இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை சார்பில் அரசு தென்னை நாற்றுப் பண்ணையில் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்பட்டது . இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா தலைமை தாங்கினார். வேளாண்மை துறையில் உள்ள அரசு நலத் திட்டங்கள் குறித்தும் விவசாயிகள் குழுவாக ஒன்றிணைந்து செயல்பட்டால் அரசு நலத்திட்டங்களை பெற்றிடலாம் எனவும் அறிவுறுத்தினார். பரமக்குடி உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் முருகேசன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தென்னை சாகுபடி குறித்து விளக்கம் அளித்தார். ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளான முனைவர் ராம்குமார் மற்றும் பூச்சியியல் துறை பேராசிரியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தென்னையை தாக்கும் கருந்தலைப்புழு , சிவப்பு கூன்வண்டு, காண்டாமிருக வண்டு , தென்னை சுருள் வெள்ளை ஈ மற்றும் தென்னையை தாக்கும் நோய்களான தஞ்சாவூர் வாடல் நோய், குருத்து அழுகல் நோய் போன்றவற்றை கண்டறியும் முறைகள் மற்றும் நிர்வாகம் செய்யும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்க உரையாற்றினர். ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலைய அலுவலர் முனைவர் ஜெகதீசன் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் அனைத்து பயிற்சிகள் குறித்த தகவல்களை தெரிவித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் நாகராஜன் தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு பற்றியும் விவசாயிகள் மண் பரிசோதனை செய்ய வேண்டியதன் அவசியம் பற்றியும் உரப் பரிந்துரை குறித்தும் விளக்கி பேசினார் அம்பேத்குமார் மூத்த வேளாண் அலுவலர் ராமநாதபுரம் உயிர் உரங்களின் பயன்பாடு அதனை உபயோகப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கிப் பேசினார். கலைவாணி வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) உச்சிப்புளி உழவர் கடன் அட்டை விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் வேளாண் விரிவாக்கம் மையம் உச்சிப்புளி தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் , சீதாலட்சுமி வேளாண்மை அலுவலர் உழவர் பயிற்சி நிலையம், பாண்டியம்மாள் தோட்டக்கலை அலுவலர் தென்னை நாற்று பண்ணை, உச்சிப்புளி, தங்கவேல் துணை தோட்டக்கலை அலுவலர், உச்சிப்புளி அக்ரி இன்சூரன்ஸ் கம்பெனி ,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மயில்வாகனன் , பானுமதி வட்டார தொழில்நுட்ப மேலாளர் ,உச்சிப்புளிஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர் பவித்ரன் மற்றும் உதவி வேளாண் அலுவலர் சண்முகநாதன் ஆகியோர் செய்து இருந்தனர்.
Category:
மாவட்ட செய்திகள்
வடகரை கீழ்பீடாகை பேரூராட்சி நிர்வாக அலுவலர் மாற்றத்தை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்..
written by Abubakker Sithik
வடகரை கீழ்பீடாகை பேரூராட்சி நிர்வாக அலுவலர் மாற்றத்தை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்..
தென்காசி மாவட்டம் வடகரை கீழ்பீடாகை பேரூராட்சி நிர்வாக அலுவலர் மாற்றத்தை கண்டித்து வடகரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர தலைவர் அப்துல் பாசித் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளரும் 2 வது வார்டு கவுன்சிலருமான முத்து முஹம்மது என்ற அன்சாரி கண்டன உரையாற்றினார்.
நகர செயலாளர் சாஜித் ஒலி, மருத்துவ சேவை அணி மாவட்ட தலைவர் சையது இப்ராஹிம், விமன் இந்தியா மூவ்மெண்ட் மகளிர் அணியின் மாவட்ட தலைவர் பரக்கத், செயலாளர் யாஸ்மின் ,பொருளாளர் ஆயிஷா, நகர பொருளாளர் அப்துல் ரகுமான், நகர செயற்குழு உறுப்பினர் திவான், மருத்துவ சேவை அணி நகர பொறுப்பாளர் நூருல் அமீன், கிளை நிர்வாகிகள் ஆசிக் (நகர ஊடக ஒருங்கிணைப்பாளர்), கலீல் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்நாடு காவல் துறை சைபர் கிரைம் சார்பில் ரீல் போட்டி; பொது மக்கள் மாணவ மாணவியர் பங்கேற்கலாம்..
written by Abubakker Sithik
தமிழ்நாடு காவல் துறை சைபர் கிரைம் சார்பில் ரீல் போட்டி; பொது மக்கள் மாணவ மாணவியர் பங்கேற்கலாம்..
பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர் தங்கள் படைப்பாற்றல் புதுமை மற்றும் எல்லையற்ற திறமை ஆகியவற்றை வெளிப்படுத்த தமிழ்நாடு காவல்துறை சைபர் குற்றப்பிரிவு ரீல் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது. வழக்கமான கதை சொல்லல் மற்றும் காட்சி வெளிப்பாட்டின் எல்லைகளைத் தள்ளி, பங்கேற்பாளர்கள் தங்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
இந்தப் போட்டியில் எப்படி பங்கேற்பது?
