தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மேற்கு பகுதி கல்லாற்றில் விடுமுறை நாளை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குளிப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் இப்பகுதியில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.இதனால் கரை திரும்ப முடியாமல் பொதுமக்கள் தவிப்பதாக வந்த தகவலையடுத்து எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் யாசர் கான் தலைமையில் கடையநல்லூர் நகர தலைவர் அன்னக்கிளி சாதிக்,மக்காநகர் கிளை தலைவர் ஷாஹுல் ஹமீது, செயலாளர் கரீம், SDTU தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ராஜா முஹம்மது மற்றும் நிர்வாகிகள் அவசர ஊர்தியுடன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். நிலைமை மோசமடைவதை உணர்ந்து உடனடியாக அரசு மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்து பொதுமக்கள் வெளியேறுவதற்கான வழிகளை கண்டறிந்து மீட்பு குழுவினருடன் இணைந்து பொதுமக்களை மீட்டனர். துரிதமாக செயல்பட்டு மக்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு மீட்பு குழுவினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.