விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நகரச் செயலாளர் மேரி தலைமையில் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு பாடைகட்டி ஒப்பாரி பாடல் பாடி இறுதி அஞ்சலி செலுத்தியும் கல் அடுப்பு வைத்து நூதன போராட்டம் ஈடுபட்டனர்ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநில பொதுச் செயலாளர் சுகந்தி விளக்க உரையாற்றினார் கடந்த 1 மாதத்தில் மத்தியில் ஆளும் பிஜேபி அரசு கேஸ் சிலிண்டர்க்கு 100 ரூபாய் உயர்த்தியதை கண்டித்து கண்டன கோஷங்கள் முழக்கமிட்டனர்.செய்தியாளர் வி காளமேகம்
Category:
செய்திகள்
வெள்ளாளர் பெயரை வேறு யாருக்கும் வழங்கக் கூடாது: வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் ஆர்ப்பாட்டம்:
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் பெரிய ஊர்சேரி, கல்லணை, வாடிப்பட்டி அல்கால்லூர் முடுவார்பட்டி, தேவசேரி உள்பட 10 க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து பெண்கள், ஆண்கள் கலந்துகொண்டு, வெள்ளாளர் பெயரை வேறு யாருக்கும் வழங்க ஆட்சேபித்தும், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி, சோழவந்தான் எம். எல்.ஏ.மாணிக்கம், மற்றும் மத்திய அரசைக் கண்டித்து, பிள்ளைமார் சங்கத்தின் அலங் காநல்லூர் ஒன்றிய வஉ.சி. பேரவைத் தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமயில் வெள்ளாளர் முன்னேற்றக் கழக மாநில மகளிரணி தலைவி அன்னலெட்சுமி சகிலா கணேசன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இதில் , 300- க்கு மேற்பட்ட பெண்கள் ஆண்கள் கலந்துகொண்டு கோஷங்களைஎழுப்பினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை பைபாஸ் சாலை துரைசாமி நகர் மக்கள் நலச்சங்கம் சார்பாக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பேசுகிறார் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ. மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.எஸ் பாண்டியன், அதிமுக மாவட்ட பொருளாளர் ராஜா, அண்ணாதுரை, முன்னாள் காவல்துறை அதிகாரி கணேசன் சங்க தலைவர் கே.எஸ். கந்தசாமி, செயலர் கந்தசாமி, பொருளாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் மற்றும் திராளக அப்பகுதி பொதுமக்கள் மனு கொடுக்க வந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருமங்கலத்தில் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் ஆர். பி .உதயகுமார் திறந்து வைத்தார்
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் ஆர் பி உதயகுமார் திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார், திருமங்கலம் டிஎஸ்பி ரோகினி ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் திருமங்கலம் விமான நிலைய சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான இடத்தை அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆய்வு செய்தார். பின்னர் திருமங்கலம் டிரெயின் பள்ளியில் நடைபெற்ற புத்தக கண்காட்சியை அமைச்சர் திறந்து வைத்தார்.மேலும்
திருமங்கலம் ஜெ. பேரவை ஆலோசனைக் கூட்டம் திருமங்கலத்தில் நடைபெற்றது. இதில் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.அமைச்சர் ஆர். பி.உதயகுமார் பேசியதாவது,தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாளை அனைவரும் தித்திக்கும் திருநாள். அதை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசினை அரசு வழங்கி வருகிறது.இந்த ஆண்டைப் பொறுத்தவரை கொரானா வைரஸ் நோய் பரவலால் ஏற்பட்டு பலருக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழ்நிலையும்,டெல்டா பகுதியிலே புயலினால் கடுமையான மழையினால்அங்கே தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இதன் மூலம் தமிழகம் முழுவதும் கொரோனாவால் வேலை இருந்திருக்கும் சூழ்நிலை மற்றும் கனமழையால் தொழிலாளர்கள் வேலை இழந்திருக்கின்றனர்.இந்த இரண்டு சூழ்நிலைகளில்தைத் திருநாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து இல்லங்களிலும் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டுதமிழகத்திலுள்ள 2 கோடியே 6 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசினை அறிவித்து என்று இனிப்பான செய்தியை மக்களுக்கு அறிவித்த முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று பேசினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சுயசரிதை எழுவேன் – அதனால் பல பிரச்சனைகள் பலருக்கு எழும் என முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் செய்தியாளர்களுக்கு பேட்டி.!!
