திமுக தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , தமமுக., தலைவரான ஜான்பாண்டியன் பெயரை ஒருமையில் குறிப்பிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக ராமநாதபுரம் அரண்மனை முன் இன்று (11/07/2019) காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Category:
மாவட்ட செய்திகள்
இராமநாதபுரம் மாவட்ட TUJ சங்க பத்திரிகையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம் மாவட்ட TUJ சங்க பத்திரிகையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு. பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்க வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும், மாவட்ட மற்றும் தாலுகாவில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், பத்திரிகையாளர்களின் வாகனங்களுக்கு டோல்கேட்டில் இலவச அனுமதி வழங்க வேண்டும். உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரும் மனு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம்தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்க ( TUJ ) நிர்வாகிகள் இன்று (11/07/2019) அளித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமேஸ்வரத்தில் அடிக்கடி மின் வெட்டு 13.7.2019ல் திமுக., ஆர்ப்பாட்டம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
பன்முக கலாசாரம் கொண்ட தேசிய புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரத்திற்கு தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயனாளிகள் வந்து செல்கின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக ராமேஸ்வரம் நகரில் அடிக்கடி நிலவும் தொடர் மின்வெட்டால் சுற்றுலா பயணிகளிடம் இரவு நேர அச்சம் தொடர்கிறது.
மேலும் வியாபாரம் பாதிக்கப்பட்டு வருவதால் வியாபாரிகள், பொதுமக்கள் பல்வேறு அவதியடைந்து வருகின்றனர். அடிக்கடி தடைபடும் மின் விநியோகத்தை சீர் செய்வதில் தமிழக மின்வாரியம் எவ்வித முனைப்பு காட்டாமல் தொடர்ந்து மெத்தன போக்கு காட்டி வருகிறது அ.தி.மு.க.,அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து இராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில், மண்டபம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஏ.சி.ஜீவானந்தம் முன்னிலையில் இராமேஸ்வரம் மின் வாரியம் அலுவலகம் முன் இராமேஸ்வரம் நகர் திமுக சார்பில் 13.7.2019 சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இதில் திமுக முன்னணி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், பொதுமக்கள், வியாபாரிகள், இளைஞர்கள் கலந்துகொண்டு ஆதரவளிக்குமாறு இராமேஸ்வரம் நகர் திமுக செயலாளர் கே.இ.நாசர்கான் அழைப்பு விடுத்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் இன்று (11/07/2019) வெவ்வேறு ரயில் விபத்தில் சிக்கி இருவர் பலி ஆகியுள்ளன்னர். மதுரை பழங்காநத்தம் டிவிஎஸ் நகர் இணைக்கும் ரயில்வே தண்டவாளத்தில் ரமேஷ் வயது (50) மதுரை ஜீவா நகரை சேர்ந்தவர் தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அதே போல் மதுரை திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன் கோயில் அருகே தண்டவாளத்தை கடக்கும் பொழுது சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ரயில் மோதிய விபத்தில் பலியாகியுள்ளார். இது தொடர்பாக மதுரை ரயில்வே காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மரம் வளர்ப்பு பிரச்சாரம் ஒரு புறம்… மரம் வெட்டுதல் ஜரூராக மறுபுறம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் கள்ளிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்னமநல்லூர் ஊராட்சியில் சாலை ஓரமாக அப்பகுதி முழுவதும் பசுமையாக, பாதசாரிகளுக்கு நிழல் கொடுத்துக் கொண்டு இருந்த புளியமரங்களை அப்பகுதியை சேர்ந்த சிலர், ஊராட்சி செயலரின் அனுமதியோடு அந்த புளியமரங்களை வெட்டி விற்பனை செய்கின்றனர்.
