வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்த பாலாஜி (35).பாலாஜி ஆம்பூரில் உள்ள தாலுகா அலுவலகத்தில் நிலசர்வேயராக பணியாற்றி வருகிறார்.இவர் ஒருவரின் நிலத்தை அளந்து பட்டா, மாற்றி தர ரூ8 ஆயிரம் லஞ்சம் கேட்டு வாங்கிய போது வேலூர் விஜிலென்ஸ் போலீசார் கைது செய்தனர்.பின்பு சேண்பாக்கம் கழனிக்காட்டு தெருவில் உள்ள பாலாஜி வீட்டை சோதனை செய்தபோது கணக்கில் வராத 22 லட்சத்து 84 ஆயிரத்து 650 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் வீட்டிலிருந்து வங்கி தொடர்பான ஆவணங்கள், பத்திரங்கள், நிதிசார்ந்த பத்திரங்கள், பங்கு வர்த்தகம் தொடர்பான பத்திரங்கள் உள்ளிட்ட பலகைப்பற்றப்பட்டன.
Category:
செய்திகள்
கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை லாரியில் கடத்தி வந்து கொட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தென்காசி மாவட்டத்தில் பொது மக்களுக்கு நோய் தொற்று பரவும் வகையில் மருத்துவ கழிவுகளை கடத்தி வந்து கொட்டும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என தென்காசி மாவட்ட எஸ்.பி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கனாப்பேரி பகுதியில், கேரளாவிலிருந்து பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுகளை டிப்பர் லாரிகளில் கடத்தி வந்து கொட்டிய வீரசிகாமணி மேட்டு தெருவைச் சேர்ந்த பாலையா என்பவரின் மகன் வேல் முருகன் என்பவரை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவின் பேரில், புளியங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் சூரிய மூர்த்தி அவர்களின் ஆலோசனைப்படி புளியங்குடி காவல் ஆய்வாளர் ராஜாராம் சொக்கம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் தலைமை காவலர்கள் விஜயபாண்டி, மதியழகன்,சிவராம கிருஷ்ணன் உள்ளிட்ட தனிப்படையினர் மேற்படி வேல்முருகனை கைது செய்து அவரிடமிருந்து ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள டிப்பர் லாரி ஓட்டுனர்கள் மற்றும் டிப்பர் லாரிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் மேற்படி வேல்முருகன் மீது சேர்ந்தமரம் சொக்கம்பட்டி காவல் நிலையங்களில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பொது மக்களுக்கு நோய் தொற்று பரவும் வகையில் மருத்துவ கழிவுகளை கடத்தி வந்து தென்காசி மாவட்டத்தில் கொட்டும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசியில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் புதிய புறக்காவல் நிலையம்; மாவட்ட எஸ்.பி திறந்து வைத்தார்..
by mohan
written by mohan
தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லையான ஆசாத் நகரில் புதிதாக புறக் காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS (30.1.2022) ஞாயிற்று கிழமை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இந்த புறக்காவல் நிலையமானது 24 மணி நேரமும் இயங்கும் விதமாகவும், திருநெல்வேலி, ஆலங்குளம், பாவூர்சத்திரம், அம்பாசமுத்திரம் மற்றும் கடையம் ஆகிய பகுதிகளில் இருந்து தென்காசி நகருக்குள் இந்த புறக் காவல் நிலையத்தை கடந்த பின்னரே நுழையும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன், தென்காசி காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலமுருகன் மேலும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே சாலையைக் கடக்க உதவிய காவலரின் மனிதநேயம்
by mohan
written by mohan
மதுரையில் பரபரப்பான பெரியார் பேரூந்து நிலையம் அருகே சாலையை கடக்க பார்வையற்றவருக்கு உதவிய தலைமை காவலரின் மனித நேயம் பலராலும் பாராட்டப்பட்டுவருகிறது.காவல் துறையினர் குற்றம் செய்பவர்களை தண்டிக்கவும் , குற்றங்களை தடுக்கவும் , அதிகாரம் படைத்த துறையாகும்.காவலர்கள் சிலர் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த காவல்துறைக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறது.மதுரை திடீர்நகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிபவர் உதயராஜன் (வயது 38).நேற்று பணியின்போது பார்வையற்ற ஒருவர் வெகு நேரம் சாலையை கடக்க சிரமப்பட்டதை பார்த்த காவலர் உதயராஜன் மனித நேயத்துடன் சாலையை கடக்க உதவினார்.” காவல்துறை நண்பனாக” இருந்தால் சமுகத்திற்கு பெருமை சேரும்.இவரை போல பல காவலர்களின் செயலால் காவல்துறை மீது கண்ணியத்தையும். மரியாதையை உயர்த்துகிறது.இன்றும் காவல்துறை உங்கள் நண்பன் என்ற சொல்லுக்கு இவரை போன்ற காவலர்களால் மரியாதை நிலைநிறுத்தப்படுகிறது எனலாம்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் சேரும் விவசாயின் மகள்.கல்விச் செலவுக்கு உதவ வேண்டும் என அரசுக்கு கோரிக்கை
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அடுத்த பானா மூப்பன் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சன்னாசி இவரது மகள் தங்க பேச்சி இவர் விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் கடந்தாண்டு பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார் தொடர்ந்து மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதினார் அதில் வெற்றி பெற்று கலந்தாய்வில் தனியார் மருத்துவக்கல்லூரி இடம் கிடைத்ததால் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் கல்வியை தொடர முடியவில்லை.இந்நிலையில் இந்த ஆண்டு தனியார் பயிற்சி வகுப்பிற்கு சென்று நீட் எக்ஸாம் எழுதி 256 மதிப்பெண் பெற்று அரசு ஒதுக்கீட்டில் கன்னியாகுமரி மாவட்டம் மூகாம்பிகை மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது அரசு கல்விக் கட்டணத்தை மட்டும் செலுத்தி விடுவதாக கூறியுள்ளது தங்கும் விடுதி உட்பட இதர செலவினங்களுக்காக எந்த ஒரு பொருளாதார சூழ்நிலையும் இல்லாத நிலையில் உள்ளதால் தமிழக அரசு அல்லது சமூக ஆர்வலர்கள் உதவ வேண்டுமென அரசுக்கு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து மாணவி தங்க பேச்சு கூறியதாவது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா பா னா மூப்பன் பட்டி கிராமம் எங்களது எனது தந்தை சன்னாசி எங்களை மிகவும் சிரமப்பட்டு பள்ளிக்கல்வி வரை படிக்க வைத்துள்ளார் நாங்கள் நான்கு பேர் பெண் குழந்தைகள் சிறுவயது முதலே எனக்கு டாக்டராக வேண்டும் என்ற விருப்பம் இருந்தது அதற்காக கஷ்டப்பட்டு படித்தேன் அரசு வழிகாட்டுதல்படி நீட் தேர்வில் பாஸ் செய்தேன் தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்ததால் கடந்த ஆண்டு படிப்பைத் தொடர முடியவில்லை அதற்குப் பின்பாக தமிழக அரசு கட்டணத்தைச் செலுத்தி வருவதாக தகவல் கிடைத்தது பின்பு இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொண்டேன் அதிலும் தனியார் கல்லூரி கிடைத்தது மிகவும் பின்தங்கிய கிராமத்தில் உள்ள எனக்கு இதர செலவினங்களுக்கான கட்டணத்தைச் செலுத்த முடியாத சூழ்நிலை உள்ளது அதனால் கல்வியை தொடர முடியவில்லை. தொடர்ந்து இந்த ஆண்டு தனியார் பயிற்சி வகுப்பிற்கு சென்று நீட் எக்ஸாம் பாஸ் செய்துள்ளேன் மருத்துவ கலந்தாய்வில் எனக்கு