by mohan
written by mohan
மதுரையில் ஹிந்து ஜனநாயக ப்ராண்ட் அமைப்பின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.முன்னதாக செய்தியாளர்களிடம் ராம மோகனராவ் பேசுகையில்,தமிழகத்தில் கோவில்களை நம்பி பத்து லட்சம் குடும்பங்கள் உள்ளதாகவும், கோவில் பொருளாதாரத்தை நம்பி இக் குடும்பங்கள் உள்ளன. வறுமைக்கோட்டிள்கு கீழ் மிகவும் அரசின் எந்த உதவியும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர், அவர்களுக்கு அரசின் இலவச வீட்டு மனை,மாத உதவித்தொகை கிடைக்க அரசிடம் வலியுறுத்துவேன் எனவும்,ஜெயலலிதா மரண விவகாரத்தில் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் கருத்து தெரிவிக்க இயலாது,நாம் சமுதாய இயக்கமாக கலாச்சார இயக்கத்தையே நடத்துகிறேன். நான் சமுதாய பணியை மட்டுமே செய்கிறேன்,தமிழகத்தில் 42 சதவிகித சமுதயங்கள் அரசியலில் முன்னேறுவதற்கு வழிகாட்டுகிறேன். அரசியல் தொடர்பே இல்லாமல் அவர்கள் உள்ளனர்,தமிழக அரசு 2500 ரூபாய் பொங்கல் பரிசு கொடுப்பது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை,வாக்கு இயந்திரங்கள் சரியாக உள்ளன. வாக்கு இயந்திரங்கள் குறித்து எனக்கு எந்த சந்தேகமும் இல்லை,என் சுயசரிதை எழுதுவேன். அது பலருக்கு பிரச்சனையை உருவாக்கும். இப்போது எல்லாமே தவறாக பேசுகிறார்கள் இதை நகைச்சுவையாகத்தான் சொன்னேன் எனக்கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மலர் சந்தையில் பூக்களின் வரத்து பெருமளவு குறைந்த காரணத்தால் மதுரை மல்லிகை விலை கிலோ ரூபாய் 2000 என உச்சத்தை தொட்டது.மதுரை மலர் சந்தை மதுரை மாவட்டம் மற்றும் தென் மாவட்டங்களின் பூ உற்பத்தியாளர்களின் சரணாலயமாகும். மதுரை ராமநாதபுரம் தேனி திண்டுக்கல் விருதுநகர் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் பூக்கள் வரத்து இங்கு இருக்கும்.இந்நிலையில் இன்று மதுரை மலர் சந்தைக்குப் போக்குவரத்து பெருமளவு குறைந்த காரணத்தால், மதுரை மல்லி கிலோ 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அரளி ரூ.300, பிச்சிப்பூ ரூ.700, முல்லை ரூ.700, சம்பங்கி ரூ.120, செவ்வந்தி ரூ.200, பட்டன் ரோஸ் ரூ.120, பட்ரோஸ் ரூ.100 என பூக்களின் விலை உயர்வு.பூக்கள் வரத்து மிக குறைவாக இருக்கின்ற காரணத்தால் அடுத்த சில நாட்களுக்கு இதே விலை நிலவரம் நீடிக்கும் என பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டம் சுரண்டையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகளின் ஒருங்கிணைந்த கிறிஸ்துமஸ் கீத ஆராதனை சிறப்பு நிகழ்ச்சி சீயோன் வளாகத்தில் நடந்தது. ஆராதணை நிகழ்விற்கு வடக்கு சபை மன்ற தலைவர் ரெவ வில்சன் சாலமோன் ராஜ் தலைமை வகித்து கிறிஸ்துமஸ் சிறப்பு செய்தியளித்தார். ஏஜி சபை தலைமை போதகர் அருள்ராஜ் ஆரம்ப ஜெபம் செய்தார். சுரண்டை சீயோன் சேகர தலைவர் ரெவ ஆல்வின் பிரைட் வரவேற்று பேசினார்.சுரண்டை ஏஜி, சிஎஸ்ஐ புதுச்சுரண்டை, சீயோன், கடையாலுருட்டி, ஆலடிப்பட்டி, குலையநேரி, இமீனாட்சிபுரம், சின்னத்தம்பி நாடாரூர், ஆனைகுளம், இரட்டைகுளம் சபைகளை சேர்ந்த இறைமக்கள் பங்கு பெற்று கிறிஸ்து பிறப்பின் பாடல்களை பாடினர். நிகழ்ச்சியில் பாஸ்டர்கள் ஜெயகுமார், நோவா பால், ஏஎஸ்ஏஆர் பாலச்சந்திரன், அன்னப்பிரகாசம், ஜேக்கப், அருமை நாயகம், ஸ்டீபன், சொக்கையா, சுவீகர், தனபால் ராஜசேகர், ஸ்டீபன் ஜெபராஜா, ராஜகுமார், ஜேம்ஸ், ரூஸ்வெல்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் புதுச்சுரண்டை சேகர குரு டிகே ஸ்டீபன் நன்றி கூறினார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல் மாவட்டத்தில், நிலக்கோட்டை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது நிலக்கோட்டை பூக்கள் தான். ஏனென்றால் நிலக்கோட்டை பகுதியில் உள்ள விவசாயிகள் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிலக்கோட்டை பகுதியில் உடைய தட்பவெட்பநிலை மற்றும் வறண்ட குறைந்த தண்ணீரைக் கொண்ட பூமியாகவும் செம்மண் பூமி அதிகமாக கொண்டிருப்பதாலும் இங்கு வாழும் விவசாயிகள் பெரும்பாலும் அனைத்து வகையான பூக்களையே சாகுபடி செய்து வருகின்றனர். அவ்வாறு சாகுபடி செய்த பூக்களில் அதிகமான நறுமணமும் அதேசமயம் தரமான பூக்களாக இருப்பதாக தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதி மார்க்கெட்டிலும், நிலக்கோட்டை பூ மார்க்கெட்டிற்கு ஒரு கிராக்கி பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. அப்படி பேசப்பட்ட பூக்களை நிலை குறித்து சினிமா பாடல் படம் சிந்துநதிப் பூவே என்ற சினிமா படத்தில் நிலக்கோட்டை பூ எடுத்து நான் ஜடை போட்டு பாக்க போறேன் என்ற மிகப்பெரிய அளவில் அதனால் அளவுக்கு பாடல்களை கவிதை கவிஞர்களின் மனதில் மல்லிகைப் பூவும், மற்றப் பூக்களும் கவிஞர் மனதில் அவ்வப்போது சிறப்பு பெற்றது நிலக்கோட்டை பூ மார்க்கெட் பூக்கள்.
