தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சேலம், கள்ளக்குறிச்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். இருவரையும் ஆதரித்து பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.அப்போது மு.க. ஸ்டாலின் கூறியதாவது:- திராவிட மாடலின் குரல் தெற்கில் மட்டும் ஒலிக்கவில்லை. வடக்கிலும் ஒலிக்கிறது. வடக்கிற்கும் சேர்த்தே ஒலிக்கிறது. ஒரு மாநில அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு நான்தான் எடுத்துக்காட்டு. ஒரு மத்திய அரசு எப்படி செயல்படக் கூடாது என்பதற்கு பா.ஜனதா அரசுதான் எடுத்துக்காட்டு. சேலத்திற்கு வந்த பிரதமர் மோடி, பா.ஜனதாவுக்கு கிடைத்திருக்கும் ஆதரவால் திமுக-வின் தூக்கம் தொலைந்துவிட்டதாக பேசிவிட்டு சென்றார். உண்மையிலேயே தூக்கத்தை தொலைத்தவர்கள், இவர்கள்தான் (10 ஆண்டு ஆட்சிக்காலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலம் பாதிக்கப்பட்ட சாமானிய மக்கள். சிலிண்டர் விலை உயர்வு மூலம் தாய்மார்கள், ஏழைகள். வேலையில்லா திண்டாட்டம் மூலம் இளைஞர்கள். ஜிஎஸ்டி மூலம் சிறுகுறு தொழில் நடத்துபவர்கள். 3 சட்டங்கள் மூலம் உழவர்கள். சிஏஏ மூலம் சிறுபான்மையினர் மக்கள். இப்படி 10 ஆண்டு கால ஆட்சியில் ஒட்டுமொத்த நாடே தூக்கத்தை தொலைத்துவிட்டு தவிக்கிறது. தற்போது உச்சநீதிமன்ற உத்தரவால் வெளிவந்துள்ள தேர்தல் பத்திரம் ஊழலால் பிரதமர் மோடி தூக்கத்தை தொலைச்சிட்டார். இன்னொரு முக்கிய காரணம் மத்திய உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட். தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை தென்மாநிலங்களில் பா.ஜனதாவால் வெற்றி பெற முடியாத நிலை இருந்தது. தேர்தல் பத்திரம் ஊழல் வந்த பிறகு வட மாநிலங்களிலும் வெற்றி பெற முடியாது என உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது. இதனால்தான் தூக்கத்தை தொலைத்துவிட்டு பதட்டப்படுகிறார்.பதட்டத்தில் ஹேமந்த் சோரன், டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையால் கைது செய்கிறார். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கு வருமான வரித்துறையை ஏவிவிட்டு நோட்டீஸ் விடுகிறார்.எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்த்து பேசினால் சிபிஐ ரெய்டு விடுகிறார். கூட்டணி கட்சிகளை போன்று அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறையை பயன்படுத்துகிறார் என்றால் உச்சக்கட்ட தோல்வி பயத்தில் இருக்கிறார் என்று அர்த்தம். ஆட்சி வரவேண்டும் என்ற வெறியில் இந்திய ஜனநாயகத்தை சீரழித்துக் கொண்டு இருக்கிறார்.இவ்வாறு முக ஸ்டாலின் குறிப்பிட்டார்.
Category:
மாநில செய்திகள்
பந்து வீச்சாளர்களால் வெற்றியைப் பெற்ற லக்னோ; 21 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் தோல்வி..
by Askar
written by Askar
ஐபிஎல் 2024 தொடரின் 11வது போட்டி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே லக்னோ ஏகானா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த சீசனில் லக்னோ அணிக்கு முதல் உள்ளூர் போட்டியாக இது அமைந்தது.
இந்த போட்டியில் லக்னோ அணிக்கு நிக்கோலஸ் பூரான் கேப்டனாக செயல்பட்டார். அதேபோல் கேஎல் ராகுல் இம்பேக்ட் வீரராக களமிறக்கப்பட்டார். சமீபத்தில் தான் காயத்தில் இருந்து குணமடைந்து கேஎல் ராகுல் வந்திருப்பதால், அவரது பணியை எளிதாக்க இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டிருப்பாத நிக்கோலஸ் பூரான் தெரிவித்தார். லக்னோ அணியில் யஷ் தாக்கூருக்கு பதிலாக சித்தார்த் சேர்க்கப்பட்டுள்ளார். பஞ்சாப் அணியில் எந்த மாற்றமும் இல்லாமல் விளையாடுகிறது.
டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் நிக்கோலஸ் பூரான் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குவன்டைன் டி காக் 54, க்ருணால் பாண்ட்யா 43, நிக்கோலஸ் பூரான் 42, லியாம் லிவிங்ஸ்டன் 27 ரன்கள் எடுத்தனர்.
பஞ்சாப் பவுலர்களில் சாம் கரன் 3, அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ககிசோ ரபாடா, ராகுல் சஹார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
பேட்ஸ்மேன்களுக்கு சவால் விடுக்கும் ஆடுகளமாக இருந்து வரும் லக்னோ மைதனாத்தில் சேஸிங்கில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி, இந்த சீசனில் முதல் வெற்றியை பெற்றது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்நாட்டுல பாஜக அப்படின்னு புதுசா ஒரு கட்சி முளைச்சிருக்கு! பங்கம் செய்த எடப்பாடி பழனிச்சாமி..
by Askar
written by Askar
தமிழ்நாட்டுல பாஜக அப்படின்னு புதுசா ஒரு கட்சி முளைச்சிருக்கு! பங்கம் செய்த எடப்பாடி பழனிச்சாமி..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்நாட்டின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!- மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 950 பேர் போட்டி!இதில், 874 பேர் ஆண்கள், 76 பேர் பெண்கள்..
by Askar
written by Askar
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து கடந்த 20ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 27ம் தேதி மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 1,749 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இதையடுத்து, வேட்பாளர்கள் கொடுத்த ஆவணங்களை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சரிபார்க்கப்பட்டது. அதில், 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதியில் தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1 ஆயிரத்து 85 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்புமனுக்களை திரும்பப்பெற இன்று மாலை 5 மணிவரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் 135 பேர் தங்கள் வேட்புமனுக்களை திரும்பப்பெற்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் வேட்பாளர்கள் இறுதிப்பட்டியலை தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 950 பேர் போட்டியிடுகின்றனர். இதில், 874 பேர் ஆண்கள், 76 பேர் பெண்கள் ஆகும்.
அதேவேளை, அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக நாகை தொகுதியில் 8 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விசிக வுக்காக பொங்கியது பானை! மதிமுகவுக்காக சுத்தாத பம்பரம்! கிடைத்தது தீப்பெட்டி..
by Askar
written by Askar
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தை கட்சி வேட்பாளர் திருமாவளவனுக்கு பானைச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இம்முறை திமுக கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது விசிக. சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகள் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தங்களுக்கு தனிச் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் விசிக கோரிக்கை விடுத்தது. மேலும் இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தையும் அணுகியது.
மதிமுக மனு மீதான விசாரணை ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனுக்கு பானை சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளார் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்ணா.
இதேபோல் திமுக கூட்டணியில் திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் வைகோ மகன் துரை வைகோ போட்டியிடுகிறார். அவருக்கு பம்பரம் சின்னம் மறுக்கப்பட்ட நிலையில், தீப்பெட்டி சின்னம் வேண்டும் என்று கேட்டிருந்தார். அதன்படி, அவருக்கு தீப்பெட்டிச் சின்னத்தை ஒதுக்கீடு செய்து திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்
“2024 நாடாளுமன்றத் தேர்தலில் நமது சின்னம் பானை, இந்தச் சின்னம் நமது உரிமை என்பதில் மிக உறுதியாய் உள்ளோம்,” என்று சமூக ஊடகப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திருமாவளவன்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உனக்கும் எனக்கும் தான் பொருத்தம், மன்சூர் மைன்ட் வாய்ஸ்!- ஓபிஎஸ் மற்றும் மன்சூரலிகானுக்கு ஒரே சின்னம்..
by Askar
written by Askar
நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதே ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 4 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் வேலூர் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்.