கன்னியாகுமரி மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது அரசு கல்விக் கட்டணத்தை மட்டும் செலுத்துகிறது ஆனால் இதர செலவினங்களுக்கு என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை தந்தையும் தாயும் கூலி வேலை செய்து நான்கு பெண் பிள்ளைகளை பாதுகாத்து வருகின்றனர் எங்களின் வருமானம் குடும்பத்தை நடத்தவே பற்றாக்குறையாக உள்ளது இந்தச் சூழ்நிலையில் என்னால் இதர செலவினங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை பள்ளிப்படிப்பு செல்லும்போதே காலையில் வயலில் வேலை செய்து பின்புதான் பள்ளி செல்வேன் விடுமுறை நாட்களில் தினக்கூலி வேலைக்கு அருகாமையில் உள்ள வயல்வெளிகளில் மல்லிகைப்பூ பறிக்கும் வேலை செய்வேன் அதில்தான் நோட்டுப் புத்தகங்களை வாங்கி படித்து வந்தேன் தற்போது மருத்துவ கல்லூரிக்கு தேவைப்படும் புத்தகங்கள் அதிக விலையில் இருக்க வாய்ப்புண்டு இதனால் செய்வதறியாது திகைத்து வருகிறோம் இதுகுறித்து அரசு பரிசீலித்து இதர செலவுகளையும் ஏற்க வேண்டும் சமூக ஆர்வலர்களும் ஏதாவது உங்களுக்கு உதவ வேண்டும் என்றார்.தொடர்ந்து 7.5 இட ஒதுக்கீட்டால் தாம் தேர்வில் வெற்றி பெற்றதாகவும் என்னைப் போல கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் இட ஒதுக்கீட்டின் அளவை கூடுதலாக வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.தங்க பேசியின் தந்தை சன்னாசி கூறும்போதுமதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி தாலுகா மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது கடந்த காலங்களில் பெண் சிசுக்கொலை அதிகம் நடைபெற்ற இடமாகும் அப்படி இருந்தும் எனது நான்கு பெண் குழந்தைகளையும் ஊராரின் பேச்சுக்கு இடமளிக்காமல் அவர்களுக்கு தேவையான கல்வியை அளித்து வந்தேன் எனது சக்திக்கு உட்பட்டு அனைத்து உதவிகளையும் செய்து வந்தேன் அதனால்தான் எனது மகள் தங்க பேச் சி நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் இது ஒருபக்கம் மகிழ்ச்சியை அளித்தாலும் இன்னொரு பக்கம் கவலையாகவும் உள்ளது மேற்படிப்பு கூடுதல் செலவாகும் என்பது அனைவரும் அறிந்ததே தினக்கூலி வேலை பார்த்துவரும் நான் அவ்வளவு கட்டணம் செலுத்த முடியாது எனவே அரசும் சமூக ஆர்வலர்களும் தங்களுக்கு உதவ வேண்டும் சமூகத்தில் ஆண்-பெண் பேதமற்ற மாற்றத்தை ஏற்படுத்த என்னால் முடிந்த உதவி செய்துள்ளேன் எனது மகள் மருத்துவராகி சேவை செய்ய காத்திருக்கிறார் ஆனால் அதற்கு பொருளாதார சூழ்நிலை இடம் கொடுக்கவில்லை இதை அரசியல் பிரமுகர்கள் மக்கள் பிரதிநிதிகள் சமூக ஆர்வலர்கள் அனைவரும் உணர்ந்து எங்களுக்கு உதவ வேண்டும் என்றார். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்…9025479429
செய்தியாளர் குழு மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அவனியாபுரம்- சோபா , பஞ்சு மெத்தை உற்பத்தி செய்யும் கம்பெனியில் தீ விபத்து.
by mohan
written by mohan
மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் உமர் பரூக் இவர் அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகர் பகுதியில் சோபா மற்றும் பஞ்சு மெத்தை உற்பத்தி செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார். அந்த குடோனில் இருந்து அதிகமாகப் புகை வெளியே வந்ததை அடுத்து உள்ளே சென்று பார்த்தபோது உள்ளே இருந்த பஞ்சால் செய்யப்பட்ட பொருள்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.இதனை அடுத்து அனுப்பானடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அடிப்படையில் அனுப்பானடி நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மற்றும் மதுரை டவுன் தீயணைப்பு வாகனங்கள் மூலம் பத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். குடோனில் இருந்த சோபா மெத்தை என அனைத்து பொருட்களும் பஞ்சு மூலம் செய்யப்பட்டதால் தீ விபத்தில் மொத்தம் கருகி நாசமானது. இதனால் 20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்திற்கு காரணம் மின்கசிவால் அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று அவனியாபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊருக்குள் இருந்த பஞ்சு குடோனில் திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் அவனியாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை – மு க அழகிரி பிறந்த தினவிழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
by mohan
written by mohan
முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினார்கள் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிரி தலைமையில் முன்னாள் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முத்துப்பாண்டி நிர்வாகி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் முக அழகிரி பெயரில் சிறப்பு அர்ச்சனை மற்றும் பூஜை செய்தனர் பின்னர் வெடி வெடித்து தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர் பேருந்தில் பயணம் செய்த மக்களுக்கும் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள் இவ்விழாவை முன்னிட்டு ஆதரவற்றோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள் இதில் தமிழ்ச்சோலை பாலா ஊத்துக்குளி சின்னமணி கருப்பட்டி வருண் அம்மசியபுரம் கார்த்திக் தென்கரைபுதூர் முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர் இதேபோல் விக்கிரமங்கலம் அருகே கல்புலிச்சான்பட்டியில் பால்பாண்டி தலைமையில் முக அழகிரி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது இதில் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக காந்தி சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை
by mohan
written by mohan
தென்னிந்திய நடிகர்கள் சங்கம் மற்றும் ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி எஸ்.டி.சுப்ரமணியன் தலைமையில் குறும்பட இயக்குனரும், நடிகரும், சமூக சேவகருமான டாக்டர் ஜெ.விக்டர் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். நிகழ்வில் அப்பா பாலாஜி, பிரேம்ஜீ, திருமங்கலம் சரவணன், எ.எஸ்.சுரேஷ், அறிமுக நடிகர் அனுப்பானடி குமரேசன், திருமங்கலம் கவிதா, எஸ்.டி.எஸ்.மீனா, மாளவிகா, சுகந்தி, தேவகி, சித்ரா, ப்ரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டனர். செய்தி தொடர்பாளர் செந்தில்நாதன் ஏற்பாடு செய்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பள்ளிகொண்டா டோல்கேட்டில் குட்கா, புகையிலை பொருள் பறிமுதல். 3 பேர் கைது, ஒருவர் ஓட்டம்
by mohan
written by mohan
