இராம்நாடு ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி கிளப், தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி சார்பில் தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. இராமநாதபுரம் அரண்மனை வாசல் முன் தொடங்கிய பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா துவங்கி வைத்தார். ரோட்டரி உதவி ஆளுநர் கே.நானா (எ) நாகரத்தினம் முன்னிலை வகித்தார். கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்ட பேரணிஅரண்மனையில் தொடங்கி வண்டிக்காத் தெரு, நகராட்சி அலுவலகம் வழியாக வழி விடு முருகன் கோயில் வாசல் முன் நிறைவடைந்தது.ராம்நாடு ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி கிளப்தலைவர் கே.கணேச கண்ணன், செயலாளர் ஜி.ஜெயகுமார், கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி செயலர் ஜீவலதா, முதல்வர் முனைவர் ஜி.முத்துக்குமார் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். பட்டயத் தலைவர் தினேஷ் பாபு, முன்னாள் உதவி ஆளுநர்கள் சுகுமாறன், பார்த்தசாரதி, உறுப்பினர்கள் அண்ணாதுரை, பாபு, கோபால் (எ) ராஜா ராம் பாண்டியன், செல்வம், ஜெகன் அகிலன், ஜகத் இளவரசன், அருண்குமார், செங்குட்வன் மற்றும் சமூக ஆர்வலர் சுப. மங்களநாத சேதுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Category:
செய்திகள்
கோவையில் கால் டாக்ஸி ஓட்டுனரை கத்தியால் குத்திவிட்டு காரை கடத்திய அதிர்ச்சி சம்பவம்
by mohan
written by mohan
கோவை : சூலூர் அருகே வாடகைக்கு டேக்ஸி புக் செய்த அந்தமான் தீவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஓட்டுநரை கத்தியால் குத்திவிட்டு, காரை கடத்த முயற்சி செய்த சம்பவம் ஓட்டுநர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் ரெட் டாக்ஸியில் ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில், அதிகாலை 2 பேர் மதுரை செல்ல ஓட்டுநர் வசந்தகுமாரின் காரில் சிங்காநல்லூரில் இருந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, சூலூர் அருகே சென்ற போது, பின்னால் அமர்ந்திருந்த இருவர் திடீரென ஓட்டுநர் வசந்தகுமாரை கத்தியால் குத்தி காரில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். இதையடுத்து, அந்த நபர்கள் காரை எடுத்துக் கொண்டு தப்பி சென்றனர்.பின்னர், சாலையில் சென்று கொண்டிருந்த நபர்கள் ஓட்டுநரை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த சூலூர் போலீசார் குற்றவாளிகளை விரைவாக பிடிக்க திருப்பூர் போலீசாரை உஷார் படுத்தினார். இதையடுத்து, அனைத்து பகுதிகளிலும் வாகன தணிக்கை நடைபெற்றது. அப்போது, திருப்பூர் அருகே போலீசார் சோதனையில் இருவரையும் பிடிக்க முயன்ற போது ஒருவர் தப்பி ஓடினார். மற்றொருவர் போலீசாரிடம் சிக்கினார். இதை தொடர்ந்து, போலீசார் கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் பெயர் திருமுருகன் என்பதும், தப்பி ஓடியவர் கொங்குசாமி என்பதும் தெரிய வந்தது. மேலும், இவர்கள் இருவரும் அந்தமான், நிக்கோபர் தீவை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதனிடையே, தப்பியோடிய கொங்கு சாமியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வாடகைக்கு கார் பதிவு செய்து வரவழைத்து, ஓட்டுநரை கத்தியால் குத்திவிட்டு காரை கடத்த முயன்ற சம்பவம் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு தர காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வடமதுரை அருகே தனியார்மில் வேன் ஓட்டுநரை மர்மநபர்கள் கொடிய ஆயுதங்களால் தாக்கி பணம் மற்றும் செல்போன் பறிப்பு
by mohan
written by mohan
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே கண்ணூத் ஊரைச்சேர்ந்த கிருஷ்ணா(26) தனியார் மில் வேன் டிரைவராக வேலை செய்து வரும் இவரிடம் SBM பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கத்தியை காட்டி மிரட்டி கடுமையாக தாக்கியதோடு செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதேபோல் சம்பவம் அதே பகுதியில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு நடந்தது குறிப்பிடத்தக்கது. அந்த சம்பவத்தில் மூன்று நபர்களை வடமதுரை காவல்துறையினர் கண்டறிந்து செல்போன் மற்றும் பணத்தைப் பெற்று பாதிக்கப்பட்ட நபருக்கு கொடுத்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்களால் இரவு நேரங்களில் இந்த பகுதியில் நடந்து செல்வதற்கும் இருசக்கர வாகனத்தில் செல்வதற்கும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஆகவே, காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சாத்தூர் அருகே மேட்ட மலையில் பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்தில் 3 போ் பலி..
