இராமநாதபுரம் மாவட்டம் பாரதி நகரில் சுதந்திர போராட்ட தலைவரும் இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கிய வருமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 128 பிறந்தநாள் விழா அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் நடைபெற்றது. அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாவட்ட அமைப்பு செயலாளர் பி.கீரந்தை வீரப்பெருமாள் தலைமை வகித்தார், மாவட்ட முதன்மை செயலாளர் தீபக் முன்னிலை வகித்தார், சிறப்பு அழைப்பாளர்களாக முக்குலத்தோர் புலிப்படை மாநில செயலாளர் கமுதி முத்துராமலிங்கம்,மதுரை இளைய நேதாஜி சுவாமிநாதன் சிவகங்கை மாவட்ட பொதுச் செயலாளர் யோகநாதன், டாக்டர் மதிவாணன் அவர்கள்,முக்குலத்தோர் புலிப்படை மாவட்ட அமைப்பு செயலாளர் பொன்முத்துராமலிங்கம், நேதாஜி பவுன்டேசன் மாயக்கிருஷ்ணன், நேதாஜி சமூக நல அறக்கட்டளை ஜோதிபாசு ஆகியோர் கலந்து கொண்டு தேச நலனில் நேதாஜியின் பங்களிப்பு, இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கிய காரணம், தேசப்பக்தி போன்ற பல்வேறு தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள், பார்வர்ட் பிளாக் கட்சியின் மாணவரணி மத்திய குழு உறுப்பினர் வெள்ளைப்பாண்டியன் அனைவரையும் வரவேற்று பேசினார், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாவட்ட செயலாளர் தினேஷ், மாவட்ட பொருளாளர் பாரதி, தொழிற்சங்க செயலாளர் வாசுதேவன், முக்குலத்தோர் புலிப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், கிழக்கு மாவட்ட செயலாளர் பசும்பொன் பாலாஜி ஆகியோர் எற்பாடு செய்தார்கள், தேவர் மீடியா மகேஸ்வரன்,நேதாஜி சுபாஷ் சேனை, வெள்ளாளர் முன்னேற்ற கழகம், ஆகிய பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் ஏராளமான பொதுமக்களும், தொண்டர்களும் கலந்து கொண்டார்கள்.
Category:
தேசிய செய்திகள்
கீழக்கரை வட்டாச்சியர் தலைமையில் தேசிய வாக்காளர் தின விழப்புணர்வு பேரணி !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் தலைமையில் தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி விழிப்புணர்வு பேரணி இன்று காலை நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினம் நாளாக கொண்டாடப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்று 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர்கள் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது.இதன் ஒரு பகுதியாக இன்று காலை சுமார் 9.30 மணி அளவில் கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் தலைமையில் இளம் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கீழக்கரை சந்திப்பிலிருந்து விழிப்புணர்வு பேரணி தொடங்கி சீதக்காதி சாலை வழியாக கீழக்கரை நகராட்சி அலுவலகம் வரை நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் பேரணியில் சிறுவர் சிறுமியர்கள் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் செய்து அசத்தினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்..
by Askar
written by Askar
ராமநாதபுரம் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்..
ராமநாதபுரம், ஜன.25 -இராமநாதபுரம்
மாவட்ட ஊர்க்காவல் படைக்கு (ஆண்கள் மற்றும் பெண்கள்), மீனவர் இளைஞர் கடலோர பாதுகாப்பு படைக்கு (ஆண்கள் மட்டும்) பிப்.17 ல் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது நிரம்பி, நல்ல உடற்தகுதி இருக்க வேண்டும். 10-ம் வகுப்பு கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். பணிபுரிய விருப்பமுள்ளோர், தங்களது
மாற்றுச்சான்று, மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ – 2 ஆகிய வற்றுடன் பிப்.17 ல்
ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேரில் ஆஜராக வேண்டும். மீனவர் இளைஞர் கடலோர பாதுகாப்பு படைக்கு
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரையோர பகுதியில் வசிக்கும் இளைஞர் தேர்வு செய்யப்படுவர். ராமநாதபுரம் மாவட்ட ஊர்க்காவல் படை பிரிவு அலுவலகத்தில் பிப்.5 முதல் வழங்கப்படும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து பிப். 11 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என ராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருமண மண்டபங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த திருடனை கையும், களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த மணமக்கள் வீட்டார்..
by Askar
written by Askar
திருமண மண்டபங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த திருடனை கையும், களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த மணமக்கள் வீட்டார்..
