மார்ச் மாதம் ரூ.105.8 கோடி, ஜூன் மாதம் ரூ.100 கோடி, ஜூலை மாதம் ரூ.106.28 கோடி திருப்பதி உண்டியல் காணிக்கை பெறப்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில், இந்த ஆண்டின் மூன்றாவது முறையாக மாத உண்டியல் 100 கோடியை தாண்டியுள்ளது.
Category:
மாநில செய்திகள்
இரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தற்போது நடப்பில் உள்ள ஆகஸ்ட் மாதத்தில் மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் இரயில்களின் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இது குறித்து தென்னக இரயில்வே மதுரை பிரிவு வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:
வண்டி எண் 56769/56770 பாலக்காடு – திருச்செந்தூர் -பாலக்காடு பயணிகள் ரயில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் தவிர 02.8.2019 முதல் 31.8.2019 வரை திண்டுக்கல் – திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த இரயில் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மதுரை-திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்ட வண்டி எண் 56770 மதுரையிலிருந்து 145 நிமிடங்களில் காலதாமதமாக மாலை 06.45 மணிக்கு புறப்படுகிறது.
வண்டி எண் 56319/56320 நாகர்கோவில் – கோயம்புத்தூர் -நாகர்கோவில் பயணிகள் ரயில் வியாழக்கிழமைகள் தவிர 19.8.2019 முதல் 26.8.2019 வரை திண்டுக்கல் -திருநெல்வேலி இரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படும்.
மேலும் இந்த இரயில் வியாழக்கிழமைகள் தவிர 02.8.2019 முதல் 18.8.2019 வரை மற்றும் 27.8.2019 முதல் 31.8.2019 வரையும் திண்டுக்கல் – விருதுநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படும் என தெற்கு இரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திமுக முன்னாள் ஒருங்கிணந்த திருச்சி மாவட்ட கழக செயலாளரும், கலைஞர் அவர்களின் நெருங்கிய நண்பருமான, தொட்டியம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.வடிவேல் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். (வயது 94). மூன்று முறை சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர். திமுகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.அவருடைய சொந்த ஊரான திருச்சி மாவட்டம் சீலைப்பிள்ளையார் புதூரில் உள்ள சொந்த வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. நாளை 02.08.19 அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாக அவருடைய உறவினர் தெரிவித்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கோவையில் கடந்த 2010 ஆம் ஆண்டு சிறுவன், சிறுமி கடத்தி கொலை செய்த வழக்கில் மனோகரன் என்பவருக்கு தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
by mohan
written by mohan
கோவை ஜவுளி வியாபாரி ரஞ்சித் ஜெயினின் குழந்தைகள் முஸ்கின், ரித்திக். கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி கால் டாக்சியில் கடத்தி கொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் கைதான கால் டாக்சி டிரைவர் மோகனகிருஷ்ணன், போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளி மனோகரனுக்கு கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி ஒரு தூக்கு தண்டனையும், 3 ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், சிறுவன், சிறுமியை கடத்தி கொலை செய்த வழக்கில் மனோகரனின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘க்யூ-ஆர் கோடு’ எனப்படும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஏற்கெனவே 18 இலக்க அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது. இது, உயர்கல்வி படிக்கும் வரை நிரந்தர எண்ணாக பயன்படுத்தப்பட உள்ளது.இதில் முதல் இரண்டு இலக்கம் இந்தியாவையும், அடுத்த இரண்டு இலக்கம் தமிழகத்தையும், அடுத்த இரண்டு இலக்கம் அந்தந்த மாவட்டத்தையும், அடுத்த இரண்டு இலக்கம் அந்தந்த தாலுகாவையும், அடுத்த மூன்று இலக்கம் அந்த மாணவர் படிக்கும் பள்ளியையும், அடுத்த இரண்டு இலக்கம் எந்த ஆண்டு பள்ளியில் சேர்ந்தது என்பதையும், அடுத்து வரும் இலக்கங்கள் மாணவருக்கு உரிய எண் என்று பல்வேறு தகவல்களை அடக்கியுள்ளது.