by mohan
written by mohan
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்ட மலையில் மாலை23.08.19 பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்தில் தர்மர் மற்றும் விஜய் பாண்டி இரண்டு பேர் பலி . இறந்தவர் உடலை மீட்க தியணைப்பு வீரர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்
மேலும் ஒருவர் பலி பலி எண்ணிக்கை மூன்றாக உயர்வு
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் தொடர் கண்காணிப்பு …
by mohan
written by mohan
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ளது. அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்ய உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் விடுமுறை நாட்களிலும், விழா நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் வந்த சாமி தரிசனம் செய்வார்கள்.மேலும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு திருவண்ணாமலை நகரின் மையப்பகுதியில் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.
இந்த கோவிலில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் கோவிலில் உள்ள ராஜகோபுரம், பே கோபுரம், திருமஞ்சன கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் ஆகிய கோபுர வாசல்களில் தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை சீர்குலைக்க சதி செய்ய பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 4 கோபுர வாசல்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடைமைகள் தீவிர சோதனைக்கு பின்னரே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். வழக்கமாக கோவிலில் சுமார் 30 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தீவிரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளதாக துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தெரிவித்தார்.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தியின் உத்தரவின் பேரில் கோவில் மட்டுமின்றி மாவட்டத்தில் அதிக மக்கள் கூடும் பகுதிகளிலும் போலீசார் தீவிரமாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தொடர்ந்து போலீசார் வாகன சோதனையும், ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
TARATDAC சார்பில் நடைபெற்ற ஏழாண்டு கால மாற்றுத்திறனாளிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி…
by mohan
written by mohan
திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த வசதியாக வெஸ்டர்ன் கழிப்பறை வசதி செய்து தரப்படாமல் இருந்தது. ஏழு ஆண்டுகளாக பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் முறையிட்டும் பலனில்லாத காரணத்தால் கடந்த 24.07.19 அன்று தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்டது. மாற்றுத்திறனாளிகளின் போராட்டத்தை ஒட்டி பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட வருவாய் அலுவலர் 45 நாட்களுக்குள் மாற்றுத்திறனாளிகளுக்கான வெஸ்டர்ன் கழிப்பறை வசதியை ஏற்ப்படுத்தி தருவதாக உத்திரவாதம் அளித்தார்.