பங்கேற்பாளர்கள் 04.03.2024 முதல் 14.03.2024 வரை Google form மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம். அனுபவத்தின் அளவைப் பொருட்படுத்தாமல் காட்சிக்கதை சொல்லலில் ஆர்வமுள்ள அனைத்து நபர்களும் பதிவு செய்யலாம். பங்கேற்பாளர்கள் தங்களின் ரீல்கள் 30 வினாடிக்குள் நியமிக்கப்பட்ட கருப்பொருளுக்கு ஏற்றவாறு சமர்ப்பிக்க வேண்டும். ரீல்களை Google Drive-ல் பதிவேற்றம் செய்து அதற்கான Link- ஐ 14.03.2024 க்குள் Google form-ல் பகிர வேண்டும்.
போட்டித் தலைப்புகள்
1. ஆன்லைன் கடன் செயலி மோசடி
2. ஆன்லைன் திருமண மோசடி
3. கூரியர் மோசடி
4. சமூக ஊடகங்களில் போலி சுயவிவரம் ஆள் மாறாட்டம் மோசடி
5. ஆன்லைன் பகுதி நேர வேலை மோசடி
பரிசுகள்
முதல் பரிசு: ரூ.25,000,
2வது பரிசு: ரூ.20,000,
3வது பரிசு: ரூ.15,000,
18.03.2024 அன்று நடைபெறும் விழாவில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். போட்டி தொடர்பான பிரத்தியேக தகவல்களுக்கு சமூக ஊடகங்களில் @tncybercrimeoff) என்ற முகவரியை பின் தொடரவும். உங்கள் திறமை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பெண் சிசுக்களை கருவிலேயே அழித்து வந்த செவிலியர் கைது..
கருவிலேயே அழிக்கப்படும் பெண் சிசுக்கள். அரசு பணியை உதறி தள்ளிவிட்டு செவிலியர் ஒருவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக பெண் கரு கொலை மட்டுமே கருவிலேயே அழிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் பழையனூர் பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவருக்கு ஏற்கனவே இருபெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் காயத்ரி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். இதைத் தொடர்ந்து வயிற்றில் இருப்பது பெண் குழந்தை தானா என்பதை முன்கூட்டியே கண்டறிய மதுரை சிக்கந்தர் சாவடி பகுதியைச் சார்ந்த விருப்ப ஓய்வு பெற்ற அரசு செவிலியர் காந்திமதி என்பவரை அணுகி உள்ளார். காந்திமதி சோழவந்தான் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காயத்ரி அழைத்துச் சென்று ஸ்கேன் செய்து பார்க்கும் பொழுது காயத்ரிக்கு மூன்றாவது பெண் குழந்தை என உறுதி செய்யப்படுகிறது. இதை தொடர்ந்து காயத்ரியிடம் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு காந்திமதி அவரு வீட்டிலேயே வைத்து காயத்ரிக்கு கருவில் இருக்கும் பெண் குழந்தையை கருகலைப்பு செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து காயத்ரிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கும் பொழுது காயத்ரி கருக்கலைப்பு செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் விசாரணை மேற்கொண்டதில் சட்ட விரோதமாக தான் கருக்கலைப்பு செய்ததாக ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரை மாவட்ட சுகாதாரத் துறையினர் காந்திமதியின் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டதில் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த 2020 ஆம் ஆண்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வந்த காந்திமதி விருப்ப ஓய்வு பெற்று கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ச்சியாக இதே மாதிரி கருவில் இருப்பது பெண் குழந்தை என தெரிந்தவுடன் அவற்றை கரு கலைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். விருப்ப ஓய்வு பெற்றதில் இருந்து ஒவ்வொரு வருடமும் சட்ட விரோதமாக பல கர்ப்பிணி பெண்களுக்கு பெண் சிசு கருக்கலைப்பு செய்திருக்கலாம் என சுகாதாரத் துறையினர் மதுரை மாவட்ட இணை இயக்குனர் செல்வராஜ் தலைமையான குழுவினர் சோதனையில் சந்தேகம் அடைந்துள்ளனர்.
