சத்திரபட்டி அருகே காரும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து… ஒருவர் பலி…. 4பேர் படுகாயம்…

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டி அருகே பழனி சாலையில் காரும் பழனியிலிருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த 4 பேர் […]

உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து….

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சந்தை பகுதிக்குள் அமைந்துள்ளது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். இந்த அலுவலகம் அருகே நீண்ட நாட்களாக குப்பை அகற்றப்படாமல் இருப்பதால் குப்பை மேடாக காட்சியளித்து வந்தது. இந்நிலையில் அந்த குப்பை மேட்டில் […]

தாய் பேச்சை மகன் கேட்காததால் மனம் வேதனை அடைந்த தாய் பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை..

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த அகரம் காந்தி நகரை சேர்ந்த சரவணன் மனைவி முனியம்மாள் வயது 35 இவர்களுக்கு ஒரு மகன் வேலு என்பவர் கம்மாள பட்டியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 […]

மாணவர்களை காவு வாங்க காத்திருக்கும் சாத்தான் குளம் அரசு பள்ளி எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் அச்சம்..

தூத்துக்குடி மாவட்டம் , சாத்தான்குளம் தாலுகா, புத்தன்தருவை ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர், இந்த பள்ளி  கட்டிடம்  மிகவும் மோசமான நிலையில் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து […]

மாநில அளவிலான வாலிபால் போட்டியில் சென்னை, மதுரை, தூத்துக்குடி அணிகள் சாம்பியன்..

கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரம் படர்ந்தபுளி கிராமத்தில் ஆண்டுதோறும் அங்குள்ள லியோ கைப்பந்து கழகம் மூலமாக மாநில அளவிலான வாலிபால் போட்டிகள் நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் 16வது ஆண்டு கனரா வங்கி சுழற்கோப்பைக்கான மாநில […]

மதுரையில் பட்டறை தொழிலாளி விபத்தில் பலி..

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 45) லேத் பட்டறை தொழிலாளியான இவர் அவனியாபுரம் கற்பகநகரில் இருந்து வில்லாபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த டிப்பர் […]

சேதுக்கரையில் நகரும் தன்மை கொண்ட மாடி வீடு சாதித்துக்காட்டிய மனிதர்…

திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட சேதுக்கரை ஊராட்சி மேலப்புதுக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் எஸ்.எம்.சாகுல் ஹமீது 67, இவர் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாடுகளில் கட்டடத்திற்கு கான்கிரீட் பம்பு செய்யும் பம்ப் ஆப்ரேட்டராக வேலை செய்து […]

இணையதள செய்தி எதிரொலி நடவடிக்கையில் இறங்கிய மாநகராட்சி அதிகாரிகள்…

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் மத்திய நுகர் பொருள் சேமிப்பு கிடங்கு அருகே கடந்த ஆறு மாதங்களாக பல ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகி போய்க்கொண்டிருக்கிறது என்று நமது கீழை நியூஸ் தளத்தில் நேற்று (19/05/2019) […]

இராமநாதபுரம் அருகே இரு கிராமங்களுக்கு இடையே மோதல் போலீசாரின் பாரபட்ச நடவடிக்கையை கண்டித்து மறியல்..

இராமநாதபுரம் அருகே பாப்பாக்குடி, கவரங்குளம் கிராமங்கள் உள்ளன. இவ்விரு கிராமங்களை சேர்ந்த சில வாலிபர்களுக்கு இடையே கடந்த இரண்டு நாட்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது நேற்று முன் தினம் இரவு மோதலாக மாறியது. […]

திருப்பதி திருமலையில் தமிழக துணை முதல்வர்…

திருப்பதி திருமலையில் தமிழக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் சுவாமி தரிசனம் செய்தார்.  தமிழகத்தில் இடைத்தேர்தல் முடிந்ததையொட்டி இன்று (20/05/2019)  காலை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திருமலையில் உள்ள வெங்கடாசலபதியை தரிசனம் செய்தார். […]

தேனி ஆட்சியர் அலுவலகத்தை மறைத்து நிறுத்தப்படும் இரண்டு சக்கர வாகனங்கள்… எச்சரிக்கையை கண்டு கொள்ளாத வாகன ஓட்டிகள்..

