ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரகத்தில் அனைத்து துறைஅலுவலர்கள், சமுதாய தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியர் சந்திர கலா தலைமையில் சட்டம், ஒழுங்குமுன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் எடுத்த முடிவுகளின் படி,தற்போது நிலவி வரும் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பு நடவடிக்கை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், மக்கள் நலன் கருதி, பரமக்குடி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் ராமநாதபுரம், பிற
மாவட்டங்களைச் சேர்ந்தோர் செப். 11 ல் அஞ்சலி செலுத்த வர அனுமதி இல்லை. பதிவு பெற்றஅரசியல் கட்சி தலைவர்கள் (5 பேருக்கு மிகாமல்) கலெக்டரிடம் முன் அனுமதி, வாகன முன் அனுமதி பெற்று அரசின் வழிகாட்டல் நெறிமுறைகளை பின்பற்றி, சமூக இடைவெளி பின்பற்றி மரியாதை செய்ய அனுமதிக்கப்படுகிறது. அனுமதி பெற விரும்பும்அரசியல் கட்சித் தலைவர்கள் செப்.7க்குள் ராமநாதபுரம் கலெக்டரிடம் நேரில் அல்லது மின்னஞ்சல்
( [email protected] ) மூலம் விண்ணப்பிக்கலாம். கலெக்டரின் முன் அனுமதி பெற்று அஞ்சலி செலுத்த வருவோர் தங்கள் சொந்தவாகனங்களில் மட்டும் வர வேண்டும். வாகன மேற்கூரையில் பயணிக்கக்கூடாது. அஞ்சலி செலுத்த வரும் வழித்தடங்களில் வெடி போடக்கூடாது. ஒலிபெருக்கிகள் ஏதும் பொருத்தி செல்லக்கூடாது சாதி, மத உணர்வுகளை தூண்டும் வாசக பேனர்களை கட்டி வரவோ, கோஷம் எழுப்பவோ கூடாது.அஞ்சலி செலுத்த அனுமதி பெற்றவர்கள்
அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடம் வந்து செல்வதுடன், வரும் வழியில்போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் எந்த இடங்களிலும் வாகனங்கள் நிறுத்தக்கூடாது.கலெக்டரின் அனுமதி பெற்று அஞ்சலி செலுத்த வரும் தலைவர்கள் அவர்களுக்குஒதுக்கிய நேரத்தில் மட்டும் வந்து செல்ல வேண்டும். சமுதாய கொடி ஏற்றுதல், கலை நிகழ்ச்சி ,விளையாட்டு போட்டிகள் நடத்துதல், ஜோதி ஓட்டம், முளைப்பாரி, பால்குடம் எடுத்தல்,
அலங்கார ஊர்தி அணிவகுப்பு, மாட்டு வண்டியில் வருதல், தலைவர்கள் போன்று வேடமணிந்து வருதல், ஊர்வலமாக வருதல் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை.உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ப்ளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்க அனுமதி இல்லை. கலெக்டரின் அனுமதி பெற்று அஞ்சலி செலுத்த வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளிகடைபிடித்து, அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மரியாதை செலுத்த வேண்டும்.இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு கடந்த ஆண்டைப்போன்றே, நடப்பாண்டு விழா அமைதியானமுறையில் நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
செய்திகள்
உசிலம்பட்டியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 கிலோ கஞ்சாவை போலிசார் பறிமுதல்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலிசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலிசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.அப்பொழுது உசிலம்பட்டி அருகே கருக்கட்டான்பட்டியில் பாண்டியராஜன் (44) என்பவரது வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர்.அவரிடமிருந்து 22கிலோ பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக பாண்டியராஜனை கைது செய்த உசிலம்பட்டி நகர் காவல்நிலையப் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஹிந்துக்களின் முக்கிய திருவிழாவான விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் உள்ளிட்டவைகளுக்கு தி.மு.க., அரசு தடை விதித்தது. கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம்.
