வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இன்று விடியற்காலை 4.17 மணியளவில் 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மீனூர் கொல்லை மேட்டில் ஒரு வீட்டின் சுவற்றில் சிறிய விரிசல் ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த காரப்பட்டு, வாணியம்பாடி அடுத்த தும்பேரி, ராமநாய்க்கன்பட்டி, அரங்கல்துருகம், சிக்கணாங்குப்பம் லேசான அதிர்வால் எந்த பாதிப்பும் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.
Category:
மாவட்ட செய்திகள்
வைகை அணையின் நீர்மட்டம் 69அடியாக உயரும் போது உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படும்..இதன் மூலம் உசிலம்பட்டி பகுதியிலுள்ள 35கண்மாய்கள் பாசன வசதி பெறும்.இந்நிலையில் கடந்த13.11.2021 அன்று வைகை 58 கிராம கால்வாயில் திறந்து விடப்பட்ட தண்ணீர் 50 கிமீ தொலைவில் உள்ள உசிலம்பட்டி கணமாயை வந்தடைந்தது.
இதனை விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்றனர்.உசிலம்பட்டி மதகுப்பகுதியில் உள்ள ஷட்டருக்கு மாலை அணிவித்து வணங்கிய 58 கிராம இளைஞர் குழு சௌந்தரபாண்டியன் தலைமையிலான இளைஞர்கள் தண்ணீர் வரும் வரத்துக் கால்வாயில் மலர் தூவி தண்ணீரை வரவேற்று இயற்கை அன்னைக்கு நன்றி செலுத்தினர்.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அழகு சிறையில் ஆதரவற்றவர்களுடன் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாடிய திமுக இளைஞர் அணியினர்.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருகே அழகு சிறையிலுள்ள தனியார் காப்பகத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு செல்லம்பட்டி இளைஞரணி அமைப்பாளர் சிவா இளங்கோ தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது இதில் திமுக நிர்வாகிகள் முதியோர்கள் பலர் கலந்து கொண்டு இனிப்புகள் வாங்கிச் சென்றனர்.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வரும் முன் காப்போம் டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் மற்றும் நில வேம்பு கசாயம் வழங்கும் முகாம்.
by mohan
written by mohan
மதுரை வடக்கு மாவட்டம் வடக்கு தொகுதி 31 & 37,வது வார்டு சார்பில் யாகப்பா நகர் பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் முகாமினை கட்சியின் மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் தொடங்கி வைத்தார்…வடக்கு தொகுதி செயலாளர் பாஷா தலைமை வகித்தார்வடக்கு தொகுதி துணை தலைவர் ரபீக் ராஜா, வரவேற்புரை நிகழ்த்தினார்..மாவட்ட தலைவர் பிலால் தீன் துணை தலைவர் ஜாபர் சுல்தான், செயலாளர் கமால் பாட்சா, யாகப்பாநகர் கிளை தலைவர் அப்பாஸ் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்இறுதியாக கோமதிபுரம் கிளை செயலாளர் பரக்கத் அலி நன்றியுரை நிகழ்த்தினார்..சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க திட்டமிடப்பட்டு வீடு வீடாக சென்று கபசுர குடிநீர் நிலவேம்பு கசாயம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி வருகின்றனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உழவர் சந்தைகளில் பணிபுரியும் காவலர்கள், துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம்: நலச்சங்கம் கோரிக்கை.
by mohan
written by mohan
தமிழ்நாடு காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் நலச் சங்கம் சார்பாக, தமிழகமெங்கும் 179 இடங்களில் இயங்கி வரும் உழவர் சந்தைகளில் மூன்று காவலர்கள் ஒரு துப்புரவு பணியாளர்கள் வீதம் மாத ஊதியம் 5000 என்ற அடிப்படையில் 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிலையில், அவர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும் தினக்கூலி அடிப்படையில் மாற்றி கொடுக்குமாறு மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்வேளாண் இயக்குனர் நடராஜன் ஆகியோரிடம், மாநிலத் தலைவர் திராவிட மாரி மற்றும் ராஜபாண்டி கோரிக்கை மனு அளித்தனர்.வேளாண் துணை இயக்குனர் விஜயலட்சுமி மற்றும் மதுரை விற்பனைக்குழு செயலாளர் மெர்சி ஜெயராணி உடனிருந்தனர்.செய்தியாளர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தொல்லியல் சின்னங்களை சேதப்படுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்- தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி.