அப்படிப்பட்ட இயற்கையாக நாம் பார்த்ததெல்லாம் மஞ்சள் நிற செவ்வந்தி பூக்கள் அதிகளவு சாகுபடி செய்து பார்த்து வந்தோம். ஆனால் தற்போது நவீன காலத்தில் ஊதா நிற செவ்வந்தி பூக்களையும் விவசாயிகள் தற்போது சாகுபடி செய்து வருகிறார்கள். நிலக்கோட்டை பகுதிகளில் உள்ள மிளகாய்பட்டி, ஆண்டிபட்டி, சீத்தாபுரம், காமாட்சிபுரம், தம்பிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் அதிதீவிரமாக ஊதா நிற பூ செவ்வந்தி பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பூக்கள் தற்போது நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் இருந்து நாடு முழுக்க ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கிலோ 90 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பூக்கள் பொதுமக்கள் மத்தியிலும், வியாபாரிகள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெபுலியம் தனிமம் இரு உயிரகத் தனிம மின்னணுக்களின் இணை எனக் கண்டறிந்த ஐரா சுப்பிரேகு போவன் பிறந்த தினம் இன்று (டிசம்பர் 21, 1898).
by mohan
written by mohan
ஐரா சுப்பிரேகு போவன் (Ira Sprague Bowen) டிசம்பர் 21, 1898ல் நியூயார்க்கில் ஜேம்சு போவன் என்பவருக்கும் பிளிண்டா சுப்பிரேகு என்பவருக்கும் மகனாக பிறந்தார். இவரது குடும்பம் அடிக்கடி இடம்பெயர்ந்ததால் 1908ஆம் ஆண்டுவரை, தந்தையார் இறப்புவரை, வீட்டிலேயே பள்ளிக்கல்வியைக் கற்றார். அதற்குப் பிறகு அவரது தாயார் ஆசிரியராகப் பணிபுரிந்த ஆட்டன் கல்லூரியில் படித்தார். உயர்நிலைப் பள்ளியை 1915ல் முடித்ததும் அவர் ஆட்டன் கல்லூரியின் இளநிலைக் கல்லூரியில் சேர்ந்தார். பிறகு ஓபெர்லின் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு 1919ல் பட்டப்படிப்பை முடித்தார். ஓபெர்லின் கல்லூரியில் படிக்கும்போதே போவன் இராபெர்ட் எட்பீல்டு எனும் அறிவியலாளருடன் இணைந்து இரும்பின் பண்புகளைப் பற்றி ஆய்வு செய்தார். இந்த ஆய்வு முடிவுகள் 1921ல் வெளியிடப்பட்டன.
போவன் சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1919 இலையுதிர்காலத்தில் இருந்து இயற்பியல் பயின்றார். 1921ஆம் ஆண்டிற்குள் இராபெர்ட் ஆந்திரூவ்சு மிலிக்கன் ஆய்வுக்குழுவிற்குள் ஓரிடம் பிடித்துவிட்டார். அவருக்கு வேதித் தனிமங்களின் புற ஊதாக்கதிராய்வுப்பணி தரப்பட்டுள்ளது. கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் மிலிக்கனைச் சேரும்படி ஜார்ஜ் எல்லெரி ஃஏல் 1921ல் சம்மதிக்க வைத்துவிட்டார். அப்போது போவனுக்கு அவருடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. ஃஏலின் தொடர்பால் போவனுக்கு மவுண்ட் வில்சன் வான்காணகத்திலும் பலோமார் வான்காணகத்திலும் பணிபுரியும் வாய்ப்பைத் தந்தது. போவன் கால்டெக்கில் இயற்பியல் பாடங்களை நட்த்தி கொண்டே அண்டக்கதிர் ஆய்விலும் புற ஊதாக்கதிர் ஆய்விலும் ஈடுபடலனார். இவர் தனிமவரிசை அட்டவணையில் உள்ள நிறைகுறைந்த தனிமங்களின் கதிர்நிரல் கணக்கீடுக்ளையும் தொடர்ந்தார். இந்த தரவுகள் வழியாகவும் வளிம ஒண்முகில் ஆய்வு ஆர்வத்தாலும் தாழ் அடர்த்தியில் உமிழப்படும் கதிர்வீச்சு பற்றி என்றி நோரிசு இரசெல், இரேமாண்டு சுமித் துகான் ஜான் குவின்சி சுட்டிவார்ட் ஆகியோர் எழுதிய ‘’வானியல்’’ என்ற நூலில் படித்ததும் இவர் தனது நெபுலியம் பற்றிய கண்டுபிடிப்பை எளிதாக அடையவைத்தது.
வில்லியம் அக்கின்சு 1864ல் பூனைக்கண் ஒண்முகிலில் இருந்து 4959Å, 5007Å அலைநீளங்களில் உமிழப்படும் பச்சைநிற உமிழ்வுக் கோடுகளைக் கண்டுபிடித்தார். எந்தவொரு தனிமமும் இந்தவகை உமிழ்வுக் கோடுகளைச் செய்முறையில் காட்டாததால், பிறகு 1890ல் இந்தக் கோடுகளைப் புதிய தனிமம் ஒன்றுதான் உமிழ்வதாக முடிவு செய்யப்பட்டது. அதற்கு நெபுலியம் என்ற பெயரும் இடப்பட்டது. ஆனால் போவன் இரட்டை மின்னணு உயிரகத்தின் தவிர்க்கப்பட்ட நிலைபெயர்வுதான் இத்தகைய உமிழ்கோடுகளை காட்டுவதாக கணக்கிட்டுக் காட்டினார. பூனைக்கண் ஒண்முகிலில் இருந்த உயிரக மின்னணுக்கள் தம்முள் மோதிக்கொள்ள வாய்ப்பில்லாததாலும் அதனால் கிளர்நிலையில் இருந்து இயல்நிலைக்குப் பெயரமுடியாத்தாலும் எனவே தவிர்வு நிலைபெயர்வு மட்டுமே ஓய்வுற இயன்ற வழித்தடமாக நிலவுவதாலும் இக்கதிர்நிரல்கள் உமிழப்படுவதாக விளக்கம் தந்தார். போவன் இக்கண்டுபிடிப்புகளை 1927ல் வெளியிட்டார். இதனால் நெபுலியம் எனவொரு வேதித் தனிமம் ஏதும் நிலவவில்லை என்ற முடிவுக்கு வந்தார்.
