உதயநிதிக்கு அடுத்து அவர் மகனையும் ஏற்றுக்கொள்வோம்ன்னு பேசிட்டு இருக்காரு ஒரு அமைச்சர், எவ்வளவு அடிமைத்தனம்!- எடப்பாடி பழனிச்சாமி பேச்சு..
Category:
மாநில செய்திகள்
யூடியூப் விதிமுறைகளை மீறியதாக கூறி 22 லட்சம் வீடியோக்களை அந்த நிறுவனம் நீக்கி உள்ளது..
by Askar
written by Askar
யூடியூப் விதிமுறைகளை மீறியதாக கூறி 22 லட்சம் வீடியோக்களை அந்த நிறுவனம் நீக்கி உள்ளது..
கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான பிரபல வீடியோ சமூக வலைதளம் யூடியூப். அதில் பொழுதை போக்கவும், வருமானத்தை ஈட்டவும் பலர் சேனல் துவக்கி பல வீடியோகளை பதிவிடுகின்றனர். அப்படி பதிவேற்றும் வீடியோக்கள் அனைத்தும் தங்களது விதிமுறைகளுக்கு உட்பட வேண்டும் என யூடியூப் கூறுகிறது.
அதனை மீறும் வீடியோக்கள் நீக்கப்படுவதுடன் சேனல்களை அந்த நிறுவனம் முடக்கி வருகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டின் கடைசி காலாண்டில் விதிமுறைகளை மீறியதாக இந்தியாவில் மட்டும் 22.5 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டு உள்ளன.
விதிமுறைகளை மீறும் வகையில் விளம்பரம் அல்லது பாலியல் ரீதியிலான கருத்துகளுடன் உள்ளதால் அந்த வீடியோக்கள் நீக்கப்பட்டு உள்ளன.
அதேபோல் உலகளவில் 90 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டு உள்ளன. அதில், 96 சதவீத வீடியோக்கள் யாரும் பார்ப்பதற்கு முன்னரே நீக்கப்பட்டன.
மேலும் விதிகளை மீறியதாக 2 கோடி சேனல்கள் நீக்கப்பட்டு உள்ளதுடன் 100 கோடி வாசகர்கள் கருத்துகளையும் அந்த நிறுவனம் நீக்கி உள்ளது. வீடியோக்கள் நீக்கப்பட்ட பட்டியலில்,
இந்தியா முதலிடத்தில் உள்ளது. ( 22.5 லட்சம் வீடியோக்கள் நீக்கம்)
2வது இடத்தில் சிங்கப்பூர் ( 12,43,871 வீடியோக்கள் நீக்கம்)
3வது இடத்தில் அமெரிக்கா ( 7,88,354 வீடியோக்கள் நீக்கம்)
இந்தோனேஷியா 4வது இடத்தில் (7,70,157 வீடியோக்கள் நீக்கம்)
ரஷ்யா 5வது இடத்தில் (5,16,629 வீடியோக்கள் நீக்கம்).
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சத்குரு இன்று (மார்ச் 27) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
by Askar
written by Askar
டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சத்குரு அவர்கள் இன்று (மார்ச் 27) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்..
சில வாரங்களாக கடும் தலைவலிக்கு உள்ளான சத்குருவிற்கு மார்ச் 17-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மிகவும் ஆபத்தான அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு சத்குரு அவர்கள் மருத்துவர்கள் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக உடல்நலனில் முன்னேற்றம் கண்டார். கிட்டத்தட்ட 10 நாட்கள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
முன்னதாக, அப்போலோ மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் சங்கீதா ரெட்டி சத்குருவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில் “சத்குரு அவர்கள் உடல் நலம் தேறி வருவது குறித்து மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அவர் குணமடையும் அதே வேளையில் அவருடைய உற்சாகத்தை அப்படியே தக்கவைத்து கொண்டுள்ளார். உலகளாவிய நன்மைக்கான அவரது அர்ப்பணிப்பு, அவருடைய புத்தி கூர்மை மற்றும் அவரின் நகைச்சுவை உணர்வு அனைத்தும் அப்படியே சிறப்பாக உள்ளது. அவருடைய உடல்நலம் குறித்து விசாரிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு இது ஒரு நற்செய்தியாக இருக்கும் என நினைக்கிறேன்” என்றார்.
