இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் நயினா முகமது. இவரது மகன் உதுமான் அலி, 32. தமிழக மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், மண்டபம் ஒன்றியம் வேதாளை சமத்துவபுரம் அருகே ஒரு வீட்டில் ஏற்பட்ட பழுதை சரி செய்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
உதுமான் அலி குடும்பத்திற்கு அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
You must be logged in to post a comment.