போவன் 1936ல் தேசிய அறிவியல் கழகத்துக்குத் தேர்வு செய்யபட்டார். 1964ல் ஓய்வு பெறுவதற்கு முன்பும் பின்பும் பல்வேறு ஒளியியல் கருவிகளின் வடிவமைப்பை மேம்படுத்துவதில் முனைந்திருந்தார். எடுத்துகாட்டாக, இலாசு கம்பனாசு வான்காணகத்தில் இருந்த 100 அங்குலம் இரீனீ டியூபாண்டு கருவியைக் கூறலாம். இவர் வானிலையியலில் போவன் விகிதம் எனும் ஆவியாகும் மேற்பரப்பின் மீதமையும் கரந்துறை வெப்பத்துக்கும் உணர் வெப்பத்துக்கும் இடையிலான விகிதக் கருத்துப்படிமத்தை அறிமுகப்படுத்தினார். அமெரிக்கத் தேசிய அறிவியல் கல்விக்கழகம் வழங்கும் என்றி டிரேப்பர் விருது (1942), ஓவார்டு என். பாட்சு பதக்கம் (1946), அமெரிக்கக் கலை, அறிவியல் கழகம் தரும் இரம்போர்டு பரிசு (1949), பிரெடெரிக் ஈவ்சு பதக்கம் (1952), புரூசு விருது (1957), என்றி நோரிசு இரசல் விரிவுரைத் தகைமை (1964), அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1966) போன்ற பதக்கங்களை பெற்றுள்ளார்.
1927ல் நெபுலியம் என்பது தனியான தனிமம் அன்று, மாறாக அது இரு உயிரகத் தனிம மின்னணுக்களின் இணை எனக் கண்டறிந்தார். நெபுலியம் தனிமம் கண்டறிந்த ஐரா சுப்பிரேகு போவன் பிப்ரவரி 6, 1973ல் தனது 74வது அகவையில் அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். நிலாவில் ஒரு குழிப்பள்ளம் போவன் குழிப்பள்ளம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. குறுங்கோள் 3363 போவன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆவியாகும் மேற்பரப்புக் கொந்தளிப்புப் பெருக்குகள் (பாயங்கள்) சார்ந்த போவன் விகிதம் பெயரிடப்பட்டுள்ளது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
60 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதியும் மின்சார வசதியும் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
வேதாரண்யம் வட்டத்தில் உள்ள தாணிக்கோட்டகம் ஊராட்சிக்குட்பட்ட கோபால கட்டளை 3வது வார்டு சின்னப்பன் காடு கோட்டைக்காடு பிச்சைக் கட்டளை பகுதிகள் அனைத்தும் மண் சாலைகளுடன், மின்சார வசதி இல்லாமலும், ஆதிதிராவிடர் வாழும் இடங்களில் காங்கிரீட் வீடுகள் இல்லாமலும் மிக அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தற்போது ஏற்பட்ட புயல் காரணமாக மழை அதிகமாக பெய்து வெள்ளம் ஏற்பட்டதால் வீடுகள் இழந்து தவித்து வருகின்றனர் இந்த கிராம மக்கள். இப்பகுதி மக்களின் குமுறலை கேட்க எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை எனவும், குறைகளை கேட்கவுமில்லை என மக்கள் வேதனையுடன் கூறுகிறார்கள்.
இந்தக் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் பல தடவை நேரில் சென்று புகார் மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை என்று கிராம மக்கள் கூறுகின்றனர். மேலும் அப்பகுதியில் வாழும் மக்கள் வாழ்வது கோயில் நிலங்கள் என்பதால் நிவாரணம் மற்றும் காங்கிரீட் வீடுகள் கட்ட முன் வருவது தடையாக உள்ளது எனவும், பகுதி மக்களுக்கு மின்சாரத் துறையின் ஆனால் மின்சாரம் வழங்கவும் மறுக்கின்றனர் என்பது பெரும் குறையாக உள்ளது.
அரசு அதிகாரிகள் கவனத்தில் கொள்வார்களா??.., மக்களின் பிரச்சினை தீருமா?? பொறுத்திருந்து பார்ப்போம்…
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பராசக்தி நகரில் தனியார் நிதி நிறுவனத்தில்அடகு வைத்த நகைகளை மீட்க சென்றபோது நிறுவன ஊழியர்கள் மறுப்பு தெரிவித்ததால் அதிர்ச்சியில் அடகு வைத்தவர்கள்.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பராசக்தி நகரில் முத்துட் பைனான்ஸ் என்னும் தனியார் நிதி நிறுவனம் உள்ளது .இந்த நிதி நிறுவனத்தில் தங்க நகைகளின் பேரில் அடகு வைக்கப்பட்டு பணம் பெற்று பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில் 10க்கும் மேற்பட்டோர் தங்கள் அடகு வைத்த நகைகளை மீட்கச் சென்ற போது பணத்தை மட்டும் கட்டி விட்டுச் செல்லுங்கள், நகையை ஒரு மாதம் கழித்து தருகிறோம் என கூறியதாக கூறப்படுகிறது இதனையடுத்து ஊழியர்களுடன் நகை அடகு வைத்தவர்கள் வாக்குவாதம் செய்தனர்.இதுகுறித்து அவனியாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து போலீசார் வந்து விசாரணை செய்ததில் தனியார் நிறுவனத்தில் முன்பு பணியாற்றிய மேலாளர் மகேஷ் அடகு வைத்த நகையின் பேரில் கூடுதலாக பணம் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.இதனையடுத்து மகேஷ் மேல் நிறுவனத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அடகு வைத்தவர்கள் தங்கள் நகையை மீட்க வந்த போது பணத்தை மட்டும் செலுத்துங்கள் நகை ஒரு மாதம் கழித்து திருப்பி தருகிறேன் என கூறியதை அடுத்து பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அடகு வைத்தவர்கள் முத்தூட் பைனான்ஸ் நிதி நிறுவனத்தின் உள்ளே அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தனர் ….
