மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ளது உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமணை.இங்கு உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கனோர் நோயாளிகளாவும் மற்றும் பார்வையாளர்களாவும் வந்து செல்கின்றனர்.மேலும் அவசரகால மகப்பேறு விபத்து அடிதடி போன்ற பிரச்சனைகளுக்காக ஆம்புலன்ஸ் மூலம் தினமும் நூற்றுக்கணக்கானோர் அவசர சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவின் நுழைவாயிலில் உள்ள மேற்கூரைப்பகுதி திடீரென பெயர்ந்து விழுந்தது.இதனைக் கண்ட மருத்துவமணையிலிருந்த நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.அச்சமயத்தில் அப்பகுதியில் நோயாளிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.தரமில்லாத பொருட்களால் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதால் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக நோயாளிகள் தெரிவித்தனர்.கடந்த மாதம் கர்ப்பிணிப் பெண்களின் பிரசவ வார்டின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.உயிர் காக்கும் அரசு மருத்துவமணை தரமற்ற கட்டிடங்களால் உயிர்பலி வாங்கும் முன் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Category:
மாவட்ட செய்திகள்
தென்காசி குத்துக்கல் வலசையில் தமிழ் ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் பயிற்சி கட்டகம் வெளியீடு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தென்காசி குத்துக்கல் வலசையில் தமிழ் ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் பயிற்சி கட்டகம் வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசை செயின் மேரிஸ் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தமிழ் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி மற்றும் பயிற்சி கட்டகம் வெளியிடுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரக்கூடிய மாணவ மாணவிகளில் தமிழ் எழுத, வாசிக்க தெரியாத மாணவர்களுக்காக மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலும், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முன்னிலையிலும் ஒவ்வொரு பள்ளியிலிருந்து ஒருங்கிணைப்பு தமிழ் ஆசிரியர்கள் மொத்தம் 152 தமிழ் ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு ஒவ்வொரு வட்டாரம் வாரியாக இந்த 152 தமிழ் ஆசிரியர்களுக்கும் பொறுப்பு தமிழ் ஆசிரியர்கள் 11 பேர் நியமிக்கப்பட்டு இவர்களின் செயல்பாடுகளை கவனிக்க 28 தலைமையாசிரியர்களும் சேர்ந்து இன்றைய நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு 55 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டு மாவட்டம் முழுமையும் ஒரே மாதிரியாக இந்த மாணவர்களுக்கு நடத்தப்பட்டு மாதம் இருமுறை இந்த மாணவர்களுக்கு தேர்வும் நடத்தி அனைத்து மாணவர்களையும் தமிழில் எழுத மற்றும் படிக்க வைக்க தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. இவை அனைத்தையும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அனைவரும் ஒவ்வொரு பள்ளியாக சென்று ஆய்வு செய்து மாதம் இருமுறை அறிக்கைகள் சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மு.முத்தையா அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம், செப்.22- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். கடந்த மாத கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் துறை அலுவலர்கள் எடுத்துரைத்தனர்.
வறட்சி நிவாரணமாக மாவட்டத்திற்கு வரப்பெற்ற ரூ.132 கோடி நிதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழையையொட்டி கண்மாய்களை தூர்வாருதல், கால்வாய்களை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் வழியாக செல்லக்கூடிய தாழ்வான மின் கம்பங்களை சரி செய்யவும், சேதமான மின் கம்பங்களை சரி செய்யவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
செப்.19ல் நடந்த தென்னை, கரும்பு விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் வைத்த கோரிக்கையை பரிசீலனை செய்யப்பட்டு 3 விவசாயிகளுக்கு கரும்பு பயிர் கடனாக ரூ.2.72,457/ஐ மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்.
ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, வேளாண்ம துறை இணை இயக்குநர்(பொ) தனுஷ்கோடி, கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் முத்துக்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கல்யாணசுந்தரம் உட்பட விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம், செப்.22-
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொதுக்காதாரத்துறை மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் வகித்தார். பொதுசுகாதாரத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
அவர் தெரிவிக்கையில், மழைக்காலங்களில் அதிகமாக பரவக்கூடிய கொடிய வைரஸ் டெங்கு காய்ச்சல் தொற்றாகும். இது ADS என்ற கொசு இனம் மூலம் மக்களிடையே எளிதாக நோயை பரப்பும் குணம் கொண்டதாக உள்ளது. இந்த வைரஸ் குழந்தைகளை எளிதாக தாக்கக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. இத்தகைய கொடிய வைரஸ் நோய் தொற்றை தடுப்பது என்பது சுகாதாரத்துறையாக இருந்தாலும் அவர்களுக்கு பொதுமக்களும் முழுஒத்துழைப்பு கொடுத்து நோய் தொற்றை தடுக்க சுகாதாரத்துறையினருடன் ஒருங்கிணைந்து செயல்படும் பொழுது டெங்கு காய்ச்சல் என்னும் கொடிய நோய்தொற்றை முற்றிலுமாக தடுத்திட முடியும், பொதுசுகாதாரத்துறையுடன், உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து களப்பணிகளை மேற்கொண்டு பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை துவங்கவேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் குடும்ப உறுப்பினர்கள் தங்கள் வீட்டை சுத்தமாக வைத்தாலே, தெரு சுத்தமாகிவிடும், தெரு சுத்தமாக இருந்தால் ஊர் சுத்தமாக இருக்கும் இது இயல்பு. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வீட்டிலும் பயன்பாடற்ற பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும். தண்ணீர் தேக்கி வைக்கும் பாத்திரங்களை சுத்தம் செய்து தண்ணீர் தேக்கி மூடி வைத்து பயன்படுத்த வேண்டும். பழைய டயர், தேங்காய் சிரட்டை, அம்மிக்கல் போன்றவற்றில் மழை தண்ணீர் தேங்கும். அதனால் தேங்காய் சிரட்டை, பழைய டயர் இவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். வீட்டில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் வீட்டின் வெளியில் இருந்தால் மூடி வைத்து மழை தண்ணீர் தேங்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல் வீட்டில் பயன்படுத்தக்கூடிய பிரிட்ஜில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக கொசு முட்டையிட்டு 22 நாட்களில் புதிய கொசுக்கள் உற்பத்தியாகி விடுகின்றன. சுமார் 4 கிலோ மீட்டர் பறக்கும் தன்மை கொண்ட கொசு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக சென்று விடும். அதிலும் குறிப்பாக குழந்தைகளை அதிக பாதிப்படையச் செய்யும். இத்தகைய வைரஸ் கொசுவை தடுப்பதற்கு ஒவ்வொரு வீட்டிலும் சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலின்படி பயன்பாடற்ற பொருளை அப்புறப்படுத்தினாலே நோய் தாக்குதலை குறைத்திட முடியும்.
