள்
செம்பட்டி அருகே பெண் ஒருவருக்கு கொரொனா நோய்தொற்று அந்த பகுதி தடை செய்யப்பட்டது!
by Askar
written by Askar
செம்பட்டி அருகே பெண் ஒருவருக்கு கொரொனா நோய்தொற்று அந்த பகுதி தடை செய்யப்பட்டது!
திண்டுக்கல் மாவட்டம் பச்சமலையான் கோட்டை ஊராட்சி புது காம்பட்டியில் பெண் ஒருவருக்கு கொரொனா நோய்தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் புது காம்பட்டி வந்ததுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் செம்பட்டி காவல்துறையினர் சுகாதார துறைக்கு தகவல் அளித்து பரிசோதனைக்காக அவரை மருந்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டதின் பேரில் அப்பகுதியில் மேலும் பரவாமல் தடுக்கும் விதமாக தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு செம்பட்டி காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் கொண்ட காவல்துறையினர் புது காம்பட்டிக்கு வரும் வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு கண்காணிப்பு பனியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இரண்டு மாதங்களுக்கு முன் திருடப்பட்ட மாடுகள் மீட்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைத்த பெரியகுளம் காவல் துறையினர்..
by Askar
written by Askar
இரண்டு மாதங்களுக்கு முன் திருடப்பட்ட மாடுகள் மீட்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைத்த பெரியகுளம் காவல் துறையினர்..
தேனி மாவட்டம் பெரியகுளம், கீழ வடகரை, கரட்டூரைச் சேர்ந்த சிவப்பிரகாஷ் (வயது 19) பாண்டி (வயது 35) ஆண்டிபட்டியைச் சேர்ந்த பார்த்திபன் (வயது 29) சிவக்குமார் (வயது 30) ஆகியோர் பெரியகுளத்திலிருந்து மாடுகளைத் திருடி,டாடா ஏ.சி. இ, வாகனம் மூலம் கொண்டு சென்று விற்பனை செய்தது தெரிய வந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெரியகுளம் காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ் ,சார்பு ஆய்வாளர் செல்வராசு உடன் தமீம் அன்சாரி பாலமுருகன் ஆகியோர்
உடனடியாக மாடுகளை ஏற்றிச் சென்ற நான்கு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். அதன் பின்பு விற்கப்பட்ட இரண்டு மாடுகளையும், இரண்டு மாதத்திற்குப் பின் மீட்கப்பட்டு மாடுகளுக்கு சொந்தக்காரரான ராஜேஷ் கண்ணனிடம் ஒப்படைத்தனர் பெரியகுளம் காவல் துறையினர், மாடுகள் திருடிய வழக்கில் தொடர்புடைய 4, பேரையும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு, சிறையிலடைத்தனர்.
A. சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சுரண்டையில் ராஜீவ்காந்தி நினைவு தினம்;தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி-காங்கிரஸ் கட்சியினர் திரளாக பங்கேற்பு..
by Askar
written by Askar
சுரண்டையில் ராஜீவ்காந்தி நினைவு தினம்;தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி-காங்கிரஸ் கட்சியினர் திரளாக பங்கேற்பு..
சுரண்டையில் ராஜீவ் காந்தி நினைவு தினம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ் பழனி நாடார் தலைமையில் நடைபெற்றது.தீவிரவாத எதிர்ப்பு உறுதி மொழியும் ஏற்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் சுரண்டையில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ் பழனி நாடார் தலைமையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 29வது நினைவு தினம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைத்து நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் ராஜீவ் காந்தியின் திருவுருவ படத்திற்கு எஸ்.பழனி நாடார் மற்றும் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.
தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும் கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்படும் மக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் உதவிகள் செய்ய வேண்டும் என மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ் பழனி நாடார் கேட்டுக்கொண்டார்.
சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சண்முகவேல், மாவட்ட காங்கிரஸ் செயலாளர்கள் விஏ சமுத்திரம், ஆலடி ராமராஜ், மாநில ஊடக பிரிவு பொதுச் செயலாளர்,.சிங்கராஜ், மாநில பேச்சாளர் பால்துரை, மாவட்ட அமைப்பு சாரா அணி தலைவர் பிரபாகர், வர்த்தக காங்கிரஸ் சமுத்திரம், வட்டார காங்கிரஸ் செயலாளர் தெய்வேந்திரன், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் அருணாசலக்கனி, மணிகண்டன், ஆலங்குளம் பந்தல் அருணாசலம், குணசேகரன், ராமர் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செங்கம் நியாயவிலை கடையில் முறைகேடு புகார்: அதிகாரிகள் திடீர் ஆய்வு; சேல்ஸ்மேன் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை.!
by Askar
written by Askar
செங்கம் நியாயவிலை கடையில் முறைகேடு புகார்: அதிகாரிகள் திடீர் ஆய்வு; சேல்ஸ்மேன் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை.!
