ராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் நடைபெறுவதையொட்டி அதிகாலை முதல் வாக்காளர் தங்கள் வாக்குகளை செலுத்துவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அதன்படி இந்த நிலையில் 12 மணி நிலவரப்படி 25% வாக்கு பதிவாகியுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அதிமுகவின் பாராளுமன்ற வேட்பாளர் ஜெயபெருமாள் ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டார் மேலும் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெண்கள் வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டு பின்னர் அங்கு உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் எவ்வளவு சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என்பது கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பார்வையிட்டு ராமேஸ்வரம் செல்ல இருக்கிறார். அதிமுக ராமநாதபுரம் நகர் செயலாளர் பால்பாண்டி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Category:
மாவட்ட செய்திகள்
பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கான தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆயிரக்கணக்கான பேருந்துகளை போக்குவரத்துத்துறை இயக்கி வருகிறது.இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லாத சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.எழும்பூரில் இன்று இரவு 10.05க்கு கிளம்பி காலை 6.30க்கு திருச்சி சென்றடைகிறது. மறுமார்க்கமாக நாளை மாலை 6.30க்கு கிளம்பி நள்ளிரவு 2.45க்கு தாம்பரம் வந்தடைகிறது.இதற்கு முன்னதாக சென்னை தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது..சென்னை தாம்பரத்தில் இருந்து இந்த சிறப்பு ரெயில் (06007) இன்றிரவு 9.50 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக நாளை இரவு 7 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில் (06008) இயக்கப்படுகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நாளை (19/04/2024) மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் வரிசை நிலையை அறிந்து கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது..
by Askar
written by Askar
நாளை மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் வரிசை நிலையை அறிந்து கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது..
வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வருவதற்கு முன்பே வாக்குச்சாவடியின் வரிசை நிலையை https://erolls.tn.gov.in/Queue/ என்ற இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய சரகம், யா.ஒத்தக்கடை மிராஸ் காம்ப்ளக்ஸில் உள்ள லட்சுமி கிளினிக்கில், சுகாதாரத் துறை இணை இயக்குநர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.இதனைத் தொடர்ந்து அபிஜித் பிஸ்வாஷ் (40)த/பெ அம்பிக் பிசஷ்வாஷ் என்பவர் பன்னிரண்டாம் வகுப்பு மட்டுமே முடித்துவிட்டு எவ்வித கல்வித் தகுதியும் இல்லாமல் ஆங்கில மருத்துவம் செய்ததாக தகவல் தெரிய வந்துள்ளது. இதில், இன்று காலை 12.30 மணிக்கு யா.ஒத்தக்கடை காவல் நிலையத்தில் சுகாதார துறை சார்பில் ஒப்படைத்துள்ளனர். இது சம்பந்தமாக யா.ஒத்தக்கடை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பச்சிளம் குழந்தைகளின் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி !
by Baker BAker
written by Baker BAker
சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் மதுரை- ஆனையூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து நடத்திய பச்சிளம் குழந்தைகளின் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆனையூரில் உள்ள சுகாதார மையத்தில் நடத்தப்பட்டது இதில் நிகழ்ச்சியின் ஆரம்பமாக மதுரை சில்ட்ரன் டிரஸ்ட் இன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக சாத்தி தொண்டு நிறுவனத்தின் மதுரை மாவட்ட திட்ட அலுவலர் ரமேஷ் தலைமை ஏற்று சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக கர்ப்பிணி பெண்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் குழந்தைகளுக்கு போடப்பட வேண்டிய தடுப்பூசிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது செவிலியர் சொல்லும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தடுப்பூசி அட்டவணை அட்டைகளை தவறாமல் எடுத்து வர வேண்டும் என்றும் அதனை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் சத்தான உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார செவிலியர் சித்ரா நன்றியுரை வழங்கினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
போராட்டத்தை கைவிட்ட ஆணைகுடி கிராம மக்கள் ! தேர்தலில் வாக்களிப்பதாக உத்தரவாதம் !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் ஆணைகுடி கிராமத்தில் உப்பளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் கிராம பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவிப்பு தொடர்ந்து இன்று கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் நேரடியாக கிராமங்களுக்கு சென்று கிராம பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து இருதரப்பின் பேச்சு வார்த்தையில் சுமுகமான தீர்வு ஏற்பட்டதால் போராட்டங்களை கைவிட்டனர். மேலும் பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் முழுமையாக வாக்களிப்போம் என்று தெரிவித்தனர் . இதில் வருவாய் துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊர் மக்கள் உடன் இருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உச்சிப்புள்ளியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனி ஆதரித்து ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் தீவிர வாக்கு சேகரிப்பு !
