கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் வெள்ள நிவாரண உதவியாக கீழக்கரை வட்டாட்சியர் அவர்களிடம் 500 புளியோதரை சாப்பாடு பொட்டலங்கள், பிஸ்கெட், போன்றவை ஒப்படைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கம் தலைவர் Dr.சம்சுல் கபீர், சங்க முன்னாள் தலைவர்களான Dr. ராசிக் தீன் மற்றும் Dr.சுந்தரம், வழக்கறிஞர் நாதியா, செயலாளர் எபன், மிப்தாஹுதீன், ஆபிதீன் மற்றும் செய்யது ஹமீதா கலைகல்லூரியின் முதல்வர். ராஜசேகர் மற்றும் ஹாஜா உட்பட பலர் உடன் இருந்தனர். இத்துடன் தலைவர் Dr.கபீர் அவர்கள் நாளைய தேவைகள் ஏதும் வேண்டுமெனில் செய்து தருவதாக உறுதியளித்தார்.
Category:
செய்திகள்
விசிக தலைவர் திருமாவளவன் உள்பட 141 எம்பிகள் இடைநீக்கம்: ராமநாதபுரத்தில் விசிக சாலை மறியல்
by mohan
written by mohan
இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்குள் வண்ணப் புகை குப்பி வீச்சு தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கமளிக்க வேண்டும் என குரல் எழுப்பிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி உள்பட 141 எம்பிகளின் இடைநீக்கத்தை ரத்து செய்யக்கோரி ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்ட விசிக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் அற்புதக்குமார் தலைமை வகித்தார்.ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். மண்டல துணைச் செயலர் விடுதலை சேகரன், மாநில துணைச் செயலர் விடுதலை கிட்டு, நாடாளுமன்ற தொகுதிச் செயலர் கோவிந்தராசு, திருவாடானை தொகுதி செயலர் பழனிக்குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் சத்யராசு வளவன், மாவட்ட அமைப்பாளர்கள் சீனி ஜபருல்லா கான், பாண்டித்துரை, ராஜேஷ் குமார், பஞ்சநாதன், ரவி வளவன், சீனி சபீர் முஹமது,ராமநாதபுரம், திருவாடானை,ஆர்.எஸ் மங்கலம்,மண்டபம் ஒன்றிய செயலர்கள் நாகராஜ், ராதாகிருஷ்ணன், பாலமுருகன், ஆறுமுகம், கீழக்கரை, மண்டபம், தொண்டி நகர் செயலர்கள் ஹிதாயத்துல்லா, மோசஸ் வளவன், முருகன், சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் அஜ்மல் கான், மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் விடுதலை மாரி கலந்து கொண்டனர்.ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவினரை போலீசார் கைது செய்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மக்களுடன் முதல்வர் முகாம் தேதி மாற்றம்; தென்காசி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.
by mohan
written by mohan
தென்காசி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் 2024 ஜனவரி 04 மற்றும் 06 ஆகிய தேதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். இது குறித்து ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் முன்னெடுப்பின் நீட்சியாக அன்றாடம் அரசு துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைபடுத்தி அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும், சென்று சேரும் வண்ணம் மற்றுமொரு மைல்கல்லாக மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் முதல்வரின் முகவரி துறையால் நடைமுறைப்படுத்தப் படுகிறது. மக்களுடன் முதல்வர் என்ற இத்திட்டம் அன்றாடம் பொதுமக்கள் அதிகமாக அணுகும் 13 அரசு துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அடையாளம் காணப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி, தென்காசி மாவட்டத்தில் 6 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளில் 18.12.2023, 20.12.2023, 22.12.2023, 27.12.2023, 03.01.2024 மற்றும் 05.01.2024 ஆகிய 7 நாட்களில் மொத்தம் 55 சிறப்பு முகாம்கள் நடத்திட உத்தேசிக்கப் பட்டிருந்தது.