மேலும் காந்திமதிக்கு உதவியதாக சோழவந்தான் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் உரிமையாளர் விஜயலஷ்மி என்பவர் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து காந்திமதியை கைது செய்த அலங்காநல்லூர் போலீசார் கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கருவில் இருக்கும் பெண் குழந்தையைக் கொல்வது பெண் கருக்கொலை எனவும், பிறந்த பின் கொல்வது சிசுக் கொலை எனவும் கூறப்படுகிறது. பெண் சிசுக் கொலைகள் அதிகமாக நடக்கும் மாவட்டமாக மதுரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பல்வேறு மாநிலங்களில் இருந்து ஈஷாவுக்கு பாத யாத்திரை வந்த பக்தர்கள்; 63 நாயன்மார்களுடன் ஆதியோகி தேர் பவனி
மஹா சிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து நூற்றுக் கணக்கான சிவ பக்தர்கள் கோவை ஈஷா யோக மையத்திற்கு நேற்று (மார்ச் 6) பாத யாத்திரையாக வருகை தந்தனர். சென்னை, பெங்களூரு, நாகர்கோவில், பட்டுக்கோட்டை, பொள்ளாச்சி, கோவை ஆகிய 6 இடங்களில் இருந்து வெவ்வேறு தேதிகளில் புறப்பட்ட குழுவினர் ஆதியோகி திருமேனியுடன் கூடிய தேர்களை வடம் பிடித்து இழுத்து வந்தனர். அனைத்து குழுவினரும் ஆலாந்துறை பகுதிக்கு நேற்று மதியம் வந்து சேர்ந்தனர். அங்கிருந்து 63 நாயன்மார்களை தனி தனி பல்லக்குகளில் ஏந்தி ஆதியோகி தேர்களுடன் ஈஷாவுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களுக்கு ஈஷாவின் நுழைவு வாயிலான மலைவாசலில் இருந்து தியானலிங்கம் வரை கைலாய வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் ஹரியானாவைச் சேர்ந்த மதுராந்தா என்ற இளைஞர் உத்தரபிரதேசம் மாநிலம் வாராணாசியில் தொடங்கி 41 நாட்கள் 2,300 கி.மீ பாத யாத்திரையாக பயணித்து ஆதியோகியை தரிசனம் செய்தார். இந்த யாத்திரை தொடர்பாக அவர் கூறுகையில், ”சிவ பக்தியில் என்னை கரைத்து கொள்வதற்காக நான் இந்த பாத யாத்திரையை மேற்கொண்டேன். காசி முதல் கோவை வரையிலான இந்த யாத்திரை என்னுடைய நண்பர் ஒருவரும் என்னுடன் சேர்ந்து வருவதாக திட்டமிட்டு இருந்தோம். ஆனால், எதிர்பாராத விதமாக யாத்திரை தொடங்குவதற்கு முன்பு அவர் விபத்தில் சிக்கி ஐ.சி.யூவில் அனுமதிக்கப்படும் சூழல் உருவானது. இருந்தபோதும், நான் என்னுடைய யாத்திரையை திட்டமிட்டப்படி தொடர்ந்தேன். ஆதியோகி சிவனின் அருளால் ஐ.சி.யூவில் இருந்து மீண்டு வந்த அந்த நண்பர் என்னுடைய யாத்திரையில் இடையில் வந்து சேர்ந்து கொண்டார். இது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது” என கூறினார்.
சென்னை குழுவினருடன் பாத யாத்திரை மேற்கொண்ட ஜனனி கூறுகையில், ”சென்னையில் இருந்து புறப்பட்ட எங்கள் குழு 29 நாட்களில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் வழியாக பயணித்து வந்துள்ளது. பல கிராமங்களில் அங்குள்ள மக்கள் ஆதியோகியை தங்கள் வீட்டிற்கு அருகிலேயே தரிசனம் செய்ததை பெரும் பாக்கியமாக கூறினர். உடல் அளவில் இந்த யாத்திரை எனக்கு சவாலாக இருந்தாலும், மனதளவில் பெரும் நிறைவை தருகிறது” என்றார். இந்த யாத்திரையில் கலந்து கொண்ட அனைவரும் மஹாசிவராத்திரிக்காக 40 நாட்கள் சிவாங்கா விரதம் இருந்து வருகின்றனர். தினமும் 2 வேளை மட்டுமே உணவு உட்கொள்ளும் அவர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று வந்த பிறகு தியானலிங்கத்தில் தங்கள் விரதத்தை நிறைவு செய்து கொள்வார்கள்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்டம் வேதாளையில் உள்ள அல் அமீன் மழலையர் பள்ளியில் 30ம்ஆண்டு விழா ரஹ்மத்துல்லா ஆலிம் தலைமையில் முகமது மன்சூர் , அப்துல் ரஷீத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. பள்ளியின் மாணவ மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கிராத் ஓதி துவங்கினர். பள்ளியின் முதல்வர் ஜெசிமா பேகம் வரவேற்புரை வழங்கினார். பள்ளியில் ஆசிரியர் கனிமொழி ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் உச்சிப்புளி சுகாதார ஆய்வாளர் மகேந்திரன் , ராமநாதபுரம் காவல் குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் ஆண்டனி சகாய சேகர் , ராமநாதபுரம் பாம்பே டையிங் நிறுவனர் சையது ஜாபர் அலி , மண்டபம் ஜெயமணி பள்ளி தாளாளர் மற்றும் வழக்கறிஞர் ஜெபத்துரை மற்றும் ஆசீர் ஜாஸ்மின் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரைகள் வழங்கினர். அதனைத் தொடர்ந்து சிறந்த மதிப்பெண் பெற்ற பள்ளியின் மாணவ மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு இறுதியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளியின் ஆசிரியர்கள் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கண்டுகளித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கு அறிவிப்பு ! சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் செய்தியின் வாயிலாக தெரிவிக்கையில் :- சமீப காலமாக வடமாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்த முயற்சிப்பதாக வதந்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதாக தெரிகிறது. இதுபோன்ற காணொளிகள் மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடனும் சமூக விரோதிகள் சிலர் சமூக வலைதளங்களில் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். இதுபோன்ற வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவுவதை பொதுமக்கள் துளியும் அச்சப்படவோ, பதட்டம் அடையவோ தேவையில்லை. இதுசம்பந்தமாக பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் அல்லது உதவி தேவைப்பட்டால் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை உதவிக்கு 8300031100 Hello Police 100 என்ற எண்னை உதவிக்கு அழைக்கலாம் என்றும் அருகாமையில் உள்ள காவல் நிலையங்களை அணுகி உதவி பெறலாம் என்று தெரிவித்தார. மேலும் தேவையற்ற வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம், வதந்திகளை மற்றவர்களுக்கு பகிரவோ, சமூக வலைதளங்களில் பரப்பவோ வேண்டாம் என்றும் அவ்வாறு செயல்படும் நபர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஈஷா மஹாசிவராத்திரி விழா: தடை விதிக்க சென்னை உயர்நீதி மன்றம் மறுப்பு
கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழா குறித்து மனுதாரர் கோரிய நிகழ்நிலை அறிக்கைக்கு உத்தரவிட மறுத்த சென்னை உயர்நீதி மன்றம், வழக்கை வரும் மார்ச் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. மஹா சிவராத்திரி விழாவிற்கு ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில், ஈஷாவிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் தனது விவசாய நிலத்தில் கலப்பதாக சிவஞானம் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் இது குறித்து நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு இட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
மனுதாரரின் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்க வேண்டும் என்றும், மஹாசிவராத்திரி விழாவிற்கு 2 நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு வந்ததால் மனுதாரரின் நோக்கம் கேள்விக்குரியதாக உள்ளது என்றும் கூறி வழக்கை மார்ச் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வாடிப்பட்டி அருகே கத்திக்குத்து காயங்களுடன் டிரைவர் படுகொலை; போலீசார் விசாரணை..