மேலும் சிறியவர் முதல் பெரியவர் வரை காய்ச்சிய குடிதண்ணீரை பயன்படுத்த வேண்டும். நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி துறைகள் மூலம் மேல்நிலை நீர் தேக்கதொட்டிகளை குளோரிநேசன் செய்து தண்ணீர் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். சாலைகளில் மழைநீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்வதுடன் சமூக அமைப்புகளும் பொதுஇடங்களில் மழை தர்னணீர் தேங்கும் வகையில் பொருட்கள் பயன்பாடற்று கிடந்தால் அப்புறப்படுத்த முன்வர வேண்டும். தொடர்ந்து காய்ச்சல், இருமல போன்ற அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று உரிய மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். மருத்துவத்துறையை பொறுத்தவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கான அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. இருந்த போதிலும் அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பொதுமக்களுக்கு டெங்கு நோயை தொற்று தடுப்பு குறித்து விழிப்புணார்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்களும் பொதுசுகாதாரத்துறைக்கு உறுதுணையாக இருந்து சுகாதாரத்துடன் இருக்கும் வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து மாவட்டத்தில் டெங்கு நோய் தொற்று பாதிப்பு இல்லை என்ற நிலையை உருவாக்கிட வேண்டும் என தெரிவித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனீப், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் செந்தில்குமார், பொதுசுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் அர்ஜுன் குமார், இந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தொலைத்தொடர்புகளில் ஒளியிழைகளை உருவாக்கி பயன்படுத்திய, அகண்ட அலைவரிசையின் தந்தை, நோபல் பரிசு பெற்ற சர் சார்லசு குன் காவோ நினைவு தினம் இன்று (செப்டம்பர் 23, 2018).
by ஆசிரியர்
written by ஆசிரியர்
சர் சார்லசு குன் காவோ (Sir Charles Kuen Kao) நவம்பர் 4, 1933ல் சீனாவின் சாங்காய நகரில் பிறந்தார். அவரது மூதாதையர் வீடு அருகில் இருக்கும் ஜின்சானில் உள்ளது. இவர் வீட்டில் தனது சகோதரருடன் சீனமும் மற்றும் சாங்காய் சர்வதேச பள்ளியில் ஆங்கிலம் மற்றும் பிரன்சும் படித்தார். காவோவின் குடும்பம் 1948 ஆம் ஆண்டில் ஹாங்காங்கிற்கு குடி பெயர்ந்தது. அங்கு 1952 ஆம் ஆண்டு புனித ஜோசப் கல்லூரியில் உயர்கல்விப் படிப்பும் மற்றும் வூல்விச் பாலிடெக்னிக் கல்லூரியில் (கீரின்விச் பல்கலைகழகம்) மின்சார பொறியியல் பிரிவில் இளங்கலை பட்டம் (BSc) பெற்றார். 1965 ஆம் ஆண்டு ஆராய்ச்சி மாணவராக லண்டன் பல்கலைகழக கல்லூரியில் ஹரால்டு பார்லோ வழிகாட்டுதலில் முனைவர் (PhD) பட்டம் பெற்றார். லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் பேராசிரியர் ஹரோல்ட் பார்லோவின் கீழ் வெளிப்புற மாணவராக, இங்கிலாந்தின் ஹார்லோவில் உள்ள ஸ்டாண்டர்ட் டெலிகம்யூனிகேஷன் லேபரேட்டரிஸ் (எஸ்.டி.எல்) (டெலிபோன்களின் ஆராய்ச்சி மையம்) இல் பணிபுரிந்தார்.
1960களில் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஸ்டாண்டர்ட் டெலிகம்யூனிகேஷன் லேபரேட்டரிஸில் (எஸ்.டி.எல்), காவோ மற்றும் அவரது சக ஊழியர்கள் கண்ணாடியிழை ஒளியியலை ஒரு தொலைத் தொடர்பு ஊடகமாக உணர்ந்து கொள்வதில் தங்கள் முன்னோடிப் பணிகளைச் செய்தனர். 1963 ஆம் ஆண்டில், காவோ முதன்முதலில் ஆப்டிகல் கம்யூனிகேஷன்ஸ் ஆராய்ச்சி குழுவில் சேர்ந்தபோது, அந்த நேரத்தில் பின்னணி நிலைமை மற்றும் கிடைக்கக்கூடிய தொழில்நுட்பத்தை சுருக்கமாகவும், சம்பந்தப்பட்ட முக்கிய நபர்களை அடையாளம் காணவும் அவர் குறிப்புகள் செய்தார். இதற்காக அவர் வெவ்வேறு ஃபைபர் உற்பத்தியாளர்களிடமிருந்து மாதிரிகளை சேகரித்தார் மற்றும் மொத்த கண்ணாடிகளின் பண்புகளையும் கவனமாக ஆராய்ந்தார். காவோவின் ஆய்வு முதன்மையாக தன்னைத்தானே நம்பிக் கொண்டது. பொருட்களின் அசுத்தங்கள் அந்த இழைகளின் அதிக ஒளி இழப்புகளை ஏற்படுத்தின. காவோ எஸ்.டி.எல் இல் எலக்ட்ரோ-ஆப்டிக்ஸ் ஆராய்ச்சி குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் 1964 டிசம்பரில் எஸ்.டி.எல் இன் கண்ணாடியிழை தொலைத்தொடர்பு திட்டத்தை எடுத்துக் கொண்டார். ஏனெனில் அவரது மேற்பார்வையாளர் கார்போவியாக், ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் (யு.என்.எஸ்.டபிள்யூ) உள்ள மின் பொறியியல் பள்ளியில் தகவல் தொடர்புத் தலைவராகப் புறப்பட்டார்.
காவோ தொலைத்தொடர்புகளில் ஒளியிழைகளை உருவாக்கியதிலும், பயன்படுத்துவதிலும் முன்னோடி ஆவார். 1960களில் மின்னணு தரவை பரிமாற்றுவதற்காக சீரொளியுடன் கண்ணாடியிழைகளை இணைக்க பல்வேறு முறைகளை உருவாக்கினார். இது இணையத்தின் வளர்ச்சிக்கான அடிப்படை தேவையாக அமைந்தது. காவோ அகண்ட அலைவரிசையின் தந்தை என்று அறியப்படுகிறார். கண்ணாடியிழை ஒளியியலின் தந்தை மற்றும் கண்ணாடி இழை தகவல் தொடர்பின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார். கோவிற்கு 2009 ஆம் ஆண்டிற்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அவரது கண்ணாடி இழை தகவல் பரிமாற்றம் குறித்த ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டது. தொலைத்தொடர்புகளில் ஒளியிழைகளை உருவாக்கி பயன்படுத்திய, நோபல் பரிசு பெற்ற சர் சார்லசு குன் காவோ செப்டம்பர் 23, 2018ல் தனது 84வது அகவையில் ஆங்காங்கில் உள்ள பிராட்பரி ஹோஸ்பைஸில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
டைனமோவை கண்டுபிடித்த, நவீன மின்காந்தவியல் தொழில்நுட்பத்தின் சிறந்த சோதனையாளர், மைக்கேல் பாரடே பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 22, 1791).
