திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.செங்கம் முழு நேர கிளை நூலக வாசகர் வட்ட புதிய பொறுப்பாளர்கள் கல்வியாளர் சி.மாணிக்கம் தலைமையில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி அவர்களை சந்தித்து நூலக வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தனர். பின்னர் வாசகர் வட்டத்தின் சார்பில் சட்டமன்ற உறுப்பினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். கோரிக்கைகள் பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்ததுடன் அதை நிறைவேற்ற பேரூராட்சி அலுவலருக்கு பரிந்துரைத்தார் இச்சந்திப்பில் வாசகர் வட்ட தலைவர் இரா.கிருஷ்ணகுமார், துணைத்தலைவர்கள் மணிமாறன், கி.கவியரசன், பொருளாளர் ஆசை முஷிர் அகமது, ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் சுந்தர விநாயகம் கௌரவ தலைவர் முருகமணி, கௌரவ குழு ஆலோசகர் அப்துல் காதர், நல்நூலகர் கு.காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Category:
செய்திகள்
சென்னையில் டால்பின் பார்க் இந்திய சிறு பத்திரிகையாளர்களின் தமிழ்நாடு நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா, அகில இந்திய சிறு பத்திரிகையாளர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில அலுவலக திறப்பு விழா, மக்கள் விசாரணை பத்திரிகையின் பத்தாம் ஆண்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் அதில் இந்திய சிறு பத்திரிக்கையாளர்களின் சங்கத்தின் தேசிய தலைவர் சிவசங்கர் திரிபாதி, அகில இந்திய சிறு பத்திரிக்கையாளர் சங்கத்தின் தேசிய செயலர் மற்றும் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் உறுப்பினர் ஆர்த்தி திரிபாதி , அகில இந்திய சிறு பத்திரிக்கையாளர் சங்கத்தின் தென்னிந்தியத் தலைவர் ஸ்ரீராம் ஜி அவர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்கள். விழாவில், அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தேசிய தலைவர் திரிபாதி ஜி சார்பாக அவரது ஆங்கில உரையை தற்போதைய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர், ஆர்த்தி திரிபாதி வாசித்தார்கள்.
அவரது உரையின் முக்கிய சாராம்சம்.1982 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அகில இந்திய சிறு பத்திரிக்கையாளர் சங்கம் இன்றளவும் அகில இந்திய சிறு பத்திரிக்கையாளர்களை பாதுகாக்கும் பொருட்டு தொடர்ச்சியான பல ஆலோசனைகளை அரசுக்கு வழங்கி சிறு பத்திரிக்கையாளர்களை பாதுகாத்து வருகிறது. இச்சங்கமானது சிறு பத்திரிகையாளர்களுக்கு அவ்வப்போது ஏற்படுகின்ற சவாலான பிரச்சினைகளை மத்திய அரசுக்கு எடுத்துரைத்து விரைவாகத் தீர்வுகளை கண்டு வருகிறது. சிறு பத்திரிகைகளின் முன்னேற்றம்தான் இச் சங்கத்தின் முக்கிய குறிக்கோளாக உள்ளது. 2015 -16 இல் மத்திய அரசின் விளம்பரத்துறையான டி.ஏ.வி.பி கொண்டுவந்த புதிய விளம்பர கொள்கை பல சிறு-குறு பத்திரிகையாளர்களின் முன்னேற்றத்தை தடுக்கின்ற வகையில் இருந்தது. இச்சங்கம் அதனை முன்னெடுத்து மத்திய அரசுக்கு எடுத்துக் கூறி, அவற்றில் சிறுபத்திரிகைகள் பாதிக்காத வகையில் தளர்வுகளைக் கொண்டுவந்துதது. கொரானா காலத்தில் இறந்த இளம்க்ஷ பத்திரிக்கையாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி ரூபாய் 10 லட்சத்திலிருந்து 50 லட்சம் ஆக உயர்த்தி தரவேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் வைத்தது. கொரானா காலத்தில் பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கக்கோரி 30 மாநில முதல்வர்களுக்கு கடிதங்கள் மற்றும் ஈமெயில் வழியாக தெரிவிக்கப்பட்டது. 2018 முதல் 2021 வரை உள்ள காலகட்டத்தில் ஏற்பட்ட காகித விலை செலவினம் அதிகரித்தது குறித்தும் அரசிடம் தெரிவிக்கப்பட்டது. 2018 முதல் 2021 வரை ஐந்து ஆண்டுகளில் பத்திரிக்கை பதிப்பிப்பதற்கான செலவினங்கள் ஆன அச்சக காகித விலை, உயர்வு. மை,வேதியியல் பொருட்கள், மின்சாரம், போக்குவரத்து, வேலையாட்கள் கூலி உயர்வு, என அனைத்து நிலைகளிலும் ஏற்பட்டுள்ள விலை ஏற்றத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது. இந்த காலகட்டங்களில் டி. ஏ. வி. பி.மூலம் கொடுக்கின்ற அரசு விளம்பர வருவாய் சிறு பத்திரிக்கைகளுக்கு பூஜ்ஜியமாக இருந்ததையும் சுட்டிக் காட்டியது, தேசிய தின விளம்பரங்களான ஜனவரி 26,ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேசிய விழா விளம்பரங்கள் சிறுபத்திரிகைகளில் வழங்கப்படவில்லை என்பதையும் குறிப்பிட்டார். ஏற்கனவே ஜி.எஸ்.டி. யால் சிறு பத்திரிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். அரசின் விளம்பர கட்டணத்தை 3 முதல் 4 மடங்கு உயர்த்த வேண்டும் என்றும் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் உறுப்பினர் கேட்டுக்கொண்டார். மேலும் டி.