இராமநாதபுரத்தில் சிறுபான்மையினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு டாம்கோ (TAMCO) மூலம் தொழில் கடன் வழங்கும் லோன் மேளா சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) மற்றும் மேலாண்மை இயக்குநர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியோரால் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 26.07.2018 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் சிறுபான்மையினராக கருதப்படும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் மற்றும் ஜெயின் மதங்களை சார்ந்தவர்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் வியாபாரம் மற்றும் தொழில்கள் செய்வதற்கு பல்வேறு கடன் உதவி திட்டங்களை தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் தனி நபர் கடன் திட்டம், கல்விக் கடன், வியாபாரம், தொழில் தொடங்கவும் ஏற்கனவே செய்து வரும் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கும் கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் கடன் அளிக்கப்படுகிறது. மேலும் சில்லரை வியாபாரம், மரபு வழிச்சார்ந்த தொழில்கள், சேவை சார்ந்த தொழில் நிலையங்கள், இலகுரக போக்குவரத்து வாகன கடன், விவசாயம் தொடர்பான தொழில்கள் செய்ய கடன், கறவை மாடு கடன் உதவி, ஆட்டோ கடன், சிறு கடன் வழங்கப்படுகிறது.
சிறுபான்மையினர் இனத்தைச் சார்ந்த மாணவஃமாணவிகளுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, தொழில்நுட்ப பட்டயபடிப்புகளுக்கு கல்வி கடன் வழங்கப்படுகிறது.
இத்திட்டங்கள் தொடர்பான விளக்கம் பெறவும் பயனாளிகள் விண்ணப்பிக்கவும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறும் சிறப்பு முகாமில் கடன் உதவி தேவைப்படும் சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் தங்களது சாதிச்சான்று, பள்ளிமாற்றுச்சான்று, வருமானச்சான்று, குடும்ப அட்டை, கடன் பெறும் தொழில் குறித்த திட்ட அறிக்கை, ஒட்டுநர் உரிமம் நகல்(வாகன கடனிற்கு மட்டும்) ஆதார் அடையாள அட்டை, மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்களுடன் நேரில் கலந்து கொள்ளலாம். இந்த சிறப்பு முகாமில் சிறுபான்மையினர் மக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
You must be logged in to post a comment.