அதன் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் வெஸ்டர்ன் கழிப்பறை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. இன்னும் சில தினங்களில் மாற்றுத்திறனாளிகளின் உபயோகத்திற்காக கழிப்பறை திறக்கப்பட உள்ளது.கழிப்பறை வேலைகள் மட்டுமே நிறைவடைந்துள்ள சூழ்நிலையில் இன்று வரை கழிவறைக்கு பயன்படுத்தும் தண்ணீருக்கான ஏற்ப்பாட்டை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை. எனவே, உடனடியாக கழிப்பறையை பயன்படுத்துவதற்கான தண்ணீரையும் ஏற்பாடு செய்து மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமாறு TARATDAC-யுடன் இணைந்து மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
TARATDAC-யின் கோரிக்கைக்கு செவிசாய்த்து நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் மாவட்ட தலைவர் செல்வநாயகம் மாவட்ட செயலாளர் பகத்சிங்ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் அருகேபோக்குவரத்து நகரைச் சேர்ந்தவர் சந்திரன். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன், கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடுவதற்கு காரேந்தல் சென்றார். மீண்டும் வீடு திரும்பிய போது வீட்டின் முன் கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.19 ஆயிரத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், உத்தரவின் பேரில் மேலூர் கா.நி சரகத்தில் 100 gms. செக்கானூரணி கா.நி சரகத்தில் 1.100 Kgs. எழுமலை கா.நி சரகத்தில் 1.500 kgs. சோழவந்தான் கா.நி சரகத்தில் 2.200 Kgs. சேடப்பட்டி கா.நி சரகத்தில் 100 gms.ஆகமொத்தம் 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, கஞ்சா விற்பனை செய்த 5 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளது
.செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தொடர்ந்து சலிக்காமல் ஆதரவற்ற நிலையில் இருக்கும் பிரேதங்களை அடக்கம் செய்யும் நேதாஜி ஆம்புலன்ஸ்
by mohan
written by mohan
தொடர்ந்து சலிக்காமல் ஆதரவற்ற நிலையில் இருக்கும் பிரேதங்களை அடக்கம் செய்யும் நேதாஜி ஆம்புலன்ஸ் உரிமையாளர் ஹரிகிருஷ்ணன் இன்று 23.08.19 இரண்டு ஆண் ஆதரவற்றவர் பிரேதம் படத்தில் பக்கத்தில் இருக்கும் நண்பர் பலசுப்பிரமணியம் கூடாங்குளம் வேளாண்மை துறையில் AE மதுரையில் வீடு இரண்டு பிரேதம் மதுரை தத்தநேரியில் நல்லடக்கம் செய்ய அனைத்து உதவியால் இறுதியாக இவர் தலை முடி எடுத்து இறந்த ஆத்மா சாந்தி அடைய இறுதி காரியங்கள் செய்தார்.. காவல்துறை நண்பர்கள் உதவியால் யாருக்கு வரும் இந்த மனது எங்கள் நேதாஜி ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறை நண்பர் சார்பில் இவருக்கு எங்கள் ராயல் சல்யூட் பாசத்துடன் நேதாஜி ஹரிகிருஷ்ணன் ஒரு பிரேதம் சாலை விபத்து மதுரை மாநகர் காவல் இரண்டாவது மதுரை மாவட்டத்தில் அப்பன் திருப்தி இதுயத்துடன் இறந்த ஆத்மா சாந்தி அடைய பிராத்தனை செய்து சென்றனர் ..இவ்வாறு தொிவித்தாா்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை செல்லும் மேலக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் ஈ. சி. ஆர் பகுதியில் சாய்ந்த நிலையில் இருக்கும் மின் விளக்கு கம்பம்…இந்த நெடுஞ்சாலை இரவிலும் பகலிலும் நெடுந் தூரம் பயணிக்கும் வாகனங்களுக்கு குறைவு இல்லாத நெடுஞ்சாலை ஆகும். நான்கு வழி சாலை பிரியும் மையமான இடத்தில் சாய்ந்த நிலையில் இருக்கக்கூடிய மின்கம்பத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைவில் கவனம் கொண்டு பழுது நீக்கம் செய்ய வேண்டும். மேலும் அந்த வழியே தெரியாமல் இருக்கும் விளக்குகளை கவனித்து அவற்றை பழுது நீக்கி மீண்டும் சரியான முறையில் மின் விளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுப்பதன் மூலம் வாகன விபத்துகளை தவிர்த்து வாகன ஓட்டிகளுக்கும் பயணிகளுக்கும் பாதுகாப்பை அளிக்க முடியும். ஆகவே விரைவில் பணியை துவங்கி அப்பகுதிக்கு நெடுஞ்சாலைப் பகுதிக்கு வெளிச்சம் கிடைக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள் உடைய விண்ணப்பமாக உள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலையில் சுடுகாடு ஆக்கிரமிப்பு.. தடுப்பு வேலியை உடைத்தெறிந்து பெண்கள் ஆவேசம்
by mohan
written by mohan
திருவண்ணாமலையில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாட்டை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி, தேனிமலை பகுதி மக்கள் இரண்டு நாட்களாக, போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.திருவண்ணாமலை நகரம், தேனி மலைப் பகுதியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 100 ஆண்டுகளாக பயன்படுத்திவந்த சுடுகாட்டை, தனிநபர் சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாக குற்றச்சாட்டு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக சுடுகாடு பகுதியை ஆக்கிரமிப்பு செய்து தனிநபர் சிலர், காவல்துறை பாதுகாப்புடன் வேலி அமைப்பதை கண்டித்து, தேனி மலைப் பகுதியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த திருவண்ணாமலை நகர போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போலீசாரின் வழிகாட்டுதல்படி, சுடுகாட்டு இடம் தொடர்பாக, கோட்டாட்சியரிடம் பேச்சுவார்த்தைக்கு சென்றனர். அப்போது, சுடுகாடு நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. எனவே, நீதிமன்றத்தை அனுகி பொது மக்கள் தீர்வு கானலாம் என கோட்டாட்சியர் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அங்கிருந்து சென்ற பொது மக்கள், சுடுகாட்டு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலையை உடைத்தெறிந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.