மதுரை நகர் பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் மணமக்கள் வீட்டார் போல் நுழைந்து , அங்கிருந்து மணமக்கள் அறைக்குள் புகுந்து நகைகளை திருடிய நபரை மணமக்கள் வீட்டார் பிடித்து தெப்பக்குளம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இத் திருடன் மதுரை புது மாகாளிப்பட்டி சாலையில் பீட்டர் மகன் வில்லியம் (வயது 42 ) தையற் தொழிலாளி என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. திருடன் வில்லியம் கடந்த மாதம் தெப்பக்குளம் பகுதியில் உள்ள அருணாச்சலம் கமலாம்பாள் திருமண மண்டபத்தில் நுழைந்து அங்கிருந்த மணமக்கள் உறவினர் லட்சுமி என்ற பெண்ணின் கைப்பையிலிருந்த 3 சவரன் தங்க நகையை திருடிச் சென்றுள்ளதை, அங்கிருந்த சிசிடிவி கேமரா-வில் பதிவானதை வைத்து, தெப்பக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில்,
மீண்டும் அதே திருமண மண்டபத்தில் அதே திருடன் வந்து, கைவரிசை காட்ட முயற்சித்த போது, அவனது புகைப்படத்தை ஏற்கனவே வீடியோ வைரல் ஆனதை வைத்து, அங்கிருந்த மணமக்கள் உறவினர்கள் வில்லியத்தை கையும், கனவுமாக பிடித்து, அவனது கைகளை கட்டி தெப்பக்குளம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இத்திருடன் திருமண மண்டபங்களை மட்டுமே குறிவைத்து, மணமுடிக்கும் நேரத்தில் அனைவரின் கவனமும் மணமேடையில் இருக்கும் தருணத்தில் தனது கைவரிசையை காட்டுவது தொடர்கதையாகி வந்த நிலையில்,
தற்போது சிசிடிவி காட்சியை வைத்து நகை திருடன் பிடிப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தெப்பக்குளம் காவல் நிலையத்தினர் தொடர் திருட்டில் ஈடுபட்ட வில்லியத்திடம் இருந்து நகைகளை மீட்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் வில்லியத்திற்கு திருமண மண்டபங்களில் உள்ள ஊழியர்களிடம் தொடர்புகளை வைத்துக்கொண்டு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்…செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராஜபாளையம் அருகே உள்ள வேலாயுதபுரம் அருகே பாலத்தின் அடியில் ரத்தக்காயத்துடன் ஆண் சடலம் மீட்பு! கொலையா தற்கொலை என போலீசார் விசாரணை..
by Askar
written by Askar
ராஜபாளையம் அருகே உள்ள வேலாயுதபுரம் அருகே பாலத்தின் அடியில் ரத்தக்காயத்துடன் ஆண் சடலம் மீட்பு! கொலையா தற்கொலை என போலீசார் விசாரணை..
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி சாலை அருகே வேலாயுதபுரம் பாலம் உள்ளது இந்த பாலத்தின் அடியில் ஆண் சடலம் கிடப்பதாக ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது தகவலின் பெயரில் போலீசார் விரைந்து சென்று ஆண் சடலத்தை மீட்டு விசாரணை செய்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சமுசிகாபுரம் அம்பேத்கர் காலனி பகுதியைச் சேர்ந்த சரவணன் வயது 45 வயது மனைவி இருளாயி இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது என்பதும் .
சரவணன் வெல்டிங் வேலை பார்த்து வந்த நிலையில் ரத்தக்காயுடன் சடலமாக மீட்டனர்
இவரை யாரும் கொலை செய்தார்களா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர் தொடர்ந்து அந்த பகுதியில் சிசிடிவி காட்சி மற்றும் உறவினர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமேஸ்வரத்திற்கு பாரத பிரதமர் வருகையையொட்டி போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம் ! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !!