இந்நிலையில், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்து வரும் கன மழையின் காரணமாக 18.12.2023 திங்கள் கிழமை அன்று தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, செங்கோட்டை சங்கரன்கோவில், மற்றும் சுரண்டை ஆகிய நகராட்சிகளில் நடைபெற இருந்த 6 சிறப்பு முகாம்கள் இரத்து செய்யப்பட்டு 04.01.2024 வியாழக் கிழமைக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. மேலும் 20.12.2023 புதன் கிழமை அன்று தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, செங்கோட்டை, சங்கரன்கோவில், சுரண்டை ஆகிய நகராட்சிகள் மற்றும் சிவகிரி, பண்பொழி ஆகிய பேரூராட்சிகளில் நடைபெற இருந்த மொத்தம் 8 முகாம்கள் இரத்து செய்யப்பட்டு 06.01.2024 சனிக் கிழமைக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளன. மக்கள் அரசின் பல்வேறு துறைகளை நாடிச்சென்று பெறக்கூடிய சேவைகளை, அந்தந்த ஊர்களுக்கே அனைத்துத் துறைகளும் நேரடியாக சென்று வழங்கக்கூடிய இந்த சிறப்பு திட்டத்திற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு நல்கி சிறந்த முறையில் பயன்படுத்தி சேவைகளை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
டெங்கு உள்ளிட்ட காய்ச்சலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, வீடுகள் தோறும் ஹோமியோபதி மருத்துவ மாத்திரைகள் வீடு, வீடாக வினியோகம்
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் காலனி மற்றும் காந்தி நகர் பகுதியில் , சில தினங்களாக அப்பகுதியில் வசிப்போர் காய்ச்சல் நோயால் தாக்கப்பட்டதை அறிந்து , அவர்களை அந்த நோயிலிருந்து விடுவிக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள , ஹோமியோபதி மருத்துவ அதிகாரி மற்றும் செக்காணூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலர்கள் கிராமத்தில் முகாமிட்டு, ஊட்டச்சத்து மைய அலுவலர்களுக்கு ஹோமியோபதி மாத்திரைகள் குறித்து விளக்கம் அளித்து, அவர்கள் மூலம் வீடுகள் தோறும் ,ஓமியோபதி மாத்திரைகளை வழங்கி, அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? என்பன உள்ளிட்ட விளக்கத்தை, வீடுகள் தோறும் ஹோமியோபதி மருத்துவ அலுவலர்கள் விநியோகம் செய்து வருகின்றனர்.மேலும் , இதனைத் தொடர்ந்து ஹோமியோபதி மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் ஒவ்வொரு கிராமமாக நாள்தோறும் வீடு , வீடாகச் சென்று , முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்ச்சலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மாத்திரைகளை வினியோகம் செய்ய உள்ளனர்..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் திருமங்கலம் ராஜாஜி சிலை முன்பு , விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் காளிமுத்து தலைமையில், 50க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்ந்த நிர்வாகிகள்,பாராளுமன்றத்தில் 141 உறுப்பினர்களை சர்வாதிகார ஆட்சி நடத்தும் மோடி அரசு, இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மோடி அரசை கண்டித்தும், சர்வாதிகார போக்கை கண்டித்தும் கண்டன கோஷமிட்டனர்.உடனடியாக மோடி அரசு இடைநீக்கம் செய்த 141 உறுப்பினர்களை திரும்பப் பெறக் கூறி கண்டன முழக்கங்கள் முழங்கினர்..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு பிரளய நாத சுவாமி விசாக நட்சத்திர ஆலயத்தில், சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.சனி பகவான், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிரதேசத்தை முன்னிட்டு, இத்திரு கோவில் அமைந்துள்ள சனீஸ் லிங்கம் மற்றும் சனி பகவானுக்கு சிறப்பு ஹோமங்களும் அதைத் தொடர்ந்து, சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடுகள் நடைபெற்றது. இக்கோவிலானது, சனி, ராகு, குரு, ஆகிய கிரகங்கள் இணைந்த புனிதமான திருக்கோயில் ஆகும். திருக்கோயில் விசாக நட்சத்திரத்துக்குரிய ஆலயமாக விளங்குகிறது. மேலும், இக் கோயிலில்,சனி பகவான் லிங்க வடிவில் வன்னி மரத்துக்கு அடியில் அருள்பாளித்துக் கொண்டிருக்கிறார். சனிப்பெயர்ச்சி முன்னிட்டு, இக்கோயிலில் சனி பிரீதி ஹோமங்களும், நவகிரகோமங்களும் வேத விற்பனர்களால் நடத்தப்பட்டது. திருக்கோவில் செயல் அலுவலர் இளமதி முன்னிலையில், தொழில் அதிபர் எம்.வி. எம் .மணி ,பள்ளித் தாளாளரும், கவுன்சிலுருமான டாக்டர் மருது பாண்டியன் ஆகியோர்கள் ஏற்பாட்டில், சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ,பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து சிறப்பு ஹோமத்தில் பங்கேற்றனர்.இதை அடுத்து, பக்தர்களுக்கு கோயில் சார்பில் அன்னதானங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, தொழில் அதிபர் எம்.வி.எம். மணி, கோயில் செயல் அலுவலர் இளமதி, கணக்கர் பூபதி மற்றும் ஆலயம் பணியாளர்கள் செய்திருந்தனர்.முன்னதாக, இக் கோயிலில் காலபைரவர் சன்னதி அருகே அமைந்துள்ள சனீஸ்வரலிங்கத்துக்கு, சிறப்பு அபிஷேகங்களும், அர்ச்சணைகள் நடைபெற்றது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்ட மக்களுக்கு மூன்றாவது நாளாக மதுரை விமான நிலையத்திலிருந்து நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல மூன்று ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் நிலையில் உள்ளது.