மீனாட்சி அம்மன் கோயில், இம்மையில் நன்மை தருவார் கோயில், நேதாஜி ரோடு தண்டாயுதபாணி கோயில், கோச்சடை முத்தையா சுவாமி கோயில் உள்ளிட்ட இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அழகர்சாமி தலைமை வகித்தார். செயலாளர் சதீஷ்குமார், பொறுப்பாளர் காக்குவீரன், மாவட்ட துணைத் தலைவர் மாணிக்க மூர்த்தி, மேற்குபகுதி தலைவர் சிவமூர்த்தி, சுதேசி இயக்க நிர்வாகி ஆதிசேஷன் உட்பட பலர் பங்கேற்றனர்.பிரதமருக்கு கடிதம்:பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் ஜெயசிங் பிரதமர் மோடிக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: செப்., 10 விநாயகர் சதுர்த்தி விழா ஜாதி, மத வேறுபாடின்றி ஒற்றுமையாக அனைவரும் சேர்ந்து கொண்டாடவுள்ளனர். கொரோனா ஊரடங்கை காட்டி விநாயகர் சதுர்த்தி கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது.கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் டாஸ்மாக், வாரசந்தை உள்ளிட்டவை செயல்படும் போது அரசியல் உள்நோக்கத்துடன் இந்த விழாவிற்கு தடை விதிக்கிறது. ஹிந்துக்களின் மத உணர்வுடன் அரசு விளையாடுகிறது. எனவே தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார்.எழுமலை : எழுமலை விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி வழங்க கோரி ஹிந்து முன்னணி நிர்வாகிகள் வேண்டுதல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தெற்கு மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய தலைவர் லட்சுமணன், பேரூராட்சி தலைவர் சின்னசாமி, பா.ஜ., ஒன்றிய தலைவர் மருதக்காளை பங்கேற்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாநகரில் வியாபாரிகள் மற்றும் தொழில் நிறுவன பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், மதுரை மருத்துவக் கல்லூரியில் தடுப்பூசி முகாம் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக ஆணையர் கார்த்திகேயன் கூறியுள்ளார். 100 நபர்களுக்கு மேல் தடுப்பூசி தேவைப்படும் நிறுவனங்கள், மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ளலாம் என்றும் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொகுப்பு ஊதிய பணியாளர்களுக்கு சம்பள உயர்வு, பணி நிரந்தரம் வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம்..
மதுரை மாவட்டம்காமராஜர் பல்கலைகழகத்தில் பணி புரியும் தற்காலிக, தொகுப்பு ஊதிய பணியாளர்களுக்கு சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள துணை வேந்தர் அலுவலம் முன்பு இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பத்து வருடங்களுக்கு மேலாக 243 பேர் தொகுப்பூதிய அலுவலக பணியாளர்களாகவும், பணியாற்றி வருகின்றனர் இவர்களுக்கு கடந்த மாதம் ஆகஸ்ட் 4 ம்தேதி நடந்த , சிண்டிகேட் கூட்டத்தில் சம்பளம் உயர்வு வழங்க பரிந்துரை செய்யப்பட்டதுசிண்டிகேட் கூட்ட பரிந்துரையின் பிரகாரம் இன்று வரையில் அதற்கான எந்த வித தொகுப்பூதிய பணியாளர்களுக்கு உரிய சம்பள உயர்வு வழங்கப்படவில்லை.தற்போது தொகுப்பூதிய பணியாளர்களுக்கு இது முற்றிலும் மறுக்க படுவது போல உள்ளது.தொகுப்பூதிய தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க கோரி ,தற்போது தமிழகத்தின் நல்லாட்சி புரியும் திமுகவின் தமி அரசின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், இதனை முறை யான முறை நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு, பணி நிரந்தரம், ஊதிய வழங்க பரிந்துரை செய்து உத்தரவு ஈட வேண்டுகிறோம் என்றனர், தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகம் முன்பு தொகுப்பூதிய பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தால் சற்று காமராஜர் பல்கலை வளாகத்தில் பரபரப்பு நிலவியது,, பல்கலை பதிவாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் என தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விருதுநகர் நான்கு வழி சாலையில் ,காரும் , சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து ஒருவர் பலி.