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்திற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகை தருவதையொட்டி பாதுகாப்பு நலன்கருதி 20.01.2024 மற்றும் 21.01.2024 ஆகிய இரு தினங்கள் போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம் குறித்த விபரம்: 20.01.2024 அன்று நண்பகல் 12:00 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை ராமநாதபுரத்தில் இருந்து இராமேஸ்வரத்திற்கு போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் இராமேஸ்வரம் நகர் பகுதியிலும் இதே நேரத்தில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. 21.01.2024 அன்று இராமேஸ்வரம் நகரில் காலை 6:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 20.01.2024 மற்றும் 21.01.2024 ஆகிய இரு தினங்களுக்கு கனரக வாகனங்கள் இராமேஸ்வரம் நகர் பகுதிக்குள் சென்று வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடி சுற்றுலா தளத்திற்கு போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம் குறித்த விபரம் : 20.01.2024 நண்பகல் 12:00 முதல் 21.01.2024 நண்பகல் 12:00 வரை போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோவில் சாமி தரிசனம் மாற்றம் குறித்த விபரம்: 20.01.2024 அன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி காலை 08:00 மணி முதல் மாலை 06:00 மணி வரை பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி இல்லை. பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதை தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பாதுகாப்பு நலன் கருதி இராமேஸ்வரம் நகர்ப்பகுதி முழுவதும் 20.01.2024 மற்றும் 21.01.2024 ஆகிய இருதினங்களுக்கு டிரோன் கேமரா பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமேஸ்வரத்திற்கு பாரத பிரதமர் வருகை ! மூன்றடுக்கு பாதுகாப்பு மாவட்ட எஸ்பி தகவல் !!
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 20.01.2024 மற்றும் 21.01.2024 ஆகிய தேதிகளில் வருகை தர உள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் தங்குமிடத்தில் ஒரு காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் என மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அருள்மிகு இராமநாதசாமி கோயிலின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களிலும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தனுஷ்கோடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் பொருட்டு, கடலோர பாதுகாப்பு படையினர் மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் மூலம் ரோந்து செய்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இராமேஸ்வரம் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கியுள்ள அந்நிய சந்தேக நபர்கள் எவரேனும் தங்கியிருக்கின்றனரா என தீவிர பரிசோதனை செய்து, இரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்கள் ஆகிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மண்டபம், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ளவர்களின் விபரங்கள் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. மேலும், இராமேஸ்வரம் பகுதி முழுவதும் காவல்துறையின் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிலையிலும் வெடிகுண்டு கண்டுபிடித்தல் மற்றும் செயலிழக்க செய்யும் நிபுணர் குழுவினர் (BDDS TEAM) மற்றும் வெடிகுண்டு மோப்ப நாய் (DOG SQUAD) படையினர் மூலம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் ஒரு கூடுதல் காவல்துறை இயக்குனர் மேற்பார்வையில், 03 காவல்துறை துணைத்தலைவர்கள், 14 காவல் கண்காணிப்பாளர்கள், 13 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 25 உதவி/துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 3400 காவல்துறையினர் மற்றும் 14 வெடிகுண்டு நிபுணர்கள் குழு உள்ளடக்கிய காவல்துறையினர் நியமிக்கப்பட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் செய்தியின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வாடிப்பட்டியில் நடைபெறும் எம்ஜிஆர் பிறந்த தின விழா பொதுக்கூட்டம் பிரச்சார வாகனத்தை முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்..
by syed abdulla
written by syed abdulla
வாடிப்பட்டியில் நடைபெறும் எம்ஜிஆர் பிறந்த தின விழா பொதுக்கூட்டம் பிரச்சார வாகனத்தை முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்..
