மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அருகில் உள்ள அம்மு முத்தன் பட்டியைச் சேர்ந்தவர் சிவரஞ்சன்(32).விவசாயியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.இவர் இன்று காலை வழக்கம் போல் தனது தோட்டத்தில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டாரை இயக்கியுள்ளார்.அப்பொழுது மின்சாரம் தாக்கி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவமறிந்த எழுமலை போலிசார் சம்பவ இடத்திற்குச்சென்று சிவரஞ்சன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.முதற்கட்ட விசாரணையில் நள்ளிரவில் பெய்த மழையில் மோட்டார் சுவிட்ச் இருந்த சுவற்றில் ஈரப்பதம் அடித்து மின்சாரம் கசிந்துள்ளதும் அதனால் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததும் தெரிய வந்தது.மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Category:
மாநில செய்திகள்
மாதிரி கிராம திட்ட செயல்பாடுகள்: புத்தேந்தல் ஊராட்சியில் பல்துறை பணி அலுவலர்கள் ஆய்வு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம், செப்.2- இராமநாதபுரம் வட்டாரம் புத்தேந்தல் ஊராட்சியில் மாதிரி கிராம திட்ட செயல்பாடுகளை சென்னை பல்துறை பணி திட்ட அலகு அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
தமிழ்நாடு பாசன வேளாண் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் வைகை உப வடிநிலப்பகுதி பகுதி I கீழ், ராமநாதபுரம் வட்டார வேளாண் துறை சார்பில் புத்தேந்தல் மாதிரி கிராமமாக தேர்வு செய்யப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக
திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வேளாண் துறை தோட்டக்கலை துறை , வேளாண் பொறியியல் துறை , பொதுப்பணி துறை , (கீழ் வைகை உபவடி நிலப்பகுதி), கால்நடை பராமரிப்பு துறை, மீன் வளம், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம் ஆகிய துறைகள் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக அலுவலர்கள் தங்கள் துறை மூலம் செயல்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
மாதிரி கிராம திட்ட செயல்பாடுகளை சென்னை, பொதுப் பணித்துறையின் கீழ் இயங்கும் பல்துறை பணிதிட்ட அலகு அலுவலர்கள் புத்தேந்தல் கிராமத்தில் கள ஆய்வு செய்து விவசாயிகளிடம் கலந்துரையாடினர். மாதிரி கிராம திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நுழைவு கட்டட பணிகளை பார்வையிட்டனர். தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்ட பல்துறை பணி அலகு வேளாண் நிபுணர் ஷாஜகான். செயற்பொறியாளர் சுப்பாராஜ், மீன் வள நிபுணர் பாலா சிங், சுற்றுச்சூழல் நிபுணர் ஜுதித் டி சில்வா ஆகியோர் அடங்கி குழு ஆய்வு செய்தனர். புத்தேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் கோபிநாத், மாநில திட்ட வேளாண் துணை இயக்குநர் முருகேசன், பொதுபணித்துறை – கீழ் வைகை உபவடிநிலப் பகுதி செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி செயற்பொறியாளர். ஜெயதுரை, ராமநாதபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன், ராமநாதபுரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் புனித சுகன்யா, வேளாண் அலுவலர்கள் தமிழ், ரவிச்சந்திரன், உதவி வேளாண் அலுவலர் முத்துக்குமார், உதவி தோட்டக்கலை அலுவலர் இளவரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மனிதருக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் தென்னை – உலகத் தேங்காய் நாள் (world coconut day) (செப்டம்பர் 2)..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
உலகத் தேங்காய் நாள் ( world coconut day ) செப்டம்பர் 2 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. 1998ஆம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற இந்தோனேசியாவின் ஜகார்த்தாவைத் தலைமையகமாகக் கொண்ட ஆசிய பசிபிக் தெங்கு குழும மாநாட்டில் செப்டம்பர் 2 ஆம் தேதி உலக தேங்காய் நாளாக அறிவிக்கப்பட்டது. வறுமைக் குறைப்பில் உயிர்நாடியாக விளங்குகின்ற தெங்குப் பயிரின் முக்கியத்துவம் தொடர்பாக மக்களிடையே அதிக விழிப்புணர்வினை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு இந்நாள் அறிவிக்கப்பட்டது. தென்னையை ‘பூலோகக் கற்பகவிருட்சம்’ என்பார்கள். தருவதில் தாயைப் போன்ற தயாள குணம்கொண்டது தென்னை. தென்னம் பாளை, குருத்து, இளநீர், தேங்காய், தேங்காய் எண்ணெய் என ஒவ்வொரு நிலையிலும் மனிதருக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது.
தென்னை ஓலைகளில் பட்டு வரும் குளிர்ச்சியான காற்று, நம் உடலில் உள்ள சுரப்பிகளைத் தூண்டி நலம் சேர்க்கும். தென்னை ஓலையில் கூரை வேய்வது இதனால்தான். தேங்காய், இனிப்புச் சுவை உடையது. பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளுக்கு இணையான ஊட்டச்சத்து நிறைந்தது. தேங்காய் ஓட்டுக்கும் பருப்புக்கும் இடையே உள்ள தோல் போன்ற பகுதி, கொழுப்பைக் கரைக்கும் தன்மை உடையது. குடலில் உள்ள புழுக்களை நீக்கவும் மலச்சிக்கலைப் போக்கவும் பயன்படும். அல்சைமர் எனும் ஞாபக மறதி நோயைப்போக்கும். தேள், நட்டுவாக்கலி கொட்டினால் அதன் விஷம், கடுப்பு நீங்கவும் தேங்காய் பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் `சைந்தவலாவனம்’ என்ற மருந்து செய்வதற்கு தேங்காய் முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்து வயிறு உப்புசம், வயிற்றுப்புண், வயிற்றுவலியைக் குணப்படுத்தும்.