by mohan
written by mohan
தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.ஆசிரியை முத்தமீனாள் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை குன்றக்குடி தைப்பூச காவடி நகரத்தார் ஸ்ரீ சண்முகநாதன் அன்னதான அறக்கட்டளை செயலர் சிதம்பரம் முன்னிலை வகித்தார்.அறக்கட்டளை உபதலைவர் அய்யப்பன் பேசுகையில் , புத்தகங்கள் அதிகமாக படித்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.நமக்கு சுதந்திரம் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு சிரமப்பட்டு கிடைத்துள்ளது.நமது சுதந்திரம் என்பது அடுத்தவர் உரிமையை பாதிக்காமல் இருக்க வேண்டும் என்று பேசினார். கடந்த ஆண்டு முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் சரண்குமார்,முத்தையன்,அஜய்,யோகேஸ்வரன்,ஜெயஸ்ரீ,நதியா,ஈஸ்வரன்,அய்யப்பன் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது . நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.பெற்றோர்கள் லெட்சுமி,சித்ரா,கௌசல்யா,கார்த்திகா உட்பட ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டியில் தேனி பாராளுமன்ற தொகுதிக்காக உழைத்த கழக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்;டம் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் தலைமையில் நடைபெற்றது.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதிக்காக உழைத்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீpந்திரநாத்குமார் கழக நிர்வாகிகளிடம் நன்றி தெரிவித்து பேசினார். மேலும் இந்நிகழ்ச்சியில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி. நகரசெயலாளர் பூமாராஜா, செல்லம்பட்டி, சேடபட்டி ஒன்றியசெயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தவசி உட்பட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பலர் கலந்துகொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமேஸ்வரம் வட்டார அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள், ராமநாதபுரம் சீதக்காதி – சேதுபதி விளையாட்டு அரங்கில்பனைக்குளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒருங்கிணைப்பில்நடந்தது.முதன்மை கல்வி அலுவலர் அய்யணன் தலைமை வகித்தார். மாவட்டக் கல்வி அலுவலர்கள் முத்துச்சாமி, பாலதண்டாயுதபாணி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். அரசு தேர்வுகள் இயக்குநர் கல்பனாத் ராய் சிறப்புரையாற்றினார். தலைமை ஆசிரியை விஜி வரவேற்றார்.
இராமேஸ்வரம் வட்டாரத்தில் உள்ள 32 பள்ளிகளைச் சேர்ந்த நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.உடற்கல்வி இயக்குநர்கள் கண்ணதாசன், சசிகுமார், உடற்கல்வி ஆசிரியர்கள் சந்திரசேகர், முத்து முருகன், அருள் ஜோன், இருதய ராஜ், கிறிஸ்டோபர், சுரேஷ், உடற்கல்வி ஆசிரியைகள் கோபி லட்சுமி, லூர்து மேரி, ஜெரோம் ஜெயக்குமார், மருதசாமி ஆகியோர் போட்டி நடுவர்களாக பணியாற்றினர். போட்டிக்கானஎற்பாடுகளை மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் எம்.ரமேஷ் தலைமையில் உடற்கல்வி ஆசிரியைகள் கவிதா, மகேஸ்வரி உள்ளிட்டோர் செய்தனர்.