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மைக்கேல் பாரடே (Michael Faraday) செப்டம்பர் 22, 1791ல் தெற்கு லண்டனிலுள்ள, இன்றைய எலிபண்ட் அண்ட் காசில் என்னுமிடத்துக்கு அருகாமையிலுள்ள நியுயிங்டன் பட்ஸ் என்னுமிடத்தில் பிறந்தார். இவருடைய குடும்பம் மிகவும் ஏழ்மைப் பட்ட நிலையில் இருந்தது. இவர் தந்தையான ஜேம்ஸ் பரடே ஒரு கொல்லர். பரடே தனது கல்வியைத் தானே பார்த்துக்கொள்ள வேண்டியதாயிற்று. தனது 14 ஆவது வயதில் புத்தகம் கட்டுபவரும், விற்பவருமாகிய ஜோர்ஜ் ரீபோ என்பவருக்குக் கீழ் தொழில் பயிலுனராகச் சேர்ந்தார். அவருடன் இருந்த ஏழு வருடங்களில், பல புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இதன் மூலம் அறிவியலிலும், குறிப்பாக மின்னியலிலும் அவருக்கு ஆர்வம் வளர்ந்தது. இருபதாவது வயதில், புகழ் பெற்ற வேதியியலாளரும், இயற்பியலாளருமாகிய ஹம்ப்ரி டேவி அவர்களுடைய விரிவுரைகளைக் கேட்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. இவ்விரிவுரைகளில் தான் எழுதிய குறிப்புக்களை டேவிக்கு, பாரடே அனுப்பினார்.
சந்தர்ப்பம் வரும்போது பரடேயைக் கவனிப்பதாகக் கூறிய டேவி, அவரைப் புத்தகம் கட்டும் தொழிலைத் தொடர்ந்தும் கைக்கொள்ளும்படி அறிவுறுத்தினார். சிறிது காலத்தில் ஒரு வேதியியற் சோதனை ஒன்றின்போது இடம்பெற்ற விபத்தில் கண்பார்வை இழந்த டேவி, மைக்கேல் பரடேயைத் தனது உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார். பின்னர் ரோயல் சொசைட்டியில் அப்போதிருந்த சோதனைச்சாலை உதவியாளர் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டபோது, அந்த வேலையை டேவி, பரடேக்குப் பெற்றுக்கொடுத்தார். அக்காலத்து வகுப்பு அடிப்படையிலான சமுதாயத்தில், பரடே ஒரு கனவானாகக் கருதப்படவில்லை. 1813 தொடக்கம் 1815 வரையிலான காலப்பகுதியில் டேவி ஐரோப்பாக் கண்டத்தில் ஒரு நீண்ட பயணத்தில் ஈடுபட்டிருந்தார். பாரடேயும், டேவியின் அறிவியல் உதவியாளராக அப்பயணத்தில் பங்கு கொண்டிருந்தார். டேவியின் மனைவியான ஜேன் அப்ரீஸ், பாரடேயை சமமாகக் கணிக்க மறுத்து, அவரை ஒரு வேலைக்காரருக்கு ஈடாகவே மதித்து வந்தார். இதனால் பெருந் துன்பமடைந்த பரடே அறிவியல் துறையிலிருந்து முற்றாகவே விலகிக்கொள்ள எண்ணினார். எனினும் மிக விரைவிலேயே பாரடே, டேவியிலும் புகழ் பெற்றவர் ஆனார்.
மைக்கேல் பாரடே ஆரம்பகாலத்தில் ஹம்ப்ரி டேவியின் உதவியாளராக பணிபுரிந்தார். பாரடே குறிப்பாக குளோரின் பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்தார். அவர் குளோரின் மற்றும் கார்பன் ஆகியவற்றை கொண்டு இரண்டு புதிய வேதியல் கலவைகளை கண்டுபிடித்தார். வாயுக்களின் பரவலைப் பற்றிய முதல் கடினமான பரிசோதனையும் அவர் நடத்தினார். இது ஜான் டால்டன் முதலில் சுட்டிக்காட்டிய ஒரு நிகழ்வு ஆகும். இந்த நிகழ்வின் முக்கியத்துவம் தாமஸ் கிரஹாம் மற்றும் ஜோசப் லோஸ்மிமிட் ஆகியோரால் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டது. பாரடே பல வாயுக்களை திரவமாக்கினார். எஃகின் உலோகக் கலவைகளை ஆய்வு செய்தார். மேலும் பல புதிய வகையான கண்ணாடிகளை ஒளியியல் நோக்கங்களுக்காக உருவாக்கினார். புன்சன் பர்னரின் ஆரம்ப வடிவத்தை பாரடே கண்டுபிடித்தார். இது உலகெங்கிலும் உள்ள அறிவியல் ஆய்வகத்தில் வெப்பத்தை உண்டாக்கும் வசதியான ஆதாரமாக நடைமுறை பயன்பாட்டில் உள்ளது. பாரடே வேதியியல் துறையில் விரிவாகப் பணியாற்றினார், பென்சீன் போன்ற இரசாயன பொருட்கள் (அவர் ஹைட்ரஜன் பைக்கார்புரத் என அழைத்தார்) மற்றும் குளோரின் போன்ற திரவ வாயுக்களை கண்டுபிடித்திருக்கிறார்.
வாயுக்களின் திரவமாக்குதல், வாயுக்கள் திரவங்களை மிக குறைந்த கொதிநிலை கொண்டிருக்கும் நீராவிகளாக மாற்றியமைக்க உதவியது மற்றும் மூலக்கூறு திரட்சியின் கருத்துக்கு இன்னும் திடமான அடிப்படையை வழங்கியது. கார்பன் மற்றும் குளோரின், C2Cl6 மற்றும் C2Cl4 ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட கலங்களின் முதல் தொகுப்பை பாரடே 1820 ஆம் ஆண்டில் வெளியிட்டார். மேலும் அடுத்த ஆண்டு தனது முடிவுகளை வெளியிட்டார். 1810 ஆம் ஆண்டில் ஹம்ப்ரி டேவினால் கண்டுபிடிக்கப்பட்ட குளோரின் க்ளேரேட் ஹைட்ரேட் தொகுப்பை பாரடே நிரூபித்தார். மின்னாற்பகுப்பின் விதிகளை கண்டுபிடிப்பதற்கும், நேர்மின், எதிர்மின், மின்முனை மற்றும் அயனி போன்ற சொற்களஞ்சியங்களை பிரபலப்படுத்துவதற்கும் பாரடே பொறுப்பாளியாக உள்ளார். மின்சாரம் மற்றும் காந்தவியல் தொடர்பான அவரது ஆராய்ச்சிகளுக்கு பாரடே புகழ்பெற்றவர். அவரது முதல் பதிவு செய்யப்பட்ட பரிசோதனை ஏழு நாணயங்களைக் கொண்ட ஒரு வோல்டாக் குவியலைக் உருவாக்கியதாகும், ஏழு வட்டு துத்தநாகத் துணுக்குகள் மற்றும் உப்பு நீரில் கரைக்கப்பட்ட ஆறு காகித துண்டுகளால் ஒன்றாக அடுக்கப்பட்டிருந்தது. இந்த குவியலோடு அவர் மக்னீசியம் சல்பேட் கலந்துவிட்டார். பாரடேயின் 1831 சோதனைகள் ஒரு ஆய்வை நிரூபிக்கின்றன.