இதுகுறித்து கள்ளிக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு தகவல் தந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தகுந்த அதிகாரிகள் தலையீட்டு உடனடயாக இச்செயலை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூகார்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மின்மிகை மாநிலத்தில் மின்சாரமே இல்லாத மாவட்டமாக மாறி வரும் இராமநாதபுரம்… பல கோடிகள் வர்த்தக இழப்பு…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மின்மிகை மாநிலத்தில் மின்சாரமே இல்லாத மாவட்டமாக மாறி வரும் இராமநாதபுரம். ஆம் மிகை மாநிலம் என மார்தட்டி கொண்டிருந்த தமிழகத்தில், கடந்த ஒரு வாரமாக இராமநாதபுரம். மாவட்டமே இருளில் மூழ்கி கிடக்கிறது.
இதனால் முதியவர்கள், நோயாளிகள், பள்ளி மாணவ, மாணவிகள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும். பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள். அதற்கு ஒரு படி மேலாக மின்சாரத்தை நம்பி தொழில் நடத்தும் பலர் தங்களது வியாபார தலங்களை சில தினங்களாக மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
சாமானிய மனிதனாக பார்க்கும் பொழுது மின் வெட்டு என பார்த்தாலும், இதனால் அரசாங்கத்துக்கும் வர்த்தக ரீதியாக பல லட்சம் கோடி தினமும் இழப்பு ஏற்படுகிறது என்பதை அறிந்து ஏன் ஆட்சியாளர்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் மெத்தனமாக உள்ளார்கள் என்று புரியவில்லை. மேலும் இதையும் அரசியல் ஆக்கும் விதமாக சில மணிநேரம் வந்த மின்சாரத்திற்கு மாவட்ட அமைச்சரின் தீவிர முயற்சி என்ற பாராட்டு மடல் வேறு.
இது சம்பந்தமாக மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வழுதூர் 230 கி.வோ, 110 கி.வோ., துணை மின் நிலையங்கள், வழுதூர் ஆர்.கே.பிளான்ட் பீடர் 110 கி.வோ ஆகியவற்றில் ஜூலை இரவு 10: 25 மணி முதல் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான மண்டபம், பெருங்குளம், ராமேஸ்வரம் துணை நிலையங்களில் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. மேலும், ஜூலை 10 இரவு 9: 10 மணி
காவனூர் – வாலிநோக்கம் மின் பாதையிலும், ஜூலை 10 இரவு 9:54 மணியில் இருந்து வாலிநோக்கம் – ஏர்வாடி மின்பாதையிலும், ஜூலை 10 இரவு 10:30 மணியில் இருந்து ஏர்வாடி_கீழக்கரைமின் பாதையிலும் மின் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பகிரப்படும் 110 கி.வோ வாலிநோக்கம், கீழக்கரை, ஏர்வாடி ஆகிய துணை மின் நிலையங்களில் மின் வெட்டு நிலவுகிறது. இதன் மூலம் 76 ஆயிரம் வீட்டு மின் இணைப்புகள் மின்சாரம் பாதித்துள்ளதாக மின்வாரிய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எது எப்படி இருந்தாலும் பொதுமக்கள் துயர் நீக்க உடனடி நடவடிக்கை எடுப்பது அரசின் கடமையாகும்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி இருந்து தர்மபுரி செல்லும் பழைய தார் சாலை மீது புதிய தார் ஊற்றும் பணி தொடங்கப்பட்டது பாப்பாரப்பட்டி இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் தர்மபுரி உள்ளது. சில மாதத்திற்கு முன்பு அவசர அவசரமாக பாப்பாரப்பட்டி இருந்து தருமபுரி செல்லும் சாலையில் பழைய தார் சாலை மீது புதிய தார் சாலை அமைக்கப்பட்டது.
இதனால் புதிய தார்சாலை பக்கவாட்டில் நிலத்துக்கு மேலே உயரமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி பட்டு வருகின்றன இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் பேருந்துக்கு இருசக்கர வாகனம் சைடு வாங்கும் போது விபத்து ஏற்படுகிறது.