செங்கம் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வழங்காமல் ஒரு டன் அரிசி இருப்பு வைத்திருந்தது. மாவட்ட வழங்கல் அலுவலர் ஹரிதாஸ் ஆய்வின் மூலம் தெரியவந்தது. இதையடுத்து சேல்ஸ்மேன் மீது நடவடிக்கை மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தார் கரோனா தடுப்பு அமலில் உள்ள நிலையில் ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளது இந்நிலையில் தமிழக அரசு அனைத்து ரேஷன் கடைகளிலும் இலவசமாக அரிசி வழங்க உத்தரவிட்டது. ஆனால் சங்கம் சிவன் கோயில் தெருவில் அமைந்துள்ள கற்பகம் நியாய விலை கடையில் அனைத்து அட்டைதாரர்களுக்கு இலவச பொருட்கள் சரிவர இயங்குவதில்லை பாதிப் பேருக்கு மட்டுமே வழங்கிவிட்டு இருப்பு இல்லை என்று கூறி பொதுமக்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர். ரேஷன் பொருட்களை விலை சந்தையில் விற்று கொள்ளை லாபம் பார்ப்பதாக சேல்ஸ்மேன் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் மனுக்கள் அனுப்பியுள்ள நிலையில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஹரிதாஸ் சம்பந்தப்பட்ட நியாய விலை கடைக்கு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது குடும்ப அட்டைக்கு வழங்க வேண்டிய ஒரு டன் அரிசி இருப்பு தெரியவந்தது. சமையல் பொருட்களும் இருப்பு இருப்பது தெரியவந்தது. சேல்ஸ்மேன் முறையாக செய்யவில்லை என்றும் தெரியவந்ததையடுத்து நியாயவிலைக் கடை சேல்ஸ்மேன் மீது உரிய நடவடிக்கை எடுக்க திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமிக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் ஹரிதாஸ் பரிந்துரை செய்தார். நிகழ்வின்போது செங்கம் வட்ட வழங்கல் அலுவலர் சுமதி உடனிருந்தார்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பனி முடிந்தும் அகற்றப்படாமல் விபத்து ஏற்படுத்தும் நிலையில் மின் கம்பங்கள் உயிர் பலிகள் ஏற்படும் முன் சரி செய்ய பொது மக்கள் கோரிக்கை!
by Askar
written by Askar
பனி முடிந்தும் அகற்றப்படாமல் விபத்து ஏற்படுத்தும் நிலையில் மின் கம்பங்கள் உயிர் பலிகள் ஏற்படும் முன் சரி செய்ய பொது மக்கள் கோரிக்கை!
ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டை பகுதிகளில் கடந்த சுமார் எட்டு மாதகாலத்திற்கு முன்பு புதிய மின்கம்பங்கள் ஊன்றப்பட்டு உயர் அழுத்த மின் பராமறிப்பு பனி நடைபெற்றது.
பனிமுடிந்து எட்டு மாதகாலங்கள் ஆனபிறகும் பழைய மின்கம்பங்கள் அகற்றப்படாமல் சாலையை மறித்து நிற்பதால் வாகனஓட்டிகள் அதில் இடித்து உயிர்பலி ஏற்படும் நிலையில் உள்ளது. மேலும், அரசு மருத்துமனை நுழைவாயில் முன்பு மிகவும் தாழ்வாக மின்கம்பி குறுக்கே செல்வதால் மருத்துவமனைக்கு வரும் அவசர ஊர்தி போன்ற வாகனங்கள் மேற்கூறை உராய்வு போன்ற காரணங்களால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே, விபத்தினால் உயிர்பலி ஏற்பதுவதற்க்கு முன்பு துறைசார்ந்த அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு இடையூறாக உள்ள மின்கம்பங்கள் அகற்றுவதோடு மருத்துமனை நுழைவாயிலில் தாழ்வாக தொங்கும் நிலையில் உள்ள மின்கம்பியை சற்று உயர்வாக இழுத்துகட்டி உதவுமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆட்டோகளை இயக்க அனுமதி அளிக்க வேண்டும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூபாய் 15 ஆயிரம் வழங்க வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
விருதுநகர் மாவட்டத்தில் ஆட்டோகளை இயக்க அனுமதி அளிக்க வேண்டும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூபாய் 15 ஆயிரம் வழங்க வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதனால் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஆட்டோக்கள் இயங்கவில்லை ஆட்டோ ஓட்டும் தொழிலை நம்பி 5000 மேற்பட்ட குடும்பங்கள் உள்ள நிலையில் 55 நாட்களாக ஆட்டோ இயங்காததால் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் எனவே விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 5,000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 15000 ஆயிரம் வழங்க வேண்டும் ஆட்டோக்கள் இயங்க தளர்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 100 க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து தடையை மீறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சூலக்கரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தனியார் நிதி நிறுவனங்கள் வாங்கிய கடனை கேட்டு கட்டாய படுத்துவதாக கூறி ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியரிடம் பெண்கள் மகளிர் குழுவினர் புகார்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