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா டோல்கேட்டில் நள்ளிரவு பள்ளிகொண்டா டோல்கேட்டில் வாகன தணிக்கை செய்துகொண்டு இருந்தனர்.அதில் ஒரு கார் நிற்காமல் சென்றது. உடனே சுதாகரித்து கொண்ட காவல்துறை விரட்டினர். அப்போது கார் நின்றது. அதிலிருந்த ஒரு நபர் தப்பி ஓடினான். மற்ற 3 பேரை காவலர்கள் பிடித்தனர்.காரில் சோதனை செய்த பேரது 8 மூட்டைகளில் குட்கா பொருளும், 10 மூட்டைகளில் புகையிலை பொருள்களும் இருந்தன.விசாரணையில் திருவள்ளூவர் மாவட்டம் மணவாளன் நகரை சேர்ந்த ரமேஷ் (27), மனோரி (26) மற்றும் பெங்களூரு சுல்தான்பூர் பகுதியை சேர்ந்த சுனில் (26) ஆகிய 3 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய ராஜய்தானை சேர்ந்த சத்தியபால் என்பவனை காவல்துறை தேடிவருகிறது..கைப்பற்றப்பட்ட குட்கா, மற்றும் புகையிலை மதிப்பு ரூ1.20 லட்சமாகும்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் அமமுகவினர் மாவட்ட செயலாளர் செயலாளர் முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம்
by mohan
written by mohan
வேலூர் மாநகரம்17 -வது வார்டு அமமுக மாவட்ட துணைசெயலாளர் மணிகண்டன் மற்றும் சிலர் அமமுகவிலிருந்து விலகிவேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்பு முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியமானார்கள்.உடன் பொருளாளர் எம்.மூர்த்தி மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் உத்தரவுப்படி சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வாட்டுகள் வெளிப்புறம், அவசர சிகிச்சை பிரிவு., வங்கி, தபால்நிலையம் உள்ளிட்ட பகுதியில் தூய்மைபணியாளர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கோவிலை சுற்றி கழிவுநீர் மன அமைதியை தேடி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு நோய்த்தொற்று உடன் வீடு திரும்பும் அவலம் கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம்
by mohan
written by mohan
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 79 வார்டு கூடலழகர் பெருமாள் கோவில் வடக்கு ரத வீதி அனுமார் கோவில் அருகே பல நாட்களாகவே சாலையில் கழிவுநீர் ஆறுபோல் ஓடுகிறது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் .மாநகராட்சி அதிகாரிகளிடமும் மற்றும் அப்பகுதி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி துணை ஆணையரிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என பக்தர்களும் அப்பகுதி மக்களும் குற்றம்சாட்டுகின்றனர் .கூடல் அழகர் பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மன அமைதியைத் தேடி வரும் பொழுது வீட்டுக்குச் செல்லும் பொழுது நோய்த்தொற்றை பெறுவதாக செல்வதாக குற்றச்சாட்டு வைக்கின்றனர். மேலும் கூடல் அழகர் பெருமாள் கோவில் அருகே அமைந்துள்ள அனுமார் கோவில் அருகே பாதாளச் சாக்கடை உடைந்து ஆறு போல சாலையில் ஓடுகிறது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர் எத்தனையோ முறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பெரும் குற்றம்சாட்டுகின்றனர். இனியாவது மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா எதிர்பார்ப்புடன் அப்பகுதி மக்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு எழுதிய 17 மாணவ மாணவியர் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் எம்பிபிஎஸ் படிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர்.மருத்துவ படிப்புக்கான நீட் தகுதித்தேர்வு முடிவுகள் நவம்பர் மாதம் வெளியானது. மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் மதுரை மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த 88 மாணவ மாணவியர் இதில் தேர்ச்சி பெற்றனர். இதில் மதுரை மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி பி.ஆர்.பிரியங்கா 720 மதிப்பெண்களுக்கு 414 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார். மதுரை மாவட்டம் எழுமலை அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஏ.ஹரிஷ்குமார் 373 மதிப்பெண் கள் பெற்று இரண்டாமிடமும், மதுரை மாநகராட்சி ஈவெரா நாகம்மையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி எஸ்.ஆஷிகா ராணி 353 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றுனர். மேலும் மாவட்டத்தில் தேர்வெழுதிய அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 288 பேரில், 88 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர்.இந்நிலையில் தற்போது மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பயின்று நீட் தகுதித் தேர்வில் வென்ற 17 மாணவ மாணவியர் மருத்துவ படிப்பில் இடம் கிடைத்துள்ளது. 14 பேர் எம்பிபிஎஸ் படிப்புக்கும் 3 பேர் பல் மருத்துவ படிப்புக்கும் தேர்வாகியுள்ளனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முதல் வெற்றிகரமான விமானத்தை உருவாக்கிய அமெரிக்க கண்டுபிடிப்பாளர் ரைட் சகோதரர், ஓர்வில் ரைட் நினைவு தினம் இன்று (ஜனவரி 30, 1948).
by mohan
written by mohan
ஓர்வில் ரைட் (Orville Wright) ஆகஸ்ட் 19, 1871ல் டேட்டன், ஒகையோ. அமெரிக்காவில் மில்டன் ரைட், சூசன் ரைட் இருவருக்கும் பிறந்தார். இவரது சகோதரர் வில்பர் ரைட். இருவரும் விமானத்தைக் கண்டறிந்த முன்னோடிகளும் ஆவர். சாதாரணப் பொதுப் பள்ளிக்கூடத்தில் தான் இருவரும் படித்தவர்கள். தொடக்கப் பள்ளியில் படிக்கும்போது ஓர்வில் குறும்புத்தனம் செய்தார். அதற்காகவே ஒரு முறை அவர் பள்ளியைவிட்டு வெளியேற்றப்பட்டார். இருவரும் ஏனோ கல்லூரிப் படிப்புக்கு அனுப்பப்படவில்லை. சிறு வயதில் அவர்கள் அறிவாற்றல் துறைகளில் தொடரவும், ஒன்றில் ஆர்வம் எழுந்தால், அதை ஆராயும்படிப் பெற்றோர் ஊக்க மூட்டினர். சுயமாய்த் தனித்துச் சிந்தனை புரிவது, ஒரு கொள்கையைப் பின்பற்றிச் செயல்படுவது, போன்ற நற்குணங்கள் இவர்கள் தந்தையிடம் கற்றவை. இவ்விருவரும் திருமணமே செய்துகொள்ளவில்லை. தந்தையிடம் கற்றதை விடத் தாயிடம், இருவரும் அறிந்து கொண்டது அதிகம். தாய் கல்லூரிக்குச் சென்று அல்ஜீப்ரா, ஜியாமிதி கற்றுக் கொண்டவள். பையன்களுக்குப் ‘பனிச் சறுக்கி எப்படி டிசைன் செய்வது என்று சொல்லிக் கொடுத்து, படத்தைத் தாளில் வரைய வைத்து, இருவரையும் பலகையில் செய்யக் கற்றுக் கொடுத்தவள் தாய்.
முதலில் தாளில் துள்ளியமாக வரைந்தால், பின்னல் அதைச் செய்யும் போது, முறையாக அமைக்கலாம் என்று சிறு வயதிலேயே சிறந்த செய்முறை வழியைப் புகட்டியவள் தாய். அதைப் பின்பற்றி இருவர் அமர்ந்து செல்லும் பனிச்சறுக்கி ஒன்றைப் பலகையில் செய்து, போட்டியில் கலந்து கொண்டு முதலாவதாகப் பனியில் சறுக்கி வெற்றியும் அடைந்தனர். ஒரு சமயம் தாயுடனும், தம்பியுடனும் டேடன் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்ற போது, பறவை ஒன்று வானிலிருந்து நீரில் பாய்ந்து, ஒரு மீனோடு மீண்டதைக் கண்டு, பதினொரு வயதுச் சிறுவன் வில்பர் பேராச்சிரியம் அடைந்தான். பறவை எப்படிப் பறக்க முடிகிறது, அம்மா? என்று வில்பர் கூர்மையாகக் கேட்டான். இறக்கைகளால் பறக்கிறது என்று கூறினாள் தாய். வில்பருக்குத் தாயின் பதில் திருப்தி அளிக்கவில்லை. எப்படி அம்மா? பறவை நீரில் பாயும் போதும், மீனோடு மேல் எழும் போதும், அதன் இறக்கைகள் அசையவே இல்லை அம்மா என்று தாயைக் குறுக்குக் கேள்வியில் மடக்கினான் வில்பர். தாயால் அவனுக்கு விளக்கம் தர முடியவில்லை. நமக்கும் இறக்கைகள் இருந்தால் நாமும் பறக்கலாம், இல்லையா அம்மா? என்றான் வில்பர்.