அதே பகுதியில் மூன்று அரசு மதுக்கடைகள் உள்ளதால் மது வாங்க வரும் மது பிரியர்கள் இருசக்கர வாகனத்தை தார்சாலை மீதி நிறுத்திவிட்டு வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது தார் சாலையில் இருந்து கீழே மண் பாதைக்கு இருக்கும் போது விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
இதனால் பொதுமக்களின் நலன் கருதி புதிய தார்சாலை அமைக்க பட்ட பக்கவாட்டு நிலத்திற்கு மேலே உயரமாக இருக்கும் தார் சாலை அளவுக்கு இருபக்கமும் ஓரங்களில் மண் கொட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தூத்துக்குடி : மேல மருதூரில் இரவு நேரங்களில் சட்ட விரோதமாக நீர் ஓடையில் சரல் மணல் கொள்ளை வருவாய் துறையினர் பறிமுதல் செய்த வாகனங்கள் மாயம்: காவல்நிலையத்தில் புகார்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தாலுகா மேல மருதூர் கிராமத்தில் இரவு நேரத்தில் நீர் நிலைகள், ஓடைகள் மற்றும் தனியார் பட்டா இடங்களில் இரவு நேரங்களில் சரள் மணல் எடுத்து இரயில்வே பணிக்கு பயன்படுத்தி வருவதாக அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் அப்பகுதி மக்கள் விவசாய நிலத்திற்கு, பாசன வசதிக்கு பயன்படுத்தும் நீர்வரத்து கால்வாயில் மணல் எடுப்பதால் அதனால் நீர் வரத்து மூடபடுவதாகவும் அப்பகுதி மக்கள் மேல மருதூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் அலுவலரிடம் புகார் தெரிவித்தனர் புகாரை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் இணைந்து இரவு நேரங்களில் சட்டத்திற்கு புறம்பாக சரள் மணல் அள்ளிய மூன்று கிட்டாச்சி வாகனங்களும், மூன்று லாரிகளையும் தடுத்து நிறுத்தி தருவை குளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தடுத்து நிறுத்திய வாகனங்களை எடுத்துச் செல்வதற்கு தருவைகுளம் காவல் துறையினர் சென்ற போது ஓடையில் பொதுமக்கள் மற்றும் வருவாய்துறையினர் தடுத்து நிறுத்திய வாகனத்தை அதன் உரிமையாளர் எடுத்து சென்றது தெரியவந்தது. இதனால் சட்டவிரோதமாக சரள் மணல் அள்ளிய வாகனத்தையும் அதனை எடுத்து சென்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கிராம அலுவலர் மற்றும் வருவாய் அலுவலர் ஆகியோர் தருவைகுளம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தூத்துக்குடி மாவட்டம், வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா : 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை 144 தடை உத்தரவு : ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு ..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தூத்துக்குடி மாவட்டம், வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா : 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை 144 தடை உத்தரவு : ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் வட்டம், கட்டாலங்குளம் கிராமத்தில் 11.07.2019 அன்று வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 309வது பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது. மேற்படி விழாவானது அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரித்திட 10.07.2019 மாலை 6 மணி முதல் 12.07.2019 காலை 6 மணி வரை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி கட்டாலங்குளம் பகுதியில் பொதுக் கூட்டம் நடத்துவதற்கும், ஐந்து மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும், கட்டாலங்குளத்திலிருந்தும் பிற பகுதிகளிலிருந்தும் வந்து விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் அனைவரும் வாள், சுருள் கத்தி, கம்பு வேல்கம்பு, குச்சி, கற்கள் மற்றும் இதர அபாயகரமான ஆட்சேபகரமான ஆயுதங்கள் மற்றும் ஜோதி (விழா நிகழ்விடத்திலிருந்து 1 கி.மீ.க்கு வெளியே) கொண்டு வருவதற்கும்,
தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் திருவிழாவிற்கு கலந்து கொள்ள அழைத்து வரப்படுவதற்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தடை உத்தரவிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் தினசரி செல்லும் ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேற்படி வீரன் அழகுமுத்துக் கோனின் 309-வது பிறந்தநாள் விழாவானது அமைதியான முறையிலும் சீரும் சிறப்புமாக நடைபெற மாவட்ட காவல் துறையின் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மேற்படி நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள், அன்னதானம் மற்றும் ஊர்வலங்கள் ஏதும் நடத்தவிருப்பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை அணுகி அனுமதி பெற்றுக்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் இத்தடையுத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்குப் பொருந்தாது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தேசிய மீன்வளர்ப்போர் தினம் இன்று கொண்டாடப்பட்டது, இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தேசிய மீன்வளர்ப்போர் தினம், தமிழ்நாடு டாக்டர்.ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இன்று கொண்டாடப்பட்டது. தேசிய மீன்வளர்ப்போர் தினமானது வருடந்தோறும் ஜீலை மாதம் 10-ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.