ஊரடங்கால் வேலையின்றி தவித்து வரும் நிலையில் தனியார் நிதி நிறுவனங்கள் வாங்கிய கடனை கேட்டு கட்டாய படுத்துவதாக கூறி ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியரிடம் பெண்கள் மகளிர் குழுவினர் புகார். வாங்கிய கடனை கட்ட 2 மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 50 நாட்களை கடந்து சூழ்நிலையில் பல்வேறு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு சில தளர்வுகள் அளித்தாலும் இன்னும் ஏராளமானோர் வேலையின்றி தவித்து வருகின்றனர்.இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிய மகளிர் சுய உதவிக்குழுவினர் தனியார் நிதி நிறுவனங்கள் தங்களிடம் வாங்கிய கடனை கேட்டு வற்புறுத்துவதாகவும், தாங்கள் வாங்கிய கடனை செலுத்த கூடுதலாக 2 மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் கிருஷ்ணவேணியிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் மகளிர் சுய உதவிக்குழு குழுவினரிடம் தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை கிழக்குத்தெரு நம்ம தெரு நட்பு ( N T N )Whatsup குழுமத்தின் தொடரும் மனித நேய சேவை..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரை கிழக்குத்தெரு நம்ம தெரு நட்பு ( N T N )Whatsup குழுமம் பல் வேறு சமுதாய பணிகளை ஆராவாரம் இல்லாமல் செய்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நம்ம தெரு நட்பு (N T N) Whatsup குழுமம்சார்பாக ரமலான் மாதத்தில் அசாதாரண குடும்பசூழ்நிலை வசூலுக்காக NTN தளத்தில் உள்ளவர்களிடமும், அத்தளத்தில் பயணிக்காத பொதுமக்கள் மூலமாகவும் உதவிகள் கோரியருந்தனர்.
அதை தொடர்ந்து நல்ல உள்ளங்கள் மூலம் மொத்தம் ரூ 1,02,300/- ( ONE LAKH TWO THOUSAND AND THREE HUNDRED ONLY) தொகையை 21.05.2020 அன்று சேகுஅப்பா பள்ளி வாசல் சதுக்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் சரி பார்க்கப்பட்டது.
இதை தொடர்ரந்து விரைவில் மொத்த தொகையையும் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. என்பதை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெடரேஷன் மாநில தலைவரும், சித்தார்கோட்டை ஜமாத் முன்னாள் தலைவருமான அல்தாப் உசேன் ஏற்பாட்டில் கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தேசிய ஊரடங்கு உத்தரவினால் மிகவும் சிரமப்படும் மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
ஏர்வாடி, திருப்புல்லாணி அருகே எம்ஜிஆர் நகர், பட்டணம்காத்தான், ராமநாதபுரம் வனசங்கரி அம்மன் கோயில் தெரு உள்பட பல்வேறு பகுதிகளில் நிவாரண உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. ஏழாவது முறையாக நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெடரேஷன் மற்றும் புலனாய்வு எக்ஸ்பிரஸ் இதழ் சார்பில் உச்சிப்புளி அருகே சீனியப்பா தர்ஹா குடியிருப்பு பகுதி மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், இதர செலவுக்கு ரொக்கம் போன்ற உதவிகளை நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெடரேஷன் மாநில தலைவர் அல்தாப் உசேன் வழங்கினார். பொறுப்பாசிரியர் சிவசங்கரன், போட்டோகிராபர் பாக்கியராஜ் உடன் இருந்தனர். பேரிடர் காலத்தில் உதவிக்கரம் நீட்டிய மாநில தலைவர் அல்தாப் உசைனுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மேற்கு வங்காளத்திற்க்கு அணுமதியின்றி செல்ல முயன்ற 75 புலம்பெயர் தொழிலாளர்களை தடுத்து நிறுத்தி சோதனை..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கேரள மாநிலம் பத்தனதிட்டாவிலிருந்து மேற்கு வங்காளத்திற்க்கு அணுமதியின்றி செல்ல முயன்ற 75 புலம்பெயர் தொழிலாளர்களை தடுத்து நிறுத்தி இராஜபாளையத்தில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் சோதனைச்சாவடியில் வழக்கம்போல் காவலர்கள் மற்றும் சுகாதார துறையினர் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த லாரியில் கேரளாவிலிருந்து மேற்கு வங்காளம் செல்வதற்காக லாரி சோதனைச்சாவடி அருகே வந்த போது நிறுத்தி சோதனை செய்ததில் லாரியில் 75 புலம்பெயர் தொழிலாளர்கள் கேரள மாநிலம் பத்தனதிட்டா பகுதியில் கட்டிட வேலை மற்றும் பல்வேறு வேலைகளில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தவர் பயணித்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்பு அடுத்து 144 தடை உத்தரவு தொடரப்பட்ட நிலையில் லாரிகள் மூலம் சொந்த ஊருக்கு செல்வதற்கு முயற்சி செய்து வந்துள்ளனர். இவர்களை சோதனைச்சாவடியில் நிறுத்தியதை அடுத்து காவல்துறையினர் கொடுத்த தகவலின் பெயரில் வந்த வட்டாட்சியர் ஆனந்தராஜ் மற்றும் இராஜபாளையம் காவல்துறை கண்காணிப்பாளர்
நாகசங்கர் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை செய்தனர்
இந்த தகவல் மாவட்ட ஆட்சியார் கண்ணனுக்கு தகவல் கொடுத்தனர் இதையடுத்து
விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் தென்காசி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள தேவிபட்டினம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இவர்கள் அனைவரையும் தங்கவைத்து முதற்கட்டமாக இவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது. மேலும் இவர்களை தனிமைபடுத்தி கொரோனா தொற்று உள்ளதா? என பரிசோதனை செய்து அதன் பின்பு இவர்களை ரயில் மூலம் மேற்கு வங்காளத்திற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தார்.