கடவுள் நமக்கு இறக்கைகள் அளிக்கவில்லை என்றாள் தாய். இறக்கைகளை நாமே தாயாரித்து மாட்டிக்கொள்ளலாம், அம்மா என்று தர்க்கத்தைப் பூர்த்தி செய்தான், வில்பர். 1878ல் அவருடைய தந்தை சர்ச் ஆஃப் தி யுனைடெட் பிரெத்ரென் இன் கிறிஸ்ட்டில் ஆயராக இருந்தார். பணிநிமித்தமாக அவர் அடிக்கடி பயணம் செய்தார். அவ்வாறு ஒருமுறை அவர்தம் பயணத்தின்போது எலிகாப்டர் பொம்மை ஒன்றை அவ்விரு குழந்தைகளுக்கும் வாங்கிவந்தார். வான்வழி தொலையளவு முன்னோடியான அல்ஃபோன்ஸ் பேனாட் என்ற பிரஞ்சு நாட்டவரின் கண்டுபிடிப்பை அடிப்படையாகக்கொண்டு காகிதம், மூங்கில், கார்க்கு, இரப்பர் வளையம் ஆகியவற்றால் ஒரு அடி நீளத்திற்கு அப்பொம்மை செய்யப்பட்டிருந்தது. அது உடையும் வரை வில்பரும் ஓர்வில்லும் விளையாடினர். பிறகு அவர்களாகவே அதனை மீளமைத்தனர். அந்தப் பொம்மைதான் தங்களுக்கு பறப்பதற்கான ஆர்வத்துக்கான ஒரு தொடக்கப் பொறியாக இருந்தது என்று பிற்பாடு அவர்கள் தங்கள் அனுபவம் பற்றிச் சுட்டிக்காட்டினர்.
தம் யூகிப்பில், திறமையில் ஆழ்ந்த நம்பிக்கையும், தீர்மானமான முடிவில் தளராத உறுதியும் கொண்டவர்கள். ஏமாற்றம், ஏலாமை, இல்லாமை எதுவும் மனதைக் கலைக்காத விடாமுயற்சி. இரு பையன்களும் சிறு வயதிலிருந்தே பொறிநுணுக்க அறிவும், ஒப்பில்லாத இயந்திரச் செய்திறமையும் கொண்டிருந்தார்கள். தாமே படித்து அறிந்த ஞானத்துடன் முதலில் அச்சு இயந்திரங்களைப் (Printing Machines) புதிதாய் உருவாக்கி, உற்பத்தி செய்தார்கள். அடுத்து சைக்கிள் வண்டிகளை உருவாக்கி, உற்பத்தியும் செய்து விற்றார்கள். இந்த வர்த்தகங்களில் சேர்த்த பணத்தொகையே பின்னால் அவர்கள் விமானத் துறை ஆராய்ச்சிகளுக்கு மிகவும் உதவின. 1896ல் ஆக்டேவ் சனூட்ஸ் (Octave Chanutes) எழுதிய பறக்கும் இயந்திரங்களின் வளர்ச்சி (Progress in Flying Machines) வெளியீடுகளை, ஆழ்ந்து படித்து அறிந்ததுதான், அவர்களது அடிப்படையான ஆரம்பப் பாடம். அறுபது வயதான பிரென்ச் அமெரிக்கன், சனூட்ஸ் தன் சகாகக்களுடன் சிகாகோவுக்கு அருகில் மிச்சிகன் ஏரியின் மணற்பாங்கான தளத்தில், ஐந்து விதப் பொறியிலா ஊர்திகளை (Gliders) ஆயிரம் முறைக்கு மேல் பறக்க விட்டு முயன்றிருப்பவர். 1900ல் ரைட் சகோதரர்கள் டேடனில் தம் ஊர்திச் சோதனைகளை ஆரம்பித்த போது, சனூட்ஸ் அவரது ஆழ்ந்த தோழனாகி, அடிக்கடி கடிதம் எழுதித் தொடர்பு கொண்டிருந்தார்.
ரைட் சகோதரர்கள் விமானத் துறையில் அடி வைத்த காலம், அவர்கள் முன்னேறத் தகுந்த தருணமாக இருந்தது. 1896ல் தான் ஹென்ரி ஃபோர்டு தனது முதல் மோட்டார் காரைச் செய்தார். அப்போதுதான் டீசல் எஞ்சின், பெட்ரோல் எஞ்சின் புதிதாகத் தோன்றி வளர்ச்சி பெற்ற காலம். விமான நகர்ச்சி (Aerodynamics), கட்டமைப்புப் பொறித்துறை (Structural Engineering) ஆகிய பொறியியல் ஆக்க நுட்பங்கள் விருத்தியான காலம். இவற்றை எல்லாம் ஒன்றாய் இணைத்து வானத்தில் விமானத்தைப் பறக்க விடுவது, ரைட் சகோதரருக்கு ஓர் அரிய பெரிய வாய்ப்பாக அமைந்தது. ஜெர்மன் நிபுணர், ஆட்டோ லிலியென்தால் ‘பொறியிலா ஊர்தியில் வெற்றிகரமாய்ச் செய்த பல சோதனைகளை ஆழ்ந்து படித்த, வில்பர்தான் முதலில் பறக்கும் இயந்திரத்தில் மோக முற்றார். 1896ல் லிலியென்தால் தனது சோதனையின் போது, ஊர்தி கீழே விழுந்து மரணம் அடைந்தார். 1899 ஆண்டு ஒரு சமயம், வில்பர் கழுகு பறப்பதை ஆழ்ந்து ஆராய்ந்த பின், விமானம் விழாமல் சீராய்ப் பறந்து செல்ல, மூன்று அச்சு முறையில் (Three Axes) இயங்கும் பொறியமைப்பு இருக்க வேண்டும், எனக் கண்டு பிடித்தார். அதாவது, முன் நகர்ச்சி (Thrust), மேல் எழுச்சி (Lift), திசை திருப்பி (Turning) ஆகிய ‘முப்புறக் கட்டுப்பாடு‘ என்ற புதிய பறப்பியல் நியதியைச் சிந்தித்து உருவாக்கினார்.
பறவையைப் போன்று, பறக்கும் இயந்திரம் பக்க வாட்டில் மிதக்க முடிய வேண்டும். மேலே உந்தி ஏறிச் செல்லவோ, கீழே இறங்கி நிற்கவோ இயல வேண்டும். இடப் புறமோ, வலப் புறமோ திரும்ப முடிதல் வேண்டும். தேவைப்பட்டால், இவற்றில் இரண்டு அல்லது மூன்று வித இயக்கங்களையும் ஒரே சமயத்தில் நிகழ்த்த வசதிகள் இருக்க வேண்டும். முன்னகர்ச்சிக்கு வலுவான பளுவற்ற எஞ்சின் தேவைப்பட்டது. எழுச்சி அளிப்பதற்கு ‘தூக்கிகள் (Elevators) வேண்டியிருந்தன. பக்க வாட்டில் திருப்ப திருப்பி (Rudder) வால்புறம் மாட்டப்பட்டது. விமான இயக்கத்தில் ரைட் சகோதரருக்குப் ‘பறப்பியல் கட்டுப்பாடு ‘ (Flight Control) மிகப் பிரதானம் என்று தோன்றியது. கழுகு, பருந்துகள் உருளும் போது இறக்கைகள் சுழல்வதைக் கண்டார்கள். 1899ல் முதன் முதல் அவர்கள் சோதனை செய்த ‘இரு தளப் பட்டத்தில் (Bi-Plane Kite) சுழலும் இறக்கைகளை பிணைத்திருந்தார்கள். அவ்வாறு இறக்கைகளில் அமைத்ததால் விமானம் திரும்பிடும் போது, ஒருபுறம் எழுச்சி உயர்ந்தும், மறுபுறம் எழுச்சி இணையாகத் தாழ்ந்தும், காற்றை எதிர்த்துச் சீராகத் திரும்ப முடிந்தது.
