மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டி ஊராட்சியைச் சேர்ந்தது டி.குன்னூத்துப்பட்டி.இக்கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் உசிலம்பட்டி பகுதிகளில் நேற்று இரவில் இருந்து மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் டி.குன்னூத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மழைநீர் தேங்கி வகுப்பறையிலும் தண்ணீர் புகுந்தது.இதனால் பள்ளி மாணவ மாணவிகள் தரையில் அமர முடியாமல் நின்று கொண்டே இருந்தனர்.இதனையறிந்த பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளி இடைவெளியில் பாதியில் தங்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.இதனால் ஆசிரியகள் என்ன செய்வது என்று அறியாமல் நின்றனர்.
Category:
செய்திகள்
சிறப்பு சார்பு ஆய்வாளர் இயற்கை மரணம் . அவரது குடும்பத்திற்கு சக காவலர்கள் 14 லட்சம் நிதி உதவி
by mohan
written by mohan
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜெகநாதன் வயது 50 இவர் ராஜபாளையம் அருகே வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இயற்கை எய்தினார்.விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் சங்கமம் சார்பில் வெங்கடேஷ் தலைமையில் தமிழகம் முழுவதும் பணி புரியும் காவலர்கள் 1997 முதல் பேஜ் சார்பில் 2655 காவலர்கள் சார்பாக 14 லட்சம் ரூபாய் வசூல் செய்து அவரது குடும்பத்திற்க்கு மகன் கிருபாகரன்.மகள் ஹரிணி பெயரில் தலா 5 லட்சம் விதம் வங்கியில் 10 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு மீதமுள்ள நான்கு லட்ச ரூபாயை அவரது மனைவி லட்சுமி அவர்களிடம் ரொக்கமாக வழங்கினார்கள்..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தனியார் வங்கி ஏ.டி.எம். எந்திரம் தீப்பிடித்து எரிந்தது…பல லட்சம் ரூபாய் பணம் தப்பியது.
by mohan
written by mohan
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில், சாத்தூர் – விருதுநகர் சாலையில், தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் ஏ.டி.எம். எந்திரம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை, ஏ.டி.எம். எந்திரம் இருந்த அறையிலிருந்து கரும்புகை எழுந்தது. சற்று நேரத்தில் அங்கிருந்த குளிர்சாதன எந்திரம் மற்றும் ஏ.டி.எம். எந்திரம் தீப்பிடித்து எரியத் துவங்கியது. இதனைப் பார்த்து அந்தப் பகுதியில் இருந்தவர்கள், தீ விபத்து குறித்து சாத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த திடீர் தீ விபத்தில் 2 குளிர்சாதன எந்திரங்கள் மற்றும் மின் சாதனங்கள் முற்றிலும் எரிந்து சேதமானது. பணம் இருந்த எந்திரத்தின் மேல் பகுதியில் மட்டும் தீப்பிடித்ததால், நல் வாய்ப்பாக பல லட்சம் ரூபாய் பணம் தீயில் இருந்து தப்பியது. விபத்து குறித்து சாத்தூர் நகர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை பழங்காநத்தம் பகுதியில் வடை கடையில் வாங்கிய வடையில் பிளாஸ்டிக் கவர் பொதுமக்கள் அதிர்ச்சி
by mohan
written by mohan
மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் குமார் இவர் நேரு நகர் பகுதியில் உள்ள தனியார் டயர் விற்பனை செய்யும் கம்பெனியில் பணியாளராக வேலை செய்து வருகிறார். இன்று காலை தன்னுடன் பணிபுரியும் பணியாளர்களுக்கு வடை வாங்குவதற்காக மதுரை பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் அருகே ராணி கல்யாண மஹால் எதிரே உள்ள பெருமாள் என்பவருடைய வடை கடைக்கு சென்று 20 வடைகள் பார்சல் வாங்கியுள்ளார் .அதனைத் தொடர்ந்து அஜித் குமார் பணிபுரியும் நேரு நகர் பகுதியில் இவர் பணிபுரியும் டயர் விற்பனை செய்யும் கடையில் தன்னுடன் பணிபுரியும் பணியாளர்களுக்கு வடையை பிரித்துக் கொடுத்துள்ளார் .அப்போது ஒரு வடையை காளமேகம் என்ற நபர் சாப்பிடும் போது உள்ளே பிளாஸ்டிக் பேப்பர் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.மேலும் இதுபோன்று கவனக்குறைவான செயல்களில் ஈடுபடும் உணவு பண்டங்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மீது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