சத்குருவிற்கு சிறப்பான சிகிச்சை அளித்த டாக்டர் வினித் சூரி, டாக்டர் பிரணவ் குமார், டாக்டர் சுதீர் த்யாகி, டாக்டர் எஸ். சாட்டர்ஜீ மற்றும் அப்போலோ மருத்துவமனையின் ஒட்டு மொத்த குழுவிற்கும் ஈஷா அறக்கட்டளை மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. அதுமட்டுமின்றி, இந்த சவாலான சூழலில் உலகெங்கும் இருந்தும் சத்குருவிற்கு அன்பையும் ஆதரவையும் அளவற்ற வகையில் வெளிப்படுத்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ஈஷா அறக்கட்டளை மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திமுக கூட்டணி வேட்பாளரான நவாஸ்கனிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் ! அமைச்சர் ராஜகண்ணப்பன் வாக்கு சேகரிப்பு !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் தொகுதி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டும் திமுக கூட்டணி வேட்பாளரான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி இரண்டாவது முறையாக ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று காலை ராமேஸ்வரம் ராமநாதசவாமி திருக்கோவிலில் ராமநாதசாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து பின்னர் ராமேஸ்வரத்தில் காரியாளத்தை திறந்து வைத்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். ராமேஸ்வரத்தில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு நவாஸ்கனிக்கு ஆதரவாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் இணைந்து ராமேஸ்வரம் நகர் பகுதி, கடற்கரை துறைமுக வீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் பழங்கொட்டை தெருவில் வசித்து வரும் சேக் தாவுது என்பவரது வீட்டில் இன்று அதிகாலையிலேயே தேசிய பாதுகாப்பு முகமை டிஎஸ்பி முருகன் தலைமையில் 5க்கும் மேற்பட்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இவர் மீது ஏற்கனவே வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் இருந்து சேக்தாவூது வீடு மட்டுமின்றி அருகில் உள்ள அவருடைய அப்பா வீட்டிலும் என்.ஐ.ஏ. சோதனை நடந்துள்ளது. இதனால் தேவிப்பட்டினம் பகுதியில் பரபரப்பு நிலவியது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேவகோட்டை பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கும் விழா!நூலக புத்தகம் படித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கிய ஆர்.டி.ஓ.
by Askar
written by Askar
தேவகோட்டை பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கும் விழா!நூலக புத்தகம் படித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கிய ஆர்.டி.ஓ.
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கு தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் ரூபாய் 5000 மதிப்பிலான புத்தகங்களை வழங்கி ஆச்சரியத்தில் அசத்தினார்.
தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால் துரை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வசம் பள்ளி நூலகத்துக்கு புத்தகங்களை பரிசாக வழங்கி பேசுகையில், ” தமிழ் வழி கல்வியில் படிக்கும்போது பொது அறிவு அதிகமாக வளரும். நூலக புத்தகங்களை வாசிக்கும்போது நமக்கு பரந்துபட்ட அறிவு வளரும்.நம்மால் பலரின் வாழ்க்கை வரலாறை புத்தகங்கள் மூலம் அறிந்துகொள்வதன் மூலம் நமது வாழ்க்கையை செம்மையாக்கலாம் . இந்த பள்ளியில் மாணவர்கள் செயல்பாடு சிறப்பாக இருக்கின்றது.வாழ்த்துகள் என்றார். சிறப்பாக புத்தகம் வாசித்து கருத்துக்களை கூறிய மாணவர்கள் அஜய்,கனிஷ்கா,தீபா ,முகல்யா , யோகேஸ்வரன் ஆகியோருக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர் , முத்துமீனாள் ,பாரதி உட்பட பலர் பங்கேற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இதுவரை தமிழ்நாடு முழுவதும் ரூ.69.70 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, தலைமை தேர்தல் அதிகாரி தகவல்..
by Askar
written by Askar
பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று நிறைவடைய உள்ள நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் 6 கோடியே 23 லட்சத்து 26 ஆயிரத்து 901 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 3.06 கோடி, பெண் வாக்காளர்கள் 3.17 கோடி ஆவர். 85 வயதிற்கு மேல் 6,13,991 வாக்காளர்கள் உள்ளனர். 4,61,730 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். முதல் தலைமுறை வாக்காளர்கள் 10,90,547 பேர்.