தற்போது இந்த எண்ணுடன் ஸ்மார்ட் கார்ட் வழங்கப்பட்டு வருகிறது. இதில் உள்ள ‘க்யூ-ஆர் கோடை’ செல்போன் மூலம் ஸ்கேன் செய்தால், மாணவரின் அனைத்து விவரங்களும் தெரிந்துவிடும்.’எமிஸ்’ தளத்தில் ஏற்கெனவே பதிவு செய்துள்ள பெயர், தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும், தந்தை – தாய் பெயர், தொழில், வருமானம், ஆதார் எண், ரத்த வகை, முகவரி, தொலைபேசி எண், போன்ற 16 வகையான தகவல்களையும் இதில் பெற முடியும்..இந்த ஸ்மார்ட் கார்டு தற்போது சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆவின் பால் பாக்கெட் காலி கவர்களை திரும்ப ஒப்படைத்தால், அதற்கு பணம் தரப்படும்’ என ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.இது குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; ‘ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும், மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், பால் உள்ளிட்ட குறிப்பிட்ட சில அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அரசு அனுமதி அளித்தது.இந்நிலையில், ஆவின் பால் வாங்கும் வாடிக்கையாளர்கள், அதன் காலி கவர்களை சில்லறை வணிகர்கள், சில்லறை விற்பனை நிலையங்கள், முகவர்கள், அதிநவீன பாலகங்கள், வட்டார அலுவலகங்கள் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க அலுவலகங்களில் கொடுத்து, ஒரு கவருக்கு 10 காசு வீதம் பெற்றுக் கொள்ளலாம்.
ஆவின் நிறுவனத்தின் இந்த இதன் மூலம், தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் அதன் காலி கவர்களை குப்பைகளில் வீசும் நிலை உள்ளது. எனவே, ஆவின் நிறுவனத்தைப் போன்று தனியார் பால் நிறுவனங்களும் காலி பால் கவர்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்குவதற்கு முன்வர வேண்டும்.சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் ஆவின் கொண்டு வந்துள்ள இந்த திட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு 1800 425 3300 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண், துணை பொது மேலாளர் ( வடக்கு ) 94442 47327, துணை பொது மேலாளர் (மத்தியம்), 73585 00929, உதவி பொது மேலாளர் (தெற்கு ) 97907 73955 உள்ளிட்டவர்களை தொடர்பு கொள்ளலாம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காஞ்சி அத்திவர தர் இன்று (01.08.19) முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகின்றார்.
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜர் பெருமாள் கோவிலில் அத்திவரதர் சயன கோலத்தில் காட்சி தந்தார். இன்று ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றார். காலை 5 – 25 மணி முதல் நீல நிற பட்டாடையில் காட்சி தரும் அவரை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.பக்தர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து வருவதாக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிறுமி பாலியல் பலாத்காரம் : சிவகங்கை தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
by mohan
written by mohan
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி பெற்றோர் திட்டியதால் கோபித்துக் கொண்டு பேருந்தில் பரமக்குடிக்குச் சென்றார். பரமக்குடி பேருந்து நிலையத்தில் கடந்த 2014 ஜூலை 1 ஆம் தேதி அதிகாலை சிறுமி தனியாக நின்று அழுது கொண்டிருந்தார். அப்போது, சிவகங்கை மாவட்டம் உடையநாதபுரம் அழகு மகன் செல்வராஜ் 25, அங்கு வந்தார். செங்கல் சூளை தொழிலாளியான செல்வராஜ், சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறி அருகே உள்ள சந்தை கடை பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு மறைவான இடத்திற்கு அழைத்து சென்று சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த செல்வராஜ், இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இது தொடர்பாக சிறுமி புகார்படி பரமக்குடி மகளிர் போலீசார், போக்ஸோ, கொலை மிரட்டல், தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, செல்வராஜை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு இராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி பகவதி அம்மாள் முன்னிலையில் நேற்று நடந்த இறுதி விசாரணையில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த செல்வராஜூரக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 அபராதம் விதித்தார். அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சத்தியபாதை புலனாய்வு மாத இதழுக்கு புதிய துணை ஆசிரியர்..அக்ரி பரமசிவம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
சத்தியபாதை இதழின் முதன்மை ஆசிரியர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை குறிப்பில், “சமூக செயற்பாட்டாளரும் சிறந்த எழுத்தாளருமான அக்ரி பரமசிவன் சத்தியப்பாதை ஆசிரியரின் ஒப்புதலுடன் இன்று (31/07/2019) முதல் சத்திய பாதை இதழுக்கு துணை ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரின் பணிகள் சிறக்க ஆசிரியர் குழு, நிர்வாக குழு, நிருபர்கள் குழ, வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.