இதுகுறித்து புலம்பெயர் தொழிலாளர் நம்மிடைய கூறும்போது,
தாங்கள் பணி புரிந்து வந்த இடத்தில் வழங்கப்பட்ட அரிசி போன்ற உணவு பொருட்கள் தீர்ந்தது விட்டதை தொடர்ந்து சிரமத்திற்கு ஆளானோம். மேலும் வேலைகள் இல்லாததால் தாங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்காக லாரியில் ஏறி சென்று கொண்டிருந்தபோது இங்கு தடுத்து நிறுத்தியுள்ளனர் என தெரிவித்தார். மேலும் தங்கள் ஊர் திரும்பவதற்கு தங்கள் மாநில மேற்கு வங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தனி மனித உரிமை மீறப்படுகிறதா??..பாதிக்கப்பட்டவர்களின் தகவல் பொதுவெளியில் பரவும் அவலம்.. அரசு அதிகாரிகள் கவனிப்பார்களா..?.
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரையில் கொரானா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர், வயது, முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட முழுமையான தகவல்கள் தொடர்ச்சியாக பேஸ் புக், வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அரசாங்கமும் சுகாதாரத்துறையினரும் தங்கள் துறை சார்ந்த கோப்புகளில் வைத்திருக்க வேண்டிய இந்த தகவல்கள் காற்றில் பறக்க விடப்பட்டு இருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது. இதனால் கீழக்கரை பகுதி பொதுமக்கள் சுகாதாரத் துறையினர் மீது பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இது குறித்து ப்ளாக் & ஒயிட் இயக்குனர் மற்றும் கீழக்கரை சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் சட்ட செயல் நிர்வாகி முகம்மது இர்ஃபான் கூறுகையில் ”நம் கீழக்கரை நகரில் ஒவ்வொரு முறையும் கீழக்கரையில் கொரானா பாசிட்டிவ் குறித்த சுகாதாரத் துறையினரின் எக்ஸல் சீட் தகவல்கள் மின்னல் வேகத்தில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. இவ்வாறு கொரானா பாதித்தவர்கள் குறித்த விபரங்கள் அடங்கிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது போன்று வேறு எந்த ஒரு ஊரிலும் கொரானா பாதித்தவர்களின் தனி மனித விபரங்கள் வெளியிடப்படுவதில்லை. ஆனால் நம் கீழக்கரை நகரில் மட்டும் முழு தகவல்களோடு, வதந்தீகளும் தீயாக பரப்பப்படுகிறது.
இது குறித்து தற்போது சம்பந்தப்பட்ட சுகாதார துறையினரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையினருக்கு மட்டுமே தெரிந்த தகவல்கள் எவ்வாறு சமூக வலைத்தளங்களில் கசிய விடப்படுகிறது? தீய நோக்கில் உள் நோக்கத்துடன் இவ்வளவு வேகமாக பரப்பப்படும் இந்த அவசியமற்ற தகவல்களின் பின்னணியில் யார் யாரெல்லாம் உள்ளனர்? என்பதை சம்பந்தப்பட்ட சுகாதார துறையினர் தான் விளக்கமளிக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.
இது குறித்து கீழக்கரை நகராட்சி சுகாதார ஆய்வாளர் பூபதியிடம் கேட்ட போது, “கீழக்கரையில் கொரானா பாசிட்டிவ் ஆக உள்ளவர்களின் தகவல்கள் எங்களுக்கே காலை 12 மணிக்குத் தான் கிடைக்கிறது. ஆனால் அதற்கு முன்னரே சமூக வலை தளங்களில் எப்படி வெளியாகிறது என்பது புரியாத புதிராக உள்ளது. எங்களுக்கு வரும் கொரானா பாசிட்டிவ் ஆனவர்களின் தகவல்களை நாங்கள் சமூக வலைத்தளங்களிலோ அல்லது தனி நபர்கள் எவருக்குமோ பகிர்வதில்லை. இது போன்று கொரானா பாசிட்டிவ் ஆனவர்கள் குறித்த எக்ஸல் சீட் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவருவது சம்பந்தமாக எங்கள் சுகாதாரத் துறை மேல் மட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கிறோம்” என்று தெரிவித்தார்.
