இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் 12-வது வார்டில் தனியார் பள்ளியின் அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் ஒரு பக்கம் சுவர் கட்டி மறு பக்கம் சுவர் இல்லாததால் அருகேயுள்ள பள்ளி மாணவர்கள் அதை தாண்டிதான் வர வேண்டிய சூழல் உள்ளது.இப்படி ஒரு சூழலில் அதில் விழுந்து அடிபடும் நிலை உள்ளது.இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ நிர்வாகி ரிஸ்வான் கூறுகையில்,ஆர்.எஸ்.மங்கலத்தில் பெரும்பாலான வாகன ஓட்டிகள்,பாதசாரிகள் இந்த சாலையை தான் பயண்படுத்துகிறார்கள்.இந்த சாலையில் அதிகப்படியான போக்குவரத்து உள்ளது.கொரொனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது.தமிழக அரசின் கட்டுப்பாட்டல் கொரொனா குறைந்து பள்ளிகள் திறக்க உள்ள இந்த சூழலில் பேரூராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு இந்த சாக்கடை பகுதியில் ஒரு புறம் சுவர் எழுப்பி அந்த கழிவுநீர் வாடை வெளியில் வீசாமல் இருக்க காண்கிரீட் சிலாப்புகள் போட்டு மூடி தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்
Category:
மாவட்ட செய்திகள்
தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.மாவட்ட செயலாளர் வேண்டுகோள்
by mohan
written by mohan
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட சார்பில் கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில், துரிஞ்சாபுரம் ஒன்றிய இளைஞர் இளம்பெண்கள் உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. துரிஞ்சாபுரம் சிலபந்தல் நடைபெற்ற கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி .எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி 47 ஊராட்சிகளில் உள்ள 9 பூத் கமிட்டிகளாக பிரித்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து துறை செயலாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கினார்.பின்னர் அவர் பேசியதாவது, தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி மலர தொண்டர்கள் மனது வைத்தால் மட்டுமே முடியும். வரும் செப்டம்பர் 4ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவும் ,கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தர இருக்கிறார் எனவே கட்சி நிர்வாகிகள் அனைவரும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். மேலும் கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய குடும்பங்களில் உள்ள உள்ளவர்களை இளைஞர், இளம்பெண்கள் பாசறை, உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும். இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அரங்கநாதன், மாவட்ட ஜெ பேரவை செயலாளர் வெங்கடேசன் பாசறை செயலாளர் குணசேகரன், மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் அமுதா அருணாச்சலம், ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ், ஒன்றிய அவைத்தலைவர் கோவிந்தசாமி, மாவட்ட மாணவரணி துணை செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய விவசாய பிரிவு செயலாளர் சம்பத், ஒன்றிய சிறுபான்மை அணி செயலாளர் அல்லாபக்ஷி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மணிகண்டன் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் செங்கம் சரவணகுமார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நாளை 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பஸ் போக்குவரத்து துவங்க உள்ளது. இன்று வேலூர் பழைய பஸ் நிலையத்தில் தூய்மை செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணியை உதவி ஆணையர் மதிவாணன் சுகாதார அலுவலர் ஆகியோர் பார்வையிட்டனர். நாளை வேலூர் டெப்போவிலிருந்து மிக குறைவான பஸ்கள் இயக்கப்படவுள்ளன இதன் காரணமாக பயணிகள் மிக கடுமையாக பாதிக்கப்படவுள்ளனர்
கே.எம்.வாரியார்