ஜெ.அஸ்கர், முதன்மை ஆசிரியர்
“சத்தியப்பாதை” புலனாய்வு இதழ்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர், ஜாங்கிட், 60. ஐ.பி.எஸ்., அதிகாரியாக, 1985ல் தேர்வு பெற்று, நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம், ஏ.எஸ்.பி.,யாக பணி அமர்த்தப்பட்டார். வடக்கு மண்டல, ஐ.ஜி.,யாக இருந்தபோது, 2001ல் தமிழகத்தில் ஊடுருவி, கும்மிடிப்பூண்டி, எம்.எல்.ஏ.,வாக இருந்த, சுதர்சன் உள்ளிட்டோரை கொலை செய்த, உ.பி., மாநில பவாரியா கொள்ளை கும்பலை இவர் ஒழித்தார். சென்னை கூடுதல் கமிஷனர் மற்றும் புறநகர் கமிஷனராக பணிபுரிந்தபோது, ரவுடிகள், ‘பங்க்’ குமார், வெள்ளை ரவி ஆகியோரை என்கவுன்டர் செய்தார். தற்போது, டி.ஜி.பி., ரேங்கில், கும்பகோணம், போக்குவரத்து விஜிலென்ஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த அவர், இன்று (ஜூலை 31) ஓய்வு பெறுகிறார்.அவா் தம்முடன் பணியாற்றியவா்கள் மற்றும் பொதுமக்களுக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளாா்.அதன் விபரம் வருமாறு –
அன்புடையீர். வணக்கம்
இந்திய காவல் பணியில் 34 ஆண்டுகள் பணிபுரிந்து இன்று உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன். இந்த காலகட்டத்தில் என்னுடன் பணியாற்றிய காவலர்கள், தலைமை காவலர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், கூடுதல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் எனது இதய பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் ஏற்பட்ட ஜாதி மோதலை கட்டுப்படுத்தியது, பவாரியா கும்பலை கண்டுபிடித்தது மற்றும் வெள்ளை ரவி, பங்க் குமார் போன்ற பிரபல ரவுடிகளின் மீதான நடவடிக்கையின் போதும் மிக முக்கியமான காலகட்டங்களில் கடுமையான சிரமங்களுக்கிடையிலும் என்னுடன் அனைவரும் இணைந்து பணியாற்றியதை நான் என்றும் மறவேன். என்னுடைய 34 ஆண்டு கால சிறப்பான பணிக்கு என்னுடன் இரவு பகலாக ஒத்துழைத்த, நீங்கள் அனைவரும் தான் காரணம் என்பதை நான் இந்த நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.
நான் ஓய்வு பெறுகின்ற இந்த நாளில் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், உங்கள் குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களின் அன்புள்ள,
எஸ். ஆர். ஜாங்கிட் , ஐபிஎஸ். இவ்வாறு அதில் தொிவிக்கப்பட்டுளளது.
