ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியத்திற்குட்பட்ட தேர்போகி பாமா ருக்மணி நவநீதகிருஷ்ணன் ஆலயத்தில் 23 ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பாமா ருக்மணி அம்பாள், நவநீதகிருஷ்ணன் சுவாமிகளுக்கு மலர்களால் சிறப்பு அலங்கார வழிபாடு நடந்தது. மலர்களால் அலங்கரித்த பாமா, ருக்மணி, நவநீதகிருஷ்ணன் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அன்னதான நடந்தது இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டிகளாக வழுக்கு மரம் ஏறுதல் மற்றும் உறியடி நிகழ்ச்சி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை தேர்போகி கிராம யாதவர் இளைஞர் சங்கம் செய்திருந்தது. கிராம மக்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பக்தர்கள் திரளாக சுவாமி வழிபாடு செய்தனர்.
Category:
மாவட்ட செய்திகள்
செல்லம்பட்டி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கம் 124 அங்கன்வாடி மையங்களில் நடக்கிறது குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பரமேஸ்வரி நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கி விழாவினை தொடங்கி வைத்தார் இதில் ஊட்டச்சத்து குறைபாடு அதை தடுப்பதற்கான ஊட்டச்சத்து உணவு அவசியம் மற்றும் ரத்தசோகை தவிர்த்தல் முக்கியத்துவம் பற்றி விளக்கி பேசினார் மேலும் ஊட்டச்சத்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் விக்கிரமங்கலம் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் போஷான் அபியான் திட்ட உதவியாளர் அங்கன்வாடி பணியாளர் வளரும் இளம் பெண்கள் பாலூட்டும் தாய்மார்கள் கலந்துகொண்டனர் வட்டார திட்ட உதவியாளர் மகாலட்சுமி நன்றி கூறினார்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மக்கள் வாழ்வோடு பின்னிப்பிணைந்த 200 ஆண்டுகள் பழமையான நெற்களஞ்சியம் அழியும் நிலையில் உள்ளது. அதை பாரம்பரியச் சின்னமாக பாதுகாக்க ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.இந்தியா முழுவதும் இருந்து ராமேஸ்வரம் வருபவர்களுக்காக சேதுபதி மன்னர்கள் பல சத்திரங்களைக் கட்டியுள்ளனர். இத்தகைய சத்திரங்களுக்கு உணவுக்குரிய நெல் வழங்குவதற்காக ஆங்காங்கே நெற்களஞ்சியங்களையும் அமைத்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம்,சார்பில் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற பாரதி நினைவு தினத்தில்2019 – 2020 கல்வி ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழ் பாடத்தில் ராமேஸ்வரம் தீவு அளவில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாரதி விருது வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
எஸ்.மிருத்துன்தலைமை வகித்தார்.ஜெயன்முன்னிலை வகித்தார். பி.ஜோதிபாசுவரவேற்றார். முகவை முனீஸ், சி.ஆர்.செந்தில்வேல் ஆகியோர் பேசினர். மாநில நல்லாசிரியர்என்.ஜெயகாந்தன், தமிழாசிரியர்கள் கு.செந்தில்வேல், சூ.மா.பெனடிக்ட், உடற்கல்வி ஆசிரியைஜி.கோபிலட்சுமி, ராமேஸ்வரம் தீவு செய்தியாளர் மன்ற செயலர்இரா.மோகன், சமுக ஆர்வலரகள் சே.முருகானந்தம்வி.கே.ஆரோக்கியநாதன், தமிழ் மருத்துவர்ஆ.நல்லதம்பி,நிர்வாகிகள்சி.திருவாசகம், இரா.கண்ணன்,