by mohan
written by mohan
பாண்டியநாடு பண்பாட்டு மையம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டு சாதனையாளர்களுக்கு விருது வழங்கினார்.தொடர்ந்து நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியபோது ஏற்கனவே தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற அகழாய்வு மற்றும் புதிதாக அகழாய்வு நடத்துவதற்காக 5 கோடி ஒதுக்கீட்டு செயல்படுத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.தொல்லியல் துறை சார்பில் புதிய முன்னெடுப்புகளை உருவாக்கிடவும், அதன் வாயிலாக தமிழ் பண்பாட்டை ஆவணப்படுத்த வேண்டும் என்றும் புதிதாக மூன்று இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள உள்ளது.தென்மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டத்தில் தும்ப கோட்டையிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் திலுக்கர் பட்டியிலும், அகழாய்வு மேற் கொள்வதற்கு தமிழக அரசு அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.குறிப்பாக கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு முடிவு பெற்றுள்ள நிலையில், எட்டாம் கட்ட அகழாய்வை தொடர்ந்து நடத்துவதற்கும், உள்ளிட்ட மற்ற இடங்களிலும் அகழாய்வு மேற் கொள்வதற்கும் தமிழக அரசு ஒதுக்கீட்டு உள்ள நிதியில் மேற்கொள்ளப்படவுள்ளது.கொற்கையில் கடல் ஆய்வுகளின் மூலம் தொல்லியல் கலத்தில் புதிய கண்டுபிடிப்புகளின் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளோம்.தொல்லியல் துறையும் அருங்காட்சிய துறையும் இணைந்து சென்னை அருங்காட்சியகத்தில் ஒரு புதிய கட்டிடம் நவீன வசதிகளோடு உலகத் தரத்தில் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.கீழடி அருங்காட்சியகம் பணிகள் கூடிய விரைவில் முடிக்கப்பட்டு 12 கோடி பதிப்பில் அமைக்கப்படவுள்ள அருங்காட்சியத்தை முதல்வர் நேரடியாக வந்து திறக்க உள்ளார்.சிறு தொழில்களை மீட்டெடுப்பதற்கு முதலமைச்சர் பல்வேறு சலுகைகளைஅறிவித்துள்ளார்.எங்கேயாவது தொல்லியல் சின்னங்கள் இருந்தால் அங்கு எந்த ஒரு குவாரி பணிகளும் நடைபெற கூடாது, என மிகக் கடுமையான தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தொல்லியல் சின்னங்களை காப்பாற்றுவது நமது கடமை சேதப்படுத்துவது மன்னிக்க முடியாத குற்றமாகும் என அமைச்சர் தங்கம் தென்ரைசு கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராஜபாளையம் தொகுதியில், கடுமையான மழையின் காரணமாக வட்டாட்சியர் மூலமாக, பல வீடுகள் சேதமடைந்ததாக சட்டமன்ற உறுப்பினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, மேலப்பாட்டம், கரிசல்குளம் ஊராட்சி, அம்பேத்கர் நகர் பகுதியிலும், நகர் பகுதியில், சோமையாபுரம், ஆவரம்பட்டி பகுதிகளிலும் சேதமடைந்த வீடுகளை மக்கள் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், வட்டாட்சியர் ராமச்சந்திரன் மற்றும் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில், பார்வையிட்டார்.அப்போது, எம்.எல்.ஏ.அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய உதவிகளை உடனடியாக செய்து தருமாறு வட்டாட்சியரைக் கேட்டுக்கொண்டார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் இரு தினங்களுக்குள் நலத்திட்ட உதவிகள் வழங்குவேன் எனக் கூறினார். இந்நிகழ்வில், நகர திமுக செயலாளர் இராமமூர்த்தி, ஒன்றிய துணை சேர்மன் துரை கற்பகராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
குடிபோதையில் தகராறு செய்த கணவர் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ.வல்லாளப்பட்டி தெற்குவளவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் ஏஜன்ட் ஆக உள்ள நிலையில், தனது மனைவி ஷீலா, மகள் விஜயதர்ஷினி, மகன் விஜயராமன் ஆகியோருடன் மேலூர் அருகே எம்.மலம்பட்டியில் தனியாக சொந்த வீட்டில் குடியிருந்து வருகின்றார்.இந்நிலையில் மணிகண்டன் அடிக்கடி குடிபோதையில் வந்து மனைவி ஷீலாவுடன் தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.இந்நிலையில் மணிகண்டன் இன்று, இறைச்சி வாங்கிக்கொண்டு மனைவி ஷீலாவிடம் கொடுத்து சமைக்க சொல்லியுள்ளார். இதனிடையே குடிபோதையில் இருந்த மணிகண்டன் ஷீலாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளார், இதனால் ஆத்திரமடைந்த மனைவி ஷீலா வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து மணிகண்டன் தலையில் போட்டுள்ளார், இதில் தலையில் பலத்த காயமடைந்த மணிகண்டன் தலை முற்றிலும் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதனைத் தொடர்ந்து சீலா வீட்டைப் பூட்டிவிட்டு இதுகுறித்து மேலூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.