இதற்கு முன்னரும் இதே போல் கடந்த மாதம் கீழக்கரையில் கொரானா பாதிக்கப்பட்டவர்கள் என்று சமூக விரோதிகளால் பரப்பப்பட்ட பொய்யான தகவல்களால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் இன்னும் நிலுவையிலேயே உள்ளது ஏன் என்று தெரியவில்லை. இந்நிலையில் கீழக்கரையில் மீண்டும் கொரானா பாதித்தவர்கள் என்கிற பட்டியல் சமூக வலைத்தளங்களில் வலம் வருவது, பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சனைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க கீழக்கரை காவல் துறையினரும், மாவட்ட சுகாதாரத் துறையினரும், கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினரும் முன் வர வேண்டும் என்பது தான் கீழக்கரை பகுதி பொது மக்கள் அனைவரின் வேண்டுகோளாக இருக்கிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இலங்கை வழியாக ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற ரூ.7 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் : கடத்தல் கும்பல் 9 பேர் கைது..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை கடல் வழியாக போதை பொருட்கள், மருந்து, மாத்திரைகள் இலங்கைக்கு கடத்தப்பட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பிரத்யே அலைபேசி எண் 94899 19722க்கு கடந்த சில வாரங்களுக்கு முன் தகவல் கிடைத்தது. எஸ்.பி., வருண்குமார் அறிவுறுத்தலின் பேரில், தீவிர குற்றத்தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜேசுதாஸ், சார்பு ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதன் படி பதுக்கி வைத்திருந்த போதை மருந்து, மாத்திரைகளுடன் சிக்கிய கடத்தல் கும்பலை, எஸ்.பி., வருண்குமார் தலைமையில் திருவாடானை காவல் துணை கண்காணிப்பாளர் பன்னீர் செல்வம், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ, இன்ஸ்பெக்டர் ஜேசுதாஸ், தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர்கள் செந்தில்குமார், திபாகர், சார்பு ஆய்வாளர் தங்கமுனியசாமி இன்று (21/05/2020) மதியம் சுற்றி வளைத்தனர். விசாரணையில் திருவாடானை, தேவிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த அப்துல் ரஹீம் 49, அபுல் கலாம் ஆசாத் 23, அஜ்மல் கான் 48, முத்து ராஜா 38, அருள் தாஸ் 43, கேசவன் 42, அஜ்மீர் கான் 42, அப்துல் வஹாப் 36, சுரேஷ் குமார் 44 ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 10 கிலோ 800 கிராம் போதை மருந்து, 3 மாத்திரைகள், 556 கிராம் ஹெராயின், வலி நிவாரணி பேஸ்ட், உள்ளிட்ட போதை வஸ்துகள் மற்றும் ஒன்றரை டன் செம்மரக்கட்டைகள் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு கார், ஆட்டோ, இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், போதை லஹிரி வஸ்துகள் விற்கும் வட மாநில கும்பலிடமிருந்து கொஞ்சம், கொஞ்சமாக வாங்கி சேகரித்த போதை மருந்து, மாத்திரைகள், வலி நிவாரணி பேஸ்ட்களை பதுக்கி வைத்திருந்து தொண்டி கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்றது தெரிந்தது. பறிமுதல் செய்த போதை பொருட்களின் சர்வதேச மதிப்பு ரூ.7 கோடி என போலீசார் தெரிவித்தனர். கடந்த 6 வாரங்களாக தீவிர விசாரணை மேற்கொண்டு கடத்தல்கும்பலை சுற்றி வளைத்த தனிப்பிரிவு மற்றும் சிறப்பு போலீசாரை பாராட்டிய எஸ்.பி., வருண்குமார், சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளிகளை தேடி வருவதாக கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வெளி மாநில தொழிலாளர்கள் பசியின்றி இருப்பதற்கு உணவு உடை அனைத்தையும் தமிழக அரசு கொடுத்து வருகிறது.-அமைச்சர் செல்லூர் ராஜூ
by mohan
written by mohan
மதுரை தெப்பக்குளம் 54 வது வார்டு பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா நிவாரண உதவிப் பொருட்களை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,தமிழகத்தில் இருக்கக்கூடிய வெளி மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் பசியின்றி இருப்பதற்கு உணவு உடை அனைத்தையும் தமிழக அரசு கொடுத்து வருகிறது.ரேஷன் கடைகளில் உள்ள பணியாளர்களுக்கு ஊதியங்களை அந்தந்த சங்கங்கள் முறையாக கொடுத்துவிடும். ஊதியம் கொடுக்காத சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.மக்கள் தனித்து இருக்க வேண்டும், இந்த நோய்க்கு தற்போதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.எனவே பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து முககவசம் அணிந்து கொள்ள வேண்டும்..இந்தியாவில் தமிழகத்தை போல் எந்த ஒரு அரசாங்கமும் நலத்திட்ட உதவிகளை அதிகமாக செய்யவில்லை.வருகிற மாதம் வரை ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.தமிழகத்தைப் பொறுத்தமட்டில் மருத்துவ பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். சமூகபரவல் இல்லாத அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது.அனைத்து குடும்பங்களுக்கும் தேவையான முகக் கவசங்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் முடியாது.கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றக்கூடிய பணியாளர்களுக்கு முக கவசம் கிருமி நாசினிகள் வழங்கப்பட்டு வருகிறது.ரேஷன் கடைகள் பலசரக்கு கடை கிடையாது எந்த பொருள் வேண்டுமோ,அதை முன்கூட்டியே மக்கள் ரேஷன் கடையை பணியாளர்களிடம் எடுத்துக்கூறி பின்பு வந்து வாங்கிக் கொள்ள வேண்டும்.பிராமணர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் தான் பச்சரிசி ரேஷன் கடைகளில் அதிகமாக வாங்குகிறார்கள்.மற்ற பகுதிகளில் வாங்குவதில்லை.ரேஷன் பொருட்கள் கடத்தல் எதுவும் இல்லை