இதுவரை 68,144 வாக்கு மையங்கள் இருக்கும் சூழலில், தற்போது கூடுதலாக177 வாக்குச்சாவடிகளை அமைக்கத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
தேர்தல் பணியில் 4 லட்சம் பேர் ஈடுபட உள்ளனர்.
39 பொது பார்வையாளர்கள், 20 காவல் பார்வையாளர்கள், 58 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் அளிக்கலாம்.
ஏப்ரல் 1-ந்தேதி முதல் 165 கம்பெனி துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இதுவரை தமிழ்நாடு முழுவதும் ரூ.69.70 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரொக்கம் மட்டும் ரூ.33.31 கோடி. வருமானவரித்துறை மூலம் ரூ.6.51 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது.
648 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. தனியார் கட்டிடங்களில் 1,16,342 சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கோவையில் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பிரியாணி போடுவதற்காக அமைச்சர் டிஆர்பி ராஜாவிடம் ஆட்டுக்குட்டியை வழங்கிய திமுக ஐடி விங் நிர்வாகிகள்..
by Askar
written by Askar
கோவையில் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பிரியாணி போடுவதற்காக அமைச்சர் டிஆர்பி ராஜாவிடம் ஆட்டுக்குட்டியை வழங்கிய திமுக ஐடி விங் நிர்வாகிகள்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -3
கப்ளிசேட்
உஸ்மானிய பேரரசு -27
( கி.பி 1299-1922)
உஸ்மானிய பேரரசு
உலகின் பெரும் சாம்ராஜியமாக இருந்தது.
பேரரசர் முஹம்மது அல்பாதில் அவர்களின் மரணத்திற்கு பிறகு அவர்களின் மகன் இரண்டாம் பயாஸித்
பதவி ஏற்றார்.
இரண்டாம் பயாஸித் அவர்களின் சகோதரர் அமீர் ஜம்சீத் உஸ்மானியர்களின் பழைய தலைநகரான
புருஷாவை தலைநகராக வைத்து தன்னை மன்னராக அறிவித்து கொண்டார்.
இதனையறிந்த மன்னர் இரண்டாம் பயாஸித் அவர்கள் படை ஒன்றை அனுப்பி வைத்தார்.
இதனை அறிந்து அமீர் ஜம்சீத் தப்பிச்சென்று ரோட்ஸ் தீவில் சிலுவை வீரர்களிடம் தஞ்சம் அடைந்தார்.
இதனையறிந்த இரண்டாம் பயாஸித் அவர்கள்,
தனது சகோதரரை தப்பிவிடாமல் அங்கேயே வைத்து பாதுகாக்க சிலுவைவீரர்களுக்கு
கடிதம் எழுதினார்.
அதற்கு கூலியாக அவர்கள் கேட்ட 40,000 மதிப்பிலான
நாணயங்களை வழங்கினார்.
இருப்பினும் அமீர் ஜம்சீத் எப்படியோ தப்பித்து போப்பாண்டவரிடம் சரணடைந்தார்.
இரண்டாம் பயாஸித் அவர்கள் தனது சகோதரரை இனி உயிருடன் விட்டால் குழப்பங்களை ஏற்படுத்துவார் எனக்கருதி போப்பிற்கு 3 லட்சம் நாணயங்களை கொடுத்து அவரை கொன்றுவிட சொன்னார்.
போப்பின் உத்தரவால் அமீர் ஜம்சீத் விஷம் வைத்து கொல்லப்பட்டார்.
இரண்டாம் பயாஸித் பொதுவாக அமைதி விரும்பியாக இருந்தார்.
ஆரம்ப காலத்தில் போர்களை வெறுத்தார்.
தற்காப்பு போர்களை மட்டுமே அவசியம் கருதி செய்தார்.
வலிய சென்று மற்ற நாடுகளை இவர் தாக்கவில்லை.
ஒருகட்டத்தில் போரிடும் சூழல் உருவானபோது
போரின் அழுத்தங்களால்
பல நாடுகளை போரிட்டு கைப்பற்றினார்.
மக்கள் மன்னரின் மனநிலையை அறிந்து கொண்டனர். ஆகவே மக்கள் அமைதியுடனும்
மகிழ்ச்சியுடனும் இருந்தனர்.
இவருடைய ஆட்சியில் அமைதி நிலவியதால் ஏற்றுமதி வணிகம் மிகச்சிறப்பாக இருந்தது.