இதுகுறித்து தகவல் அறிந்து மேலூர் காவல்துறை சார்பு ஆய்வாளர் சார்லஸ் தலைமையில், காவல்துறை சார்பு ஆய்வாளர்கள் கமலமுத்து, ஜெயக்குமார், தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடியிருந்த வீட்டின் கதவை உடைத்து மணிகண்டன் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேலூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் மற்றும் தடவியல் நிபுணர்கள் கொலை குறித்த தடயங்களை சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறும்போது…மணிகண்டனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், இதுதொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தனர்.குடும்பத்தகராறு காரணமாக கட்டிய மனைவியை கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கரிவலம்வந்தநல்லூரில் 70 கிராம நாட்டாமைகளுக்கு CCTV கேமிரா அமைப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும், நடைபெற்ற குற்றச்செயல்களில் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணவும் காவல் துறையினருக்கு பெரிதும் உதவியாக இருக்கும் கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கரிவலம்வந்தநல்லூர் காவல் ஆய்வாளர் காளிராஜ் தலைமையில் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 70 கிராமங்களைச் சேர்ந்த 124 நாட்டாமைகளை அழைத்து அவர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர்களிடம் கண்காணிப்பு கேமரா அமைப்பதன் முக்கியத்துவம் குறித்தும், அதன் நன்மைகள் குறித்தும் கூறி அனைவரும் தங்களின் கிராமத்தின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த முன்வரவேண்டும் எனவும்,மேலும் விரைவாக எந்த கிராமத்தில் கண்காணிப்பு கேமிரா அமைக்கப்படுகிறதோ அவர்களுக்கு பரிசு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து நாட்டாமைகளும் விரைவில் தங்களது கிராமங்களில் அதிக இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதாக உறுதியளித்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக கலந்து கொண்ட அனைவருக்கும் காவல் துறையினரின் சார்பாக இரவு உணவு வழங்கப்பட்டது.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் குடியாத்தம் அருகே விடியற்காலை 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்.
by mohan
written by mohan
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் இன்று விடியற்காலை 3.15 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் சுமார் 16 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நிலநடுக்கம் 3.6 ரிக்டர் அளவு பதிவாகி உள்ளது. குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை மதுரா மீனூர் கிராமத்தில் செல்வம் என்பவரின் மாடு வீட்டில் மட்டும் விரிசல் ஏற்பட்டுள்ளதாக ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்து உள்ளார்.
கே.எம். வாரியார்
வேலூர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பெருங்குடியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் பன்னிரண்டாம் ஆண்டு துவக்கவிழா நடைபெற்றது.மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் திமுக மதுரை தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளருமான ஆஸ்டின் தலைமையில் அவனியாபுரம் அருகே காமராஜர் நகர் பகுதியில் தனியார் மண்டபத்தில் 12ம் ஆண்டு விழாவிற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..முன்னதாக பெருங்குடியில் உள்ள மாற்றுதிறனாளி மாணவர் 50 பேர்களுக்கு மதியஉணவு மற்றும் கேக் வழங்கப்பட்டது.மாநிலத் துணைத் தலைவர் மற்றும் பரவை காய்கறி சந்தை சங்கத் தலைவர் டாக்டர். இம்மானுவேல் ஜெயராஜ் மற்றும் தலைவர் போஸ் அருள்ராஜ் மற்றும் துணை செயலாளர் ஜெயபால் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கிறிஸ்மஸ் தினத்தில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆலங்குளம் பகுதியில் காய்ச்சல் பரவுவதால் சுகாதாரத் துறையினர்தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம்.திருப்பரங்குன்றம் அருகே ஆலங்குளம் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவுவதாக வந்த தகவலை அடுத்து சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிளீச்சிங் பவுடர் தெளித்து, வீடுகளுக்கு அருகில் மழை நீர் தேங்க விடாமல் இருக்குமாறு மக்களுக்கு அறிவுரை வழங்கினர்சுகாதாரத்துறை சார்பில் வட்டாரமருத்துவர் Dr. சிவகுமார். வட்டார மேற்பார்வையாளர் தங்கசாமி சுகாதார ஆய்வாளர்கள் ஜெயகுமார். ஆண்டணி, வரதராஜ்மற்றும் சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் வீடுதோறும் ஆய்வு செய்தனர்.