வேலூர் மாநகர அதிமுக சார்பில் வேலூர் அண்ணாசாலையில் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனவருமான மறைந்த எம்ஜி ராமச்சந்திரனின் 105 -வது பிறந்தநாளை முன்னிட்டு மாநகர அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்பு மாலை அணிவித்துமரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். அருகில் பொருளாளர் மூர்த்தி, மாநகர எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணிசெயலாளர் ராகேஷ் மற்றும் கழகத்தினர்பலர் உள்ளனர்.
Category:
செய்திகள்
திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் எம்ஜிஆர் பிறந்த தினத்தை முன்னிட்டு அதிமுக மரியாதை.
by mohan
written by mohan
கொரான வழிமுறைகளை பின்பற்றாமல் சமூக இடைவெளியின்றி அன்னதானம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதி பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி எம் எல் ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.பின்னர் சமூக இடைவெளி இன்றி கொரான தொற்று பரவும் வகையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.மேலும் இந்நிகழ்ச்சியால் பெரிய ரத பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வீட்டுக்குள் செல்ல முயன்ற நல்ல பாம்பை தனது உயிரை பணயம் வைத்து தடுத்து நிறுத்தி வீட்டின் உரிமையாளரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்.
by mohan
written by mohan
மதுரை கோவலன் நகர் லட்சுமி நகர் ரமண மகரிஷி கார்டன் தெருவை சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் இவர் மற்றும் இவரது மனைவி மற்றும் மகன் வீட்டில் இருந்துள்ளனர் இன்று மதியம் அவர் வீட்டில் வளர்க்கப்படும் நாய் அதிக அளவு குறைக்க தொடங்கியது எப்பொழுதுமே நான் இந்த அளவிற்கு தொலைத்தது இல்லையே என்று வெளியே வந்து பார்த்தபோது அங்கு சுமார் 3 அடி உள்ள ஒரு நல்ல பாம்பு படமெடுத்து ஆடிக் கொண்டிருந்தது இதைக்கண்டு அதிர்ந்து போன வெங்கடகிருஷ்ணன். உடனடியாக ஈஷா பாம்பு பிடி நண்பர்களுக்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு வந்த ஈஷா பாம்பு பிடி நண்பர் இயக்கத்தைச் சேர்ந்த சிவா லாவகமாக அந்தப் பாம்பினை பிடித்து பத்திரமாக அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டார் வீட்டுக்குள் பாம்பு வருவதை கண்ட வளர்ப்பு நாய் அந்த பாம்பை தன் உயிரை துச்சமாக நினைத்து தன் உரிமையாளரை காப்பாற்ற நினைத்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மேலும் வெங்கடகிருஷ்ணன் கூறுகையில் நாங்கள் எக்காரணத்தை கொண்டும் பாம்பு இங்கு வந்தாலும் நாங்கள் அடிக்க மாட்டோம் எப்பொழுதாவது பாம்பு இங்கு வரும் ஆனால் இன்று பகல் நேரத்திலேயே வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது எனினும் நாங்கள் பாம்பை அடிக்க மாட்டோம் ஈஷா பாம்பு பிடி நண்பர்களுக்கு தகவல் கொடுக்கவும் அவர்கள் வந்து பாம்பை பத்திரமாக மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டுவிடுவார்கள் ஆனால் இன்று வீட்டுக்குள் வர இருந்த அதிக விஷத்தன்மை கொண்ட பாம்பு தனது உயிரை பணையம் வைத்து எங்களை காப்பாற்றுவது என்ன சொல்வது என்று எங்களுக்கு தெரியவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்தார்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராஜபாளையம் நகர அதிமுக சார்பில் மறைந்த எம்ஜிஆர் 105வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.
by mohan
written by mohan
ராஜபாளையம் நகர அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 105வது பிறந்த தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது பி ஏ சி ஆர் சாலையில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச்சிலைக்கு நகர வடக்கு-தெற்கு கழகச் செயலாளர்கள் வக்கீல் துரை முருகேசன் எஸ். பரமசிவம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி அன்னதானம் கொடுக்கப்பட்டது. என் நிகழ்ச்சியில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஆர் 56 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் வனராஜ் ஒன்றிய தெற்கு கழகச் செயலாளர் ஆர் எம் குருசாமி மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் மாவட்ட கழக இணைச் செயலாளர் அழகுராணி மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர்கள் ராஜா திருப்பதி மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் கராத்தே ஆறுமுகம் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் குருசாமி செல்வராஜ் லிங்கா முருகன் கவிதா யோக சேகரன்தொண்டர்கள் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் கேமரா சர்வீஸ் சென்டரை மதுரை நேதாஜி ரோடு பகுதியில் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று அவரது கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து கரும்புகை வெளியேறியது.உடனே அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு போலீசார் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.தொடர்ந்து கேமரா சர்வீஸ் சென்டரில் விலை உயர்ந்த கேமரா மற்றும் லேப்டாப் உள்ளிட்டவைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் லட்ச மதிப்பிலான கேமரா மற்றும் உபகரணங்கள் தீயில் கருகியதாக கூறப்படுகிறது.தொடர்ந்து கடையில் உள்ள மின்சாதன பொருட்களில் மின்கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. தொடர்ந்து சம்பவம் குறித்து திடீர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அணுவின் உட்கூறுகளாகிய அணுத்துகள்களின் இயக்கத்தில், தற்செயலாய் இழக்கும் சீரொற்றுமை ஆய்வுக்காக நோபல் பரிசு பெற்ற நாம்பு ஓச்சிரோபிறந்த தினம் இன்று (ஜனவரி 18, 1921).
by mohan
written by mohan
நாம்பு ஓச்சிரோ (Nambu Yoichiro) ஜனவரி 18, 1921ல் ஜப்பானின் டோக்கியோவில் பிறந்தார். ஃபுகுய் நகரில் இருந்த ஃபுகுய் மேல்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு, டோக்கியோ இம்பீரியல் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பயின்றார். 1942ல் தனது இளங்கலை அறிவியல் மற்றும் 1952 இல் அறிவியல் முனைவர் பட்டம் பெற்றார். 1949 ஆம் ஆண்டில் அவர் ஒசாகா நகர பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டு 29 வயதில் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். 1952 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் நியூ ஜெர்சியிலுள்ள பிரின்ஸ்டனில் உள்ள மேம்பட்ட ஆய்வு நிறுவனம் அவரைப் படிக்க அழைத்தது. 1954ல் சிகாகோ பல்கலைக்கழகத்திற்குச் சென்று 1958ல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். 1974 முதல் 1977 வரை அவர் இயற்பியல் துறையின் தலைவராகவும் இருந்தார்.