ஜெ.அஸ்கர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை கிராமம் இ. மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த காந்தியவாதி சசிபெருமாள் இவர் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார்.இந் நிலையில் கடந்த 31.07.2015 அன்று கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் பகுதியில் உள்ள செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியபோது உயிரிழந்தார் ..அவருடைய 4 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (31.07.19) அனுசரிக்கப்பட்டது.. இதையொட்டி அவரது நினைவிடத்தில் சசிபெருமாள் மகன் விவேக் சசிபெருமாள் தம்பி செல்வம் மகன்கள் அப்புசாமி தியாகு உட்பட குடும்பத்தினரும், உறவினர்கள் சுப்ரமணி அம்மாசி ரகுபதி சிவகாமி மற்றும் அமரகுந்தி அருணாச்சலம் உள்பட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்…
சேலம், ரகுபதி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் இந்துக்களின் புனித ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு தை, ஆடி, மஹாளாய அமாவாசை போன்ற நாட்களில் அக்னி தீர்த்தக்கரையில் புனித நீராடி திதி கொடுத்து வழிபாடு நடத்தினால் மறைந்த முன்னோர் பாவ விமோசனம் அடைவர் என்பது ஐதீகம்.இந்நிலையில் ஆடி அமாவாசை, நாளான இன்று மறைந்த முன்னோருக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்த, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து பல்லாயிரணக்கான பக்தர்கள் நேற்று மாலையில் இருந்து இராமேஸ்வரத்தில் குவியத் தொடங்கினர்.
அக்னி தீர்த்தக்கரையில் இன்று அதிகாலையில் முன்னோருக்கு தர்பணம், திதி, பிதுர் கர்மா பூஜை செய்து வழிபாடு நடத்தினர். இதனை தொடர்ந்து இராமநாதசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின், ராமர் அக்னி தீர்த்தகரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. இதனையடுத்து கோயிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடிய பின்னர், சுவாமி தரிசனம் செய்தனர்.ஆடி அமாவாசையை முன்னிட்டு, இராமேஸ்வரத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சீருடையில் ஆயிரம் போலீசார், தனி சீருடையில் 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரயில் நிலையத்தில் அரசு மருத்துவர் தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குடிநீர் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முத்தலாக் அவசர சட்டம் பாஜக அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றியதை இந்திய தேசிய லீக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது …
by mohan
written by mohan
இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா ஜெ அப்துல் ரஹிம் கூறியிருப்பதாவது : இந்த அவசர சட்டத்தால் கணவனை பழி வாங்க துடிக்கும் சில பெண்களுக்கு பயன்பெறுமே ஒழிய வேறு ஒன்றுமில்லை .உதாரணமாக டவுரி சட்டம் எப்படி சில பெண்கள் தவறாக பயன்படுத்தி அந்த சட்டம் தூக்கி எறியப்பட்டதோ அது போன்றே இந்த முத்தலாக் தடை அவசர சட்டம் .முத்தலாக் என்றால் ஏதோ பக்கத்தில் படுத்து இருக்கும் மனைவியை எழுப்பி தலாக் தலாக் தலாக் என முஸ்லீம் ஆண்கள் சொல்வது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குவதற்காக பாஜக அரசு முயல்கிறதை வன்மையாக கண்டிக்கிறோம்.குடும்பத்தினர் மூலமும் ஜமாஅத்கள் மூலமும் சமுதாய அமைப்புகள் மூலமும் சமரசம் பேசி முடியாத சூழ்நிலையில் தான் தலாக் பயன்படுத்த படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.முஸ்லீம்கள் எல்லாம் வேற்று கிரகத்தில் பிறந்தவர்கள் அல்ல இந்த மண்ணிலே பிறந்து இஸ்லாமிய கலாச்சார பண்பாடுகளை பின்பற்றி இந்த காற்றையே சுவாசித்து வாழ்கின்ற சாதாரண மக்கள் ..