1821 ஆம் ஆண்டில், டேனிஷ் இயற்பியலாளர் மற்றும் வேதியியலாளர் ஹான்ஸ் கிறிஸ்டியன் மின்காந்தவியல் நிகழ்வு கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே, டேவி மற்றும் பிரிட்டிஷ் விஞ்ஞானி வில்லியம் ஹைட் வொல்லஸ்டன் ஒரு மின்சார மோட்டார் வடிவமைக்க முயற்சித்தார்கள். ஆனால் அதில் தோல்வி கண்டனர். பாரடே, இருவர்களுடனான பிரச்சனையைப் பற்றி பேசினார். அவர் “மின்காந்த சுழற்சியை” என்று அழைத்த இரண்டு சாதனங்களை உருவாக்கினார். இவற்றில் ஒன்று, ஒற்றைதுருவ மோட்டார் என அழைக்கப்படும் ஒரு தொடர்ச்சியான் வட்டபாதை கொண்ட சுழற்சியை அல்லது இயக்கத்தை உருவாக்கியது. அது ஒரு காந்தத்தை வைக்கப்படும் பாதரசத்தின் ஒரு நீளத்திற்கு நீட்டிக்கப்பட்ட ஒரு வட்டத்தை சுற்றி வட்ட சுழற்சியை காந்த விசை மூலம் உருவாக்கப்பட்டது. வேதியியல் பேட்டரி மூலம் மின்னோட்டத்தை வழங்கினால், கம்பி பின்னர் காந்தத்தை சுற்றி சுழலும். இந்த சோதனைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் நவீன மின்காந்தவியல் தொழில்நுட்பத்தின் அடித்தளத்தை அமைத்தன.
பாரடே இந்த கண்டுபிடிப்பின் உற்சாகத்தில், வொல்லஸ்டன் அல்லது டேவிடனுடன் தனது கண்டுபிடிப்பை பற்றி கலந்து கொள்ளாமல் தன்னிச்சையாக முடிவுகளை வெளியிட்டார். ராயல் சொசைட்டிற்குள் ஏற்பட்ட சர்ச்சையால் டேவியுடனான அவரது உறவில் விரிசல் ஏற்பட்டது மற்றும் பல ஆண்டுகளாக மின்காந்தவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுவதைத் தடுக்க மற்ற நடவடிக்கைகளுக்கு பாரடே நியமிக்கப்பட்டிருக்கலாம். 1821 ஆம் ஆண்டில் அவரது ஆரம்ப கண்டுபிடிப்பிலிருந்து, பாரடே தனது ஆய்வகப் பணியை தொடர்ந்தார். பொருட்களின் மின்காந்த பண்புகளை ஆய்வுசெய்து தேவையான அனுபவத்தை வளர்த்துக் கொண்டார். 1824 ஆம் ஆண்டில், பாரடே, ஒரு காந்த மண்டலம் தற்போதைய ஒரு ஓட்டத்தில் மின்னோட்டத்தை ஒழுங்குபடுத்த முடியுமா என்று ஆராய ஒரு படிப்பு வட்டத்தை அமைத்தார். ஆனால் அத்தகைய உறவு எதுவும் இல்லை பல கட்ட சோதனைகள் மூலம் நிருபனமானது. மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒளி மற்றும் காந்தங்கள் மூலம் நடத்தப்பட்ட இதேபோன்ற வேலைகளைத் தொடர்ந்து இந்த சோதனையும் ஒரே மாதிரியான முடிவுகளை அளித்தது.
1832 ஆம் ஆண்டில், மின்சாரத்தின் அடிப்படைத் தன்மையைப் பற்றி ஆராயும் நோக்கில் தொடர்ச்சியான சோதனைகளை அவர் நிறைவு செய்தார். மின்னாற்பகுப்பு ஈர்ப்பு, மின்னாற்பகுப்பு, காந்தவியல் ஆகியவற்றின் நிகழ்வை தயாரிப்பதற்காக “நிலையான”, பேட்டரிகள் மற்றும் “விலங்கு மின்சாரம்” ஆகியவற்றை பாரடே பயன்படுத்தினார். அவர்து காலத்தின் விஞ்ஞான அபிப்பிராயத்திற்கு மாறாக, பல்வேறு “வகையான” மின்சக்தி மாயைகளை. அதற்குப் பதிலாக பாரடே ஒரே ஒரு “மின்சாரம்” மட்டும் இருப்பதாக முன்மொழிந்தார். மேலும் அளவு மற்றும் தீவிரத்தன்மை (தற்போதைய மற்றும் மின்னழுத்தம்) ஆகியவற்றின் மாறிவரும் மதிப்பீடுகள் வெவ்வேறு குழுக்களில் நிகழ்வுகளை உருவாக்கின. அவருடைய ஆராய்ச்சிகளின் முடிவில், பாரடே, மின்காந்தவியல் விசை கடத்தி வெற்று இடம் வரை நீட்டியது என்று முன்மொழிந்தார். இந்த யோசனை அவரது சக விஞ்ஞானிகளால் நிராகரிக்கப்பட்டது மற்றும் பின் வந்த அறிஞர்கள் அறிவியலில் அவரது கருத்தை இறுதியாக ஏற்றுக்கொண்டதை பார்க்க அப்போது பாரடே உயிரோடுடில்லை. மின்னூட்டங்கள் மற்றும் காந்தங்கள் ஆகியவற்றிலிருந்து வெளிவரும் புலன் கோடுகள் மின்சார மற்றும் காந்த புலங்களைப் பார்ப்பதற்கு வழிவகுத்தன.
பாரடே சோதனைச் சாலையில் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டார். குறிப்பாக, மின்சாரம், காந்தம் துறைகளில் இவருக்கு ஆர்வம் அதிகம். மின்சாரத்தின் விளைவுகள் குறித்து ஆராய்ந்துகொண்டே இருந்தார். ஏதோ ஒரு இடத்தில் ஷாக் அடிக்கிறதே அங்கு என்ன இருக்கிறது என்பதை ஆராய்ந்தார். மின்சாரத்தைக் கம்பியின் மூலம் அனுப்பும்போது, பக்கத்தில் இருக்கும் திசைகாட்டி காந்தம் திரும்பிவிடுகிறது என்பதையும் ஆராய்ந்து, காந்தத்தின் மூலமும் மின்சாரத்தை இயக்க முடியும் என்பதைக் கண்டறிந்தார். அவருடைய ஆய்வுகள் அனைத்தும் மின்சாரம், காந்தம் தொடர்புடையவையாகவே இருந்தன. எலக்ட்ரோ மேக்னட் துறையின் தந்தை என்று இவர் கருதப்பட்டார். மின்னணு என்று சொல்லப்படும் எலெக்ட்ரானிக்ஸ் துறையிலும் புதிய தடங்களைப் பதித்தார்.