வேலூர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் சையத் பாபா கவுஸ் பீரான் அவுலியா தர்காவில் மொகரம் முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பின்பு கிச்சடா, வெல்வம், சர்பத், பால், தேங்காய் கலந்த கலவை பொதுமக்களுக்கு தமிழகதர்காக்கள் பேரவை வாணியம்பாடி நகர தலைவர் சையத் அகமது பாசா வழங்கினார். துணை தலைவர் மொகதீன் பீரான், தஸ்தகீர், ஷாஜகான். பாடகர் குல்ராஹத் அப்சர், பைஸ் அகமது ஆரிப் மக்கா, வேலு, ஆதில், காமில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
கே.எம்.வாரியார்
வேலூர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
*திருமங்கலம் அருகே பயன்பாடற்ற கல்குவாரியில் குளிக்கச் சென்ற +2 மாணவன் தவறி விழுந்து உயிரிழப்பு
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பயன்பாடற்ற கல்குவாரியில் குளிக்கச் சென்ற மாணவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .மேலும் கடந்த ஐந்து மணிநேரமாக தீயணைப்பு துறையினர் சிறுவனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
திருமங்கலம் அருகே கீழ உரப்பனூர் பகுதியில் சௌந்தர் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது . கடந்த சில வருடங்களாக பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இதனால் மழை நீர் தேங்கி கிடக்கும் கிடங்காக மாறியதால் விடுமுறை காலங்களில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் குளிப்பது வழக்கம்.இந்நிலையில் திருமங்கலம் சோழவந்தான் சாலை பகுதியைச் சேர்ந்த ஆண்டிச்சாமி விமலா தம்பதியினரின் இரண்டாவது மகன் ராகேஷ்(16) .இவன் திருமங்கலம் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் மாலை தன்னுடைய நண்பர்கள் 5 பேருடன் சௌந்தர் கல்குவாரிக்கு குளிக்கச் சென்றுள்ளான்.
குளிக்கும்போது ஆழமான பகுதி சென்றதால் திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்து உள்ளான் நண்பர்கள் காப்பாற்ற முயற்சி செய்து முடியாததால் ஆழமான பகுதிக்கு சென்று மூழ்கினான்.தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மதுரை திருமங்கலம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கல்குவாரியில் சிறுவனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். 5 மணி நேரமாக தேடியும் கிடைக்காததால் இருள் சூழ்ந்த காரணத்தினால் மறுநாள் காலை அதாவது இன்று தேடலாம் என காலை 6 மணி முதல் தேடத் தொடங்கினர் சிறுவனின் உடல் தொடர்ந்து தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் இன்று மதியம் 2 30 மணி சிறுவனின் உடலானது கண்டுபிடிக்கப்பட்டது .சுமார் 20 மணி நேர தொடர் போராட்டத்திற்கு பிறகு சிறுவனின் உடலை மீட்ட திருமங்கலம் தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தது குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் அம்சவேணியின் வீட்டின் ஜன்னலை உடைத்து 20 சவரன் தங்க நகை ரூ 60 ஆயிரம் | ஒரு செல்போன், மற்றும் எல்இடி டிவி ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று உள்ளனர். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
கே.எம் வாரியார்
வேலூர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம்.
by mohan
written by mohan
தேனி மாவட்டத்தில் மணல் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் வருவாய்த் துறையினருடன் இணைந்து குற்றங்களை குறைப்பதற்காகவும் குற்றவாளிகளை திருத்துவதற்காக இனிமேல் திருட்டு தவறுகள் செய்ய மாட்டோம் என்ற உறுதி மொழி பாண்டு பத்திரத்தில் கையெழுத்து பெறுகின்றனர். இந்த பத்திரத்தில் உள்ள நிபந்தனைகளை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் கோட்டாட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் கோட்டாட்சியரிடம் கைது உத்தரவு பெற்று இந்திய அரசியல் சட்டம் விதி 110ன் கீழ் ஜாமீனில் வெளி வராதபடி ஓராண்டிற்கு சிறையில் அடைக்கின்றனர்.