குவாண்டம் குரோமோடைனமிக்ஸின் “வண்ண கட்டணம்” ஐ நம்பு பரிந்துரைத்தார். துகள் இயற்பியலில் தன்னிச்சையான சமச்சீர் முறிவு குறித்த ஆரம்ப வேலைகளைச் செய்தார். இரட்டை அதிர்வு மாதிரியை சரங்களின் குவாண்டம் இயந்திரக் கோட்பாடாக விளக்க முடியும் என்பதைக் கண்டுபிடித்தார். அவர் சரம் கோட்பாட்டின் நிறுவனர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். பேராசிரியராக ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் ஹென்றி பிராட் ஜுட்சன் சிகாகோ பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் என்ரிகோ ஃபெர்மி இன்ஸ்டிடியூட்டில் சிறப்பு சேவை பேராசிரியராக இருந்தார். சரம் கோட்பாட்டில் நம்பு-கோட்டோ நடவடிக்கை நம்பு மற்றும் டெட்சுவோ கோட்டோவின் பெயரிடப்பட்டது. மேலும், தன்னிச்சையான சமச்சீர் முறிவுடன் களக் கோட்பாடுகளில் எழும் பருப்பொருள் போசான்கள் சில நேரங்களில் நம்பு-கோல்ட்ஸ்டோன் போசான்கள் என குறிப்பிடப்படுகின்றன.
கருத்திய இயற்பியல் துறையில், அணுவின் உட்கூறுகள் பற்றி ஆழமான ஆய்வுகள் செய்து புகழ் பெற்றவர். அணுவின் உட்கூறுகளாகிய அணுத்துகள்களின் இயக்கத்தில், தற்செயலாய் கலையும் அல்லது இழக்கும் சீரொற்றுமை பற்றி இவர் செய்த ஆய்வுக்காக, 2008 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவருடன் கோபயாசி மக்கொட்டோ, மசுக்காவா தொசிடே ஆகிய இரண்டு ஜப்பானியரும் 2008 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்தனர்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம்,சோழவந்தான் அருகே, மன்னாடிமங்கலம் கிராமத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 105-வது பிறந்த தின விழாவை முன்னிட்டு, அவருடைய திருவுருவப் படத்திற்கு தெற்கு கிளைச் செயலாளர் ராஜபாண்டி மாலை அணிவித்தார். அவைத்தலைவர் பூசணி செல்வம், கொடியேற்றி வைத்தார் .விவசாய அணி மாவட்ட நிர்வாகி கந்தன் இனிப்பு வழங்கினார். இதில், பாலு முதலியார், காமாட்சி, சக்திவேல், ஜெயலட்சுமி உள்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று….எம்ஜிஆர் பிறந்த தின விழா மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 105வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது இவ்விழாவை முன்னிட்டு இரும்பாடி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச்சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மாலை அணிவித்து லட்டு வழங்கி கொண்டாடினார்கள் ஒன்றிய செயலாளர் ராஜன் நகரச் செயலாளர்கள் சத்யபிரகாஷ் மதன் ஒன்றிய இணைச் செயலாளர் சின்னமருது மாவட்ட நிர்வாகிகள் சந்திரசேகரன் தலித் முனைவர் பாலு மாரி பாண்டி பாரதி பிடிஆர் பாண்டி ஊராட்சி செயலாளர் ரவி உட்பட அமமுக வினர் கலந்து கொண்டனர் அதிமுக சார்பாக மகளிர் அணி மாவட்ட இணைச்செயலாளர் மனிதா கட்டத்தேவர் மருத்துவர் அணி மாவட்ட இணைச் செயலாளர் கருப்பையா கிளைச் செயலாளர் பழனிஆண்டி சோழவந்தான் கடைவீதியில் முன்னாள் சேர்மன் எம் கே முருகேசன் மகளிர் அணி அமைப்பாளர் மரகதம் நாகராஜன் இளைஞர் பாசறை சேது கண்ணன் பூக்கடை முருகன் மன்னாடிமங்கலம் கிராமத்தில் தெற்கு கிளை செயலாளர் ராஜபாண்டி தலைமை ஏற்று எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தார் பாலு முதலியார் ஜெயலட்சுமி அழகுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர் காமாட்சி வரவேற்றார் அவைத்தலைவர் பூசணி செல்வம் கொடி ஏற்றி வைத்த விவசாய அணி மாவட்ட நிர்வாகி கந்தன் இனிப்பு வழங்கினார் ஜெயக்குமார் ஜானகிராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர் இதேபோல் தேனூர் கிராமத்தில் ஊராட்சி செயலாளர் பாஸ்கரன் கொடிமங்கலம் கிராமத்தில் கருப்பணன் துவரிமான் கிராமத்தில் ராஜேந்திரன் இரும்பாடி கிராமத்தில் சக்திவேல் கருப்பட்டி கிராமத்தில் செந்தில்குமார் நாச்சிகுளம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சுகுமாரன் விக்கிரமன் கிராமத்தில் ஒன்றிய பெருந்தலைவர் கவிதா ராஜா ஒன்றியச் செயலாளர் எம் வி பி ராஜா வடகாடு பட்டி கிராமத்தில் பிரபு குருவித்துறை கிராமத்தில் மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் தச்சம்பத்து கிராமத்தில் முருகன் திருவேடம் கிராமத்தில் சிபிஆர் மணி முள்ளிப்பள்ளம் கிராமத்தில் சேது முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள் ராமநாதன் மேல மட்டையான் கிராமத்தில் கூட்டுறவு சங்க தலைவர் ராமன் கச்சிராயிருப்பு கிராமத்தில் கூட்டுறவு சங்க தலைவர் முனியாண்டி ஆகியோர் அந்த கிராமத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் திருவுருவப் படத்தை வைத்து மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்கள்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டியில்உரிய விலை கிடைக்காததால் வீதியில் கரும்புத்தட்டைகளை வியாபாரிகள் கொட்டிச் சென்ற அவலம்.