19 ஆம் நூற்றாண்டின் எஞ்சியுள்ள பொறியியல் மற்றும் தொழில்துறைக்கு ஆதிக்கம் செலுத்திய மின்மயமான சாதனங்களின் வெற்றிகரமான வளர்ச்சிக்கான பாரடேயின் கருத்தாய்வு மாதிரியானது முக்கியமானதாக இருந்தது. இவர் மின்காந்தவியல், மின்வேதியியல் ஆகிய துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். மைக்கேல் பாரடே, உலக வரலாற்றில் மிகச் சிறந்த அறிவியலாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகின்றார். சில அறிவியல் வரலாற்று ஆய்வாளர்கள், அறிவியன் வரலாற்றின் மிகச் சிறந்த சோதனையாளராக இவரைக் குறிப்பிடுகின்றனர். இவருடைய முயற்சிகளின் காரணமாகவே மின்சாரம் பொதுவான பயன்பாட்டுக்கு உகந்த ஒன்றாக உருவானது எனலாம். மின்காந்தவியல் தொழில்நுட்பத்தின் அடித்தளத்தை அமைத்த மைக்கேல் பரடே ஆகஸ்ட் 25, 1867ல் தனது 75வது அகவையில் மிடில்செக்ஸ், இங்கிலாந்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.
செய்தி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தானில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லாமிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. திமுக ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் தலைமை வகித்து அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர் 295 பேருக்கும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 47 பேருக்கும் வழங்கினார். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தீபா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், திமுக பேரூர் செயலாளர் சத்யபிரகாஷ், துணைத் தலைவர் லதா கண்ணன், பேரூர் துணைச் செயலாளர்கள் ஸ்டாலின், கொத்தாளம் செந்தில், செல்வராணி ஜெயராமச்சந்திரன்,ஒன்றிய கவுன்சிலர்கள் ரேகா வீரபாண்டி, வசந்த கோகிலா சரவணன், திருவேடகம் ஊராட்சி மன்ற தலைவர், முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணை தலைவர் சோலை கேபிள் ராஜா, பேரூர் அவைத் தலைவர் தீர்த்தம் ராமன், மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி, சுரேஷ், மாணவரணி எஸ் ஆர் சரவணன் மேலக்கால் பன்னீர்செல்வம், 18 வது வார்டு செயலாளர் சங்கரபாண்டி, மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் சந்தான லட்சுமி, சசிகலா சக்கரவர்த்தி, பேரூர் இளைஞரணி முட்டை கடை காளி தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பாலசுப்பிரமணியம் மேலக் கால் ராஜா, மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்…
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தான் அருகே அங்கன்வாடி மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் தென்கரை ஊராட்சிக்குட்பட்ட ஊத்துக்குளி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாத நிலையில் தற்போது புதிதாக கட்டப்பட்டு அங்கன்வாடி மையம் செயல்பட தயார் நிலையில் உள்ளது. பல்வேறு காரணங்களால் அந்த அங்கன்வாடி மையம் பூட்டிய நிலையில் உள்ளது இதனால் சமுதாயக் கூடத்தில் குழந்தைகளை வைத்து பராமரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் , மாவட்ட ஆட்சியர் நேரடி விசாரணை செய்து புதிய கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் .இதனால் அதிகப்படியான குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் சேரும் சூழ்நிலை உருவாகும் என இப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மாபெரும் தமிழக் கனவு – தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி: எழுத்தாளர் திருமதி.ஆண்டாள் பிரியதர்ஷினி பங்கேற்பு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் (22.09.2023) நடைபெற்ற “மாபெரும் தமிழ் கனவு” தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி ” ‘தீட்டு தீட்டு புத்தியைத் தீட்டு” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில், எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி பேசியதாவது:-
தமிழ்நாடு அரசு, இன்றைய இளைஞர்கள் தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழ்நாட்டின் பெருமையையும் அறிந்து மேம்பட வேண்டும் என்ற நோக்கில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ என்ற இந்த சொற்பொழிவு நிகழ்ச்சியை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் மாணவ மாணவியர்களுக்காக நடத்தி வருகிறது. இது ஒரு சிறப்பான முன்னெடுப்பு. இதற்காக தமிழ்நாடு அரசை நான் மனமார பாராட்டுகிறேன். தீண்டாமை என்ற கொடிய நடைமுறை இருந்தது. கடந்த 1924-ம் ஆண்டு வைக்கத்தில் நடைபெற்ற போராட்டம் என்பது, கேரளாவின் சமூக நீதி வரலாற்றில் மகத்தான இடம் பிடித்த தீண்டாமைக்கு எதிரான போராட்டமாகும். 1924-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி வைக்கம் கோயில் தெருவில் நுழையும் சத்தியாகிரகப் போராட்டத்தில் தந்தை பெரியார் அவர்களுடன் தமிழகத்தில் இருந்து ஏராளமான தியாகிகள் சென்றுப் போராடினர். கேரளாவில் சமீபத்தில் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
கல்வி தான் எளிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் ஏணி. “கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு” என்று சொன்னார் பேரறிஞர் அண்ணா. கல்வியை ஆயுதமாகக் கொண்டவனை வீழ்த்துவது அத்தனை எளிதல்ல. தமிழ்நாடு வரலாற்றில் சில நூற்றாண்டுகள் பின்னோக்கி சென்று பார்த்தால்இ கல்வி என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்றாக இருந்ததில்லை என்பதை அறிய முடியும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், அவர் தன் கல்வி உரிமைக்காக எதிர்கொண்ட போராட்டம் ஒரு நெடிய வரலாறு. தீண்டாமை நெருங்காமை காணாமை என, அத்தனை அடக்குமுறைகளுக்கும் எதிராக நம் முன்னோர்கள் கண்ட ஒற்றை தீர்வு தான் கல்வி. இட ஒதுக்கீடு மூலம் அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வியை கொண்டு சேர்த்ததன் மூலம் சமூகநீதி எழுச்சி பெற்றது என, எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அரவிந்த் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முறை தவறிய உறவில் இருந்தவருடன் கருத்து வேறுபாடு அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட ரயில்வே காவலர்கள்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