ஆசியா, ஐரோப்பா,
ஆப்பிரிக்கா என எல்லா பகுதிகளின் நாடுகளுடனும்,
சிறப்பான வணிக உறவுகள் இருந்தன.
தேவையான பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியும் செய்தனர்.
ஆகவே எல்லா பொருட்களும் சீராக எப்போதும் கிடைத்தது.
மிகச்சிறந்த நிர்வாக கட்டமைப்புகளை உருவாக்கியதால் நிர்வாகம் சிறப்பாக இருந்தது.
மார்க்க பணிகளில்
அறிஞர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.
மார்க்க பிரச்சாரங்கள்
அறிஞர்கள் குழுக்களால் செய்யப்பட்டன.
மஸ்ஜிதுகள்,மதரஸா
கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன.
அவைகளுக்கு தேவையான எல்லா உதவிகளும் தாராளமாக செய்யப்பட்டன.
இரண்டாம் பயாஸித்
பெருமைமிக்க
பாக்தாத்தை வெற்றி கொண்டார்.
ஐரோப்பிய நாடுகள்
பலவற்றை வெற்றி கொண்டார்.
அவர் மேலும் போர்களுக்கு தயாரானபோது எதிர்பாராமல் அந்த நிகழ்வு நடந்தது.
அதனால் அரண்மனையே
ஆடிப் போனது.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது!திட்டவட்டமாக கூறிய தேர்தல் ஆணையம்..
by Askar
written by Askar
மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது திட்டவட்டமாக கூறிய தேர்தல் ஆணையம்..
மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் பதில்.
பம்பரம் சின்னம் குறித்து இன்று காலைக்குள் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிடுமாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்திருந்தார்.
பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், இன்று பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு வருகிறது.
நாம் தமிழர் கட்சியை தொடர்ந்து, மதிமுகவுக்கும் கேட்ட சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சின்னத்தை இழந்தாலும் எண்ணத்தை இழந்து விடக்கூடாது; இதை விட சிறந்த சின்னம் இல்லை என்று முடிவு செய்து உள்ளோம் – “மைக்” சின்னத்தை அறிமுகம் செய்து வைத்த நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்..
by Askar
written by Askar
கடந்த 2019 மற்றும் 2021 ஆம்வருடத்தேர்தல்களில் சீமான் தலைமையிலான நாம் தமிழர்கட்சிக்குக்கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. இம்முறை தேர்தல் ஆணையத்திடம் தாமதமாக விண்ணப்பித்ததால் தற்போதையநாடாளுமன்றத்தேர்தலில் சீமான்கட்சிக்குக்கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கவில்லை.
எனவே நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்து இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. வேறு ஒரு கட்சிக்குக் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டதால் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது.
ஆனால் மைக் சின்னத்திற்கு பதிலாக வேறு சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்திடம் மின்னஞ்சல் வாயிலாகக் கோரிக்கை வைத்தனர். சீமான் படகு அல்லது பாய்மர படகு சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தார்.
இதனிடையே, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நாம் தமிழர் கட்சி மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கையினை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார். இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். அதை அடுத்து, மைக்’ சின்னத்தை அறிமுகம் செய்து வைத்த நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசியதாவது:
2024 நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. கடந்த காலங்களில் விவசாயி சின்னத்தில் போட்டியிட்டோம். எப்படியாவது அந்த சின்னத்தை வெற்றி பெற வேண்டும் என்று இறுதிவரை போராடினோம். சின்னத்தை இழந்தாலும் எண்ணத்தை இழந்து விடக்கூடாது என்று.
இதை விட சிறந்த சின்னம் இல்லை என்று முடிவு செய்து உள்ளோம். விவசாயி சின்னத்தையும் நான் கேட்கவில்லை மைக் சின்னத்தையும் நான் கேட்கவில்லை. தேர்தல் ஆணையம் தான் கொடுத்தது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வத்தலக்குண்டு அருகே திமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் இடையே சின்னம் வரைவதில் போட்டா போட்டி! ஒரே சுவரில் இரண்டு சின்னங்களால் பரபரப்பு..
by Askar
written by Askar
வத்தலக்குண்டு அருகே திமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் இடையே சின்னம் வரைவதில் போட்டா போட்டி! ஒரே சுவரில் இரண்டு சின்னங்களால் பரபரப்பு..