எஞ்சின் பொருத்திய முதல் விமானத்தை இயக்கியதோடு, முப்புற அச்சுக் கட்டுப்பாடுப் பொறியமைப்பைக் கண்டுப்பிடித்து வெற்றிகரமாய்ப் பயன்படுத்திப் பறப்பு இயந்திரவியலைச் (Aerodynamics) செப்பனிட்டுச் சிறப்பித்த பெருமை ரைட் சகோதரர்கள் இருவர்களுக்கு மட்டுமே சாரும். டிசம்பர் 17, 1903ல் 12 H.P. பெட்ரோல் எஞ்சின் கொண்ட ‘கிட்டி ஹாக் (Kitty Hawk) என்னும் Flyer பூமிக்கு மேல் முதலில் 12 வினாடிகள், கடைசியில் 30 mph வேகத்தில், 59 வினாடிகள் 852 அடி தூரம் பறந்தது. விமானத்தின் எடை 750 பவுண்டு. இறக்கையின் நீளம் 40 அடி 4 அங்குலம். சரித்திரப் புகழ் பெற்ற இந்தப் பயணத்தைச் செய்த முதல் வீரர், ஆர்வில் ரைட். பிறகு இரண்டு ஆண்டுகள் செம்மைப் படுத்தப்பட்டு, சிறப்பிக்கப்பட்டு, 1905ல் உலகின் முதல் பறக்கும் விமானம், Flyer III உருவானது. அது வானில் 38 நிமிடங்கள் நேரம் பறந்து, 24 மைல் கடந்தது. சிரமமின்றி எட்டாம் எண்போல் வட்ட மிட்டது, பக்க வாட்டில் திரும்பியது. 1908ல் ஐந்து மாதங்களில் வில்பர் மட்டும், 100 தடவைக்கும் மேல் 25 மணி நேரங்கள் பறந்து காட்டியிருக்கிறார். தொடந்து நீண்ட நேரம் பயணம் செய்தது, 2 மணி 20 நிமிடங்கள் பயணம் தடைப் பட்டதற்குப் பெரும்பான்மையான காரணம், எஞ்சினில் பெட்ரோல் தீர்ந்து போனதுதான், எஞ்சினும் சிறியது, பெட்ரோல் கலனும் சிறியது.
1909ல் அமெரிக்கா செப்பனிடப்பட்டு சீர் செய்யப்பட்ட முதல் யுத்த விமானத்தை ரைட் சகோதரர் உதவியில் தயார் செய்து உலகிலே முதன்மையானது. திருமணம் செய்து கொள்ளாமல், வாழ்நாள் முழுதும் விமானத்துறைப் படைப்புக்கே தங்களை அர்ப்பணித்த பிரம்மச்சாரி வில்பர் ரைட் 1912ல் ஒரு முறை தொழில்முறைப் பயணமாகப் போஸ்டன் சென்றிருந்த போது உடல்நலக் குறைவு ஏற்பட்டது. டேய்டனுக்குத் திரும்பிய பிறகு டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். நோயின் தீவிரத்தால் தன்நினைவின்றி பல நாட்கள் இருந்தார். முதல் வெற்றிகரமான விமானத்தை உருவாக்கிய ஓர்வில் ஜனவரி 30, 1948ல் தனது 76வது அகவையில் டேட்டன், அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் நள்ளிரவில் அதிவேகமாக வந்த கார் சிக்னல் கம்பத்தில் மோதிய விபத்தில் 4 பேருக்கு காயம் – கார் முழுவதும் எரிந்து சேதம்
by mohan
written by mohan
மதுரை சிம்மக்கல் பகுதியில் இருந்து ரயில் நிலையம் செல்லும் சாலையின் வழியாக நள்ளிரவில் வந்து கொண்டிருந்த கார் அதிக வேகத்துடன் சேதுபதி பள்ளி அருகேயுள்ள டிராபிக் சிக்னல் கம்பத்தில் மோதி அருகில் பூட்டி இருந்த செல்போன் கடையில் இடித்து விபத்துக்குள்ளானது. இதனால் காரில் பயணத்தில் நான்கு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து கார் மோதிய விபத்தில் காரில் ஏற்பட்ட தீயானது மலமலவென பரவி முற்றிலுமாக எரிய துவங்கியுள்ளதால் மதுரை டவுன் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மதுரை டவுன் தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமை வந்த வீரர்கள் தீயை அணைத்தனர். தொடர்ந்து காரை ஓட்டி வந்த நபர் தபால்தந்தி நகரை சேர்ந்த சுகன் என்பவர் தனது நண்பர்களுடன் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சம்பவம் குறித்து திடீர்நகர் போக்குவரத்து துறை புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திரிதடையம் கண்டுபிடிப்பு மற்றும் மீக்கடத்துதிறன் கோட்பாட்டினை சீர்செய்தமைக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசை இரு தடவைகள் வென்ற ஜான் பார்டீன் நினைவு தினம் இன்று (ஜனவரி 30, 1991).
by mohan
written by mohan
ஜான் பார்டீன் (John Bardeen) மே 23, 1908ல் விஸ்கான்சின் மாடிசனில் பிறந்தார். அவர் விஸ்கான்சின் மருத்துவப் பள்ளியின் முதல் டீன் சார்லஸ் பார்டீனின் மகன். பார்டீன் மாடிசனில் உள்ள பல்கலைக்கழக உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். 1923ல் 15 வயதில் பள்ளியில் பட்டம் பெற்றார். அவர் பல ஆண்டுகளுக்கு முன்பே பட்டம் பெற்றிருக்கலாம், ஆனால் அவர் வேறொரு உயர்நிலைப் பள்ளியில் படிப்புகள் எடுத்ததாலும், அவரது தாயார் இறந்ததாலும் இது ஒத்திவைக்கப்பட்டது. அவர் 1923ல் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் நுழைந்தார். கல்லூரியில் படித்தபோது, அவர் ஜீட்டா சை சகோதரத்துவத்தில் சேர்ந்தார். அவர் தனது தந்தையைப் போன்ற கல்வியாளராக இருக்க விரும்பாததால் பொறியியல் தேர்வு செய்தார். பொறியியல் நல்ல வேலை வாய்ப்புகளைக் கொண்டுள்ளது என்று அவர் உணர்ந்தார்.
பார்டீன் 1928 ஆம் ஆண்டில் விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் தனது இளங்கலை அறிவியல் பட்டத்தைப் பெற்றார். சிகாகோவில் வேலை செய்ய ஒரு வருடம் விடுமுறை எடுத்த போதிலும் அவர் 1928ல் பட்டம் பெற்றார். தனக்கு ஆர்வமுள்ள இயற்பியல் மற்றும் கணிதத்தில் அனைத்து பட்டப்படிப்பு படிப்புகளையும் எடுத்தார். வழக்கமான நான்கிற்கு பதிலாக ஐந்து ஆண்டுகளில் பட்டம் பெற்றார். இது லியோ ஜே. பீட்டர்ஸால் மேற்பார்வையிடப்பட்ட அவரது மாஸ்டர் ஆய்வறிக்கையை முடிக்க அவருக்கு நேரத்தை அனுமதித்தது. 1929 ஆம் ஆண்டில் விஸ்கான்சினிலிருந்து மின் பொறியியலில் தனது மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் பட்டம் பெற்றார். பார்டீன் விஸ்கான்சினில் தங்கியிருப்பதன் மூலம் தனது படிப்பை வளர்த்தார். ஆனால் இறுதியில் அவர் பிட்ஸ்பர்க்கை தளமாகக் கொண்ட வளைகுடா எண்ணெய் கழகத்தின் ஆராய்ச்சிப் பிரிவான வளைகுடா ஆராய்ச்சி ஆய்வகங்களுக்கு வேலைக்குச் சென்றார். கணித இயற்பியலில் ஆய்வு மேற்கொண்டு பிறின்சுடன பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
1930 முதல் 1933 வரை, காந்த மற்றும் ஈர்ப்பு ஆய்வுகளின் விளக்கத்திற்கான வழிமுறைகளை மேம்படுத்துவதில் ஒரு புவி இயற்பியலாளராக பார்டீன் அங்கு பணியாற்றினார். அவரது ஆர்வத்தைத் தக்கவைக்க வேலை தவறிய பின்னர், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் பட்டதாரி திட்டத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டார். பட்டதாரி மாணவராக, பார்டீன் கணிதம் மற்றும் இயற்பியல் பயின்றார். இயற்பியலாளர் யூஜின் விக்னரின் கீழ், திட-நிலை இயற்பியலில் ஒரு சிக்கல் குறித்து தனது ஆய்வறிக்கையை எழுதினார். தனது ஆய்வறிக்கையை முடிப்பதற்கு முன், அவருக்கு 1935ல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஃபெலோஸ் சொசைட்டியின் ஜூனியர் ஃபெலோ என்ற பதவி வழங்கப்பட்டது. அடுத்த மூன்று ஆண்டுகளை அவர் 1935 முதல் 1938 வரை இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவர்களுடன் பணியாற்றினார். ஜான் ஹாஸ்ப்ரூக் வான் வெலெக் மற்றும் பெர்சி வில்லியம்ஸ் பிரிட்ஜ்மேன் உலோகங்களில் ஒத்திசைவு மற்றும் மின் கடத்துதலில் உள்ள சிக்கல்கள் குறித்து, மேலும் கருக்களின் நிலை அடர்த்தி குறித்தும் சில வேலைகளைச் செய்தார்.