by mohan
written by mohan
மதுரை விமான நிலையத்தில் இருந்து புயலால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு மூன்றாவது நாளான இன்று (21.12.23) காலை 4.30 மணிக்கு மத்திய தொழிலில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் காவல் துறை,வருவாய்த்துறையினர் உதவியுடன் ஹெலிகாப்டரில் உணவுப் பொருட்கள் ஏற்றப்பட்டு தயார் நிலையில் இருந்தது.காலை ஆறு மணிக்கு புறப்பட வேண்டிய ஹெலிகாப்டர் வானிலை மேகமூட்டத்துடன் காணப்படுவதால் காலை 7:30 மணிக்கு கிளம்புவதாக கூறப்பட்டுள்ளது.தற்போது 3 ஆயிரத்து 180 கிலோ எடையுள்ள உணவு, குடிநீர், மருத்துவ பொருட்களை ஏற்றி தயார் நிலையில் 3 ஹெலிகாப்டர்களும் தூத்துக்குடி புறப்ப புறப்பட தயாராக உள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமான இருக்கை அடியில் பேஸ்ட் வடிவிலான ரூ. 59.27 லட்சம் மதிப்புள்ள 940 கிராம் எடை தங்கம் கைப்பற்றப்பட்டது..
by mohan
written by mohan
துபாயில் இருந்து புறப்பட்டு பகல் 12.30 மணியளவில் ஸ்பைஸ் ஜெட் விமானம் மதுரை வந்தடைந்தது.நேற்று மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக வந்த தகவலை எடுத்து மத்திய சுங்க இலாகாவின் வான் நுண்ணறிவு பிரிவினர் விமானத்தில் வந்த 182 பயணிகளிடம் தீவிர சோதனை செய்தனர்.இதில் பயணிகளிடம் எந்த பொருளும் கைப்பற்றப்படாததையடுத்து விமானத்தில் உள்பகுதியில் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.அப்போது பயணிகள் இருக்கையில் அடியில் தங்க பேஸ்ட்.மறைத்து இருப்பது தெரியவந்தது..அதனையடுத்து மதுரை விமான நிலைய சுங்க இலக்கா வான் நுண்ணறிவு பிரிவினர் சோதனை செய்து பார்த்தபோது பேஸ்ட் வடிவிலான தங்கம் கைப்பற்றப்பட்டு அதனை உருக்கி பார்த்தில் சுமார் 940 கிராம் எடையுள்ள தங்கம் இருப்பதும், அதன் Updated ரூபாய் 59.27 லட்சம் என தெரியவந்தது.விமான இருக்கையில் இருந்து தங்கம் கைப்பற்றப்பட்டதைசெய்ததை தொடர்ந்து .மத்திய சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றது..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கிராம மக்கள் திடீர் சாலை மறியல் – 20 நிமிட சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் திருமங்கலம் – ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில், ஆலம்பட்டி என்ற இடத்தில், அக் கிராமத்தைச் சார்ந்த 50க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அக் கிராமத்தில் ஏற்கனவே கட்டப்பட்ட , பழைய பொது கழிப்பிட கட்டடத்தை நான்கு வழி சாலை அமைக்கப்பட்டு வருவதால் அதனை இடிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து மாற்று இடத்தில் புதிதாக பொதுக் கழிப்பிடத்தை கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த இடத்தில் கிராமத்தைச் சார்ந்த தனிநபர் ஒருவர் அந்த இடத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளதால் , கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி ஒன்றிய அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளும் அவருக்கு உடந்தையாக செயல்படுவதாக கூறி கிராம மக்கள் ஆவேசம் அடைந்து, பொதுக் கழிப்பிடத்திற்கான இடத்தை மீட்டு தரக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இம் மறியல் தொடர்ந்து 20 நிமிடத்திற்கு மேலாக நீடித்ததால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க உறுதி அளித்ததால் , கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்…
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் கனமழை காரணமாக அதிக வெள்ளப் பாதிப்பு பகுதிகளான தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருச்செந்தூர் , காயல்பட்டினம், திருநெல்வேலி, ஆகிய பகுதிகளில் பாதிப்புக்குள்ளாகி வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு எழுமலை வர்த்தக சார்பாக நிவாரணப் பொருட்கள் வசூல் செய்யப்பட்டது.