19 வயதிற்குட்பட்டோர் செஸ் போட்டி மகளிர் பிரிவு ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வ வர்த்தினி அம்பாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி எம்.சுபஸ்ரீ முதலிடம், மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப் பள்ளி எம்.பார்கவி பாரதி இரண்டாமிடம், எம்.ஹரிணி மூன்றாடம் இடம் பிடித்தனர்.17 வயதிற்குட்பட்டோர் செஸ் போட்டி மகளிர் பிரிவு வேர்க்கோடு செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி ஜே.எஸ்.மதுமிதா ஸ்ரீ முதலிடம், தங்கச்சிமடம் ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி எஸ்.ஆரோக்கிய டிஸோசா இரண்டாம் இடம், எஸ்.பரிஜா பர்சானா மூன்றாம் இடம் பிடித்தனர்.14 வயதிற்குட்பட்டோர் செஸ் போட்டி மகளிர் பிரிவு அக்காள்மடம் செயின்ட் ஆனிஸ் மேல்நிலைப் பள்ளி பி.ஷிவானி முதலிடம், ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வத வர்த்தினி பெண்கள் மேல்நிலைப் பள்ளி கே.ஸ்னேகா இரண்டாம் இடம், பனைக்குளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எம்.பத்மநிஷா மூன்றாம் இடம் பிடித்தனர்.
11 வயதிற்குட்பட்டோர் செஸ் போட்டி மகளிர் பிரிவு மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பனைக்குளம் தொடக்கப் பள்ளி எச்.பரக்கத் நிஷா முதலிடம், எஸ்.அஸ்பியா இரண்டாம் இடம், ராமேஸ்வரம் நடுநிலைப்பள்ளி எண் 2 – பி.அன்ன சன்டா மூன்றாம் இடம் பிடித்தனர்.
19 வயதிற்குட்பட்டோர் செஸ் போட்டி ஆடவர் பிரிவு ராமேஸ்வரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எம்.ஜெயசூர்யா முதலிடம், பனைக்குளம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பி.செய்யது அப்துல்லா இரண்டாம் இடம், அக்காள் மடம் செயின்ட் ஆனிஸ் மேல்நிலைப் பள்ளி சி.சுல்ஸ்டன் மூன்றாம் இடம் பிடித்தனர்.17 வயதிற்குட்பட்டோர் செஸ் போட்டி ஆடவர் பிரிவு ராமேஸ்வரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி காளீஸ்வர் முதலிடம், மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப் பள்ளி முகமது அகில் இரண்டாம் இடம், வேர்க்கோடு செயின்ட் ஆனிஸ் மேல்நிலைப் பள்ளி ஜெ.நிகஜ் டிரஸ்கோத்திக் மூன்றாம் இடம் பிடித்தனர்.14 வயதிற்குட்பட்டோர் செஸ் போட்டி ஆடவர் பிரிவு ராமேஸ்வரம் வேர்க்கோடு செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி ஏ.ஐால் ஹிர்த்திக் முதலிடம், அழகன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி ஜி.ரோஹித் இரண்டாம் இடம், புதுவலசை அரபு ஒலியுல்லா உயர்நிலைப் பள்ளி என். ஷாம் மூன்றாம் இடம் பிடித்தனர்.11 வயதிற்குட்பட்டோர் செஸ் போட்டி ஆடவர் பிரிவு பனைக்குளம் தொடக்கப் பள்ளி எஸ்.பயாசுதீன் முதலிடம், அழகன்குளம் நஜியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அப்சர்தீன் இரண்டாம் இடம், பனைக்குளம் மூன்றாம் இடம் தொடக்கப் பள்ளி எம்.பசல் அஹமது பிடித்தனர்.19 வயதிற்குட்பட்டோர் கேரம் போட்டி ஆடவர் இரட்டையர் பிரிவு இரட்டையூரணி அரசு மேல்நிலைப் பள்ளி வி.வித்யாசாகர், எம்.வசந்த் முதலிடம், உச்சிப்புளி நேஷனல் அகாடமி மேல்நிலைப் பள்ளி எம்.முகமது ஷக்கீர் , ஆர்.முகமதீன் அக்ரம் இரண்டாம் இடம் பிடித்தனர்.19 வயதிற்குட்பட்டோர் கேரம் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவு இரட்டையூரணி அரசு மேல்நிலைப் பள்ளி வி.வித்யாசாகர், முதலிடம், பனைக்குளம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எம்.முகமது யூசுப் அஸ்மி ம் இரண்டாம் இடம் பிடித்தனர்.17 வயதிற்குட்பட்டோர் கேரம் போட்டி ஆடவர் இரட்டையர் பிரிவு உச்சிப்புளி நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி எம்.காமேஷ், எஸ்.தாமோதரா முதலிடம், இருமேனி அரசு மேல்நிலைப் பள்ளி என்.சீனிவாசன் , எஸ்.சுலைமான் அலிஇரண்டாம் இடம் பிடித்தனர்.