ஏ.வி. பி. மற்றும் ஆர். என். ஐ . ஆல் நிர்வாக ரீதியாக ஏற்படுகின்ற காலதாமதத்தை உடனடியாக போக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். விழாவில் அகில இந்திய சிறு பத்திரிக்கையாளர் சங்கத்தின் தேசிய செயலர் சிவசங்கர் திரிபாதி அவர்களும் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் உறுப்பினர் ஆர்த்தி திரிபாதி நிர்வாகிகளுக்கு அடையாள அட்டையையும், நினைவுப் பரிசையும் வழங்கி கௌரவித்ததோடு, மக்கள் விசாரணை பத்திரிக்கையில் 10 ஆண்டுகளாக சிறப்பாக பணிபுரிந்த பத்திரிகையாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்கள். விழாவிற்கு கல்வி டுடே பத்திரிகையின் ஆசிரியர், AISNA சங்கத்தின் தமிழக தலைவர் ராமசுப்ரமணியன்,முன்னிலைவகுத்தார். ,மக்கள் விசாரணை பத்திரிகையின் ஆசிரியர், சங்கத்தின் பொதுச் செயலாளர் முனைவர் ஆ.மவுரியன் தலைமை ஏற்றார்.விழாவிற்கான ஏற்பாடுகளை AISNA இன் பொருளாளர் வி.அருணாச்சலம், செயலாளர் ராமச்சந்திரன், துணை செயலாளர் ரமேஷ் குமார், பொதிகை சங்கர், மக்கள் விசாரணை பத்திரிக்கையின் இணைய ஆசிரியர் ஆ.தே.முருகையன், துணை ஆசிரியர் ஏசி குமார், அலுவலக நிர்வாகிகள் சிவசங்கர் ,சுரேஷ், சச்சின் உட்பட பலரும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில், 200க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், புகைப்பட நிபுணர்கள், வீடியோக்கிராபர்கள், செய்தியாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி அருகே மலை மீது அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அ.மேட்டுப்பட்டியில் மலை மீது பழமை வாய்ந்த மலைராமன் கோவில் உள்ளது.இங்குள்ள ஆஞ்சநேய சுவாமிக்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.முன்னதாக பட்டர் ராம்குமார் தலைமையில் பூசாரிகள் ஆஞ்சநேயருக்;கு பால் இளநீர் மஞ்சள் பன்னீரால் அபிஷேகம் செய்தனர்.பின்னர் ஆஞ்சநேயருக்கு பிடித்தமான 1008 வடைமாலை சாத்தப்படடது.பின்னர் வடை குங்குமம் பக்தர்களுக்கு பிரதாசமாக வழங்கப்பட்டது.அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.மேலும் மேட்டுப்பட்டி கிராம மக்கள் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஒமைக்ரான் வைரஸ் வேகம் அதிகரித்து வருகிறது மக்கள் கவனமுடன் இருக்க மதுரை அரசு மருத்துவமனை டீன்பேச்சு.
by mohan
written by mohan
மதுரையில் புத்தாண்டை முன்னிட்டு மதுரையின் அட்சயபாத்திரம் அமைப்பு சார்பில் நித்ய அன்னபூரணி திட்டத்தின் கீழ் உணவு வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.மதுரையின் அட்சயபாத்திரம் அமைப்பு தொடங்கி தொடர்ச்சியாக 240 நாட்களாக மதுரையில் ரோட்டோரத்தில் வசித்து வரும் வறியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, போர்வை வழங்கப்பட்டு வருகிறது .புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்றது. மதுரையின் அட்சய பாத்திரம் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார்நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் எம் .சி .என் மாணிக்கம் தலைமை தாங்கினார்.ஐசிஐசிஐ வங்கியின் ரீஜினல் அசஸ்ட் மேனேஜர் செல்வ ஆறுமுகம் மற்றும் ராஜபாளையம் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் புத்தாண்டை முன்னிட்டு மதுரையின் அட்சயபாத்திரம் அமைப்பு சார்பில், தேனி பிச்சைமணி பிள்ளை இளஞ்சியம் அவர்கள் நினைவாக நோயாளிகளின் பார்வையாளர்களுக்கு மதிய உணவினை வழங்கி மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல் பேசியதாவதுதற்போது அனைவரும் இரு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.ஒன்று மதுரையில் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். எல்லோரும் கட்டாயம் முகக் கவசம் அணி வேண்டும்.கடந்த சில வாரங்களாக ஒமைக்ரான் என்ற வைரஸ் உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது. அதனுடைய வேகம் அதிகரித்து இருக்கிறது. அதனால் நாம் இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.அமைக்கிறான் கடுமையான பாதிப்பை உண்டாக்கும். அதற்கான உடல் வலிமை, மன வலிமையை அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.மதுரையின் அட்சயபாத்திரம் அமைப்பு மூலம் மதுரையில் அதிகமானோர் பயனடைந்துள்ளனர். இந்த அமைப்பின் பணிகள் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று பேசினார்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரையின் அட்சய பாத்திரம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் குழாய் பதிபதற்காக தோண்டப்பட்ட குழியில் சிக்கிய அரசு பேருந்தால் பயணிகள் அவதி.