இளநீர் குளிர்ச்சியைத் தரவல்லது. தாகத்தைத் தணித்து செரிமானத்தைச் சீராக்கும். சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகப் பாதையைச் சுத்தப்படுத்தும். சிறுநீரகக்கல் பிரச்னை, சின்னம்மை, பெரியம்மை நோய்கள் வராமல் தடுக்கும். கர்ப்பக் காலத்தில் ஏற்படும் அம்னியோட்டிக் திரவ (Amniotic fluid) குறைபாட்டை, தொடர்ந்து இளநீர் அருந்துவதன் மூலம் சரிசெய்யலாம். ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா குறைபாட்டைச் சரிசெய்ய இளநீர் உதவுகிறது. தென்னையில் இருந்து வரும் பூவைப் பயன்படுத்தி கஷாயம் செய்து அருந்தினால், அதீத ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் குணமடையும். ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியம் செய்யப் பயன்படுகிறது.
தேங்காய்ப்பால், பசும்பாலுக்கு நிகரான குணம் உடையது. ஆண்மையைப் பெருக்க வல்லது. வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும். செரிமானத்தைத் தூண்டும். தாய்ப்பால் சுரப்புக்கு உதவும். வாதத்தைத் குறைத்து, கபத்தைக் கூட்டும். உடலுக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும். சருமத்தின் அழகைக் கூட்டும். தேங்காய்ப்பாலைக் காய்ச்சி வடித்து எடுப்பது ‘உருக்கு தேங்காய் எண்ணெய்’ ஆகும். இதைப் பயன்படுத்தி, ஆயுர்வேத மருத்துவத்தில் ‘நீலிபிருங்காதி கேர தைலம்’ தயாரிக்கப்படுகிறது. இது, முடி கருமையாகவும் அடர்த்தியாகவும் வளர உதவும். தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெயில் அதிக அளவில் சேச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. இதனால், மிகவும் ஆபத்தானது என்று ஒதுக்கப்பட்டது. தேங்காய் எண்ணெய், இதய ரத்தக்குழாயில் அடைப்பை ஏற்படுத்துகிறது என்பது இதுவரை நிரூபிக்கப்பட்டுள்ளது. தேங்காய் எண்ணெய் ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அளவைக் குறைத்து, நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்கிறது. தற்போது வெளியாகும் ஆராய்ச்சிகளில், தேங்காய் எண்ணெய் நல்ல சமையல் எண்ணெய் எனக் கண்டறிந்துள்ளனர்.
‘இந்தியாவில் இதயநோய் குறைவாக உள்ள மாநிலம் கேரளா’ என்று மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. இதற்குக் காரணம், அங்கு சமையலில் பிரதானமாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுவதுதான். தலைமுடி வளர்ச்சிக்கும், ஆரோக்கியம், உறுதியை மேம்படுத்தவும் உதவுகிறது. தலைமுடியில் பாக்டீரியா கிருமி வளர்ச்சியைத் தடுக்கிறது. தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அதை 7 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், நம் உடலில் பல ஆரோக்கியமான மாற்றங்களைக் காணலாம். நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாவதுடன், சிறுநீர் பாதை தொற்றுகள், ஈறு நோய்கள் குணமாகும். காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ்களை அழிக்கும். உடலின் ஆற்றல் மற்றும் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு, தைராய்டு சுரப்பியை சீராக செயல்படுத்த உதவுகிறது.
உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, சிறுநீரக கற்கள் போன்ற சிறுநீரக நோய்களை குணமாக்குகிறது. தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அது செரிமானம் மற்றும் வாய்வு தொல்லை போன்ற பிரச்சனைகளை தடுக்கலாம். தேங்காய் தண்ணீரை எவ்வளவு குடித்தாலும், அது உடலில் கொழுப்புக்கள் சேர்வதை குறைத்து, பசியை கட்டுப்படுத்தி, உடல் எடை அதிகரிப்பதை தடுக்க உதவுகிறது. காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்தால், அது உடலின் எலெக்ரோலைட்டுக்களை சீராக்கி, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. கடுமையான தலைவலி மற்றும் ஆல்கஹால் குடிப்பதன் மூலம் ஏற்படும் உடல் வறட்சி பிரச்சனை தடுக்கப்படுவதுடன், உடலின் நீர்ச்சத்து அதிகமாகும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபட தேங்காய் தண்ணீர் உதவுகிறது.
Source By: Jayasrimahi
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சீரொளி இடுக்கிகள் (optical tweezers) என்னும் மிக நுட்பமான கருவியைக் கண்டுபிடித்த, சீரொளி இடுக்கியின் தந்தை ஆர்தர் ஆசுக்கின் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 2, 1922)…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
ஆர்தர் ஆசுக்கின் (Arthur Ashkin) செப்டம்பர் 2, 1922ல் நியூயார்க்கின் புரூக்கிலின் பகுதியில் பிறந்து அங்கேயே வளர்ந்தார். இவருடைய பெற்றோர்கள் இசடோர் ஆசுக்கின், அன்னா ஆசுக்கின் ஆவர். தந்தை இசடோர் ஒடெசாவில் (உக்ரைனில்) இருந்து, தனது 18-வது அகவையில் அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தார். தாயார் அன்னா உக்ரைனில் இருந்து குடிபெயர்ந்தவர் ஆவார். ஆர்தர் ஆசுக்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்தார். அதே நேரத்தில் பல்கலைக்கழகத்தின் கதிர்வீச்சு ஆய்வுக்கூடத்தில் தொழினுட்ப உதவியாளராகவும் இருந்தார். இப்பொறுப்பில் இருந்தபொழுது அமெரிக்கப் படைத்துறைக்கான இரேடார் என்னும் தொலைபொருளுணர்விக் கருவிக்கான நுண்ணலை தோற்றிவிக்கும் காந்தக் கருவியைச் செய்யப் பணித்தார்கள். இவர் பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்காக இருந்தாலும், இப்பொறுப்பு இவருக்கு வழங்கப்பெற்றது. இவ்வாய்ப்பின் பயனாக மூன்று நோபல் பரிசாளர்களை அவர் சந்திக்க நேர்ந்தது.