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்பரங்குன்றம் அருகே சோளங்குருணி கிராமத்தில் காட்டுப்பன்றிகள் விளை நிலங்களில் புகுந்து தட்டாம்பயறு, தக்காளி ,கடலை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியதால்ரூ 1 லட்சம் மதிப்பில் விளை பயிர்கள் சேதம் .மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சோளங் குருணி கிராமத்தில் கிராமத்தில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறதுஇதில் கார்த்திகேயன் என்பவருக்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் தட்டாம்பயறு, தக்காளி, நிலக்கடலை பயரிடப்பட்டுள்ளது.இதை நள்ளிரவில் புகுந்த காட்டு பன்றிகள் கடித்து தின்று சேதமாகி நஷ்டத்தை ஏற்படுகின்றன.இதனால் விவசாயி கார்திகேயனுக்கு 1 லட்ச ரூபாய்க்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகளோ. வனத்துறையினரோ விரைந்து நடவடிக்கை எடுத்து உதவிட வேண்டும் என்றும் .தற்போது காட்டுப்பன்றிகள் விளைநிலத்தில் ஏற்பட்ட செய்வதற்கு நஷ்டஈடு வழங்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் வாகனம் மோதி புள்ளிமான் பரிதாபமாக இறந்து போனது.திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை கண்மாய் பகுதி அருகே நான்கு வழிச்சாலை உள்ளது. கண்மாயில் ஏராளமான புள்ளி மான்கள் உள்ளன.இந்த புள்ளி மான்கள் சாலையை கடக்க முயலும்போது வாகனங்களில் அடிபட்டு பலியாவது தொடர்ந்து வருகிறது. இது குறித்து சமூக ஆர்வலர் ராமலிங்கம் கூறுகையில், இந்த அரியவகை புள்ளி மான்களை காக்க வனத்துறையினரிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமூகவிரோதிகள் கண்மாயில் உள்ள மான் களை வேட்டையாடுவது தொடர்ந்து வரும் நிலையில் இதுபோல விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே புள்ளி மான்களை காக்க இந்தப் பகுதியில் வனச் சரணாலயம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை நகரில் சாலைகள் மற்றும் பாலங்களை சீரமைக்க மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் வழிகாட்டி மணிகண்டன் கோரிக்கை மனு
by mohan
written by mohan
மதுரை நகர் பகுதியில் குடிநீர் குழாய் மற்றும் கழிவுநீர் குழாய் பதிகக்கும் பணி உள்ளிட்ட பணிகளுக்காக பெரும்பாலான சாலைகள் மற்றும் தெருக்களில் தோண்டப்பட்டு மேலோட்டமாக மூடப்பட்டு உள்ளது.இதனால் சாலைகளில் ஏற்பட்ட மேடுபள்ளங்களால் நடந்து செல்வோர் முதல் வாகனங்களில் செல்லும் மக்கள் வரை அனைவரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.குறிப்பிட்ட பகுதிகளில் ஒவ்வொரு தெருவாக முழுமையாக பணிகளை முடித்து தார் சாலை அமைத்த பின் அடுத்தடுத்த தெருக்களில் பணிகளை மேற்கொண்டால் மக்களுக்கு சிரமம் இன்றி இருந்திருக்கும்.மேலும் நகரில் உள்ள பாலங்களின் பக்கவாட்டில் மரங்கள் முளைத்து, தூண்களும் சுவர்களும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது.எனவே தற்போது மக்கள் நலன் கருதி அனைத்து இடங்களிலும் தரமான தார் சாலைகள் அமைத்து பாலங்களிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள விரைவில் ஆவன செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் உயர்திரு.அன்பழகன் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு வழங்கியுள்ளேன்.இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் அவர்களை நான் சென்ற நேரம் சந்திக்க முடியாததால் எனது கோரிக்கை மனுவை பதிவுத் தபால் மூலம் அவருக்கு அனுப்பி உள்ளேன்.இந்நிலையில் தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்திற்கும் இந்த கோரிக்கை மனுவை பதிவுத் தபால் மூலம் அனுப்பி உள்ளேன்.எனது மனுவில் மேலும் கூறியதாவது:1. மதுரை நகர் பகுதியில் அனேக சாலைகள் மற்றும் பல தெருக்கள் பல்வேறு திட்டப் பணிகளுக்காக பல மாதங்களுக்கு முன்னரே தோண்டப்பட்ட நிலையில் அவை உடனுக்குடன் சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகளுக்கு விபத்துகள் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.மேலும் தொடர்ந்து மேடுபள்ளங்களில் பயனிக்கும் மக்களுக்கு முதுகுத்தண்டு பாதிப்பு, தூசிகள் பரவுவதால் சுவாசக் கோளாறு உள்ளிட்ட உடல்நிலை பாதிப்புகளும் ஏற்படுகிறது.2. சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள கழிவுநீர் மூடிகள் பல இடங்களில் சாலையைவிட உயரமாகவோ அல்லது பள்ளமாகவோ இருப்பதால் விபத்துகள் ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.இத்தகைய சாலைகளில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கே இவ்வளவு சிரமங்கள் இருக்கையில் மாற்றுத்திறனாளிகள் வாகனம் ஓட்டுவது மிகக் கடினமான நிலையில் உள்ளது.3. சாலை விரிவாக்கம் செய்யும் இடங்களில் இருபுறமும் பழமையான மற்றும் பலன் தரும் மரங்களில் ஒருசில மட்டும் வேரோடு இடமாற்றம் செய்யப்பட்டாலும் பெரும்பாலும் முற்றிலும் வெட்டப்படுகிறது.