மேலும் நிவாரணப் பொருட்களை காவல்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. வர்த்தக சங்கதலைவர் ஏ பெருமாள். செயலாளர் செல்வராஜ். பொருளாளர் ரஹீம் பாய் ஆகியோர் தலைமையில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த 4 நாட்களாக கன மழை பெய்தது. இதில் கடலாடி வட்டம் வடக்கு நரிப்பையூர், மாணிக்கம் நகர், மூக்கையூர், எஸ்.தரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியது. வெள்ளம் சூழ்ந்து பாதிப்பிற்குள்ளான பகுதிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டு, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதைதொடர்ந்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு பணிகளை ஊரக வளர்ச்சி கூடுதல் ஆட்சியர் ரெத்தினசாமி, கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து டிச.6ல் தொழிலுக்கு சென்ற மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ஆல்வின் என்பவரது படகிலிருந்த மீனவர் 8 பேரை சிறைபிடித்து வவுனியா சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மன்னார் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மீது மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததால் 8 பேரையும் நிபந்தனையுடன் விடுதலை செய்து நீதிபதி சஜீத் உத்தரவிட்டார்.இதை தொடர்ந்து யடுத்து ராமேஸ்வரம் மீனவர் 8 பேரும் யாழ்பாணத்தில் உள்ள இந்திய துனை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.விடுவிக்கப்பட்ட மீனவர் 8 பேரும் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவர் என எதிர்பார்கப்படுகிறது.படகுக்கான விசாரணை 2024 ஜன. 24ல் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருக்கோயில் சனி பெயர்ச்சி விழா லட்சார்ச்சனையுடன் துவங்கியது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருக்கோயில் சனி பெயர்ச்சியையொட்டி இன்று காலை மங்கள இசை உடன் விக்னேஸ்வர பூஜை முதலாம் கால யாக பூஜைதொடங்கியது. தொடர்ந்து சனி ப்ரீத்தி ஹோமம் பூர்ணாஹூதி உள்ளிட்டவற்றை சிவாச்சாரியார்கள் செய்தனர். தொடர்ந்து மதியம் இரண்டாம் கால யாக பூஜை தொடங்கி ப்ரீத்தி ஹோமங்கள் நவக்கிரக ஹோமங்கள் மற்றும் பரிகார ராசிகளான மேஷம் ,ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், தனுசு மற்றும் 27 நட்சத்திரங்களுக்கும் நடைபெற்றது. தொடர்ந்து பூர்ணாஹூதி நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டு கடங்கள் புறப்பாடாகி புனித நீர் ஊற்றப்பட்டு சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம்பெறுகிறார். மதுரை, தேனி, திண்டுக்கல் சிவகங்கை இராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கீழ் நாச்சிகுளம் கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென அருகிலுள்ள கரட்டுப்பட்டி கிராமத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. அப்போது பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து காலை மாலை இருவேளைகளில் வாரம் இரண்டு நாட்கள் இங்கு வந்து மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவர்கள் தரப்பிலும் அதிகாரிகள் தரப்பிலும் தகவல் தெரிவிக்கப்பட்டது…. ஆனால் சரிவர மருத்துவர்கள் கீழ் நாச்சிகுளம் கிராமத்திற்கு வருவதில்லை. இதனால் இந்த பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட பசுமாடுகள் காளை மாடுகள் ஆடுகள் நோய்வாய்ப்படும்போது காட்டுப்பட்டி கிராமத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்தனர். இதனால் அதிக அளவிலான பாதிப்பில் மாடு வளர்ப்போர் இருந்து வந்தனர். இதுகுறித்து மண்டல இணை இயக்குனர் அலுவலகத்திற்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக புகார் தெரிவிக்கப்பட்டது. அப்போது முறையாக வந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார் ஆனாலும் வரவில்லை. இன்று காலை ஐம்பதுக்கு மேற்பட்ட பசு மாடுகளுடன் மாடு வளர்ப்போர் திடீரென பஸ் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி செல்லும் மாணவ மாணவியர் பணிக்குச் செல்லும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் சுதமாறன் மற்றும் காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாநகராட்சிக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு.குடிநீரில் கழிவு நீர் கலப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம்