written by Abubakker Sithik
வாடிப்பட்டி அருகே கத்திக்குத்து காயங்களுடன் ஆம்புலன்ஸ் டிரைவர் படுகொலை; தாலுகா அலுவலகம் பின்புறம் அழுகிய நிலையில் பிணம் மீட்பு. போலீசார் விசாரணை..
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கத்தி குத்து காயங்களுடன் படுகொலை செய்த ஆம்புலன்ஸ் டிரைவர் பிணம் தாலுகா அலுவலகம் பின்புறத்தில் மீட்கப்பட்டது. கொலையாளிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் பின்புறம் காம்பவுண்டு சுவர் அருகில் செடி கொடிகள் அடர்ந்த புதருக்குள் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் கத்தி குத்துகாயங்களுடன் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் வாடிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்த சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்தராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். அப்போது அருகில் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில் செல்போன் ஒன்று கிடந்தது அதை எடுத்து போலீசார் சார்ஜ் செய்து பார்த்தபோது வாலிபர் ஒருவரின் புகைப்படம் தெரிந்தது விசாரணையில் மதுரை தெற்கு வாசலை சேர்ந்த மணிகண்டன் மகன் சங்கர் என்ற சங்கர்ராஜா (23). என்பது தெரிந்தது. இவர் டிப்ளமோ மெக்கானிக் படித்தவர். அதற்குரிய வேலை கிடைக்காததால் வாடிப்பட்டியில் உள்ள தனியார் ஆம்புலன்ஸில் டிரைவராக கடந்த ஆறு மாதமாக வேலை செய்து வந்தார் என்றும், இந்நிலையில் கடந்த 3 ந்தேதி ஞாயிற்றுக் கிழமை மதியம் 12.30 மணிக்கு ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் இருந்து சென்றவர் மீண்டும் நேற்று வரை திரும்பி வரவில்லை. அதனால் அவரது பெற்றோரும் ஆம்புலன்ஸ் உரிமையாளரும் பல இடங்களில் தேடி வந்தனர்.
இந்நிலையில் வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் பின்புறம் கத்தி குத்து காயங்களுடன் இறந்து கிடந்தது சங்கர் என்று தெரிய வந்தது. அவரை யார் கொலை செய்தார். எதற்காக கொலை நடந்தது. கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் புலன் விசாரணை செய்து வருகிறார்கள். தடய அறிவியல் நிபுணர்கள் அந்த பகுதியில் உள்ள கைரேகைகளை பரிசோதனை செய்தனர்.
மக்கள் அதிகம் கூடும் இடமான தாலுகா அலுவலகம் பகுதியில் வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பிஎஸ்என்எல் டெலிகாம் அலுவலகத்திற்கு சீல் வைக்க வந்த அதிகாரிகள்; சுரண்டையில் பரபரப்பு..
written by Abubakker Sithik
பிரபல பிஎஸ்என்எல் டெலிகாம் அலுவலகத்திற்கு சீல் வைக்க வந்த அதிகாரிகள்; சுரண்டையில் பரபரப்பு..
சுரண்டை பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு திடீரென அதிகாரிகள் சீல் வைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் சுரண்டையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் நகராட்சிக்கு கடந்த 2008 ஆம் வருடம் முதல் செலுத்த வேண்டிய சொத்துவரி ரூ 2,90,840, செலுத்தவில்லை. இது குறித்து நகராட்சி தரப்பில் பல முறை அறிவிப்பு வழங்கியும் கட்டாததால் இன்று காலையில் நகராட்சி மேலாளர் வெங்கட சுப்பிரமணியன் தலைமையில், வருவாய் ஆய்வாளர் வினோத் குமார், வருவாய் உதவியாளர்கள் நாகூர் மீரா, பிள்ளை அன்னாவி, மாடசாமி, அங்கு சாமி, பிட்டர் முருகன் மற்றும் அலுவலர்கள் பிஎஸ்என்எல் அலுவலகத்தை சீல் வைக்க சென்றனர். இதனால் பிஎஸ்என்எல் சேவைகள் அனைத்தும் தடைபடும் சூழல் உருவானது.