ஜி.பாண்டி, பி.ஜீவானந்தம், ஏ.கே.முனீஸ்வரன், என்.நாகராஜன்,சி.இன்னாசிஎம்.பிச்சை, எஸ்.ராஜா, எம்.நம்பு, கே.காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.என்.ஜே.மோகன்தாஸ்நன்றி கூறினார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மகாகவி பாரதியாரின் 100வது நினைவு நாளான இன்று(11.09.2020) அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வராத அரசியல் கட்சிகள்.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பெருங்குடி விமான நிலைய முக்கிய சாலையில் உள்ளது மகாகவி பாரதியார் சிலை.தேசியக் கவிஞரான மகாகவி பாரதியாரின் நூறாவது நினைவு நாளான செப்டம்பர் 11 இன்றுஎந்த அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் கண்டுகொள்ளாமல் கேட்பாரற்றுக் கிடந்தது.சாதிய , சமூக . அரசியல் கட்சித் தலைவர்கனின் நினைவு நாளான அன்று அனைத்துக் கட்சிப் பிரமுகர்களும் போட்டி போட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.ஆனால் சுதந்திர போராட்டத்திற்காக போராடிய பாரதியாரின் உருவச்சிலைக்கு எந்த அரசியல் கட்சியுமே வராதது பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் மிகவும் வேதனை அடைந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்துவரும் காவலர் முருகசுந்தரத்தின் மகள்- ஜோதி துர்கா வயது 19, நீட் தேர்வு அச்சத்தின் காரணமாக இன்று காலை வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை .சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தல்லாகுளம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
நாளை தேர்வு நடக்க உள்ள நிலையில் மாணவி ஜோதி துர்கா தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமுமுக 25ம் ஆண்டு நிறைவு… இராமநாதபுரம், மண்டபம், ஏர்வாடி சுற்றுவட்டாரத்தில் நல பணிகள்… உதவிகள்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம் மண்டபம் ஏர்வாடி பகுதிகளில் ரூபாய் 10 லட்சம் மதிப்பீல் புத்தாடை உணவு பொருள்கள் உதவி 11-09-2020 அன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உருவாக்கப்பட்டு இருபத்தி ஐந்து ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஒருமாத காலமாக ரத்ததானம், சிறுதொழில் உதவி, கல்வி, மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக இராமநாதபுரத்தில் இன்று 11.09.2020 மாவட்டத்தின் பல ஊர்களைச் சேர்ந்த ஏழைக்குடும்பங்களின் 20 சிறுவர்களுக்கு இலவச கத்னா செய்து வைக்கப்பட்டது.
10 லட்சம் மதிப்பு புத்தாடை, உணவு பொருள்கள் உதவி :-
ஒரு குடும்பத்திற்கு ரூபாய் இரண்டாயிரம் மதிப்பில் புத்தாடைகள் உணவு பொருட்கள் ஏர்வாடியில் 300 குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டது அதைத்தொடர்ந்து மண்டபத்தில் மீனவர் குடியிருப்பு பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு ரூபாய் இரண்டாயிரம் மதிப்பில் புத்தாடைகள் உணவுப் பொருட்கள் 200 குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டது மொத்தம் 500 குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் மதிப்பில் கொடுக்கப்பட்டது
தமுமுக மாநில செயலாளர் சலிமுல்லாகான் தலைமையில்
M.பட்டானி மீரான் (ஆனந்தூர்)
தமுமுக-மமக மாவட்ட தலைவர்
N.ஜிஃப்ரி (வழக்கறிஞர்-தொண்டி)
தமுமுக மாவட்ட செயலாளர்
