இராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகிர் கல்வியல் கல்லூரியில் வில் மெடல் நேசனல் ரிக்கார்ட்ஸ் மற்றும் முகவை ரெக்கார்ட்ஸ் இணைந்து ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து மறைந்த முன்னாள்குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களை மையமாக வைத்து பல்வேறு திறமை உள்ள போட்டிகளை வெளிப்படுத்தினார்கள்.
இந்த போட்டியில் நடனம், பாட்டு போட்டி, ஓவியம், கவிதை, எழுத்துப் போட்டி, சைகை போட்டி, பொன்மொழிகள் பேச்சு போட்டி, அரை மணி நேரத்திற்குள் நடைபெற்றது. 160 மாணவ மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினார்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களை வழக்கறிஞர் சங்க தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி வழங்கினார்.
இந்நிகழ்ச்சிநில கல்லூரி சேர்மன் முகமது யூசுப் முகமது சதக் டிரஸ்ட் செயலாளர் சர்மிளா, கல்லூரி முதல்வர் சோமசுந்தரம், அப்துல்கலாம் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் ஷேக் சலீம், சைடெக் முதல்வர் ரியாஸ் அகமது, வில் குரூப் ஆஃப் சேர்மன் கலைவாணி, செயலாளர் தமிதாபானூ ஆகியோர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.