மரியா டி. சூபெர் (Maria D. Zuber) ஜூன் 27, 1958ல் பென்சில்வேனியா, அமெரிக்காவில் பிறந்தார். பெனிசில்வேனியா பல்கலைக்கழகத்தில் வானியலிலும் புவியியலிலும் இளவல் பட்டம் பெற்றார். மேலும் பிரவுன் பல்கலைக்கழகத்தில் புவி இயற்பியலில் முதுவர் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றார். பின்னர் ஜான்சு ஃஆப்கின்சு பல்கலைக்கழத்தில் பணிபுரிந்தார். அப்போது மேரிலாந்தில் இருந்த நாசாவின் கோடார்டு விண்வெளி பறத்தல் மையத்தில் ஆய்வு அறிவியலாளராகவும் இருந்துள்ளார். இவர் 1998ல் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆசிரியராகச் சேர்ந்துள்ளார். அங்கு 2003 முதல் 2012 வரை புவி, வளிமண்டலம், கோளியல் துறையின் தலைவராக இருந்துள்ளார். சூபரின் தொழில்முறைப் பணி சூரிய மண்டலக் கோள்களின் கட்டமைப்பிலும் கண்டத்தட்டு ஆய்விலும் குவிந்திருந்தது. இவர் ஈர்ப்பையும் ஒருங்கொளி குத்துயர அளப்பையும் பயன்படுத்தி கோள்களின் உட்கட்டமைப்பையும் அவற்றின் படிமலர்ச்சியையும் ஆய்ந்தார்.சூபெர் பத்து நாசா கோளாய்வுத் திட்டங்களில் குழுவுறுப்பினராக இருந்துள்ளார். இவற்றில் செவ்வாய்க் கோளக அளக்கை, டான் திட்டம், மெசஞ்சர் (MESSENGER) ஆகியவையும் அடங்கும். சூபரின் ஆர்வம் கோளியலில் இளமை முதலே கவிந்திருந்தது. இந்த ஆர்வத்துக்கு உரமூட்டவே இவர் முந்தைய விண்வெளி வலவரான சால்லி இரைடுடன் இணையச் செய்தது. இதனால் இளம் மாணவரைக் கவர்ந்திழுக்கும் ஈர்ப்பு மீட்பு மற்றும் உள் ஆய்வகத் திட்டத்தின் (GRAIL) உறுப்புகள் ஆய்வில் ஈடுபடவைத்தது. எப், ஃபுலோ எனும் இரண்டு விண்கலங்களின் கோளாய்வுத் திட்டத்துக்கு மாணவர்களுக்குப் போட்டி வைத்து பெயர்கள் பெறப்பட்டன. மேலும் இந்த இடைநிலைப்பள்ளி மாணவர்கள் GRAIL திட்டத்தின் மூன்காம் கருவியைப் பயன்படுத்திப் பெறப்பட்ட நிலா பற்றிய அறிவைப் பயன்படுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.சூபர் கீழ்வரும் தொழில்சார் கழகங்களில் ஆய்வு உறுப்பினர் ஆவார். அமெரிக்கப் புவி இயற்பியல் ஒன்றியம், அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகம், அமெரிக்க வானியல் கழகம், கோளியல் பிரிவு, அமெரிக்க விண்வலவர் கழகம் மற்றும் அமெரிக்கப் புவியியல் கழகம். சூபர் நாசாவின் தகவுறு பொது சேவைப் பதக்கத்தை 2004ல் பெற்றார். இவர் 2008ல் பிரவுன் பல்கலைக்கழகத்தில் இருந்து அறிவியலில் தகவுறு முதுமுனைவர் பட்டத்தைப் பெற்றார். அதே ஆண்டின் இறுதியில் அமெரிக்கச் செய்திகள் மற்றும் உலக அறிக்கை இதழால் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தின் இயற்பியல் பேராசிரியரான ஃபியோனா ஃஃஆரிசன் உடன் இணைந்து உலகின் சிறந்த தலைவர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டார். சூபரும் ஆரிசனும் நாசாவின் எந்திரன் இலக்கியக்கத் திட்டங்களுக்காக முதன்முதலாகத் தேர்வு செய்யப்பட்ட முதல் இரண்டு பெண்மணிகள் ஆவர்.சூபர் தேசிய அறிவியல் குழும உறுப்பினர். மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆய்வுத் துனைத் தலைவரும் ஆவார். இங்கு இவர் புவி, வளிமண்டலம், கோளியல் துறையில் ஈ.ஏ. கிரிசுவோல்டு புவி இயற்பியல் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். சூபர் நாசாவின் ஆறுக்கும் மேற்பட்ட கோளாய்வுத் திட்டங்களில், குறிப்பாக நிலா, செவ்வாய், புதன் கோள், பிற பல சிறுகோளாய்வுத் திட்டங்களில் அவற்றின் நிலவரைப் பணிகளில் பங்கேற்றார். அண்மையில் இவர் நாசாவின் தாரைச் செலுத்த ஆய்வகம் ஆளுகை செய்யும் ஈர்ப்பு மீட்பு மற்றும் உள் ஆய்வகத் திட்ட்த்தில் முதன்மை ஆய்வாலராகப் பணிபுரிகிறார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
செய்திகள்
தமிழக அரசு சில தினங்களுக்கு முன்பு பள்ளிகளில் மாணவ மாணவிகள் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிப்பு செய்திருந்தது. அதன் தொடர்ச்சியாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகம் அனுப்பி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு தேவையான புத்தகங்களை பள்ளிகளின் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் தனியார் நிறுவனம் சார்பாக தேவையுடையோருக்கு உணவு பொருட்கள்…
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மெரினா அசோசியேட்ஸ் கன்ஸ்ட்ரக்சன் சார்பாக இன்சினியர் கபீர் கொரோனா பேரிடர் காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் கீழக்கரை அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் முடி திருத்துவோர் தொழிலாளர் நல சங்கத்திற்கு உட்பட்ட கீழக்கரையை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியின் போது கண்ணன்,முனியசாமி, செல்வம், சாதிக்,ஹஸன், s.m.பாக்கர், ஹபீப், தங்கபாண்டி, சதக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மஷார் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது இம்முகாம் புதுப்பாளையம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மதன்குமார் உத்தரவின்பேரில் சுகாதார ஆய்வாளர் எழிலன் தலைமையில் செவிலியர் வேதலஷ்மி பொதுமக்களை பரிசோதனை செய்து தடுப்பூசி வழங்கினார் இம்முகாமில் புதுப்பாளையம் ஒன்றியக்குழு உறுப்பினர் தீர்த்தமலை ஊராட்சி மன்ற துணை தலைவர் தாரணிகருணாநிதி ஊராட்சி எழுத்தாளர் செல்வம் R. புருஷோத்தமன் கிராம முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு எவ்வித அச்சமும் இன்றி ஆர்வமுடன் 60 மேற்பட்ட பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிங்காரவாடி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் கொரோனா தடுப்பூசி முகாம்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த சிங்காரவாடி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் K.