திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அலுவலகம் அருகே ஆத்தூரில் பனிபுரியும் வாட்டாச்சியர் தங்கி பனிபுரியும் வகையில் குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இங்கு பனியில் உள்ள வட்டாச்சியர்கள் அரசால் கட்டப்பட்டுள்ள குடியிருப்பில் தங்கி பனியாற்ற வேண்டும் என்ற விதி இருந்தும் வட்டாச்சியர் யாரும் தங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகையால், குடியிருப்பு கட்டப்பட்டு சுமார் ஏழு வருடங்களுக்கு மேல் ஆனபோதிலும் பயன்பாடற்ற நிலையில் முற்புதர்மண்டிய நிலையில் கிடப்பதால் விஷ ஷந்துக்களின் வசிப்பிடமாக உள்ளது. ஆகவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு பாழடைந்த நிலையில் கிடக்கும் குடியிருப்பில் சூழ்ந்துள்ள முற்புதர்களை அகற்றி அரசு விதியின்படி வட்டாச்சியர் குடியிருப்பாக மாற்றித் தரும்படி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்
You must be logged in to post a comment.