S.முஜிபுர் ரஹ்மான் (கீழக்கரை)
மமக மாவட்ட செயலாளர்
M.பரக்கத்துல்லாஹ் (பனைக்குளம்)
மாவட்ட பொருளாளர்
தமுமுக மாவட்ட துணை செயலாளர்கள் A.அப்துல்(ஷாகுல்) ஹமீது மேலபுதுக்குடி Mரைஸ் இபுராஹிம் தங்கச்சிமடம் ஆசிக்’, தேவிபட்டினம் சுல்தான் மாவட்ட அணி நிர்வாகிகள் iip மாவட்ட செயலாளர் தாஹிர் ஆலிம் மாணவர் அணி இர்பான் தொண்டர் அணி பகுருல் ஹசன் இளைஞர் அணி சபிக் இளைஞர் அணி துணை செயலாளர் சீனி அன்வர் அலி மருத்துவ அணி யாசர் வர்தக அணி அஹமது ஹசன் விளையாட்டு அணி ஆனந்தூர் உமர் சுற்று சூழல் அணி பயாஸ் ஆகியோர் ஏற்பாட்டில் கொடுக்கப்பட்டது
செய்தி/ தகவல்
தமுமுக மனித நேய மக்கள் கட்சி
இராமநாதபுரம் மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் போஸ்டர் ஒட்ட வேண்டாம் என்பதை சொல்வதற்கே போஸ்டர் அடித்த ரஜினி ரசிகர்கள்…
by mohan
written by mohan
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை எதிர்நோக்கி தமிழகம் முழுவதும் கோவை வேலூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ரஜினி ரசிகர் மன்றத்தினர் பல்வேறு வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டி தங்களது கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். இதனை தொடர்ந்து நேற்று தலைமையின் அனுமதி இல்லாமல் இனி யாரும் போஸ்டர்கள் ஒட்ட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் இனி போஸ்டர் ஓட்ட வேண்டாம் என்பதையே மதுரை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் போஸ்டர் அடித்து மதுரையின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களுக்கு போஸ்டர் அடிக்க வேண்டாம் என்று தலைமை உத்தரவு எனவும் தலைவா நீ எப்போ கட்சி தொடங்கினாலும் உங்களுக்குத்தான் மக்கள் ஆதரவு எனவும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது ஒருபுறமிருக்க மறுபுறம் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட வலியுறுத்தியும் தொடர்ந்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்திக்கு வாழ்த்து தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் மாற்றம் ஒன்றே மாறாதது என்ற ரஜினிகாந்த் கூறிய வாசகத்தை குறிப்பிட்டுள்ள ரஜினி ரசிகர் மன்றத்தினர் 50 ஆண்டுகால திராவிட அரசியலால் மக்களுக்கு கிடைத்தது ஏமாற்றமே எனவும் அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் நிகழ மக்கள் மனசு மாறனும் மகாராசன் அரியணை ஏறனும் எனவும் 2021 தேர்தலில் இல்லைனா இனி எப்பவும் இல்லை என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் அதே போஸ்டரில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மக்கள் பயன்பாடு குறித்தும் தற்போதைய வளர்ச்சியில் உள்ள பயன்பாடு குறித்தும் ஒப்பீடு செய்து புகைப்படங்களையும் இடம்பெறச் செய்துள்ளனர்.இந்த போஸ்டர்கள் நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
இனி போஸ்டர் அடிக்க வேண்டாம் என்பதையே போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளதும் மறுபுறம் அதனை மீறி மறுபுறம் தொடர்ந்து போஸ்டர் ஒட்டி வருவது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராஜபாளையம் அருகே வசந்தம் நகர் பகுதியில் பெண் வெட்டிப் படுகொலை. போலீசார் விசாரணை.