அப்போது அங்கு இருந்த பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் சூசை மரிய அந்தோணி வியாகப்பன் அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்து பிஎஸ்என்எல் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சொத்து வரி தொகையை செலுத்த இன்று மாலைக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதனை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் தற்காலிகமாக சீல் வைக்காமல் சென்றனர். இச் சம்பவம் சுரண்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புளியங்குடியில் நான்கு சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக நடந்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம் புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் காட்டுராஜா என்பவர் தனது வீட்டின் அருகே விளையாடும் 9 வயது சிறுமிகள் மூன்று பேர் மற்றும் 8 வயது சிறுமி ஆகியோருக்கு அவ்வப்போது மிட்டாய் வாங்கி கொடுத்து, அவரது வீட்டின் உள்ளே அழைத்து சென்று சிறுமிகளின் உடலில் உள்ள அந்தரங்க உறுப்புகளில் தவறான முறையில் தொட்டுள்ளார்.
இந்நிலையில் 05.03.24 அன்று பள்ளியில் வைத்து தலைமை ஆசிரியை ஆஜர் அணிவகுப்பின் போது, உங்களது உடலில் உங்களது வீட்டு நபர்களை தவிர யாராவது உங்கள் உடலில் கை வைத்தால் பள்ளியிலோ, அல்லது வீட்டில் உள்ள பெற்றோர்களிடமோ உடனே தகவல் சொல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கிய போது, மேற்கண்ட நான்கு சிறுமிகளும் தலைமை ஆசிரியர் அவர்களிடம் நாங்கள் வீட்டின் அருகே விளையாடும் போது காட்டு ராஜா என்பவர் எங்களது உடலில் உள்ள பகுதிகளை தொட்டதாக கூறியதால் இதுகுறித்து சிறுமியின் பெற்றோரிடம் பள்ளியின் தலைமை ஆசிரியை தகவல் கூறியுள்ளார்.
பின்னர் இது குறித்து நான்கு குழந்தைகளின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், குற்றவாளியை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டத்தின் பேரில், மேற்படி காட்டு ராஜா(48) மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
🔵🟣
15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாஜ கூட்டணியில் இணையும் பிஜு ஜனதா தளம்..
15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாஜ கூட்டணியில் பிஜு ஜனதா தளம் இணைந்து தேர்தல் பணியாற்ற உள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. அரசியல் கட்சிகள் தீவிர களப்பணிகளை தொடங்கி விட்டன. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி இடையே வெற்றி பெற கடுமையான முனைப்பில் ஈடுபட்டு வருகிறது. ‘இந்நிலையில், பாஜ கூட்டணியில் ஒடிசா ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் 2009ம் ஆண்டு வரை பாஜ தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. ஆனால், 2009ம் ஆண்டு தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் பாஜ கூட்டணியில் இருந்து பிஜு ஜனதா தளம் விலகியது.
தற்போது நாடாளுமன்ற தேர்தல், ஒடிசா சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மீண்டும் கூட்டணி அமைப்பது குறித்து பாஜ- பிஜு ஜனதா தளம் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பிஜு ஜனதா தள மூத்த தலைவர்கள் நேற்று நவீன் பட்நாயக்குடன் ஆலோசனை நடத்தினர். அதேபோல், பாஜ மூத்த தலைவர்கள் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுடன் ஆலோசனை நடத்தினர். இதில் பிஜு ஜனதா தளத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இடைகால் ஊராட்சியில் ரூ.34.50 இலட்சம் மதிப்பில் கால் நடை மருந்தக கட்டடம் திறப்பு..
written by Abubakker Sithik
இடைகால் ஊராட்சி பகுதியில் ரூ.34.50 இலட்சம் மதிப்பில் கால்நடை மருந்தக கட்டடம் திறப்பு..
தென்காசி மாவட்டம் இடைகால் ஊராட்சியில் கால்நடை மருந்தக புதிய கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின் படி 06.03.2024 அன்று தென்காசி மாவட்டம் இடைகால் ஊராட்சியில் ரூ.34.50 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கால்நடை மருந்தக கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் திறந்து வைத்து கட்டட வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் தென்காசி மாவட்டத்தில் புதிய திட்டங்களை செயல்படுத்தி புதிய கட்டடங்களை திறந்து வைத்து மக்களின் நலன் கருதி பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இடைகாலில் புதிதாக திறக்கப்பட்ட கால்நடை மருந்தக கட்டிடத்தில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்துதல், குடற்புழு நீக்கம் செய்தல், செயற்கை முறை கருவூட்டல், சினைப் பரிசோதனை, மலடுநீக்க சிகிச்சை மற்றும் அனைத்து வகையான சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும்.