by mohan
written by mohan
மதுரை மாடக் குளத்திலிருந்து எம்ஜிஆர் பேருந்து நிலையத்திற்கு முதல் ட்ரிப் காலை 5.30 மணிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு அக்ராஹார பகுதி வழியாக சென்று கொண்டிருந்த மாநகர் அரசு பேருந்து திடீரென சாலையில் ஓரத்தில் குடிநீர் குழாய்கள் பதிப்பதற்காக தொண்டு பட்டிருந்தார் பள்ளத்தில் விழுந்து சிக்கியது. இதில் சுமார் 30 பயணிகள் பயணித்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது அதிர்ச்சி அடைந்த பெண் பயணிகள் உடனடியாக வெளியே வந்தனர்இதனை தொடர்ந்து பேருந்து பள்ளத்தில் இருந்து மீட்பதற்கு ஓட்டுநர் பலமுறை முயற்சித்தும் பள்ளத்திலிருந்து வெளிவராததால் பாதுகாப்பு காரணங்களால் பயணிகளை பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இறக்கிவிட்டனர்.இதனால் பேருந்தில் பயணித்த பயணிகள் மாற்று பேருந்திற்க்காக நீண்டதூரம் பேருந்து கிடைக்காமல் நடந்தே சென்றுள்ளனர்.மதுரை மாநகராட்சி பகுதிகளில் குழாய் பதிப்பு பணிகள், சாலை மேம்பாட்டு பணிகள் ஆங்காங்கு நடைபெற்று அதற்காக தொண்டபடும் பள்ளத்தை சரிவர மூடாமல் மாநகராட்சி ஊழியர்கள் சென்று விடுவதால் இது போன்று அடிக்கடி வாகனங்கள் தோண்டப்பட்ட பள்ளங்களில் விழுந்து சிக்கிக் கொள்வதாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இந்தநிலையில் அப்பகுதி மக்கள் பேருந்து ஓட்டுநர் நடத்துனர் இருக்கும் காபி கொடுத்து அவர்களை வாகனம் வரும் வரை அமர செய்தார்கள்
செய்தியாளர். வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை.
by mohan
written by mohan
மதுரை காமராஜர் சாலை குருவிக்காரன் சந்திப்பில் அருகில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் உள்ளது.இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஏடிஎம் வந்த 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஏடிஎம் வாயிலில் இருந்த கண்காணிப்பு கேமராவை திருப்பி வைத்துவிட்டு ஏடிஎம் உள்ளே சென்று ஏடிஎம் மிஷின் கதவை உடைத்து திறக்க முயற்சி மேற்கொண்டிருக்கிறார். இந்த முயற்சியில் அவர் ஈடுபட்ட போது வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு எச்சரிக்கை மணி ஒலித்த நிலையில் அங்கிருந்து தெப்பக்குளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து ரோந்தில் இருந்த இரவு ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போது ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட நபர் தப்பிக்க முயற்சி மேற்கொண்டிருக்கிறார். போலீசார் அவரை விரட்டி பிடித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.போலீசார் விரைந்து செயல்பட்டதால் ஏடிஎம் கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாநகராட்சிக்குட்ப்பட்ட பழங்காநத்தம் அக்ரஹாரம் மாடக்குளம் பிரதான சாலையில் திடீரென பத்து அடிக்கு ஆழமும் 6 அடிக்கு அகலமும் கொண்ட பள்ளமானது ஏற்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.குறிப்பாக மாடக்குளம் பிரதான சாலையில் நாள்தோறும் மாநகர அரசு பேருந்துகள், கனரக வாகனங்கள் மற்றும் அதிக அளவு இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்தி வரும் முக்கிய சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது.மேலும் திடீர் பலத்திற்கு காரணமாக பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து கழிவுநீர் வெளியேற்றத்தால் மணல் அரிப்பு காரணமாக ஏற்பட்டிருக்கக் கூடும் கூறப்படுகிறது.குறிப்பாக விடுமுறை நாள் என்பது நாள் போக்குவரத்து குறைவாக இருந்த சூழ்நிலையில் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது மேலும் இதற்கு முன்னதாகவும் இரண்டு முறை இதே பகுதியில் சாலையின் நடுவில் திடீர் பள்ளம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை மற்றும் குடி நீர் குழாய் இணைப்புகளை முறையாக பராமரித்து இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அமெரிக்காவின் உச்ச உயர்வுப் பதக்கமான தேசிய அறிவியல் பதக்கத்தை வென்ற சிறந்த உலகக்கணித மேதை, பத்ம பூசன் எஸ்.ஆர்.ஸ்ரீனிவாச வரதன் பிறந்த தினம் இன்று (ஜனவரி 2, 1940).