இந்திய கெண்டைமீன்களில் தூண்டும் முறை இனப்பெருக்க தொழில்நுட்பத்தை கண்டறிந்த விஞ்ஞானிகளான பேராசிரியர்கள் ஹிராலால் சௌத்ரி மற்றும் அலிகுன்கி ஆகியோரின் நினைவாக தேசிய மீன்வளர்ப்போர் தினமாக கொண்டாடப்படுகிறது.. இந்நிகழ்ச்சியின் நோக்கமானது மீன்வளர்ப்போரிடையில் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், உற்பத்தியில் உள்ள தற்போதைய நிலையைவிட மீன் உற்பத்தியை மேலும் அதிகரிக்க செய்வதற்காகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் | சார்ந்த மொத்தம் 60 பண்ணையாளர்கள் மீன்வளத் தொழில் முனைவோர் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவில் முனைவர் க. வீரபத்ரன் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார், அவர் பேசுகையில்,:-
இந்திய பொருளாதாரத்தில் மீன்வளத்தின் பங்கு மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். மேலும், மீன் பண்ணையாளர்கள் அலங்கார மீன்வளர்ப்பு, நன்னீர் மீன்வளர்ப்பு, கூண்டு வளர்ப்பு, பண்ணைக் குட்டைகளில் மீன்வளர்ப்பு ஆகிய வளர்ப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும். மீன்வளத் தொழில் முனைவோர் மீன்வளத் தொழில் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு பயன்பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தூத்துக்குடி மீன்வள இணை இயக்குநர், ந. சந்திரா, மீன்வளத்துறை, சார்ந்த மீன்வளர்ப்பிற்கான திட்டங்கள் மற்றும் மானியம் குறித்து எடுத்துரைத்தார். தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி, முனைவர். ப. வேலாயுதம், தனது தலைமையுரையில் இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள நீர் ஆதாரங்கள் குறித்தும், மீன் உற்பத்தியை அதிகரிக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த மீன்வளர்ப்பை மேன்மையாக கையாண்டு வரும் தலை சிறந்த மீன்வள விவசாயிகளான எஸ்.முத்துக்குமார், வீ.பிச்சையா, அருள்மணி அகஸ்டின், பி.சின்னத்துரை, கு.சரவணன், வி. செல்வம் மற்றும் குழுவினரைப் பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது. இறுதியில், திருமதி. நீ.பாலசரஸ்வதி, மீன்வள உதவி இயக்குநர், தூத்துக்குடி நன்றியுரை ஆற்றினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி மூன்று ரோட்டில் சாய்ந்த நிலையில் வைக்கோல் ஏற்றிக் கொண்டு போகும் டிப்பர் வண்டி அடிக்கடி காண முடியும்.