புதிய கால்நடை மருந்தகத்தினால் இடைகால், நயினாரகரம், பொய்கை ஆகிய கிராமங்களில் உள்ள கால்நடைகள் பயன்பெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். விழாவின் தொடக்கத்தில் திருநெல்வேலி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.கே.ஆர்.ஸ்ரீஹரி வரவேற்புரை ஆற்றினார். விழா ஏற்பாடுகளையும், கால்நடைகளுக்கு சிகிச்சைப் பணிகளையும் இடைகால் கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர் தனலெட்சுமி மேற்கொண்டார்.
நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் தி.உதயகிருஷ்ணன், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பா.சுப்பம்மாள் பால்ராஜ், ஊராட்சி ஒன்றிய குழுத்துணைத் தலைவர் ஐவேந்திரன் தினேஷ், இடைகால் ஊராட்சி மன்றத் தலைவர் இ.முத்தம்மாள் இலங்கமுத்து, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் எஸ்.முத்துராமலிங்கம், தென்காசி கட்டட கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணி கோட்ட செயற்பொறியாளர் அனிதா சாந்தி மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தவறான தகவலை சமூக வலைத்தளத்தில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரிக்கை..
by Askar
written by Askar
தவறான தகவலை சமூக வலைத்தளத்தில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரிக்கை..
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ; அப்போது சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் குழந்தை கடத்தல் பற்றிய வதந்திகள் அதிகளவில் பரப்பப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தை கடத்தல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. பெற்றோர்கள் குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார் . மேலும் வட மாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்துவதாக சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஏற்கனவே வதந்தி பரப்பிய வேடசந்தூர் மற்றும் வேடசந்தூரில் வதந்தி பரப்பிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொய்யான தகவல்களை பரவ விட்ட வடிவேல், தங்கராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். பொதுமக்கள் சமூக வலைதளங்களில் குழந்தை கடத்தல் தொடர்பான தகவல்கள் வந்தால் உண்மைத் தன்மை அறியாமல் பகிர வேண்டாம் எனவும், தொடர்ச்சியாக யாரேனும் இது போன்ற தகவல்களை பகிர்ந்தால் உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறிக்கை தகவல் தெரிவிக்கவும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தங்களது பகுதியில் தெருக்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் இருப்பின், காவல்துறை கட்டுப்பாட்டு அறிக்கை தகவல் தெரிவிக்க வேண்டும். பொது மக்களே விசாரிப்பது, வாக்குவாதம் செய்து தாக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் கேட்டுக் கொண்டுள்ளார்.
பழநி-ரியாஸ்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஒன்றிய பாஜக அரசு ஏஜென்சிகளை தவறாக பயன்படுத்துவது அரசியலமைப்பிற்கு எதிரானது! – எஸ்டிபிஐ குற்றச்சாட்டு..
by Askar
written by Askar
எஸ்டிபிஐ கட்சியின் தேசிய செயலகக் கூட்டம் நேற்று (மார்ச்,06) புதுதில்லியில் உள்ள கட்சியின் தேசிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தகூட்டத்திற்கு தேசிய துணைத் தலைவர் முகமது ஷாபி தலைமை தாங்கினார்.
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் எஸ்டிபிஐ கட்சி கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் போட்டியிடுகிறது. இது தொடர்பாகவும், தேர்தல் பிரச்சார ஏற்பாடுகள் குறித்தும் தேசிய செயலக குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும், அமலாக்கத்துறை, என்ஐஏ, சிபிஐ, சிசிபி போன்ற புலனாய்வு அமைப்புகளை ஒன்றிய பாஜக அரசு எதிர்க் கட்சித் தலைவர்களை குறிவைத்து அரசியல் பழிவாங்கும் கருவியாக தவறாகப் பயன்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே. ஃபைஸியின் இல்லத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பாஜக அரசு ஏஜென்சிகளை தவறாகப் பயன்படுத்துவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது மற்றும் ஜனநாயகத்தை நசுக்குவதற்கான திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் என தெரிவிக்கப்பட்டது.
பாஜக ஆட்சியில் வரி செலுத்துவோரின் பணத்தை கொள்ளையடித்து பாஜகவின் கஜானாவை நிரப்பும் யோசனைதான் தேர்தல் பத்திரம். தேர்தல் பத்திரத்தை அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்று அறிவித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு, பாஜகவின் இந்த இருண்ட ஒப்பந்தத்தின் மோசமான வடிவமைப்பை அம்பலப்படுத்துகிறது. இந்த வழக்கில் ஜூன் 30 ஆம் தேதி வரை தரவுகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்குமாறு உச்சநீதிமன்றத்திற்கு எஸ்பிஐ வங்கி விடுத்த கோரிக்கை, பிஜேபி மற்றும் எஸ்பிஐ வங்கிக்கு இடையிலான (unholy nexus game planing) புனிதமற்ற உறவின் ஒரு பகுதியாகும். விரல் நுனியில் எதுவும் கிடைக்கும் இந்த டிஜிட்டல் யுகத்தில் மக்களை முட்டாளாக்கும் முயற்சி இது என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பொதுத் துறை நிறுவனமான என்.எல்.சி.யின் 7% பங்குகளை ஆஃபர் ஃபார் சேல்ஸ் முறையில் விற்பனை செய்ய ஒன்றிய அரசு முடிவு..
by Askar
written by Askar
பொதுத் துறை நிறுவனமான என்.எல்.சி.யின் 7% பங்குகளை ஆஃபர் ஃபார் சேல்ஸ் முறையில் விற்பனை செய்ய ஒன்றிய அரசு முடிவு..