மதுரை மாவட்டம் திருமங்கலம் – விருதுநகர் நான்கு வழிச்சாலையில், மேலக்கோட்டை என்ற இடத்தில் விருதுநகரில் இருந்து மதுரை நோக்கி வந்த காரும் , மதுரையிலிருந்து விருதுநகர் நோக்கிச் சென்ற சரக்கு வேனும், நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் காரை ஓட்டி வந்த திருமங்கலத்தைச் சேர்ந்த சீனிவாஸ் (48) என்பவர் உடல் நசுங்கி பலியானார்.சரக்கு வேனில் வந்த மதுரையைச் சேர்ந்த ஜோதிராமன்(42) என்பவருக்கு கால் முறிவு ஏற்பட்டு பலத்த காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .திருமங்கலம் தீயணைப்புத்துறையினர் , உயிரிழந்த சீனிவாஸ் – உடலை 30 நிமிடங்கள் போராடி மீட்டு , திருமங்கலம் அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.( விருதுநகரில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் டயர் வெடித்ததால், நிலைதடுமாறி தடுப்பு சுவற்றில் ஏறி குறுக்கே பாய்ந்து , சரக்கு வேனில் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளன.இச்சம்பவம் குறித்து திருமங்கலம் தாலுகா போலிசார் விசரனை.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அய்யனார் கோவில் மற்றும் ஆற்றுப் பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளை தனியார் கல்லூரி மாணவர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள அய்யனார் கோவில் பகுதியில் ஆற்றில் தண்ணீர் வரும்போது சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் இந்த ஆற்றில் குளித்து மகிழ்வது வழக்கம். அதேபோல் அய்யனார் கோவிலுக்கும் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக கெடா வெட்டி வழிபடுவதும் வழக்கமாக உள்ளது. இது போன்ற நிகழ்ச்சியில் வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் துணிகளை கொண்டு வந்து விட்டுச் செல்வதால் இதை இப்பகுதியில் தண்ணீர் குடிக்க வரும் வனவிலங்குகள் உண்பதால் உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுக்கும் விதமாக ராஜபாளையம் ரோட்டரி கிளப் மற்றும் கல்லூரி என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்கள் இணைந்து அப்பகுதியில் உள்ள பழைய துணிகள் பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவற்றை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதில் சுமார் 500 கிலோ வரை உள்ள பிளாஸ்டிக் மற்றும் பழைய துணிகளை அகற்றினர்..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராஜபாளையம் பகுதியில் செல்போன் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது .
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் இருசக்கர வாகனம் வீடுகளில் செல்போன் திருட்டு என பல்வேறு புகார்கள் இராஜபாளையம் உட்கோட்ட காவல் நிலையங்களுக்கு வந்தன.இதைத்தொடர்ந்து இராஜபாளையம் துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில் காவல்துறையினர் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தினர்இரவு ரோந்து பணியில் சார்பு ஆய்வாளர் சக்திகுமார் .சிறப்பு ஆய்வாளர் ரவி தலைமை காவலர்கள் .கோபால் .இளங்கோவன் காவலர்கள் மதன் .ரவி .ராஜ்குமார் ஆகிய போலீசார் ரோந்து பணியில் போது சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த இராஜபாளையம் துரைச்சாமிபுரம் பகுதியை சேர்ந்த குமார் மகன் அருண்குமார் வயது 20. இராஜபாளையம் சீனிவாசன் புதுத் தெருவைச் சேர்ந்த முருகானந்தம் மகன் சுந்தர்ராஜ் வயது 20 .ஆகியோரை பிடித்து விசாரணை செய்ததில் இவர்களுடன் அருப்புகோட்டை மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த அழகர் மகன் சந்துரு பாண்டியன் ஆகிய மூன்று பேர் சேர்ந்து விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் . அருப்பு கோட்டை .தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி என பல பகுதிகளில் செல்போன் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட தெரியவந்தது.(சென்னை ஆவடி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் பள்ளியில் இருந்து தப்பித்து வந்தவன் சந்துருபாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது)மேலும் தீவிர விசாரணை செய்து இவர்களிடமிருந்து இருசக்கர வாகனத்தில் ஒன்றை அருப்புக்கோட்டை காவல் நிலைத்தில் ஒப்படைத்துள்ளனர் மேலும் கோவில்பட்டி பகுதியில் திருடப்பட்ட இருசக்கர வாகனங்களும் அங்குள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.சென்னை ஆவடி சீர்திருத்தப்பள்ளியில் தப்பி வந்த சந்துருபாண்டியன் சென்னை ஆவடி காவலர்களிடம் ஒப்படைந்தனர் .அருண்குமார் சுந்தர்ராஜ் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த காவல் துறையினரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோகரன் பாராட்டினார்..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராஜசிங்கமங்கலம் மதினா வீதி பின்புறம் உள்ள வாய்க்காலில் கருவேல மரங்களை அகற்றி தர கோரிக்கை.
இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்கலம் மதினா வீதி பின்புறம் உள்ள வாய்க்காலில் கருவேல மரங்களை அகற்றி தர பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பால் அருகில் உள்ள வீடுகளில் பாம்புகள் மற்றும் சில பூச்சிகள் வருகிறது. மேலும் குப்பைகள் சூழ்ந்து சுகாதாரக் கேடாக காட்சியளிக்கிறது.பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஐன்ஸ்டீன் வளையங்களை முதன்முதலில் கண்டுபிடித்த அமெரிக்க வானியற்பியலாளர், ஜேக்குவிலைன் எவிட் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 4, 1958).
ஜேக்குவிலைன் எவிட் (Jacqueline Hewitt) செப்டம்பர் 4, 1958ல் வாசிங்டன் டி.சி யில் பிறந்தார். இவரது தந்தையார் வாரன், ஓய்வுபெற்ற மாநிலச் சட்ட்த்துறையின் பன்னாட்டுச் சட்ட வல்லுனர் ஆவார். இவரது தாயார் கெர்ட்ரூட் எவிட் ஆவார். இவர் பிரின் மாவெர் கல்லௌஉரியில் பயின்று 1980ல் பொருளியலில் இளநிலை பட்டம் பெற்றார். பீன்னர் இவர் ஏவர்போர்டு கல்லூரியில் வானியல் வகுப்பொன்றுக்குச் சென்றுள்ளார். இவ்வகுப்பு இவருக்கு அறிவியலில் ஆர்வங்கொள்ள செய்துள்ளது. இவர் பட்டமேற் படிப்பை மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் பயின்றார். அப்போது இவர் ஈர்ப்பு வில்லைகளை மீப்பெரு அணி கதிரியல் தொலைநோக்கி வழியாக ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஈர்ப்பலைகள் பேரளவு கதிரியல் அலைகளை வெளியிடுவதால் கதிரியல் தொலைநோக்கியை ஆய்வில் பயன்படுத்த விரும்பியுள்ளார். இந்த ஆய்வுக்கு இவ்வகத் தொலைநோக்கி ஒளியியல் தொலைநோக்கியை விட சால சிறந்ததாகும். இவர் தன் முனைவர் பட்ட்த்தை 1986ல் இயற்பியலில் பெற்றார்.
ஜேக்குவிலைன் எவிட் 1986 முதல் 1988 வரையில் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் மிகுநீள அடிக்கோட்டு குறுக்கீட்டளவி அணியின் பகுதியாக முதுமுனைவர் ஆய்வுநல்கை வழங்கப்பட்டார். இவர் தனது பட்டமேற்படிப்பு ஆய்வின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்யும்போது தன் கணினித் திரையில் ஒரு வளையத்தைக் கண்டார். இது இலியோ விண்மீன்குழுவில் அமைந்திருந்தது. இதுவே முதன்முதலாக்க் கண்டறிந்த ஐன்ஸ்டீன் வளையம் ஆகும். இந்த ஆய்வுக்குப் பிறகு பல ஐன்ஸ்டீன் வளையங்கள் கண்டறியப்பட்டன. இவை முன்பு வானியலாளர்கள் கருதியதை விட புடவியில் மிகப் பரவலாக அமைதல் அறியப்பட்டது. இவை புடவியின் அளவையும் இறுதி கதியையும் அறிய உதவுவதால், ஐன்ஸ்டீன் வளையங்கள் மிக முதன்மை வாய்ந்தனவாகும்.