by mohan
written by mohan
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே வசந்தம் நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரேமா (வயது 45). இவர் இன்று வீட்டில் தனியாக இருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து கத்தி மற்றும் அரிவாளால் தாக்கி படுகொலை செய்துள்ளனர் இதுகுறித்து தகவலறிந்த ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் இறந்த பிரேமாவின் மகன் செந்தில்குமாரின் நண்பர் ரஞ்சித் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேலப்பொன்னகரம் பகுதி குழு சார்பில் ஆரம்ப சுகாதார மையங்களில் நிரந்தரமான மருத்துவர்களை நியமிக்க வேண்டும், சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும், நுண் நிதி நிறுவனங்கள் கடன் தொகை வசூல் செய்ய கால நீட்டிப்பு செய்ய வேண்டும், கடன் பெற்ற மக்களை மிரட்டும் போக்கை கைவிட வேண்டும், மிரட்டும் நபர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொன்னகரம் பிராட்வே பகுதியில் உள்ள மணல்மேடு மருத்துவமனை அருகில் பகுதிகுழு உறுப்பினர் பாலமுருகன் தலைமையில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எ, ன். நன்மாறன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா. நரசிம்மன், பகுதிகுழு செயலாளர் வை. ஸ்டாலின், அரசரடி பகுதிகுழுச் செயலாளர் கு. கணேசன் மற்றும் பகுதிகுழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் முன்னதாக அப்பகுதியில் உள்ள பாரதியார் படிப்பகம் சார்பில் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது இதில் அப்பகுதி மக்கள் பாரதியார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மற்றும் மலர்கள் தூவி மரியாதை செய்தனர் சிறுவர்களுக்கு பாரதியின் நினைவை போற்றும் வகையில் சிறு நூல் வழங்கப்பட்டது..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
by mohan
written by mohan
போக்குவரத்து துறை மின்சாரத் துறை தொலைத்தொடர்புத்துறை ரயில்வே துறை தபால் துறை போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது பெரிய அளவில் ஏற்பட்டிருக்கும் வேலை இழப்பை உடனே சரிசெய்ய வேண்டும் தொழிலாளர்கள் பாதுகாப்பு வேண்டும் போக்குவரத்து துறை ஊழியர்கள் மற்றும் மின்சார துறை தொழிலாளிகளுக்கு அரசு ஊழியராக இருக்க வேண்டும் புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும் பாதுகாப்புத்துறையில் அன்னிய முதலீட்டை அனுமதிக்காதே ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தர பணியாளராக வேண்டும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளருக்கு அரசு ஊழியராக வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் பைபாஸ் ரோட்டில் உள்ள அரசு தலைமை போக்குவரத்து கழக அலுவலகத்தில் முன்பு பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் அதன் மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தமிழக துறை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் (வருவாய் துறை) ராஜலட்சுமி (ஆதிதிராவிடர் நலத்துறை), சட்டமன்ற உறுப்பினர்கள் என்.சதன் பிரபாகர் (பரமக்குடி), மாணிக்கம் (சோழவந்தான்), அதிமுக., மாவட்ட செயலர் எம்.ஏ. முனியசாமி, சிறுபான்மை பிரிவு மாநில செயலர் அ.அன்வர் ராஜா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
திமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் சுப. தங்கவேலன், வ.சத்தியமூர்த்தி,தமிழரசி, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி, திமுக., மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், மாவட்ட ஊராட்சி தலைவர் உ.திசைவீரன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்எஸ்.கே.பவானி ராஜேந்திரன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே.முருகவேல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ஏ.என். ரகு உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் கட்சி சார்பில் பட்டியலின அணி தலைவர் செல்வப்பெருந்தகை, முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா எஸ்.பாண்டி, மாவட்ட தலைவர் எம்.தெய்வேந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் சரவண காந்தி, பொதுச்செயலர் மணிகண்டன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.தேமுதிக சார்பில் மாவட்ட செயலர் சிங்கை ஜின்னா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்.இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமமுக சார்பில் ராமநாதபுரம் மண்டல பொறுப்பாளர் கே.கே. உமா தேவன் (முன்னாள் எம்எல்ஏ), மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் எஸ். முத்தையா (முன்னாள் எம்எல்ஏ) , மானாமதுரை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் மாரியப்பன் கென்னடி, மாநில இளைஞரணி செயலாளர் டேவிட் அண்ணாதுரை, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த், முன்னாள் அமைச்சர் வ.து. நடராஜன், சேமிப்பு கிடங்கு வாரிய முன்னாள் தலைவர் ஜி.