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் வாடிப்பட்டியில் நடைபெறும் பொது கூட்டத்திற்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை அழைக்கும் விதமாக மேற்கு மாவட்ட முழுவதும் ஆட்டோ வாகன மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளும் பணியை முன்னாள் அமைச்சரும் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர் பி உதயகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார் சோழவந்தான் அருகே நகரி பகுதியில் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அம்மா கிச்சன் மூலமாக தொடர்ந்து ஐந்தாவது நாட்களாக அன்னதானம் வழங்கி வரும் வழங்கும் பணியை பார்வையிட வந்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அங்கிருந்து பிரச்சார வாகனத்தை தொடங்கி வைத்தார் இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா கி மாணிக்கம் தமிழரசன் எஸ் எஸ் சரவணன் ஒன்றிய செயலாளர்கள்வாடிப்பட்டி தெற்கு கொரியர் கணேசன், வடக்கு காளிதாஸ் மதுரை மேற்கு அரியூர் ராதாகிருஷ்ணன் அலங்காநல்லூர் ரவிச்சந்திரன் மற்றும் வாடிப்பட்டி ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா மாவட்ட கவுன்சிலர் ஜெயக்குமார் பேரூர் செயலாளர் முருகேசன் அம்மா பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல் மற்றும் விவசாய அணி வாவிடமருதூர் ஆர் பி குமார் மாவட்ட பிரதிநிதி அலங்கை முரளி குருவித்துறை வழக்கறிஞர் காசிநாதன் சித்தாலங்குடி ஜெயக்குமார் கேபிள் மணி தியாகு குருவித்துறை விஜய் பாபு மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 18 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து நடுக்கடலில் விசாரணை !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் ஜன 16, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாம்பனை சேர்ந்த இரண்டு விசைப்படைகளும் அதிலிருந்து 18 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து மன்னார் தாழ்;வுபாடு கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செவ்வாய்க்கிழமை காலை கடலுக்கு புறப்பட்டனர். மீனவர்கள் தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாம்பன் பகுதியைச் சேர்ந்த இரண்டு விசைப்படகையும், அதிலிருந்த விஜயகுமார், ஆரோக்கியம், யோகம், பிச்சை, இன்னாசி, ஸ்வீடன் உள்ளிட்ட 18 மீனவர்களை கைது செய்து மன்னார் தாழ்வுபாடு கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். கடற்படை முகாமில் மீனவர்களுக்கு முதல் கட்ட மருத்துவ சிகிச்சை அளித்து பின்னர் மன்னார் மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள் 18 பேரும் நாளை புதன்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் என இலங்கை கடற்படையினரால் தெரிவிக்கபட்டுள்ளது. கடந்த ஒரு வார காலத்தில் புதுக்கோட்டை, நாகை ராமநாதபுரம் உள்ளிட்ட மூன்று மாவட்டத்தைச் சேர்ந்த 40 தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு சார்பில் ஆளுநரை சந்தித்து கோரிக்கை மனு !
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வந்த தமிழ்நாடு ஆளுநர் R.N ரவியை அக்னி தீர்த்த கடற்கரை அருகே உள்ள விருந்தினர் மாளிகையில் ஆளுநரை சந்தித்து தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் நல்லதம்பி தலைமையில் கோரிக்கை மனு வழங்கியுள்ளனர் மனுவில் குறிப்பிட்டு இருப்பதுவெள்ள மீட்பு பணியின் போது உயிரை பணயம் வைத்து மக்களை மீட்ட மீனவர்களின் தியாகம் மற்றும் உழைப்பை அரசு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும்தூத்துக்குடி வெள்ளம் மீட்பு பணியின் போது இறந்த மீனவர் ராபிஸ்டன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் தகுந்த இழப்பீடு அரசு வழங்க வேண்டும்மீட்பு பணியில் முதல் அணியாக நிற்கும் மீனவர் மீட்பு படைக்கு அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும்மீட்பு பணியில் ஈடுபடும் மீனவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் மீனவர் மீட்பு படைக்கு பாதுகாப்பு உபகரணங்களை அரசு வழங்க வேண்டும் தாமிரபரணி முகத்துவாரத்தில் அமைந்துள்ள முக துவார மண் அடைப்பை உயிரை பணயம் வைத்து நீக்கி பல்லாயிரம் உயிர்களை காத்த 13 மீனவர்களுக்கு அரசு விருது வழங்கிய கௌரவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி மனு வழங்கியுள்ளனர். தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் வருகை புரிந்த ஆளுநர் கண்டித்து கருப்பு கொடி காட்டி கண்டன போராட்டம் !