by Baker BAker
written by Baker BAker
இன்னும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கான கால அவகாசமாக ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் அதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் உச்சிப்புளி பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார் மேலும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி நானூறு ரூபாய் சம்பள உயர்வோடு வேலை வழங்கப்படும் பெண்களுக்கு ஆண்டுதோறும் ஒரு லட்சம் ரூபாய் மஹாலட்சுமி திட்டத்தில் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை சுட்டிக்காட்டி அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு !
by Baker BAker
written by Baker BAker
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக போட்டியிடும் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இன்னும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கான கால அவகாசமாக ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் அதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாக மண்டபம் ஒன்றிய செயலாளர் டி ஜி எஸ் அழகர்சாமி பிஜேபி ஆத்மா கார்த்தி பிஜேபி முருகன் ஆகியோர் இணைந்து ராமநாதபுரம் பாரதி நகரில் தொடங்கி அம்மா பூங்கா வழியாக வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி மேளதாளத்தோடு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடற்கரை பீச் பார்க் லைட்ஹவுஸ் அருகில் கீழக்கரை இளைஞர்கள் ஒன்றிணைந்து போதை புழக்கம் இல்லாத கீழக்கரையை உருவாக்கிட கீழை கிழக்குநகர் பொதுநல சங்கம் என்ற பெயரில் புதிதாக உருவாக்கியுள்ளனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் எம் கே இ உமர் கலந்து கொண்டு பேசுகையில் . இன்றைய காலகட்டத்தில் போதை பொருள் பழக்கம் அதிகரித்து வருவதாகவும் கீழக்கரையில் இதன் மூலம் குற்ற செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுவதாக தெரிகிறது. கீழக்கரை ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஊர் இந்த ஊரில் இதுபோன்ற இளைஞர்கள் போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையாக இருப்பது வருத்தம் அளிக்கிறது என்றார்.இந்த வேலையில் இது போன்ற இளைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியது வரவேற்கத்தக்கது மேலும் இச்சங்கத்தின் மூலம் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மற்றும் பள்ளி நிர்வாக குழுவின் மூலம் இணைந்து போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும் மாதம் ஒருமுறை விழிப்புணர் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும் போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகளை துண்டு பிரசுரம் மூலம் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் முறையாக இதை வழிநடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கீழக்கரை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் வீதி வீதியாக சென்று ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளராக கே.நவாஸ்கனிக்கு ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம் தலைமையில் திமுக கட்சியினர் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்து ஏணி சின்னத்திற்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரித்தனர். ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் பின்புறம் வண்டிக்கார் தெரு , வெத்தல கார தெரு , சவேரியார் தெரு கொண்ட இடங்களில் வாக்கு சேகரித்தனர். அப்பகுதி பொதுமக்கள் ஆதரவை தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆணைகுடி கிராம பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் ஆணைகுடி கிராமத்தில் உப்பளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் கிராம பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் நடக்க இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் கருப்புக் கொடி போராட்டத்தை நடத்தியதால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது . கிராம பொதுமக்கள் தெரிவிக்கையில் உப்பளம் அமைப்பதற்கு பலமுறை போராடியும்அனைத்து பணிகளையும் தொடங்கி வரும் நிலையில் பலமுறை போராட்டம் நடத்தி வருகின்றோம் ஆனால் மாவட்ட ஆட்சியர் எங்கள் கோரிக்கையை ஏற்க வில்லையென்றும் எங்கள் ஊருக்கு வந்து பார்வை இடவும் இல்லை என்றும் தெரிவித்தனர். . மேலும் இந்த உப்பளம் அமைவதால் ஆணைகுடி, களரி, சாம்பகுளம் சுமைதாங்கி உட்பட் சுற்றியுள்ள கிராமத்தில் விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டு குடிநீர் ஆதாரங்கள் பாலாகிவிடும் என்று கிராம மக்கள் ஆதங்கத்துடன் கருப்பு கொடியுடன் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம் என்றும் நாடாளுமன்ற தேர்தலில் புறக்கணிப்போம் என்றும் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய் துறையினர் , காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் அரசு பேருந்தில் பயணம் செய்த பயனிடம் 10 லட்சம் பணம் பறிமுதல்
by Baker BAker
written by Baker BAker
பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுப்பதற்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே குஞ்சார் வலசை சோதனை சாவடியில் பறக்கும் படை அதிகாரி ராமமூர்த்தி தலைமையில் தீவிர சோதனை ஈடுபட்ட போது திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்தில் அழகன் குளம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் கணக்கில் வராத 10 லட்சம் பணம் எடுத்துச் சென்றதை பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சக்திவேலிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அந்த பணம் மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரத்தில் எஸ்சி, எஸ்டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள் விழா !