20 கிலோ அரிசிக்கு இரட்டிப்பு மடங்காக 40 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது ஒரு சில மக்கள் வேறு யாரிடமாவது விற்பதற்கு முயல்கிறார்கள்.மக்களிடம் அரிசியை வாங்குபவர்களை விஜிலன்ஸ் துறையினர் கையும் களவுமாக பிடித்து வருகிறார்கள்.திமுக ஆட்சி காலத்தில் ரேஷன் அரசிகள் கப்பல் ரயில் ஆகியவற்றில் கடத்தினார்கள்.அதிமுக ஆட்சிக்காலத்தில் கடத்தல் நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை. தண்டனைகள் அதிக படுத்த ப்பட்டுள்ளது.ரேஷன் கடைகளில் கடத்தல் போன்ற தவறுகள் நடை பெறுவதற்கு வாய்ப்பு கிடையாது என்று தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் இருந்து 2 ஆம் கட்டமாக சிறப்பு ரயில் மூலம் 1600 , பீகார் மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
by mohan
written by mohan
மதுரையில் இருந்து 2 ஆம் கட்டமாக சிறப்பு ரயில் மூலம் 1600 , பீகார் மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் வழியனுப்பி வைத்தார்.கடந்த 18 ஆம் தேதி 1600 தொழிலாளர்கள் உத்திரப்பிரதேசம் அனுப்பி வைக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று பீகார் மாநில தொழிலாளர்கள் 1500 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மதுரையிலிருந்து 1114 பேரும், ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 456 பேரும் இன்று பீகாருக்கு சிறப்பு இரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர்.முன்னதாக, பணிபுரிந்த இடத்தில் இருந்து பேருந்துகள் வழியே அழைத்து வரப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.சமூக இடைவெளி தொழிலாளர்கள் அமர வைக்கப்பட்டு ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
* காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொற்றுகள் உள்ளதா என சோதனை செய்யப்பட்டது. இவர்களை மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் மற்றும் வருவாய்த்துறை, மருத்துவத்துறை, காவல்துறை அதிகாரிகள், இந்த தொழிலாளர்களை அனுப்பி வைத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பீகார் மாநிலத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயிலில் சொந்த ஊர் அனுப்பப்பட்டனர்.
by mohan
written by mohan
கொரானா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கையாக இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்த வெளி மாநில தொழிலாளர்களில் முதற்கட்டமாக பீகார் மாநிலத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில், அவர்களது சொந்த மாநிலத்திற்கு இன்று (21.0.2020) அனுப்பி வைக்கப்பட்டனர்.தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:தமிழ்நாடு முதல்வரின் உத்தரவின்படி, இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்த வெளிமாநில தொழிலாளர்களை அவரவர் சொந்த மாநிலங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் 3,174 வெளி மாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் 1,823 தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்து மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு பதிவு செய்துள்ள நபர்களை அந்தந்த மாநிலம் வாரியாக பிரித்து ளூசயஅமை ளுpநஉயைட சிறப்பு இரயில் மூலம் பாதுகாப்பாக அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதனடிப்படையில் இன்றைய தினம் முதற்கட்டமாக பீகார் மாநிலத்தைச் சார்ந்த 456 தொழிலாளர்கள் இராமநாதபுரம் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு இரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு வருவாய் வட்டங்களில் பணிபுரிந்த தொழிலாளர்களை வருவாய்த் துறை மற்றும் காவல்துறை மூலம் ஒருங்கிணைத்து சிறப்பு பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டு இராமநாதபுரம் ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பெற்றுள்ளனர். சுகாதாரத்துறை அனைத்து தொழிலாளர்களுக்கும் கொரோனா தொற்று அறிகுறி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, மதியம் மற்றும் இரவிற்கான உணவு, குடிநீர், வாழைப்பழம் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், மாவட்டத்தில் இதுவரை 5,389 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 39 நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளது எனவும், 5,124 நபர்களுக்கு தொற்று இல்லை எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 226 நபர்களுக்கான பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் இதுவரை 21 பேர் பூரண குணமடைந்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.இந்த நிகழ்வின்போது, ராமநாதபுரம் சரக காவல் துத்தலைவர் திரு.ரூபேஷ்குமார் மீனா , ரயில்வே மதுரை கோட்ட காவல் ஆணையர் வி.ஜெ.பி.அன்பரசு, மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி,ராமநாதபுரம் சார் ஆட்சியர் டாக்டர் என்.ஓ.சுகபுத்ரா, ரயில்வே துணை மேலாளர் (வணிகம்) ஜி.பிள்ளைக்கனி, சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் சி.அஜித்பிரபுகுமார் (இராமநாதபுரம்), பி.இந்திரா (பரமக்குடி), காவல் துணை கண்காணிப்பாளர்கள் கே.வெள்ளைத்துரை (இராமநாதபுரம்), திரு.ஆர்.சங்கர் (பரமக்குடி) உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உள்ளம் மூன்று வகையான குணாதியசங்கள் கொண்டவையாகும்! ..ரமலான் சிந்தனை – 28..கீழை ஜஹாங்கீர் அரூஸி..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
பொதுவாக ஒருமனிதனின் உள்ளத்தை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். சீரான உள்ளம், மரணித்த உள்ளம், நோய்வாய்ப்பட்ட உள்ளம்.