நடிகர் மன்சூர் அலிகானுக்கும் பலாப்பழச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. இருவரும் வெவ்வேறு தொகுதியில் போட்டியிடுவதால் ஒரே சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சென்னை-கோவை இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..
சென்னை-கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுமென தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, கோவை-சென்னை இடையே சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் (எண் 06050) இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் கோவையில் இருந்து வரும் மார்ச் 31ம் தேதி அன்று இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை வந்தடையும். அதேபோல் சென்னையிலிருந்து சிறப்பு ரயில் (எண் 06049) ஏப்.1ம் தேதி காலை 10.20 மணிக்கு புறப்பட்டு இரவு 8.25 மணிக்கு கோவை சென்றடையும். கோவையிலிருந்து சென்னைக்கு வரும் பெரம்பூரில் நின்று செல்லும். சென்னையிலிருந்து புறப்படும் பெரம்பூரில் நிற்காது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மோடி ஆட்சியை அகற்றாவிட்டால், வட மாநிலங்களை ஆக்கிரமித்துள்ள பாசிச சக்தி தமிழகத்தையும் ஆக்கிரமிக்கும்!சிவகாசியில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு..
by Askar
written by Askar
மோடி ஆட்சியை அகற்றாவிட்டால், வட மாநிலங்களை ஆக்கிரமித்துள்ள பாசிச சக்தி தமிழகத்தையும் ஆக்கிரமிக்கும்!
சிவகாசியில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு..
சிவகாசியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் தேர்தல் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்து பேசியதாவது:-
இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒரே குறிக்கோளுடன் இருக்கிறது. மோடியின் 10 ஆண்டு கால அவல நிலையை அகற்ற, இந்தியாவை காப்பாற்ற ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும். மோடி வீழ்த்தப்பட முடியாதவர் அல்ல, வீழ்த்தப்பட வேண்டியவர் என்பதை நாட்டு மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். 10 லட்சம் மக்களின் வாழ்வாதாரமான பட்டாசு தொழிலை ஒரே உத்தரவில் நசுக்கியவர் மோடி. யார் பட்டாசு தொழிலை ந சுக்கினார்களோ அவர்கள்தான் இன்று முகமூடியுடன் உங்களிடம் வாக்கு கேட்டு வருகின்றனர். மோடி மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வந்தால், வாக்களிக்
கக்கூடிய கடைசி தலைமுறை நாமாகத்தான் இருப்போம். மோடி ஆட்சியை அகற்றாவிட்டால், வட மாநிலங்களை ஆக்கிரமித்துள்ள பாசிச சக்தி தமிழகத்தையும் ஆக்கிரமிக்கும். தமிழகத்தில் இரண்டு முறை ஏற்பட்ட புயல் வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு சல்லி காசு கூட வழங்கவில்லை.
தமிழகம் ஒரு ரூபாய் வரியாக செலுத்தினால், 29 பைசாவை மத்திய அரசு நமக்கு திருப்பி தருகிறது. ஆனால், உத்தரப்பிரதேச அரசு ஒரு ரூபாய் வரி செலுத்தினால், 12 ரூபாயாக மத்திய அரசு திருப்பி வழங்குகிறது. ஒரு கண்ணில் வெண்ணையையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் மத்திய அரசு வைக்கிறது. தமிழக அரசு நிறைவேற்றும் அனைத்து நலத்திட்டங்களும் மாநில அரசின் சொந்த நிதியிலிருந்து வழங்கப்படுகிறது. என்றார்.
கூட்டத்தில் எம்பியும், வேட்பாளருமான மாணிக்கம் தாகூர்,
எம்.எல்.ஏ. அசோகன், மேயர் சங்கீதா, ஆகியோர்களுடன் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே தேர்தலை புறக்கணிப்பதாக 2 கிராம மக்கள் அறிவிப்பு! அலறி அடித்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை..
by Askar
written by Askar
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே தேர்தலை புறக்கணிப்பதாக 2 கிராம மக்கள் அறிவிப்பு! அலறி அடித்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை..
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மண்டலமாணிக்கம் ஊராட்சிக் குட்பட்ட கோடாங்கிபட்டியில் அடிப் படை வசதிகள், தார் சாலை வசதிகள் செய்து தரப்படாததால், தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவித்தனர்.