by mohan
written by mohan
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த பொங்கல் திருநாளில் அனைவர் வீட்டிலும் முக்கிய இடம் பிடிப்பது திக்திக்கும் கரும்புகள்.ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அரசு சார்பில் நியாயவிலைக்கடையில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு வழங்கப்பட்டதால் வெளிமார்க்கெட்டில் கரும்புக்கு விலையில்லாமல் கரும்பு விவசாயிகள் பரிதவித்து வந்தனர்.இந்நிலையில் இவ்வருட பொங்கல் பண்டிகையின் போது கரும்பு வியாபாரிகள் பொங்கலுக்கு ஒரு வாராம் முன் விவசாயிகளிடமிருந்து கரும்;பை கொள் முதல் செய்து லாரி மற்றும் மினி லாரிகளில் ஏற்றிக் கொண்டு ஒவ்வொரு ஊராகச் சென்று தங்கி வியாபாரத்தில் ஈடுபடுவர்.இந்த வருடம் ஒரு கட்டு (ரூ15 எண்ணிக்கை) ரூ200 முதல் ரூ250 விற்பனையானது.பொஙகல் வரை இந்த விலையில் விற்பனையான நிலையில் அதன் பின் கட்டு ரூ50க்கு கூட வாங்க ஆளில்லை எனக் கூறப்படுகிறது.இந்த விலையில் விற்பனையானால் வண்டி வாடகைக்கு கூட கட்டாது என்பதால் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டிலுள்ள வண்டிப்டே;டை தெருவில கரும்பு வியாபாரிகள் வீதிகளில் கரும்புத்தட்டைகளை கொட்டி வைத்து விட்டுச் சென்ற அவலம் ஏற்ப்பட்டுள்ளது.திடீரென விதியில் கொட்டப்பட்ட கரும்புத்தட்டைகளை கண்ட பொதுமக்கள் அவற்றை ஆர்வமுடன் அள்ளிச் சென்றனர்.
உசிலைசிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் அடுத்த காட்பாடி பிரம்மபுரம் கிராமத்தில் அதிமுக நிறுவனரும் முன்னாள் தமிழக முதல்வருமான மறைந்த எம்ஜிஆரின் 105 -வது பிறந்தநாள் முன்னிட்டு அவரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு மற்றும் ஆடைகளை வழங்கிய வேலூர் மாநகர அதிமுக ஓட்டுனர் அணிசெயலாளர் பிரகாஷம்.உடன் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் புகழ்வேந்தன், கிளை செயலாளர் செந்தில் ஆகியோர் உள்ளனர்.
கே.எம். வாரியார்
வேலூர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரைமாவட்டம் பாலமேட்டில் இருந்து மாணிக்கம்பட்டி சென்று மாணிக்கம் பட்டியில் இருந்து உசிலம்பட்டி செல்லும் வழியில்,ஜல்லிக்கட்டுகாளைதவறிவிழுந்துஇறந்துள்ளது.
இது யாருடைய ஜல்லிக்கட்டு காளை என்று தெரியவில்லை. தகவல் தெரிந்தவர்கள் வரலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது, மோசடி புகார் கொடுத்த முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் கைது.
by mohan
written by mohan
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன். இவர், தனது சகோதரியின் மகன் ஆனந்த் என்பவருக்கு, விருதுநகர் ஆவின் நிறுவனத்தில் மேலாளர் வேலை வாங்கி தருவதாக கூறி 30 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக, முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரரும் முன்னாள் வெம்பக்கோட்டை அதிமுக ஒன்றிய செயலாளர் விஜயநல்லதம்பி மீது, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதை தொடர்ந்து விஜயநல்லதம்பியிடம்போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ஒன்றிய செயலாளர் விஜயநல்லதம்பி, அதிமுக கட்சியைச் சேர்ந்த மாரியப்பன் ஆகிய 3 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. 30 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்ததாக முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் விஜயநல்லதம்பி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, மாரியப்பன் ஆகிய 3 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் (120B,406, 420) வழக்குப்பதிவு செய்தனர்.இதனிடையே அதிமுக ஒன்றிய செயலாளர் விஜயநல்லதம்பியிடம், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி3 கோடி ரூபாய் பணத்தை வாங்கிக்கொண்டு, பால்வளத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறியும், விஜயநல்லதம்பிக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு சீட்டு பெற்று தருவதாகவும் கூறி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அவரது உதவியார்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகியோர் மீது மதுரை சரக ஐஜியிடம், விஜயநல்லதம்பி புகார் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உட்பட 4 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. ரவீந்திரன் மற்றும் விஜயநல்லதம்பி கொடுத்த இரண்டு புகார்களின் பேரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கடந்த 5ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் ரவீந்திரன் கொடுத்த புகாரின் பேரில், விஜயநல்லதம்பியை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் பதுங்கியிருந்த விஜயநல்லதம்பியை, தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரைவிருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முழு ஊரடங்கின் போது மேம்பாலத்தில் இருந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞரால் பரபரப்பு.
by mohan
written by mohan
மதுரை எஸ் எஸ் காலனி பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் என்கின்ற இளைஞருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், குடும்ப பிரச்சினைக் காரணமாக பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் வளைவுகளில் மீதேறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.இதனைத்தொடர்ந்து அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இளைஞரை கண்டதும் அவரை கீழே இறங்கி வரும்படி எச்சரித்தனர். தொடர்ந்து அந்த இளைஞர் மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் தன் மீது பொய் வழக்கு போட முயற்சிப்பதாகவும்,இதனால் மன உளைச்சல் அடைந்து தற்கொலை முயற்சி செய்வதாகவும் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் எஸ் எஸ் காலனி காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.இதனைத் தொடர்ந்து ரோந்து பணியில் இருந்த காவலர்கள் மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த எஸ் எஸ் காலனி நிலைய காவலர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை இளைஞரை தற்கொலை செய்ய விடாமல் இறங்கிவர செய்து அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.முழு ஊரடங்கு என்பதால் சாலைகள் வெறிச்சோடிய நிலையில் உள்ளதை பயன்படுத்தி பாலத்தின் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது தொடர்ந்து பாண்டியராஜன் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் மேலும் இந்த காலத்தில் அடிக்கடி தொடர்ந்து பலர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது கடந்த சில மாதம் முன் இது போன்று ஒரு நபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாலத்தில் இருந்து குதித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும் .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழா-2022-வை துவக்கி வைத்தார்.உடன், மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் கார்த்திகேயன், அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன், பூமிநாதன் உட்பட முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.முன்னதாக, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில், மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.ஜல்லிக்கட்டுக்கான, பாதுகாப்பு ஏற்பாடுகளை, மதுரை மாவட்ட போலீஸ் எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் ஆயிரக் கணக்கான போலீஸார் ஈடுபட்டிருந்தனர். மதுரை மாவட்டம்தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சார்பாகசிறந்த காளைக்கு கார் பரிசாக வழங்கப்ட உள்ளது. அதேபோன்று, ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்படும் அனைத்து காளைகளுக்கும் தலா ஒரு தங்ககாசு வழங்கப்படும்.திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதிஸ்டாலின் சார்பாக,சிறந்த மாடுபிடி வீரருக்குகார் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதே போல், மாடுகளை பிடிக்கும் வீரர்களுக்கும் தலா ஒரு தங்க காசு வழங்கப்பட உள்ளது.என, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியை தோற்றுவித்தவரும், தஞ்சை தமிழ் பல்கலை கழகத்தை உருவாக்கினாருமான எம்ஜிஆரின் பிறந்தநாள் விழா தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம்உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை அருகில் எம்ஜிஆர் 105வது பிறந்தநாள் விழாவுக்கு அதிமுக நகரச் செயலாளர் பூமா ராஜா தலைமையில் உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் அய்யப்பன் முன்னிலையில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாண்டியம்மாள், மாவட்ட கவுன்சிலர் சுதாகரன், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் துறை தன ராஜன், நகர அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் லட்சுமணன், மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டியில் அமமுக கட்சி சாா்பில் எம்ஜிஆர் 105வது பிறந்த நாள் விழா கொண்டாப்பட்டது.