முறை தவறிய உறவில் இருந்தவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பிள்ளைகளுடன் ரயில்வே பெண் காவலர் மதுரை அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் சாத்தூர் அருகே தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்ட ரயில்வே தலைமை காவலர். முறை தவறிய நட்பால் அடுத்தடுத்து இரு ரயில்வே போலீசார் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அருகே திருப்பாலை பகுதியை சேர்ந்த சுப்புராஜ் 40 இவரது மனைவி ஜெயலட்சுமி 37 இவர் மதுரை ரயில்வே காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெயலட்சுமி திருச்சி ரயில்வே காவல் நிலையத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது இதனால் ஜெயலட்சுமி மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது மன உளைச்சலில் இருந்த ஜெயலட்சுமி தனது மகள் பவித்ரா ( 11 )காளிமுத்து (9 ) ஆகிய இரு பிள்ளைகளுடன் நேற்று மாலை சோழவந்தான் தொகுதி தேனூர் அருகே மதுரையிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் . ரயில் மோதிய வேகத்தில் மூன்று பேரின் உடல்களும் துண்டு துண்டாக சிதறியது.சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் இறந்த மூன்று பேர்களின் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் .போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ஜெயலட்சுமிக்கு திருச்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்பட்ட நிலையில் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் மதுரை ரயில்வே காவல் நிலையத்தில் பணியாற்றிய ஜெயலட்சுமிக்கும் இதேபோல் அங்கு பணியாற்றிய தலைமை காவலர் கோவில்பட்டியை சேர்ந்த சொக்கலிங்க பாண்டியன் 50 என்பவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. இருவரும் நெருக்கமாக பழகி வந்த விவகாரம் கணவர் சுப்புராஜுக்கு தெரிய வரவே அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. தலைமை காவலர் சொக்கலிங்க பாண்டியனுக்கும் ஏற்கனவே உறவுக்கார பெண்ணுடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்து வந்த நிலையில் சொக்கலிங்க பாண்டியன் அடிக்கடி பெண்களுடன் செல்போனில் பேசி வருவதாக கூறி இவரது மனைவி தகராறில் ஈடுபட்டு விவகாரத்து பெற்று சென்று விட்டதாகவும் இதனால் தனியாக இருந்த சொக்கலிங்க பாண்டியன் ஜெயலட்சுமியுடன் நெருக்கமாக பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சொக்கலிங்க பாண்டியன் திடீரென தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரயில்வே காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சொக்கலிங்க பாண்டியன் செங்கோட்டையிலும் ஜெயலட்சுமி மதுரையிலும் இருந்ததால் இருவருக்குமான தொடர்பில் இடைவெளி அதிகரித்தது.
இந்த நிலையில் சொக்கலிங்க பாண்டியன் செங்கோட்டையில் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக அறிந்த ஜெயலட்சுமி சொக்கலிங்க பாண்டியனிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இருவரும் அடிக்கடி செல்போனில் வாக்குவாதம் செய்த நிலையில் நேற்று முன்தினம் சொக்கலிங்க பாண்டியன் மதுரையில் உள்ள ஜெயலட்சுமி வீட்டிற்கு வந்து வாக்குவாதம் செய்ததில் இருவருக்கும் கைகலப்பாகி உள்ளது. இருவருக்கும் ஏற்பட்ட சண்டையை பார்த்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் சொக்கலிங்க பாண்டியன் வீட்டிற்கு வந்து தகராறு செய்ததில் இருவருக்குமான கள்ளத்தொடர்பு பகுதி முழுவதும் தெரிய வரவே கணவனை பிரிந்தும் கள்ளக்காதலன் ஏமாற்றியதாலும் சம்பவத்தை அவமானமாக கருதிய ஜெயலட்சுமி இனி இந்த உலகத்தில் வாழ கூடாது என தனது 2 பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு ரயில் முன் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ஜெயலட்சுமி தனது இரு பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அறிந்த சொக்கலிங்க பாண்டியன் போலீஸ் விசாரணைக்கு பயந்து இன்று அதிகாலை கோவில்பட்டியில் இருந்து கார் மூலமாக சாத்தூர் அருகே சின்னக் கொல்லப்பட்டி பகுதியில் சென்னை – திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்த போது தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த விபத்தில் சொக்கலிங்க பாண்டியன் தலை துண்டிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார் உடலை கைப்பற்றிய தூத்துக்குடி ரயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சொக்கலிங்க பாண்டியன் உடலை அனுப்பி வைத்தனர். இரண்டு தற்கொலை சம்பவங்கள் குறித்தும் வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கணவனைப் பிரிந்தும், கள்ளக்காதலனும் ஏமாற்றிய நிலையில் தனது இரண்டு பிள்ளைகளுடன் ரயில்வே பெண் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்து ரயில்வே தலைமை காவலராக பணியாற்றி வரும் கள்ளக்காதலன் சொக்கலிங்க பாண்டியனும் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இரண்டு போலீசாருக்கு இடையே ஏற்பட்ட முறை தவறிய நட்புக்கு ஏதும் அறியாத இரண்டு அப்பாவி குழந்தைகளும் பலியாகிய சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியது…
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி.அதிமுக பிரமுகரை கைது செய்ய வலியுறுத்தி உசிலம்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட வர்கள் புகார்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த அதிமுக கட்சி பிரமுகரான டிக்கா சேதுராமன் மகன் ராஜ சிவப்பிரகாஷ் .இவர் புரோக்கர்கள் மூலம் கடந்த 2018ல் தமிழக முழுவதும் பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் ஒவ்வொருவரிடமும் ரூ5 லட்சம் முதல் ரூ7 லட்சம் வரை என தமிழகம் முழுவதும் 195 பேரிடம் சுமார் ரூ 7 கோடி வரை பணம் பெற்றுள்ளார்.சிலருக்கு பணி நியமன ஆணையையும் வழங்கியுள்ளார்.பணியில் சேரச்சென்ற போதுதான் அது போலியானது எனத் தெரிய வந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட 195 பேரும் மதுரை எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். போலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இன்று பணத்தை திருப்பித் தருவதாக கூறி அனைவரையும் உசிலம்பட்டி க்கு வரவழைத்துள்ளார்.அனைவரும் உசிலம்பட்டி வந்து அவர் வீட்டில் பார்த்த நிலையில் வீடு பூட்டப்பட்டிருந்த்து.
இதனால் பாதிக்கப்பட்ட அனைவரும் தங்களிடம்
மோசடி செய்த ராஜ சிவ பிரகாஷை கைது செய்ய வலியுறுத்தி உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லுவிடம் மனுக்கள் ஆக எழுதி வழங்கினார்கள்.இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக டிஎஸ்பி நல்ல உறுதியளித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லையில் செப்.23 மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்; மாவட்ட ஆட்சியர் தகவல்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
நெல்லையில் முன்னாள் முதல்வர் டாக்டர். கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர்.கா.ப. கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இது குறித்த செய்திக்குறிப்பில், திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் டாக்டர். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அரசின் திட்டங்கள் பயன் பெற வேண்டி மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் சேரன்மகாதேவி, பெரியார் அரசு மேல் நிலைப் பள்ளியில் காலை 10:00 மணி முதல் மதியம் 2.00 வரை 23.09.2023 அன்று நடைபெறவுள்ளது.