கமுதி வட்டாட்சியர் வ.சேதுராமன், காவல் ஆய்வாளர் குருநாதன், கிராம நிர்வாக அலுவலர் பாண்டி, தனிப்பிரிவு சார்பு-ஆய்வாளர் முத்துசாமி உள்ளிட்டோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, அடிப்படை வசதிகள் கோரி அதிகாரிகளிடம் பல ஆண்டுகளாக மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனப் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதேபோல், அடிப்படை வசதிகள் செய்து தராததால், தேர்தலை புறக்கணிப்போம் என அறிவித்த கோவிலாங்குளம் ஊராட்சிக்குட் பட்ட நெறிஞ்சிப்பட்டி கிராம பொது மக்களிடம், கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் கோட்டைராஜ், மணி மேகலை (கிராம ஊராட்சிகள்), சார்பு-ஆய்வாளர் நாகநாதன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த 2 கிராமங்களிலும் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாததால், அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அன்று தினகரன் வீட்டுக் காவல் நாய்! இன்று நாங்கள் சீறும் சிங்கங்கள்!- ஆர்.பி.உதயகுமார் ஓபன் டாக்..
by Askar
written by Askar
அன்று தினகரன் வீட்டுக் காவல் நாய்! இன்று நாங்கள் சீறும் சிங்கங்கள்!- ஆர்.பி.உதயகுமார் ஓபன் டாக்..
கடந்த 15 ஆண்டுகளாக தேனி பக்கமே எட்டிப் பார்க்காதவர் டிடிவி தினகரன். ஜெயலலிதாவால் நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து 10 ஆண்டுகள் ஒதுக்கிவைக்கப்பட்டவர் அவர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகத்தில் தலைகாட்ட ஆரம்பித்தார். ஆர்.கே.நகரில் 20 ரூபாய் நோட்டை காண்பித்து ஏமாற்றி, அதன்பிறகு அந்த தொகுதி பக்கமே போகாமல் இருந்தார். அந்த தொகுதியில் நிற்க முடியாமல், கோவில்பட்டியில் நின்றார்.
அங்கேயும் மக்கள் அவர் மீது நம்பிக்கை வைக்கவில்லை. அவரை புறக்கணித்து தோல்வி அடைய செய்தனர். கடைசி புகலிடமாக தேனி தொகுதிக்கு வந்துள்ளார். தேனி மக்களும் அவரை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. டிடிவி தினகரன் வீரப்பாக சுற்றி வருகிறார். அவரின் வீராப்பு தேனி தொகுதியில் எடுபடாது. என்னை பபூன் என்று கூறுகிறார். அவர் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் பபூன் தான். ஆனால், டிடிவி தினகரன் பி.எஸ்.வீரப்பா மாதிரியான வில்லன். என்னால் எந்த தீமையும் ஏற்படாது. அவரால் என்னென்ன தீமை ஏற்படும் என்று தெரியும். இங்கு நாங்கள்தான் வெற்றி பெறுவோம். டிடிவி தினகரன் பெரா வழக்கில் கைதாகி சிறை செல்வார்.
ஜெயலலிதா இருக்கும்வரை டிடிவி தினகரனை பார்த்து பயந்தது உண்மைதான். அது சத்தியம்தான். ஆனால், இப்போது அவர் காட்டும் பூச்சாண்டிக்கெல்லாம் புழு கூட பயப்படாது. உங்களிடம் இருந்து விடுதலை பெற்று எடப்பாடி தலைமையில் அதிமுக தொண்டர்கள் சுந்திர காற்று சுவாசிக்கிறோம்.
ஜெயலலிதா இருக்கும்வரை டிடிவி தினகரன் வீட்டுக் காவல் நாயாக இருந்தோம். எங்களை சீண்டி பார்க்க நினைத்தால், எச்சரிக்கிறோம். இப்போது சீறும் சிங்கங்களாக விஸ்வரூபம் எடுத்துள்ளோம்.