முனியசாமி, போகலூர் ஒன்றிய செயலாளர் ராஜாராம் பாண்டியன், பரமக்குடி நகர் செயலாளர் கலைவாணன் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலதலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நிர்வாகிகள் சந்திப்பு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரை செப். 11- கீழக்கரைக்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத்தலைவர் நெல்லை முபாரக் கீழக்கரை நகருக்கு வருகைதந்து புதிதாக உருவாக்கப்பட்ட 12 கிளைகளைகளை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் நகர நிர்வாகிகள் அனைவரையும் சந்தித்து வரக்கூடிய உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாகவும் கட்சியை பலப்படுத்தக் கூடிய வியூகங்கள் சம்பந்தமாகவும் பொதுமக்களுக்கு செய்யவேண்டிய தொண்டுகள் போன்ற பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இதில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது, கீழக்கரை மாவட்ட பொதுச்செயலாளர் பரக்கத்துள்ளாஹ் தொகுதி துணை தலைவர் நூருல் ஜமான், நகர் தலைவர் ஹமீது பைசல் துணைத்தலைவர் ஹாஜா அலாவுதீன் இணைச்செயலாளர் தாஜுல் அமீன் அயூப் கான் பொருளாளர் அசாருதீன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அரியர் மாணவர்கள் காதில் பூ பூவைத்து நூதன ஆர்ப்பாட்டம்
by mohan
written by mohan
கொரானா எதிரொலியாக கல்லூரி இறுதியாண்டு மற்றும் அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி என்ற உயர்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அரியர் தேர்ச்சி என்கிற முடிவு தவறானது என கூறியிருந்தது,இந்த கருத்து அரியர் மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும்,தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிடக்கோரியும் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அரியர் மாணவர்கள் காதில் ரோஜா பூ வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்,போராட்டத்தில் மாணவர்களை குழப்ப வேண்டாம் எனவும்,அரசு இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியும் முழக்கங்களை எழுப்பினர்.,இந்த போராட்டத்தில் 20க்கும் மேற்பட்ட அரியர் மாணவர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இறந்த தன் மனைவியின் 30ம் நாளை முன்னிட்டு தத்ரூபமாக சிலை அமைத்த மதுரையை சேர்ந்த பிரபல தொழிலதிபர்
by mohan
written by mohan
மதுரை மேலப்பொன்னகரத்தை சேர்ந்தவர் சேதுராமன்,பிரபல தொழிலதிபரான இவருடைய மனைவி பிச்சைமணி அம்மாள் கடந்த ஆகஸ்டு 8ந்தேதி இயற்கை எய்தினார்.தனது மனைவி தன்னை தனியே தவிக்கவிட்டு சென்றாலும் என்றும் என்னுடன் இருக்கவேண்டும் என்ற தன்னுடைய மனைவி மீது உள்ள பாசத்தினால்சேதுராமன் தனது மனைவி பிச்சைமணி அம்மாள் போன்ற சிலையை வடிவமைக்க வேண்டும் என்று எண்ணினார்
.அதன்படி தனது வீட்டில் மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த சிற்பியான பிரசன்னாமற்றும் ஓவியர் மதுரை மருது ஆகியோரைக் கொண்டு பைபர் மெட்ரியல் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் என்றும் நிரந்தரமாக இருக்கும் வகையில் 6 x 3 அடி உயரம் உடைய தனது மனைவியை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.பிச்சைமணி அம்மாள் இறந்து 30 ஆம் நாளை ஒட்டிதத்ரூபமாக வடிக்கப்பட்ட மனைவியின் சிலையை வைத்து வழிபாடு செய்தார்.இவர் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணன் மாமியார் என்பது குறிப்பிடத்தக்கது
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காட்பாடி சக்கரா குட்டையில் சர்ச் கட்டுவதை நிறுத்த வேண்டும்-தாசில்தாரிடம் மனு
by mohan
written by mohan
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சக்கராகுட்டை கிராமத்தில் சர்ச் கட்டுவதை நிறுத்த வேண்டும் அப்படி கட்டினால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கிராம மக்கள் மற்றும் காட்பாடி ஒன்றிய இந்து முன்னணி சார்பில் தாசில்தார் பாலமுருகனிடம் மனு கொடுத்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட புலவர் அப்பா தர்ஹா அருகில் உள்ள சந்தை திடல் பின்புறம் கழிவுநீர் தேங்கி சாக்கடை குளம் போல் உள்ளது.இதனை பலமுறை பேரூராட்சி கவனத்திற்கு கொண்டு சென்றும் நீண்ட காலமாக சரி செய்யப்படாமல் உள்ளது.மேலும் சதக்கத்துல்லா அப்பா தெரு மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் அருகில் உள்ள சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் முறையாக செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.சிலநேரங்களில் கழிவு நீர் அதிகமாகி ரோட்டில் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.வரும் காலம் மழை காலமாக இருப்பதால் சாக்கடை கழிவுகள் மூலம் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.தற்பொழுது கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு இருக்கும் சூழ்நிலையில் மேலும் மக்களுக்கு பாதிப்பு உண்டாகாமல் சாக்கடை கால்வாய்களை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கிசான் நிதி உதவி திட்ட முறைகேடு திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் பலரின் வங்கி கணக்குகள் முடக்கம்!