இதனால் நகரில் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரிக்கும் நிலை ஏற்படுகிறது.4. பெரியார் பேருந்து நிலையம் ஸ்மார்ட்சிட்டி பணிகள் மேலும் சில காலம் நடைபெறும் என்ற நிலையில் அதனைச் சுற்றி தற்காலிக தார் சாலை அமைத்தால் வாகன ஓட்டிகளின் மிகப்பெரிய சிரமம் குறையும்.5. மதுரையின் முதல் மற்றும் பழமையான ஏ.வி மேம்பாலத்தின் பல தூண்களின் அடிப்பகுதியில் கற்கள் பெயர்ந்து பலமிழந்து உள்ளது. ஆகவே இதில் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல தடை விதிப்பதுடன் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.6. மதுரை கல்லூரி அருகில் உள்ள மேம்பாலம் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் முற்றிலும் இடித்து மறு கட்டுமானம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.மேலும் இதன் நிலை அறிந்தும் பாலத்தின் அடிப்பகுதியில் செயல்படும் மரக்கடைகள் அகற்றப்பட வேண்டி உள்ளது.7. பலங்காநத்தம், மதுரா கோட்ஸ் உள்ளிட்ட பெரும்பாலான மேம்பாலங்களின் பக்கவாட்டு சுவர்களில் மரங்கள் முளைத்து வேர்கள் பரவுவது அந்த பாலங்களின் உறுதிக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.ஆகவே மதுரை மாநகர மக்களின் நலன் கருதி தாங்கள் இவற்றை போர்கால அடிப்படையில் சீர் செய்யும் வகையில் சாலைகள், பாலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு துறை அதிகாரிகளை கொண்ட குழுக்களை ஏற்படுத்தி உடனடி தீர்வு காண ஆவன செய்யுமாறு வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான மாடக்குளம் கிராமத்தில் குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதையொட்டி பொதுமக்கள் பாதுகாப்பு கருதி காவல் துறையினர் கண்காணிப்பு கேமராவை பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்மதுரை பொன்மேனி, அம்பேத்கர் சிலை, அரசு மாணவர் விடுதி, மாடக்குளம் மெயின் ரோடு, போடி ரயில்வே லைன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முக்கிய இடங்களில் முதல் கட்டமாக 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறதுமதுரை மாநகர் காவல்துறை ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின்பேரில் மதுரை எஸ் எஸ் காலனி சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் பிளவர்சீலா மேற்பார்வையில் இந்த பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றனகண்காணிப்பு கேமரா பொருத்த படுவதால் குற்றங்கள் குறையும் எனவும் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காண முடியும் என்பதால் மதுரைமா நகரின் முக்கிய வீதிகளில் ஏற்கனவே காவல் துறையின் சார்பாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சேக்கிழார் மன்ற நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.ராஜபாளையம் முகில்வண்ணன் பிள்ளை தெருவில் அமைந்துள்ள சேக்கிழார் மன்ற அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவிற்கு அகில பாரத சன்யாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதானந்த மகராஜ் தலைமை வகித்தார்.சேக்கிழார் மன்ற தலைவர் பேராசிரியர் பூமிநாதன் எழுதிய ‘விட்டு விடுதலை ஆகிவிடு’ என்ற நூலை தூத்துக்குடி சைவநெறி இதழாசிரியர் காந்தி வெளியிட ராஜபாளையம் வட்டாட்சியர் சரஸ்வதி கார்த்திகேயன் பெற்றுக்கொண்டார். முன்னதாக மன்ற செயலாளர் கல்யாண வெங்கட்ராமன் வரவேற்றார். மன்றத் தலைவர் பூமிநாதன் பேசியதாவது: ஜீவன் முக்தி பெற்ற எனது மனைவி சுப்புலட்சுமி அம்மாளின் நினைவு நூல்.இந்நூல் உயிரின் வடிவம், பிறப்பு, நுண்ணுடம்பு, ஆறு ஆதாரங்கள்,பத்து வாயுக்கள், நாடிகள், மூச்சு, ஆவிகள், கூடு விட்டு கூடு பாய்தல் என விளக்கி முக்தி பெறும் அணுகுமுறையை இந்த நூல் விளக்குகிறது என பேசினார். நிறைவாக மன்ற துணை தலைவர் சங்கரலிங்கம் நன்றி கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதில் முதன்மை மாநிலமாக தமிழகம்அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தகவல்
by mohan
written by mohan
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டாரத்தில் கண்ணகுருக்கை மற்றும் கரியமங்கலம் கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.மேலும் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை குறித்து பார்வையிட்டு கர்ப்பிணிகளுக்கு அம்மா மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.பின்னர் அவர் பேசியதாவது;அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேசியதாவது;தமிழகத்தில் கடைக்கோடி மக்களுக்கும் தரமான சுகாதார சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே முதல்வர் மற்றும் துணை முதல்வர் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதில் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது இதற்கு காரணம் தமிழக சுகாதார கட்டமைப்பு மிகவும் பலமாக இருப்பதால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இல்லாத ஏழை எளிய மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களை கண்டறிந்து சாதாரண காய்ச்சல் போன்ற நோய்களுக்கு உடனடியாக அந்த பகுதிகளில் சிகிச்சை பெறக் கூடிய அளவிற்கு மாநிலம் முழுவதும் ஒரு மருத்துவர் ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளர் 2,000 இடங்களில் அம்மா எனக்கு பிரியாணி 14ஆம் தேதி சென்னையில் முதல்வர் துவக்கி வைத்தார். இதன்படி, திருவண்ணாமலை மாவட்ட சுகாதார மாவட்டங்களில் 73 இடங்களில் அம்மா மினி கிளினிக் திறக்கப்படுகிறது.கர்ப்பிணிப் பெண்களுக்கு பரிசோதனை பிரசவத்துக்கு பரிசோதனை செய்து பரிந்துரை செய்தல் , சளி இருமல் காய்ச்சல் மற்றும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் உடனடி தடுப்பூசியும் வழங்கப்படும். என்று அவர் பேசினார்.விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆவின் பெருந்தலைவர் அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி ,துணை இயக்குனர் மீரா துணை ஆட்சியர் ஸ்ரீதேவி முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், மகரிஷி பள்ளி தாளாளர் மனோகரன், மாவட்ட துணை செயலாளர் அமுதா அருணாச்சலம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத்தலைவர் கே.கே.மணி, நகர அம்மா பேரவை செயலாளர் குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் ட்பட பிரதிநிதிகள் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கண்மாய்க்கு செல்லும் தண்ணீரை வீணாக உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை
by mohan
written by mohan
திண்டுக்கல் மாவட்டம் , கே. சி. பட்டி , ஆடலூர் , பன்றிமலை உள்ளிட்ட தென் மேற்கு தொடர்ச்சி மலைகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆத்தூர் தாலுகாவில் உள்ள போடியகாமன் வாடி , நெல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கண்மாய் நிரம்பி அதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள செங்கட்டாம்பட்டி கண்மாய் நிரம்பி தற்போது நிலக்கோட்டை கொங்கர் குளம் கண்மாய்க்கும், சீத்தாபுரம் கண்மாய்க்கும் தண்ணீர் பிரித்து வழங்கப்பட்டு வருகிறது .