பாப்பாரப்பட்டி மக்கள் அதிகமாக செல்லும் பகுதியில் சாய்ந்த நிலையில் வைக்கோல் ஏற்றிச் செல்வதால், மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற ஓவர் லோடு சரக்கு வண்டியில் ஏற்றிக்கொண்டு செல்வதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஓவர் லோடு ஏற்றிக் கொண்டு நகர் உள்ளே வரும் வாகனங்களை காவல்துறை சிறை பிடித்து விசாரணை செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்களின் கோரிக்கை.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேனி மாவட்டம் முழுவதும் விபத்துகளை குறைக்கும் வகையிலும், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுத்தும் வகையில் தேனி உட்கோட்ட DSP திரு.முத்துராஜா தலைமையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.செந்தில்குமார் ஆகியோர்கள் தேனி நகரில் உள்ள முக்கிய சாலை பகுதியில் கூடாரங்கள் அமைத்து விபத்தினால் ஏற்பட்ட உயிரிழப்பு போன்ற புகைப்படங்களை வாகன ஓட்டிகள் பார்வைக்கு வைத்து சாலை பாதுகாப்பு குறித்த அறிவுரைகள் மற்றும் துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினார்.
மேலும் இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டுக்களை தெரிவித்தனர்.
செய்தி வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாநகராட்சி அலுவலகங்கள், மாநகராட்சி கட்டிடங்களில் 4 வாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பூத்துக்கள் அமைத்து சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும் நகராட்சி ஊழியர்கள், அலுவலர்கள் சொத்து பட்டியலை மாநகராட்சி ஆணையரிடம் 3 மாதத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கதாகும்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நிலக்கேட்டை அருகே மக்கள் தொடர்பு முகாம் ரூ.5 இலட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
வத்தலக்குண்டு அருகே நடந்த மக்கள் தொடர்பு முகாமில் ரூ.5 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் சந்தையூர் ஊராட்சி வடக்குவலையபட்டியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. முகாம் துவக்க விழாவுக்கு மாவட்ட கலெக்டர் விஜயலெட்சுமி தலைமை வகித்து 264 பயனாளிகளுக்கு ரூ.5 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
100க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 200 பேர் கலெக்டரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் தங்களது செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கினர். மாவட்ட சமூக நல அலுவலர் முத்துமீனாள், நிலக்கோட்டை தாசில்தார் நவநீதகிருஷ்ணன், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயச்சந்திரன், வேதா, வட்ட வழங்கல் அலுவலர் சரவணவாசன், துணை தாசில்தார்கள் ராமசாமி, டேனியல், வருவாய் ஆய்வாளர் கோபி, கிராம நிர்வாக அதிகாரி மாணிக்கம், ஊராட்சி செயலர் பெரிச்சி, உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி
தளபதி சார்லி தொகுத்து வழங்கினார். முடிவில் வருவாய் கோட்டாட்சியர் உஷா நன்றி கூறினார். பாதுகாப்பு ஏற்பாடுகளை விளாம்பட்டி இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையில் போலீசார் செய்திருந்தனா்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல் நகர் மேற்கு காவல்துறை சார்பாக தலைகவசம் அனிவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
திண்டுக்கல் நகர் மேற்கு காவல் துறை சார்பாக நேருஜி நகர் ரவுண்டானா அருகே திண்டுக்கல் நகர் உட்கோட்டகாவல் துணை கண்காணிப்பாளர் மணிமாறன் தலைமையில் தலைக்கவசம் அணிவது குறித்தும் போக்குவரத்து விதி முறைகளை கடைப்பிடிப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் பாதுகாப்பு பற்றியும் அறிவுரைகளை பொது மக்களுக்கு வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் சரவணன் சார்பு ஆய்வாளர் அழகுராஜா மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்
மேலும், தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டிவந்த நபர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் எ. காமாட்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தலைமையின் கீழ் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.முகாமில் 92பயனாளிகளுக்கு சுமார்31 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.முகாமில் அரசு பல் துறைகள் சார்பில் திட்ட பயன்கள் குறித்து விளக்கங்கள் வழங்கப்பட்டன. இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித் தொகை 24,000 ம், இந்திரா காந்தி தேசிய விதவை உதவித் தொகை திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு 60000 மும். மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கு 72000மும், ஆதரவற்ற உதவித் தொகை திடத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு 60,000மும் , இலவச வீட்டுமனை பட்டா 45 நபர்களுக்கும், 2745000 வீதமும், பட்டா மாறுதல் உட்பிரிவு) 2 நபர்களுக்கும், புதிய குடும்ப அட்டை 20 நபர்களுக்கும், ரு 3386 மதிப்பு கொண்ட விலையில்லா தையல் இயந்திரம் 1 நபருக்கும், ரூ 4425 மதிப்பு கொண்டவிலையில்லா தேய்ப்பு பெட்டி 1 நபருக்கும், தோட்டக்கலைத் துறையின் கீழ் 3 பயனாளிகளுக்கு 10 7940 ரூபாய் மதிப்பீட்டிலும், வேளாண்மை துறையின் கீழ் 2 பயனாளிகளுக்கு 350 x 2 = 700 வீதமும் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.