by mohan
written by mohan
சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமம் காமராஜர் தெருவில் வைகை அணையில் இருந்து மதுரை மாநகராட்சிக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் தெருக்களில் வீணாகி வருகிறது மேலும் குழாயிலிருந்து வெளியேறும் குடிநீர் கழிவு நீருடன் கலந்து மீண்டும் குழாயிற்குள் செல்வதால் மதுரை மாநகராட்சிக்கு செல்லும் குடிநீருடன் கழிவுநீரும் கலந்து செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இதனால் இந்த குடிநீரை அருந்தும் மதுரை மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது இது குறித்து மதுரை மாநகராட்சி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதன் காரணமாக முள்ளிப்பள்ளம் கிராமத்திலும் தெருக்களில் குடிநீர் ஆறாக ஓடுவதால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர் ஆகையால் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொலை குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை; தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு..
by mohan
written by mohan
பாவூர்சத்திரம் சரகம் ஆவுடையானூர் கொலை வழக்கின் குற்றவாளிகள் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆவுடையானூர் பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தர்மர் என்பவரை அதே பகுதியை சேர்ந்த சுலைமான், கலையரசன் மற்றும் அவரது அப்பா ராஜா ஆகியோர் சேர்ந்து கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக மேற்படி நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்நிலையில் வழக்கின் விசாரணையானது தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 19.12.23 அன்று வழக்கை விசாரணை செய்த நீதிபதி. அனுராதா குற்றவாளிகளான ஆவுடையானூர் இந்திரா நகரை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் சுலைமான்(26), ஆவுடைசிவன் பட்டி தெருவை சேர்ந்த கலையரசன்(24) மற்றும் அவரது அப்பா ராஜா(48) ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கடையநல்லூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் வெள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் கனமழை காரணமாக அதிக வெள்ளப் பாதிப்பு பகுதிகளான தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருச்செந்தூர் , காயல்பட்டினம், திருநெல்வேலி, ஆகிய பகுதிகளில் பாதிப்புக்குள்ளாகி வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு கடையநல்லூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், நகர்மன்ற துணை தலைவர் ராஜையா ஆகியோர் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது நகராட்சி நிர்வாக ஆணையாளர் சுகந்தி, மேலாளர் சக்திவேல், சுகாதார அலுவலர் பாஸ்கர், சுகாதார ஆய்வாளர் சிவா, பொறியாளர் அப்துல் ரகுமான், உதவி பொறியாளர் கண்ணன், நகர்மன்ற உறுப்பினர் சிட்டி திவான், Rtn வினோத் 14 வது வார்டு, சேர்மன் உதவியாளர்கள் ஹக்கீம், ஜாஹிர் உசேன், ஆஞ்சுநேயர் மற்றும் உணவக ஊழியர்கள், நகராட்சி ஊழியர்கள் பலரும் உடனிருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விவசாயிகள் நெல் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும்; தென்காசி எம்எல்ஏ வலியுறுத்தல்..