வாய்ச்சவடால் பேசும் உங்களை மக்கள் நம்ப தயாராக இல்லை. தேனியில் டிடிவி தினகரன் மண்ணைக் கவ்வுவது உறுதி. எனவே, விரக்தியின் வெளிப்பாடாக தான் எங்களை கேலி செய்கிறார். டிடிவி தினகரன் எங்கு போட்டியிட்டாலும் தோற்பது உறுதி” என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்..
by Askar
written by Askar
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்..
திண்டுக்கல் டவுன் பகுதியில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவம் நடைபெற்று வந்த நிலையில் மாவட்டக் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பெயரில் துணை கண்காணிப்பாளர் சிவில் தலைமையில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சுப்பிரமணி சார்பு ஆய்வாளர் மலைச்சாமி திண்டுக்கல் நகர் உட்கோட்ட குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் வீரபாண்டி சார்ஜ் எட்வர்டு மற்றும் தலைமை காவலர்கள் ராதாகிருஷ்ணன் முகமது அலி விசுவாசம் சக்திவேல் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை தேடி வந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த மோகன்தாஸ் மகன் சூரியவர்மன் என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து நகைகள் அனைத்தையும் மீட்டு போலீசார் விசாரணை செய்ததில் மதுரை பெரம்பலூர் உளுந்தூர்பேட்டை கடலூர் ஆகிய மாவட்டங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது பின்னர் குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேடந்தாங்கல் பறைவையாக திண்டுக்கல் வந்துள்ளேன் இனி அனைத்தும் எனக்கு இங்கே தான்! அசத்தும் எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது முபாரக்..
by syed abdulla
written by syed abdulla
வேடந்தாங்கல் பறைவையாக திண்டுக்கல் வந்துள்ளேன் இனி அனைத்தும் எனக்கு இங்கே தான்! அசத்தும் எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது முபாரக்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தஞ்சாவூர் விசிக மைய மாவட்ட மகளிர் அணி செயலாளர் பாஜகவில் இணைந்து விட்டதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தி குறித்து சம்மந்தப்பட்ட விசிக மைய மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராசாத்தி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் :- கடந்த இரு தினங்களுக்கு முன்பாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தஞ்சாவூர் மைய மாவட்ட மகளிர் அணி செயலாளரான ராசாத்தி , பாஜக பிரமுகர் ஒருவர் முன்னிலையில் பாஜகவில் இணைந்து விட்டதாக தகவல் வெளியானது அதனைத் தொடர்ந்து விசிக மைய மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராசாத்தியிடம் இது குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது, நான் எனது நண்பர் ஒருவரது வீட்டிற்கு அவரது குடும்ப பிரச்சினை குறித்து பேசுவதற்காக சென்றிருந்தேன். அப்போது அவருடைய நண்பரான பாஜக பிரமுகர் ஒருவரும் அந்த பிரச்சினை குறித்து பேசுவதற்காக அவரது வீட்டிற்கு வந்திருந்தார். அந்த குடும்ப பிரச்சினை குறித்து பேசி முடித்ததும் வந்திருந்த பாஜக பிரமுகர் எனக்கு மரியாதை நிமித்தமாக சால்வை அணிவிப்பதாக கூறி அணிவித்தார். அவர் அணிவித்த பின்னர் கவனித்தபோது அதில் பாஜக சின்னம் இருப்பதை கண்டவுடன் நான் அந்த சால்வனை அவரிடம் திரும்ப கொடுத்து விட்டு நான் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பில் இருக்கக் கூடியவர் எனக்கு உங்கள் கட்சியின் சின்னம் கொண்ட சால்வை அணிவித்தது வருத்தம் அளிக்கிறது என்று கூறினேன். அவரும் எனக்கு தெரியாது நீங்கள் விசிகவை சேர்ந்தவர் என்று கூறி வருத்தம் தெரிவித்து சென்று விட்டார் பின்னர் எனக்கு பாஜக பிரமுகர் சால்வை அணிவித்த புகைப்படத்தோடு நான் பாஜகவில் இணைந்து விட்டதாக வாட்ஸ் அப்பில் செய்திகள் வெளியானது. அந்த செய்தி வெளியிடப்பட்ட போது நான் எனது கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஆணையின்படி கூட்டணி கட்சி வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தேன் . பின்னர் அந்த செய்தி குறித்து பாஜக பிரமுகரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது , தவறாக செய்தி வெளியிடப்பட்டது என்றும் உடனடியாக அந்த பதிவினை அழித்து விடுவதாக கூறி அழித்தும் விட்டார் . இது குறித்து வருத்தம் தெரிவித்து எனக்கு தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்பி இருந்தார். இந்த ஊடகத்தின் மூலம் எனது சக கட்சி தொண்டர்களுக்கும் , கட்சியின் தலைமைக்கும் நான் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் இன்று வரை நான் விசிகவில் மட்டுமே இணைந்து செயலாற்றி வருகின்றேன் இனி என்றென்றும் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் கொள்கையின்படியும் இறுதி வரை விசிகவில் தொடர்ந்து பயணிப்பேன் என்றும் கூறிக்கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தஞ்சாவூரில் பள்ளி மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் சிலம்ப கலைகளை வெளிக்காட்டி விழா !