ஜேக்குவிலைன் எவிட் 1988ல் பிரின்சுடன் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் துறையில் அறிவியல் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்தார். அங்கு ஒராண்டு ஆய்வுக்குப் பின்னர் உதவி இயற்பியல் பேராசிரியராக மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்துக்குத் திரும்பி வந்து பணியாற்றி 1989ல் இருந்து முழுநேரப் பேராசிரியராக இருந்துவருகிறார். இவர் அங்கு மின்னணுவியல் துறை கதிர்வானியல் குழு ஆய்வகத்தின் முதன்மை ஆய்வாளராகவும் உள்ளார். இவர் 2002ல் இருந்து மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தின் காவ்லி வானியற்பியல், விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநராகவும் உள்ளார்.
எவிட் 1990ல் உலூசைல் பேக்கார்டு அறக்கட்டளையின் ஆய்வுநல்கையைப் பெற்றார். இவரது ஈர்ப்பு வில்லைகளின் பணிக்காக மசாசூசட் சார்ந்த இவரது ஒருசாலை பணியாளர்கள் இவருக்கு 1995-1996 ஆண்டுக்கான அரோல்டு யூகின் எட்கெர்டன் விருது பெற பெயரளித்தனர். இவர் 1995ல் கதிர்வானியல் பணிக்காக மரியா கோயபர்ட் மேயர் விருதைப் பெற்றார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் குருபூஜை மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாக்கள் குறித்து பகுதி மக்களுடன் காவல்துறையினர் ஆலோசனை கூட்டம்…
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் திருமண மண்டபத்தில் கீழக்கரை காவல் துணை கண்காணிப்பாளர் சுபாஷ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
கூட்டத்தில் பொதுமக்களிடம் விநாயகர் சதுர்த்தி விழா, குருபூஜை விழ உள்ளிட்ட விழாக்கள் சம்பந்தமாக பொதுமக்களிடம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து காவல்துறையினர் எடுத்துரைத்தனர்.
குறிப்பாக விநாயகர் சதுர்த்தி பூஜையை அனைவரும் அவரவர்கள் வீட்டில் வைத்து வழிபாடு நடத்திக் கொள்ளுமாறும் பொது இடங்களில் கூட வேண்டாம் என்றும், தடையை மீறி பொது இடங்களில் கூடினால் சட்டப்படி காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.
மேலும் பண்டிகை காலங்கள் ஆரம்பித்துள்ளதால் பொருட்கள் வாங்க வெளிவரும் நபர்கள் அனைவரும் முறையான முகக் கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டனர். இக்கூட்டத்தில் கீழக்கரை பகுதி மைக்செட் உரிமையாளர்கள், பிளக்ஸ் பேனர் உரிமையாளர்கள் அப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பிளக்ஸ் பேனர் அடிப்பது, தெருக்களில் மைக்செட் கட்டுவதை தவிர்ப்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கீழக்கரை ஆய்வாளர் பாலமுரளி, ஏர்வாடி ஆய்வாளர் கஜேந்திரன், சிக்கல் ஆய்வாளர் முருகதாசன், கீழக்கரை சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கலசபாக்கம் அருகே மக்களை தேடி மருத்துவம் சார்பில் மூலிகை தாவர கன்றுகள் வழங்கும் விழா
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மேல்வில்வராயநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களை தேடி இந்திய மருத்துவம் சார்பில் மூலிகை தாவர கன்றுகள் வழங்கும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.இவ்விழாவில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் கஸ்தூரி ஆலோசனைப்படி. மேல்வில்வராயநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஹோமியோபதி மருத்துவர் கே. பார்த்திபன் தலைமையில் பொதுமக்களுக்கு மூலிகை தாவர கன்றுகள் வழங்கியும் கொரோனா தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள அனைத்து பொதுமக்களும் வெளியே செல்லும் போது முககவசம் அணிய வேண்டும் என்றும் அனைத்து பொது மக்களுக்கு முகக்கவசம் வழங்கினார் நோய் எதிர்ப்பு சக்தி உடைய ஹோமியோபதி மருந்து ஆர்சனிகம் ஆல்பம் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் மருத்துவ அலுவலர் பார்த்திபன், மேலும் இந்நிகழ்ச்சியில் மேல்வில்வராயநல்லூர் மருத்துவமனையில் மூலிகை மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது பின்னர் பொதுமக்களுக்கு ஹோமியோபதி மருத்துவத்தை பற்றி எடுத்துரைத்தார் மேலும் உடன் சுகாதார ஆய்வாளர் நடராஜன், சுகாதார பணியாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சி சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து அனைவரும் பங்கேற்றனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வெறி நாய்களை விரைந்து அப்புறப்படுத்த வேண்டும்; கடையநல்லூர் நகராட்சிக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை..