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாட்டின் ஆளுநர் R.N ரவி ஒரு நாள் சுற்றுப்பயணமாக வருகையை முன்னிட்டு ஆளுநருக்கு எதிராக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழக மக்கள் முன்னணி சார்பில் பெரியார் பேரவையின் தலைவர் நாகேசுவரன் தலைமையில் இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் பாவெல் முன்னிலையில் கருப்புக்கொடி காட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழக மக்கள் முன்னணி மணிமாறன், பெரியார் பேரவையின் காளிதாஸ் செல்வம், வரதன், நித்திஷ், சாம் செல்வராசு ஆகியோர் கண்டன கோஷம் எழுப்பினார். ஆளுநர் ரவியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு , மாநிலங்களுக்கு ஆளுநர்களே தேவையில்லை , ஆளுநர் என்கிற அதிகார அமைப்பை ஒழித்துக் கட்டுவோம், உள்ளிட்ட கோசங்களை எழுப்பினர். மேலும் அவர்கள் கூறுகையில் :- அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தொடர்ச்சியாக தமிழ்நாட்டிற்கு எதிராக, தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராக பேசியும் செயல்பட்டும் வருகிறார். சமீப காலமாக பல்கலைக்கழகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் செல்லும் போது வள்ளலார் சனாதனத்தின் உச்ச நட்சத்திரம் என்றும், தமிழ்நாட்டை தமிழ்நாடு என்று சொல்லாமல் தமிழகம் என்பதே சரி என்றும், தமிழ்நாடு அரசே ஏற்க மறுக்கிற தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் ஏற்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டை ராமஜென்ம பூமி என்றும் உண்மைக்கு புறம்பாக பேசுவதோடு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்துகிறார் என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சிக்கும், சட்டத்திற்கு விரோதமாகவும் தனி அரசாங்கத்தை நடத்த நினைக்கும் ஆளுனரின் இச்செயல்கள் தமிழ்நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது என்றனார். இப்போராட்டத்தில் சிவகங்கை திராவிடர் விடுதலைக் கழகம் மாவட்டச் செயலாளர் பெரியார் முத்து ,ஆதித்தமிழர் கட்சி மண்டலச் செயலாளர் க .பாஸ்கரன், மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன், ஆதித்தமிழர் மாவட்ட செயலாளர் உதயகுமார் , இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கம் தமிழ்மாறன் , செங்கொடி , தமிழக மக்கள் முன்னணி இலங்கேசுவரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டனத்தை தெரிவித்தனர். போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மேட்டுப்பட்டி கிராமத்தில் சந்திரபாண்டி ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் மூவர் கைப்பந்து போட்டி..
by Askar
written by Askar
மேட்டுப்பட்டி கிராமத்தில் சந்திரபாண்டி ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் மூவர் கைப்பந்து போட்டி..
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள 66,மேட்டுப்பட்டி கிராமத்தில், தை திருநாளை முன்னிட்டு சந்திரபாண்டி ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் மாபெரும் மூவர் கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியை, சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தனராஜ், அரசு வழக்கறிஞர் பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்து, போட்டியில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேட்டுப்பட்டி ரூபன்&கோ மோகன் சார்பில் முதல் பரிசு ரூபாய் 6,001 வழங்கப்பட்டது. மேட்டுப்பட்டி திமுக கிளைச் செயலாளர் விஜயன் சார்பில் இரண்டாவது பரிசாக 5,001 வழங்கப்பட்டது. ஊராட்சிச்
செயலர் தெய்வேந்திரன் சார்பில் 4,001 மூன்றாவது பரிசும், மேட்டுப்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கண்ணன் சார்பில் 3,001 நான்காவது பரிசும் வழங்கப்பட்டது. மற்றும் மாணிக்கம்பட்டி ரத்னாஸ் சார்பில் கோப்பைகளும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது. விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை, 66,மேட்டுப்பட்டி சந்திரபாண்டி ஸ்போர்ட்ஸ் அகாடமி நிர்வாகிகள் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தான் பேரூராட்சியில் புகையில்லா போகி கொண்டாட்டம்..