by Askar
written by Askar
தேனி மாவட்டத்தில் கிசான் நிதி உதவி திட்ட முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை கொண்ட 17 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் 700 பேர் இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட வங்கி கணக்குகளில் இருந்து ரூ.11 லட்சம் மீட்கப்பட்டு அரசின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் பலரது வங்கி கணக்குகள் முடக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் பேர் பிரதமரின் வேளாண் நிதி உதவி திட்டத்தில் உதவித்தொகை பெற்று வருகின்றனர். இதில் வெளி மாவட்டத்தின் வங்கி கணக்கை இணைத்தவர்கள், முறைகேட்டில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் நபர்கள் என 824 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இது தவிர வெளி மாவட்டங்களுக்கு குடிபெயர்ந்த விவசாயிகள், ஊரடங்கு காலத்தில் அந்த திட்டத்தில் சேர்ந்தவர்கள் என 9 ஆயிரம் பேரின் உண்மை தன்மை குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பலர் இந்த முறைகேட்டில் சிக்க வாய்ப்பு உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தில் புதுக்கோட்டை ஆட்சியர் முறைகேடு; மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
by Askar
written by Askar
ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தில் புதுக்கோட்டை ஆட்சியர் முறைகேடு செய்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் – (மறைந்த) முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆலவயல் சுப்பைய்யாவின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்துப் புகழஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்டத்தின் அமைச்சர். அவர் முதலில், ‘குட்கா ஊழலிலும்’ இப்போது ‘கரோனா ஊழலிலும்’ பிஸியாக இருப்பதால் – தமிழக மக்களை மட்டுமல்ல – சொந்த புதுக்கோட்டை மாவட்டத்தையே கரோனாவிலிருந்து அவரால் காப்பாற்ற முடியவில்லை. புதுக்கோட்டையில் கரோனா பாதிப்பு – 7000- ஐ தாண்டி விட்டது. கரோனாவால் மரணம் 116–ஐ தாண்டி விட்டது. இதுவும் உண்மைக் கணக்கா என்றால் அதுவும் இல்லை. கரோனா நோய்த் தொற்றையும், அதனால் ஏற்பட்ட இறப்புகளையும் குறைத்துக் காட்டியே, இன்றைக்குப் புதுக்கோட்டை மாவட்டம் கரோனாவின் கடுமையான பாதிப்பில் இருக்கிறது.
கரோனா தொல்லை இப்படியென்றால் – ஊராட்சி மன்றங்களுக்கு குடிநீர்ப் பணிகளைச் செய்யக் கூட நிதி கொடுப்பதில்லை. ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தின் கீழ் ஊராட்சி மன்றங்கள் செய்ய வேண்டிய பணிகளை இங்குள்ள ஆட்சியர் ‘பேக்கேஜ் டெண்டர்’ விடுகிறார். அவர் முன்பு, விஜயபாஸ்கரின் துறையில் பணியாற்றி விட்டு, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவராக வந்தவர். பேக்கேஜ் டெண்டரை எதிர்த்து வழக்குப் போட்டால் – அந்த வழக்கை டிஸ்மிஸ் செய்ய வைக்க ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் முன்தேதியிட்டு தீர்மானம் போட்டுத் தரச் சொல்லி மிரட்டுகிறார். ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரே – ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி மூலம் மாவட்டத்தில் உள்ள 490-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களை மிரட்டுகிறார் என்றால் – அதற்கு எப்படி தைரியம் வந்தது? அதனால்தான் நான் விடுத்த அறிக்கையில், “இப்படி முன்தேதியிட்டு தீர்மானம் பெறுவது” கிரிமினல் சதி என்று எச்சரித்தேன்.