கடையநல்லூர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வெறிநாய்களை விரைந்து அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எஸ்டிபிஐ கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ரஹ்மானியபுரம் மேற்கு பகுதியில் வெறி நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்நிலையில், 02.09.21 வியாழக்கிழமை மதியம் 3 மணியளவில் 7 வயது சிறுவனை வெறிநாய்களின் கூட்டம் திடீரென கடித்து காட்டு பகுதிக்கு இழுந்து சென்றுள்ளது. அங்கிருந்த மாடு மேய்க்கும் நபர் அந்த வெறி நாய்களின் கூட்டத்தை விரட்டியடித்து சிறுவனை காப்பாற்றினார். பின்பு கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு மேல் சிகிச்சைக்கு தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வெறிநாய்களின் தொல்லையால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே பொது மக்கள் நலன் கருதி வெறி நாய்களை அப்புறபடுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகத்தை SDPI கட்சி ரஹ்மானியபுரம் கிளை வலியுறுத்தியுள்ளது. மேலும் பலமுறை எஸ்டிபிஐ சார்பில் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இந்நிலை தொடரும் பட்சத்தில் விரைவில் வெறி நாய்களை அப்புறப்படுத்த கோரி எஸ்டிபிஐ கட்சி சார்பில் நகராட்சியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என கடையநல்லூர் எஸ்டிபிஐ ரஹ்மானியபுரம் கிளை அறிவித்துள்ளது.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அரசு மருத்துவமனையில் லிப்ட்டில் சிக்கிய நோயாளிகள். பத்திரமாக மீட்ட தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரசவ வார்டில் நேற்று மாலை சுமார் 13 பேர் லிப்டில் பயணித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக லிப்ட் பழுதாகி கதவை திறக்க முடியாமல் போனது. இதனால் பயந்துபோன நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களும் உடனடியாக தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தல்லாகுளம் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி லிப்ட்டில் சிக்கிய 13 பேரை பத்திரமாக மீட்டனர் .இதனால் அரசு மருத்துவமனையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு. லிப்ட் நின்றது காரணம் குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். எனினும் தீயணைப்பு துறையில் துரிதமான செயல்பாட்டினால் 13 பேர் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் மீட்கப்பட்டனர்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
குற்றச் செயல்கள் குறித்து தென்காசி காவல் ஆய்வாளர் இளைஞர்களிடேயே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தென்காசி மாவட்டம், தென்காசி காவல் எல்லைக்குட்பட்ட வாய்க்கால் பாலம் பகுதியில் காவல் ஆய்வாளர் பாலமுருகன் அப்பகுதியிலுள்ள இளைஞர்களிடம் காவல்துறை உங்கள் நண்பன் எனவும், உங்கள் நண்பனுக்கு உதவும் விதமாக குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு இளைஞர்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், உங்கள் பகுதியில் யாரேனும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டாலோ அல்லது சந்தேகம் பாடும்படி யாரேனும் சுற்றி திரிந்தாலும் தயங்காமல் காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், இளைஞர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே நல்லுணர்வை ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு கொரோனா குறித்து தென்காசி மாவட்ட காவல்துறையினர் தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.இதே போல் செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சார்பு ஆய்வாளர் கோபால் தலைமையிலான காவல்துறையினர் கொரோனா மற்றும் முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்தி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருநெல்வேலி அரசு அருகாட்சியகத்தில் நெல்லையின் வரலாற்றை விளக்கும் வகையில் “நெல்லை தின விழா” நிகழ்ச்சி நடைபெற்றது. ஆங்கிலேயர்களால் திருநெல்வேலி ஜில்லா 1791, செப்டம்பர் 1 ஆம் தேதி துவங்கப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகமும் சென்னை வாழ் நெல்லை மக்கள் நல சங்கமும் இணைந்து அரசு அருங்காட்சியகத்தின் திறந்த வெளி கலையரங்கத்தில் சிறப்பான வரலாற்று நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த விழாவிற்கு திருநெல்வேலி காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஐபிஎஸ் தலைமை தாங்கி உரையாற்றினார். நெல்லை அருங்காட்சியகத்தின் மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி முன்னிலை வகித்து உரையாற்றினார். விழாவில் வரலாற்றில் நெல்லை என்ற தலைப்பில் பேச்சரங்கம் நடைபெற்றது. அதில் எழுத்தாளரும், மாவட்ட கலை அமைப்பின் துணைச் செயலாளருமான இரா. நாறும்பூநாதன் பங்கேற்று நெல்லைச் சீமையின் வரலாற்று நிகழ்வுகளைக் கண் முன் காட்டுவது போல் விளக்கி பேசினார்.