இவண்.A சாதிக்பாட்சா. நிருபர்.தேனி மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வாணியம்பாடி அருகே பாலாற்றில் மணல் கொள்ளை நீர் ஆதாரம் அழிப்பு- தாசில்தார் மெத்தனம்
by mohan
written by mohan
ஆலங்காயம் ஒன்றியம் ஜாப்ராபாத் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீர் ராமையன்தோப்பு மற்றும் அதனை ஒட்டியுள்ள பாலாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கிணறுகள் மூலம் தண்ணீர் எடுத்து சப்ளை செய்யப்பட்டு வருகிறது ,இந்த பகுதியில் மணல் கொள்ளையர்கள் இரவு பகலாக மணல் எடுப்பதுடன் குடிநீர் கிணறுகள் அமைக்கப்பட்டு
உள்ள இடங்களில் மணலை அள்ளி சென்று விடுகின்றனர் இதனால் அங்குள்ள கிணறுகளும், டேங்குகள், பைப்புக்களும் உடைந்து கிடக்கிறது, இதனால் மக்களுக்கு குடிநீரை முறையாக சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது, எனவே உடனடியாக தடுக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் வாணியம்பாடி தாசில்தாரிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதனால் ஊராட்சி நிர்வாகமும், பொதுமக்களும் இணைந்து பாலாற்று பகுதியில் தோண்டப்பட்டுள்ள பள்ளங்களை ஜேசிபி மூலம் மூடி வருகின்றனர், இனியாவது வருவாய்த்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் ஆதார பகுதியில் மணல் அள்ளுவதை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்…
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆம்பூர் அருகே பாலாற்றில் மணல் திருட்டு 4 டிப்பர் 2 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
by mohan
written by mohan
ஆம்பூர் அருகே பாலாற்றில் மணல் திருட்டு 4 டிப்பர் 2 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சாணாங்குப்பம் பகுதியில் உள்ள பாலாற்று படுகையில் மணல் கடத்தலில் ஈடுபட்டு இருந்ததை அப்பகுதி மக்கள் சிறைப் பிடித்த 4 டிப்பர் லாரிகள் 2 ஜேசிபி இயந்திரங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் ஆவின் பொது மேலாளராக கணேசன் பொறுப்பேற்பு
வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆவின் பொது மேலாளராக இன்று 10.7.19 கணேசன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் பாராளுமன்ற தேர்தலில் 1553 வாக்குசாவடி, மையங்களில் வாக்கு பதிவு – தமிழக தேர்தல் அதிகாரி
by mohan
written by mohan
வேலூர் பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் 14 , 26,991 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 6, 98,644 பெண்கள் 7, 28, 245 மூன்றாம் பாலினம் 102 பேர் .1553 வாக்கு சாவடி மையங்களில் வாக்கு பதிவு வரும் 5ம் தேதி நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்து உள்ளார்.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.