by mohan
written by mohan
சாத்தமங்கலம் ரங்க ஐயங்கார் ஸ்ரீனிவாச வரதன் (Sathamangalam Ranga Iyengar Srinivasa Varadhan) ஜனவரி 2, 1940ல் சென்னையில் பிறந்தார். சென்னையில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பொன்னேரி போர்டு உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். இவருடைய தந்தையார் அரங்க ஐயங்கார் அதே பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தார். 1959ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு (ஆனர்சு) பட்டம் பெற்று அடுத்த ஆண்டு முதுமானி (M.A.) பட்டமும் பெற்றார். பின்னர் கொல்கத்தா இந்தியப் புள்ளியியல் கழகத்தில், புகழ் பெற்ற புள்ளி இயலர் சி.ஆர்.ராவின் தலைமையின் கீழ் ஆய்வு செய்து 1963ல் முனைவர் பட்டம் பெற்றார். முதுமுனைவர்ப் பேராளராக (Postdoctoral Fellow), கூராண்ட்டு கணிதவியல் கழகத்தில் 1963லிருந்து 1966 வரையில் பணியாற்றினார். 1966ல் அங்கேயே துணைப் பேராசிரியரானார். 1968ல் இணைப்பேராசிரியரானார். நியூ யார்க்கிலுள்ள கொராண்ட் கணிதவியல் கழகத்தில் ஃப்ராங்க் ஜே கௌல்ட் கணிதவியற் பேராசிரியராக இருக்கிறார்.
1972ல் முழுப்பேராசிரியராக பணியேற்றம்பெற்று, 1980லிருந்து 1984 வரையும் மறுபடியும் 1992லிருந்து 1994 வரையிலும் அக்கழகத்திற்கு இயக்குனராகப் பணியாற்றும் பேறும் பெற்றார். அவர் மனைவி வசுந்தரா வரதன் நியூ யார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். வருகைப் பேராளர், இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் (1976-77), வருகையாளர் பதவி, மிட்டாகு-இலெஃப்ளர் கழகம் (Mittag-Leffler Institute) (1972), அமெரிக்க கணிதக்கழகத்தின் பிர்க்காஃப் பரிசு (1994), மார்கரரெட்டு-எர்மன் சோக்கோல் விருது, நியூயார்க்குப் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் துறை (1995), மேரி கியூரீ பல்கலைக்கழகம், பாரிஸ், இன் பெருமைப்பட்டம் (2003), கொல்கத்தா இந்தியன் புள்ளியியல் கழகத்தின் பெருமைப்பட்டம் (2004), அமெரிக்கத் தேசிய அறிவியல் பதக்கம் (2010), இன்ஃபோசிசுப் பரிசு (2013), ஏபெல் பரிசு போன்ற பரிசுகளை பெற்றுள்ளார்.
நார்வே தேசத்து அறிவியல் கழகம் 2003லிருந்து நார்வே நாட்டின் 19வது நூற்றாண்டின் சிறந்த கணித இயலராகவும் உலகக்கணித மேதைகளில் ஒருவராகவும் திகழ்ந்த ஏபெல் என்பவரின் நினைவில் ஏற்படுத்தப்பட்ட ஏபெல் பரிசை வழங்கி வருகின்றனர். இப்பரிசின் மதிப்பு இன்று $875,000 அமெரிக்க டாலர்கள். 2007ன் ஏபெல் பரிசு ஸ்ரீனிவாசவரதன் அவருக்குக் ‘நிகழ்தகவுக்கோட்பாட்டிற்கு அவர் செய்த அடித்தளப்பங்களிப்புகளுக்காகவும், குறிப்பாக ‘பெரிய விலக்கங்கள் கோட்பாடு’ (Theory of Large Deviations) என்ற படைப்பிற்காகவும் கொடுக்கப்பட்ட பரிசு என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். 2008 ஆம் ஆண்டில் பத்ம பூசன் விருதினையும் பெற்றார். அமெரிக்காவின் உச்ச உயர்வுப் பதக்கமான தேசிய அறிவியல் பதக்கத்தை 2010 ஆம் ஆண்டு பராக்கு ஒபாமா இவருக்கு அளித்தார். 2013 ஆண்டுக்கான இன்ஃபோசிசு பரிசையும் வென்றார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி கண்மாய் 15வருடங்களுக்குப் பிறகு நிரம்பி மறுகால் சென்றதையடுத்து மகிழ்ச்சியடைந்த பெண்கள் கண்மாயில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
by mohan
written by mohan
வைகை அணையின் நீர் மட்டம் 69அடியை எட்டும் பொழுது அதிலிருந்து வெளியேறும் உபரிநீரைக் கொண்டு உசிலம்பட்டிப் பகுதியிலுள்ள 35 கண்மாய்கள் பயன்பெறும் வகையில் 58 கிராம கால்வாயத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த மாதம் வைகை அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு தற்போது 4வது முறையாக 58 கிராம கால்வாயில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது..இதுவரை வைகை நீர் 20க்கும் மேற்ப்பட்ட கண்மாய்களை எட்டியுள்ள நிலையில் உசிலம்பட்டி நகரப்பகுதிக்கு குடிநீர் ஆதரமாக விளங்கும் உசிலம்பட்டி- கருக்கட்டாண்பட்டி கண்மாய்களை நிரப்ப வேண்டுமென 58 கிராம இளைஞர் குழுவின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்ற பொதுப்பணித்துறையினர் உசிலம்படடி கருக்கட்டாண்பட்டி கண்மாய்களை நிரப்பும் பணியில் ஈடுபட்டனர்.கருக்கட்டாண்பட்டி கண்மாய் நிரம்பி வரும் நிலையில் 60ஏக்கர் பரப்பளவு கொண்ட உசிலம்;பட்டி கண்மாய் கடந்த 15 வருடங்களுக்குப் பிறகு நிரம்பி மறுகால் சென்றது.இதனால் மகிழ்ச்சியடைந்த இளைஞர்கள் பெண்கள் கண்மாய் மதகுப்பகுதியில் பொங்கல் வைத்து வழிபட்டு வைகை நீரை மலர்தூவி வரவேற்றனர்.பின் பொங்கல் பானையுடன் கண்மாயை சுற்றி வந்து இயற்கை அன்னைக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்;;தனர்.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கோட்டூர் ஊராட்சி மைக்கேல் பாளையத்தில் தமிழக முதலமைச்சரின் சீரிய திட்டமான கிராம அளவிலான பட்டா மாறுதல் முகாம் நிலக்கோட்டை தாசில்தார் ( பொறுப்பு) வில்சன் தேவதாஸ் தலைமையில் நடைபெற்றது. கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தா கரிகால பண்டியன் பொதுமக்களுக்கு இலவசமாக பட்டாக்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் மண்டல துணை தாசில்தார் சரவணன், வருவாய் ஆய்வாளர் சென்னா கிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் பாண்டியராஜன், கிராம நிர்வாக அலுவலர்கள் சுமதி, ராமமூர்த்தி , கணேசன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.பட விளக்கம்: நிலக்கோட்டை அருகே கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தா கரிகால பாண்டியன் பொதுமக்களுக்கு பட்டா வழங்கிய போது எடுத்த படம்.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நிலக்கோட்டை அருகே தனியார் செண்டு தொழிற்சாலையில் வருமான வரி அதிகாரிகள் சோதனை.
by mohan
written by mohan
உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரபாஸ் ஜெயின் என்பவரின் வீட்டில் பல மாநிலங்களில் உள்ள உறவினர்கள் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளார்கள். அப்படி நடந்த சோதனையில் பல ஆயிரக்கணக்கான நகைகள், பணம் உள்ளிட்ட பொருட்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இவரது உறவினரான பங்காஸ் ஜெயின் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் நிலக்கோட்டை – வத்தலகுண்டு சாலையில் தீயணைப்பு துறை நிலையம் அருகேதனியார் பூக்கள் வாசனை திரவிய தொழிற்சாலையில் இருக்கிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று காலை சுமார் 9 மணி அளவில் மும்பை மற்றும் சென்னை , மதுரை உள்ளிட்ட மண்டல வருமான துறை அதிகாரிகள் திடீரென வந்த அதிகாரிகள் தொழிற்சாலைகளை அனைத்து கதவுகளை பூட்டு போட்டு பூட்டினர். பின்னர் ஒவ்வொரு அறையாக சோதனை செய்யத் தொடங்கினார்கள். சுமார் 1/2 மணி நேரம் சோதனைக்கு பின்பு தொழிற்சாலையில் இருந்த சில ஆவணங்களை ஒரு காரில் கைப்பற்றிக் கொண்டு அங்கிருந்து வந்த ஒரு சில அதிகாரிகள் ஒரு காரில் சுமார் 9.30 மணி அளவில் ஒரு காரில் ஏறி ஆவணங்களை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டனர். இந்நிலையில் இச்சம்பவம் நிலக்கோட்டை பகுதியில் காட்டுத்தீ போன்று பரவியது. இதனைத் தொடர்ந்து தற்போது வரை ஒவ்வொரு அறையாக துருவித்துருவி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இதனை அறிந்த நிலக்கோட்டை போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் , பத்திரிகை மற்றும் ஊடக செய்தியாளர்கள் உட்பட அந்த தொழிற்சாலைகள் முன்பு நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.படவிளக்கம்: நிலக்கோட்டை அருகே வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்திய தொழிற்சாலையை படத்தில் காணலாம்.படவிளக்கம் 2: தனியார் தொழிற்சாலையில் இருந்த காரை வருமானவரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது எடுத்த படம்.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கிழவனேரி கிராமத்தில் மரமும் மனிதனும் அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா.