ஊழல் அமைச்சர் புதுக்கோட்டையில் இருப்பதால், இங்குள்ள மாவட்ட ஆட்சித்தலைவரும் இதுபோன்ற ஊழல் நடவடிக்கைகளில் தைரியமாக இறங்குகிறார். அவர் நாளை, சட்டத்தின் முன்பு பதில் சொல்ல வேண்டியதிருக்கும். இங்குள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் சரி, மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் சரி, கரோனாவை கட்டுப்படுத்துவது என்பது, அவர்களுக்கு முக்கியமான பணி அல்ல… ஊழல் செய்வது மட்டுமே அவர்களின் ஒரே பணி! அதனால்தான் இன்றைக்கு புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமே ஒரு பத்தாண்டுகளுக்குப் பின்னால் போய் விட்டது. அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களை – ஊழல்களை நாம் மக்கள் மன்றத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். இந்த ஆட்சியை விரட்டியடிப்போம்! விரைவில் கழக ஆட்சி அமைப்போம்! நன்றி!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஜப்பானில் இறந்த நாங்குநேரி ஆனிகுளம் மாதவன் உடல், பத்து நாள்களில் வந்து சேரும்.வைகோ!
by Askar
written by Askar
ஜப்பானில் இறந்த நாங்குநேரி ஆனிகுளம் மாதவன் உடல், பத்து நாள்களில் வந்து சேரும்
வைகோவுக்கு அயல் உறவுத்துறை தகவல்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம் பாப்பான்குளம் அருகில் உள்ள ஆனிகுளம் கிராமத்தைச் சேர்ந்த மாதவன் என்ற இளைஞர், ஜப்பான் நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தார். திடீரென அவர் இறந்து விட்டார் என, குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு இருந்தனர்.
மறுமலர்ச்சி தி.மு.க. தென்காசி மாவட்டச் செயலாளர் தி.மு.இராசேந்திரன், எழுத்தாளர் மதுரா, மின்னல் முகமது அலி ஆகியோர், பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.
இதுகுறித்து, அயல் உறவு அமைச்சர் ஜெய்சங்கர் கவனத்திற்கு, வைகோ கொண்டு சென்றார். அவரது அலுவலக துணைச் செயலாளருடன் அலைபேசியில் பேசினார்.
இது தொடர்பாக, ஜப்பானில் உள்ள இந்தியத் தூதரகத்தைத் தாம் தொடர்பு கொண்டதாகவும், அவர்கள் இதுகுறித்து ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருவதாகவும், குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டுள்ளோம், விரைவில் உடல் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்து இருப்பதாகவும், அயல் உறவு அமைச்சகத் துணைச் செயலாளர், வைகோவுக்கு மின் அஞ்சல் எழுதி உள்ளார்.
ஜப்பானில் உள்ள தமிழ் அன்பர்கள் மூலமாகவும் வைகோ விசாரித்தார்.
மாதவன் தற்கொலை செய்துகொண்டு இருப்பதாகத் தெரிய வருகிறது என்றும், வருகின்ற 14 ஆம் தேதி, மாதவன் உடல் கூறு சோதனை, கொரோனா சோதனை நடைபெற இருப்பதாகவும், அந்தச் சான்றிதழ் கிடைக்கப் பெற்றவுடன், இந்திய அயல் உறவு அமைச்சகத்திற்கு அனுப்பப்படும் என்றும், இம்மாதம் 18 ஆம் தேதிக்கு மேல், மாதவன் உடல் சொந்த ஊருக்கு வந்து சேருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், திரு கிருஷ்ணன் என்பவர் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு இருப்பதாகவும், அவர்கள் வைகோவிடம் தெரிவித்தனர்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
10.09.2020
You must be logged in to post a comment.