by mohan
written by mohan
தமிழகத்தில் 3 முறை முதல்வராக இருந்தவருமான எம்ஜிஆாின் 105வது பிறந்த நாள் விழா தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி சாலையில் உள்ள முருகன் கோவில் அருகே தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 105வது பிறந்தநாள் விழாவுக்கு உசிலம்பட்டி அமமுக நகரச் செயலாளர் குனசேகர பாண்டியன் தலைமையில், தலைவர் மாநில அமைப்புச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ கே டி ராஜா ஒன்றியச் செயலாளர்கள் அபிமன்னன், ஒன்றிய துணைச் சேர்மன் மலேசியா பாண்டி, சேடபட்டி ஒன்றிய செயலாளர்கள் வீர பிரபாகரன், அய்யர் என்ற ராமகிருஷ்ணன், ஒன்றிய அவைத் தலைவர்கள் செல்லத்துரை, கே ஆர் ராமன், பொதுக்குழு உறுப்பினர் சுப்புராஜ், நகர இளைஞரணி உக்கிரபாண்டி, தர்மா தெய்வேந்திரன், ஒட்டு என்ற சிவக்குமார், சிவன் ஜி, சாமி குணா, மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழக கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடியில் தென்காசி மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவலர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் பணி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். தென்காசி மாவட்டம், புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS (16.01.2022) ஞாயிற்றுக் கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் நம் மாநிலத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கோ அல்லது கேரள மாநிலத்திலிருந்து நம் மாநிலத்திற்கோ தேவையற்ற பொருட்களை கொண்டு வருதல் தடுக்கப்படுகின்றதா எனவும், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நம் மாநிலத்திற்குள் வராமல் தடுக்க பிரத்யேகமாக அமைக்கப்பட்ட கொரோனா சோதனை சாவடி பாதுகாப்பான முறையில் அனைவரையும் சோதனை செய்த பின்னே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகிறதா என்பதையும் அவர் ஆய்வு செய்தார். மேலும் சோதனை சாவடியில் பணிபுரியும் காவலர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் பணி மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு..
by mohan
written by mohan
தென்காசி மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் பாவூர்சத்திரம் எஸ்எஸ் கிட்ஸ் பிளே பள்ளியில் நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் ஆணையாளராக ஆல்பர்ட் நாயகம் செயல்பட்டார். சிறப்பு பார்வையாளராக மாநில பொருளாளர் ஜாண் உபால்ட் கலந்து கொண்டார். இந்த தேர்தலில் கீழ்கண்ட புதிய நிர்வாகிகள் தென்காசி மாவட்ட நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.மாவட்ட தலைவராக சு.குமார், மாவட்ட செயலாளர் வே.கிருபா சம்பத், மாவட்ட பொருளாளர் வே.நல்லையா, மாவட்ட துணைத் தலைவர்கள் திருமலைக்குமார், சி.மாரித்துரை மாவட்ட இணை செயலாளர்கள் செ.கிருபாகரன், பெ.வீரசெல்வன், மாவட்ட அமைப்பு செயலாளர் அ.சிவராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஸ்ரீதேவி, மாவட்ட மகளிர் இணை அணி கு.முருகேஸ்வரி, மாவட்ட செய்தி தொடர்பாளர் இலியாஸ், மாவட்ட சட்ட செயலாளர் பால சுப்பிரமணியன் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சு.ரத்தினகுமார்,ஜாணி, பசுபதி தனராஜ், சந்தானம், செ.கருப்பசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்தல் ஏற்பாடுகளை மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சங்கரநாராயணன், கீழப்பாவூர் வட்டார தலைவர் இராமசாமி மற்றும் வீ.கே.புதூர் வட்டார துணை தலைவர் .ஜெபா எபனேசர் ஆகியோர் செய்திருந்தனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இயற்பியல் சரித்திரத்தில் முக்கிமான இடிதாங்கியைக் கண்டுபிடித்த அமெரிக்க அறிவியலாளர், பெஞ்சமின் பிராங்கிளின் பிறந்த தினம் இன்று (ஜனவரி 17, 1706).
by mohan
written by mohan
பெஞ்சமின் பிராங்கிளின் (Benjamin Franklin) ஜனவரி 17, 1706ல் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பிறந்தார். மொத்தம் 17 பிள்ளைகளில் பத்தாவதாக பிறந்தவர் அவர். அவரது தந்தையார் சோப்பு, மெழுகுவர்த்திகளைத் தாயரித்து விற்பனை செய்வார். பெரிய குடும்பம் என்பதால் குடும்ப ஏழ்மையின் காரணமாக பிராங்கிளினை பள்ளிக்கு அனுப்ப இயலவில்லை. ஓராண்டுக்கும் குறைவாகவே பள்ளி சென்ற பிராங்க்ளின் தனது ஏழாவது வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். பள்ளிக்கு செல்லாவிட்டாலும் தன் தந்தையின் தொழிலில் உதவி செய்துகொண்டே தனக்குக் கிடைத்த நேரத்தில் அவர் நான்கு மொழிகளைக் கற்றுக்கொண்டார். பிராங்கிளினுக்கு இயற்கையிலேயே நூல்கள் வாசிப்பதில் ஈடுபாடு இருந்தது. அந்த அவருடைய பண்புதான் பிற்காலத்தில் அமெரிக்காவின் சுதந்திர பிரகடனத்தை எழுதும் வீரியத்தை அவருக்கு தந்தது.