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே மத்திய, மாநில எஸ்சி.எஸ்டி அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை பாரதரத்னா பாபாசாகிப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் அவர்களின் 134 வது பிறந்தநாள் விழா மாவட்ட தலைவர் கர்ணன், மாவட்ட செயலாளர் சேக்கிழார் ஆகியோர் தலைமையில் டாக்டர் அம்பேத்கார் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து வருகை புரிந்த பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர் பாலச்சந்திரன்,மாவட்ட பொருளாளர் பாபு, செய்தி தொடர்பாளர் தங்கவேல்,மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர். பிரசாத் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் சமூக சேவகருமான டாக்டர்.மாடசாமி மற்றும் இதர அமைப்பு பொறுப்பாளர்களும், அனைத்து கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டு டாக்டர். அம்பேத்கார் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து பிரதமர் மோடி புரிந்துகொள்ளவில்லை: நீலகிரியில் ராகுல் காந்தி பேச்சு..
by Askar
written by Askar
நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து பிரதமர் மோடி புரிந்துகொள்ளவில்லை: நீலகிரியில் ராகுல் காந்தி பேச்சு..
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தான் போட்டியிடும் வயநாடு தொகுதியில் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். மைசூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி பந்தலூர் அருகே தரையிறங்கினார். அப்போது ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனை தொடர்ந்து நீலகிரி தொகுதிக்குட்பட்ட கூடலூரில் தேயிலை தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றிய ராகுல் காந்தி, நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து பிரதமர் மோடி புரிந்துகொள்ளவில்லை.
ஜனநாயகத்தை காக்க மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஒரே நாடு, ஒரே தலைவர் என தவறாக வழிநடத்தப் பார்க்கிறார் பிரதமர் மோடி. பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ஏழை மக்களுக்கு என எந்த திட்டமும் இல்லை. இந்தியாவில் பல மொழிகள் உள்ளன; இந்தியாவின் இயல்பை பிரதமர் புரிந்து கொள்ளவில்லை. பன்முகத்தன்மை மற்றும் சமூகநீதியை அழித்து, ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளைப் புகுத்த நினைக்கிறார்கள் இவ்வாறு கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஐபிஎல் நேற்றைய கிரிக்கெட் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி சென்னை அபார வெற்றி..
by Askar
written by Askar
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்று நடைபெற்ற 29-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ருதுராஜ் 69 ரன்களும் துபே 66 ரன்களும் எடுத்தனர். மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதனையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித்- இஷான் கிஷன் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் குவித்தது. இந்த ஜோடியை பத்திரனா பிரித்தார். இஷான் கிஷன் 23 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த சூர்யகுமார் அந்த ஓவரிலேயே 0 ரன்னில் வெளியேறினார்.இதனையடுத்து ரோகித் – திலக் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய ரோகித் 30 பந்தில் அரை சதம் விளாசினார். சிறப்பாக விளையாடி திலக் 30 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து வந்த டிம் டேவிட் 13, ஷெப்பர்ட் 1 என வெளியேறினர். தனி ஆளாக போராடிய ரோகித் சதம் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.இறுதியில் மும்பை அணி 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி தரப்பில் பத்திரனா 4 விக்கெட்டை வீழ்த்தினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நாடாளுமன்ற தேர்தல் 2024: அரசியல் கட்சிகளின் தலைவர்கள் யார் யார் எங்கெங்கு இன்றைய பிரசாரம்..
by Askar
written by Askar
நாடாளுமன்ற தேர்தல் 2024: அரசியல் கட்சிகளின் தலைவர்கள் யார் யார் எங்கெங்கு இன்றைய பிரசாரம்..
- பிரதமர் நரேந்திர மோடி-நெல்லை.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் – திருவள்ளூர், வடசென்னை.
- அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே – புதுச்சேரி, கடலூர்.
- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி -மத்திய சென்னை, தென்சென்னை
- அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி, தினகரன் -போடி
- தி.மு.க.இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் – நீலகிரி.
- தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.-தூத்துக்குடி.
- ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. ஈரோடு, திருப்பூர்.
- பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. -சிதம்பரம், மயிலாடுதுறை.
- த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. – தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் -திண்டுக்கல்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் அ.சவுந்தரராஜன்- மதுரை.
- இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்- வத்திராயிருப்பு, சேத்தூர், புளியங்குடி, சிவகாசி.
- விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி.- சிதம்பரம்.
- திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி – மயிலாடுதுறை, நாகப்பட்டினம்.
- தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் – மதுரை,தென்காசி,விருதுநகர்.
- மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் – கோவை.
- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்-சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு, வடலூர், காடாம்புலியூர், கடலூர்.
- மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி-ஸ்ரீபெரும்புதூர், மத்திய சென்னை.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆவினை குறிப்பிட்ட மதம் சார்ந்த நிறுவனமாக மாற்றத் துடிக்கும் வீணர் கூட்டம்!பால் முகவர்கள் சங்கம் கடும் கண்டனம்..
by Askar
written by Askar
ஆவினை குறிப்பிட்ட மதம் சார்ந்த நிறுவனமாக மாற்றத் துடிக்கும் வீணர் கூட்டம்!
பால் முகவர்கள் சங்கம் கடும் கண்டனம்..
இது சம்பந்தமாக சு.ஆ.பொன்னுசாமி தமது கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது;
ஆவின் பால் பாக்கெட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகையையொட்டி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்ட ஆவின் நிர்வாகம் இன்று தமிழ்ப் புத்தாண்டு, சித்திரைத் திருநாளுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிடாததை வைத்து ஒரு கும்பல் மத ரீதியாக சமூக வலைதளங்களில் தாக்குதல் தொடுத்து வருகிறது.
ஆவின் பால் பாக்கெட்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகள், குடியரசு தினம், சுதந்திர தினம், தேசிய பால் தினம் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த தேசிய தினங்கள் என வாழ்த்துச் செய்தி வெளியிடுவதை மட்டுமே ஆவின் நிர்வாகம் வழக்கமாக கொண்டிருந்தது.
ஆனால் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மேற்கண்ட முக்கியத்துவம் வாய்ந்த தேசிய தினங்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிடாமல் திட்டமிட்டு புறக்கணித்து வருவதோடு புதிதாக ஆயுத பூஜை, விஜய தசமி உள்ளிட்ட மதம் சார்ந்த பண்டிகைகளுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிடும் புதிய நடைமுறையை திராவிட மாடல் அரசும், ஆவின் நிர்வாகமும் அமுல்படுத்தி, செயல்படுத்தியும் வருகின்றன.
முக்கியத்துவம் வாய்ந்த தேசிய தினங்களுக்கு ஆவின் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்துச் செய்தி வெளியிடாமல் புறக்கணித்த ஆவின் நிர்வாகத்திற்கும், திராவிட மாடல் அரசுக்கும் எதிராக இதுவரை பொங்காத அந்த வீணாய் போன வீணர் கூட்டம் தமிழ்ப் புத்தாண்டு என்று வாழ்த்துச் செய்தி வெளியிடவில்லை என்றாலும் கூட பரவாயில்லை சித்திரைத் திருநாள் என வாழ்த்துச் செய்தி வெளியிட்டிருக்க வேண்டாமா..?, இது இந்துக்களை புறக்கணிக்கும் செயலல்லவா..? என சமூக வலைதளங்களில் கம்பு சுற்றி வருகிறது.
ஆவின் நிறுவனம் என்பது தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமாக இருந்தாலும் அது ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு தாய் பிள்ளைகளாக பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்களால் செயல்பட்டு வரும் மதச்சார்பற்ற நிறுவனமாகும் எனும் போது அந்நிறுவனத்தின் மீது தவறான தகவல்களை கொண்டு ஆவினை ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த நிறுவனமாக மாற்ற நினைக்கும் அந்த வீணர் கூட்டம் முதலில் ஆவினில் நடைபெற்று வரும் ஊழல் முறைகேடுகளுக்கு எதிராகவும், ஊழல் பெருச்சாளிகளை அழித்து, களையெடுக்கவும், திராவிட மாடல் ஆட்சியில் திட்டமிட்டு ஆவினை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லும் ஆவின் மற்றும் பால்வளத்துறை அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் கம்பு சுற்ற களமிறங்கட்டும். இல்லையெனில் அதே கம்பால் வீணர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள் என்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் எச்சரிக்கை செய்ய கடமைப்பட்டுள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மீன்பிடி தடைக்காலம் நாளை தொடங்குகிறது! மீன், இறால், நண்டு ஆகியவை கணிசமாக விலை உயரும் அபாயம்..
by Askar
written by Askar
மீன்பிடி தடைக்காலம் நாளை தொடங்குகிறது! மீன், இறால், நண்டு ஆகியவை கணிசமாக விலை உயரும் அபாயம்..