இந்நிலையில் சீத்தாபுரம் கண்மாய்க்கு செல்லும் தண்ணீரை மர்ம நபர்கள் உடைத்து தண்ணீரை வீணாக வயல் வெளிகளில் உடைத்து விட்டதாக கோரி நிலக்கோட்டை பொதுப்பணித் துறை அலுவலகத்திற்கு சீத்தாபுரம் பாப்பன்குளம் கண்மாய் பாசனம் விவசாயிகள் நேரில் வந்து முற்றுகையிட்டனர். இதனை அறிந்த நிலக்கோட்டை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் நீதிபதி விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நிலக்கோட்டை பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் நீதிபதி பேசியதாவது:தற்போது நல்ல மழை பொழிவு இருக்கிறது வரும் காலங்களிலும் அதிகமாக மழை இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து வருகிறது. எனவே அனைத்து கண்மாய்களில் தண்ணீரை நிரப்ப அரசு தரப்பில் பொதுப்பணி நிர்வாகம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக விவசாயிகள் அனைவரும் எந்தசூழ்நிலையிலும் தன்னிச்சையாக செயல்பட்டு இடையூறு ஏற்படுத்தினால் அரசு சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டு விவசாயிகள் அனைவரும் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் நூத்துலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் , ஒன்றிய கவுன்சிலர் கணேசன் உட்பட பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிலக்கோடடை செய்தியாளர் ம.ராஜா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வான் டி கிராப் ஜெனரேட்டரை (மின்னியற்றி) உருவாக்கிய ராபர்ட் ஜெ. வான் டி கிராப் பிறந்த தினம் இன்று (டிசம்பர் 20, 1901).
by mohan
written by mohan
ராபர்ட் ஜெ. வான் டி கிராப் (Robert Jemison Van de Graaff) டிசம்பர் 20, 1901ல் அலபாமாவின் டஸ்கலோசாவில் உள்ள மாளிகையில் பிறந்தார். அவரது தந்தை டச்சு வம்சாவளியைச் சேர்ந்தவர். டஸ்கலோசாவில், ராபர்ட் தனது பி.எஸ் மற்றும் தி காஸில் கிளப்பில் உறுப்பினராக இருந்த அலபாமா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டங்கள் பெற்றார். அலபாமா பவர் நிறுவனத்தில் ஒரு வருடம் பணியாற்றிய பிறகு, வான் டி கிராஃப் சோர்போனில் படித்தார். 1926 ஆம் ஆண்டில், அவர் இரண்டாவது பி.எஸ். ரோட்ஸ் ஸ்காலர்ஷிப் மூலம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், தனது டி.பில் முடித்தார். வான் டி கிராஃப் ஜெனரேட்டரின் கண்டுபிடிப்பாளராக இருந்தார். இது அதிக மின்னழுத்தங்களை உருவாக்கும் சாதனமாகும். 1929 ஆம் ஆண்டில், அவர் தனது முதல் ஜெனரேட்டரை (மின்னியற்றி) உருவாக்கி, 80,000 வோல்ட் உற்பத்தி செய்தார். 1933 வாக்கில், அவர் 7 மில்லியன் வோல்ட் உற்பத்தி செய்யும் ஒரு பெரிய ஜெனரேட்டரைக் கட்டினார்.
வான் டி கிராஃப் ஜெனரேட்டர்கள் ஒரு மோட்டார் பொருத்தப்பட்ட இன்சுலேடிங் (ரப்பரால்) பெல்ட்டைப் பயன்படுத்துகின்றன. உயர் மின்னழுத்த மூலத்திலிருந்து பெல்ட்டின் ஒரு முனையில் மின் மின்னூட்டங்களை மறு முனையில் ஒரு உலோகக் கோளத்தின் உட்புறத்தில் நடத்துகின்றன. மின்னூட்டம் கோளத்தின் வெளிப்புறத்தில் இருப்பதால், இது முதன்மை உயர் மின்னழுத்த மூலத்தை விட மிக அதிகமான மின்சார ஆற்றலை உருவாக்குகிறது. நடைமுறை வரம்புகள் பெரிய வான் டி கிராஃப் ஜெனரேட்டர்களால் உற்பத்தி செய்யப்படும் திறனை சுமார் 7 மில்லியன் வோல்ட்டுகளாக கட்டுப்படுத்துகின்றன. வான் டி கிராஃப் ஜெனரேட்டர்கள் முதன்மையாக அணு இயற்பியல் சோதனைகளுக்குப் பயன்படுத்தப்படும் நேரியல் அணு துகள் முடுக்கிகளுக்கு D.C மின்சாரம் வழங்கப்படுகின்றன. டேன்டெம் வான் டி கிராஃப் ஜெனரேட்டர்கள் அடிப்படையில் இரண்டு ஜெனரேட்டர்கள், மேலும் அவை சுமார் 15 மில்லியன் வோல்ட் உற்பத்தி செய்ய முடியும்.
