முதல்ல பூத்ல ஆள போடு! அப்புறம் வந்து போட்டி போடு! பாஜகவை பங்கம் செய்த எஸ்.பி.வேலுமணி!
Category:
மாநில செய்திகள்
தென்காசி மாவட்டத்தில் மூதாட்டிக்கு உதவி செய்த மனித நேயமிக்க காவல் ஆய்வாளர்; பொதுமக்கள் பாராட்டு..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டத்தில் மூதாட்டிக்கு உதவிய மனிதநேயமிக்க காவல் ஆய்வாளர்; பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டு..
தள்ளாடிய நிலையில் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த மூதாட்டிக்கு உதவும் விதமாக அவரை பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்றி வீட்டில் இறக்கிவிட்ட ஊத்துமலை காவல் ஆய்வாளர் செந்தில் மாறன் ஆய்வாளரை பொது மக்கள் பாராட்டி வருகின்றனர். தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் ஆய்வாளர் செந்தில்மாறன். ஆலங்குளத்தில் இன்று (26.03.2024) பாதுகாப்பு பணியை முடித்து விட்டு மீண்டும் ஊத்துமலை காவல் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது கிடாரக்குளம் ஊரின் வெளியே 80 வயது மூதாட்டி தள்ளாடியபடி நடந்து சென்று கொண்டிருப்பதை பார்த்து அவருக்கு உதவும் விதமாக வாகனத்தில் பாதுகாப்பாக ஏற்றி மூதாட்டியின் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். காவல் ஆய்வாளரின் இத்தகைய மனிதாபிமானமிக்க இச்செயலை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிரித்தால் பல் தானே தெரியும். உதயநிதி ஸ்டாலின், மு.க. ஸ்டாலின் மோடியுடன் சிரித்து பேசும் இந்த படங்களில் என்ன தெரிகிறது.? தூத்துக்குடியில் படத்தை தூக்கி காட்டிய எடப்பாடி பழனிச்சாமி..
by Askar
written by Askar
தூத்துக்குடியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அங்கு, அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.கூட்டத்தில் அவர் பேசியதாவது:-திமுக எம்.பிக்கள் மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கவில்லை. மக்களுக்கு பாதிப்பு என்றால் அரசு ஓடோடி வந்து உதவி செய்ய வேண்டும்.அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
மக்கள் வெள்ளத்தில் தூத்துக்குடி பாதிப்படைந்தபோது நான் தான் வந்தேன்.புயல், வெள்ளத்தின்போது திமுக அரசு துரிதமாக செயல்படவில்லை.அதிமுக பற்றி முதலமைச்சர் விமர்சனம் செய்து வருகிறார். பாஜகவுடன் கூட்டணியில் உள்ளது அதிமுகவா? திமுகவா? நாங்கள் நினைத்து இருந்தால் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்போம். ஆனால் தேவையில்லை.எங்களுக்கு பதவி பெரிதல்ல, மக்கள் தான் பெரிது. தமிழக மக்களுக்கான திட்டங்கள், நிதிகளை பெறுவோம்.மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தான் அதிமுகவின் லட்சியம். ஆட்சி அதிகாரத்திற்காக திமுக, காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது.தூத்துக்குடி தொகுதியில் அதிமுகவின் வெற்றி உறுதி. 2026-ல் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி மீண்டும் மலரும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தின்போது கல்லை காண்பித்தார். அப்போது, மோடியுடன் நான் இருக்கும் படத்தை காண்பித்து பல் தான் தெரிகிறது என்று கூறினார்.சிரித்தால் பல் தானே தெரியும். உதயநிதி ஸ்டாலின், முக ஸ்டாலின் மோடியுடன் சிரித்து பேசும் இந்த படங்களில் என்ன தெரிகிறது?இவ்வாறு அவர் கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அதிமுக,பாஜக இரண்டு கட்சிகளையும் தூத்துக்குடியில் பொளந்து கட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்..