ஆனந்தன் தலைமையில் கொரோனா தடுப்பூசி முகாம் இம்முகாமில் கலசப்பாக்கம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி துவக்கி வைத்தனர் இம்முகாம் வட்டார வளர்ச்சி மருத்துவ அலுவலர் டாக்டர் கௌதம்ராம் உத்தரவின்பேரில் மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்பிரகாஷ் தலைமையிலான மருத்துவக் குழு செவிலியர்கள் மல்லிகா , பிரியா பொதுமக்களை பரிசோதனை செய்து தடுப்பூசி வழங்கினார் இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் ஐயப்பன் ஊராட்சி எழுத்தாளர் ஆறுமுகம் மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர் பின்னர் சிங்காரவாடி கிராம பொதுமக்கள் ஆர்வமுடன் எவ்வித அச்சமும் இன்றி தாமாக முன்வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாத்தல் , குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் சார்ந்த விழிப்புணர்வு.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜமணாமரத்தூர் தொன் போஸ்கோ மைய வளாகத்தில் இன்று திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை மற்றும் சைல்டு லைன், மற்றும் மாவட்ட துணை மையம் சார்பில் இணைந்து நடத்திய குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாத்தல் மற்றும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் சார்ந்த விழிப்புணர்வு சைல்ட் லைன் இயக்குனர் செழியன் முன்னிலையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு.பவன் குமார் ரெட்டி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை குறித்து பெற்றோர்களுக்கும் காவல்துறையினருக்கும் கிராம நிர்வாக அலுவலர்களும் ஊராட்சிமன்ற தலைவர்களுக்கும் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை உடனே தடுப்பதற்கு உங்களால் மட்டுமே முடியும் என சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் சைல்டு லைன் மாவட்ட திட்ட இயக்குனர் முருகன் வரவேற்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து ஜவ்வாதுமலை ஒன்றியம் ஒன்றிய குழு தலைவர் ஜீவா மூர்த்தி வாழ்த்துரை வழங்கினார்.மேலும் இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாகாளீஸ்வரன், உதவி காவல் கண்காணிப்பாளர் கிரன் சுருதி, மாவட்ட சமூக நல அலுவலர் கந்தன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வி, குழந்தை நல குழு உறுப்பினர் புவனேஸ்வரி, போளூர் காவல் துணை கண்காணிப்பாளர் அறிவழகன், ஜமணாமரத்தூர் வட்டாட்சியர் சங்கரன் உள்ளிட்டோர் பல்வேறு கருத்துகளை வழங்கினார்கள்.பின்னர் ஜமணாமரத்தூர் உதவி காவல் ஆய்வாளர் முருகன் நன்றி உரையாற்றினார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஒரு தலை காதலால் பரிதாபம்.. காதலை ஏற்க மறுத்ததால், திருப்பரங்குன்றம் மலையிலிருந்து வாலிபர் குதித்து தற்கொலை.,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சமணப்படுகை பகுதியில் வாலிபர் ஒருவர் இரத்தகரையுடன் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பரங்குன்றம் போலீசார் மற்றும் மதுரை டவுன் நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமை யிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு துறையினர் இறந்த வாலிபரின் உடலை ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து., திருப்பரங்குன்றம் போலீசார் முதற்கட்ட விசாரணையில் இறந்த நபர் ஜெய்ஹிந்துபுரம் புலிப்பாண்டி முதல் தெருவைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரின் மகன் ஜோதி மகாலிங்கம் (23) எனவும்., இவர் என்ஜினீயரிங் பட்டப்படிப்பை முடித்து சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பணிபுரிந்து வருகிறார். மேலும்., இவர் சென்னையில் தான் பணிபுரிந்த நிறுவனத்தில் ஒருதலைபட்சமாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.கொரோனா ஊரடங்கு காரணமாக மதுரை வந்த ஜோதி மகாலிங்கம் தான் காதலித்த பெண்ணிடம் தனது காதலை கூறிய நிலையில் அப்பெண் ஏற்க மறுத்துள்ளார். இதனால் கடந்த சில வாரங்களாகவே மன விரக்தியில் இருந்த ஜோதி மகாலிங்கம் நேற்று முன்தினம் வீட்டில் பெற்றோரிடம் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதுகுறித்து ஜோதி மகாலிங்கத்தின் தந்தை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் தனது மகன் காணாமல் போனதாக புகார் அளித்தார். இதனை தொடர்ந்து பல இடங்களில் அவரை தேடி வந்தனர்.தொடர்ந்து., இன்று மதியம் ஒரு மணி அளவில் திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சமணர் படுகை அருகே 150 அடி உயரத்தில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் திருப்பரங்குன்றம் காவல்நிலையத்தில் தகவல் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் இறந்த வாலிபரின் உடலை ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.ஒரு தலை பட்சமாக காதல் செய்த நிலையில் தன் காதலை ஏற்காத விரக்தியில்., திருப்பரங்குன்றம் மழையிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆஸ்டின் பட்டியில் வாலிபர் கொலை இது குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை .
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா ஆஸ்டின்பட்டி அருகே ஒருவர் பிணமாக இருப்பது குறித்து ஆஸ்டின்பட்டி போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது கை, மார்பு, தலை ஆகிய இடங்களில் வெட்டப்பட்டு கிடந்த ஒருவரின் உடல் கிடந்தது .இதனை தொடர்ந்து போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் உசிலம்பட்டி அருகே உள்ள கொக்குளம் பன்னி யான் கிராமத்தை சேர்ந்த மூக்கன் மகன் ரவி (வயது 32 )என தெரியவந்தது இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் முன்விரோதம் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இறந்த ரவியின் உடலை கைப்பற்றி போலீசார் ஒரு உடற்கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொரோன மூன்றாம் அலை வந்தால் பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் தயாராக உள்ளது தமிழக அரசு .
வருவாய் துறை மிகவும் பழமையான துறை அதில் நவீன படுத்தப்பட்டு தற்பொழுது இடைத்தரகர்கள் இல்லாமல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுகின்றோம்அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்மதுரை விமான நிலையத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் செய்தியாளர்களை சந்தித்தார்.-கொரோனா மூன்றாம் அலை முன்னேற்பாடுகள் குறித்து கேட்ட கேள்விக்கு-மூன்றாம் அலை வந்தால் அதற்கான முன்னேற்பாடுகள் இப்பொழுது தயாராக உள்ளது மூன்றாம் அலை குழந்தைகளுக்கு வரும் என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர் எனவே இப்போது உள்ள குழந்தைகள் மருத்துவமனையை மையப்படுத்தி அதில் அவர்களுக்கான தனியாக ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கை வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது. மூன்றாம் அலை வரக் கூடாது அப்படி வந்தால் அதனை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது.-வருவாய் துறையில் புதிய நடவடிக்கைகள் என்னென்ன என்ற கேள்விக்கு-வருவாய் துறை என்பது பொது மக்களோடு அன்றாட வாழ்வில் இணைந்து செயல்படும் துறை. இந்த துறையின் மூலம் பொது மக்களுக்கு நலன் ஏற்படுத்தி தரப்படுகிறது உதாரணமாக முதியோர் பென்சன் போன்றவை செயல்படுகிறது இதனை துரிதமாக இணைய வழியில் எந்த ஒரு புரோக்கர்களும் இன்றி அதிகாரிகளையே நேரடியாக சந்தித்து தொடர்பு கொள்ளும் வேலையை நவீனப் படுத்தி வருகிறது தமிழக அரசு.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை எதையும் நிறுத்தும் குறுகிய மனப்பான்மை எங்களுக்கு இல்லை.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் ஆராய்ச்சி மூலம் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பொதுமக்கள் காட்சிக்கு வைப்பதற்காக அகழ்வைப்பகம் அமைக்கும் பணி ரூ.12 கோடி 21 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இதனை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ. வேலு, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே ஆர். பெரியகருப்பன் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர். கீழடியில் அகழ்வைப்பகம் பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதாக ஒப்பந்ததாரர்களை கண்டித்த அமைச்சர் ஏ.வ.வேலு விரைந்து பணிகள் மேற்கொள்ள அறிவுரை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஏ.வ. வேலு, கீழடி அகழ்வைப்பகம் பணிகள் 60% நடைபெற்று இருக்க வேண்டிய நிலையில் தற்போது 17% நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தார். முதல்வர் ஆணைக்கிணங்க பணிகள் விரைந்து முடிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அருங்காட்சியகம் வடிவமைப்பில் மாற்றம் ஏதும் மேற் கொள்ளப்படாது என்றும், கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை செம்மைப்படுத்தப்பட்டு துரிதமாக நடைபெறும் என்ற அமைச்சர், கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை நிறுத்தும் குறுகிய மனப்பான்மை எங்களுக்கு இல்லை என தெரிவித்தார். வைகை ஆற்றில் கருவேல மரங்கள் அகற்றும் பணியினை அத்துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெறும் என உறுதியளித்தார். கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வைகை காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு வரும் இதற்கான பணியினை நிதி அமைச்சர் மேற்கொண்டுவருவதாகவும், பட்ஜெட் தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொரொனோ தொற்று காலகட்டத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்துவரும் சீமானூத்து ஊராட்சி மன்ற தலைவர் .அஜித்பாண்டி யை பாராட்டி ஊக்கப்படுத்தும் விதமாக உலக சாதனை முயற்சி நிகழ்வு செய்யும் “இண்டியான் வேர்ல்ட் ரெக்கார்டு ” நிறுவனம் ” சிறந்த மனிதர் விருது” வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.இவருக்கு உசிலம்பட்டி பகுதி மக்களும் சமூக ஆா்வலா்களும் 58 கிராம கால்வாய் இளைஞா்கள் குழு சௌந்திரபாண்டியன் குழுவினரும் பாராட்டுகளைத் தொிவித்துள்ளனா்.