வான் டி கிராஃப் ஜெனரேட்டர் ஒரு எளிய இயந்திர சாதனம். சிறிய வான் டி கிராஃப் ஜெனரேட்டர்கள் பொழுதுபோக்கு மற்றும் விஞ்ஞான எந்திர நிறுவனங்களால் கட்டப்பட்டுள்ளன. மேலும் அவை உயர் D.C ஆற்றல்களின் விளைவுகளை நிரூபிக்கப் பயன்படுகின்றன. சிறிய பொழுதுபோக்கு இயந்திரங்கள் கூட பல சென்டிமீட்டர் நீளமுள்ள ஈர்க்கக்கூடிய தீப்பொறிகளை உருவாக்குகின்றன. வான் டி கிராஃப் அவர்களால் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய காற்று காப்பிடப்பட்ட வான் டி கிராஃப் ஜெனரேட்டர் செயல்பட்டு வருகிறது. போஸ்டன் அறிவியல் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் ஆர்ப்பாட்டங்கள் ஒரு பிரபலமான ஈர்ப்பு நவீன வான் டி கிராஃப் ஜெனரேட்டர்கள் அழுத்தப்பட்ட மின்கடத்தா வாயுவால் (ஃப்ரீயான் அல்லது சல்பர் ஹெக்ஸாஃப்ளூரைடு) காப்பிடப்படுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில், வான் டி கிராஃப் ஜெனரேட்டர்கள் மெதுவாக திட-நிலை டிசி மின்சாரம் மூலம் பாகங்கள் நகராமல் மாற்றப்பட்டுள்ளன. வான் டி கிராஃப் அணு துகள் முடுக்கிகள் தயாரிக்கும் ஆற்றல்கள் சுமார் 30 MeV ஆக வரையறுக்கப்பட்டுள்ளன. டேன்டெம் ஜெனரேட்டர்கள் இரட்டிப்பாக சார்ஜ் செய்யப்பட்ட (ஆல்பா) துகள்களை துரிதப்படுத்துகின்றன.
வெவ்வேறு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேலும் நவீன துகள் முடுக்கிகள் அதிக ஆற்றல்களை உருவாக்குகின்றன. இதனால் வான் டி கிராஃப் துகள் முடுக்கிகள் பெரும்பாலும் வழக்கற்றுப் போய்விட்டன. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பட்டதாரி மாணவர் ஆராய்ச்சிக்காகவும், அதிக ஆற்றல் வெடிப்பிற்கான அயனி ஆதாரங்களாகவும் அவை இன்னும் ஓரளவிற்கு பயன்படுத்தப்படுகின்றன. வான் டி கிராஃப் ஒரு தேசிய ஆராய்ச்சி உறுப்பினராக இருந்தார. மேலும் 1931 முதல் 1934 வரை மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சி கூட்டாளராக இருந்தார். அவர் 1934 இல் இணை பேராசிரியரானார். அவருக்கு 1936 இல் எலியட் க்ரெஸன் பதக்கம் வழங்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது, வான் டி கிராஃப் உயர் மின்னழுத்த ரேடியோகிராஃபிக் திட்டத்தின் இயக்குநராக இருந்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அவர் உயர் மின்னழுத்த பொறியியல் கழகத்தை (எச்.வி.இ.சி) ஜான் ஜி. டிரம்புடன் இணைந்து தொடங்கினார். 1950 களில் அவர் இன்சுலேடிங்-கோர் டிரான்ஸ்பார்மரைக் கண்டுபிடித்தார்.
உயர் மின்னழுத்த நேரடி மின்னோட்டத்தை உருவாக்கினார். டேன்டெம் ஜெனரேட்டர் தொழில்நுட்பத்தையும் உருவாக்கினார். எலக்ட்ரோஸ்டேடிக் முடுக்கிகளின் வளர்ச்சிக்காக அமெரிக்க இயற்பியல் சங்கம் அவருக்கு டி. பொன்னர் பரிசை (1965) வழங்கியது. வான் டி கிராப் ஜெனரேட்டரை (மின்னியற்றி) உருவாக்கிய ராபர்ட் ஜெ. வான் டி கிராப் ஜனவரி 16, 1967ல் தனது 65வது அகவையில் மாசசூசெட்ஸின் பாஸ்டனில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். சந்திரனின் வெகு தொலைவில் உள்ள ஒரு பள்ளம் அவருக்கு பெயரிடப்பட்டது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக மழைநீர் தேங்கிய பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று (19.12.2020) நேரில் சென்று நகராட்சி நிர்வாகம் மூலம் மழைநீரை அகற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.
இராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் உள்ள 16 மழை மானிகளில் 18.12.2020 அன்று மொத்தம் 464.40 மி.மீ
அளவும், சராசரியாக 29.03 மி.மீ அளவும், 19.12.2020 அன்று மொத்தம் 309.50 மி.மீ அளவும் சராசரியாக 19.34 மி.மீ அளவும் பதிவாகியுள்ளது. இதனை அடுத்து இராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட சில குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள மழை நீரை அகற்றுவதற்கு நகராட்சி
நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.இராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட அக்ரஹாரம் தெரு பகுதியில் தேங்கியுள்ளமழைநீரை நகராட்சி நிர்வாகத்தின் மூலம் விசைபம்பு மூலம் அகற்றப்பட்டு வருகிறது. அதேபோல, வசந்த நகர் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை தற்காலிக வடிகால் மூலம் அப்பகுதியிலுள்ள கொடலைக்கார ஊரணியில் நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார். மேலும், மாவட்டத்தில் பரவலாக தொடர்மழை இருக்கக்கூடும் எனவும், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழாமல்உடனுக்குடன் போர்க்கால அடிப்படையில் அருகே உள்ள நீர்நிலையில் சேமித்திட வேண்டும் என நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின்போது, இராமநாதபுரம் நகராட்சி ஆணையர் (பொ)நிலேஸ்வர்உடனிருந்தார்.
You must be logged in to post a comment.