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டியில் திமுக மற்றும் பாஜகவினர் இடையே சின்னம் வரைவதில் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.
இதனால் விராலிப்பட்டியில் திமுகவினர் தங்களது கூட்டணி கட்சியான சிபிஎம் கம்னியூஸ்ட் கட்சியின் சின்னமான அரிவாள் சுத்தியல் சின்னம் வரைந்து வருகின்றனர்.
பாஜகவினர் தங்கள் கூட்டணி கட்சி சின்னமான மாம்பழம் சின்னம் வரைந்து வருகின்றனர். இதில் இரண்டு கட்சியினரும் விராலிபட்டி, பண்ணைப்பட்டி, பகுதியில் சின்னம் வரைய போட்டா போட்டி போட்டு வருகின்றனர். பாஜக மற்றும் திமுகவினர் ஒரே சுவரில் இரண்டு பேரும் சின்னம் வரைந்து வருகிற சம்பவம் எதில் போய் முடியுமோ என்கிற பதட்டமும் பரபரப்பும் இப்பகுதி முழுவதும் நிலவி வருகிறது..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வத்தலக்குண்டு அருகே முறையான ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 72 ஆயிரத்து 440 ரூபாய் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைப்பு..
by Askar
written by Askar
வத்தலக்குண்டு அருகே முறையான ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 72 ஆயிரத்து 440 ரூபாய் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைப்பு..
நேற்று மாலை (26/03/2024) வத்தலக்குண்டு அருகே விருவீடு கள்ளர்மடம் சோதனை சாவடியில் தேர்தல் பாதுகாப்பு பணியில் சுப்பிரமணியன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரூபாகரன் என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தை ஆய்வு செய்தனர். அப்பொழுது முறையான ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 72 ஆயிரத்து 440/- ரூபாயை கைப்பற்றி நிலக்கோட்டை வட்டாட்சியர் தனுஷ்கோடி இடத்தில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் அந்த பணத்தை வட்டாட்சியர் தனுஷ்கோடி கருவூலத்தில் ஒப்படைத்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி உடைந்த பாலம்!நதியில் விழுந்த கார்கள்! 22 இந்தியர்கள் நிலை.?பதறவைக்கும் வீடியோ காட்சிகள்..
by Askar
written by Askar
அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம் பால்டிமோர் நகரில் படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே ‘பிரான்சிஸ் ஸ்காட் கீ’ என்ற மிகப்பெரிய பாலம் உள்ளது. 2½ கி.மீ. தூரத்துக்கு 4 வழி பாதையாக அமைந்துள்ள இந்த பாலம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை படாப்ஸ்கோ ஆற்றில் சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. சிங்கப்பூர் கொடியேற்றப்பட்ட அந்த கப்பல் இலங்கை நோக்கிபயணித்ததாக தெரிகிறது. கப்பலில் 22 மாலுமிகள் இருந்தனர். அவர்கள் அனைவருமே இந்தியர்கள் ஆவர்.
இந்த நிலையில் ‘பிரான்சிஸ் ஸ்காட் கீ’ பாலத்தை கடக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக பாலத்தின் மீது சரக்கு கப்பல் மோதியது. இதில் சரக்கு கப்பலில் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.
இதனிடையே கப்பல் மோதியதில் ‘பிரான்சிஸ் ஸ்காட் கீ’ பாலத்தின் பெரும் பகுதி அப்படியே உடைந்து ஆற்றில் விழுந்தது. அப்போது பாலத்தில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் ஆற்றில் விழுந்தன.
மேலும் விபத்து நடந்த சமயத்தில் பாலத்தின் ஒரு பகுதியில் பழுது நீக்கும் பணிகள் நடந்து கொண்டிருந்ததாகவும், பணியில் ஈடுபட்டிருந்த சில தொழிலாளர்கள் ஆற்றில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த பயங்கர விபத்தால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மீட்பு குழுக்கள் உடனடியாக அங்கு விரைந்து மீட்பு பணிகளை முடுக்கிவிட்டன.