டிசம்பர் 23, 1947ல் பார்டீன் மற்றும் பிராட்டன் ஆகியோர் ஷாக்லி இல்லாமல் பணிபுரிந்தனர். அவர்கள் ஒரு புள்ளி-தொடர்பு டிரான்சிஸ்டரை உருவாக்குவதில் வெற்றி பெற்றனர். அடுத்த மாதத்திற்குள், பெல் லேப்ஸின் காப்புரிமை விண்ணப்பங்களில் பணியாற்றத் தொடங்கினர். அக்டோபர் 22, 1925ல் கனடாவில் தனது மெஸ்ஃபெட் போன்ற காப்புரிமையை தாக்கல் செய்த ஜூலியஸ் லிலியன்ஃபெல்ட் என்பவரால் 1930 ஆம் ஆண்டில் ஷாக்லியின் கள விளைவு கொள்கை எதிர்பார்க்கப்பட்டு காப்புரிமை பெற்றது என்பதை பெல் லேப்ஸின் வழக்கறிஞர்கள் விரைவில் கண்டுபிடித்தனர். டிரான்சிஸ்டரின் கண்டுபிடிப்புக்கான பெருமையின் பங்கை ஷாக்லி பகிரங்கமாக எடுத்துக் கொண்டார். இது ஷாக்லியுடனான பார்டீனின் உறவு மோசமடைய வழிவகுத்தது. இருப்பினும், பெல் லேப்ஸ் நிர்வாகம் மூன்று கண்டுபிடிப்பாளர்களையும் ஒரு குழுவாக தொடர்ந்து வழங்கியது. ஷாக்லி இறுதியில் பார்டீன் மற்றும் பிராட்டனை கோபப்படுத்தினார் மற்றும் அந்நியப்படுத்தினார். மேலும் அவர் இருவரையும் சந்தி டிரான்சிஸ்டரில் வேலை செய்வதைத் தடுத்தார். பார்டீன் சூப்பர் கண்டக்டிவிட்டிக்கான ஒரு கோட்பாட்டைப் பின்தொடரத் தொடங்கினார். 1951ல் பெல் லேப்ஸை விட்டு வெளியேறினார். பிராட்டன் ஷாக்லியுடன் மேலும் பணியாற்ற மறுத்து மற்றொரு குழுவுக்கு நியமிக்கப்பட்டார்.
“டிரான்சிஸ்டர்” தொலைக்காட்சிகள் மற்றும் ரேடியோக்களில் மாற்றப்பட்ட வெற்றிடக் குழாய்களின் அளவு 1/50 ஆகும். இது மிகக் குறைந்த சக்தியைப் பயன்படுத்தியது, மிகவும் நம்பகமானது, மேலும் இது மின் சாதனங்கள் ஆக அனுமதித்தது. திரிதடையம் (Transistor) திரான்சிஸ்டர் என்னும் மின்னனியல் கருவி. இது அடிப்படையான மின் குறிப்பலை பெருக்கியாகவும், மின் குறிப்பலைகளை வேண்டியவாறு கடத்தவோ அல்லது கடத்தாமல் இருக்கவோச் செய்யப் பயன்படும் நிலைமாற்றிகளாகவும் (switches) பயன்படும் ஓர் அரைக்கடத்திக் கருவி ஆகும். இன்றைய கணினிகள், அலைபேசிகள் முதல் கணக்கற்ற மின்னனியல் கட்டுப்பாட்டுக் கருவிகள் யாவும் இந்தத் திரிதடையங்களால் பின்னிப் பிணைந்த மின்சுற்றுகளால் ஆனவை. அமெரிக்கக் கடல் போர் ஆய்வகத்தில், இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் பணியாற்றினார். அதன் பின் பெல் தொலைபேசி ஆய்வகத்திலும் பணியில் இருந்தார்.
இயற்பியலுக்கான நோபல் பரிசை இரு தடவைகள் வென்ற ஒரே ஒருவர் இவராவார். முதலில் 1956 ஆம் ஆண்டில் திரிதடையத்தைக் கண்டுபிடித்தமைக்காக வில்லியம் ஷாக்லி, வால்ட்டர் பிராட்டன் ஆகியோருடனும், 1972 ஆம் ஆண்டில் மீக்கடத்துதிறன் கோட்பாட்டினை சீர்செய்தமைக்காக லியோன் கூப்பர், ஜான் சிறீபர் ஆகியோருடனும் இணைந்து இரு தடவைகள் நோபல் பரிசுகளை வென்றார். பின்நாளைய மீகடத்தல் ஆய்வுகளுக்கு இவர்கள் கண்டுபிடிப்பே அடிப்படையாகும். குறைகடத்திகளின் பண்புகளைப் பற்றி விரிவாக ஆய்ந்துள்ளார். 1990 ஆம் ஆண்டில், ஜான் பார்டீன் லைஃப்’ இதழின் “நூற்றாண்டின் புகழ்பெற்ற 100 அமெரிக்கர்கள்” பட்டியலில் இடம்பெற்றார். இரு தடவைகள் வென்ற ஜான் பார்டீன் ஜனவரி 30, 1991ல் தனது 82வது அகவையில் மாசசூசெட்ஸில் உள்ள பாஸ்டனில் உள்ள ப்ரிகாம் மற்றும் மகளிர் மருத்துவமனையில் இதய நோயால் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் வைகை ஆற்றில் செம்பு உலோகத்தால் ஆன விநாயகர் சிலை கிடப்பதாக சோழவந்தான் போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வைகை ஆற்றில் கிடந்த விநாயகர் சிலையை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர் ஒன்னே முக்கால் அடி உயரம் கொண்ட ஒன்றரை கிலோ எடை கொண்ட செம்பு உலோகத்தால் ஆனது என்று விசாரணையில் தெரியவந்தது இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலை தடுப்பு பிரிவினருக்கு தகவல் கொடுத்துள்ளனர் இந்த சிலை கருப்பட்டி கிராமத்தில் வைகை ஆற்றில் எப்படி வந்தது இந்த சிலையை எங்காவது திருடி வந்து உள்ளனரா இந்த சிலை செம்பு உலகத்தால் உள்ளதால் சிலை திருடியவர்கள் இங்கு விட்டுச் சென்றுள்ளனர் என்று போலீசார் பல கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்திய, இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தி நினைவு தினம் இன்று (ஜனவரி 30, 1948).