அதில் குளோரிந்தா சர்ச், ரேனியஸ் ஐயர், கோபாலசுவாமி வரலாறு, பாளையங்கோட்டையின் கோட்டை வரலாறு என ஊரின் ஒவ்வொரு மூலையைப் பற்றிய வரலாறுகளை சுவை பட எடுத்துரைத்தார். அடுத்ததாக பேசிய எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான முத்தாலாங்குறிச்சி காமராசு பொதிகை மலை அனுபவங்கள், பேக்லாண்டு, மடப்பைய போன்ற வட்டார வழக்கு சொற்களின் உண்மை வரலாறுகள், ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் போன்ற பல்வேறு வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்தார். நிகழ்ச்சியில் பங்கு பெற்ற சிறப்பு விருந்தினர்களான முனைவர். கட்டளை கைலாசம், எழுத்தாளர். எம். எம். தீன், அக்சஸ் ஆனந்த், ஹரி பிரதான், அஜித் சாய் ஆகியோருக்கு காவல் கண்காணிப்பாளர் நினைவுப் பரிசை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் சைமன் ஜெயக்குமார் மற்றும் செயலாளர் பொறியாளர் சங்கர் மணி ஆகியோர் செய்திருந்தனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழை நியூஸ் செய்தி தளத்தில் வெளியிட்ட சில மணி நேரத்திலேயே கம்பி வேலி அகற்றிய அதிரடி தாசில்தார்.
மதுரை மாவட்டம் மேற்கு தாலுகாவுக்கு உட்பட்ட கீழ மாத்தூர் கிராமத்திலுள்ள புல்லூத்து பிரிவு அஷ்டலட்சுமி நகர் கீழமாத்தூர் கண்மாயில் இருந்து விவசாய நிலத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் வாய்க்காலை ஒரு சிலர் ஆக்கிரமித்து கம்பி வேலிகள் மற்றும் தகரம் கொண்டு அடைத்து வைத்திருந்தனர் இதுகுறித்து நமது கிழை நியூஸ் இணையதள செய்தி தளத்தில் நேற்று செய்தியாக வெளியிட்டு இருந்தோம் இதன் அடிப்படையில் அதிரடியாய் களமிறங்கிய மதுரை மேற்கு ஒன்றிய தாசில்தார் கிருஷ்ணன் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு பகுதிகளை முற்றிலுமாக அகற்றினர் மேலும் கண்மாயில் இருந்து விவசாய நிலத்திற்கு நீர் செல்லும் வகையில் வாய்க்காலை தூர் வார பொதுப்பணித் துறைக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி வைத்துள்ளார் அதிரடியாக களம் இறங்கிய மேற்கு ஒன்றிய அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் வெகுவாக பாராட்டினர் மேலும் செய்தி வெளியீடு ஒரே நாளில் தீர்வு காண கீழை நியூஸ் இணையதள செய்தி தளத்திற்கும் பொதுமக்கள் நன்றியைத் தெரிவித்தனர் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஒத்தக்கடையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மன்னார் வளைகுடா மீன்கள் 1 ரூபாய்க்கு 1 கிலோ கடல் மீன்திறப்பு விழா சலுகை.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக அமைந்துள்ள மன்னார் வளைகுடா மீன்கள் விற்பனையகம்.இங்கு மீன்கள் கடலில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதுபுதிதாக துவக்கப்பட்டுள்ள இந்த மீன்கள் விற்பனையகத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உரிமையாளரும் வழக்கறிஞருமான திருமுருகன் புது யுக்தியை எடுத்துள்ளார்.