ஆர்தர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் படிப்பு முடிந்த பிறகு, கார்ணெல் பல்கலைக்கழகத்தில் மேற்பட்டப் படிப்பு படிக்கச் சென்றார். அங்கே அணுக்கருவியியல் துறையில் படித்தார். அக்காலத்தில் மான்ஃகாட்டன் திட்டம் என்னும் அணு ஆயுதத் திட்டத்திற்கான பணிகள் நடந்து வந்தன. அதில் இவருடைய உடன்பிறந்தார் சூலியசு ஆழ்சுகின் பங்களிப்பவராக இருந்தார். இத்தொடர்பால் ஆர்தர் ஆழ்சுகினுக்கு நோபல் பரிசாளர் ஃகன்சு பெத்து (Hans Bethe) அவர்களுடனும் ரிச்சர்டு ஃபெயின்மன் (Richard Feynman) அவர்களுடனும் இன்னும் கார்ணெல் பல்கலைக்கழகத்துக்கு வருவோரிடமும் தொடர்பு ஏற்பட்டது. ஆர்தர் கார்ணெல் பல்கலைக்கழகத்தில் முனைவர்ப் பட்டம் பெற்ற பின்னர் பெல் ஆய்வுக்கூடத்தில் இவருடைய நெறியாளராக இருந்த சிட்னி மில்மன் அவர்களின் பரிந்துரையின் பேரில் பணிக்குச் சென்றார்.
பெல் ஆய்வுக்கூடத்தில் 1960 முதல் 1961 வரை நுண்ணலைத் துறையில் பணி புரிந்தார். பின் சீரொளித் திறையில் ஆய்வை மேற்கொண்டார். இவர் ஒளிநார், நேர்சார்பிலா ஒளியியல், பராமெற்றிக்கு அலைவி, பராமெற்றிக்கு மிகைப்பி ஆகிய துறைகளில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதினார். பெல் ஆய்வுக்கூடத்தில் இருந்தபொழுது தகைவுமின்விளைவுப் படிகம் (piezoelectric crystal), ஒளிமுறிவு விளைவு ஆகிய துறைகளிலும் புது கண்டுபிடிப்புகள் செய்தார். ஆர்தர் பணியானது 1997 ஆம் ஆண்டு இயற்பியல் நோபல் பரிசு பெற்ற இசுட்டீவன் சூ அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கும் அடிப்படையாக அமைந்தது. சூவின் ஆய்வில் சீரொளியால் அணுக்களைக் குளிர்விப்பதும் சிக்கவைப்பதும் முக்கிய பங்கு வகித்தன. ஆசுக்கின் 1960-களின் கடைசியில் சீரொளியைக் கொண்டு சிறு துகள்களைப் பிடித்துக் கட்டுப்படுத்துவதைச் செய்தார். இதன் விளைவாக 1986 இல் சீரொளி இடுக்கிகள் அல்லது ஒளியிடுக்கிகள் (optical tweezers) என்னும் மிக நுட்பமான கருவியைக் கண்டுபிடித்தார். இதன் பயனாய் தனி அணுக்களையும், சிறு மூலக்கூறுகளையும் உயிரணு முதலான உயிரியப் பொருட்களையும் சீரொளி இடுக்கியில் சிக்க வைத்து அலச முடிகின்றது. இதற்கு அடிப்படையாக இருக்கும் இயற்பியல் விளைவு ஒளியின் அடர்த்தி வேறுபாட்டால் எழும் மிக நுட்பமான கதிராற்றல் அழுத்தவேறுபாடு ஆகும்.