இந்நிலையில் கைது செய்யும் நபர்கள் கோர்ட்டில் 110 உத்தரவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்ததில், நிதி அரசர் 110விதியின் கீழ் சட்ட நடை முறைகளை சரியாக பின்பற்ற வில்லை என்று கூறி நீதி அரசர்கள் குற்றவாளிகளை விடுதலை செய்கின்றனர்.இதனால் இதுபோன்ற தவறுகளை திருத்துவதற்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் வருவாய்த் துறையினர் சார்பில் கோட்டாட்சியர், தாசில்தார் மற்றும் காவல் துறையின் சார்பில் டிஎஸ்பிக்கள் ஆகியோர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர், தலைமை நீதித்துறை நடுவர் வெங்கடேசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி ஆகியோர் உடன் இருந்தனர்.
சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் கேரளா சமாஜ் அரங்கில் ஓணம் பண்டிகை முன்னிட்டு அத்தாப்பூ கோலத்தை கேரள பெண்கள் பூக்களால் அலங்கரித்தனர்
by mohan
written by mohan
வேலூரில் ஓணம் பண்டிகை இங்கு வகிக்கும் வீடுகளில் கொண்டாடப்பட்டது.வேலூர் கேரளா சமாஜ் அரங்கில் சமூக இடைவெளி கடைபிடித்து அத்தாப்பூ கோலத்தை கேரள பெண்கள் பூக்களால் அலங்காரம் செய்தனர். தூய்மை பணியாளர்களுக்கு ஓணம் பண்டிகையொட்டி பேண்ட்,,ஷர்ட்டை இதன் டிரஸ்டி வேலூர் ராதாகிருஷ்ணன் வழங்கினார். சமாஜ் பொருளாளர் சேதுமாதவன், டிரஸ்ட் உறுப்பினர் ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாட்டை வேலூர்கேரள சமாஜ் தலைவர் ராதாகிருஷ்ணன் செய்து இருந்தார்.
கே.எம்.வாரியார்
வேலூர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே, கேரளாவிற்கு முட்டைகள் ஏற்றிச் சென்று கொண்டிருந்த லாரி கவிழ்ந்து விபத்து. ஓட்டுனர் படுகாயமடைந்தார்.நாமக்கல்லில் இருந்து கேரளா மாநிலம் புனல்வேலிக்கு, முட்டைகள் ஏற்றிக் கொண்டு திருவில்லிபுத்தூர் வழியாக ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. நாமக்கல்லைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் லாரியை ஓட்டி சென்று கொண்டிருந்தார். திருவில்லிபுத்தூர் ஆவின் பாலகம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாரதவிதமாக லாரி கவிழ்ந்தது. இடிபாடுகளில் சிக்கி ஓட்டுனர் தங்கராஜ் படுகாயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் லாரியிலிருந்த சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள முட்டைகள் உடைந்து சேதமானது. விபத்து குறித்து திருவில்லிபுத்தூர் நகர் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தால் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை குஞ்சார் வலசை பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவரது மகன் முனியசாமி, 26. மீன் தொழிலாளியான இவர், ஓய்வு நேரங்களில் டிரைவராகவும் வேலை பார்த்தார். இவருக்கும் பாம்பன் அக்காள் மடம் மீனவர் காலனியைச் சேர்ந்த மரியா அயிஷாவிற்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு அபினேஷ் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி மரியா ஆயிஷாவின் தங்கை திருமணம் அக்காள் மடத்தில் நடந்தது. இத் திருமணத்திற்கு சென்ற இடத்தில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது குடிபோதையில் இருந்த முனியசாமி, குழந்தையை தன்னிடம் தருமாறு கேட்டு மரியா அயிஷாவிடம் தகராறு செய்தார். குழந்தையை தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மரியா அயிஷாவை முனியசாமி தாக்கி விட்டு, அவரிடம் இருந்து குழந்தையை பறித்துக்கொண்டு ஆட்டோவில் ஊர் திரும்பிய முனியசாமி மண்டபம் முகாம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி தண்டவாளம் வழியாக நடந்து சென்றார். வேதாளை சமத்துவபுரம் அருகே உள்ள பல்க்கில் பெட்ரோல் வாங்கி கொண்டு , அங்குள்ள திறந்த வெளியில் குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்று பெட்ரோலை ஊற்றி எரித்து விட்டு முனியசாமி வீடு திரும்பினார். நேற்று காலை முனியசாமி, புதுவலசை தாவு காடு பகுதியில் உள்ள அவரது தங்கை வீட்டிற்கு சென்றார். அவருடன் குழந்தை இல்லாதது குறித்து, மரிய அயிஷாவிற்கு முனியசாமி தங்கை போனில் தகவல் தெரிவித்தார். குழந்தை குறித்து கேட்ட போது ஒரு இடத்தில் இருப்பதாக முனியசாமி நாடகமாடினார்.