மேலும் மருத்துவ முகாம் மூலம் பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. கொரோனா தடுப்புசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராஜபாளையத்தில் மகாதேவாஷ்டமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா மற்றும் அன்னதானம் .உலக நன்மை வேண்டி எச்சில் இலையில் உருண்டு அங்கபிரதேசம்விருதுநகர் மாவட்டம்இராஜபாளையம் சர்வ சமுத்திர அக்ரஹாரத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சந்தான வேணுகோபால சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை மாத மகாதேவாஷ்டமிய முன்னிட்டு அதிகாலையிலே நடை திறந்து மூலவர் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமிக்கு பால், தயிர், நெய், இளநீர், சந்தனம், தேன்,ஆகிய 16 வகை நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து அன்னாபிஷேகம் நடைபெற்றது. அன்னத்தால் சிவலிங்கம் உருவம் உருவாக்கப்பட்டு அதற்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.அதன் பின்னர் பொதுமக்களுக்கு மகாதேவாஷ்டமி அன்னதானம் வழங்கப்பட்டது. பொதுமக்கள் சாப்பிட்ட பின்பு அந்த எச்சில் இலைகளில் கோவில் அர்ச்சகர்கள் உலக நன்மைக்காகவும் கொடிய நோயான தொற்றிலிருந்து பொதுமக்கள் விடுபடவேண்டும் இச் சிலைகளை உருண்டு அங்க பிரதேசம் செய்தனர்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் விரிஞ்சிபுரம் தரைப்பாலத்தை சீரமைப்பது குறித்து ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு .
by mohan
written by mohan
வேலூர் மாவட்டம் பகுதியில் ஓடும் பாலாற்றில் கடும்மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.வேலூர் மாவட்டம் செதுவாலை அடுத்த விரிஞ்சிபுரம் தரைப்பாலம் பழுதடைந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.இந்த நிலையில் விரிஞ்சிபுரம் பாலத்தை சீரமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் சம்மந்தப்பட்ட துறையினர் உடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாநகராட்சி, திருவலம் பேரூராட்சி பகுதியில் அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு வாங்கும் நிகழ்வு தற்போது நடந்துகொண்டு உள்ளது.வேலூர் மாநகர மாவட்ட அதிமுக அலுவலகத்தில் போட்டியிடும் அதிமுகவினரிடமிருந்து விருப்பமனு, நேற்று முன்தினம் முதல் வாங்கப்பட்டு வருகிறது.மனுக்களை வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்ஆர் கே.அப்பு வழங்கினார்.அருகில் மாவட்ட பொருளாளர் மூரத்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சரியில்லை என கூறுவது ஏற்புடையதல்ல . சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பேட்டி.
by mohan
written by mohan
சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் குற்றங்கள் அதிகரிப்பது குறித்தகேள்விக்கு.?பள்ளி மாணவிகளுக்கான பாலியல் தொல்லை என்பது காலம் காலமாக நடந்து வந்துள்ளது., இதற்கு முன் யாரும் தைரியமாக புகார் அளிக்கவில்லை.தற்போது புகார் அளித்தால் உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் தைரியமாக மாணவிகள் புகார் அளிக்கின்றனர்.வெளிப்படையான தீர்வுகாண வேண்டுமென்றால் பெண் குழந்தைகளுக்கு உடனடியாக புகார் அளிக்க தைரியத்தை கொடுக்க வேண்டும்.தொடர் மழை இருந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அரசு எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு.?காலநிலை மாற்றத்திற்கு யாரும் பொறுப்பேற்க முடியாது., பருவநிலை மாற்றத்திற்கு ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் மீது பழி சுமத்துவது தவறு நீர் தேங்கும் இடங்களில் வீடு கட்டியதால் தண்ணீர் வெளியேற முடியாமல் பல்வேறு இடங்களில் நீர் சூழ்ந்துள்ளது அதனால் வந்துள்ள பிரச்சனை., அதை தடுக்க வேண்டும்.அரசு நிறுவனங்கள் அனைத்தும் சென்னையிலிருந்து மாற்றி திருச்சி அருகே கொண்டு வர வேண்டும் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டது இருந்தபோதிலும் அனைவரும் சென்னை நாடுவது தவறு., அனைத்து அதிகார மையங்களும் சென்னையில் உள்ளது தமிழ்நாட்டில் மற்ற பகுதிகளுக்கு முக்கியமான அரசு அலுவலகங்கள் மற்றும் அமைச்சகத்தை கூட மாற்றலாம். அதிகார பங்கை மற்ற பகுதிகளுக்கும் பிரித்துக் கொடுத்தாள் சென்னையில் நெரிசல் குறையும் மற்ற பகுதிகளுக்கு பொதுமக்கள் வருவது அதிகரிக்கும்.கலைஞர் உணவகம் அமைப்பது குறித்த கேள்விக்கு.சாப்பாடு ருசியாக இருந்தால் சரி மலிவான விலையில் சாப்பாடு ருசியாக இருந்தால் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்., என சிரிச்சுக்கொண்டே பதில் அளித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நிலக்கோட்டையில் தி.மு.க மாநில இளைஞரணி செயலாளர் உதய நிதி பிறந்த தினத்தை முன்னிட்டு 5 குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி.