by mohan
written by mohan
தென்காசி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நெல் பயிர் காப்பீடு செய்ய டிசம்பர் 31 வரை கால நீட்டிப்பு செய்ய வேண்டும் எனவும், தென் தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதலாக உதவி வழங்க வேண்டும் என்றும் எம்எல்ஏ பழனிநாடார் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பழனிநாடார் எம்எல்ஏ அளித்துள்ள மனுவில், தென்காசி மாவட்டத்தில் விவசாயம் தான் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் நெல் பயிர் செய்து வருகிறார்கள். தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நெல் பயிர் காப்பீடு செய்யும் தேதி டிசம்பர் 15 தேதி முடிவடைந்து விட்டது. இதனால் தென்காசி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் முழுமையாக தங்கள் நெல் பயிர்களுக்கு காப்பீடு செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் 17.12.2023 அன்று தென்காசி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் நெல் பயிர்கள் மழைநீரில் மூழ்கி உள்ளது. இதனால் நெல் பயிர்கள் மகசூல் இழப்பு ஏற்படும் சூழல் உள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நெல் பயிர் காப்பீடு செய்ய டிசம்பர் 31 வரை கால நீட்டிப்பு செய்ய வேண்டும் எம்எல்ஏ பழனி நாடார் தெரிவித்துள்ளார்.
மேலும், தென் தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை கொட்டி கொட்டித் தீர்த்து தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பல குளம், ஏரிகள் நிறைந்து ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சென்று ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. அப்பகுதி மக்கள் அருகில் உள்ள சமுதாய நலக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டத்தில் நெல் சாகுபடிக்காக தயார் செய்யப்பட்டிருந்த பல ஏக்கர் நாற்றங்கால்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. சென்னையை விட அதிக பாதிப்பு தென் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளதால் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் கூடுதலாக நிதி உதவி வழங்க வேண்டும் மற்றும் மழையால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென எம்எல்ஏ பழனிநாடார் கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பரமக்குடியில் டிச.23 ல் தனியார் துறை வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்: கலெக்டர் தகவல்
by mohan
written by mohan
தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு & பயிற்சித்துறை, ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட நிர்வாகம் & ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தனியார் துறை வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளியில் டிச 23 காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 100 க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கு வேலைநாடுநரை தெரிவு செய்ய உள்ளனர். 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை படித்தோர், ஐடிஐ., டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகள், முதுகலை, இளங்கலை பட்டதாரிகள், செவிலியர், லேப் டெக்னீசியன் கல்வித்தகுதியுடைய வேலைவாய்ப்பற்ற அனைவரும் கலந்துகொண்டு தங்களுக்கான பணியை தேர்வு செய்ய அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். முகாமில் பங்கேற்க https://forms.gle/vZWbUPHnMgRGxXrP8 முன்பதிவு செய்து கொள்ளலாம்.இம்முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல், 04567-230 160 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் தேர்வாகி செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோரின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தைக்கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது. வேலைநாடுநர் தங்களது முழு பயோடேட்டா, அனைத்து அசல் கல்விச் சான்றுகள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் இத்தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தூத்துக்குடியில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இராஜபாளையம் நகராட்சி சார்பில் 1 லட்சம் மதிப்பிளான நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்தனர்
by mohan
written by mohan
விருதுநகர் இராஜபாளையம் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி பகுதி மக்களுக்கு இராஜபாளையம் நகராட்சி மற்றும் கவுன்சிலர்கள் ஒன்றிணைந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்தனர்.மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாலாயிரத்துக்கும் மேற்பட்டோர் பயனடையும் வகையில் பால் ரஸ்க் ரொட்டி மற்றும் உணவு சமைக்க தேவையான உணவு பொருட்கள் குடிநீர் பாட்டில்கள் உட்பட 4000 அனுப்பி வைக்கப்பட்டது.இராஜபாளையம் அம்மா உணவகம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்வினை நகர மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் முன்னின்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் நகராட்சி ஆணையாளர் நாகராஜன் இராஜபாளையம் திமுக கவுன்சிலர்கள் நகராட்சி அதிகாரிகள் உட்பட ஏராளமான கலந்து கொண்டு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.