by Askar
written by Askar
மக்களவை தேர்தல் முன்னிட்டு போட்டியிடும் அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் தீவிரமாய் இறங்கியுள்ளனர்.அந்த வகையில், தூத்துக்குடி, ராமநாதபுரம் மக்களவை தொகுதிகளுக்கான திமுக கூட்டணியின் தேர்தல் பரப்புரை நடைபெற்று வருகிறது.அதன்படி, கோவில்பட்டி அருகே எட்டையபுரத்தில் உள்ள சிந்தலக்கரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.அப்போது அவர் கூறியதாவது:-தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நன்மை செய்யும் கட்சி திமுக. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் மறக்க முடியுமா? எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தூத்துக்குடியில் துப்பாக்கிசூடு நடத்தி 13 பேர் கொலை செய்யப்பட்டனர். அதைக்கூட டிவியை பார்த்துதான் தெரிந்து கொண்டேன். அந்த சம்பவத்தை தற்போது நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது.தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்பட்டது.பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வி தகுதிக்கு ஏற்ப பணிகள் வழங்கப்பட்டது. ஈபிஎஸ் மக்கள் விரோத ஆட்சியை நடத்தினார். மக்களை ஏமாற்ற மீண்டும் பிரசாரம் செய்து வருகிறார். பாஜக பற்றி ஈபிஎஸ் ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன்?தமிழகத்தின் உரிமைகளை அடகு வைத்தவர் எடப்பாடி பழனிசாமி. தற்போது, உதயநிதி குறித்து ஈபிஎஸ் விமர்சிக்க தொடங்கியுள்ளார்.10 ஆண்டுகளில் நாட்டை பாஜக பாதாளத்தில் தள்ளியுள்ளது. தேர்தல் நேரத்தில் தான் பிரதமர் தமிழகம் பக்கம் வருவார். தமிழக மீனவர்கள் தாக்கப்பட திமுக, காங்கி தான் காரணம் என பிரதமர் பேசுகிறார். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தட்டிக்கேட்க பிரதமர் தயங்குவது ஏன்? இலங்கையை கண்டிக்க முடியாத நீங்கள், விஸ்வகுருவா? மௌன குருவா? தமிழக மீனவர்களை காப்பாற்ற தவறிய மோடி, திசை திருப்ப தங்களை விமர்சிக்கிறார். கருப்பு பணத்தை மீட்டு தருவதாக கூறினார் பிரதமர் தந்தாரா ?கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை நிலவுகிறது. தமிழகத்திற்கு தந்த எந்த வாக்குறுதியையும் பிரதமர் நிறைவேற்றவில்லை. தமிழகத்திறகாக பிரதமர் என்ன சிறப்பு திட்டத்தை கொண்டு வந்தார்? இவ்வாறு அவர் கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் தொகுதியில் ஓ . பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் வேட்பு மனு தாக்கல் !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நேற்றைய தினம் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அதே நாளில் உசிலம்பட்டி அருகே உள்ள மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த ஓ பன்னீர்செல்வம் என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்தார் . இந்த நிலையில் இன்று( 26.03.2024 )தெற்கு காட்டூரை சேர்ந்த ஓ பன்னீர்செல்வம், மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த ஓ பன்னீர்செல்வம், திருமங்கலத்தைச் சேர்ந்த ஓ பன்னீர்செல்வம் என்ற 3 பேர் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அது மட்டுமின்றி நேற்று வேட்புமனு தாக்கல் செய்த உசிலம்பட்டியை அடுத்த மேக்கிலார் பட்டி என்ற ஊரைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று மேலும் ஒரு வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மேலும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்த 3 ஓ பன்னீர்செல்வத்தை சேர்த்து இதுவரை 5 பேர் ஓ பன்னீர்செல்வம் என்ற பெயரில் ராமநாதபுரம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திர பிரபா ஜெயபால் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திர பிரபா ஜெயபால் பாரதி நகர் பகுதியில் இருந்து தாரை தப்பட்டை முழங்க கட்சியின் தொண்டர்களோடு ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி விஷ்ணு சந்திரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பாளர் உடன் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மாவட்ட தலைவர் கண். இளங்கோ மாவட்ட செயலாளர் நாகூர் கனி, தொகுதி பொறுப்பாளர் வெண்குளம் ராஜு உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
என்னம்மா இப்படி பன்றீங்களேமா! ஒரு நியாயம் வேனாமா!சின்னம், தேர்தல் வாக்குறுதி ம்ஹூம்.ஆனால் 5 தொகுதியில் போட்டி! பகீர் கிளப்பிய ஜெயலட்சுமி..
by Askar
written by Askar
தேனி, திருச்சி,கோவை உள்ளிட்ட 5 தொகுதிகளில் போட்டியிட போவதாகவும், சின்னம்,தேர்தல் வாக்குறுதிகள் -எதுவும் இல்லாமல் – மனு தாக்கல் செய்ய வந்துள்ளதாக மதுரை விமான நிலையத்தில் பரபரப்பை கிளப்பிய ஜெயலலிதா மகள்.? ஜெயலட்சுமி..
நெற்றியில் திலகம் ஜெயலலிதா போல் பச்சை நிற சேலை முழுக்கை சட்டையணிந்து அப்பாவி தனமாக அரசியல் களத்தில் குதித்த எம்ஜிஆர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் பிரேமா (எ) ஜெயலட்சுமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்றும் டி என் ஏ டெஸ்ட் என அனைத்திலும் அதிரடி காட்டுகிறார். தற்போது நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் 5 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறேன். பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒன்றிணைப்பேன்
என கூறும் ஜெயலட்சுமி தேனி நாடாளுமன்ற தொகுதி பற்றிய கள விவரம் ,போட்டியாளர்கள் விபரம் தெரியாமல் களத்தில் உள்ளார் பாவம்.