இந்து விதவை பெண்கள் மறுமணம் செய்ய சட்ட ரீதியான அங்கீகாரம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றினால் வரவேற்கலாம் ..அதைவிடுத்து முத்தலாக் தடை அவசர சட்டம் என்பது முஸ்லீம்களுக்கு எதிரான மத்திய பாஜக அரசின் காழ்ப்புணர்ச்சியே காட்டுகிறது.முத்தலாக் தடை அவசர சட்டம் என்பது முஸ்லீம்களுக்கு எதிரான மத்திய பாஜக அரசின் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்படே என்பதே ஒழிய முஸ்லீம் பெண்களுக்கு ஆதரவான சட்டமில்லை, முத்தலாக் தடை அவசர சட்டத்தை உடனே மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம்..என இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா ஜெ அப்துல் ரஹிம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி மனிதாபிமான செயலுக்கு சென்னை கமிஷனர் ஏ. கே .விஸ்வநாதன் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
by mohan
written by mohan
சென்னை தலைமைச் செயலக G5 காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கே.எச் சாலை அருகே செல்லும்போது ஒரு வயதான பெண் தனியாக நின்று அழுது கொண்டிருந்திரிக்கிறார்காவல் ஆய்வாளர் அருகில் சென்று விசாரித்தபோது அவரின் பெண்ணான ஷீலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வாகனம் ஏதாவது கிடைக்குமா? என்று பார்க்க இங்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உடனடியாக நம்மாழ்வார் பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அங்கு பனிக்குடம் உடைந்த நிலையில் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருப்பதை பார்த்துள்ளார். 108 க்கு கால் செய்து ஆம்புலன்ஸ் வர செய்துள்ளார். ஆனால் அந்தத் தெருவுக்குள் 108 ஆம்புலன்ஸ் வர இயலாத காரணத்தால் இவரது போலீஸ் வாகனத்தில் ஷீலாவை ஏற்றிக்கொண்டு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்று அங்கு ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். மருத்துவமனையில் ஷீலாவுக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. சரியான நேரத்தில் செய்த உதவிக்காக காவல் ஆய்வாளர் ராஜேஷ்வரியை ஷீலாவின் குடும்பம் தமிழக மக்கள் அனைவரும் பாராட்டினர்.
இந்த சம்பவம் தொடர்பாக இன்று காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு சென்னை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இன்று (30.07.19) மருத்துவ தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் எற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக கீழக்கரை அரசு மருத்துவமனை வளாகத்தில் அரசு தலைமை மருத்துவர் டாக்டர் ஜவாகிர் உசேன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் காவல் துறை உயர் அதிகாரிகள், நகராட்சி மேலாளர், வட்டார அரசு மருத்துவர் ராசிக்தீன், அரசு மருத்துவமனை டாக்டர்கள், நகராட்சி சுகாதார ஆய்வாளர், முன்னாள் நகராட்சி உறுப்பினர்கள் மற்றும் பல வேறு துறையினர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் முறையற்ற பயணத்தால் சிரமத்திற்குள்ளாகும் பயணிகள்.
by mohan
written by mohan
சென்னையிலிருந்து மதுரை வரும் 12635 எண் கொண்ட வைகை எக்ஸ்பிரஸ் விரைவு இரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் முன்பதிவு செய்யாத நபா்களும் டிக்கெட் இல்லாத ஆட்களும் பயணிப்பதால் முன்பதிவு செய்த பயணிகள் இருக்கை இல்லாமல் நின்று கொாண்டே பயணம் செய்ய வேண்டியுள்ளது.குறிப்பிட்ட பெட்டிகளில் இரயில்வே பாதுகாப்பு காவால்துறையினா் யாரும் இல்லை.முன்பதிவு செய்யாத நபா்கள் 2000ற்கும் மேற்பட்ட ஆட்கள் இருப்பதால் டிக்கெட் பாிசோதகரும் இவா்களை கண்டிப்பதில்லை.மேலும் இரயிலில் பயணித்து கழிவறையை நாசம் செய்து சுகாதரசீர்கேடு எற்படுத்தி இரயிலை சீரழிக்கின்றனர்.இதனால் கழிவு நீர் ரயிலாக மாறி வருகிறது வைகை ரயில்.எனவே இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து சுகாதரமான பாதுகாப்பான பயணத்தை முன்பதிவு செய்த பயணிகளுக்கு வழங்க வேண்டும் என இரயில்வே பயணிகள் கோாிக்கை விடுத்துள்ளனா்.
செய்திகள் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் ஏ.சி, சண்முகத்தை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 31-ம் தேதி வாணியம்பாடி, ஆம்பூர் .பேர்ணாம்பட்டு , குடியாத்தம் கே.வி.குப்பம், வேலூர் பகுதியில் வேலூர் பாராளுமன்ற அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ சி .சண்முகத்தை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கின்றார்.