சோழவந்தான் பேரூராட்சியில் தமிழர் திருநாளை முன்னிட்டு தை திருநாளுக்கு முதல் நாள் போகி பண்டிகை கொண்டாடுவது தமிழர்களின் வழக்கம் இதன்படி வீடுகளை சுத்தம் செய்து வெள்ளை அடித்து வீட்டில் உள்ள பழைய பொருட்கள் உடைந்து போன மர சாமான்கள் போன்றவற்றை போகிப் பண்டிகை என்று தீயிட்டு கொளுத்தாமல் பேரூராட்சி வாகனங்களில் பேரூராட்சி மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள கழிவுகள் சேகரிப்பு மையங்களிலும் கழிவுகளை கொடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது பேரூராட்சி சார்பில் அனைத்து தெருக்களிலும் ஒலிபெருக்கி மூலம் கழிவுகளை ஒப்படைக்க வேண்டிய அவசியம் குறித்து ஒளிபரப்பு செய்யப்பட்டது மேலும்சுற்றுச்சூழலை பாதுகாக்க சோழவந்தான் பேரூராட்சி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் முன்மாதிரியான நடவடிக்கைகளை எடுத்தும் வருகிறது இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி சேர்மன் ஜெயராமன் செயல் அலுவலர் செல்வகுமார் சுகாதாரப் பணி ஆய்வாளர் முருகானந்தம் துணைத்தலைவர் லதா கண்ணன் பணி நியமன குழு ஈஸ்வரி ஸ்டாலின் மற்றும்வார்டு உறுப்பினர்கள் சுய உதவி குழுக்கள் பேரூராட்சி பணியாளர்கள் இதில் பங்கேற்றனர் இந்நிகழ்ச்சியில் சுகாதார மேற்பார்வையாளர் மலைச்சாமி டெங்கு பணியாளர் தங்கப்பாண்டி உட்பட பலர்கலந்து கொண்டனர்..செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு வேலைகள் தீவிரம்..
by Askar
written by Askar
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு வேலைகள் தீவிரம்..
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக கருதக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் தை ஒன்றாம் தேதி ஜனவரி-15 அன்று நடைபெறுவது வழக்கம். முதல் ஜல்லிக்கட்டு போட்டிகளான அவனியாபுரம் அதனை தொடர்ந்து பாலமேடு, அலங்காநல்லூர் என அடுத்தடுத்து நடைபெறுகிறது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த ஆண்டு போன்று இந்த ஆண்டும் மாவட்ட நிர்வாகமே ஏற்று நடத்த நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில்., கடந்த எட்டாம் தேதி மாவட்ட நிர்வாகம் மற்றும் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற விழாவில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் மற்றும் காவல் ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டு பந்தக்கல் நடப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் நடைபெற்றது. ஐந்து நாட்களாக நடைபெற்று வரும் பணிகள் தற்போது 80 சதவீதம் முடிவடைந்துள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான வாடிவாசல் விழா மேடை பார்வையாளர் மேடை மற்றும் செய்தியாளர் மேடை சிசிடிவி கேமரா பொருத்தும் பணி போன்றவற்றை மதுரை மாநகராட்சி நகர்ப்புற வளர்ச்சி திட்டமிடல் செயற்பொறியாளர் மாலதி ஆய்வு செய்தார்.
தற்போது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக வாடிவாசல் அமைக்கும், பணி பரிசு பொருட்கள் வைக்கும் இடம், சிறப்பு விருந்தினர்கள் மேடை பார்வையாளர் மேடை, வீரர்கள் பரிசோதனை செய்யும் இடம், காளைகளை பரிசோதனை செய்யும் இடம், காளைகளை அழைத்து வரும் இடம் மாடுகள் சேகரிக்கும் இடம் என அனைத்து இடங்களிலும் தற்போது கம்பு கட்டும் பணிகள் இன்று மாலைக்குள் முடிவு பெறும்.