வாசிப்பதில் இருந்த ஆர்வம் காரணமாகவே அவர் தனது சகோதரர் ஜேம்ஸின் அச்சுக்கூடத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அச்சுப் பணிகளைக் கற்றுக்கொண்டதோடு அச்சுக்கு வரும் அத்தனை புத்தகங்களையும் படித்துத் தீர்த்து ஆனந்தம் அடைவார். நிறைய வாசித்ததால் எழுதும் திறமையும் அவருக்கு இருந்தது. பிறகு தனது சகோதரருடன் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியேறி பிலடெல்பியா சென்றார். அங்கும் அச்சுத்தொழிலில் ஈடுபட்டு சொந்தமாக அச்சு நிறுவனத்தைத் தொடங்கினார். அமெரிக்க இதழ்களில் நிறைய எழுதினார். அவரது புகழ் நாடு முழுவதும் பரவத் தொடங்கியது. 1720 ஆம் ஆண்டு பென்சில்வேனியா கெசட் (Pennsylvania Gazette) என்ற இதழை விலைக்கு வாங்கி அதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் பிராங்கிளின். நான்கு ஆண்டுகள் கழித்து புவர் ரிச்சர்ட்ஸ் அல்மனாக் (Poor Richard’s Almanack) என்ற இதழைத் தொடங்கினார். மிகவும் மாறுபட்ட பாணியில் வெளிவந்த அந்த இதழ்தான் அவருக்கு செல்வத்தையும், பெரும் புகழையும் கொண்டு வந்து சேர்த்தது.
அச்சுத்துறையில் புதுமைகள் செய்த அதே வேளையில் புதிதாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் அவரிடம் இருந்தது. குறைவான எரி சாதனத்துடன் மிகுந்த வெப்பம் தரக்கூடிய அடுப்பை அவர் கண்டுபிடித்தார். அவற்றைத் தயாரித்து விற்கவும் தொடங்கினார். பயிர்களுக்கு செயற்கை உரமிட்டால் அவை செழிப்பாக வளரும் என்று எடுத்துக் கூறினார். ஆரம்பத்தில் புறக்கனிக்கப்பட்டாலும் அதிலிருந்த உண்மையை உலகம் மெதுவாக புரிந்து கொண்டது. இப்போதுகூட உலகம் முழுவதும் செயற்கை உரம் பயன்படுத்தப்படுகிறது. மின்சாரத்தின் மீது ஆய்வுகள் செய்தவர் மின்னலில் கூட மின்சக்தி இருக்கிறது என்பதை கண்டறிந்தார். கூரிய முனைகளால் மின்சாரம் ஈர்க்கப்படுகிறது அதேபோல் மின்னலும் கூரிய முனைகளால் ஈர்க்கப்படும் என்பதை பட்டம் ஆய்வின் மூலம் நிரூபித்தார்.
மின்னல் இடியிலிருந்து கட்டிடங்களைப் பாதுகாக்க இடிதாங்கியைக் கண்டுபிடித்தார். முதியர்வர்கள் எட்டப் பார்வைக்கும், கிட்டப் பார்வைக்கும் சேர்த்து அனியும் ஒரே கண்ணாடியான வெள்ளெழுத்துக் கண்ணாடி (bifocal lens) பிராங்கினின் கண்டுபிடிப்பாகும். தன் கண்டுபிடிப்புக்கெல்லாம் அவர் காப்புரிமை பெற்றதில்லை. மற்றவர்களின் கண்டுபிடிப்புகளால் நாம் பயன்பெறும்போது நமது கண்டுபிடிப்பால் பிறர் பயன்பெறுவதை நாம் நற்பேறாகக் கருத வேண்டும் என்பதே அவரது எண்ணம். அறிவியல் துறையில் பெரிய பங்களிப்பைச் செய்த அவர் காகிதப் பணத்தின் இன்றியமையாமையை எடுத்துக்கூறி அதன் புழக்கத்தை அதிகரிக்கச் செய்தார். சந்தா முறையில்(subscription) நூல்களை வாங்கி படிக்கும் முறையை உலகுக்கு அறிமுகம் செய்தார். பிலடெல்பியாவின் தபால் துறையின் பல மாற்றங்களை செய்து தற்கால தபால் துறை பின்பற்றும் பல கொள்கைகளை உருவாக்கித் தந்தார்.
1730ம் ஆண்டு நடமாடும் நூல் நிலையம் என்ற அற்புத திட்டத்தை உலகுக்கு அறிமுகம் செய்தார். அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் முதல் தீ காப்பீட்டு நிறுவனத்தை அவர் உருவாக்கினார். ஒரு கல்விக் கழகத்தை நிறுவ வேண்டும் என்று அவர் கனவு கண்டார். அவரது காலகட்டத்திலேயே அந்தக் கனவு நனவானது. இன்று உலகப் புகழ்பெற்ற அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றான பென்சில்வேனியா பல்கலைக்கழகம் 1749ம் ஆண்டு அவர் நிறுவியதுதான். அடுத்த இரண்டு ஆண்டுகள் கழித்து அமெரிக்காவின் முதல் மருத்துவமனையைத் தோற்றுவித்தார் பிராங்கிளின். பிராங்கிளின் சிறந்த சிந்தனையாளர், நேர்மையானவர் என்பதால் அவரை பயன்படுத்திக்கொள்ள விரும்பியது அரசு. அவரும் சட்டமன்ற உறுப்பினர், அரசதந்திரி, தூதர் என பல்வேறு நிலைகளில் அரசியல் பணி புரிந்தார். இங்கிலாந்தின் காலனித்துவ ஆட்சியில் அடிமைப்பட்டு கிடந்த அமெரிக்காவுக்கு சுதந்திரம் பெற்றுத்தர அவர் தன் அரசியலறிவைப் பயன்படுத்தி பிரான்சின் உதவியைப் பெற்றார். அவர்மேல் பெரும் மதிப்புக் கொண்டிருந்த பிரான்சும் அமெரிக்காவுக்கு உதவ முன்வரவே இங்கிலாந்து பணிந்தது.