இம்முகாமில், அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் தங்களுக்கு தேவையான உதவிகள் பெற மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை- நகல், குடும்ப அட்டை – நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அட்டை – நகல் புகைப்படம்-5 ஆகியவற்றுடன் விண்ணப்பித்து பயன் பெறுமாறும் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுதிறனாளிகள் இம்முகாமில் பெறலாம் எனவும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர்.கா.ப. கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை அடுத்த கீழ் நாச்சி பட்டு எஸ் வி எம் இன்டர்நேஷனல் மெட்ரிக் பள்ளியில் உலக அமைதி தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கா. பியூலா கரோலின் தலைமை தாங்கினார்
சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் தலைவர் சி எஸ் துரை மாவட்ட துணை தலைவர் மதியழகன் முத்துக்குமரன் ஆகியோர் கலந்துகொண்டு சமாதான பறவை வானில் பறக்க விட்டு ஒன்றாக சேர்ந்து உலக அமைதி தினம் கொண்டாடினர் பின்னர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். நிகழ்வின் போது அடிப்படை பயிற்சி முகாம் மாநில தலைவர்கள் டேவிட், பவானி பாய் ,ராதிகா, வின்சலீனா, எமிலியா, ஜெயினுலாபுதீன் , சக்தி கைலாஷ் மற்றும் சாரண சாரணிய ஆசிரியர்கள் பங்கேற்றனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அனைத்து மதத்தினரையும் சமமாக மதித்தவர் ஸ்ரீ மகா பெரியவர் – எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேச்சு…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
அனைத்து மதத்தினரையும் சமமாக மதித்தவர் ஸ்ரீ மகா பெரியவர் என்று அனுஷ வைபவ விழாவில் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேசினார். மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் காஞ்சி ஸ்ரீ மகா பெரியவரின் அனுஷ வைபவத்தை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவு மதுரை எஸ் எஸ் காலனி எஸ்.எம்.கே திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார் இதில் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் ஸ்ரீ மஹா பெரியவா மகிமை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது. சும்மா இரு சொல்லறு என்ற வார்த்தை தான் அருணகிரிநாதர் வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. முருகப்பெருமான் அவர் நாக்கில் ஓம் என்ற வார்த்தை எழுதிய பிறகு தான் திருப்புகழ் எழுதினார். கௌமாரம் நெறிகளுக்கு ஆதார சுருதி அருணகிரிநாதர் மற்றும் திருப்புகழ். சன்னியாசிகளுக்கு மௌனமாக இருப்பதினால் மனவலிமை அதிகம். ஒருமுறை மகா பெரியவர் மௌன விரதம் இருந்தபோது முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி வந்து சந்திக்க முடியாமல் திரும்பிச் சென்றார். மற்றொரு முறை மௌன விரதம் இருந்தபோது சங்கரன் என்ற ராணுவ வீரர் போரில் இரு கண் பார்வையையும் இழந்தவர் வந்தார். மௌனத்தில் இருந்த போதிலும் சங்கரா என்று பெயர் சொல்லி அழைத்தார். பிரசாதம் வழங்கினார். பக்கத்தில் இருப்பவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது ஒருபோதும் மௌனத்திலிருந்து பெரியவர் பேசியதில்லையே இப்போது மட்டும் ஏன் பேசினார் என்று கேள்வி எழுந்தது. அப்போது அவர் சொன்னார் தேசத்திற்காக இரண்டு கண்களையும் இழந்தவர். என் சத்தம் கேட்டால் தான் நான் இருக்கிறேன் என்று அவருக்கு தெரியும். அதனால் தான் என் மௌனத்தை கலைத்தேன் என்றார். ஆச்சாரம் என்ற வார்த்தைக்கு நெறிப்பாடு என்று பொருள். அதை முறைப்படி கடைப்பிடித்தவர் மகா பெரியவர். உடல் தூய்மை நீரால் அமையும் அகத்தூய்மை வாய்மையால் காணப்படும் என்றார் வள்ளுவர். எல்லா சமூகத்தையும் எல்லா மதத்தினரையும் இஸ்லாமியர் கிறிஸ்தவர் என்று பாகுபாடு பார்க்காமல் சமமாக மதித்தவர் ஸ்ரீ மகா பெரியவர். ஒரு முறை முன்னாள் நீதிபதி மு.மு. இஸ்மாயில் மடத்திற்கு வந்தபோது அவருக்கு சந்தனத்தை பிரசாதமாக வழங்கினார். அப்போது அவர் சொன்னது கடவுள் இருந்தால் இவரை போலத்தான் இருப்பார் என்றார். திருவாரூரில் ஒரு நாவிதர் பெரியவரிடம் மனசு கஷ்டமாக இருக்கு நிம்மதி இல்லை என்று சொன்னபோது அவரை ஆசீர்வதித்தார். அவர் கேட்டுக்கொண்டபடி தன் பாத ரட்சையை வழங்கினார். அதை தூக்கி தலையில் வைத்துக் கொண்டார். மறுமுறை அதே ஊருக்கு மகா பெரியவர் வந்தபோது அதே நாவிதர் அவர் முன்னாள் வந்து எப்படி இருக்கிறாய் என்று கேட்டபோது சாமி நீ உன் கட்டையை கொடுத்த இந்த கட்டை நன்றாக இருக்கிறது என்று சிரிப்போடு சொன்னார். இறைவனிடம் நாம் பரிபூரணமாக சரணடைந்து விட வேண்டும் அவர் நம்மை பார்த்துக் கொள்வார் காஞ்சி ஸ்ரீ மகா பெரியவர் வாழ்வில் தான் சொன்னதை வாழ்க்கையில் கடைபிடித்தார். நம் உச்சத்திற்கு வர வேண்டும் என்றால் தினமும் தாய் தந்தையை வணங்க வேண்டும் ஏதேனும் ஒரு உதவியை தினமும் செய்ய வேண்டும் என்கிறார் ஸ்ரீ மகா பெரியவர். தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு உண்டு என்றார். இவ்வாறு எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேசினார். முன்னதாக ஸ்ரீ மஹா பெரியவர் விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமத்தில் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை காடுபட்டி போலீஸார் விசாரணை..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை மாவட்டம்சோழவந்தான் அருகே கோவில்குருவித்துறை கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் சுந்தரபாண்டியன் வயது 25.இவர் சோழவந்தான் பகுதியில் சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறார் இவர் தனக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோரை வற்புறுத்தியதாகவும் அதற்கு சிறிது காலம் செல்லட்டும் என பெற்றோர்கள் கூறியதாகவும் இதனால் விரத்தி அடைந்த சுந்தர பாண்டியன் நேற்று இரவு கோவில் குருவித்துறையில் தோட்டத்தில் உள்ளமரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுந்தரபாண்டியன் உடலை மீட்டு உடல் கூறு ஆய்வுகாக சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து காடுபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இடைகால் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இடைகால் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடந்தது. இதில் ஊட்டச்சத்தின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து பள்ளி மாணவ மாணவிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது. தென்காசி மாவட்ட மாவட்ட ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன் உத்தரவின் படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் அங்கன்வாடி மற்றும் ஊட்டச்சத்து மையங்களில் தேசிய மாத ஊட்டச்சத்து விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஒன்றியம் இடைகால் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தேசிய