by mohan
written by mohan
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், கிழவனேரி கிராமத்திலுள்ள பெரிய கண்மாயின் கரையில் ஆலமரம் :3, அரசமரம் : 3, அத்திமரம் : 3, இச்சிமரம் : 1 மற்றும் இலுப்பை : 2 உள்பட 12 மரக்கன்றுகள் மரமும் மனிதனும் அமைப்பின் சார்பில் நடப்பட்டன. மரக்கன்றுகள் நடும் இந்நிகழ்வில், மரமும் மனிதனும் அமைப்பின் நிறுவனரும், புதுக்கோட்டை மாவட்டம் மாங்குடி அரசு உயர்நிலைப்பள்ளியின் தமிழாசிரியருமான முகம்மது ஆஸிம், கிழவனேரி ஊராட்சி மன்றத் தலைவர் கார்த்திக், ஊராட்சி செயலர் சமயசஞ்சீவி, கிராம நிர்வாக அலுவலர் கண்ணன், ஊர்ப்பொதுமக்கள், இளைஞர்கள், பணித்தளப் பொறுப்பாளர்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில், அனைத்து மருத்துவர்கள் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாகவும் அலங்காநல்லூர் மருத்துவர் சங்கத்தின் சார்பாகவும், தலைவர் ராஜேந்திரன் பொருளாளர் முத்து மற்றும் முருகன் மாரி முத்து மாரி சோனை பாலா கோபால் நதி கணேசன் நாராயணன் குமரன்/பாலமேடு ராஜா கண்ணன் / ராஜாங்கம் / முத்துபாண்டிஆகியோர் கலந்துகொண்டு, தியாகி விஸ்வநாத தாஸ் அவர்களின் 81-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஐயப்ப சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் துவக்கி வைத்தார்.
by mohan
written by mohan
மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் வாகன நிறுத்துமிடத்தில், ஐயப்ப பக்தர்களுக்கு சேவா சங்கம் சார்பில், மாநில த் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தை, முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான ஆர். பி. உதயகுமார் தொடங்கி வைத்து அன்னதானம் வழங்கினார். உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன், வெற்றிவேல், பாண்டியராஜன், ஐ.ஓ.பி. மணியம் குருசாமி, ஐயப்ப சேவா சங்க மாவட்ட துணைச் செயலாளர் சின்னப்பாண்டி, அலங்காநல்லூர் முன்னாள் சேர்மன் பாலாஜி, விவசாய அணி மாவட்ட இணைச் செயலாளர் வாவிடமருதூர் ஆர்.பி.குமார் மனோகரன், அதிமுக ஓன்றியச் செயலாளர்கொரியர் கணேசன், கேபிள் மணி, அசோக் பாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விருதுநகர் மாவட்டம்காரியாபட்டியில் புத்தாண்டு மரக் கன்று நடும் நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பசுமை பாரதம் அறக்கட்டளை சார்பாக புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி காவல் நிலையத்தில் நடைபெற்றது இன்ஸ்பெக்டர் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில், சார்பு ஆய்வாளர்கள் பிச்சை பாண்டி , திருமலைராஜ், கலைச்செல்வன், பசுமை பாரத அறக்கட்டளை நிர்வாகி ஆசிரியர் பொன்ராம் ஜனசக்தி, பவுண்டேசன் நிறுவனர் சிவக்குமார், வழக்கறிஞர் செந்தில்குமார், பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள பிள்ளையார்நத்ததை சேர்ந்த கூலுச்சாமி வயது 57. நிலக்கோட்டை சுற்றுப்புற கிராம பகுதிகளில் சைக்கிளில் தினந்தோறும் தக்காளி வாங்கி வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று தனது கிராமத்திலிருந்து வியாபாரம் செய்வதற்காக தமிழ் சைக்கிளில் அனைப்பட்டி நிலக்கோட்டை சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது நிலக்கோட்டை அருகே உள்ள கோட்டை பகுதியில் வந்தபோது பின்னாடி வந்த லாரி மோதியதில் நிலைதடுமாறி பின்புற சக்கரத்தில் உடலில் ஏறி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். உடல் நசுங்கி இறந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆங்கில புத்தாண்டு (01.01.22) தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோவிலில் முருகனை தரிசிக்க வந்த பக்தர்கள்
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் .தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உள்ளது.புத்தாண்டு தினத்தையொட்டி மூலவரான சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்படும். இதனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்தனர் .மேலும் ஐயப்ப பக்தர்கள் வருகையால் கோவிலில் கூட்டமாக காணப்படுகிறது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
போஸ்- ஐன்ஸ்டீன் குவாண்டம் இயற்பியல் உருவாகக் காரணமாயிருந்த அறிவியல் மாமேதை பத்ம விபூசன் சத்தியேந்திர நாத் போஸ் பிறந்த தினம் இன்று (ஜனவரி 1, 1894).
by mohan
written by mohan
சத்தியேந்திர நாத் போஸ் (Satyendra Nath Bose) ஜனவரி 1, 1894ல் கொல்கத்தாவில் பிறந்தார். பள்ளிகாலத்தில் இறுதி தேர்வில் 100 க்கு 110 மதிப்பெண்களை கணக்கில் பெற்றிருந்தார். காரணம் ஒரே கணக்கை வெவ்வேறு முறைகளில் போட்டிருந்தது தான். பின் கல்லூரியில் இயற்பியலில் தங்க பதக்கம் பெற்று தேறினார். இவர் கல்கத்தா மாநில கல்லூரியில் பயின்ற காலம் வங்கத்தின் பொற்காலம். ஐன்ஸ்டீன் தெரியுமென்றால் போஸையும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். குவாண்டம் இயற்பியல் துறைக்கு இவர் ஆற்றிய தொண்டு அத்தகையது. குவாண்டம் மெக்கானிக்ஸ் என்கிற துறையின் உட்பிரிவான குவாண்டம் ஸ்டாடிஸ்டிக்ஸ் இவரால் தான் உருவானது. வெறும் அறிவியலில் மட்டும் நாட்டம் கொண்டிருக்கவில்லை அவர். ஐந்து மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்த அவர் இசை வல்லுனரும் கூட .