விபத்தில் சிக்கி ஆற்றில் விழுந்து தத்தளித்துக்கொண்டிருந்த 2 பேரை மீட்பு குழுவினர் மீட்டனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த விபத்தில் 7 பேர் மாயமானதாக தெரிகிறது. அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. எனினும் அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே இந்த விபத்தில் கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 22 பேரும் காயங்கள் எதுவும் இன்றி உயிர் தப்பியதாகவும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருச்சி லால்குடி அருகே பாஜக கொடி கட்டிய காரில் ரூபாய் 75,860 பணம் மற்றும் பிரதமர் மோடியின் உருவம் பதித்த கவர் பறிமுதல்..
by Askar
written by Askar
திருச்சி லால்குடி அருகே பாஜக கொடி கட்டிய காரில் ரூபாய் 75,860 பணம் மற்றும் பிரதமர் மோடியின் உருவம் பதித்த கவர் பறிமுதல்..
திருச்சி , கல்லக்குடி சுங்கச்சாவடி அருகில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையின் போது,பாஜக கொடி கட்டிய காரில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜெகநாதன் மற்றும் சிவலிங்கம் என்பவரும் திண்டுக்கல் நோக்கி காரில் சென்ற போது காரை மறித்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.
இதில் உரிய ஆவணம் இல்லாமல் ரூபாய் 75,860 பணம் மற்றும் பிரதமர் மோடி உருவம் பதித்த கவர் இருந்ததை
தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிவகங்கையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 13 லட்சம் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை..
written by Abubakker Sithik
சிவகங்கையில் 13 லட்சம் பணம் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படையினர் பிடித்து விசாரணை..
சிவகங்கை சட்டமன்றத் தொகுதி வட்டாட்சியர் மைலாவதி தலைமையிலான தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு இன்று சிவகங்கை சிவன் கோவில் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 4 சக்கர வாகனத்தில் வந்த மானாகுடியைச் சேர்ந்த பில்லத்திகுமார் மற்றும் அவரது கார் டிரைவர் பாலமுருகன் செக்கியூரட்டி அடைக்கலராஜ் ஆகியோர் காரில் சோதனை மேற்கொண்டதில் 13 லட்சம் ரூபாய் பணம் ( 500 x 2600) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ATM இயந்திரத்தில் வைப்பதற்கு கொண்டு சென்றதாக கூறியும், உரிய ஆவணங்கள் கொண்டு வரப்படவில்லை. இதனால் 13 லட்சம் பணத்தை கைப்பற்றி சிவகங்கை கருவுலகத்தில் 13 லட்சம் பணத்தை வட்டாட்சியர் மைலாவதி ஒப்படைத்தார். ஏடிஎம் இயந்திரங்களில் பணம் வைப்பதற்கு தனியார் நிறுவன ஊழியர்கள் உரிய ஆவணங்கள் என்று கொண்டு வந்ததால் தேர்தல் விதிமுறைப்படி கைப்பற்றப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. காவலர்கள் முருகேசன், கோபி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பத்தாண்டு கால மோடி ஆட்சியில் வாயில் சுட்ட வடை! ஐந்தரை அடியில் மாதிரி வடை..
by syed abdulla
written by syed abdulla
பத்தாண்டு கால மோடி ஆட்சியில் வாயில் சுட்ட வடை! ஐந்தரை அடியில் மாதிரி வடை..
தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கொருக்குப்பேட்டை பகுதியில்,மோடி அரசின் பத்தாண்டு கால மக்கள் விரோத போக்கை விமர்சிக்கும் வகையில்,
ஐந்தரை அடி உயரத்தில் மாதிரி வடை செய்து வைக்கப்பட்டுள்ளது..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொசுப்புழு ஒழிப்பு தொழிலாளர்களுக்கு 5 வருடங்களாக ஊதிய உயர்வு வழங்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு..
written by Abubakker Sithik
கொசுப்புழு ஒழிப்பு தொழிலாளர்களுக்கு 5 வருடங்களாக ஊதிய உயர்வு வழங்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு..