17 வயதிற்குட்பட்டோர் கேரம் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவு உச்சிப்புளி நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி எம்.காமேஷ், முதலிடம், இருமேனி அரசு மேல்நிலைப் பள்ளி என்.சீனிவாசன் இரண்டாம் இடம் பிடித்தனர்.14 வயதிற்குட்பட்டோர் கேரம் போட்டி ஆடவர் இரட்டையர் பிரிவு இருமேனி அரசு மேல்நிலைப் பள்ளி ஏ.பிரஜன், முகமது அஸ்வான் முதலிடம், இரட்டையூரணி அரசு மேல்நிலைப் பள்ளி கே.ரித்திக், கே.ஹரீஷ் இரண்டாம் இடம் பிடித்தனர்.14 வயதிற்குட்பட்டோர் கேரம் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவு இருமேனி அரசு மேல்நிலைப் பள்ளி ஏ.பிரஜன், முதலிடம், இரட்டையூரணி அரசு மேல்நிலைப் பள்ளி கே.ரித்திக் இரண்டாம் இடம் பிடித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம்🚔கொட்டாம்பட்டி போலீசார் ரோந்து சென்றபோது கோட்டைமண்டி கோவில் அருகே சீட்டு வைத்து சூதாடிய 17 பேரை இன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையிலான போலீசார் கைது செய்து ரூ.5,200/- மற்றும் 16🏍 டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.பேரையூர் போலீசார் P.சுப்புலாபுரம்த்தில் பணம் வைத்து சூதாடிய 3 நபர்களை கைது செய்து ரூ.660/-ஐ பறிமுதல் செய்து கைது செய்தனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மதுவிலக்குபிரிவு ஆய்வாளர் காளீஸ்வரி திடல் பகுதியில் ரோந்து சென்ற போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தவரை விசாரித்தபோது அவர் கடுக்கரை பகுதியை சேர்ந்த நாராயணன் என்றும் அவரை சோதனை செய்தபோது அனுமதியின்றி மது விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே நாராயணனை கைது செய்தார். பின்பு அவரிடமிருந்த மது பாட்டில்கள் கைப்பற்றபட்டது.
செய்தி வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செங்கம் அருகே 3 பசு மாடுகளுக்கு விஷம் வைத்து கொலை 6 பேர் கொண்ட கும்பல் வெறியாட்டம்
by mohan
written by mohan
திருவண்ணாமலை செங்கம் அருகே 3 பசு மாடுகளுக்கு விஷம் வைத்து கொலை 6 பேர் கொண்ட கும்பல் வெறியாட்டம்..திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குரும்பட்டி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் அனிதா குடும்பாததாரின் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 6 பசுக்களை வைத்து பிழைத்து வந்தனர். மணிகண்டனின் பக்கத்து விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் முன் விரோதம் காணமாக மாடுகளுக்கு விஷம் கலந்த உணவை வைத்து உள்ளனர். இதை சாப்பிட்ட மாடுகள் 22 சம்பவ இடத்தில் இறந்தன. மீதி 4 மாடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் இது குறித்து பக்கத்து நிலத்தை சேர்ந்த 6 பேர் மீது செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் MGR நகரில் உள்ள ஸ்ரீ காளி அம்மன் கோவிலில் உள்ள ஸ்ரீ கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியான இன்று 23.08.19 வெள்ளிக்கிழமை 10.30 மணியிலிருந்து நண்பகல் 12 மணிக்குள் ராகு காலத்தில் பூஜை நடந்தது. கோவில் நிர்வாகி சாமியார் ராம்ராஜ் இந்த அஷ்டமி ராகு கால பூஜையை நடத்தினார்.