by mohan
written by mohan
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் திமுக மாநில இளைஞர் அணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 5 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கரிகால பாண்டியன் ஏற்பாட்டில் இலவசமாக நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் கலந்துகொண்டு தங்க மோதிரங்கள் பச்சிளம் குழந்தைகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கரிகால பாண்டியன், நகரச் செயலாளர் கதிரேசன், நிலக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் கணேசன், நுரையீரல் சிறப்பு நிபுணர் டாக்டர் சேகர், ஒன்றிய கவுன்சிலர்கள் ரோஸ் நெடுமாறன், அறிவு என்ற சின்ன மாயன், தியாகு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.படவிளக்கம்: நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் பச்சிளங் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கியபோது எடுத்த படம்.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் வீரகுல தமிழர் படையின் சார்பாக தமிழீழ போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு வீரவணக்கம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரையில் வீரகுல தமிழர் படையின் சார்பாக தமிழீழ போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் வீரகுல தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கீழை பிரபாகரன் தலைமை தாங்கினார், மாநில அமைப்பு செயலாளர் பழனி முருகன் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக பெரியார் பேரவை தலைவர் நாகேஸ்வரன், விடுதலை சிறுத்தைகள் இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட பொறுப்பாளர் சபீர், ஆதி தமிழர் கட்சி பொறுப்பாளர் சக்தி உள்ளிட்ட தோழமை அமைப்பினர் கலந்துகொண்டனர் நிகழ்ச்சியை வீரகுல தமிழர் படை பொறுப்பாளர்கள் திருமுருகன், பிரபு, அஜித்குமார், ஈஸ்வரன், அஜித்,ராஜா, ஹரி, கோபி, சக்திவேல் ஒருங்கிணைத்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பட்டிவீரன்பட்டியில் கால பைரவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், சீமானுத்து ஊராட்சி மன்ற தலைவர் பங்கேற்பு.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பட்டிவீரன்பட்டியில் பழமை வாய்ந்த கால பைரவர் ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டது, இதில் காலபைரவருக்கு பால், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட வைத்து அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர், மேலும் சீமானுத்து ஊராட்சி மன்ற தலைவர் அஜித்பாண்டி தலைமையில் வந்திருக்கும் பொதுமக்களுக்கு மற்றும் பக்தர்களுக்கு காலபைரவர் ஜெயந்தியை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, இதில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு அன்னதான பெற்றுச் சென்றனர்.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திமுகவைச் சேர்ந்த உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குறிஞ்சிநகர் மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குறிஞ்சி மலைவாழ் மக்களுக்கு இன்று திமுக உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் ,மற்றும் உணவுகள் வழங்கப்பட்டது. இதில் உசிலம்பட்டி ஏழாவது வார்டு திமுக பிரதிநிதி வாசிமலை, மலைவாழ்மக்கள் 240 பேருக்கு பிரியாணி வழங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார், இதில் உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் சுதந்தரம், நகர செயலாளர் தங்கமலைபாண்டி, ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது. இந்த விழாவில் திமுக பொருளாளர் தூக்க ஜெயபிரகாஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜெகன், நெசவாளர் அமைப்பாளர் லிங்குசாமி, ஒன்றிய பொருளாளர் பழனி, தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சி செயலாளர் முத்துசாமி, மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.