மேலும் மாவட்ட நிர்வாகம், மதுரை மாநகராட்சி நிர்வாகம் ஏற்று நடத்துவதால் ஜல்லிக்கட்டு போட்டிகளை பதிவு செய்ய ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. நடமாடும் கழிப்பறை, குடிநீர் தொட்டிகள், எல் இ டி திரையரங்குகள் என அனைத்து வசதிகளும் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
காவல்துறை சார்பில் பாதுகாப்பு வழங்குவதற்காக பேரிக்காடு அமைக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுவரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்கு 2400 காளைகள் முன்பதிவு செய்துள்ளனர்.
1318 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ப முன்பதிவு செய்துள்ளனர்.
தற்போது ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்த ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களின் தேர்வுக்காக தற்போது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு களம் காத்திருக்கிறது..செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அமெரிக்கா சிகாகோ மாகாணத்தில் நடந்த ஆன்மிக மாநாட்டில் உரையாற்றிய சுவாமி விவேகானந்தர் 1897 ஜன.25 ஆம் தேதி ராமநாதபுரம் வருகை புரிந்ததாகவும் . அவர் உரையாற்றிய கேணிக்கரை பகுதியில் விவேகானந்தர் ஸ்தூபி விளக்கு தூண் நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு விவேகானந்தர் நண்பர்கள் குழு சார்பில் ஒவ்வொரு வாரமும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் விவேகானந்தர் பிறந்த தினம், இளைஞர் தினத்தை முன்னிட்டு விவேகானந்தர் ஸ்தூபிக்கு இன்று அதிகாலை சிறப்பு பூஜை செய்து அரசு பள்ளி மாணவர்களுக்கு விவேகானந்தர் நண்பர் குழு சார்பில் டாக்டர் மனோஜ் குமார் கல்வி உபகரணங்கள் வழங்கினார். இந்த விவேகானந்தர் ஸ்தூபிக்கு நகரின் முக்கிய பிரமுகர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் 12 பேருக்கு உயர்நீதிமன்றம் பரோல் வழங்கி உத்தரவு! – எஸ்.டி.பி.ஐ. வரவேற்பு
by syed abdulla
written by syed abdulla
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தமிழக சிறைச்சாலைகளில் உள்ள 33 நீண்டநாள் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை, அரசின் கருணை அடிப்படையிலான விடுதலை நடவடிக்கையில் பாரபட்சம் பாராமல் விடுதலை செய்ய வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி உட்பட பல அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றது. மதுரையில் நடந்த மாநாட்டிலும் தமிழக அரசை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. தீர்மானம் நிறைவேற்றியது. மேலும், ஆளுநர் ஒப்புதல் வழங்குவதற்கு தாமதமாகும் பட்சத்தில் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையை கடந்த சிறைக்கைதிகளை மாநில அரசே பரிசீலனை செய்து விடுதலை தொடர்பான உத்தரவினை அறிவிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றி, குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 432 (5) யின் படி தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த தீர்மானம் மூலம் வலியுறுத்தியது.
மேலும், 33 முஸ்லிம் ஆயுள் சிறைக்கைதிகளில் 20 பேரை மட்டும் விடுதலை செய்ய தமிழக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. அதுவும் கிடப்பில் உள்ள நிலையில், எஞ்சியுள்ள 13 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
இந்த 13 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அறிவுரைக் குழு மறுத்து உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த 13 பேரும் உயர்நீதிமன்றத்தை நாடினர். இன்றைய தினம் அவர்களின் 12 பேர் நீதிமன்றம் மூலமாக சாதாரண விடுப்பினை பெற்றுள்ளனர்.
இதுவரையில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் விடுதலை அல்லது பரோல் விடுப்பு என்பது நீதிமன்றம் மூலமாக மட்டுமே கிடைத்துள்ளது.
ஆகவே, நீதிமன்ற நிவாரணங்களை கடந்து, முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை மற்றும் பரோல் விடுப்பை மாநில அரசே சாத்தியப்படுத்த தமிழக அரசு போதுமான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்.