ஆசுக்கின் இந்த உயர்நுட்ப சீரொளி இடுக்கியின் தந்தை எனக் கருதுகின்றார்கள். இக்கண்டுபிடிப்புக்காகத்தான் 2018 ஆம் ஆண்டின் இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பெற்றது. நோபல் பரிசு பெற்றவர்களிலேயே இவர்தான் அகவை (96 வயதில்) கூடியவர் ஆவார். ஆர்தர் ஒளியியல் குமுகத்தின் சிறப்பாளராகவும், அமெரிக்க இயற்பியல் குமுகத்தின் சிறப்பாளராகவும் , ஐ.இ.இ.இ நிறுவனத்தின் சிறப்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 47 புதுக்கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமம் பெற்றுள்ளார். 2003 ஆம் ஆண்டு யோசப்பு கீத்திலி விருதும், 2004 இல் ஆர்வி பரிசும் பெற்றார். 1984 இல் அமெரிக்க தேசியப் பொறியியல் அகாதெமியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய அறிவியல் அகாதெமியின் உறுப்பினராகவும் 1996 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அங்கன்வாடி பணியாளரின் தாலி செயின் வழிப்பறி: டூவீலரில் வந்த இருவர் கைவரிசை..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம், செப்.2- இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே பாப்பானேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி ரமேஷ் குமாரி, 40. தற்போது ராமநாதபுரம் காட்டு பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கிறார். இவர் தேர்த்தங்கல் கிராமத்தில் அங்கன்வாடி பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இன்று காலை பணிக்குச் சென்ற இவர் வேலை முடிந்த பின் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். ஆர்.காவனூர் அருகே வந்த போது எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர், மீண்டும் திரும்பி வந்து ரமேஷ் குமாரி கழுத்தில் கிடந்த 6 பவுன் தாலி செயினை பறித்து சென்றனர். இதில் இரு சக்கர வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த
ரமேஷ் குமாரி காயமடைந்தார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுவி சிகிச்சைக்கு பின் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இது குறித்து பஜார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் பிரபல பீடி தயாரிப்பு கம்பெனியின் பெயரில் போலி பீடி தயாரித்து விற்பனை செய்த நபர் கைது..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை டிவிஎஸ் நகர்ப்பகுதியை சேர்ந்த முகமது அப்துள்ளா என்பவர் பிரபல பீடி தயாரிப்பு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவரின் கிளை நிறுவனமான செனாய் டிரேடர்ஸ் மூலம் பீடிகளை உற்பத்தி செய்து மதுரை மாநகர் பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் மங்களூர் கணேஷ் பீடி நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றிவரும் அவினாஷ் பரமேஸ்வர் நாயக் என்பவர் தங்களது தயாரிப்பு பீடிகள் தத்தனேரி, செல்லூர் பகுதிகளில் தங்களது நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி போலியாக பீடிகளை தயாரித்து சிலர் விற்பனை செய்துவருவதாக புகார் தெரிவித்தார். தொடர்ந்து மதுரை செல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மதுரை தத்தனேரி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் போலி பீடி களை தயாரித்து அப்பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரியவர மதுரை செல்லூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அவர் பதுக்கி வைத்திருந்த போலி பீடி கட்டுகளை போலீசார் கைப்பற்றினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகர தமுமுகவின் 29 ஆவது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சிகள் ..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் 29 ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு குளச்சல் நகர தமுமுக சார்பாக நகர தலைவர் பைரோஸ் காஜா தலைமையில் குளச்சல் அண்ணா சிலை அருகில் உள்ள கழக கொடிக்கம்பத்தில் தமுமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சுலைமான் அவர்கள் கழக கொடி எற்றி வைத்தார் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது மற்றும் குளச்சல் அரசு மருத்துவமனையில் இருக்கின்ற நோயாளிகளுக்கு மதிய உணவுகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தமுமுக நகர செயலாளர் மாகின்.மமக நகர செயலாளர் அபுதாய்ரு. நகர பொருளாளர் யாசர் அரபாத். தமுமுக மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் அபூபக்கர் சித்திக். சமூக சேவகர் குளச்சல் முகம்மது சபிர். முன்னாள் நகர தலைவர் பயாஸ் ஹக்கீம். தமுமுக முன்னாள் மாவட்ட செயலாளர் முகம்மது சபீக் .முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகம்மது பஷீர் . முன்னாள் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ரிபாய் கான் . தமுமுக நகர துணை செயலாளர் சமீர். தமுமுக மூத்த உறுப்பினர் அஜிஸ். மருத்துவ சேவை அணி நகர செயலாளர் அகமது கபீர். தொண்டரணி நகர செயலாளர் முஜீப் ரஹ்மான். எஸ் எம் ஐ நகர செயலாளர் ஆதில்.எஸ் எம் ஐ நகர பொருளாளர் ஆரிப். எஸ் எம் ஐ நகரதுணைச் செயலாளர் அபுதாஹிர். வார்டு பொருளாளர் சேக் முகம்மது. எஸ் எம் ஐ வார்டு நிர்வாகிகள் சிராஜ். ஆசிப். பீர்.மற்றும் கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி அருகே கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுலை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரில் உள்ள சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கோட்டைகல் சிவன் கோவில் உள்ளது., இந்த கோவில் சிதலைமடைந்து காணப்பட்ட சூழலில் தற்போது கோவிலை புணரமைப்பு செய்யும் பணி நடைபெற்று வருகின்ற சூழலில், இந்த கோவிலுக்கு சொந்தமான சுமார் 8 ஏக்கர் நிலம் உள்ள நிலையில் ஒரு சிலர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள சூழலில் ஊராட்சி நிர்வாகம், வருவாய்துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு செய்த நிலத்தை அளவீடு செய்து அகற்றி வருகின்றனர்.,
இதில் தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சிமன்ற தலைவர் பாலமுருக மகாராஜா, துணைத்தலைவர் மணிமாறன், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் வருவாய்துறையினர் ஆக்கிரமிப்பு அளவீடு பணி நடைபெற்று வருகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை நீதிமன்ற மாட்டுத்தாவணி செல்லும் சாலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக மணல் ஜல்லி உள்ளிட்ட கலவைகள் கொண்டு சாலையில் போடப்பட்டுள்ளது ஆனால் கொட்டப்பட்ட ஜல்லி மற்றும் புழுதி மண்கள் இரு சக்கர வாகன ஓட்டிகள் முதல் கனரக வாகன ஓட்டிகள் வரை வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் சிரமம் அடைகின்றனர் மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் முன்னாள் செல்லக்கூடிய வாகனங்கள் என்ன செல்கிறது என்பது கூட அறிய முடியாமல் முன்னே செல்கின்ற வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுகிறது மேலும் இந்த தூசு காற்றானது சுவாசிப்பதால் சுவாச நோய்கள் மற்றும் மூச்சு தினார் ஏற்படுவதாக வாகன ஓட்டிகளும் அப்பகுதி மக்களும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பலமுறை சொல்லியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாகன ஓட்டிகளும் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களும் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர் துரிதமாக சாலை அமைத்து பெரும் விபத்தை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையும் நடவடிக்கை எடுக்குமா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மம்சாபுரம் பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் கோரி, கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
திருவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம் பேரூராட்சியின் அனைத்து வார்டுகளிலும், அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மம்சாபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர தலைவர் முருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், மம்சாபுரம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் செய்யப்படாத நிலையே உள்ளது. இங்கு அடிப்படை வசதிகளை செய்வதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை மம்சாபுரம் பேரூராட்சியில் செயல்படுத்த வேண்டும். சாலையோர ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் இல்லாமல் அகற்ற வேண்டும், பேரூராட்சியில், தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறையை போக்க காலிப்பணி இடங்களில் உடனடியாக பணியாளர்களை நியமிக்க வேண்டும். அனைத்து பகுதிகளுக்கும் தடையில்லாமல் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர். பின்னர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பொன்னுபாண்டியன், ராமசாமி, முன்னாள் எம்.பி. லிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவில்லிபுத்தூர் :விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவில்லிபுத்தூர் ஊரணிபட்டி தெருவைச் சேர்ந்த சிவமணி என்பவரது வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகை திருட்டு போனது. அதே நாளில் மதுரை சாலையில் உள்ள ஒரு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த ஸ்மார்ட் டிவி திருடு போனது. இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை பிடிக்க, திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார், சம்பவம் நடந்த பகுதிகளில் இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்டம், கோவில்மதிமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராமஜெயம் (30), மதுரை மாவட்டம், மேலூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (42), ஈரோடு மாவட்டம், அக்கரைபாளையம் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் (32) ஆகிய 3 பேரையும் பிடித்து போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட 3 பேரிடம் இருந்து 8 பவுன் நகை மற்றும் 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் டிவியை போலீசார் கைப்பற்றினர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து கைது செய்த தனிப்படை போலீசாருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசப்பெருமாள் பாராட்டு தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் மரியாதை..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெற்கட்டும் செவலில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னன் பூலித்தேவரின் 308-வது பிறந்த நாள் 01.09.2023 வெள்ளிக் கிழமை தமிழக அரசின் சார்பில் கொண்டாடப்பட்டது. தென்காசி மாவட்டம் நெற்கட்டும் செவலில் உள்ள மாமன்னர் பூலித்தேவன் சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் தலைமையில் தமிழக அரசின் சார்பில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், முன்னாள் மாவட்ட கழக செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான டாக்டர் செல்லத்துரை, சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான ராஜா, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலை குமார், புளியங்குடி நகர்மன்ற தலைவியும் தென்காசி வடக்கு மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளருமான விஜயா செளந்திரபாண்டியன், கடையநல்லூர் நகரக் கழக திமுக செயலாளர் அப்பாஸ், யூனியன் துணைத் தலைவர் ஐவேந்திரன் தினேஷ், நகர் மன்ற துணைத் தலைவர் ராசையா, திட்டக்குழு உறுப்பினர் முருகன், நகர்மன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், முகமது அலி, நகர்மன்ற தலைவர் ஹபிபூர் ரகுமான் உட்பட கட்சி நிர்வாகிகள், கூட்டுறவு உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுகழகத்தின் சார் பணியினர், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழக காங்கிரஸ் மாநில பொருளாளர் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன், கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணிப்பித்த பெண் பயனாளிகளின் பட்டியலைக்கொண்டு மதுரை ஆட்சியர் சங்கீதா வீடுவீடாக ஆய்வு…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணிப்பித்த பெண் பயனாளிகளின் பட்டியலைக்கொண்டு மதுரை ஆட்சியர் சங்கீதா வீடுவீடாக ஆய்வு செய்தார். ஆய்வு செய்வதை படமெடுக்க செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு.
தமிழக அரசு சார்பில் மகளிருக்கு ரூ1000வழங்கும் கலைஞரின் மகளிர் உரிமைத்திட்டம் வழங்கப்பட உள்ளது.இதற்காக மகளிரிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் தற்போது உண்மையான பயனாளிகளை தேர்ந்தெடுக்கும் பணிகளை அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் மகளிர் உரிமைத்திட்டத்திற்கு பெண் பயனாளிகளை தேர்ந்தெடுக்க விண்ணிப்பித்த பெண் பயனாளிகளின் பட்டியலைக் கொண்டு மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா செல்லம்பட்டி யூனியன் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.முதற்கட்டமாக செல்லம்பட்டி பகுதியில் ஆய்வு செய்து சில பயனாளிகளை தேர்வு செய்த ஆட்சியர் சங்கீதா செய்தியாளர்கள் உடன் வருவதைப் பார்த்தவுடன் செய்தியாளர்களுக்கு அனுமதி இல்லை எனக்கூறி உடனடியாக அதிகாரிகளை விட்டு செய்தியாளர்களை அப்புறப்படுத்த வைத்தார்.ஆய்வு செய்வது போல் ஒரு புகைப்படம் எடுத்து விட்டுச்செல்கின்றோம் என்ற போதும் அனுமதிக்கவில்லை.ரகசியமாக நடைபெறும் இந்த ஆய்வினால் உண்மையான பெண் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவது சாத்தியமாகுமா என அங்கிருந்த பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இஸ்ரோ பெண் விஞ்ஞானி நிகர்ஷாஜி..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளால் அனுப்பப்பட உள்ள ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனராக பணியாற்றி பெண் விஞ்ஞானி நிகர்ஷாஜி தென்காசி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளால் செப்டம்பர் 2-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டோவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஆதித்யா எல் -1 என்ற செயற்கைக்கோள் விண்ணிற்கு அனுப்பப்பட உள்ளது. அதற்கான கவுண்டவுன் தற்போது தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஆதித்யா எல் 1 செயற்கைக் கோளின் திட்ட இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த ஒரு பெண்மணி பணியாற்றியுள்ளார்.
ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டிருப்பவர் நிகர்ஷாஜி. இவர் தென்காசி மாவட்டம், செங்கோட்டை பகுதியை சேர்ந்த சேக் மீரான், சைத்தூன் பீவி தம்பதியினரின் 2-வது மகளான நிகர் சுல்தான். இவரது தற்போதைய பெயர் நிகர்ஷாஜி. தற்போது ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனராக செயல்பட்டு வருகிறார். இவர், செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1978-79-ஆம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பயின்று 433 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக திகழ்ந்துள்ளார். அதேபோல், 12-ஆம் வகுப்பில் 1980-81 ஆம் கல்வியாண்டில் 1008 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக திகழ்ந்துள்ளார். பின்னர் நிகர் சாஜி, 1982 முதல் 1986 வரை தனது இளநிலை பொறியியல் படிப்பை நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்து படித்து முடித்துள்ளார். பிர்லா இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் மேற்படிப்பை முடித்து இஸ்ரோவில் இணைந்தார் நிகர் சாஜி. தற்போது பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வரும் நிகர் சாஜியின் கணவர் வெளிநாட்டில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். மகள் டாக்டராக உள்ளார். மகன் வெளிநாட்டில் என்ஜினீயரிங் பயின்று வருகிறார். ஆதித்யா எல் 1 செயற்கைக் கோளின் திட்ட இயக்குனராக பணிபுரிந்து இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும், தென்காசி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் நிகர் ஷாஜி.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம், செப்.1-
கேரளா மாநிலம் வயநாடு பகுதியைச் சேர்ந்தவர் அனாஸ், 30. மனநலம் பாதித்த இவர், ஏர்வாடி தர்ஹா வில் தங்கியுள்ளார். இந்நிலையில், இன்று காலை இவர் ஏர்வாடி வெட்டமனை அரசு மேல்நிலைபள்ளி எதிரே உள்ள நீர் தேக்கதொட்டி
மீது ஏறி குதிக்கப் போவதாக மிரட்டல் விடுத்தார். இது பற்றி தகவலறிந்த ஏர்வாடி காவல் சார்பு ஆய்வாளர் முருகானந்தம் தலைமையில் போலீசார், ஏர்வாடி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) சண்முகவேல் ஜெயராமன் தலைமையில் ஏர்வாடி தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று அனாஸை பாதுகாப்பாக மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உரிய நேரத்தில் மீட்ட போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புளியங்குடி ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரியை சந்தித்து எஸ்டிபிஐ கோரிக்கை..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தென்காசி மாவட்டம் புளியங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரியை சந்தித்து எஸ்டிபிஐ கட்சியினர் கோரிக்கையை வலியுறுத்தினர். புளியங்குடி பகுதியில் குழந்தைகளுக்கான தடுப்பூசி போடுகின்ற வார்டு வாரியான மையங்களை தொடர்ச்சியாக வெவ்வேறு இடங்களுக்கு மாற்றிக் கொண்டே இருப்பதால் பொதுமக்கள் கைக் குழந்தைகளோடு அலைக்கழிக்கப்பட்டு மிகுந்து சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக பொதுமக்கள் எஸ்டிபிஐ கட்சியின் நகர நிர்வாகிகளிடம் முறையிட்டனர். தொடர்ந்து எஸ்டிபிஐ கட்சியின் நகர நிர்வாகிகள், நகர தலைவர் அஹமது தலைமையில் புளியங்குடி காயிதே மில்லத் நகர் 3வது தெருவில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரியை சந்தித்து மேற்கூறிய பிரச்சினை சரிசெய்திட வலியுறுத்தினர். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக சுகாதார நிலைய அதிகாரி உறுதியளித்தார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி; அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்தார்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
நெல்லையில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் மகேந்திரகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் 31.08.2023 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியினை போக்குவரத்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் இணைந்து நடத்தினார்கள். இரு சக்கர வாகன பேரணி மற்றும் நான்கு சக்கர வாகன பேரணி நடைபெற்றது. இச்சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் மகேந்திரகுமார் புதிய பேருந்து நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் தலைமையேற்றார். இப்பேரணியானது குலவணிகபுரம், ரிலையன்ஸ் பங்க் வழியாக என்.ஜி.ஓ காலனி வந்தடைந்தது.
தொடர்ந்து, அருகிலுள்ள சுந்தரி மஹாலில் ஓட்டுனர்கள், பயிற்றுனர்கள் மற்றும் வாகன விற்பனையாளர் ஆகியோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில், சாலை விதிகளை கடைபிடிப்பது, இருசக்கர வாகன விபத்துக்களில் இறப்புக்கு 80 சதவீதம் காரணம் தலைக்கவசம் அணியாமல் இருப்பதே ஆகும். எனவே, இரு சக்கர வாகன ஓட்டுநர் மற்றும் பயணிப்பவர் தலைக் கவசம் கட்டாயமாக அணிய வேண்டும். இரு சக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணிக்க கூடாது. இந்திய தர நிர்ணய சான்று (ஐ.எஸ்ஐ 4151) அல்லாத சாதாரண தலைக் கவசங்களை பயன்படுத்த கூடாது. தலைக் கவசத்தின் முழுப்பயனையும் பெற எப்போதும் கழுத்துப் பட்டையை (Chinstrap) அணிந்திருக்க வேண்டும் உள்ளிட்ட விபத்தில்லாமல் வாகனங்கள் ஓட்டுவது குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது. மேலும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை விதிகளை கடைபிடிப்பது, புற்றுநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை சாலைப் பாதுகாப்பு கோட்ட பொறியாளர் சுந்தர்சிங், உதவி இயக்குநர் சசிகலா, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் சரவணன், தொழில் நுட்பம் பொது மேலாளர்கள் சந்திர நாராயணன், கண்ணன், மோட்டார் ஆய்வாளர்கள் பிரபாகரன், ராஜசேகரன், பெருமாள், மாவட்ட ஓட்டுனர் சங்கத்தலைவர் காளிதாஸ், நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் செல்வன், லெட்சுமணன் உட்பட அரசு அலுவலர்கள் போக்குவரத்துறை அலுவலர்கள், ஓட்டுனர்கள், பயிற்றுநர்கள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம், செப்.1- இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் படி ராமநாதபுரத்தில் வாக்குச்சாவடிகள் சீரமைப்பு பணி ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார்.