கடந்த சில வாரங்களுக்கு முன், தான் ஜெயலலிதாவின் மகள் என பரபரப்பு கிளப்பிய பிரேமா (எ) ஜெயலட்சுமி என்பவர் தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்வதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்திருந்தார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்வதற்காக மதுரை வந்துள்ளேன். திருச்சி, திருநெல்வேலி, சேலம், கோவைஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளோம். வேறு எந்த அரசியல் கட்சிகள் ஆதரவும் இல்லை.
அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தேர்தலில் போட்டியிட வந்தேன்.
அது அம்மாவுக்கு மிகவும் பிடித்த தொகுதி, ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டால் எப்போதும் வெற்றி பெறுவார். அதனால் சென்டிமென்டாக அங்கு போட்டியிடுகிறேன். தேனி தொகுதியில் வேறு யார் போட்டியிட்டாலும் எனக்கு பிரச்சனை இல்லை நான் போட்டியிடுகிறேன் அவ்வளவுதான். எனக்கு மக்கள் பலம் இருப்பதால் தான் போட்டியிடுகிறேன்.
அம்மா கொண்டு வந்த திட்டங்கள் தற்போது நடைபெறவில்லை. கட்சியும் நான்காக பிரிந்துள்ளது. அதனால் நான் வந்து மீண்டும் அம்மா செய்த திட்டங்களை செய்ய விரும்புகிறேன்.
நாங்கள் வெற்றி பெற போட்டியிடுகிறோம், யாரையும் தோற்கடிப்பதற்கில்லை.
அம்மா என்னை பார்த்துள்ளார்கள் ஆனால் ஏன் அதை வெளியில் சொல்லவில்லை என்று தெரியவில்லை.
தற்போது டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து அனுப்பி உள்ளோம் முடிவு வர காத்திருக்கிறோம் என கூறினார்.
அரசியலில் யாரையும் வரவிடவில்லை அதையும் மீறி நான் வந்துள்ளேன். அதிமுக கட்சியை ஒன்றிணைக்க தான் வந்துள்ளேன். இப்போதைக்கு மாநில கட்சியாக பதிவு செய்துள்ளோம் என்றார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செத்தாலும் எங்களது சின்னம்தான். கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறொரு கட்சியில் சின்னத்தைப் பெற்று போட்டியிட முடியாது! ஆவேசமாக பேசிய துரை வைகோ அதிர்ச்சியில் உறைந்த அமைச்சர்கள்..
by Askar
written by Askar
இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சாா்பில் திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளா் அறிமுக செயல்வீரா்கள் கூட்டம் கலைஞா் அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்துப் பேசிய திமுக மத்திய மாவட்டச் செயலா் க. வைரமணி, திருச்சி, பெரம்பலூா் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் 5 லட்சத்துக்கும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்வா். குறிப்பாக திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 பேரவைத் தொகுதிகளிலும் தலா ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோ வெற்றி பெறுவாா். ஆனால், அவா் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றாா். இதேபோல கூட்டத்தில் பேசிய அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்எல்ஏ எம். பழனியாண்டி உள்ளிட்ட பலரும் துரை வைகோ உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கட்சியினா் விரும்புவதாக மறைமுகமாகக் குறிப்பிட்டனா். இறுதியாக வேட்பாளா் துரை வைகோ பேசுகையிலும் கூட்டத்திலிருந்து சின்னம் என்ன எனக் கேட்டே குரல் கொடுத்தனா். இதனால் உணா்ச்சிவசப்பட்ட துரை வைகோ, கண்ணீா் சிந்தியபடியே ஆவேசமாக உரையாற்றி பேசிய போது ஏழு ஆண்டுகளுக்கு முன் கருணாநிதியின் கரம் பற்றி எனது தந்தை உங்களுக்கு பின்னாலும் மு.க. ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருப்பேன் என்றாா். இன்றுவரை அந்த வாக்குறுதியை கடைப்பிடித்து வருகிறாா். எங்களுக்கு பட்டம் வேண்டாம்; பதவி வேண்டாம்; தோதலில் போட்டியிட தொகுதியே வழங்காவிட்டாலும் திமுக தலைமையிலான கூட்டணியில்தான் பணியாற்றுவோம். அரசியல்வாதி குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் எனக்கு அரசியல் வேட்கையோ, ஆசையோ இல்லை. 3 ஆண்டுகளுக்கு முன் எனது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், கட்சியினா் வலுக்கட்டாயமாக என்னை கட்சிப்பணிக்கு அழைத்து வந்துவிட்டனா். செத்தாலும் எங்களது சின்னம்தான். கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறொரு கட்சியில் சின்னத்தைப் பெற்று போட்டியிட முடியாது. நான் சுயமரியாதைக்காரன். அறிஞா் அண்ணா, தலைவா் கருணாநிதியிடம் அரசியல் கற்று வந்தவா் எனது தந்தை. எனவே திமுகவையும், உதயசூரியன் சின்னத்தையும் மிகவும் மதிக்கிறோம். ஆனால் எங்களது சின்னத்தை விடுத்து வேறொரு சின்னத்தில் நிற்க மாட்டோம். நடைபெறவுள்ள தோதல் பாசிசத்துக்கும், ஜனநாயகத்துக்கும் இடையே, தா்மத்துக்கும், அதா்மத்துக்கும் இடையே, நீதிக்கும், அநீதிக்கும் இடையே நடைபெறும் யுத்தம். இதில் தா்மம், நீதி வெல்ல வேண்டும். அதற்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த உயிரைக் கொடுக்கவும் தயாா். நாற்பதும் நமதே. நமது கூட்டணியே வெற்றி பெறும் என்றாா் அவா். கூட்டத்தில் அமைச்சா்கள் கே.என். நேரு, எஸ். ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் எம்எல்ஏக்கள், கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் என பலா் கலந்து கொண்டனா். துறை வைகோவின் பேச்சாள் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அதிர்ச்சியில் இருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
எனக்கு மட்டும் ஏங்க இப்படி நடக்குது! தேனி ஓபிஎஸ் மைன்ட் வாய்ஸ்: ராமநாதபுரத்தில் போட்டியிடும் 5 ஓபிஎஸ்.,க்களால் பரபரப்பு..