எழுமலையில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியின் கட்டிடம் மழை நீரில் ஒழுகுவதால் குழந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் உள்ளது அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி. இந்த பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது.இங்கு சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் உசிலம்பட்டி பகுதிகளில் நேற்று இரவில் இருந்து மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் எழுமலை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டிடத்தில் மழைநீர் தேங்கி ஒழுகியது. இன்று காலையில் வழக்கம் போல் பள்ளி குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தனர். ஆனால் பள்ளி கட்டிடத்துக்குள் மழை நீர் ஒழிகி பள்ளிக்குள் தண்ணீர் தேங்கி நின்றதால் வேறு வழி இன்றி இன்று பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு திரும்பி வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.தென் மாவட்டங்களில் ரெட் அலர்ட் வானிலை மையம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மதுரை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்த போதும்; மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா பள்ளிகளுக்கு கூட விடுமுறை அளிக்கவில்லை. இதனால் கிராமப்புறத்தில் இருந்து வரும் மாணவ மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டனர். பலர் மழையில் நனைந்தபடியே பள்ளிக்கு சென்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் வெறிச்சோடி காணப்பட்டது.
by mohan
written by mohan
தமிழகம் முழுவதும் இன்று மக்களுடன் முதல்வர் என்னும் தலைப்பில் சிறப்பு முகாம் ஒவ்வொரு பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் எனும் தலைப்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் தொழிலாளர்கள் நலத்துறை சார்பிலும் வருவாய் வட்டாட்சியர் மேலாண்மை துறை சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் தொகை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வசதி கூட்டுறவு துறை ஆதிதிராவிடர் நலத்துறை நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்குதல் மாற்றுத்திறனாளிகள் என அனைத்து துறையில் இருந்தும் முகாம் நடைபெற்றது. ஆனால் இங்கு பொதுமக்கள் யாரும் வராததால் முகாம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் வந்திருந்த சிலரும் இங்கு தொழில்நுட்ப கோளாறால் கணினி சரியாக இயங்காததால் பொதுமக்கள் புறக்கணித்து சென்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் நம்பர் பிளேட் இல்லாத பைக்குகளை பயன்படுத்தி நகை பறிப்பு சம்பவம் அதிகரிப்பு எதிரொலி – 768 வாகனங்கள் பறிமுதல் – மாநகர காவல்துறை நடவடிக்கை
by mohan
written by mohan
மதுரை மாநகரில் பைக்குகளில் நம்பர் பிளேட் இல்லாமலும், நம்பர் தெளிவாக தெரியாத வகையில் மாற்றியமைத்தும் செல்போன் பறிப்பு மற்றும் நகை பறிப்பில் ஈடுபடுவது, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவது காவல்துறையின் CCTV மற்றும் ANPR கேமராக்களில் சிக்காமல் தப்புவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்துவருகிறது.இதனை தடுக்கும் வகையில் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில் மதுரை மாநகரில் 15 மற்றும் 16 ஆகிய 2 நாட்களில் சிறப்பு வாகன தணிக்கை நடத்தப்பட்டது இதில் நம்பர் பிளேட் இல்லாத 17 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.மேலும் நம்பர்கள் தெளிவாக தெரியாதவாறு நம்பர் பிளேட் அமைத்து இயக்கிய 751-வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு,பிளேட்கள் மாற்றியமைக்கப்பட்ட பின் விடுவிக்கப்பட்டது.தொடர்ந்து நம்பர் பிளேட் விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு அதன் ஓட்டுனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் லோகநான் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பொதுமக்கள் உரிய சாலை விதிகளை பின்பற்றி வாகனங்களை இயக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தான் பகுதியில்தொடர் மழை காரணமாக மழையில் நனைந்தும் குடை பிடித்தும் பள்ளி சென்ற மாணவிகள் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்களிலும் பள்ளிக்கு வந்தனர்.தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் கன மழை பெய்து வரும் நிலையில் நேற்று இரவு முதல் மதுரையின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தவண்ணம் உள்ளது.மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி பகுதிகளிலும் நேற்று இரவு முதல் தற்போது வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது இந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடுத்த நிலையில் மதுரை மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கவில்லை இதன் காரணமாக இன்று காலை முதல் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மழையில் நனைந்த படியும் குடை பிடித்த படியம் பள்ளிக்கு சென்றனர் மேலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் ஒரு சில இடங்களில் ஆட்டோ களிலும் இருசக்கர வாகனங்களில் மாணவ மாணவிகளை அவர்களின் பெற்றோர்கள்பள்ளிக்கு அழைத்து வந்து விட்டுச் சென்றனர் பல்வேறு சங்கங்கள் மதுரை மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மழையில் நனைந்தவாறு சென்றனர்..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாம்பன் ரயில்வே நம்பர் கேட் 1 பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து தர ராஜ்யசபா எம்பி தர்மரிடம் மக்கள் கோரிக்கை
by mohan
written by mohan
பாம்பன் ரயில் நிலைய நடைமேடை பகுதிக்காக மூடப்பட்ட நம்பர் ஒன் கேட்டை பாதிப்பின்றி கீழ் சுரங்கப்பாதை அமைத்து தரக்கோரி தெற்குவாடி,முந்தல்முனை, சின்னப்பாலம், தோப்புக்காடு, கே.கே நகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் கடந்த 1914 ஆம் ஆண்டு முதல் ரயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. அப்போது பாம்பன் வடக்கு பகுதியில் இருந்து தென் பகுதிக்கு செல்ல ரயில்வே ஸ்டேஷன் அருகே மேற்கு பகுதியில் 3 ரயில்வே கேட் அமைக்கப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். பாம்பன் சாலை பாலம் அமைத்தபோது 3வது கேட் அருகே பாலத்தின் தூண்கள் நிறுவப்பட்டதால் 3 வது கேட் மூடப்பட்டது. இதனால் முதல் 2 கேட் மட்டும் இயங்கி வந்தது. இந்நிலையில் 2007 ஆம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டபோது நம்பர் 1 கேட் மூடப்பட்டது . அப்போது இப்பகுதி மக்கள் ரயில் நிலைய அதிகாரியிடம் முறையிட்டதில் நம்பர் 1 கேட் இடத்திற்கு மேல் பகுதியில் 5 அடி அகலத்தில் சுற்றுச்சுவர் அமைக்காமல் கீழ்ப்பகுதியில் கற்கள் மூலம் படி அமைத்தது 3 அடி உயர நடை மேடையில் ஏறி, இறங்கி ரயில் பாதையை மக்கள் கடந்து வந்தனர். இந்நிலையில் பாம்பன் ரயில்வே புதிய பாலம் கட்டுமான பணி நடைபெற்று முடியும் நிலையில், பாம்பன் ரயில் நிலைய நடை மேடை இடிக்கப்பட்டு தற்போதைய உயரத்தை விட அதிகமாக உயர்த்தி வேலை நடைபெறுகிறது. இதனால் வருங்காலத்தில்தெற்குவாடி,முந்தல்முனை, சின்னப்பாலம், தோப்புக்காடு, கே.கே நகர் பகுதி மக்கள் தென் பகுதி செல்லவும், தென் பகுதியிலிருந்து வட பகுதிக்கு செல்வோர் ஊருக்குள் ஒரு 1 கிமீ தூரம் சுற்றி செல்ல வேண்டும். பாம்பன் தென் பகுதியில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த வழி மூடப்பட்டால் புயல், வெள்ளம், இயற்கை சீற்றம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் தென் பகுதி மக்கள் பாதுகாப்பிற்காக வட பகுதி செல்லும் இக்கட்டான சூழ்நிலை உள்ளது.பாம்பன் ரயில் நிலையம் தென் பகுதியில் 3,000-க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. மீட்டர் கேஜ் பாதை இருக்கும்போது 3 கேட்கள் மக்களின் போக்குவரத்திற்கு வழியாக இருந்தது. அகல ரயில் பாதை மற்றும் ரயில்வே ஸ்டேஷன் விரிவாக்கப் பணிகளுக்காக கேட்கள் ஒவ்வொன்றாக மூடப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை படி மாற்று ஏற்பாடு செய்து தருவதாக ரயில்வே நிர்வாகம் கூறியது. தற்போது 3 கேட்களும் மூடப்பட்டதால் மக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். மூன்று கேட் இருந்த நிலையில் நம்பர் 1 கேட்டை மக்கள் வசதிக்காக சுரங்கப்பாதை அமைத்து கொடுக்க வேண்டும் என மே 1ஆம் தேதி நடந்த கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என பாம்பன் மக்களின் கோரிக்கையை ஏற்றுதவ்ஹீத் ஜமாத் தலைவர் ஹபிபுல்லா, துணைத் தலைவர் சாதிக் உல் அமீன், செயலர் அப்துல் காதர், மாவட்ட பொறுப்பாளர்கள் கலிபுல்லா, முஹமது சம்சுல் ஹூதா, தெற்கு வாடி கிராம தலைவர் முனீஸ்வரன், செயலர் சுரேஷ், ஓபிஎஸ் அணிமண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சீனிமாரி, பாம்பன் ஊராட்சி செயலர் பாலசுப்ரமணியம் ஆகியோரிடம் ராஜ்யசபா எம்பி தர்மர் ஆலோசனை மேற்கொண்டார். இதை தொடர்ந்து ரயில்வே கேட் மூடப்பட்ட பகுதியை தர்மர் எம்பி பார்வையிட்டார்.சுரங்கப்பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ரயில்வே அமைச்சகத்திடம் முறையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாக தர்மர் எம்பி உறுதியளித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் அருகே ரூ.17.32 கோடியில் ரயில்வே மேம்பாலம்: மத்திய அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்த மக்கள்