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி டி.இ.எல்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக முதலமைச்சிரின் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் ராஜசேகரின் தலைமையில் நடைபெற்றது.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள தனியார் டிஇஎல்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் மதுரை மாவட்ட ஆட்சியர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. மேலும் பொதுமக்களிடமிருந்து ஏராளமான மனுக்களும் பெறப்பட்டது. இதனைதொடர்ந்து 28லட்சம் மதீப்பீட்டில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்பி உதயக்குமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் நீதிபதி. பெரியபுள்ளான், சரவணன், மாணிக்கம், மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் தர்மேந்திபிரசாத்யாதவ், உசிலம்பட்டி கோட்டாட்சியர் பானுகோபன். வட்டாட்சியர் செந்தாமரை உட்பட அரசு அதிகாரிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.விழாவில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மதுரை ஆட்சியர் மற்றும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்தி ரநாத் குமாரிடம் மனுக்களை அளிப்பதில் தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது.இதனால் மனுக்கொடுக்க வந்த பலர் மனுவை அளிக்காமல் திருப்பிச் சென்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நாகை மாவட்டம் சேர்ந்த இ.ஜி.எஸ்பொறியியல் கல்லூரியில் கணினி பொறியியல் பயிலும் மாணவர் சபரி நாதன்.மீனவ குடும்பத்தை சேர்ந்த சபரிநாதன் ஒரு கிலோ எடையுள்ள இரும்புச்சங்கிலியால் தன் ஒரு கையை கட்டிக்கொண்டு மற்றொரு கையை மட்டும் பயன்படுத்தி நீந்தி வேளாங்கண்ணி முதல் அக்கரைப்பேட்டை வரை 7.215 கிலோ மீட்டர் தூரத்தை 3 மணி நேரம் 24 நீந்தி நீந்தி சாதனை படைத்தார். இவரது இந்த சாதனை முயற்சியானது 22.08.2019 வியாழக்கிழமை அன்று காலை சரியாக 8 மணி 4 நிமிடம் அப்பொழுது துவங்கப்பட்டது.
.அன்று முற்பகல் 11 மணி 37 நிமிடத்தில் சபரி தன் சாதனையை நிறைவு செய்தார். இந்த சாதனையை T.K. ராஜசேகரன் துவங்கி வைத்தார்கள். சபரிநாதன் கடலில் நீந்துவதை வில் மெடல் நிறுவனத்தின் தலைவர் Dr. கலைவாணி, முதன்மைச் செயலர் Dr.தஹ்மிதா பானு, ஒருங்கிணைப்பாளர் ரியாஸ்தீன் ஆகியோர் பெரிய படகுகளில் இருந்து 3.24 மணி நேரமும் கண்காணித்தனர். சாதனை படைத்த சாதனையாளர் சபரி நாதனுக்கு இ.ஜி.எஸ் பிள்ளை நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அவருடைய ஊர் இளைஞர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.அன்று மாலை நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சபரிநாதன் உலக சாதனை சான்றிதழை மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் கையால் பெற்றுக்கொண்டார்.நாகை மாவட்ட ஆட்சியர் சாதனைபடைத்த மாணவன் சபரிநாதனால் நாகை மாவட்டத்திற்கே பெருமை.இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து சிறப்பாக செயல்படும் வில் மெடல்ஸ் அறக்கட்டளைக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
You must be logged in to post a comment.