by Askar
written by Askar
ராமநாதபுரத்தில் OPS களுக்கு இடையே கடும் போட்டி அப்செட்டில் தேனி ஓபிஎஸ்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சுயேச்சையாக போட்டியிடும் ராமநாதபுரத்தில், ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயர் கொண்ட 5வது நபர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல்.
ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் 5 வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட இருப்பதால் வாக்காளர்களுக்கு கடும் குழப்பம் ஏற்பட வாய்ப்பு.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பா.ம.க., வேடந்தாங்கல் பறவை கிடையாது. வேடந்தாங்கல் சரணாலயம் என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேச்சுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிலடி..
by Askar
written by Askar
பா.ம.க., வேடந்தாங்கல் பறவை கிடையாது. வேடந்தாங்கல் சரணாலயம் என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேச்சுக்கு பாமக தலைவர் அன்புமணி பதிலடி கொடுத்துள்ளார்.
‘நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை’ என இ.பி.எஸ் கூறியிருந்தார்.
இது குறித்து அன்புமணி கூறியதாவது: கடந்த 10 ஆண்டுக்காலமாக பா.ம.க., தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு அங்கமாக இருக்கிறது. நாங்கள் எங்கும் செல்லவில்லை. நாங்கள் இங்கே தான் இருக்கின்றோம். மற்றவர்கள் நம்மை குறை சொல்கிறார்கள்.
நாங்கள் வேடந்தாங்கல் பறவையல்ல. நாங்கள் வேடந்தாங்கல் சரணாலயம். யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி வேட்பு மனு தாக்கல்..
written by Abubakker Sithik
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தி.மு.க வேட்பாளர் கனிமொழி கருணாநிதி வேட்புமனு தாக்கல்..
INDIA கூட்டணியின் சார்பில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர் கனிமொழி கருணாநிதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதியிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் APCV.சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக தூத்துக்குடி கலைஞர் அரங்கம் முன்பு உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, அதன் பின்னர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார், அவரது மனைவி பெயரில் ரூ.648 கோடி சொத்துகள்..
by Askar
written by Askar
ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார், அவரது மனைவி பெயரில் ரூ.648 கோடி சொத்துகள்..
அசோக்குமாரின் வங்கி கணக்குகளில் 6 கோடியே 99 லட்சத்து 59 ஆயிரத்து 500 ரூபாயும், மனைவியின் வங்கி கணக்குகளில் ரூ.3 கோடியே 83 லட்சத்து 78 ஆயிரமும் இருப்பு உள்ளது. அசோக்குமார் தனது கையிருப்பில் ரூ.10 லட்சமும், மனைவியின் கையிருப்பில் ரூ.5 லட்சமும் உள்ளது. அசோக்குமாரிடம் 10.1 கிலோ தங்க நகையும், மனைவியிடம் 10.6 கிலோ தங்க நகையும் உள்ளது. இருவருடைய பெயரிலும் வாகனம் இல்லை. 2 பேரின் பெயரிலும் வீடுகள், அலுவலகங்கள், காலி இடங்கள் உள்ளன.
அசோக்குமாருக்கு ரூ.526 கோடியே 53 லட்சத்து 9 ஆயிரத்து 500 மதிப்பிலான அசையும் சொத்தும், ரூ.56 கோடியே 95 லட்சம் அசையா சொத்தும் உள்ளன. மொத்தம் ரூ.583 கோடியே 48 லட்சத்து 9 ஆயிரத்து 500 மதிப்பிலான சொத்து உள்ளது.