by Baker BAker
written by Baker BAker
தஞ்சாவூர் வின்னர் மல்டி மியுரல் அகாடமி தற்காப்பு கலை பன்னாட்டு பயிற்சி பள்ளி மற்றும் ரெங்கநாயகி கல்வி மற்றும் கொண்டு அறக்கட்டளை, அருள்மொழி கலை இளையோர் மன்றம் நேரு யுவகேந்திரா இணைந்து நடத்தும் சிலம்பம் அரங்கேற்றம் மற்றும் மாராயப் பட்டைகள் வழங்கும் விழா தஞ்சை அன்னை சத்யா உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது, தஞ்சாவூர் சிலம்ப சங்க செயலாளர் ராஜேஷ்கண்ணா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சுப்ரீம் கிராண்ட் மாஸ்டர் அருணாச்சலம், ஸ்டார் லயன் கல்வி நிறுவன முதல்வர் மில்டன் ராஜ், ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பள்ளி மாணவ மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் மாராயப் பட்டைகளை வழங்கினர், முன்னதாக இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வாள்வீச்சு, ஒற்றைவாள், இரட்டைவாள், சுருள்வீச்சு, மான்கொம்பு,சக்கர பானம், ஒற்றைக்கம்பு, இரட்டைக்கம்பு, அலங்கார பாடம், குத்துவரிசை ஆகிய தற்காப்பு கலைகளை செய்து காட்டி தங்களது திறமைகளை வெளிக்காட்டினர், இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பயிற்சியாளர் சங்கீதா செய்திருந்தார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்தியா கூட்டணி நெல்லை தொகுதி தேர்தல் பணிக்குழு அலுவலகம் திறப்பு விழா..
இந்தியா கூட்டணியின் நெல்லை பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு அலுவலகம் திறப்பு விழா இன்று காலை நெல்லை பைபாஸ் சாலையில் மத்திய மாவட்ட திமுக அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் திறந்து வைத்தார்.
மத்திய மாவட்ட செயலாளர் டிபிஎம் மைதீன் கான், தென்காசி மாவட்ட செயலாளர் ஜெயபாலன், வேட்பாளர் ராபர்ட் புரூஸ் ஞானதிரவியம் M.P. பாளை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் கே.எஸ்.ரசூல்மைதீன் MC மாவட்ட பொருளாளர் தேயிலை மைதீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட, பகுதி, நகர, நிர்வாகிகள் மற்றும் முன்னாள் MPக்கள் விஜிலா சத்தியானந் ஹெலன், இந்தியா கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், மதிமுக மாவட்ட செயலாளர் நிஜாம், சிபிஎம் மாவட்ட செயலாளர் ராம், சிபிஐ மாவட்ட செயலாளர் சடையப்பன், காசி விஸ்வநாதன், முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் எல்.கே.எஸ்.மீரான் மைதீன், பாட்டபத்து முகம்மது அலி, விசிக மாவட்ட செயலாளர்கள் எம்.சி.சேகர், முத்து வளவன், உள்ளிட்ட தோழமை கட்சி நிர்வாகிகள் திமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வத்தலக்குண்டு தனியார் மஹாலில் சமத்துவ நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினரும் பங்கேற்பு..
by Askar
written by Askar
வத்தலக்குண்டு தனியார் மஹாலில் சமத்துவ நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினரும் பங்கேற்பு..