by mohan
written by mohan
இராமநாதபுரம் அருகே லாந்தை ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் சூழ்ந்ததால் லாந்தை, கண்ணனை, பெரிய தாமரைக்குடி, சின்ன தாமரைக்குடி, திரிபுனை கிராம மக்கள் 5 கிமீ தூர சுற்றுப்பாதையில் தங்கள் கிராமங்களுக்கு செல்லும் நிலை நிலவி வந்தது. இப்பாதையை மூடக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இந்நிலையில், நவ.18 ல் ராமேஸ்வரத்திற்கு வந்த மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கிராம மக்கள் முறையிட்டனர். லாந்தை ரயில்வே சுரங்கப்பாதைக்கு மாற்றாக, மேம்பாலம் அமைக்க ரயில்வே அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவிடம், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 கிராம மக்கள் சார்பில் வேண்டுகோள் விடுத்தார். அமைச்சர் நிர்மலா சீதா ராமன் பரிந்துரையை ஏற்று, லாந்தை சுரங்கப்பாதைக்கு மாற்றாக ரூ.17 கோடியே 32 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் குடை வடிவ மேம்பாலம் அமைக்க ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் படி ரயில்வே அமைச்சகம் அரசாணை பிறப்பித்துள்ளது.இதனால் மகிழ்ச்சி அடைந்த 5 கிராம மக்கள் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தானில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு இன்று காலை சோழவந்தான் ராவுத்த நாயக்கர் தெரு ஸ்ரீ கொண்டல் ராவுத்தர் ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் பஜனை மடத்திலிருந்து நான்கு ரத வீதிகளிலும் ஊர்வலம் வந்தனர் தொடர்ந்து பஜனை பாடல்கள் பாடினர் அதில் காலையில் நீவைத்திய அபிஷேகம் அன்னதானம் நடைபெற்றது ஆன்மீகவாதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு அதிகாலை நான்கரை மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாத (தனுர்) பூஜைக்காக அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பகல் 11.30 மணியளவில் நடை அடைக்கப்பட்டு. மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். பின்னர் இரவு பள்ளியறை பூஜை முடிந்தபின் இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படும்.மார்கழி மாதம் முதல் நாள் என்பதால் அதிகாலையில் எழுந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். பெண்கள், ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்டோர் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சாமி தரிசனம் அருள்மிகு சுப்ரமணியசாமி கோவிலில் தரிசனம் செய்தனர் இதே போல் திருப்பரங்குன்றம் வேயிலுக்குகந்த அம்மன் கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சுகாதார வளாக கட்டிடங்கள் காட்சிப் பொருளாக இருக்கும் அவலம். ஊராட்சி மன்ற நிர்வாகம் பயன்பாட்டிற்க்கு செயல்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
by mohan
written by mohan
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சி மன்ற பகுதிக்கு உட்பட்ட கம்மாபட்டி ESI நகர் பகுதிகளில் சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஆண் பெண் சுகாதார வளாகங்கள் பல மாதங்களாக செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளது.அப்பகுதி பொது மக்கள் பல தடவை ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் ஊராட்சி மன்ற தலைவர் இசக்கி ராஜாவை நேரில் சந்தித்து கூறினாலும் கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்து வருகிறார்.மேலும் சமூக ஆர்வலர்கள் கூறும் போது இது மழைக்காலம் ஆண்களும் பெண்களும் குழந்தைகள் வயதானவர்கள் பொதுபாதயை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர் இதனால் தொற்றுநோய் பரவும் அபாய நிலை உள்ளது எனவே ஊராட்சி மன்ற நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக சுகாதார வளாகங்களை திறந்து மக்கள் பயன்பாட்டிற்க்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அரசு மருத்துவமனை முன்பு ஐயப்ப பக்தர்கள் வந்த பேருந்தும் அரசு பேருந்து மோதி விபத்து இரண்டு பேர் படுகாயம்