கலெக்டர் பேசுகையில், மாவட்டத்தில் பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் என 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஆண் 5,75,546, பெண் 5,81,268 ராணுவத்தில் பணிபுரிவோர் 1,696, மற்றவர் 68 என 11,58,578 வாக்காளர்கள் உள்ளனர். கிராமப் பகுதிகளில் 293, நகர் பகுதியில் 1078 வாக்குப்பதிவு மையங்கள் என 1,371 வாக்குப்பதிவு
மையங்கள் உள்ளன. ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாகம்-83, 305 முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பாகம் – 307 ஆகிய வாக்குச்சாவடி மையங்களிலிருந்து தலா 1 வாக்குச்சாவடி மையம் கூடுதலாக 3 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைக்கும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. தற்போது 3 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் 17 வாக்குச்சாவடி மையங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கோரிக்கைகள் வரப்பெற்றது. 3 வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளர்கள் பெயர் மாற்றம் குறித்து மனு அளித்துள்ளனர் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடி மையங்களின் நிலை குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்கள் வாக்குச்சாவடி மைய அலுவலர்களுடன் களஆய்வு செய்து ஒரு வார காலத்திற்குள் தேவையான கோரிக்கைகள் குறித்து மனுக்கள் வழங்கவேண்டும். அவ்வாறு பெறப்படும் மனுக்கள் மீது தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். 4 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிக்காக அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) பூவராகவன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணா கருப்பையா, தேர்தல் வட்டாட்சியர் செல்லப்பா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஹைட்ரஜன் குமிழி அறை (Hydrogen Bubble chamber) கண்டறிந்த நோபல் பரிசு பெற்ற, அமெரிக்க சோதனை இயற்பியலாளர் லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 01,1988).
by ஆசிரியர்
written by ஆசிரியர்
லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் (Luis Walter Alvarez) ஜூன் 13, 1911ல் சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார். இவரது தந்தை வால்டர் சி. அல்வாரெஸ், ஒரு மருத்துவர் ஆவார். இவரது தாய் ஹாரியட் நீ ஸ்மித் ஆவார். இவரது ஸ்பானிஷ் மருத்துவரான லூயிஸ் எஃப் என்பவரின் பேரன் ஆவார். இவர் கியூபாவில் சிறிது காலம் வாழ்ந்தார். பின்னர் இறுதியாக அமெரிக்காவில் குடியேறினார். ஸ்பெயினின் அஸ்டூரியாஸில், தொழுநோயைக் கண்டறிவதற்கான சிறந்த முறையைக் கண்டுபிடித்தார். லூயிசுக்கு கிளாடிஸ் எனும் ஒரு மூத்த சகோதரி மற்றும் பாப் எனும் இளைய சகோதரனும் பெர்னிஸ் எனும் இளைய சகோடதரியும் இருந்தனர். இவரது அத்தை, மாபெல் அல்வாரெஸ், கலிபோர்னியா கலைஞராக இருந்தார். அவர் நெய்யோவியத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.
லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் 1918 முதல் 1924 வரை சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மேடிசன் பள்ளியிலும், பின்னர் சான் பிரான்சிஸ்கோ பாலிடெக்னிக் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். 1926 ஆம் ஆண்டில், இவரது தந்தை மாயோ மருத்துவச் சிற்றில் ஒரு ஆராய்ச்சியாளரானார். பின்னர் இவரது குடும்பம் மினசோட்டாவின் ரோசெஸ்டருக்கு குடிபெயர்ந்தது. அங்கு அல்வாரெஸ், ரோசெஸ்டர் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். இவர் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பயில வேண்டும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால், ரோசெஸ்டரில் உள்ள தனது ஆசிரியர்களின் வற்புறுத்தலின் பேரில், இவர் அதற்கு பதிலாக சிகாகோ பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். அங்கு இவர் 1932ல் இளங்கலைப் பட்டமும், 1934ல் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1936ல் இவரது முனைவர் பட்டம் பெற்றார்.
1936ல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற பிறகு, அல்வாரெஸ் பெர்க்லியின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள ஏர்னஸ்ட் லாரன்சின் கதிர்வீச்சு ஆய்வகத்தில் வேலைக்குச் சென்றார். கதிரியக்கக் கருக்களில் கே-எலக்ட்ரான் பிடிப்பைக் கண்காணிக்க அல்வாரெஸ் பல சோதனைகளை மேற்கொண்டார். இது பீட்டா சிதைவு கோட்பாட்டின் மூலம் கணிக்கப்பட்டது. 1940ம் ஆண்டில் அல்வாரெஸ் எம்ஐடி கதிர்வீச்சு ஆய்வகத்தில் சேர்ந்தார். அங்கு இவர் இரண்டாம் உலகப் போரின் கதிரலைக் கும்பா திட்டங்களில் பங்களித்தார். மன்காட்டன் திட்டத்தில் ராபர்ட் ஓப்பன்ஹீமர்மருக்காக பணிபுரிய லாஸ் அலமோஸுக்கு வருவதற்கு முன்பு அல்வாரெஸ் சிகாகோ பல்கலைக்கழகத்தில் என்ரிகோ பெர்மிக்கான அணு உலைகளில் பணிபுரிந்தார். அல்வாரெஸ் வெடிக்கும் வில்லைகள் வடிவமைத்தல் மற்றும் வெடிக்கும் பலச் சுற்று வெடிபொருள் தயாரிப்பு ஆகியவற்றில் பணியாற்றினார்.