பொதுத் துறை நிறுவனமான என்.எல்.சி.யின் 7% பங்குகளை ஆஃபர் ஃபார் சேல்ஸ் முறையில் விற்பனை செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. என்.எல்.சி. நிறுவனத்தின் 1 பங்கின் நேற்றைய விலை ரூ.226க்கு என்ற நிலையில், விலையை குறைத்து பங்கு ஒன்றை ரூ.212க்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது பங்கின் தற்போதைய சந்தை விலையை விட 6% அதிகமாகும். முதலில் என்.எல்.சி.யின் சுமார் 6.9 கோடி பங்குகளை விற்பனை செய்யவும் வரவேற்பு அதிகமாக இருந்தால் மேலும் 2.77 கோடி பங்குகளை விற்பனை செய்யவும் ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலமாக ஒன்றிய அரசு, ரூ.2000 கோடி முதல் ரூ.2,100 கோடி வரை நிதி திரட்ட உள்ளது.
என்.எல்.சி. இந்தியா கடந்த ஆண்டு ரூ. 400 கோடிக்கு மேல் நட்டத்தில் இருந்த நிலையில், 2023-2024ம் நிதியாண்டின் 3வது காலாண்டில் ரூ.250 கோடி நிகர லாபத்தை ஈட்டி இருந்தது. என்.எல்.சி. இந்தியாவில் ஒன்றிய அரசு தற்போது 79.2% பங்குகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. லாபத்தில் செயல்படும் பொதுத் துறை நிறுவனமான என்எல்சியின் பங்குகளை விற்கும் ஒன்றிய அரசின் முடிவு சர்ச்சைகளை எழுப்பி இருக்கிறது. பங்கு விற்பனை நடவடிக்கையால் இன்றைய பங்குச் சந்தையின் தொடக்கத்திலேயே என்எல்சியின் பங்கின் விலை, 3%த்திற்கும் மேல் சரிவடைந்து காணப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.48,720-க்கு விற்பனையாகிறது.
தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
அந்த வகையில், சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில், நேற்று (மார்ச் – 06 ) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.6,040க்கும் மற்றும் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ. 48,320 க்கும் விற்பனையானது.
இந்நிலையில், இன்றும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.400 உயர்ந்து ரூ.48,720-க்கும், ஒரு கிராம் ரூ. 50 உயர்ந்து ரூ.6,090-க்கும் விற்பனையாகிறது. இதையடுத்து, கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1220 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ளி விலை அந்த வகையில் கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.78.50-க்கு விற்பனையாகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திமுகவுடன் பல ஆண்டுகளாக கூட்டணியில் உள்ளோம். எனவே, திமுகவை விட அதிக இடங்களை ஒதுக்கினாலும் அதிமுகவுடன் கூட்டணி சேரமாட்டோம்!- செல்வப் பெருந்தகை பேட்டி..
by Askar
written by Askar
மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜ்குமார் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே உரையாற்றினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை பேசியபோது;
தமிழ்நாட்டில் பாஜக நோட்டா வாக்குகளை விட குறைவான வாக்குகளையே பெறும். தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான அறிக்கையை வெளியிட்டிருந்தால் உண்மை தெரியவந்திருக்கும். தமிழக மக்களின் மனசாட்சியாக ஆட்சி செய்து வரும் முதல்வர் காங்கிரஸ் கட்சிக்கும் மனசாட்சிப்படி உரிய தொகுதிகளை வழங்குவார். 400 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். திமுகவுடன் பல ஆண்டுகளாக கூட்டணியில் உள்ளோம். எனவே, திமுகவை விட அதிக இடங்களை ஒதுக்கினாலும் அதிமுகவுடன் கூட்டணி சேரமாட்டோம்.
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு ரூ.37,000 கோடி நிவாரண உதவி கேட்ட நிலையில், பாரத பிரதமர் ஒரு பைசாகூட நிதி ஒதுக்கவில்லை. அவர் எந்த முகத்துடன் தேர்தலில் மக்களை சந்திப்பார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இரண்டாவது முறையாக அடிக்கல் நாட்டியுள்ள பிரதமர் மக்கள் பிரதிநிதிகளை அழைத்தால் உண்மை தெரிந்துவிடும் என்பதால் யாரையும் அழைக்காமல் அடிக்கல் நாட்டியுள்ளனர். ராமரை முன்னிறுத்தி தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற மோடியின் எண்ணம் நிறைவேறாது என்று கூறினார்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன்..
by Askar
written by Askar
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன்..
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா, மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் உள்ளிட்டோர் மீது சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குபதிந்தது. கடந்த ஓர் ஆண்டாக ஆம்ஆத்மி மூத்த தலைவர்கள் சிலர் சிறையில் உள்ளனர். இவ்வழக்கில் ஆம் ஆத்மியின் தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி வருகிறது. இதுவரை 8 சம்மன்கள் அனுப்பப்பட்டும், அவர் அமலாக்கத்துறை முன் ஆஜராகவில்லை.