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் வத்தலக்குண்டுவில் நடத்திய சமத்துவ நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இப்தார் நோன்பு திறக்கும்நிகழ்ச்சி நடைபெற்றது.
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் நோன்பின் போது மத நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் வகையில் அனைத்து மதத்தினர் மற்றும் அனைத்து கட்சியினர் ஒன்றிணைந்து இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நடத்தினார்கள். இந்நிகழ்ச்சிக்கு மனிதநேய மக்கள் கட்சி , தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் உள்பட பல்வேறு கட்சியினர் மற்றும் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பா.ஜ.க வேட்பாளர் நடிகை ராதிகாவின் வெற்றிக்காக துவா ஓதி, சர்ச்சையை கிளப்பிய விருதுநகர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள்..
by Askar
written by Askar
பா.ஜ.க வேட்பாளர் நடிகை ராதிகாவின் வெற்றிக்காக துவா ஓதி, சர்ச்சையை கிளப்பிய விருதுநகர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -3
கப்ளிசேட்
(உஸ்மானிய பேரரசு -30)
(கி.பி 1299-1922)
சுலைமான் அல்கானூனி அவர்கள் இஸ்தான்புல் நகரில் சுலைமானியா மஸ்ஜித் என்ற ஒரு அற்புதமான பள்ளிவாசலை கட்டினார்.
அந்த பள்ளிவாசலின் வளாகத்திற்குள்
ஒரு ஆரம்ப பள்ளிக்கூடம்,
ஒரு மேல்நிலைப்பள்ளி,
ஒருபல்கலைக்கழகம்,
ஒரு மருத்துவமனை
ஒரு
மருத்துவக்கல்லூரி,
வெளியூர்க்காரர்கள்
தங்க ஒரு இலவச தங்குமிடம்,
என்று ஒரு சிறந்த கட்டமைப்பை உருவாக்கினார்.
பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் மஸ்ஜித் நபவி பள்ளிவாசலை
எப்படி கட்டமைத்தார்களோ
அதேபோல சுலைமான் அல்கானூனி அவர்கள் சுலைமானியா மஸ்ஜிதை கட்டமைத்தார்.
சுலைமானியா பள்ளிவாசலில் பணியாற்றும் இமாம்
குர்ஆன்,ஹதீஸ், ஒளியில் புதிய சட்டங்களை பிரித்து அறிந்து உருவாக்குவது,
மற்ற வேதங்களில் அறிவு,
அன்றைய சில உலக மொழிகளில் புலமை,
விஞ்ஞானம், கணிதம், மொழியியல்
இவற்றில் புலமை உடையவராக இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.
பேரரசு முழுவதும் இதுபோன்ற தகுதிகளில் ஒரு ஆலிமை கூட தேடிப்பிடிக்க முடியவில்லை.
சுலைமான் அல்கானூனி அவர்கள் இதுபோன்ற
தகுதிகளை உள்ளடக்கிய ஆலிம்களை சுலைமானியா மஸ்ஜிதின் பல்கலைக்கழகத்தில் உருவாக்க ஏற்பாடுகள் செய்தார்.
சட்டங்களை உருவாக்க பேரரசர் சுலைமான் எடுத்த முயற்சி இவருக்கு கானூனி என்ற பட்டத்தை பெற்றுக் கொடுத்தது.
சுலைமான் அல் கானூனி அவர்கள் ஆறு மொழிகளில் புலமை பெற்று இருந்தார்.
சுலைமான் கானூனி அவர்கள் 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் மிகச்சிறந்த முக்கிய மன்னராக கருதப்பட்டார்.
பேரரசர் சுலைமான் அல் கானூனி அவர்களின் தலைமையில் சென்ற படைகள் ஏராளமான கிறிஸ்தவ கோட்டைகளை கைப்பற்றின.
சுலைமான் அல் கானூனியின் கடற்படை மத்திய தரைக்கடல்,
செங்கடல்,பாரசீக வளைகுடா என எல்லா பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்தியது.
சுலைமான் அல்கானூனி அவர்கள் நீதித்துறையில் மாற்றங்களை தனிப்பட்ட முறையில் ஏற்படுத்தினார்.