by mohan
written by mohan
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் PACR.அரசு மருத்துவமனை முன்பு இராஜபாளையத்தில் இருந்து மாங்குடி சென்று மாங்குடியில் இருந்து இராஜபாளையம் திரும்பி வந்த அரசு பேருந்தை சக்திவேல் என்ற ஓட்டுநர் மருத்துவமனை எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டுக் கொண்டிருந்த பொழுது. திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில் சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு திரும்பி சொந்த ஊர் வந்து கொண்டிருந்த பொழுது.விழுப்புரம் மாவட்டம் T.புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் அன்பரசு வயது 29 நின்று கொண்டிருந்த அரசு பேருந்து பின்புறம் மோதியதில் அரசு பேருந்து நடத்துனர் வேல்முருகன் மற்றும் அரசு பேருந்தில் பயணம் செய்த தனியார் கல்லூரி மாணவி இருவரும் படுகாயம் அடைந்தனர்.ஐயப்ப பக்தர்கள் வந்த பேருந்தில் பயணம் செய்த ஒருவர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார் மற்ற ஐயப்ப பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் இவ் விபத்து குறித்து தெற்கு காவல் நிலைய போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
.செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற நபரை சாலை வளைவில் திடிரென கையை நீட்டி நிறுத்திய போக்குவரத்து காவலர் – அதிர்ச்சியில் வாகன ஓட்டி தடுமாறி சுவரில் மோதி ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதி
by mohan
written by mohan
மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் இன்று காலை போக்குவரத்து காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுகொண்டிருந்தனர்.அப்போது மதுரை மாநகர் ஆண்டாள்புரம் அக்ரிணி குடியிருப்பு பகுதியை சேர்ந்த அழகு விநாயகர் செல்வம் (49) என்பவர் தனது ஸ்கூட்டியில் மதுரை பைக்காரா பகுதியில் இருந்து ஆண்டாள்புரம் நோக்கி வந்துகொண்டிருந்தபோது பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் வாகனங்கள் திரும்பும் பகுதியில் நின்றுகொண்டிருந்த போக்குவரத்து காவலர் கார்த்திக் என்பவர் கையை நீட்டியுள்ளார்.இதனை சற்றும் எதிர்பார்க்காத விநாயகர் செல்வம் காவலரின் கை தடுத்த நிலையில் பைக்கை திடிரென வேகமாக இயக்கியநொடியில் நிலைதடுமாறி கீழே விழுந்த இடத்திலயே ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் காயமடைந்து மூச்சு பேச்சின்றி கிடந்த விநாயகர் செல்வத்தை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த பின்னர் அரசு ராஜாஜி விபத்து பிரிவில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.முதற்கட்ட மருத்துவபரிசோதனையில் விநாயகர் செல்வம் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தலையில் ரத்த கசிவு ஏற்பட்டு சுயநினைவின்றி இருப்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.மேலும் மதுரை பழங்காநத்தம் பகுதியில் போக்குவரத்து காவல்துயினர் வாகன சோதனை என்றபெயரில் வளைவான சாலையில் நின்றுகொண்டு திடிரென கையை நீட்டியபோது கையில் மோதி தடுமாறி கீழே விழுந்த விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலைக்கு சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.போக்குவரத்து காவல்துறையினர் ஆன்லைன் மூலமாக அபராதம் விதிக்கும் நடைமுறையில் இருந்துவரும் நிலையில் இது போன்று வாகன ஓட்டிகளுக்கு தெரியாத வகையில் வளைவான பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசலான பகுதிகளிலும் எந்த வித பாதுகாப்பு தடுப்புகள் இன்றி திடிரென மறைப்பதால் பணியில் ஈடுபடும் காவல்துறையினர் உயிருக்கும் உரிய பாதுகாப்பு இல்லாத நிலையில் வாகன ஓட்டிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் நிலை தொடர்கிறது.