குவாண்டம் இயற்பியல் உருவாகக் காரணமாயிருந்த பிளாங்கின் ‘தெர்மோடைனமிக் உண்ட் வாமஸ்டிராலங்’ என்ற புத்தகத்தில் ஊகத்தின் அடிப்படையில் பிளாங்கு ஒரு சமன்பாட்டை எழுதியிருந்தார். உனக்கு ஐயத்திற்கிடமின்றி ஏற்புடையதாக இல்லாத வரையில் எந்த ஒரு கருத்தையும் ஒப்புக்கொள்ளாதே என்ற குறிக்கோள் கொண்டிருந்த சத்யேந்திரநாத்தால் பிளாங்கின் வழிமுறையை ஏற்க முடியவில்லை. உடனே அதை வேறு வழிமுறையைக் கையாண்டு திருத்தம் செய்கையில் பிறந்தது தான் போஸ்-ஐன்ஸ்டீன் புள்ளியியல். இதைச் செய்தபோது போசுக்கு வயது முப்பது. போஸ் “Max Planck’s Law” மற்றும் “Light Quantum Hypothesis” பற்றிய ஒரு கட்டுரையை வெறும் ஆறு பக்கங்களில் எழுதி ஐன்ஸ்டீனுக்கு அனுப்பினார். ஐன்ஸ்டீன் அசந்து போனார். இருவர் பெயரையும் இணைத்து அதை வெளியிட்டார். அந்த கட்டுரையே போஸ் ஐன்ஸ்டீன் புள்ளியியல் எனும் துறைக்கு வழிவகுத்தது. அப்பொழுது அவர் முனைவர் பட்டம் பெற்றிருக்க வில்லை.
ஐன்ஸ்டீன் கடிதம் கொடுத்து, அதில் போஸை விட தலைசிறந்த விஞ்ஞானியை நீங்கள் காண முடியுமா?” என அடிக்குறிப்பிட்டு அனுப்பினார். உடனே டாக்கா பல்கலைகழக பேராசிரியர் ஆகினார் போஸ் என்றால் அவரின் மேதமையை உணர்ந்து கொள்ளலாம். 1916ல் சத்யேந்திரநாத் அறிவியல் பல்கலைக்கல்லூரியில் ஆசிரியராக சேர்ந்தபோது அவருடன் ஆசிரியப்பணியில் சேர்ந்தவர் மேக்நாத் சாகா. அங்கு பணிபுரிந்த ஆசிரியர்களும் விரிவுரையாளர்களும் பழைய இயற்பியலையே கற்பித்துக் கொண்டிருந்த நிலையில் இவ்விருவரும் நடப்பு இயற்பியலில் ஏற்பட்டுக் கொண்டிருந்த புரட்சிகரமான புதிய தத்துவங்களைப் பற்றி அறிவதிலும் அவற்றைக் கற்பிப்பதிலும் ஆர்வம் செலுத்தினர். ஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவம் அடங்கிய ஆய்வுக்கட்டுரையை பெரும் சிரமத்திற்குப் பின்னர் பெற்றனர். பின்னர் தான் தெரிந்தது, கட்டுரை செர்மன் மொழியில் இருந்தது என்று. போஸ் மனம் தளராதவர் அல்லவா! தானும் கற்று, சாகாவிற்கும் செர்மன் மொழியைக் கற்றுத்தந்து, பின்னர் அந்த ஆய்வுக்கட்டுரையை இருவரும் படித்தனர். அதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தனர்.
ஐன்ஸ்டைனின் சிறப்புச் சார்புக் கோட்பாடு ஆய்வுக்கட்டுரையை முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் என்ற பெருமையை அடைந்தனர். இன்னும் எண்ணற்ற பிரிவுகளில் அவர் தொடர்ந்து ஆய்வுகள் செய்து கொண்டே இருந்தார். இவரின் கட்டுரைகள் தான் ஐன்ஸ்டீன் பிளான்க் முதலியோரின் குவாண்டம் தியரி மற்றும் டிராக் ஹெய்சென்பெர்க் முதலியோரின் குவாண்டம் மெக்கனிக்ஸ் இரண்டுக்கும் பாலமாக இருந்தது என்றால் அது மிகையில்லை. போர் எனும் நோபல் பரிசு பெற்ற அறிஞர் ஒரு உரை நிகழ்த்தும் பொழுது தடுமாறினார். கண்மூடிய படியே போஸ் அமர்ந்திருந்தார் ஒரு இடத்தில போருக்கு தடுமாற்றம் வரவே “இதை நீங்கள் கொஞ்சம் விளக்க முடியுமா?” என போசை பார்த்து கேட்க கண்களை திறந்து விளக்கி விட்டு மீண்டும் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்து விட்டார்.