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் இரு சக்கர வாகனம் நிறுத்த கூடாது என்று அறிவிப்பு பலகை கிழிந்த நிலையில் தொங்குவதை காண முடியும். ஆனால் அந்த அறிவிப்பு பலகை ஊனமடைந்த நிலையில் இருப்பதால் […]

தங்கத்தை பசையாக்கி உடலில் மறைத்து கடத்தல்..

திருச்சி விமான நிலையத்தில், இலங்கையில் இருந்து வந்த விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ராமநாதபுரத்தை சேர்ந்த நாகூர், அராபத் மற்றும் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்த ஹக்கீம் ஆகியோர் […]

உலமாக்களே உஷார்.! நோன்பு கால மோசடி… பள்ளிவாசல்களையும், ஆலிம் களையும் ஏமாற்றி வரும் மர்ம நபர் ஒரு உஷார் ரிப்போர்ட்.!

இந்த படத்தில் காணப்படும் நபர் தனது பெயரை அப்துல் காதர் என்றும் சவூதியில் தான் ஒரு பிரபல பால் தயாரிப்பு  நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக கூறிக்கொண்டு மோசடி செய்து வருகிறான் என ஒரு […]

நண்பரின் விசேஷ நிகழ்ச்சிக்கு வந்தவர் குடிபோதையில் மண்டப மாடியிலிருந்து தவறி விழுந்து பலி..

மதுரை அண்ணா நகரைச் சேர்ந்தவர் பால்பாண்டி மகன் பாண்டிக் கண்ணன் (25). இவர் தனது நண்பரின் காதணி விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஏழுமலை அருகே கிராமத்திற்கு வந்துள்ளார். இரவில் விசேஷ நிகழ்ச்சி நடைபெறும் […]

வரத்து குறைவால் கிலோ ரூ 250க்கு விற்கப்படும் எலுமிச்சை பழங்கள்..

மதுரை மாவட்டம் பேரையூர் சந்தையில் எலுமிச்சைப் பழங்கள் வரத்து மிகவும் குறைந்ததால் வியாபாரிகள் எலுமிச்சைப் பழங்களின் விலையை உயர்த்தியுள்ளனர். தற்போது வெயில் வாட்டி எடுத்துவரும் நிலையில் தாகத்தை தீர்ப்பதற்கும், ஜூஸ் போடுவதற்கும் எலுமிச்சைப் பழம் […]

கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக H. ராஜா மீது புகார்…

கீழக்கரையில் இந்து, முஸ்லிம், கிருஸ்தவர்கள் அண்ணன், தம்பிகளாக மாமன், மச்சான்களாக சமூக ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் நிலையில் கடந்த 15.5.2019 அன்று கொடைக்கானலில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பாஜக தேசிய செயலாளர் H.ராஜா கீழக்கரையில் உள்ள […]

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமலஹாசனுக்கு முன் ஜாமீன்..

சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமலஹாசனுக்கு முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமலஹாசன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன் […]

இராமநாதபுரம் பகுதியில் வளர்ந்து வரும் ஆதண்டை வகை மூலிகை தாவரங்கள்..

இராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வறட்சியும், சீமைக் கருவேல மரங்களும் தான் நம் நினைவுக்கு வரும். இங்கு மருத்துவக் குணம் கொண்ட பல மூலிகைத் தாவரங்களும் இயற்கையாகவே வளர்ந்து வருகின்றன. அதிலும் இவை வரலாற்றுச் சிறப்புமிக்க […]

கருத்துக்கணிப்பு என்ற பெயரில் பணநாயகத்தை நோக்கி நகர்கிறதா பிரபல ஊடகங்கள்??..எழும் சந்தேகங்கள்..

பிரபல ஊடகங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பிரதமரை தேர்ந்தெடுக்கிறதா? என்ற கேள்வி பொதுமக்களிடத்தில் எழுந்துள்ளது. ஜனநாயகத்தை விடுத்து பணநாயகத்தை நோக்கி பிரபல ஊடகங்கள் செல்வதாக சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். கடந்த கால பிரபல ஊடகங்களின் […]

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 74.17 சதவீதம் வாக்கு பதிவு..

இன்று (19/05/2019) நடைபெற்ற திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 74.17 சதவீதம் வாக்கு பதிவு நடந்துள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 74.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன இதில்  மொத்த வாக்காளர்கள் 3 லட்சத்து 4 ஆயிரத்து 478. ஆனால் இடைத்தேர்தலில் […]