அமெரிக்காவுக்கு சுதந்திரம் கிடைத்தது. 1789ம் ஆண்டு அமெரிக்காவின் முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவின் அரசியல் சட்டத்தை இயற்றும் மாபெரும் பொறுப்பை பெஞ்சமின் பிராங்கிளினை உள்ளடக்கிய ஒரு குழுவிடம் ஒப்படைத்தார். அவரது மேற்பார்வையில் உருவான அரசியல் சட்டம்தான் இன்றும் அமெரிக்காவை வழிநடத்துகிறது. பெஞ்சமின் பிராங்கிளின் உதிர்த்த பல பொன்மொழிகளை இன்றும் பல பேச்சாளர்கள் அடிக்கடி பயன்படுத்துகின்றனர். இறந்த பிறகும் நீங்கள் மறக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால், ஒன்று சிறந்த படைப்புகளை எழுதுங்கள் அல்லது பிறர் உங்களைப் பற்றி எழுதும் அளவுக்கு ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழுங்கள். மின்னியலில் இவரின் கண்டுபிடிப்புகளுக்கும், கருத்துக்களுக்குமாக இவர் இயற்பியல் சரித்திரத்தில் ஒரு முக்கிமான அறிவியலாளராகக் கருதப்படுகிறார். அமெரிக்க ஆங்கில எழுத்திலக்கணத்திலும் சீர்திருத்த முறைமை அவசியத்தை வலியுறுத்தியவர். வணிகம், அறிவியல், இலக்கியம், அரசியல் ஆகிய நான்கு துறைகளில் பெரும் வெற்றி பெற்றவர்.
இளம் வயதில் கையில் ஒரு காசுகூட இல்லாமல் ஏழ்மையில் இருந்தும் அச்சுத்தொழிலின் மூலமும், பத்திரிக்கையின் மூலமும் நாற்பது வயதுக்குள் செல்வந்தரானவர். அமெரிக்க சுதந்திர பிரகடணத்தை தயார் செய்து கையெழுத்திட்ட மூவரில் ஒருவர் பிராங்கிளின். சுதந்திரம் அடைந்த பிறகு அமெரிக்கா முதன் முதலாக இரண்டு அஞ்சல் தலையை வெளியிட்டது. ஒன்றில் அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டனின் படம். மற்றொன்றில் பெஞ்சமின் பிராங்கிளினின் படம் இடம்பெற்றிருந்தது. இடிதாங்கியைக் கண்டுபிடித்த பெஞ்சமின் பிராங்கிளின் ஏப்ரல் 17,1790ல் தனது 84வது அகவையில் பென்சில்வேனியாவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். அரசாங்க மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. சுமார் இருபதாயிரம் பேர் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றி பெற்று முதலமைச்சரான பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன் பிறந்த தினம் இன்று (ஜனவரி 17, 1917).
by mohan
written by mohan
எம்.ஜி.இராமச்சந்திரன் (Maruthur Gopalan Ramachandran) ஜனவரி 17, 1917ல் இலங்கையில் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டி என்ற இடத்தில் கோபாலன் மேனன், சத்யபாமா ஆகியோருக்கு 5 வது மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தை மருதூர் கோபாலன் மேனன் வழக்கறிஞராக கேரளாவில் பணியாற்றி வந்தார். அதன் பிறகு அந்தமான்தீவில் உள்ள சிறையில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து வந்தார். அப்போது ஆங்கிலயர்களின் அடக்கு முறை ஆட்சி என்பதால் தினமும் சுமார் 20 சிறை கைதிகளுக்கு தூக்குத் தண்டனை அளிக்கும் குற்றவியல் நீதிபதியாக இருந்தார். பின்பு மனைவி சத்யபாமா, இந்த உயிரை எடுக்கும் வேலை நமக்கு வேண்டாம் என்று கூற அந்த நீதிபதி வேலையை இராஜினாமா செய்து விட்டார். அந்த இராஜினாமாவை ஏற்று கொள்ளாத ஆங்கிலயர்கள் பயங்கர சூழ்ச்சிக்கு கோபாலன் மேனனை ஆளாக்கினர். அதற்கு காரணமாக ஆங்கிலேயர்களுக்கு சொந்தமான ஆயுதக் கப்பலுக்கு டைனமெட் வெடி வைத்ததாகக் கூறி பொய்யான புகாரில் சிறிது காலம் கோபாலன் மேனனை சிறையில் அடைத்தனர். அதன் பிறகு அவர் குடும்பத்துடன் இலங்கையில் உள்ள கண்டிக்கு அருகே நாவலப்பிட்டியில் குடியேறினார்கள். பின்பு அவரது நண்பர் வேலுபிள்ளை அவர்கள் காவல் துறையில் பணியாற்றிவந்தார். அவரின் உதவியுடன் அங்குள்ள ஒரு சிங்கள பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆக பணிபுரிந்து வந்தார்.
தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் தனது தம்பி நாராயணன் உதவியுடன் தனது இரண்டு பிள்ளைகளுடன் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாகப் படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவருடன் சக்ரபாணி என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிக்கையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர் முதலில் தங்கமணியை மணந்தார். பிரசவத்திற்காகத் தாய் ஊருக்குச் சென்ற தங்கமணிக்கு குழந்தை இறந்தே பிறந்தது. அதன் பின் தங்கமணியும் உடல்நலக் குறைவினால் இறந்தார். அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் எம்.ஜி.ஆர். இருவருக்கும் குழந்தைகள் இல்லை. பின்னர் சதானந்தவதி நோய்க் காரணமாக இறந்தார். இரண்டாவது கதாநாயகனாகத் தியாகராஜ பாகவதர் தயாரித்த ராஜ முக்தி படத்தில் நடித்தார். அப்படத்தில் வைக்கம் நாராயணி ஜானகி என்னும் வி.என்.ஜானகி கதாநாயகியாக நடித்தார். அவர் முதல் மனைவியான தங்கமணி சாயலில் இருந்தார். இதனால் ஜானகியின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அவ்வீர்ப்பு மோகினி படத்தில் சேர்ந்து நடித்தபொழுது இருவரும் நெருங்கிப் பழகினர். 1950 ஆம் ஆண்டில் மருதநாட்டு இளவரசி படத்தில் கதைத் தலைவனாக எம்.ஜி.ஆர்.வும் கதைத்தலைவியாக ஜானகியும் நடிக்கும்பொழுது காதலாக மாறியது. அக்காலகட்டத்தில் ஜானகிக்கு எழுதப்பட்ட காதற்கடிதங்கள் ஜானகியின் முதற்கணவரான கணபதிபட்டிக் கைகளில் கிடைத்தன. கணபதிபட்டிற்கும் ஜானகிக்கும் இடையில் சண்டை முற்றியது. கேரளாவில் ஒரு கோவிலில் சில நண்பர்கள் முன்னிலையில் எம்.ஜி.ஆர்.வும் ஜானகியும் மாலை மாற்றிக் கொண்டனர். ஜானகிக்கு மகனான அப்பு என்ற சுரேந்திரனை தன் வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொண்டார். மூன்று திருமணங்கள் என்றாலும் எம்.ஜி.ஆருக்கு குழந்தைகள் இல்லை.