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நாச்சிகுளம் – இடிந்து விழும் நிலையில் அரசு ஆதிதிராவிட ஆரம்பப் பள்ளி கட்டிடம் மற்றும் சமுதாய கூடம். புதிய கட்டடம் கட்டித் தர கிராம மக்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுளம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளி சுமார் முப்பது ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளி கடந்த 5 ஆண்டுகளாக மிகவும் பாழடைந்து போய் இடியும் நிலையில் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், கட்டடம் முழுவதும் சிதிலமடைந்து உள்ளதால் இந்த பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புவதற்கு பெற்றோர்கள் மிகவும் தயங்கி வருகின்றனர். மேலும் இந்தப் பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தரவேண்டும் என்றும் அரசு ஆதிதிராவிடர் நலத்துறைக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும், இது அருகில் உள்ள சமுதாயக்கூடம் மிகவும் பாழடைந்து போய் உள்ளதால் அதனையும் கட்டித்தர அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் .இதுகுறித்து, முனியம்மாள் 47 என்பவர் கூறும் பொழுது, நாச்சிகுளம் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள ஆரம்பப்பள்ளி 20 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டது.இந்தப் பள்ளியின் முன்னாடி உள்ள முகப்புகள் இடிந்த நிலையில் உள்ளது.எப்போது இந்தக் கட்டிடம் இடிந்து விழும் என்ற பயத்தில் இருப்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்தை அப்புறப்படுத்தி, புதிய பள்ளிக் கூட கட்டிடத்தை கட்டி தர வேண்டும், என்று கேட்டுக்கொண்டுள்ளார் .அரசு பள்ளிக்கூடங்களை திறக்கக் கூடிய நிலையில் தயாராக இருப்பதால், இங்குள்ள பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.சுமார் நான்கு ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இந்த அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளி கட்டிடம் மிகவும் சேதமடைந்துள்ளது. கட்டிடத்தை தாங்கியுள்ள தூண்களின் அடித்தளம் மிகவும் சேதமடைந்து கட்டிடத்தில் மேல் தளத்தில் உள்ள சிமெண்ட் கம்பிகள் பெயர்ந்தும் தெரிகிறது.இந்தக் கட்டிடம் எப்ப வேண்டுமானாலும், இடிந்து விழலாம் என்று கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கை எடுத்து இந்த பள்ளிக்கு புதிய கட்டிடத்தை கட்டித்தர வேண்டும் மேலும், இந்தக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துகள் ஏற்படும் முன் அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.இதேபோல், 1972ஆம் ஆண்டு கட்டப்பட்ட சமுதாயக்கூடம் கட்டிடமும் மிகவும் சேதம் அடைந்து மேற்கூரை உடைந்தும், கிராம பொதுமக்கள் பயன்பாடு இல்லாமல் இருக்கிறது. இதுகுறித்து ராமையா 75 என்பவர் கூறும்போது, இந்த சமுதாயக் கூடம் 1972 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சமீபத்தில் தரைப்பகுதி உயர்ந்ததால், இந்த சமுதாய கூடம் மிகவும் பள்ளத்தில் இறங்கிவிட்டது. கிராம மக்கள் தற்போது, இதை பயன்படுத்துவதில்லை ரோட்டில் வெளியே பந்தல் மற்றும் மேடை அமைத்து திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம் அரசு உரிய நடவடிக்கை எடுத்து நாச்சிகுளம் கிராமம் காலனி பகுதியில் உள்ள மக்களுக்கு புதியதாக சமுதாயக் கட்டிடம் கட்டித்தர வேண்டும் இடிந்த நிலையில் உள்ள கிராம சாவடி புதிதாக கட்டித்தர வேண்டும் என்று கூறினார்.இந்த இரண்டு கட்டடங்களும் இடிந்து பொதுமக்களுக்கு விபத்துகளை ஏற்படுத்தும் முன், அரசு சுதாரித்து புதிய கட்டிடங்களைக் கட்டி தரவேண்டும் என்று இப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சி மன்றம் கச்சைகட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தமிழக அரசின் உத்தரவின்படி, கொரோனா நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இரும்பாடி ஊராட்சி சுகாதார வளாகத்தில் நடந்த முகாமிற்கு, ஊராட்சித் தலைவர் ஈஸ்வரி பண்ணைசெல்வம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பிரியா சேகர் ஊராட்சி செயலர் காசிராமன் துவக்கினார்.முன்னாள் ஊராட்சித் தலைவர் பண்ணைசெல்வம் முன்னிலை வகித்தார். கச்சகைகட்டி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் செல்வராஜ், தலைமையில், மருத்துவக் குழுவினர் செவிலியர்கள் 45 வயதிற்கு மேற்பட்ட 200 பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.இதில், வார்டு உறுப்பினர்கள் சுகாதார ஆய்வாளர்கள் ராதாகிருஷ்ணன், டார்வின், செவிலியர்கள் கலா பேச்சி மற்றும் திலீபன் சுகாதார பணியாளர்கள் தூய்மை காவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதைப்போன்று அலங்காநல்லூரில் நடந்த தடுப்பூசி முகாமில்புதுப்பட்டி கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு மருத்துவமனையும், அரிமா சங்கமும் இணைந்து புதுப்பட்டி கிராமத்தில் கெரானா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.இதில், ஊராட்சி மன்றத் தலைவர்.பரந்தாமன் தலமையில் அரிமா சங்கத் தலைவர் நடராஜன் , செயலாளர் பிரபாகரன், பொருளாள் சோமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வட்டார மருத்துவர் டாக்டர் வளர்மதி, முகாமை தொடக்கிவைத்தார். இதில், சுகாதார ஆய்வாளர்கள்/மண ராமார், அரிமா ரகுபதி, முரளிதரன் ஆதிமூலம, ஜெயராம் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக் கவுன்சிலர் சுப்பா ராயலு .உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் இந்து முன்னணி சார்பாக கோவில்களை திறக்க கோரி மண்டியிட்டு ஆர்ப்பாட்டம்.