அவரது மனைவிக்கு ரூ.47 கோடியே 38 லட்சத்து 78 ஆயிரம் அசையும் சொத்தும், ரூ.22 கோடியே 60 லட்சம் அசையா சொத்தும் உள்ளன. ஆற்றல் அசோக்குமார் தனது பெயரிலும் தனது மனைவி பெயரிலும் ரூ.648 கோடி சொத்துகள் இருப்பதாக பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வேட்பு மனு தாக்கல் செய்தார்..
written by Abubakker Sithik
தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வேட்பு மனு தாக்கல் செய்தார்..
தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் இந்தியா கூட்டணி வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தென்காசி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் தென்காசி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஏ.கே.கமல் கிஷோரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே. ஜெயபாலன் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் மேள தாளங்கள் முழங்க கூட்டணி கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்தார். அதனை தொடர்ந்து தனது வேட்பு மனுவை தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் தாக்கல் செய்தார். வேட்பு மனுதாக்கல் செய்த இந்தியா கூட்டணி வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாருக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே. ஜெயபாலன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து கூட்டணி கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாரை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் 11 வயது வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் ராணுவ வீரர் மற்றும் வளர்ப்பு தாய் கைது..
by Askar
written by Askar
மதுரையில் 11 வயது வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் ராணுவ வீரர் மற்றும் வளர்ப்பு தாய் கைது..
மதுரை மாநகர் கோசாகுளம் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி தாய் உயிரிழந்த நிலையில் தந்தையும் வேறு திருமணம் செய்ததால் சிறுமி மற்றும் அவரது அண்ணன் ஆகிய இருவரும் வளர்ப்பு பெற்றோரான பெரியம்மா, பெரியப்பா ஆகியோரின் பராமரிப்பில் இருந்துவந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சிறுமியின் அண்ணன் கண்மாயில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சிறுமி மட்டும் தனது வளர்ப்பு பெற்றோருடன் இருந்துவந்துள்ளார்.
மதுரை மாநகர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலை சிறுமி கழிவுறைக்குள் சென்று கதவு திறக்கவில்லை எனக் கூறி அருகில் உள்ளவர்களை வளர்ப்பு பெற்றோர் கூறி அழைத்துள்ளனர்.
அது சமயம் அருகில் உள்ளவர்கள் பதறி அடித்து வந்துள்ளனர்.அதன் பிறகு பெற்றோர்களே கதவை உடைத்து சிறுமியை தூக்கி வந்து வள்ளுவர்காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த நிலையில் அங்குள்ள மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு சிறுமியின் நிலையை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கே சென்றபோது சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சிறுமியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி கூடல்புதூர் காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து உடற்கூராய்விற்கு அனுப்பிவைத்தனர். உடற்கூராய்வின் போது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமி உயிரிழந்தபோது வீட்டில் சிறுமியுடன் இருந்த வளர்ப்பு பெற்றோரான பெரியப்பா செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி சந்திரபாண்டி ஆகிய இருவரையும் அழைத்துச்சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே சிறுமியின் உயிரிழப்பு தொடர்பாக குழந்தைகள் நல அலுவலர்களும் விசாரணை நடத்தினர்.
காவல்துறையினர் வளர்ப்பு பெற்றோரிடம் நடத்திய தீவிர விசாரணையில் சிறுமியின் பெரியப்பாவானா ராணுவ வீரராக இருந்துவரும் செந்தில்குமார் வளர்ப்பு மகளான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தபோது கத்தியதால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதும் பின்னர் அங்கு வந்த செந்தில்குமாரின் மனைவி சந்திரபாண்டி வளர்ப்பு மகளின் உயிரிழந்த நிலையில் கிடந்ததை பார்த்து சிறுமியின் உடலை கழிவறைக்குள் போட்டு தண்ணீர் குழாயை திறந்துவிட்டு கதவை மூடியதும் தெரியவந்துள்ளது.
கடைசியாக காளான் பிரியாணி சாப்பிட்டார் அதன் காரணமாக புட்பாய்சன் ஆகி மயங்கியிருக்கலாம் என கூறியதோடு அருகில் உள்ளவர்களையும் கழிவறையில் சிறுமி மயங்கி கிடப்பதாக ஏமாற்றி இவர்களே கதவை உடைத்தும் நடித்தும் நாடகமாடி அருகில் உள்ளவர்களை நம்பவைத்ததும் தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து விசாரணையின் அடிப்படையில் 11 வயது வளர்ப்பு மகளான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக போக்சோ வழக்கின் கீழ் ராணுவ வீரரான செந்தில்குமார் மற்றும் கொலை சம்பவத்தை மறைத்து உடைந்தயாக இருந்ததாக அவரது மனைவி சந்திரபாண்டி ஆகிய இருவரையும் கூடல்புதூர் காவல்துறையினர கைது செய்தனர். பின்னர் போக்சா நீதிமன்ற நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
11 வயது சிறுமி பாலியல் கொடூர கொலை வழக்கில் தீவிர விசாரணை நடத்தி கொலையாளியான வளர்ப்பு பெற்றோரை கைது செய்த கூடல்புதூர் மற்றும் தனிப்படை காவல்துறையினருக்கு மாநகர காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி-3
கப்ளிசேட்
உஸ்மானிய பேரரசு -26
(கி.பி 1299-1922)
உஸ்மானிய பேரரசர் முஹம்மது அல் பாதில் அவர்கள் அந்த தேவாலயத்தின் அழகால் அதிசயித்து போனார்.