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழை நியூஸ் நிறுவனம் மற்றும் சத்திய பாத இதழின் குழுமத்திற்கு WJUT யின் நன்றி நன்றி.!
by mohan
written by mohan
தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அ. ஜெ. சகாயராஜ் மற்றும் மாநிலப் பொதுச் செயலாளர் ஆர். சந்திரிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.தஞ்சாவூர் மாவட்டத்தின் மூத்த பத்திரிகையாளர் WJUT யின் தென் மண்டல செயலாளர் மறைந்த திருஞானம் அவர்களின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக அவரது சொந்த ஊரான நரியனூர் கிராமத்திற்கு சென்றிருந்தோம்,
25வருட அனுபவம் கொண்ட பத்திரிகையாளன், நேர்மையாளன், அமைச்சர், மாவட்ட ஆட்சியர்,சட்டமன் உறுப்பினர் மற்றும் ஊரே கொண்டாடிய ஒரு மனிதன் திருஞானம். ஆனால் அவரை கிடத்திவைக்க இடம் இல்லை,எப்போது இடிந்து விழும் என்கிற அளவில் ஒத்த விளக்கு எரியும் ஒரு குடிசை வீடு அவரின் நேர்மையை பத்திரிகை அறத்தை காட்டுகிறது.!ஊரெல்லாம் நல்ல பெயர் எடுத்த ஓரு பத்திரிகையாளனின் சவத்தை எடுக்க கூட காசு இல்லை,அடுத்த வேளை உணவுக்கு வழி இல்லை,பெண் பிள்ளைகளின் எதிர்காலத்தில் ஓளி இல்லை,அந்த ஆண் பிள்ளைக்கு இன்பம் இல்லை ஆனால் நட்பாக நாம் இருக்கிறோம் என்பதை உணர்த்துவோம்..!காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும் அது ஞாலத்தின் மானப்பெரிது.
ஏழ்மையின் வாயிலில் வறுமையின் பிடியில் தந்தை எனும் ஏணியை இழந்து ஏதுமறியாமல் வாடி நிற்கும் நம் சகோதரனின் குடும்பத்திற்கு தங்களால் இயன்ற அளவு ஏதேனும் உதவிகள் செய்திட வேண்டும் என்று அன்புடன் வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டோம்.இந்த இந்த செய்தியை அறிந்த சத்தியப்பாதை இதழின் ஆசிரியரும் கீழை நியூஸ் நிறுவனத்தின் நிறுவனருமான திரு செய்யது ஆபிதீன் அவர்கள் மறைந்த திருஞானம் குடும்பத்திற்கு உடனடியாக பண உதவி செய்து உள்ளார்கள். அந்த குடும்பத்தின் சார்பாகவும் நாங்கள் சார்ந்த சங்கத்தின் சார்பாகவும் திரு சையது ஆபிதீன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..! இவன் -தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்க மாநிலச் செய்தி தொடர்பாளர்.ஜெ, அஸ்கர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தொிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் (39) என்பவரை கைது செய்தனர்.சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த கார்த்திகேயன் தயார் சீனியம்மாள் உடல் நலக்குறைவால் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணைக்கு மதுரைக்கு சிபிசிஐடி போலீசார் சீனியம்மாளிடம் விசாரணை நடத்த வரலாம் என கூறப்படுகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முழுமையாக பொதுவாழ்க்கையில் இருந்து விலகுகிறேன் – ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவிப்பு.!
by mohan
written by mohan
யாரும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் – பேஸ்புக் பக்கத்தில் தீபா அறிவிப்பு.!எனக்கென்று குடும்பம் உள்ளது, அதுதான் எனக்கு முக்கியம்.!குழந்தை பெற்றுக் கொண்டு கணவரோடு வாழத்தான் எனக்கு ஆசை.!ஏன் காலையிலேயே தொந்தரவு செய்கிறீர்கள் – தனது ஆதரவாளர்களுக்கு தீபா கேள்வி.!பேரவையை அதிமுக உடன் இணைத்து விட்டேன், விருப்பம் இருந்தால் அந்த கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள்.தீபா பேரவை பெயரைச் சொல்லி தொடர்ந்து என்னை துன்புறுத்தி வருவதை இதோடு நிறுத்த வேண்டுகிறேன்.- பேஸ்புக் பக்கத்தில் தீபா அறிவிப்பு.
You must be logged in to post a comment.