உஸ்மானிய பாரம்பரியத்தை மீறி சுலைமான் அவர்கள் ஹர்ரெம் சுல்தான்
என்ற கிறிஸ்தவ பெண்ணை மணந்தார்.
ஆனால் அவர் முஸ்லீமாக மாறினார்.அவர் தனது சிவப்பு நிற கூந்தலால் மேற்கு ஐரோப்பாவில் ரோக்ஸெலானா
என்ற பெயரில் பிரபலமானார்.
சுலைமானின் மகனான முஹம்மது பெரியம்மை நோயால் இறந்தார்.
சுலைமானின் மற்றொரு மகனான
முஸ்தபா பேரரசில் குழப்பங்கள் ஏற்படுத்தியதால் மரணதண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
பிறகு மற்றொரு மகனான பயாஸித் பேரரசில் குழப்பங்கள் ஏற்படுத்தவே அவரது நான்கு மகன்களுடன்
தூக்கிலிடப்பட்டார்.
பேரரசின் ஆட்சியில் குழப்பங்களை ஏற்படுத்துபவர்களை
மன்னர்கள் ஒருபோதும் மன்னிப்பதில்லை.
ஆட்சியை சிறப்பாக நிர்வாகம் செய்ய இதுபோன்ற தண்டனைகளை
மன்னர்களும், அவர்களின் சட்டங்களும், ராஜதந்திரங்களாக
நியாயப்படுத்திவிட்டு
கடந்து செல்கின்றன.
மிகச்சிறந்த பேரரசராக வரலாற்றில் அறியப்பட்ட சுலைமான் அல்கானூனி அவர்கள் ஹங்கேரிக்கு படையெடுத்து சென்றபோது அந்த விபரீதம் நிகழ்ந்தது.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேர்தல் பத்திரங்கள் சட்டம் ரத்து செய்வதற்கு 3 நாடகளுக்கு முன், சுமார் ரூ.10,000 கோடிக்கு பத்திரங்களை அச்சடிக்க அனுமதி வழங்கிய ஒன்றிய அரசு..
by Askar
written by Askar
தேர்தல் பத்திரங்கள் சட்டம் ரத்து செய்வதற்கு 3 நாள்களுக்கு முன், சுமார் ரூ.10,000 கோடிக்கு பத்திரங்களை அச்சடிக்க அனுமதி வழங்கிய ஒன்றிய அரசு..
தேர்தல் பத்திரங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்வதற்கு 3 நாட்களுக்கு முன்பு, தலா 1 கோடி ரூபாய் மதிப்பிலான 10,000 தேர்தல் பத்திரங்களை அச்சிட நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்திருந்தது தெரியவந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 15 அன்று தேர்தல் பத்திர சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்த 15 நாள்களுக்குப் பிறகே, பத்திரங்களை அச்சிடுவதை நிறுத்தும்படி SBI வங்கியிடம் நிதி அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது.
இருப்பினும் இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்தி கழகம், ஏற்கனவே 8,350 பத்திரங்களை அச்சடித்து SBI-க்கு அனுப்பியிருந்த நிலையில், கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தான் மீதமுள்ள 1650 பத்திரங்களை அச்சிடுவதை உடனடியாக நிறுத்துமாறு நிதி அமைச்சகம் உத்தரவு வழங்கியிருக்கிறது.
RTI சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், இந்த விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் மாவட்ட எஸ்.பி. சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், வாக்காளர்களின் அச்சத்தை போக்கும் விதமாக, காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இதில் மேலதாளங்கள் முழங்க காவல் துறையினர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக செல்வது வழக்கம். அந்த வகையில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி வாசுதேவநல்லூர் பகுதியில் நடந்தது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், பிரச்சனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பவர்களை எச்சரிக்கும் விதமாகவும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P..சுரேஷ்குமார் நேரடி கண்காணிப்பில், 29.03.2024 அன்று வாசுதேவநல்லூர் பகுதிகளில் RPF வீரர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. இதில் காவலர்கள் மற்றும் RPF வீரர்கள் முக்கிய வீதிகளில் மேலதாளங்கள் முழங்கிட ஊர்வலமாக சென்றனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.