ஹேஜியா ஷோபியா
(Hagiya sofiya church)
என்ற அந்த தேவாலயம் உலக புகழ் பெற்றது.
ஹேஜியா ஷோபியா என்ற ஒரு விலைமாது உலகின் மிகச்சிறந்த அழகியாக இருந்தார்.
உலகின் பணக்காரர்களுக்கும்
மன்னர்களுக்கும்
தனது அழகை மிகப் பெரிய பொருள்களுக்கு விற்றார்.
காண்ஸ்டாண்டி நோபிள் நகரில் ரோம மன்னர்
ஹேஜியா ஷோபியாவின்
அழகில் மெய்மறந்து போனார்.
அவளை திருமணமும் செய்து கொண்டார்.
அவளுக்கு மனது உறுத்தியது. தனது பாவங்களை கரைக்க
ஒரு தேவாலயம் கட்ட முடிவு செய்தாள்.
மன்னரின் உதவியாலும்,
தனது கறைபடிந்த பொருளாதாரத்
தாலும்,
அற்புதமான ஒரு தேவாலயத்தை கட்டினாள்.
தேவாலயத்தில் அற்புதமான ஓவியங்கள் வரையப்பட்டு இருந்தன.
ஏசு பிரானின் அற்புதமான ஓவியங்கள் வரையப்பட்டு மக்களை கவர்ந்தன.
மக்கள் பிற்காலத்தில்
ஹேஜியா ஷோபியாவையும்
வணங்கினார்கள்.
உஸ்மானிய பேரரசர் முஹம்மது அல்பாதில் தேவாலயத்தை சுற்றி பார்த்துவிட்டு அதன்
வரலாறுகளை அறிந்து கொண்டார்.
அந்த தேவாலயத்தின்
தலைமை குருவை அழைத்த மன்னர், இது மனிதர்களை வணங்க வேண்டிய இடமல்ல.
அண்ட சராசரங்களை படைத்து நம் எல்லோரையும் படைத்த இறைவனை வணங்கும் இடம் என்று போதித்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட தலைமை குரு தேவாலயத்தை
முறைப்படி மன்னரிடம் ஒப்படைத்தார்.
அந்த தேவாலயத்தை
எந்த வகையிலும் சிதைக்காமல் அந்த ஓவியங்களை திரைச்சீலைகளை வைத்து மறைக்க மன்னர் முகம்மது உத்தரவிட்டார்.
அங்கு நிர்வாகம் அமைக்கப்பட்டு முறைப்படி தொழுகைகள் நடத்த உத்தரவிடப்பட்டது.
இது போன்று அவர்களிடமிருந்து
அவர்களின் முழு சம்மதத்துடனேயே
பள்ளிவாசல்கள் உருவாயின.
பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் தோழர்
அபூ அய்யூப் அன்சாரி அவர்கள் முஆவியா (ரலி) அவர்களின் காலத்தில் காண்ஸ்டாண்டி நோபிள் படை எடுப்பில் முகாமிட்டு தங்கியிருந்த போது மரணமடைந்தார்.
அவரின் ஆசைப்படி,
அங்கேயே அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
உஸ்மானிய பேரரசர்
முஹம்மது அல் பாதில் அவர்கள் அந்த அடக்கத்தலத்தை புதுப்பித்தார்.
அங்கு ஒரு அழகான மசூதியை கட்டினார்.
இந்த மசூதியில்தான்
முஹம்மது அல் பாதில் அவர்கள்
உஸ்மானிய பேரரசின் மன்னராக முடிசூடி பதவி ஏற்றார்.
சுல்தான்களுக்கு தனி
அடக்கத்தலம் உருவாக்கப்பட்டது.
அது சிறந்த சுற்றுலாத் தலமாக இருக்கிறது.
நிறைய கல்லூரிகள் உருவாக்கப்பட்டன.
அரசாங்கத்தின் நிதிஉதவிகள் , மானியங்கள், சலுகைகள் எல்லா மதத்தினர்களும்
சமமாக வழங்கப்பட்டன.
பேரரசர் முஹம்மது அல்பாதில் அவர்கள் ரோமை கைப்பற்ற திட்டம் தீட்டினார்.