இதில் சந்தேகமடைந்த மரிய ஆயிஷா இது குறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் குழந்தையை முனியசாமி எரித்துக்கொன்றது தெரிந்தது. அவரது தகவல்படி எரிந்து கரிக்கட்டையான குழந்தையின் உடலை மண்டபம் போலீசார் மீட்டு, முனியசாமியை கைது செய்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை சோழவந்தான் கீழ மாத்தூர் பகுதியில் மழையால் பாதித்த குடும்பத்தினருக்கு உதவி கரம் நீட்டிய எஸ்.டி.பி.ஐ கட்சி ..!
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை சோழவந்தான் கீழ மாத்தூர் பகுதியை சேர்ந்த மூன்று குடும்பத்தினர் சமீபத்தில் கொட்டிய மழையால் பாதிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவலாக பரவி இருந்தது. அதற்கு முன்னதாகவே எஸ்.டி.பி.ஐ கட்சி கீழ மாத்தூர் கிளை நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்ய கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் மாவட்ட பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து மூன்று மாதத்திற்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கினார்கள்.
மேலும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர உறுதியளித்தனர். இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பகுர்தீன், எஸ்.டி.டி.யூ மதுரை மாவட்ட செயலாளர் இப்ராஹிம் பாபு, கீழ மாத்தூர் கிளை நிர்வாகிகள் ஷாஜி, ஷாஜஹான், அரபாத் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மறைந்த திமுக தலைவர் டாக்டர் கலைஞர் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சமூக சமுதாய சேவகர்களுக்கு விருது…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
திமுக தலைவரின் அறிவுரையின்படி இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சமூக சேவைக்கான விருதை கொரரோனா காலத்தில் அன்று முதல் இன்று வரை கொரோனாவால் ஜாதி மதம் பேதமின்றி உயிரிழந்தவர்களை 15 நபருக்கு மேல் நல்லடக்கம் செய்திருக்கிறார்கள் இரட்டை சகோதரர்கள் அசாருதீன், நசுருதீன் இவர்களுக்கு மறைந்த திமுக தலைவர் கலைஞரின் இரண்டாம்ஆண்டு நினைவுநான் விருதாக வழங்கப்பட்டது.
இந்த சமுக சேவைக்கான விருதை மாவட்ட கழகப் பொறுப்பாளர் காதர்பாட்ச முத்துராமலிங்கம் ஆலோசனையின்படி நகர் செயலாளர் S.A.H பஷீர் அஹமது மற்றும் வழக்கறிஞர் V.S ஹமீது சுல்தான் தலைமையிலும் மஹ்தூமியா பள்ளி தாளாளரும் நகர் மாணவரணி துணை அமைப்பாளர் இப்திகார் ஹசன் முன்னிலையிலும் இரட்டையர் சேவையை பாராட்டி பொன்னாடை போற்றி கேடையம் விருது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் துணை செயலாளர் ஜமால் பாரூக் மற்றும் கென்னடி, ராஜா, மரைக்காயர்,சித்திக், ஜபருல்லா, யூசுப், மஷாகிர், செல்வம், இளைஞர் அணி, சுபியான், பயாஸ்,நயிம் உள்ளிட்டேர் கலந்து கொண்டார்கள்.