தாய்மொழி வழிக்கல்வி தான் அவசியம் என்றார். வங்காள மொழியில் அறிவியலை பயிற்றுவித்தார் போஸ். இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவரான பால் டிராக் என்பவரால் போசான் வளிமத்திற்கு இவரது நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது. அறிவியலில் இவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசன் இந்திய அரசால் 1954ல் வழங்கப்பட்டது. போஸ்- ஐன்ஸ்டீன் குவாண்டம் இயற்பியல் உருவாகக் காரணமாயிருந்த அறிவியல் மாமேதை சத்தியேந்திர நாத் போஸ் பிப்ரவரி 4, 1974ல் தனது 80வது அகவையில் கொல்கத்தாவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பொதுமக்களிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்; தென்காசி மாவட்ட எஸ்.பி அறிவுறுத்தல்..
by mohan
written by mohan
தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொது மக்களிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என காவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் காவலர்களின் உடைபொருட்கள் மற்றும் காவல் நிலையத்தின் முக்கிய கோப்புகளை ஆய்வு செய்தார்.பின்னர் காவல் துறையினரிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும்,பணியில் பொறுப்புடனும் நேர்மையுடனும் திறம்பட செயல்பட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.பின்னர் காவலர்களின் குறை நிறைகளை கேட்டறிந்தார்.மேலும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் விதமாக காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணைக் காவல் கண்காணிப்பாளர் பொண்ணரசு,காவல் ஆய்வாளர்கள் சுரேஷ், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்தி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாவட்டத்தில் தொடரும் திமுக பிரமுகர்களின் அட்டகாசம்.வைரலில் சப் -இன்ஸ்பெக்டர் ஆடியோ
by mohan
written by mohan
-வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த வேப்பங் கும்பம் காவல்நிலையத்தில் உதவி-ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சீனிவாசன் (50).இவர் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில்தான் தற்கொலை செய்துகொள்வதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் பேசியதாவது:குட் ஈவ்னிங் சார், நான் வேப்பங்குப்பம் எஸ்.ஐ.சீனிவாசன் பேசுகிறேன்.டி.சி.குப்பத்தில் துளசி என்ற பெண் சுமார் ரூ 10 லட்சத்துக்கு சீட்டு பிடிக்கிறாங்க! தள்ளு போக எடுக்கிறாங்க, மீதி பணத்தை கேட்கிறாங்க, அதுக்கு ஆயிரத்து 8 காரணங்கள் சொல்லாறங்க, இதை இன்ஸ்பெக்டர் உலகநாதன் விசாரிக்கிறார். அவர் அதை சரியாக விசாரிக்கவில்லை.பணம் துளசியிடம் கேட்டபோது ஒருத்தரை ஒருத்தர் அடித்து கொள்கின்றனர்.துளசி அம்மா அடுக்கம்பாறை ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிறாங்க,நான் போய் அவரிடம் வாக்குமூலம் பெற்றேன்.அவங்க மீது வழக்குபதிவு செய்யலாம்னு பார்க்கும்போது டி.சி.குப்பத்தை சேர்ந்த திமுக பிரமுகர் மிஸ்டர் மணிமாறன், வழக்கு பதிவு செய்யக்கூடாது என்று என்னை டார்ச்சர் செய்கிறார். நான் திமுக பிரமுகர் வழக்குபதிவு செய்யக்கூடாது என்று மிரட்டுகிறார்.இந்த பக்கம் பாபு (வேலூர் மாவட்ட ஒன்றியக்குழு தலைவர் மு.பாபு (திமுக) இந்த பக்கம் கணபதி, திமுக பிரமுகர்களின் தொல்லை தாங்கமுடியவில்லை.அதனால் நான் தற்கொலை செய்யப்போகிறேன், மணல் திருடுறாங்க, போன் பண்ணி நான் பாபு பேசுகிறேன்.கணபதி பேசுகிறேன் அவங்களை விட்டுவிடுங்க என்று சொல்கிறார். நான் என்ன பண்ண முடியும்..மனஉளச்சல் ஜாஸ்தியாக உள்ளது, என்னால வாழ முடியல, நான் போயிடுகிறேன். ஒழுங்கா பணத்தை வாங்கி என் குடும்பத்திடம் கொடுத்திடுங்க! வணக்கம் என்று ஆடியோவில் பேசி வெளியிட்டு உள்ளார்.இதனை விசாரித்த வேலூர் எஸ்.பி.சீனிவாசனை வேப்பங்குப்பம் காவல்நிலையத்திலிருந்து வேலூர் வடக்கு காவல்நிலையத்திற்கு மாற்றி உள்ளார்.ஆனால் புகார் கூறியுள்ள திமுக பிரமுகர்கள் மீது வழக்கம்போல் போலீஸ் தரப்பில்எந்த நடவடிக்கையும் எடுக்க இல்லை.இதுதான் திமுக ஆட்சி என்று புலம்புகின்றனர் அதிமுகவினர்.
You must be logged in to post a comment.