1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை. இச்சம்பவத்திற்குப் பின்னார் முதன் முதலாக வெளிவந்த காவல்காரன் திரைப்படமானது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. 1971 ஆம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது சத்யா மூவிஸ் தயாரிப்பான ரிக்சாக்காரன் படத்தில் நடித்ததற்காகக் கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது. அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆகும். தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார்: நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன். நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார்.
எம்.ஜி.ஆர். ஒரு மலையாளியாக இருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். கருணாநிதியுடன் நட்பாக இருந்தார். சி.என்.அண்ணாத்துரையின் மறைவுக்குப் பின், மு.கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேறினார். 1972ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார். பின்பு அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழமாக மாறியது. முதன் முதலாகப் போட்டியிட்ட திண்டுக்கல் பகுதியில் பெரும் வெற்றி பெற்றது. திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. 1977ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 1984ல் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வரானார். எம்.ஜி.ஆர். 1984ல் இவரது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். மறைவிற்குப் பின் அவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். கட்சி 1988ல் பிரிந்து 1989ல் இணைந்தது. 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் 2011 முதல் இன்று வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜெ.ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்திருக்கிறது. இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் திராவிடக் கட்சியில் இருந்தபோதிலும் தமிழ்நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள். இவர் இறந்து 29 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த பெரும் செல்வாக்கைக் காட்டுகிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் என்பது எம்.ஜி.ஆரால் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்க தொடங்கப்பட்ட திட்டமாகும். இத்திட்டம் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது தமிழ்நாட்டில் முழுமையாக செயற்படுத்தப்பட்டது. விதவை ஆதரவற்ற பெண்களுக்குத் திருமண உதவி, தாலிக்கு தங்கம் வழங்குதல், மகளிருக்கு சேவை நிலையங்கள், பணிபுரியும் பெண்களுக்குத் தங்கும் விடுதிகள், தாய் சேய் நல இல்லங்கள், இலவச சீருடை வழங்குதல் திட்டம், இலவச காலணி வழங்குதல் திட்டம், இலவச பற்பொடி வழங்குதல் திட்டம், இலவச பாடநூல் வழங்குதல் திட்டம், வறட்சிக் காலத்தில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குகின்ற திட்டம் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தினார்.
1921ம் ஆண்டு தமிழ் மொழிக்கு எனத் தனியே ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகம் வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய உமாமகேசுவரனார் பிறந்த தஞ்சையில், தீர்மானம் இட்ட அறுபது ஆண்டுகள் கழித்து தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவினார் எம்.ஜி.ஆர். தமிழ்மொழி, தமிழர்களின் கலை, இசை, நாடகம், ஓவியம், சிற்பம், கட்டிடக் கலை, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், மொழியியல், வரலாறு, புவியியல், மெய்யியல், கடலியல், சித்த மருத்துவம், கைவினைக் கலை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழை மேம்படுத்த, தமிழர்களின் மரபுப் பெருமையைப் பரப்ப, 1981 இல் அன்று முதலமைச்சராகயிருந்த திரு.எம்.ஜி. இராமச்சந்திரன் முன் முயற்சியில் தமிழக அரசால் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது. இலங்கையில் இருக்கும் கண்டியில் பிறந்தமையால் தமிழ் ஈழம் குறித்தான ஆர்வமும், செயல்பாடுகளும் எம்.ஜி.ஆரிடம் அதிகம் காணப்பட்டன. ஈழத்திற்காக வெளிப்படையான ஆதரவினை எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராக இருக்கும் போது தந்தார். விடுதலைப் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் வெளிப்படையான ஆதரவு அளித்தார் எம்.ஜி.ஆர். ஆயுதம் வாங்கி இலங்கை கொண்டு சென்று தமிழ்மக்களை காப்பாற்ற, முதலில் இரண்டு கோடி ரூபாயை தந்தார். அந்த உதவி இல்லையென்றால் இந்தளவிற்கு இயக்கம் வளர்ந்திருக்க இயலாது என்று பிரபாகரன் பேட்டியில் கூறியிருக்கிறார்.
தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றி பெற்று முதலமைச்சரான எம்.ஜி.இராமச்சந்திரன் டிசம்பர் 24, 1987ல் தனது 70வது அகவையில் சென்னையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் நினைவாகச் சென்னையில் மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்துக்கு அருகில் அவரது உடல் புதைக்கப்பட்டது. அந்த இடத்தில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எம்.ஜி.ஆரின். மார்பளவுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்களும், அவருடைய சில பொருட்களும் மக்களின் பார்வைக்கு தனி கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளன. தாமரை மலர் விரிந்த நிலையில் இருப்பது போன்ற அமைப்பின் நடுவே அவர் உடல் வைக்கப்பட்டுள்ள சமாதி உள்ளது. சமாதியின் அருகே நினைவுத்தூண் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில், பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் தொண்டர்களும் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த நினைவிடத்திற்கு வருகை தந்து தங்களின் அன்பு தலைவருக்கு மரியாதை செலுத்துகின்றனர்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புளூட்டோ கோளை கண்டுபிடித்த கிளைட் டோம்பா நினைவு தினம் இன்று (ஜனவரி 16, 1997).
by mohan
written by mohan
கிளைட் வில்லியம் டோம்பா (Clyde .W. Tombaughugh) பிப்ரவரி 4, 1906ல் அமேரிக்கா, இல்லினாய்ஸில் பிறந்தார். 1922 ஆம் ஆண்டில் அவரது குடும்பம் கன்சாஸின் புர்டெட்டுக்குச் சென்ற பிறகு, ஆலங்கட்டி மழை அவரது குடும்பத்தின் பண்ணை பயிர்களை நாசமாக்கியபோது கல்லூரியில் சேருவதற்கான டோம்பாக் திட்டங்கள் விரக்தியடைந்தன. 1926ல் தொடங்கி, லென்ஸ்கள் மற்றும் கண்ணாடியுடன் பல தொலைநோக்கிகளை அவர் தானே கட்டினார். அவரது தொலைநோக்கி கண்ணாடியை சிறப்பாக சோதிக்க, டோம்பாக், ஒரு தேர்வு மற்றும் திண்ணை கொண்டு, 24 அடி நீளமும், 8 அடி ஆழமும், 7 அடி அகலமும் கொண்ட ஒரு குழி தோண்டினார். இது ஒரு நிலையான காற்று வெப்பநிலையை வழங்கியது. காற்று நீரோட்டங்கள் இல்லாதது, மேலும் குடும்பத்தால் ரூட் பாதாள மற்றும் அவசரகால தங்குமிடமாகவும் பயன்படுத்தப்பட்டது. அவர் வியாழன் மற்றும் செவ்வாய் கிரகத்தின் வரைபடங்களை அரிசோனாவின் ஃபிளாக்ஸ்டாப்பில் உள்ள லோவெல் ஆய்வகத்திற்கு அனுப்பினார். இது அவருக்கு வேலை வழங்கியது. டோம்பாக் 1929 முதல் 1945 வரை அங்கு பணியாற்றினார்.