கொரோனா தொற்று இரண்டாவது அலை தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவைகளில் குறைந்த நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் கோவில்கள் திறக்க எவ்வித அனுமதியும் அளிக்கப்படாத நிலையில், இந்து முன்னணி சார்பாக மதுரை திருப்பரங்குன்றம் வாசலில் கோயில்களை திறக்கக்கோரி மண்டியிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.டாஸ்மாக் கடைகளைத் திறந்த அரசு கோவில்களை திறக்க வேண்டும் என 20க்கும் மேற்பட்டோர் மண்டியிட்டு கோஷங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கட்டுப்பாடுகளுடன் வரும் 1-ஆம் தேதி முதல் துபாய்க்கு வாரம் 6 விமானங்கள், மதுரை விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டிற்கு மீண்டும் விமானங்கள் இயக்கம்.
கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பினால் மதுரை விமான நிலையத்திலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதியிலிருந்து உள்நாட்டு சேவைகள் மட்டுமே வழங்கப்பட்டது. குறிப்பாக, சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய பெருநகரங்களுக்கு மட்டும் தினசரி ஐந்து முதல் ஆறு விமானங்கள் வரை மதுரை விமான நிலையத்தில் இருந்து சேவைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில்.வெளிநாட்டு விமான சேவைகளான துபாய் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு விமான போக்குவரத்திற்கு முற்றிலும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் வெளிநாட்டு விமான சேவைகளை நிறுத்திய பிறகு, தற்பொழுது தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு மிகவும் குறைந்த காரணத்தினால், மதுரை விமான நிலையத்திலிருந்து மீண்டும் துபாய்க்கு வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் வெளிநாட்டு விமான சேவைகளை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வழங்குவதாக அறிவித்துள்ளதுவழங்குவதாக அறிவித்துள்ளது.
துபாய்க்கு சென்று வரும் இந்த வெளிநாட்டு விமான சேவையானது காலை 10.40 AM மணி அளவில் துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வருவதாகவும், பின்பு இங்கிருந்து 11.40AM மணி அளவில் துபாய் புறப்பட உள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விமான சேவையானது வாரத்திற்கு 5 நாட்கள் அதாவது செவ்வாய் கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய தேதிகளை தவிர்த்து மற்ற 5 நாட்கள் வழங்கப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.அதேபோல் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் காலை 11:55AM மணி அளவில் துபாயிலிருந்து மதுரைக்கு வருவதாகவும், மீண்டும் மதியம் 01.45PM மணி அளவில் மதுரையிலிருந்து துபாய்க்கு செல்ல உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது சராசரியாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வாரத்திற்கு ஆறு விமானங்கள் துபாய்க்கு இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.இந்த விமான சேவையானது சுற்றுலா விசாவில் செல்லும் பயணிகளுக்கானது அல்ல மாறாக ஏற்கனவே வெளிநாடுகளில் வேலை செய்யக்கூடியவர் விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு வருகை புரிந்து தற்போது மீண்டும் பணிக்காக வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்காக மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விமானங்களில் பயணிக்கக்கூடிய பணிகள் கண்டிப்பான முறையில் கொரோனா பரிசோதனை செய்து அவர்களுக்கு நோய்த்தொற்று இல்லை என்பதை உறுதி செய்யும் விதமாக அங்கீகாரம் பெற்ற மருத்துவரிடம் கையொப்பம் பெற்று மருத்துவச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்; கட்டாயமாக இரண்டு நிலை கொரோனோ தடுப்பூசிகளில் முதல் நிலை தடுப்பூசி யாவது செலுத்தியிருக்க வேண்டும். இதுபோன்ற அறிவுரைகளும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உடுக்கணங்காணி எனும் விண்வெளித் தொலைநோக்கி உருவாக்கிய அமெரிக்கக் கோட்பாட்டு இயற்பியலாளர், வானியலாளர் இலைமன் சுட்டிராங் சுபிட்சர் பிறந்த தினம் இன்று (ஜூன் 26, 1914).