அதாவது பகுதியாக இன்று ஒரு நாள் மட்டும் முதலில் வரும் 100 வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிலோ எந்த வகையான மீன்கள் வாங்கினாலும் ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் என்று அறிவித்துள்ளார்,அதன்படி காலையில் திறக்கப்பட்ட மீன் கடையில் சுற்றுப்புற பகுதியில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் குவிந்தனர்,உரிமையாளரும் வழக்கறிஞருமான திருமுருகன் தலைமையில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டஇயக்குனர் கிட்டு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விநாயகர் சதுர்த்தி விழா நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை ஆர்ப்பாட்டம் .
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சொக்கர் கோவில் வளாகம் முன்பு நகர இந்து முன்னணி தலைவர் சஞ்சீவி தலைமையில் இந்து முன்னணி இயக்கத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த தமிழக அரசு உத்தரவு வழங்க வேண்டும் .தமிழக அரசு தடை விதித்துள்ளதால் இந்துக்கள் மத்தியில் தமிழக அரசு மீது அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது ஆகையால் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை நடத்த அனுமதி அளிக்க வேண்டும்என சொக்கர் மீனாட்சி அம்மனை கூட்டு வழிபட்டு செய்து தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் எனவும் .விநாயகர் சதுர்த்தி திருவிழாவிற்கு அனுமதி வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி கூட்டு வழிபாட்டில் ஈடுபட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
போலி பத்திரம் குறித்த புது சட்டம் வரலாறு காணாத மாற்றம். -வணிகவரித்துறை பதிவுத்துறைஅமைச்சர் மூர்த்தி பேட்டி.
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்:போலி பத்திரம் பதிவு புதிய சட்டம் குறித்த கேள்விக்கு:போலி பத்திரம் தயாரிப்பவர்களுக்கு 3 ஆண்டு வரை சிறை தண்டனை. மற்றும் பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரத்தை பத்திரப்பதிவு துறையிலேயே செய்வதற்கு அமல் படுத்தியுள்ளோம்.மேலும் அதற்கு உடந்தையாக இருப்பவர்களுக்கு 7 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும். கடந்த ஆட்சியில்செய்யப்பட்ட போலி பத்திரங்கள், ஆள்மாறாட்டங்கள், அரசுக்கு சொந்தமான நிலங்கள், வக்பு வாரியம் என போலியாக பதிவு செய்துள்ளார்கள் என்பதால் புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.கடந்த வாரம் வரை புதிதாக கடன் பெறுபவர்கள் நேரில் சென்று பதிய வேண்டும் ஆனால் தற்போது ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டம் எப்போது முடிக்கப்படும் என்ற கேள்விக்கு:தற்போதுள்ள அமைச்சர் அதை ஆய்வு செய்து விரைவாக முடிக்க சொல்லியுள்ளார்.பத்திரப் பதிவுத் துறையில் இது வரலாறு காணாத மாற்றம். இதுவரை புதிதாக சொத்துக்கள் வாங்கியவர்கள், சொத்துக்களை விட்டு வெளிநாட்டில் தங்கியிருப்பவர்களை ஏமாற்றும் தவறுகள் இனிமேல் நடைபெறாமல் இருப்பதற்கு புதிய சட்டத்தை தாக்கல் செய்துள்ளோம். இந்த புதிய சட்டத்தை பொருத்தவரை ஆளுநர், ஜனாதிபதி வரை சென்று இரண்டு மூன்று மாதங்களில் அமலுக்கு வரும் என்றார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.