“சீரான உள்ளமானது” மனோ இச்சைக்குக் கட்டுப்படுதல் மற்றும் நபியவர்களின் பொன்மொழிகளில் சந்தேகம் கொள்ளல் போன்றவற்றை விட்டும் விலகியதாக இருக்கும். மேலும், இவ்வுள்ளமானது முழுமையாக அல்லாஹ்வின் ஏவல் விலக்கல்களுக்கு சிரம் தாழ்த்தக்கூடியதாக இருக்கும்
இத்தகைய உள்ளம் படைத்தவர்களே நிச்சயமாக மறுமை நாளில் ஈடேற்றம் பெறக்கூடியவர்களாக இருப்பர்.
இது குறித்து இப்றாஹீம் (அலை) அவர்களின் ஒரு பிரார்த்தனைபற்றி அல்லாஹுத்தஆலா கூறும் போது: “அல்லாஹ்விடம் தூய உள்ளத்துடன் வருபவரைத் தவிர அந்நாளில் செல்வமோ, பிள்ளைகளோ பயன்தராது” என்கிறான். (26: 88,89)
“மரணித்த உள்ளமானது” சீரான உள்ளத்திற்கு மாற்றமானதாகும். மேலும், இவ்வுள்ளமானது தன்னுடைய இரட்சகனை அறியாத நிலையிலும் அவனை வணங்காத நிலையிலும் காணப்படும். தனது இரட்சகனின் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக முழுமையாக மனோ இச்சைக்கு வழிப்பட்டதாக இருக்கும்.
இத்தகைய உள்ளம் குறித்து நபியவர்கள் கூறும் போது: “அல்லாஹ்வை நினைப்பவனுக்கும் நினைக்காதவனுக்கும் உதாரணம்:- உயிரோடு இருப்பவனும் மரணித்தவனும் ஆவார்கள்.”என்றனர். (புகாரி, முஸ்லிம்)
“நோய்வாய்ப்பட்ட உள்ளமானது” இவ்வுள்ளம் உயிரோட்டமுள்ளதாகக் காணப்படினும் நோயுற்றதாக இருக்கும். மேலும், இவ்வுள்ளத்தில் அல்லாஹ் மீது அன்பும் உறுதியான விசுவாசமும் காணப்படும்.
எனினும் தவறான விடயங்களின் விசயத்தில் ஆர்வம் கொண்டதாகவும் அதில் அதிக ஈடுபாடு உடையதாகவும் இருக்கும். சில சமயம் இந்நோய் முற்றி ஒருவரை அல்லாஹ்வின் நினைவை விட்டும் விலக்கி அவரை மரணித்த உள்ளம் உடையவர் என்ற நிலைக்குக் கூட தள்ளிவிடும்.(நவூதுபில்லாஹ்)
இருவகையான நோய் கொண்ட உள்ளங்கள்: முதலாவது சந்தேக நோயுடன் தொடர்புடையது, இது அல்லாஹ்வின் மீதும் அவனது ஆளுமை மீதும், அல்லாஹ்வின் இறைத்தூதர் மீதும் அவர்களின் ஹதீஸ்களின் மீதும் ஆராய்ச்சி என்னும் தர்க்கம் மூலம் இறைமறுப்பு நிலைக்கு கூட ஒருவனை கொண்டு போய்விடும்.
இத்தகைய உள்ளம் கொண்ட மனிதரைப்பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:- “அவர்களுடைய இதயங்களில் (வஞ்சகம், சந்தேகம் ஆகிய) நோயுள்ளது. ஆகவே, அந்நோயை அவர்களுக்கு அல்லாஹ் அதிகப்படுத்தி விட்டான். மேலும், அவர்கள் பொய் சொல்லிக்கொண்டிருந்ததின் காரணமாக அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு”.(அல்குர் ஆன் – 2:10)
இந்நோயில் இருந்து நாம் விடுபட வேண்டுமென்றால், அல்லாஹ்வையும் அவனது ரசூலையும், வேதத்தையும், நபிகளாரின் ஹதீஸ்களையும், நபித்தோழர்களையும் அவர்களின் வாழ்வியல் வழிகாட்டு நெறிமுறைகளையும் சந்தேகமின்றி ஏற்று வாழ முன்வருவது தான்.