இலைமன் சுட்டிராங் சுபிட்சர் (Lyman Strong Spitzer) ஒகியோவில் உள்ள தொலிடோவில் ப்ரெசுபைடேரியக் குடும்பத்தில் ஜூன்26, 1914ல் பிறந்தார். இவரது தந்தை இலைமன் சுட்டிராங் சுபிட்சர் ஆவார். இவரது தாயார் பிரம்பேக் எனப்படு பிளாஞ்சிகேரி ஆவார். தந்தைவழி பாட்டியால் இவர் புதுமைப்புனைவாளர் எலி விட்னெவின் உறவினர். ஓகியோ, தொலிடோவில் உள்ள சுகாட் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் 1929ல் பிலிப்சு கல்விக்கழகத்தில் பயின்றார். அதன் பிறகு, யேல் கல்லூரியில் சேர்ந்து 1935ல் பை—பீட்டா-கப்பா பட்டம் பெற்றார். அப்போது இவர் மண்டையோடு எலும்பு அமைப்பின் உறுப்பினராக இருந்துள்ளார். இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஓராண்டூ பயிலும்போது ஆர்த்தர் எடிங்டனாலும் இளைஞர் சுப்பிரமணியன் சந்திரசேகராலும் பெரிதும் கவரப்பட்டுள்ளார். பின் ஐக்கிய அமெரிக்கா பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் 1935ல் கலை முதுவர் பட்டமும், 1938ல் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
சுபிட்சர் யேல் பல்கலைக்கழகத்தில் சிறிதுகாலம் துறைப்புல உறுப்பினராக இருந்தபோது போர்க்கால அறிவியல் பணியாக சோனார் உருவாக்கப் பணியில் ஈடுபட நேர்ந்துள்ளது. இவர் 1946 இல் விண்வெளியில் இயங்கும் தொலைநோக்கிகளை உருவாக்குவதில் ஈடுபட்டார். இவர் உடுக்கணங்காணி எனும் மின்மக் கருவியை உருவாக்கினார். நாசாவின் இந்தக் கருவி சுபிட்சர் விண்வெளித் தொலைநோக்கி எனப்படுகிறது. இவர் அறிவியலாளராக, விண்மீன்கள் உருவாக்கம் மின்ம இயற்பியல் ஆய்வுகளில் ஈடுபட்டார். 1947ல், என்றி நோரிசு இரசலுக்குப் பிறகு பிரின்சுடன் வான்காணக இயக்குநரானார். இதற்கு இவரும் மார்ட்டின் சுவார்சு சைல்டும் கூட்டாக 1970 வரை தலைமையேற்றனர். சுபிட்சரும் டொனால்டு மார்ட்டனும் 1965ல் கனடா, நுனாவட் மாவட்டப், பாஃபின் தீவில் அமைந்த ஆயூட்டக் தேசியப் பூங்காவில் உள்ள 1675 மீட்டர் உயரத் தோர் மலையை முதன்முதலாக ஏறிச் சாதனை படைத்தனர்.
அமெரிக்க ஆல்பைன் குழு உறுப்பினரான சுபிட்சர் “இலைமன் சுபிட்சர் மலையேற்ற முன்னேற்ற விருது” எனும் விருதை உருவாக்கினார். இந்த விருது ஒவ்வோராண்டும் மலையேற்றத்தில் முனைந்து வெற்றியீட்டும் வீரர்களுக்கு 12,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள பரிசை வழங்குகிறது. கார்ல் சுவார்சுசைல்டு பதக்கம், ஹென்றி ட்ராப்பர் பதக்கம், நேஷனல் மெடல் ஆஃப் சயின்ஸ் மற்றும் க்ராப்போர்டு பரிசு ஆகிய பதக்கங்கள் இவரைப் பாராட்டி வழங்கப்பட்டன. இலைமன் சுட்டிராங் சுபிட்சர் மார்ச் 31, 1997ல் தனது 82வது அகவையில் பிரிசிடோன் நியூ ஜெர்சி அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். பிரின்சுடன் கல்லறையிலேயே அடக்கம் செய்யப்பட்டார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அய்யனாபுரம் திமுக கிழக்கு ஒன்றிய இளைஞரணி அலுவலகம் திறந்த வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ராஜபாளையம் கிழக்கு ஒன்றியம் அய்யனாபுரம் பகுதியில் ஒன்றிய இளைஞரணி சார்பில் அலுவலகத்தை தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் திறந்து வைத்தார்.பின்னர் 50 ஏழை எளிய மக்களுக்கு அரிசிப் பைகள் மற்றும் இளைஞர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்களை வழங்கினார்.நிகழ்ச்சியில் ஒன்றிய பொறுப்பாளர் சரவண முருகன், துணை அமைப்பாளர்கள் குமார், மகேஸ்வரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாட்டை ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தங்கமகன் செய்திருந்தார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நக்கனேரி பகுதியில் சமுத்திர பாண்டியன் என்ற விவசாயிக்கு சொந்தமான வைக்கோல் படைப்பிற்கு மர்ம நபர்கள் தீ வைப்பு.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள நக்கனேரி கிராமத்தில் விவசாயம் செய்து வரும் சமுத்திர பாண்டியன் வயது 55 இவருக்கு சொந்தமான வைக்கோல் படப்பு மாட்டு தீவனத்துக்காக 4 படங்கள் வைத்துள்ளார் இதில் இன்று மர்மநபர் சிகரெட் பிடித்து விட்டு அதை வைத்து தூக்கிச் சென்று வீசி சென்றுள்ளார் வைக்கோல் படப்பு மளமளவென தீ பிடித்துள்ளது இந்த தகவலை ராஜபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி ஜெயராமன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர் மேலும் வைக்கோல் படப்பு தீ வைத்த மர்ம நபர்கள் யார் என சேத்தூர் சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மின்காந்தவியல், வெப்பவியல் துறைகளில் சிறந்த பல ஆய்வுகள் செய்த வில்லியம் தாம்சன் என்ற இலார்டு கெல்வின் பிறந்த தினம் இன்று (ஜூன் 26, 1824).