மேலும் சம்மன் சட்ட விரோதமானது என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி, பழிவாங்கும் உணர்வோடு அனுப்பப்படும் சம்மன்கள் என்று கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார். இதனிடையே தாங்கள் அனுப்பும் சம்மனுக்கு டெல்லி முதல்வர் ஒத்துழைக்க மறுப்பதாக அமலாக்கத்துறை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் விளக்கமளிக்க அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மார்ச் 16ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -3
கப்ளிசேட்
உஸ்மானிய பேரரசு -7
(கி.பி.1299-1922)
உலகத்திலேயே பலமான படைப்பிரிவாக உருவான “எனிச்சாரி”
படைப்பிரிவு மன்னரின் ஆணைகளையே
புறம் தள்ளியது.
எனவே அந்தப்பிரிவு
சிறிது சிறிதாக கலைக்கப்பட்டது.
மன்னரை மக்கள் சந்திக்க விடாமல் இந்த படைப்பிரிவு, மன்னரை தனிமைப்படுத்தியது.
உர்கானின் ஆட்சியில் பொதுவாக நாடு அமைதியாக இருந்தது.
ஏராளமான கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட்டன.
உஸ்மானியர்களின் தலைநகராக புருஷா நகரே இதுவரை இருக்கிறது.
உஸ்மானிய படைகள்
சவுதி அரேபியா, ஐரோப்பா,
துருக்கியின்
காண்ஸ்டாண்டி நோபிள் என படையெடுத்து செல்வதற்கு அணிவகுத்து தயாராக நின்றன.
உர்கான் அவர்களின் மூத்த மகனும் பட்டத்து இளவரசருமான சுலைமான் வேட்டைக்கு காட்டிற்கு
சென்றார்.
துறத்திவந்த புலியை எதிர்த்து அடித்து கொன்றுவிட்டு குதிரையில் ஏறும்போது தவறி விழுந்தார்.
அதில் தலையில் பலமான அடிபட்டது.
உடனடியாக மாளிகைக்கு தூக்கி வந்து மருத்துவர்கள் எவ்வளவோ சிகிச்சை செய்தும் இறுதியில் மரணமடைந்தார்.
85 வயதான மன்னர் உர்கான் மகனின் மரண அதிர்ச்சியை தாங்கமுடியாமல்
சிறிது நாட்களில் அவரும் மரணமடைந்தார்.
உர்கானின் ஆட்சிக்காலத்தில் சாலைகள் அமைக்கப் பட்டன.மரங்கள் சாலையின் இருபுறங்களிலும் நடப்பட்டன.
ஏராளமான மஸ்ஜிதுகள் கட்டப்பட்டன.
தொழில்நுட்பங்கள்
பயன்படுத்தப்பட்டன
4000 பொது கழிவறைகளும்,
குளியலறைகளும்
பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள கட்டப்பட்டன.
உர்கானின் காலத்தில் “இப்னுபதூதா “என்ற பயண ஆய்வாளர் உஸ்மானிய ஆட்சியைப்பற்றி
நிறைய குறிப்புகளை பதிவு செய்துள்ளார்.
உடனடியாக உர்கானின் மகன் முராத் மன்னராக பதவியேற்றார்.
முராத் பதவியேற்றவுடன்
கராமான் பிரதேசத்தின் சிற்றரசர் அலாவுதீன்,
வயதில் சிறியவரும்
போர் அனுபவங்கள் இல்லாத முராத் மன்னராக பதவி ஏற்றுள்ளதால் எளிதாக தோற்கடித்து விடலாம் என்று எண்ணி போர் தொடுத்தார்.
உஸ்மானிய படைகள்
கராமான் படைகளை
பந்தாடியது.தப்பிய சிற்றரசர் அலாவுதீன் சமாதான ஒப்பந்தத்திற்கு வந்தார்.அத்தோடு
மன்னர் முராத்திற்கு
தனது பேரழிகியான
மகளை திருமணம் செய்து கொடுக்க ஒப்புக்கொண்டனர்.
இவர்களின் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.
உஸ்மானிய பேரரசின் மன்னர்களில் அடுத்தடுத்த வந்தவர்கள் மேம்பட்ட செயல்பாடு உடையவர்களாகவே
இருந்தனர்.
முராத் அவர்களின் அரசாங்கத்தில்
ராணுவத்தளபதியாக
கலீல் என்பவர் சிறப்பாக பணியாற்றினார்.
கலீல் அவர்கள் மிகவும் நீதியானவராகவும்,
இறைபக்தி மிக்கவராகவும் இருந்தார்.
ஆகவே மன்னர் முராத் அவர்கள் கலீல் அவர்களை முதன்மை முதல் அமைச்சராக நியமித்தார்.
ஐரோப்பிய நாடுகள்
மற்றும் பால்கான் நாடுகளை நோக்கி உஸ்மானிய படைகள் நகரத் துவங்கின.
ஐரோப்பாவின் முக்கிய நகரமான
எத்திரன் சுற்றி வளைக்கப்பட்டது.
அதனால் ஏராளமான
திருப்பங்கள் ஏற்பட்டது.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
You must be logged in to post a comment.