ரோமை நோக்கி நகர படைகளையும் தயார்
படுத்தினார்.
30 வருடங்கள் மிகச்சிறந்த ஆட்சி செய்த பேரரசர் முஹம்மது அல்பாதில் அவர்கள்
மரணமடைந்தார்.
உஸ்மானிய சாம்ராஜ்யமே துக்கத்தில் துடித்து போனது.
காண்ஸ்டாண்டி நோபிள் நகரில் கிறிஸ்தவ சாம்ராஜ்யம் வீழ்த்தப்பட்டதால்
போப் கொதித்து எழுந்தார்.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு கீழை நியூஸ் மற்றும் சத்திய பாதை ஆசிரியர் சையது ஆப்தீன் வாழ்த்து..
by Askar
written by Askar
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஆரம்பமாகியுள்ளது.
இன்று முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரையில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
12 ஆயிரத்து 616 பள்ளிகளை சேர்ந்த 9 லட்சத்து 38 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவ மாணவிகளுக்கு கீழை நியூஸ் மற்றும் சத்திய பாதை குழுமத்தின் ஆசிரியர் சையது ஆப்தீன் கீழ்கண்டவாறு வாழ்த்து கூறியுள்ளார்.
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள மாணவச் செல்வங்களே பதற்றமின்றி நம்பிக்கையோடு மன மகிழ்ச்சியுடனும் மன தைரியத்துடனும் தேர்வை எழுதுங்கள். வினாத்தாளைப் முழுமையாக படித்து தேர்வை எதிர்கொள்ளுங்கள்! உங்கள் மீதான முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்.
தேர்வு எழுதும் அணைத்து மாணவ மாணவிகளுக்கும் கீழை நியூஸ் மற்றும் சத்திய பாதை குழுமத்தின் சார்பாக குழுமத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளார்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல்லில் வாலிபர் வெட்டி படுகொலை செய்த வழக்கில் 3 பேர் கைது..
திண்டுக்கல் சவேரியார் பாளையம் அருகே உள்ள CKCM-காலனி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீராகௌதம் என்பவர் வெட்டி படுகொலை செய்தது தொடர்பாக நகரத்திற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து S.P. பிரதீப் உத்தரவின் பேரில் நகர் ASP.சிபின் மேற்பார்வையில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் மோகன் தலைமையிலான போலீசார் அஜய்குமார், விஜய்ஆதிராஜ், மோகன்சுந்தர் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நிலக்கோட்டை அருகே முறையான ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 57 ஆயிரத்து 570 ரூபாய் பறிமுதல்..
by Askar
written by Askar
நிலக்கோட்டை அருகே முறையான ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 57 ஆயிரத்து 570 ரூபாய் பறிமுதல்..
நேற்று இரவு (26/03/2024) நிலக்கோட்டை அருகே பறக்கும் படையைச் சேர்ந்த பிரவீன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது வத்தலக்குண்டு -நிலக்கோட்டை வழியாக பெரிய குளத்தைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் ஓட்டி வந்த டாட்டா ஏசி வாகனத்தை ஆய்வு செய்தனர். அப்பொழுது முறையான ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 57 ஆயிரத்து 570 ரூபாயை கைப்பற்றி நிலக்கோட்டை வட்டாட்சியர் தனுஷ்கோடி இடத்தில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் அந்த பணத்தை வட்டாட்சியர் தனுஷ்கோடி கருவூலத்தில் ஒப்படைத்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு; ராணுவ வீரர் மற்றும் வளர்ப்பு தாய் போக்சோ சட்டத்தின் கீழ் கைது..
written by Abubakker Sithik
மதுரையில் 11 வயது வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் வளர்ப்பு தந்தையான ராணுவ வீரர் மற்றும் வளர்ப்பு தாய் கைது – அப்பாவி போல நாடகமாடிய கொடூர வளர்ப்பு தந்தை.
மதுரை மாநகர் கோசாகுளம் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி தாய் உயிரிழந்த நிலையில் தந்தையும் வேறு திருமணம் செய்ததால் சிறுமி மற்றும் அவரது அண்ணன் ஆகிய இருவரும் வளர்ப்பு பெற்றோரான பெரியம்மா, பெரியப்பா ஆகியோரின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக சிறுமியின் அண்ணன் கண்மாயில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சிறுமி மட்டும் தனது வளர்ப்பு பெற்றோருடன் இருந்து வந்துள்ளார். மதுரை மாநகர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி தேர்வு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலை சிறுமி கழிவறை சென்று விட்டு கதவு திறக்கவில்லை என கூறி அருகில் உள்ளவர்களை வளர்ப்பு பெற்றோர் கூறி அழைத்துள்ளனர். அப்போது அருகில் உள்ளவர்கள் வந்தபோது பெற்றோர்களே கதவை உடைத்து சிறுமியை தூக்கி வந்து வள்ளுவர் காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த போது அங்குள்ள மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரை செய்துள்ளனர். இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது சிறுமி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சிறுமியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி கூடல்புதூர் காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் உடற்கூராய்வின் போது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் உயிரிழந்த போது வீட்டில் சிறுமியுடன் இருந்த வளர்ப்பு பெற்றோரான பெரியப்பா செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி சந்திரபாண்டி ஆகிய இருவரையும் அழைத்துச்சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே சிறுமியின் உயிரிழப்பு தொடர்பாக குழந்தைகள் நல அலுவலர்களும் விசாரணை நடத்தினர்.