வில்லியம் தாம்சன் ஜூன் 26, 1824ல் அயர்லாந்தில் உள்ள பெல்ஃபாசுட்டு நகரில் பிறந்தார். இவரே இலார்டு கெல்வின் என்றழைக்கப்பட்டார். தந்தையார் சேம்சு தாம்சன் ஒரு பயிர்த்தொழிலாளரின் மகன், தாயார் மார்கரெட்டுத் கார்டனர். இப்பெற்றோர்களுக்குப் பிறந்த குழந்தைகளில் நான்கு மகன்களும் இரண்டு மகள்களும் மட்டுமே உயிருடன் இருந்தனர். இவர்களுள் சேம்பசு தாம்சனும் அவருடைய அண்ணன் சேம்சும் முதலில் வீட்டிலேயே அவர்களின் அக்காவால் பயிற்றுவிக்கப்பெற்றனர். பின்னர் வில்லியம் தாம்சன் இலண்டன் நகரிலும், பாரிசிலும், இடாய்ச்சுலாந்திலும், நெதர்லாந்திலும் பன்மொழிகள் கற்றனர். மொழிக்கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. வில்லியம் தாம்சன் கேம்பிரிட்சு பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றுப் பிற்காலத்தில் கணிதவியல் பேராசிரியராகப் பெல்ஃபாசுட்டு வேத்தியக் கல்விக்கழகத்தில் பணிபுரிந்தார். கேம்பிரிட்சில் சேர வில்லியம் தாம்சனின் தந்தை நிறைய பணவுதவி முதல் நல்ல பரிந்துரை மடல்கள் பெறுவது வரை பல உதவிகள் செய்தார்.
வில்லியம் தாம்சன் 1845ல் கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது ‘இராங்கலர்’ (Second Wrangler) ஆகத் தேர்ச்சி பெற்றார். புதிய ஆய்வுக்கான சுமித்து பரிசை (Smith Prize) வென்றார். அதன் பின் 1846ல் கிளாசுக்கோ(Glasgow) நகரில் இயல் தத்துவப் பேராசிரியராகப் பணியில் அமர்ந்தார். ஆரம்பத்தில் மின்காந்தவியலில் ஆய்வுகள் செய்து இங்கிலாந்திற்கும், அமெரிக்காவிற்கும் இடையே தந்திக் கம்பிகள் (Telegraphic wires)அமைத்து வெற்றியடையச் செய்ய இவர் முயன்று தோல்விகண்டார். எனினும் இவரது விடா முயற்சியைப் பாராட்டி இவருக்கு ‘சர்’ பட்டம் வழங்கப்பட்டது. வெப்பவியலிலும் தொடந்து ஆய்வுகள் செய்து 1849ல் அடிப்படையான வெப்ப அளவினை முன்மொழிந்தார். இதன் படி செல்சியசு(Celsius) அளவினை ஒத்த கெல்வின் வெப்ப அளவு உருவாக்கப்பட்டது. இங்கு அடிப்படை வெப்பமான சுழியப்புள்ளி(Zero point) (O K) (273 °C) ஆக அமைக்கப்பட்டது. வெப்பவியலிலும், வானவியலிலும் இது அருஞ்சாதனையாகும்.
வில்லியம் தாம்சன் ஆரம்பக்கட்ட, உருகிய கோள வடிவ பாறைக் குழம்பிலிருந்து புவி தற்போதுள்ளது போலத் திட வடிவம் பெற எத்தனை காலம் பிடித்திருக்கும் என்பதைத் துல்லியமாகக் கணித்துக் கூறினார். வெப்பவியலில் இவருக்கு இருந்த திறமை காரணமாகவே இக்கணிப்பினை இவர் நிகழ்த்தினார். சூரியனின் அதிக எல்லை வாழ்நாளையும் இவர் கணக்கிட்டார். சுருங்குதல் மூலம் ஏற்படும் வெப்ப ஆற்றலின் தொடர்ந்த வெளிப்பாடு காரணமாகச் சூரியனில் வெப்ப ஆற்றல் வெளிப்படுவதை கணிதக் கோட்பாடுகள் மூலம் இவர் கணித்தார். இதனைக் கெல்வின் எலம்ஃகோல்ட்சு கால அளவு (Kelvin Helmholtz) என அழைக்கப்படுகிறது. இது பிற்காலத்தில் ஏற்புடையதல்ல என அறியப்பட்டது என்றாலும், தகுந்த கருவிகள் இல்லாத அக்காலத்தில் இவர் நிகழ்த்திய இக்கண்டுபிடிப்பு போற்றப்பட்டது. இவர் 19-ஆவது நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியல் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார். மின்காந்தவியல், வெப்பவியல் துறைகளில் பலதுறைகளில் சிறந்த பல ஆய்வுகள் செய்தார்.
வெப்ப இயக்கவியலின் அடிப்படையான தனிமுழு வெப்ப அளவீட்டு முறையை நிறுவப் பரிந்துரைத்து அது குறித்த ஆய்வுகள் நடத்தினார். இவர் பணியாற்றிய இசுக்காட்லாந்தில் உள்ள கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தை ஒட்டி ஓடும் கெல்வின் என்னும் பெயருடைய ஆற்றின் அடிப்படையில் இவருக்கு இலார்டு கெல்வின் எனப் பட்டம் சூட்டப்பட்டது. தனிமுழு வெப்பநிலை அளவீட்டு முறையில், இவர் நினைவாகக் கெல்வின் என்பது வெப்ப அலகாகப் பயன்படுகின்றது. அரிய சாதனைகள் புரிந்த கெல்வின் டிசம்பர் 17, 1907ல் தனது 83வது அகவையில் லார்க்ஸ்சில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். இவரைப் பெருமைப் படுத்தும் விதமாக இவருடைய உடல் சர் ஐசக்கு நியூட்டனின் சமாதி அருகே புதைக்கப்பட்டது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முதல் தொலைநோக்கி கண்டறிந்த, உலகப் புகழ்பெற்ற வானியல் நிபுணர் டேவிட் ரிட்டன்ஹவுஸ் நினைவு தினம் இன்று (ஜூன் 26, 1796).