தமிழ்நாட்டில் மீன்கள் இனப்பெருக்கத்துக்காக ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம் கடைபிடிப்பது வழக்கம். மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி ஏப்.15 முதல் ஜூன் 14 வரை 61 நாள்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.
ஆண்டுதோறும் இந்த தடைக்காலத்தில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதை நிறுத்திவிடுவா். இவை மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, படகு, வலைகள் சீரமைக்கும் பணிகளை மீனவா்கள் மேற்கொள்வா். மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் இருந்து குறுகிய தூரம் செல்லக்கூடிய வகையில் ஃபைபா் படகு மூலம் தினமும் மீன்பிடித்தலில் மீனவா்கள் ஈடுபடுவா். ஏற்றுமதி தரத்தினாலான மீன்கள் இக்காலக்கட்டத்தில் வராது.சிறிய வகை மீன்களே சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படும்.
போதிய அளவில் மீன் வரத்தின்மையில், மீன், இறால், நண்டு உள்ளிட்டவைகளின் விலை கணிசமாக உயரும். மீன்பிடித் தடைக்காலம் நாளை தொடங்குகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.600 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.54,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது..
தங்கத்தின் விலை ஏறியும், இறங்கியும் வருவது வழக்கம். ஆனால் இந்தாண்டு ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து தங்கத்தின் விலை மிகவும் வேகமாக உயர்ந்து வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் விலை ,நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.அந்த வகையில், இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 6,855-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6,850 ஆக இருந்த நிலையில், இன்று ரூ. 75 உயர்ந்துள்ளது. ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் ரூ.600 அதிகரித்து ரூ.54,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 89க்கும், ஒரு கிலோ ரூ.89,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சில வாரங்களுக்குள்ளாகவே தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து ரூ.54,000-ஐ தாண்டியுள்ள நிலையில், இது மேலும் அதிகரிக்குமோ என்ற கவலை மக்களிடையே நிலவி வருகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இது புதுசா இருக்குண்ணே புதுசா இருக்கு! ரயிலின் கழிவறை குழாயைத் திருடி “தண்ணி” அடித்த “மது” பிரியர்கள்..
by Askar
written by Askar
மதுரை கோட்டத்தில் சுமார் 15க்கும் மேற்பட்ட ரயில்களின் கழிவறை குழாய்களை திருடி விற்பனை செய்த இருவர் கைது..
மதுரை கோட்டத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மதுரை கோட்டத்தில் இயங்கும் ரயில்களில் உள்ள குழாய்களில் கழிவறை குழாய்கள் அவ்வப்போது மாயமாகுவதாகவும் இதன் காரணமாக கழிவறையில் தண்ணீர் இல்லாத நிலை ஏற்படுவதாகவும் தொடர்ந்து பயணிகள் புகார் தெரிவித்து வந்துள்ளனர்.
இது தொடர்பாக, ரயில்வே அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தியதில், மர்ம நபர்கள் ரயில் பெட்டியில் உள்ள கழிவறைகளில் குழாய்களை மட்டும் திருடி செல்வது தெரிய வந்துள்ளது.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், ரயில் பயணத்தின் போது காவல்துறையினர் ரோந்து பணியை தீவிர படுத்தியுள்ளனர்.
அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் பையில் இரும்பு பொருட்களுடன் ரயில் நிலையத்
துக்குள் சுற்றித்திரிந்த கோ. புதூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் மற்றும் செல்வம் ஆகிய இருவரை பிடித்து விசாரணை செய்தபோது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
மது அருந்துவதற்காக சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக 15-க்கும் மேற்பட்ட ரயில்களின் கழிவறையில் உள்ள குழாய்களை கழட்டி விற்பனை செய்தது தெரிய வந்ததை அடுத்து இருவரையும் கைது செய்த காவல்
துறையினர் பொருட்களை பெற்ற இரண்டு கடை உரிமையாளர்கள் என மொத்தம் நான்கு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
ரயில் பெட்டி குழாய்களை மட்டும் திருடி விற்பனை செய்து வந்த சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
Newer Posts
You must be logged in to post a comment.