அரிசோனா மாகாணத்தில் உள்ள ஃபலாகச்டாப் எனும் இடத்தில் அமைந்துள்ள லோவல் வானாய்வகத்தில் இளம் ஆராய்ச்சியாளராக பணிபுரிகையில், பெர்சீவல் லோவல் மற்றும் வில்லியம் பிக்கரிங் முன்னுரைத்த X கோள் பற்றிய ஆய்வை நிகழ்த்துமாறு டோம்பாவிற்கு பணி வழங்கப்பட்டது. இவர் 1930-ஆம் ஆண்டு புளூட்டோ கோளை கண்டுபிடித்தார். கோள் அந்தஸ்தை பெற்றிருந்த புளூட்டோ பின்பு குறுங்கோள் ஆனது. மேலும் பல சிறுகோள்களை இவர் கண்டுபிடித்தார். பறக்கும் தட்டுகளை பற்றி விஞ்ஞான பூர்வமாக ஆராய குரல் விடுத்தார். சூரிய மண்டலத்தில் கடைசிக் கோளாக இருந்த புளூட்டோ 10 ஆண்டுகளுக்கு முன்பு புளுட்டோ ஒரு கோள் அல்ல என்று தகுதி இறக்கம் செய்யப்பட்டது. நாம் வாழும் இந்த பூமியையும் சேர்த்து பல்வேறு கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. இந்த வரிசையில் சூரியனுக்குப் பக்கத்தில் சுற்றி வரும் முதல் கோள் புதன். 3-வதாக நாம் வாழும் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. இதேபோல 8-வது கோளாக சுற்றி வரும் நெப்டியூனுக்கு அடுத்ததாக புதிய கோள் ஒன்று 1930-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்க வானியல் அறிஞரான கிளைட் டோம்பா இதைக் கண்டுபிடித்தார்.
இது குறித்த தகவல் வெளியானதும், புதிய கோளுக்கு பலரும் பெயர் சூட்ட முன்வந்தார்கள். இங்கிலாந்தை சேர்ந்த வெனிடியா என்ற 11 வயது சிறுமி, கிரேக்க பாதாள உலக கடவுளின் ரோமானிய பெயரான ‘புளூட்டோ’என்ற பெயரை தனது தாத்தா மூலமாக பரிந்துரை செய்தாள். அப்படித்தான் 9-வது கோளுக்கு ‘புளூட்டோ’என்ற பெயர் வந்தது. சூரியக் குடும்பத்தின் கடைக்குட்டியாக இருந்த புளூட்டோ பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் நிறைய உள்ளன. சூரியனிலிருந்து 590 கோடி கி.மீ. அப்பால் புளூட்டோ உள்ளது. அந்தக் கோள் முழுவதும் பாறை மற்றும் பனிக்கட்டியாகத்தான் உள்ளது. புளூட்டோவின் சராசரி வெப்பநிலை -230 டிகிரி செல்சியஸ். பூமியைவிட அங்கு ஈர்ப்பு விசை குறைவு என்பதால், எடையும் குறைவாகவே இருக்கும். அதாவது பூமியில் உங்களது எடை 30 கிலோ என்றால், புளூட்டோவில் 2 கிலோ மட்டுமே இருக்கும். புளூட்டோ ஒருமுறை சூரியனை சுற்றிவர 248 வருடங்கள் ஆகும். புளூட்டோ பற்றிய சுவாரசியங்களை போலவே, அது தொடர்பான ஆராய்ச்சியில் சர்ச்சைகளும் அதிகம் இருந்தன. சில விஞ்ஞானிகள் புளூட்டோ கோள் இல்லை என்று சொன்னார்கள். சூரிய மண்டலத்தில் இருக்கும் மற்ற கோள்களை போல இல்லாமல், புளுட்டோவின் சுற்றுவட்டப்பாதை சில சமயம் சூரியனிலிருந்து ரொம்ப தொலைவாகவும், சில சமயம் பக்கத்திலுமாக அமைந்திருந்தது.
நெப்டியூனின் சுற்று வட்டப்பாதையில் புளுட்டோவின் பாதை குறுக்கிடுவதையும் கண்டுபிடித்தார்கள். இதன் காரணமாக பூமியின் நிலவான சந்திரனைவிட அளவில் சிறிய புளூட்டோ, கோள் அந்தஸ்தை இழந்தது. 2006ம் ஆண்டு ஆகஸ்ட் 24 அன்று கூடிய வானியல் அறிஞர்கள், சூரிய மண்டலத்தின் 9-வது கோளாக இருந்த புளூட்டோவை ‘குறுங்கோள்’ அல்லது ’குள்ளக்கோள்’(Dwarf Planet) என்று சொல்லி தகுதி இறக்கம் செய்துவிட்டார்கள். ஆனால், தொடர்ந்து புளூட்டோவையும் சேர்த்து சூரிய மண்டலத்தில் உள்ள பிற குள்ள கோள்கள் ‘புளூட்டோய்ட்ஸ்’ என்ற அறிவிக்கப்பட்டு தொடர்ந்து ஆராயப்பட்டுவருகின்றன. புளூட்டோ கோளை கண்டுபிடித்த கிளைட் டோம்பா ஜனவரி 16, 1997ல் தனது 90வது அகவையில் நியூ மெக்ஸிகோவின் லாஸ் க்ரூஸில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். அவரது அஸ்தியின் ஒரு சிறிய பகுதி நியூ ஹொரைஸன்ஸ் விண்கலத்தில் வைக்கப்பட்டது. கொள்கலனில் கல்வெட்டு உள்ளது.
Source By: Wikipedia and Hindutamil.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
You must be logged in to post a comment.