டேவிட் ரிட்டன்ஹவுஸ் (David Rittenhouse) ஏப்ரல் 8, 1732ல் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்திலுள்ள பேப்பர் மில் ரன் என்னுமிடத்தில், ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். குடும்ப வறுமையின் காரணமாக முறையாக பள்ளிக்கு செல்ல இயலாத ரிட்டன்ஹவுஸ். கணிதம், இயந்திரங்கள் குறித்து டேவிட் வில்லியம்ஸ் மாமாவிடம் கற்றறிந்தார். அவர் தன்னிடம் இருந்த சில புத்தகங்கள், மாற்றும் பல கருவிகள் அடங்கிய பெட்டியையும் கொடுத்தார். தனது கைத்தொழிலான மரவேலைகளை செய்துகொண்டே அளவற்ற கணிதப் புத்தகங்கள் படித்தவர் நியூட்டனின் ‘பிரின்சிபியா’ நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளிட்ட அறிவியல் நூல்களைப் படித்து ஆழமான இயற்பியல் அறிவையும், கோட்பாடு மற்றும் கண்காணிப்பு வானியலில் அபாரத் திறனையும் வளர்த்துக்கொண்டார்.
அறிவுக்கூர்மை மிக்க டேவிட், நீர் ஆலையின் மாதிரி ஒன்றை 8 வயதில் வடிவமைத்தார். மேலும், 17 வயதில், முதலில் ஒரு மர கடிகாரத்தையும், பின்னர் ஒரு பித்தளை கடிகாரத்தையும் உருவாக்கினார். தந்தையின் வயலில் ஒரு ஆய்வுகூடத்தை தொடங்கி. அங்கு உயரமான, துல்லியமாக நேரம் காட்டும் கடிகாரங்களை தயாரித்து விற்றார். ஜெனித் சுற்றுக்கண்டம் (Zenith Sector), தொலைநோக்கி (Telescope) போன்ற வானியல் ஆய்வுகளுக்கான கருவிகளை உருவாக்கினார். அளவுருக்கள் (Parameters), உலோக உறை வெப்பமானி (Metallik Pocket Thermometer), ஹைக்ரோமீட்டர் (Haikrometers) உள்ளிட்ட கருவிகளையும் தயாரித்தார். இவை 1770-களில் பெரும் வரவேற்பைப் பெற்று, அதிகம் விற்பனையாகின. பல்வேறு வகையான திசையறி கருவிகளை (Compass) தயாரித்த ரிட்டன்ஹவுசு, வெர்னியர் கண்காணிப்பு திசையறி கருவியையும் (Vernier Tracking Compass) உருவாக்கியவர் என கூறப்படுகிறது. தேசிய பொது நிலங்களை கணக்கெடுக்க, இவரது பெயரிலான ‘ரிட்டன்ஹவுஸ் மேம்படுத்தப்பட்ட திசையறி கருவிகளை’ அரசு பயன் படுத்தியது. இதன் காரணமாக டேவிட் ரிட்டன்ஹவுசை பிலடெல்பியா நகர சர்வேயராக 1774ல் நியமிக் கப்பட்டார்.
வானியல் கண்காணிப்புக்காக அமெரிக்க தத்துவவியல் சங்கம் (American Philosophical Society) ஒருசில இடங்களில் கண்காணிப்பு நிலையங்களை அமைத்தன. இவற்றில் ஒன்று இவரது வீட்டில் அமைக்கப்பட்டது. இந்நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட பல கருவிகளை இவர் தனக்காகவும், மற்ற கண்காணிப்பாளர்களுக்காகவும் தயாரித்தார். இதற்காக இவர் தயாரித்த தொலைநோக்கிதான் அமெரிக்காவின் முதல் தொலைநோக்கி என்று கருதப்படுகிறது. டேவிட் ரிட்டன்ஹவுஸ் மற்ற நடுவங்களிலும் வானியல் கண்காணிப்புகளுக்காக கருவிகளைப் பொருத்த உதவி செய்தார். பிலடெல்பியாவில் 1770ல் நிரந்தரமாகக் குடியேறிய அவர், அங்கு மற்றொரு கண்காணிப்பு நிலையம் அமைத்து, தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொண்டார். புதன் (Mercury), வியாழன் (Jupiter), யுரேனசு (Uranus) ஆகிய கோள்களின் பாதைகளைக் கண்காணித்த டேவிட், விண்கற்கள், வால்நட்சத்திரங்கள், சூரிய, சந்திர கிரகணங்கள் குறித்தும் ஆராய்ந்தார். இதன்மூலம், உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார்.
‘ஆன் ஈஸி மெத்தட் ஃபார் டிடக்டிங் தி ட்ரூ டைம் ஆஃப் தி சன்ஸ் பாசிங் தி மெரிடியன்’ என்ற நூலை வெளியிட்டார். காந்த சக்தி, மின்சாரம் குறித்த சோதனைகளை 1784ல் மேற்கொண்டார். தனது முதல் கணிதக் கட்டுரையை 1792ல் வெளியிட்டார். பல்வேறு அரசுப் பதவிகள் இவரைத் தேடிவந்தன. பல்வேறு அரசுப் பதவிகள் இவரைத் தேடிவந்தன. படித்துப் பெரிய பட்டங்களைப் பெறாமலேயே தனது திறமையால் பல சாதனை களை நிகழ்த்தியவரும், 18-ம் நூற்றாண்டின் முன்னணி வானிய லாளருமான டேவிட் ரிட்டன்ஹவுஸ் ஜூன் 26, 1796ல் தனது 64வது அகவையில் பென்சில்வேனியா அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
You must be logged in to post a comment.