கீழை நியூஸ்
S.K.V முகம்மது சுஐபு
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மத்திய மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்-நீட் ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தல்…
by mohan
written by mohan
தென்காசி மாவட்டம் சுரண்டையில் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும்,நீட்,ஜே இ இ தேர்வை ரத்து செய்யக்கோரியும் காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சோனியா காந்தி ஆணையின் படியும், மாநில தலைவர் கே எஸ் அழகிரி அறிவுறுத்தலின் படியும், மாணவர்கள் நலன் கருதி நீட் மற்றும் ஜே இ இ போன்ற நுழைவுத் தேர்வு ரத்து செய்திட வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகளின் செயலை கண்டித்து சுரண்டையில் மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனிநாடார் தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும்,நீட்,ஜே.இ.இ தேர்வுகளுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் முரளிராஜா பால் (எ) சண்முகவேல் ராமராஜ் தெய்வேந்திரன் கந்தையா சமுத்திரம் மற்றும் அண்ணாமலை பிரபு ஊடக பிரிவு சிங்கராஜ் தங்கம் காமராஜ் மற்றும் ஏராள காங்கிரஸ் தேசிய நெஞ்சங்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் சார்பில் ராமநாதபுரத்தில் இன்று (28.8.2020) ஆர்ப்பாட்டம் நடந்தது.ராமநாதபுரம் அரண்மனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமை வகித்தார். முதுகுளத்தூர் எம்எல்ஏ., மலேசியா எஸ். பாண்டி, தமிழக காங்., கமிட்டி உறுப்பினர் ஜெ.ரமேஷ் பாபு, தொழிலதிபர் செல்லத்துரை ஆகியோர் அப்துல்லா முன்னிலை வகித்தனர். நகர் தலைவர் டி.எம்.எஸ்.கோபி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பாரிராஜன், மாவட்ட செயலாளர் துல்கீப், பேச்சாளர் கர்ணன், மாவட்ட பொதுச்செயலாளர் மணிகண்டன், இளைஞர் காங்., சரவணக்குமார்,மேகநாதன், முன்னாள் கவுன்சிலர் காமராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அருந்ததியர் சமூகத்திற்கு 3 சதவிகித உள் ஒதுக்கீடு உச்சநீதிமன்றம் தீர்ப்பு.ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்.
by mohan
written by mohan
மறைந்த திராவிட முன்னேற்றக் கழக தலைவரும் முன்னாள் முதல் வருமான கலைஞர் கருணாநிதி யின் ஆட்சிக்காலத்தில் 2009 ஆம் ஆண்டு பட்டியல் சாதிகளுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியது.ஆனால் 2008 நவம்பர் 27ம் தேதி எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவின்படி, அருந்ததியர் (தனி ஒதுக்கீடு செய்தல்) சட்டம் இயற்றப்பட்டு, 2009 ஏப்ரல் 29ல் விதிகள் உருவாக்கப்பட்டன.அந்த நடவடிக்கைக்கு தடை கோரி புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 2009 ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பிறகு அந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி சேலத்தைச் சேர்ந்த யசோதா 2015 ல் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. அந்த வழக்கு நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் விசாரணைக்கு வந்தபோது மாநில அரசுகள் அருந்ததியர் சமூகத்திற்கு 3 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கும் நிலையைத் தொடரலாம் என்று நீதிமன்றம் கூறியதை, தொடர்ந்து உள் ஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்தைக் கொண்டாடும் வகையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள கொண்டமநாயக்கன்பட்டி அன்னை சத்யா நகரில் உள்ள அருந்ததிய மக்களுக்கு ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ மகாராஜன் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்.
சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தனது கையை தானே வெட்டி துண்டாக்கிய சிசிடிவி வீடியோ காட்சியால் பெரும் பரபரப்பு.
by mohan
written by mohan
ராணுவத்தில் பணியாற்றி ஒய்வு பெற்றவர் மன நிலை பாதித்த நிலையில் தனது கையை தானே வெட்டி துண்டாக்கிய சிசிடிவி வீடியோ காட்சியால் பெரும் பரபரப்பு.தேனி மாவட்டம் கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன் என்பவர் இவர் ரானுவத்தில் பணியாற்றி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்று காமயகவுண்டன்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது மனைவிக்கும் குடும்ப பிரச்சனை இருந்ததாகவும் கடந்த சில மாதங்களாக குடும்பத்துடன் பிரிந்து தனிமையில் இருந்து வருவதாகவும் கடந்த சில தினங்களாக மன நிலை பாதிக்கப்பட்டதுபோல் இருந்ததாக கூறப்படுகிறது. இன்னிலையில் இன்று காமயகவுண்டன்பட்டியிலிருந்து கம்பத்திற்க்கு வந்த வெங்கடேசன் கம்பம் புதிய பேருந்து நிலையம் அருகே இருந்த கறிக்கடை ஒன்றில் நுழைந்தவர் திடீரென அங்கிருந்த கறி வெட்டும் கத்தியை எடுத்து தனது கையை தானே வெட்டி துண்டாக்கியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கையை வெட்டியதும் மற்றொரு கையை யாராவது வெட்டுங்கல் என்று கூறிக்கொண்டே கடையை விட்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து வந்த போலிசார் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
சாதிக்பாட்சா.நிருபர் தேனி மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திரனாளிகள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாவட்டம் முழுவதும் 13 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.அதில் ஒருபகுதியாக ஆத்தூர் தாலுகா செம்பட்டியில் மாவட்ட தலைவர் செல்வநாயகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் கொரொனா நோய்தொற்றை காரணம் காட்டி விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்றுத்திரனாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
glஆகவே ,ஈ- சேவை மையங்களில் உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்கும் மாற்றுத் திரனாளிகளின் சிரமங்களை போக்கிட வேண்டியும் மாற்றுத் திரனாளிகளுக்கான உதவித்தொகை வேண்டி மூன்று மாதங்களுக்கு முன்னதாக மாவட்டம் முழுவதும் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை ஏற்றுஉடனடியாக உதவித்தொகை வழங்கிட வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி செம்பட்டியில் உள்ள ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவகம் முன்பு மாற்றுத்திரனாளிகள் கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதில் ஏராளமான மாற்றுத்திரனாளிகள் கலந்துகொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திமுக மத்திய அமைச்சர்கள் ஆட்சியில் இருந்த பொழுது நீட் தேர்வு பற்றி பேசாத ஸ்டாலின், இப்பொழுது அரசியல் நாடகம் செய்து வருகிறார் – அமைச்சர் செல்லூர் ராஜு
by mohan
written by mohan
மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை திருமலை நாயக்கர் மஹாலிலை சுற்றியுள்ள பகுதியில் நடைபெற்று வரும் பணியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று பார்வையிட்டார். பின்பு பத்திரிக்கையாளர்களுக்கு கொடுத்த பேட்டியின் போது,மதுரை மாநகரில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. வைகையை சிரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து நெரிசல் மையம் பகுதியில் உள்ளதை தவிர்க்க இரு வழிச்சாலைகள் அமைக்க பட உள்ளது. இன்று திருமலை நாயக்கர் மகாலை சுற்றி அழகு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது. பிஜேபியின் துணைத் தலைவி வானதி சீனிவாசன் கோயம்புத்தூர் மாவட்டத்தை இரண்டாவது தலை நகரமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளார் என்ற கேள்விக்கு,மதுரை மாநகரை இரண்டாம் தலைநகரமாக ஆக்க வேண்டும் என்பதை முதலமைச்சரிடம் ஏற்கனவே கூறிவிட்டோம் ஆகையால் அதைப் பற்றி மீண்டும் நான் பேச விரும்பவில்லை.