ஊட்ட சத்து மாத விழா நடைபெற்றது. திருநெல்வேலி மனித உரிமை கல்வி மற்றும் காப்பு களம், குழந்தை உரிமையும் நீங்களும் பெங்களூரு என்ற நிறுவனமும் இணைந்து நடத்தப்பட்ட இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை ஜோதிலட்சுமி தலைமை தாங்கினார். பள்ளி ஆசிரியைகள் குருலட்சுமி, சீதாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனித உரிமை கல்வி மற்றும் காப்பு களம் பணியாளர் வேலம்மாள் அனைவரையும் வரவேற்று பேசினார். புஷ்பா ஊட்ட சத்து அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து பேசினார். அப்போது, குழந்தைகள் சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், தானியங்கள், பருப்பு வகைகள் சாப்பிட வேண்டும், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட துரித உணவு வகைகளை வாங்கி சாப்பிடக் கூடாது. ஊட்டச்சத்து குறைபாட்டை சரி செய்ய கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய், பொறி உருண்டை, பேரிச்சம் பழம், நில கடலை ஆகியவைகளை சாப்பிட வேண்டும். என்று குறிப்பிட்டார். விழாவில் பள்ளியின் ஆசிரிய ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், சத்துணவு பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மனித உரிமை கல்வி மற்றும் காப்பு களம் பணியாளர் தங்கம் நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புளியங்குடி காயிதே மில்லத் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான விலையில்லா மிதிவண்டிகளை டாக்டர் சதன் திருமலைக்குமார் எம்எல்ஏ வழங்கினார்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தென்காசி மாவட்டம் புளியங்குடி காயிதே மில்லத் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடந்தது. வாசுதேவநல்லூர் எம்எல்ஏ டாக்டர். சதன் திருமலைக்குமார் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
புளியங்குடி காயிதே மில்லத் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா மேலப்பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டி தலைவர் பொறியாளர் பி.என் எம் மௌலல் கௌமி தலைமையில் நடந்தது. ஜமாஅத் கமிட்டி உதவி தலைவர் எ. சாகுல் ஹமீது, நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் எம்.காலிதீன், எம். முகம்மது உசேன், முகம்மது முகைதீன் ஆலிம், இளைஞர் மன்றம் நிஜாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை சபூர் பாத்திமா அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலை குமார் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி வாழ்த்தி பேசினார். விழாவில் முன்னாள் தலைமை ஆசிரியை சுபைதா பானு, திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் பத்திரம் எஸ்.எம். சாகுல் ஹமீது, மதிமுக மாவட்ட பொருளாளர் எம். அலாவுதீன், உதவி தலைமை ஆசிரியை சகிலா பானு, மதிமுக நகரச் செயலாளர் ஜாஹிர் உசேன், மணிச்சுடர் சாகுல் ஹமீது உட்பட பலர் பங்கேற்றனர். முடிவில் ஜமாஅத் கமிட்டி செயலாளர் ஏ. அபுதாகிர் நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை வேளையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இன்று காலை முதலே வெயில் வாட்டி வந்தது.இந்நிலையில் மாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சோழவந்தான் ரயில் நிலையம் பேருந்து நிலையம் மற்றும்அருகில் உள்ள மேலக்கால் திருவேடகம் முள்ளி பள்ளம், சமயநல்லூர், தேனூர்,பரவை, விளாங்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
இதனால், சாலைகளில் மழை நீர் ஓடியது. காலையில் வெயில் வாட்டி வந்த போதும் தற்போது பெய்துள்ள இந்த மழையின் காரணமாக குளிர்ந்த சூழல் நிலவுகிறது. இருந்தாலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
மதுரை நகரில், அண்ணாநகர் வீரவாஞ்சி தெரு, காதர் மொய்தீன் தெரு, அன்பு மலர் தெரு, சித்திவிநாயகர் கோயில் தெருக்கள் குளம் போல மழைநீர் சாக்கடை நீருடன் தேங்கியுள்ளன.
இதை மதுரை மாநகராட்சி பொறியாளர்கள் சீரமைக்க, இப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம், செப்.22- இராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொண்டுள்ள பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார். தொழில்கள் மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை ஆணையரும், மாவட்ட கணிப்பாய்வு அலுவலருமான அர்ச்சனா பட்நாயக் தலைமை வகித்தார். வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாயத்திற்கு வாடகைக்கு வழங்கப்படும் டிராக்டர், உபகரணங்கள், அதன் மூலம் பயனடைந்த விவசாயிகள், கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சி திட்டத்தால் பயனடைந்த விவசாயிகள், உழவன் செயலி பயன்பாடு குறித்து தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
ஊரகவளர்ச்சி துறை மூலம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்ட பணிகள், முதல்வரின் கிராம சாலைகள் திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார். கிராமப்புறங்களில் குடிநீர் வழங்கல் முறைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
வடகிழக்கு பருவமழையையொட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பள்ளிகளில் பயன்பாடற்ற நிலையில் உள்ள கட்டடங்களை அகற்றவும், மராமத்து பணிகளுக்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் ஊட்டச்சத்து உறுதி செய் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர் கல்வி உறுதி திட்ட செயல்பாடு குறித்து கேட்டறிந்தார் .
மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு , உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் நலிவுற்ற திமுக நிர்வாகிக்கு நிதியுதவி; தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வழங்கினார்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தென்காசி மாவட்டத்தில் நலிவுற்ற திமுக நிர்வாகிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே. ஜெயபாலன் ரூ. 10,000 நிதி உதவி வழங்கினார். தென்காசி தெற்கு மாவட்டம், கீழப்பாவூர் கிழக்கு ஒன்றியம் ஆண்டிப்பட்டி ஊராட்சியை சேர்ந்த திமுக நிர்வாகி சக்தி. நலிவுற்ற நிலையில் உள்ள சக்தியின் குடும்பத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வே. ஜெயபாலன் ரூபாய் 10,000 நிதி உதவி வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச் செல்வி போஸ், தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் கனகராஜ் முத்துப்பாண்டியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சீதாராமன், கீழப்பாவூர் பேரூராட்சி கவுன்சிலர் பொன் செல்வன், சுரண்டை ஆறுமுகசாமி, மாவட்ட அணி அமைப்பாளர் முத்து ராமலிங்கம் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.