by mohan
written by mohan
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (Mohandas Karamchand Gandhi) அக்டோபர் 2, 1869ல் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். மகாத்மா காந்தியின் தந்தையின் பெயர் கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி. தாயார் பெயர் புத்லிபாய் ஆகும். காந்தி தனது 13ஆம் வயதில் தம் வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார். பின்னாளில் இருவரும் நான்கு ஆண் மகன்களைப் பெற்றெடுத்தனர். ஹரிலால் (1888), மணிலால் (1892), ராம்தாஸ் (1897), தேவதாஸ் (1890). மோகனதாஸ் கரம்சந்த் காந்தி, தனது 16வது வயதில் தந்தையை இழந்தார். பள்ளிப்படிப்பில் ஒரு சுமாரான மாணவனாகவே காணப்பட்டார் காந்தி. தனது 18ஆம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பாரிஸ்டர் (barrister) எனப்படும் வழக்குரைஞர் படிப்பிற்காக காந்தி இங்கிலாந்து சென்றார். தன் படிப்பை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்குரைஞராக பணியாற்றினார். இது வெற்றிகரமாக அமையாததால் தன் அண்ணன் இருப்பிடமான ராஜ்கோட்டிற்கு சென்ற காந்தி, அங்கேயுள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிவங்களை நிரப்பும் எளிய பணியில் ஈடுபட்டார். ஆனால் அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய தகராறால் இவ்வேலையும் பறிபோனது. இச்சமயத்தில் தென்னாப்பிரிக்காவில் தன் தகுதிக்கேற்ற வேலை ஒன்று காலியிருப்பதாக அறிந்த காந்தி, 1893 ஏப்ரல் மாதம் தாதா அப்துல்லாஹ் கம்பெனி எனும் இந்திய நிறுவனம் ஒன்றின் உதவியுடன் உடனே அங்கு பயணமானார்.
தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. இதுவரை அரசியல் ஈடுபாடில்லாது தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே கவனித்து வந்த இளைஞராயிருந்தார் காந்தி. தென்னாப்பிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்க உதவியது. அங்குள்ள நாட்டல் (Natal) மாகாணத்தின் டர்பன் (Durban) நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஒருநாள் இந்திய வழக்கப்படி தலைப்பாகை அணிந்து வழக்காடச்சென்ற காந்தியிடம் அத்தலைப்பாகையை விலக்குமாறு நீதிமன்றத்தின் நீதிபதி உத்தரவிட்டார். காந்தியோ இவ்வுத்தரவை எதிர்க்கும் பொருட்டு நீதிமன்றத்தை விட்டு உடனே வெளியேறினார். பிறகொரு நாள் பிரிட்டோரியா (Pretoria) செல்வதற்காக தகுந்த பயணச்சீட்டுடன் தொடருந்தில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்த காந்தி, அவர் ஒரு வெள்ளையர் இல்லை என்ற காரணத்திற்காக, ஆங்கிலேய அதிகாரி ஒருவரால் (Pietermaritzburg) தொடருந்து நிலையத்தில் பெட்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். வெள்ளையர் அல்லாத ஒரே காரணத்தால் இது போன்று பல இன்னல்களை காந்தி அனுபவித்தார். இதன் மூலம் தென்னாப்பிரிக்காவின் கறுப்பின மக்களும் அங்கே குடியேறிய இந்தியர்களும் படும் இன்னல்களை காந்தி நன்குணர்ந்தார்.
தனது ஒப்பந்தக்காலம் முடிவடைந்து இந்தியா திரும்ப காந்தி தயாரானபோது, அங்குள்ள இந்தியரின் வாக்குரிமையைப் பறிக்கும் தீர்மானத்தை நாட்டல் சட்டப்பேரவை இயற்ற இருப்பதாக செய்தித்தாளில் படித்தறிந்தார். இதை எதிர்க்குமாறு காந்தி அவரது இந்திய நண்பர்களிடம் அறிவுறுத்தினார். அவர்களோ, தங்களிடம் இதற்குத் தேவையான சட்ட அறிவு இல்லையெனக் கூறி, காந்தியின் உதவியை நாடினர். காந்தியும் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, தன் தாயகம் திரும்பும் முடிவை மாற்றிக்கொண்டு இத்தீர்மானத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் அங்குள்ள இந்தியர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பிறகு 1894ம் ஆண்டு நாட்டல் இந்திய காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கி அதற்கு அவரே பொறுப்பாளரானார். இதன் மூலம் நாட்டல் மாகாணத்திலிருந்த இந்தியர் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களை தங்கள் உரிமைக்காக குரலெழுப்ப ஊக்கப்படுத்தினார். 1906ஆம் ஆண்டு ஜோகார்னஸ்பேக் நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் முதன்முறையாக சத்தியாகிரகம் எனப்படும் அறவழிப்போராட்டத்தை பயன்படுத்தினார். அகிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல் ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும். இந்த காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர்.
தொடக்கத்தில் ஆங்கில அரசாங்கம் இவர்களை எளிதாக அடக்கியது போல் தோன்றியது. பின்னர் பொதுமக்களும் ஆங்கில அரசாங்கமும் இவர்களின் உண்மையான மற்றும் நேர்மையான வாதங்களை புரிந்துகொண்டு இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்கும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு தனது அறவழிப் போராட்டத்தின் மூலம் தென்னாப்பிரிக்க வாழ் இந்தியரின் சமூக நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்ட காந்தி தாயகம் திரும்பினார். ஜனவரி 9, 1915ல் மும்பை துறைமுகத்தில் காந்தி இறங்கியபோது உடையில் அடியோடு உருமாறியிருந்தார். தழையத் தழையக் கச்சமிட்டுக் கட்டிய மில் வேட்டி, தொள தொள ஜிப்பா, அங்கவஸ்திரம், தலையில் பெரிய முண்டாசு சகிதம் ஒரு கத்தியவாரி விவசாயி உடையில் காட்சியளித்தார். அப்பல்லோ பந்தர் துறைமுகத்தில் இறங்கிய காந்தி – கஸ்தூரிபா தம்பதி வெளியே வந்தபோது ஒரு கோலாகல வரவேற்பளிக்க, மிதவாத அரசியல் தலைவர் கோபாலகிருஷ்ண கோகலே ஏற்பாடு செய்திருந்தார். மேல் விரிப்பு திறந்த மோட்டார் காரில் காந்தியையும் அவரது மனைவியையும் அமரச் செய்து ஊர்வலமாக இட்டுச் சென்றார். தற்போது இந்நாளை நினைவு கூர்ந்து வெளிநாடுவாழ் இந்தியர் நாள் கொண்டாடப்படுகின்றது. இந்தியாவுக்கு வந்து சேர்ந்த மூன்றாம் நாள், ஜனவரி 12, 1915 அன்று பம்பாய் பெட்டார் சாலையில் மவுண்ட் பெடிட் வளாகத்தில் காந்திஜிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்காவில் காந்தி தலைமையேற்று நடத்திய போராட்டங்களைப் பற்றி இந்திய மக்கள் அறிந்திருந்தனர். காந்திக்கு, கோபால கிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் போன்றோருடன் நட்பு ஏற்பட்டது. காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார். 1924ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைமையேற்றவுடன் காங்கிரசில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார். அறப்போராட்ட வழிமுறைகளையும் சுதேசி போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார். பிப்ரவரி 1930ல் ஆங்கிலேய அரசு, இந்தியாவில் இந்தியர்களால் தயாரிக்கப்படும் உப்புக்கு வரி விதித்தது. மேலும், இந்தியாவில் இந்தியரால் தயாரிக்கப்படும் உப்பை பிரிட்டிஷ் அரசாங்கத்தை தவிர வேறு யாரும் விற்கக் கூடாது என்ற சட்டத்தையும் இயற்றியது. இதை விலக்கிக் கொள்ளுமாறு காந்தி பிரிட்டிஷாரிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. சத்தியாகிரக முறையில் இதை எதிர்க்க முடிவெடுத்த காந்தி மார்ச் 2, 1930 அன்று 78 சத்தியாகிரகிகளுடன் அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார். 23 நாட்கள் நடைப் பயணத்திற்குப் பிறகு, தன் சகாக்களுடன் தண்டி கடற்கரை வந்து சேர்ந்த காந்தி, அங்கிருந்த கடல் நீரை காய்ச்சி உப்பு தயாரித்து பிரிட்டிஷ் சட்டத்திற்கு எதிராக பகிரங்கமாக பொதுமக்களுக்கு விநியோகித்தார். மேலும் இந்தியாவில் கடலோரத்தில் இருந்த அனைத்து இந்தியர்களையும் இது போல் உப்பு தயாரித்து பயன்படுத்தச் சொன்னார். இந்தியாவின் பல இடங்களில் இது போல் நடந்தது. காந்தி உட்பட பல்லாயிரக் கணக்கான இந்தியர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.