ராஜபாளையத்தில் பணியாற்றும் கொசுப்புழு ஒழிப்பு தொழிலாளர்களுக்கு 5 வருடங்களாக ஊதிய உயர்வு வழங்காததை கண்டித்து வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கடந்த 2013ம் வருடம் பரவிய டெங்கு காய்ச்சல் மூலம் 20க்கும் மேற்பட்ட சிறு குழந்தைகள் பலியாகினர். இதனை தொடர்ந்து 42 வார்டுகளிலும் கொசுப்புழு ஒழிப்புக்காக ஒப்பந்த முறையில் பெண் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். தற்போது 150க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
தொடக்கத்தில் நாள் ஒன்றுக்கு 144 ரூபாய் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு ரூபாய் 208 வழங்கப்பட்டது. அதற்கு பிறகு இது வரை ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. கொசுப் புழு ஒழிப்பு பணிகளுடன், குப்பை தரம் பிரித்தல், நகராட்சி வரி வசூல், தேர்தல் பணிகள் என பல்வேறு பணிகள் வழங்கப்படுகிறது. மேலும் கட்சி நிகழ்ச்சிக்காக சீருடை அணிந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்லப்படுவதாகவும், சில நேரங்களில் இரவு வரை தங்களை அரசியல் கட்சியினர் அலைக் கழிப்பதாகவும் பெண்கள் வேதனை தெரிவித்தனர். இதற்கு தனியாக ஊதியம் வழங்கப்படுவதில்லை எனவும் பெண்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.
இது குறித்து கேட்டால் திறமையற்ற ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க முடியாது என அதிகாரிகள் கூறுவதாகவும் தெரிவித்தனர். மேலும் சில இடங்களில் தனியாக சென்று பணியாற்றும் நிலையிலும், இது வரை அடையாள அட்டை, சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள் என எந்த சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து கொசுப்புழு ஒழிப்பு பணியில் ஈடுபடும் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினர் வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாகவும், எந்த கட்சிக்கும் வாக்களிப்பதில்லை எனவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி செய்ய வேண்டும்; தனியார் பள்ளி தமிழ் ஆசிரியை தமிழக முதல்வருக்கு கோரிக்கை..
written by Abubakker Sithik
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி செய்ய வேண்டும்; தமிழ் ஆசிரியை தமிழக முதல்வருக்கு கோரிக்கை..
மதுரை சம்பட்டி புரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 62). பஞ்சாலை தொழிலாளி. மதுரை விளாங்குடி விசாலாட்சி மில்லில் வேலை பார்த்து வந்த இவர் மில் ஏலம் போய்விட்டபின் கூலி வேலை செய்து வாழ்ந்து வந்தார். இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூத்த மகள் கார்த்திகா (வயது 34) எம்.ஏ.பி.எட் எம்.பில் வரை படித்தபின் மதுரை அனுப்பானடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2018 ம் வருடம் அவருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக அவரது இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து தற்போது 6 வருடங்களாக தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் டயாலசீஸ் செய்து வருகிறார். இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்த நிலையில் மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிய நிலையில், இவரது தந்தையின் சிறுநீரகம் பரிசோதித்து பார்க்கப்பட்டது. ஆனால் சிறுநீரகத்தை பொருத்த முடியாத நிலை உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். மாற்று யோசனையாக அவரின் தாயாரின் சிறுநீரகத்தை பொருத்துவதற்கு ஏற்பாடு செய்த நிலையில், அவருக்கு நீரிழிவு நோய் உள்ளதால் அவரது சிறுநீரகமும் பொருந்தாது என்று கூறிவிட்டனர். இந்த நிலையில் சிறுநீரகங்கள் தானமாக கேட்டு மதுரை வேலம்மாள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பதிவு செய்து வைத்து காத்திருந்தனர். தற்போது பதிவு மூப்பு அடிப்படையில் சிறுநீரகங்கள் தானமாக கிடைத்தும் அறுவை சிகிச்சைக்காக தமிழ்நாடு முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் கிடைக்கும் தொகை போக சுமார் 10 லட்சம் கூடுதலாக செலவாகும் என்ற நிலையில் இவர்களால் பணம் ஏற்பாடு செய்ய இயலவில்லை. ஆகையால் தமிழக முதல்வர் அவர்கள் கருணை அடிப்படையில் வேலம்மாள் மருத்துவ மனையில் பதிவு செய்து வைத்துள்ள அடிப்படையில் இவருக்கு அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து உயிர் காக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முதல்ல பூத்ல ஆள போடு! அப்புறம் வந்து போட்டி போடு! பாஜகவை பங்கம் செய்த எஸ்.பி.வேலுமணி!
by Askar
written by Askar
முதல்ல பூத்ல ஆள போடு! அப்புறம் வந்து போட்டி போடு! பாஜகவை பங்கம் செய்த எஸ்.பி.வேலுமணி!
You must be logged in to post a comment.