வைரஸ் தொற்றோடு வாழ பழகிக் கொள்ள தான் வேண்டும் நானே பழகி கொள்ள தயாராகிவிட்டேன். நீங்கள் கூட முக கவசம் போட்டு உள்ளீர்கள், ஆனால் நான் முக கவசம் அணியவில்லை. வைரஸ் ரோடு பழகிவிட்டேன்.எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு நாங்கள் விசுவாசமாக இருந்து வைரஸ் காலத்திலும் மக்களுக்காக பணியாற்றி சிறப்பான திட்டங்களை கொடுத்துள்ளோம்.எங்களது பணிகளைப் பார்த்து மக்கள் நிச்சயமாக தேர்தலில் எங்களை ஆதரிப்பது என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. மாநிலத்தை யார் ஆள வேண்டும் மத்தியில் யார் ஆள வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். எங்கள் பார்வை நேர் கொண்ட பார்வை .முதலமைச்சரைப் பொறுத்தவரையில் எந்த நடவடிக்கை எடுத்தாலும் சிறப்பான நடவடிக்கை எடுப்பார். புள்ளி வைத்து கோலம் போட்டு விடுவார் எங்களது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கோடு போட்டால் ரோடு போட்டு விடுவார்.திமுக மத்தியில் அமைச்சர்கள் ஆட்சியில் இருந்த பொழுது அப்பொழுதெல்லாம் நீட் தேர்வு பற்றி பேசாமல் இப்பொழுது அரசியல் நாடகம் செய்து வருகிறார் என தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தான் அருகே திருவேடகம் காலனியில் கழிவுநீர் பாதையை மூடியதால் கழிவுநீர் வீட்டிற்குள் புகுந்து நோய் தொற்று பரவும் அபாயம் பொதுமக்கள் அச்சம்
by mohan
written by mohan
சோழவந்தான் அருகே திருவேடகம் காலனியில் ஆக்கிரமிப்பாளர்கள் சாக்கடையை மூடியதால் கழிவுநீர் வெளியேற முடியாமல் வீட்டிற்குள் புகுந்ததால் நோய் தொற்று பரவும் அபாயம் பொதுமக்கள் புகார் .விரைந்து நடவடிக்கை எடுக்க ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் காலனி உள்ளது. பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவில் அருகே உள்ளது இங்கு சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நான்கு வீதிகள் உள்ள இந்த காலணியில் ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் சாக்கடையை மூடியதால் கழிவுநீர் வீதிகளில் புகுந்து சிலர் வீடுகளில் புகுந்து உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் மழையால் வீடுகள் முழுவதும் சாக்கடை நீர் சூழ்ந்துள்ளது. இங்குள்ள கோவிலருகே முழுவதுமாக சாக்கடை நீர் நிரம்பி உள்ளது. பள்ளிகள் விடுமுறை விட்டதால் குழந்தைகள் சாக்கடை நீரில் விளையாடி வருகின்றனர். தற்போது கொரோனா தொற்று பரவி வரும் சூழ்நிலையில் டெங்கு ,மலேரியா டைபாய்டு, போன்ற வேறு ஏதேனும் நோய் பரவ வாய்ப்புள்ளதாக இப்பகுதி மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் யூனியன் நிர்வாகத்திடமும் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை .எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பாளர்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாக்கடையை முழுவதுமாக தோண்டி சுத்தம் செய்து இப்பகுதி சுகாதாரத்திற்கு வழிவகுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தொல்பழங்கால சிறப்புகள் புதைந்து கிடக்கும் அழகன்குளத்தில் ஓஎன்ஜிசி., மீத்தேன் ஆய்வுப் பணிகளை கைவிடுக.வைகோ அறிக்கை
by mohan
written by mohan