அல்வாரெஸ் ஜேசன் பாதுகாப்பு ஆலோசனைக் குழு, போஹேமியன் சங்கம் மற்றும் குடியரசுக் கட்சியின் உறுப்பினராக இருந்தார் . அல்வாரெஸ் வானியற்பியல் விஞ்ஞானி ரிச்சர்ட் முல்லரின் ஆலோசகராக இருந்தார். லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் 1968 ஆம் ஆண்டில் ஹைட்ரஜன் குமிழி அறையின் வளர்ச்சிக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார். இது துகள் இயற்பியலில் அதிர்வு நிலைகளைக் கண்டறிய உதவுகிறது. குமிழ் அறை (bubble chamber) என்பது அயனியாக்கும் தன்மை கொண்ட துகள்களின் இயக்கத்தை, அவைகளின் பாதையை அறிய கூடிய அதிவெப்பமூட்டப்பட்ட ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட நீர்மம் (பொதுவாக நீர்ம ஐதரசன்) கொண்ட ஒரு கலன் ஆகும். முகிலறைகள் குமிழறைகளின் தத்துவத்திலேயே வேலை செய்கின்றன. ஆனால், முகிலறைகளில் அதிக வெப்பமாக்கிய நீர்மத்திற்குப் பதிலாக அதிகம் நிரம்பிய ஆவி பயன்படுத்தப்படுகிறது.
அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பிசிக்ஸ் இவரைப் பற்றி கருத்து தெரிவிக்கையில், “லூயிஸ் அல்வாரெஸ் இருபதாம் நூற்றாண்டின் மிக அற்புதமான மற்றும் உற்பத்தி சோதனை இயற்பியலாளர்களில் ஒருவர்.”எனக் கூறியது. நோபல் பரிசு பெற்ற, அமெரிக்க சோதனை இயற்பியலாளர் லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் செப்டம்பர் 1, 1988ல் தனது 77வது அகவையில் பெர்க்லி, கலிபோர்னியாவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். அவரது ஆவணங்கள் பெர்க்லியின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள பான்கிராப்ட் நூலகத்தில் உள்ளன.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நாடாளுமன்றத் தேர்தலில் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக நாற்பது தொகுதிகளிலும் போட்டியிடும். -ஓபிஎஸ் ஆதரவாளர் எம்எல்ஏ ஐயப்பன் பேட்டி..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
செப்டம்பர் மூன்றாம் தேதி காஞ்சிபுரத்தில் ஓபிஎஸ் அரசியல் திருப்புனையாக புரட்சி பயணம் துவங்க உள்ள நிலையில் இந்த பயணம் வெற்றி பெறுவதற்காக ஓபிஎஸ் ஆதரவாளர் உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து சுவாமி தரிசனம் மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ ஐயப்பன் கூறுகையில்:
வருகிற மூன்றாம் தேதி அண்ணாவின் பிறந்தநாளையொட்டி காஞ்சிபுரத்தில் ஓபிஎஸ் பொதுக்கூட்டம் நடத்த உள்ளார். அதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் புரட்சி பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தப் பயணம் வெற்றியடைய அறுபடை வீடுகளில் முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகனுக்கு சிறப்பு பூஜை செய்து தரிசித்து வந்திருக்கிறோம்.
*அதிமுக மாநாட்டிற்கு போட்டியான புரட்சி பயணமா என்ற கேள்விக்கு:*
அதிமுக மாநாடு பூஞ்சான் புளியோதரை மாநாடு. வந்த தொண்டர்கள் உணவு அருந்தாமல் சென்றதால் புளியோதரைகள் அண்டாண்டாக மிஞ்சியது. அதை குழியில் போட்டு புதைத்தார்கள். அது எழுச்சி மாநாடு அல்ல குழியில் போட்டு புதைத்த மாநாடு.
*கொடநாடு கொலை வழக்கு குறித்த கேள்விக்கு:*
கொடநாட்டில் அடுத்தடுத்து கொலை, கொள்ளை நடைபெற்றுள்ளது. இது குறித்து திமுக அரசு நடவடிக்கை மேற்கொள்ள நாங்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி கோரிக்கை வைத்துள்ளோம்.
*அதிமுக 2,3 அணிகள் இல்லை ஒரே அணி தான் இன்று இபிஎஸ் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு:*
உண்மையான அதிமுக யார் என்று வருகிற நாடாளுமன்ற தேர்தல் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் மூலம் தெரிவிக்கப்படும்.
*ஓபிஎஸ் சார்பாக தொடங்கப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு:*
இந்த அனைத்து தீர்ப்புகளும் வாங்கப்பட்டது. ஓபிஎஸ் தலைமையில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாண்டிச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று அதிமுகவை மீட்டெடுப்போம்.
*ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது குறித்த கேள்விக்கு:*
எங்களிடம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தான் எங்கள் பதிவுகளில் உள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் இவர்கள் ஒவ்வொரு நீதிமன்றமாக சென்று தீர்ப்பை வாங்குகிறார்கள். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மக்களிடம் கோரிக்கை வைத்து ஓபிஎஸ் வெற்றி பெறுவார்.
*பாஜக எடப்பாடிக்கு அழைப்பு விடுத்தது குறித்த கேள்விக்கு:*
நாங்கள் பாஜகவை பற்றி கவலைப்படவில்லை வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக நாற்பது தொகுதிகளிலும் போட்டியிடும் என்றார்.செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.