வேறு வழியில்லாமல் பிரிட்டிஷ் அரசாங்கம் காந்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தி இறுதியில் வரியை நீக்கிக் கொண்டது. உப்பு சத்தியாகிரகம் என்று அழைக்கப்படும் இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது. 1942ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும் காந்தி பெரும் பங்கு வகித்தார். இது போன்ற பல போராட்டங்களின் முடிவில் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது. ஆனால் காந்தியோ, சுதந்திர கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை நினைத்து மனம் வருந்தி துக்கம் அனுசரித்தார். காந்திஜி இந்திய விடுதலைக்கும், சமூக நீதியை வலியுறுத்தியும், சமய நல்லிணக்கதிற்கும், தீண்டாமைக்கு எதிராகவும், முழு மதுவிலக்கு கோரியும் 17 முறை, 139 நாட்கள் உண்ணாநிலைப் போராட்டங்கள் மேற்கொண்டார். அவற்றில் மூன்று முறை 21 நாட்கள் கொண்ட தொடர் உண்ணாநிலைப் போராட்டங்களை நடத்தினார். காந்திக்கு மகாத்மா என்னும் கௌரவத்தை வழங்கியவர் இரவீந்திரநாத் தாகூர் ஆவார். மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு, ஜனவரி 30 ஆம் நாள் மாலை (5:17 மணி) தன் வாழ்நாளில் இறுதியாக 144 நாட்கள் தங்கியிருந்த டில்லி பிர்லா மாளிகை (காந்தி சமிதி) தோட்டத்தில் நாதுராம் கோட்ஸேவால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மகாத்மா காந்தி மறைந்த நாளான ஜனவரி 30 அன்று, இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவாக, தியாகிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
பகவத் கீதை, ஜைன சமய கொள்கைகள், லியோ டால்ஸ்டாயின் எழுத்துக்கள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட காந்தி, சத்தியம், அகிம்சை ஆகிய கொள்கைகளை தன் வாழ்நாள் முழுவதும் விடாமல் கடைபிடித்தார். அசைவ உணவுகளை தவிர்க்கும் வைணவ குடும்பத்தில் பிறந்த காந்தி, சிறு வயதில் புலால் உணவை சிறிது உண்டாலும், பின்னர் சைவ உணவையே, குறிப்பாக பழங்கள், கடலை, ஆட்டுப்பால் போன்றவற்றையே உண்டு வாழ்ந்தார். சைவ உணவே, அசைவ உணவை விட மனித உடலுக்கு ஆரோக்கியமானது என்று தன் சோதனைகள் மூலம் அறிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 1902 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பிரம்மச்சரிய விரத்தையும் கடைபிடித்தார். இவர் தனது காமத்தை வெல்லும் பொருட்டு பல்வேறு சோதனைகளைச் செய்து வந்தார். அவை பெரும் விமரிசனத்திற்கு உள்ளாகின. அவரது பரிசோதனைகளை அவரது மனைவியின் அனுமதியுடன் தான் செய்தார். இவை இன்றளவும் சரியாகப் புரிந்து கொள்ளப்படாமல் விமர்சிக்கப்படுகின்றன. வாரத்திற்கு ஒருநாள் மௌன விரதம் மேற்கொண்டார். தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியவுடன், மேல்நாட்டு உடை அணிவதைத் தவிர்த்து இந்திய உடைகளையே அணியத் தொடங்கினார். உள்நாட்டில் தயாரிக்கப்படும் காதி உடையையே இந்திய மக்கள் உடுத்தவேண்டும் என்று அறிவுறுத்தினார். காந்தி குஜராத்தி மொழியில் எழுதிய சுயசரிதை, சத்திய சோதனை என்ற பெயரில் தமிழ் மொழியிலும் An Autobiography: The Story of My Experiments with Truth என்ற பெயரில் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு காந்திக்கு அவரது தியாகத்தைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில் சென்னை கிண்டியில் காந்தி மண்டபம் மற்றும் அருங்காட்சியகம் அமைத்துள்ளது. மதுரையில் இராணி மங்கம்மாள் காலத்தில் அமைக்கப்பட்ட கட்டிடத்தில் 1959 முதல் காந்தி அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இங்கு அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரிக் கரையில் நினைவு மண்டபம் அமைத்துள்ளது. இங்கு அண்ணல் காந்தியடிகளின் மார்பளவு சிலை ஒன்று வளாகத்திலும், மற்றொன்று அருங்காட்சியகத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆயிரம் பேர்கள் அமரக்கூடிய அளவில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகமும் நூலகமும் இங்குள்ளது. இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஷகீத் பழனி பாபா நினைவாக ஆர் எஸ் மங்கலம் பழனி பாபா மாணவர்கள் அறக்கட்டளையின் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வினை அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் முகமது அஸ்மான் ஒருங்கினைத்து இருந்தார். இதில் சிறப்பு விருந்தினர்களாக ஆர் எஸ் மங்களம் காவல் ஆய்வாளர் தேவி முன்னிலை வகித்தார் மற்றும் நண்ப புஹாரி, சதாம்,தமுமுக பட்டானி மீரான், தி மு க நகர் செயளார் புரோஸ்கான், கோடை இடி கேசர்கான், ஒன்றிய செயளார் மோகன்,வேல் முருகன்,கந்தசாமி,சசிகுமார்,சாக்கல்லா,ராஜா,அலிசுல்தான்,ஐமாத் நிர்வாகி சேக்,மலேசிய சாகுல், செய்யதலி,பகுர்தீன்,வைரவன் நசீர் மற்றும் பழனி பாபா மாணவர்கள் அறக்கட்ட்ளை நிர்வாகி கலந்துகெண்டு சிறப்பித்தனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம்,சோழவந்தான் அருகே செல்லம்பட்டி ஒன்றியம், பானாமூப்பன்பட்டி கிராமத்தில் கலைஞர் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு, ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜன் தலைமை தாங்கி,குத்துவிளக்கேற்றி,முகாமை தொடங்கி வைத்தார்.வட்டார மருத்துவஅலுவலர் பாண்டியராஜன்,தலைமைஆசிரியர் மீனா ஆகியோர் முன்னிலை வைத்தனர்.வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜதுரைபாண்டி வரவேற்றார். இம்முகாமில், மருத்துவர்கள் விஜயலட்சுமி, ஆர்த்தி,ராமச்சந்திரன் ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.இதில், சுகாதாரஆய்வாளர்கள் முத்து மாயன்,விக்கிரமங்கலம் சுரேஷ்,செல்லம்பட்டி சுரேஷ், அருள்,சோலைமலைசெல்வன் உட்பட 60 முன்கள மருத்துவ பணியாளர்கள் பங்கேற்றனர்.அங்கன்வாடி மேற்பார்வையாளர் கருப்பாயி உள்பட பணியாளர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு கண்காட்சி வைத்திருந்தனர். ஊராட்சி செயலாளர் பாண்டி நன்றி கூறினார்.இம்முகாமில், பானாமூப்பன்பட்டி,போலக்காபட்டி, கரட்டுப்பட்டி,காந்திநகர்,ரெட்டியபட்டி உள்பட இப்பகுதியில் உள்ள கிராமத்திலிருந்து நூற்றுக்கணக்கானோர் இந்த சிறப்பு முகாமில் ,750 பேர் சிகிச்சை பெற்று மருந்து மாத்திரைகள் இலவசமாக பெற்றுச்சென்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.