இந்த சம்பவத்தில் போக்குவரத்து காவல்துறையினர் கையை நீட்டியதால் பைக்கில் இருந்து தடுமாறி விழுந்து காயம் ஏற்பட்டபோது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவல்துறையினர் செயலை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அப்போது பொதுமக்கள் சிலர் காவல்துறை திடீரன மறைந்து நின்று மறித்ததால் தான் கீழே விழுந்து காயமடைந்துவிட்டது என வாக்குவாதம் செய்ய காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து கிளம்புமாறு கூறி அனுப்பினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா புதுக்குளம் பிட் 1ல் சுமார் 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 300 பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மகன் பவுன்ராஜ் வயது 60 என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் புதுக்குளம் கம்மாயில் கடந்த 50 வருடங்களாக வசித்து வருவதாகவும் தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி உதவிட வேண்டும் என மனுதாக்கல் செய்தார்.இதனை விசாரித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பொதுப்பணித்துறையினரிடம் ஆய்வு செய்து அறிக்கை கேட்டது .அதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்ததில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 300 பேர் வசிக்கின்றனர் இவர்கள் நீர் பிடிப்பு பகுதியில் வசித்து வருவதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அறிக்கை தாக்கல் செய்தனர்.இதனை தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி உத்தரவிட்டனர்.இதனைத் தொடர்ந்து புதுக்குளம் கண்மாயில் வசிக்கும் பொது மக்களுக்கு ஆக்கிரமிப்புகள் அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து இன்று பொதுப்பணித்துறை எஸ் டி ஓ அன்பரசன், மதுரை மேற்கு வட்டாட்சியர் மீனாட்சி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் மின்துறை ஊழியர்கள்| நாமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் சிவக்குமார் சமயநல்லூர் காவல் ஆய்வாளர் ராதா மகேஷ் மற்றும் 60க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் அதிகாரிகளை ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்தினர்..பொதுமக்கள் அதிகாரியிடம் அதிகாரிகளிடம் முற்றுகை போராட்டம் நடத்துவது குறித்து தகவல் அறிந்து வந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அன்பரசு மற்றும் வருவாய்த்துறை தாசில்தார் மீனாட்சி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தாங்கள் நடப்பதாகவும் அதில் வரும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 20 குடும்பத்தினருக்கு மட்டும் பட்டா வழங்குவதாகவும்,மீதமுள்ளவர்கள் பொருளாதார ரீதியில் முன்னுரிமை பெற்றதால் இடம் வழங்க முடியாது என கூறினர். இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அதிகாரியிடம் தொடர்ந்து கொண்டு பேசியதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை மேலும் அதிகாரிகள் உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறினர்.புதுக்குளம் கிராம மக்கள் குறைந்தபட்சம் ஒரு மாத கால அவகாசம் அளித்தால் தங்கள் வாழ்விடத்தை மாற்றிக் கொள்வதாக கூறினர்.ஆனால் .அதிகாரிகள் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு மீறி எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையில் எங்கள் மீது உயர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் எனக் கூறினர் இதனை அடுத்து போலீசார் துணையுடன் புதுக்குளம் கண்மாய் பகுதியில் ஆக்கிரமிக்கும் பெற்றுள்ள வீடுகளை வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றினர்வந்த அதிகாரிகளிடம் தகராறு செய்ததாக கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தாலுகா குழு உறுப்பினர் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை ஊராட்சி மக்களிடம் மாவட்ட ஆட்சியர் பா. விஷ்ணு சந்திரன் இன்று குறைகள் கேட்டறிந்தார். இதையடுத்து மங்களநாதசுவாமி கோயில் நடராஜர் சன்னதியில் டிச.18ல் கொடியேற்றத்துடன் துவங்கவுள்ள ஆருத்ரா தரிசனம் திருவிழா ஏற்பாடுகளை ஆய்வு செய்துவிட்டு ராமநாதபுரம் புறப்படத் தயாரானார். மாவட்ட அப்போது திடீரென மழை பெய்ததால் ஆட்சியரின் உதவியாளர் ஆட்சியர் மழையில் நனைந்து விடாமல் இருக்க உதவியாளர் குறை பிடித்துக் கொண்டு நனைந்து படி வந்தார்.இதனைப் பார்த்த ஆட்சியர் உதவியாளர் பிடித்திருந்த குடையை வாங்கி உதவியாளர் தோளில் கை போட்டு கொண்டு உதவியாளரை குடை பிடித்து அழைத்து வந்தார். தனது உதவியாளர் மழையில் நனைந்து விடாமல் இருக்க மாவட்ட ஆட்சியர் குடை பிடித்து அழைத்து வந்த நிகழ்ச்சி பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. கீழக்கரை தாசில்தார் பழனி குமார், ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் பழனிவேல் பாண்டியன் உடன் வந்தனர்.