இரண்டாவது இச்சையுடன் தொடர்புடைய நோய்கள்:- இவ்வகை நோய்களில் மனிதன் நன்றாக அறிந்து வைத்துள்ள அனைத்து வகையான பாவமான காரியங்களும் உள்ளடங்கும். அதனடிப்படையில் பொறாமை, உலோபித்தனம், விபச்சாரம், மற்றும் ஹராமான பார்வை போன்றவற்றை சுட்டிக்காட்டலாம்.
இத்தகைய மனநோய்களுக்குக் காரணமாக இருக்கக்கூடிய உள்ளத்தைப்பற்றி அல்லாஹுத்தஆலா கூறும்போது: “நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பீர்களானால், குழைந்து பேசாதீர்கள். ஏனெனில், எவனது உள்ளத்தில் நோய் இருக்கின்றதோ, அவன் ஆசை கொள்வான்” என்கிறான். (33:32)
எந்த நேரமும் அல்லாஹ் நம்மை கண்காணிக்கின்றான் என்ற இறையச்ச உணர்வு மட்டுமே இத்தகைய நோய்களில் இருந்து நமது உள்ளத்தை சீர்படுத்தும்.
உள்ளம் பிரகாசமாய் நோயின்றி வாழ்வதற்கு அல்லாஹ்வை வணங்குதல், அவனை திக்ருகள் செய்தல், இம்மை மறுமை சிந்தனையை உள்வாங்குதல், மரண சிந்தனையோடு இருத்தல், அதிகமாக (தவ்பா) பாவமன்னிப்பு கோருதல், நல்லோர்களுடன் நட்பு கொள்ளுதல் போன்ற அழகிய பண்புகளை நாம் வளர்த்துக் கொள்வோமேயானால்…தூய்மையான உள்ளத்துடன் நாளை மறுமையில் அல்லாஹ்வை சந்திக்கும் பாக்கியம் பெற்றவர்களாவோம்.
சுவனத்தை நிரப்பும் ஏழை, எளிய மக்கள்! குறித்து
இன்ஷா அல்லாஹ்…
ரமலான் சிந்தனை 29ல் காணலாம்.
கீழை ஜஹாங்கீர் அரூஸி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கோவில் அர்ச்சகர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள் 300-க்கும் மேற்பட்டோருக்கு சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் நிவாரண உதவியை வழங்கினார்.
by mohan
written by mohan
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசு 144 தடை உத்தரவு மே 30 வரை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் மூடபட்டுள்ளன. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் கோவிலில் பணியாற்றும் சிவாச்சாரியர்கள் கார் வேன் ஓட்டுனர்கள் முடிதிருத்தும் தொழிலாளர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டடோர்க்கு அதிமுக சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பி.வி பாரதி ஒவ்வொருவருக்கும் நிவாரனமாக காய்கறி, அரசி,மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்திவாசிய பொருட்களை வழங்கினார். அரசு அறிவித்த சமூக இடைவேலியை பின்பற்றி அனைவரும் நிவாரணத்தை பெற்று அரசுக்கு நன்றி தெரிவித்தனர். இதில் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளியில் வரும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் அணியாதவர்களுக்கு கீழக்கரை நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி தலைமையில் முகக் கவசம் (மாஸ்க்) அணியாதவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இதில் கீழக்கரை DAP முருகேசன் மற்றும் கீழக்கரை ஆய்வாளர் தங்க கிருஷ்ணன், தலைமை காவலர் இளமுருகன், நகராட்சி சார்பில் SI பூபதி, துப்பரவு மேற்பார்வையாளர் சக்தி, ஹாஜா, ஜெயபிரகாஷ், பாலா,ஆகியோர் உடன் இருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை அம்மா உணவகத்திற்கு முன்னாள் அமைச்சர் மூன்றாம் முறை நிதி உதவி……..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இன்று 21/5/2020 கீழக்கரை அம்மா உணவகத்திற்கு மூன்றாம் முறையாக இலவச உணவு வழங்குவதற்காக. ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 70 ஆயிரத்திற்கான காசோலையை கீழக்கரை நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) தனலட்சுமியிடம் வழங்கினார்.
கீழக்கரை நகரச் செயலாளர் ஜகுபர் உசேன், சுரேஷ், செல்வ கணேசன் பிரபு மற்றும் பலர் உடன் இருந்தார்கள்.
இதற்கு முன்பு இரண்டு தடவை கீழக்கரை அம்மா உணவகத்திற்கு இலவச உணவளிக்க காசோலை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கீழை நியூஸ்
SKV சுஐபு
You must be logged in to post a comment.