இராமநாதபுரம் மாவட்டம் – மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அழகன்குளம் என்ற ஊர் சங்க காலத்தில் புகழ்பெற்ற வணிக நகரமாக விளங்கியது என்பது இப்பகுதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தியபோது கண்டறியப்பட்டது.இதனை தொடர்ந்து அழகன்குளம் பகுதியில் 1986இல் அகழ்வாய்வு பணிகள் தொடங்கப்பட்டன. பின்னர் 1990 தொடங்கி 2015 வரை ஏழு கட்டங்களாக அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.தொல்லியல் துறையின் அகழ்வாய்வுகளின் மூலம் தொல்பழங்காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய அணிகலன்கள், சங்கு வளையல்கள், அரிய கல்மணிகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட மணிகள், கண்ணாடி மணிகள், இரும்புக் கருவிகள், விளையாட்டுப் பொருட்கள் போன்றவையும், மத்திய தரைக்கடல் பகுதி நாடுகளுடன் தமிழர்கள் கொண்டிருந்த வணிகத் தொடர்புகளை உறுதி செய்யும் அரியவகை மண்பாண்டங்கள், நாணயங்கள், தமிழ் பிராமி எழுத்துப் பொறித்த மண்பாண்டங்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. 2016 இல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, இராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளம் பகுதியில் விரிவான அகழ்வாய்வு பணிகள் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிட்டார் .
அதன்படி அகழ்வாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் தமிழர்கள் பயன்படுத்திய அரியவகை பொருள்கள் கிடைத்தன. கீழடி அகழ்வாய்வில் கிடைத்த பழங்கால பொருட்களைவிட தொன்மை சிறப்பு மிக்க பல அரிய பொருட்கள் இங்கு கிடைத்துள்ளன. வைகை ஆற்றின் முகத்துவாரத்தில் அழகன்குளம் மற்றும் ஆற்றங்கரைப் பகுதிகள் அமைந்துள்ளதால் இலக்கியங்களில் காணப்படும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிறப்புடன் விளங்கிய பாண்டியர்களின் துறைமுகமான மருங்கூர்பட்டினமாக இருக்கக்கூடும் என்றும் கருதப் படுகிறது.
அழகன்குளத்தில் வெள்ளி, செப்பு நாணயங்கள் உட்பட 13000 பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.பழங்கால சிறப்புகளை மண்ணில் புதைத்து வைத்திருக்கும் அழகன்குளம் ஆற்றங்கரை பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓஎன்ஜிசி நிறுவனம் ஆழ்துளை கிணறு அமைத்து மீத்தேன் எரிவாயு ஆய்வு மேற்கொள்ள முனைந்தபோது கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த முகத்துவாரத்தை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ஆய்வுப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா காலத்தில் நாடே முடங்கிக் கிடக்கும் நிலையில், மத்திய அரசின் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் நிறுவனமான ஓஎன்ஜிசி மீண்டும் இந்தப் பகுதியில் மீத்தேன் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள முனைந்திருக்கிறது.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் நாகரிகத்தையும், பண்பாட்டு வாழ்க்கையையும், கடல் கடந்த நாடுகளில் தமிழர்கள் நடத்திய வணிகத்தையும் பறைசாற்றும் ஆதாரங்கள் புதைந்து கிடக்கும் அழகன்குளம் பகுதியை ஓஎன்ஜிசி எரிவாய்வு ஆய்வுப் பணிகள் மூலம் சிதைத்து விட ஒரு போதும் அனுமதிக்க முடியாது.மேலும் கடலோடிகளான மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து, சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தும் ஓஎன்ஜிசி நிறுவன எரிவாயு ஆய்வுப் பணிகளை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.அழகன்குளம் ஆற்றங்கரை பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் மீத்தேன் ஆய்வுப் பணிகள் மேற்கொள்வதற்கு தமிழக அரசு தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
You must be logged in to post a comment.