ஆர்.முருகன், செய்தியாளர், ராமநாதபுரம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதியில் அதிக அளவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ப்ரித்திக்கு தகவல் கிடைத்தது .இதையடுத்து இராஜபாளையம் அருகே உள்ள கம்மாபட்டி பகுதியில் கஞ்சா விற்ப்பதாக காவல்துறை துணை கண்காணிப்பாளர்ப்ரித்திக்கு தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் DSP தனிப்படை காவலர்கள் பாலகிருஷ்ணன், துரைமுத்து, மதன், ஆகியோர் கம்மாபட்டிக்கு சென்ற போது நல்லமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் மகன் இறைவன் வயது 43 சட்ட விரோதமாக கஞ்சாவிற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது இறைவனை பிடித்து விசாரனை செய்தனர்.மேலும் அவரிடம் இருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸ் சார் இவருக்கு மொத்தமாக கஞ்சா விற்றது யார் என்ற கோணத்தில் விசாரணை செய்து மொத்த விற்பனையாளையும் தேடி வருகின்றனர்..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
எரிசக்தி திறன் பணியகம், தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் சார்பில் மின் சிக்கன விழிப்புணர்வு பிரசாரம் இராமநாதபுரத்தில் இன்று நடந்தது. மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஸ்ரீராம் துவக்கி வைத்தார். வீடுகள், தொழிற்சாலைகள், வணிகம், வேளாண் மற்றும் மின்சாத ஆடம்பர பொருட்களின் பயன்பாடுகளில் ஏற்படும் சுற்றுச்சுழல் பாதிப்பு குறித்து பிரசாரம் செய்தனர். டிச.14ல் துவங்கி டிச.20 வரை நடைபெற்றும் 1 வார விழா தொடர்பாக துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். மின்வாரிய செய்தி தொடர்பு அலுவலர் சாதனா,உதவி செயற்பொறியாளர்கள் பாலமுருகன், உதவி பொறியாளர்கள் குரு வேல், சுதாகர், செல்வி, வெற்றி வேல் மற்றும் மின்வாரிய அனைத்து பிரிவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அய்யங்கோட்டை ஊராட்சி நகரி பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பல நாட்களாக தெருக்களில் கழிவு நீர் தேங்கி கிடப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை காய்ச்சல் பாதிப்பு காரணமாகமருத்துவமனை செல்லும் அவல நிலை தொடர்ந்து நிலவி வருவதாகவும் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் இதனால் மருத்துவமனைக்கு செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகி வருவதாகபொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகையால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு டெங்கு மலேரியா போன்ற தீவிர நோய் தொற்று ஏற்படும் முன் ஊராட்சியில் உள்ள பகுதிகளில் ப்ளீச்சிங் பவுடர் மற்றும் சுகாதாரமான முறையில் மருந்து தெளித்தல் மற்றும் கிருமி நாசினி உள்ளிட்டவைகள் தெளித்தல் பணிகளில் ஈடுபட வேண்டும் ஊராட்சியில் ஒரு சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து பொதுமக்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்..
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.