காவல்துறையினர் வளர்ப்பு பெற்றோரிடம் நடத்திய தீவிர விசாரணையில், சிறுமியின் வளர்ப்பு பெற்றோரான பெரியப்பாவான ராணுவ வீரராக இருந்து வரும் செந்தில்குமார் வளர்ப்பு மகளான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தபோது வளர்ப்பு மகள் கத்தியதால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதும், பின்னர் அங்கு வந்த செந்தில்குமாரின் மனைவி சந்திரபாண்டி வளர்ப்பு மகளின் உயிரிழந்த நிலையில் கிடந்ததை பார்த்த சிறுமியின் உடலை கழிவறைக்குள் போட்டுவிட்டு தண்ணீர் குழாயை திறந்துவிட்டு கதவை மூடிவிட்டு பின்னர் அருகில் உள்ளவர்களை அழைத்து சிறுமி குளிக்கசென்று நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கவில்லை என கூறி கதறி அழுது நடித்து அழைத்தபோது அருகில் உள்ளவர்கள் வீட்டிற்குள் நுழையும் போதே இவர்களாகவே கதவை உடைத்துவிட்டு சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்ததாகவும், கடைசியாக காளான் பிரியாணி சாப்பிட்டார். அதன் காரணமாக புட்பாய்சன் ஆகி மயங்கியிருக்கலாம் என கூறியதோடு அருகில் உள்ளவர்களையும் கழிவறையில் சிறுமி மயங்கி கிடப்பதாக ஏமாற்றி இவர்களே கதவை உடைத்தும், நடித்தும் நாடகமாடி அருகில் உள்ளவர்களை நம்பவைத்ததும் தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து விசாரணையின் அடிப்படையில் 11 வயது வளர்ப்பு மகளான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக போக்சோ வழக்கின் கீழ் ராணுவ வீரரான செந்தில்குமார் மற்றும் கொலை சம்பவத்தை மறைத்து உடைந்தயாக இருந்ததாக அவரது மனைவி சந்திரபாண்டி ஆகிய இருவரையும் கூடல்புதூர் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் போக்சா நீதிமன்ற நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். வளர்ப்பு மகளான 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூர பெரியப்பாவான செந்தில்குமார் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவத்தில் பணிபுரிந்து சுபேதாராக இருந்து வருகிறார். சில நாட்களாக விடுமுறையில் வந்து இதுபோன்ற சொல்லொணா கொடூரத்தை அரங்கேற்றியது குறிப்பிடத்தக்கது. 11 வயது சிறுமி பாலியல் கொடூர கொலை வழக்கில் தீவிர விசாரணை நடத்தி கொலையாளியான வளர்ப்பு பெற்றோரை கைது செய்த கூடல்புதூர் மற்றும் தனிப்படை காவல்துறையினருக்கு மாநகர காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருமங்கலத்தில் பூட்டிய காருக்குள் அழுகிய ஆண் சடலம் மீட்பு; போலீசார் விசாரணை..
written by Abubakker Sithik
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பூட்டிய காருக்குள் அழுகிய நிலையில், 50 வயது மிக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு – கொலையா? போலீஸ் விசாரணை..
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், உசிலம்பட்டி அருகே காளப்பன்பட்டியை சேர்ந்தவர் சுகுமாரன். இவர் திருமங்கலம் அரசு போக்குவரத்து பணிமனையில், டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் சொந்தமாக கார் வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, இவரது காரை திருமங்கலம் பஸ் டிப்போவின் வெளிப்பகுதியில் பஸ் ஸ்டாப்பிற்கு அருகில் நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில், காருக்குள் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில், அருகில் இருந்தவர்கள் பார்த்த போது காருக்குள் உடல் அழுகிய நிலையில் ஒருவரின் சடலம் இருந்தது.
உடனடியாக, திருமங்கலம் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காரில் அழுகிய நிலையில் இருந்த, 50 வயது மிக்க இறந்தவர் உடலை மீட்டு, இறந்தவர் யார்? என்பது குறித்தும், காருக்குள் எப்படி வந்தார் என்பது குறித்தும், கொலை செய்து காரில் போட்டுச் சென்றனரா? என்ற பல கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.