ஒரு பக்கம் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலைக்காக நடவடிக்கை மேற்கொள்ளும் நிலையில், மறுபக்கம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அறிவுரைக் குழு அதற்கு தடையாக இருக்கின்றது என்பது ஏமாற்றும் செயலாக தெரிகின்றது.
ஆகவே, இந்த விவகாரத்தில் அரசின் நடவடிக்கை ஏமாற்றும் வகையில் கண்துடைப்பாக இல்லாமல், அனைத்து ஆயுள் சிறைவாசிகளின் விடுதலையை மாநில அரசே உறுதிபடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, இந்த விவகாரத்தில் கடைசி ஆயுள் சிறைவாசி விடுதலை செய்யப்படும் வரை எஸ்.டி.பி.ஐ. கட்சி அதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து போராடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மக்தூம் ஞானியார் தர்ஹாவில் இருந்த ஜெய்னி என்ற யானை சமீபத்தில் சான்றிதழ் குறைபாடு காரணமாக வனத்துறையால் மீட்கப்பட்டு காப்பகத்தில் உள்ளது. யானை பாகர் பாதுஷா என்பவர் யானை இல்லாத காரணத்தால், தான் மிகுந்த வறுமையில் உள்ளதாக கடையநல்லூர் எம்எல்ஏவிடம் மனு அளித்தார். அதை தொடர்ந்து, கடையநல்லூர் எம்எல்ஏ C.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து யானை பாகர் பாதுஷாவிற்கு அரிசி, மசாலா பொருட்கள் மற்றும் நிதியுதவி அளித்து, யானையை மீட்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விரைவில் யானை மீட்கப்படும் என்பதாக தெரிவித்தார். இந்நிகழ்வின் போது நகர கழக செயலாளர் எம்.கே.முருகன், முன்னாள் நகர கழக செயலாளர் கிட்டுராஜா உள்ளிட்ட கடையநல்லூர் நகர அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பாக போக்குவரத்து விழிப்புணர்வு நடைபெற்றது..
by Askar
written by Askar
மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பாக போக்குவரத்து விழிப்புணர்வு நடைபெற்றது..
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக மதுரை காளவாசல் போக்குவரத்து சிக்னல் சந்திப்பில் மதுரை மாநகர போக்குவரத்து துணை ஆணையாளர் குமார் அவர்கள் தலைமையில் போக்குவரத்து விழிப்புணர்வு நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வில் போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் வாகனத்தை ஓட்டுதல்
செல்போன் பயன்படுத்திக் கொண்டு வாகனம் ஓட்டுதல்
சாலையில் நிர்ணயிக்கப்பட்ட வேக அளவை மீறி அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டுதல்
குடிபோதையில் வாகனம் ஓட்டுதல்
சரக்கு வாகனங்களில் அதிக பாரங்களை ஏற்றி செல்லுதல்
சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லுதல்
என்பன உள்ளிட்ட விதிமுறை மீறல் செய்பவர்களுடைய ஓட்டுநர் உரிமம் குறைந்தபட்சம்
மூன்று மாதத்திற்கு தற்காலிக நீக்கம் செய்யப்படும்
மேலும் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அவசியம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் போது சீட்பெல்ட் அணிவது அவசியம் என்பதை வலியுறுத்தி இருசக்கர நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு கல்லூரி மாணவிகள் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர் இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் துணை கமிஷனர் திருமலை குமார் மற்றும் உதவி ஆணையாளர் செல்வின்குமார் போக்குவரத்து ஆய்வாளர்கள் கார்த்திக் கணேஷ்ராம், நந்தகுமார், மற்றும் போக்குவரத்து உதவி ஆய்வாளர் தார்ஜூஸ் உள்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மலிவு மற்றும் உயர்தர மருந்துகள் இனி வேளாண்மைக் கடன் சங்கம் மூலம் கிராமப்புற மக்களுக்கு கிடைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு..
by Askar
written by Askar
மலிவு மற்றும் உயர்தர மருந்துகள் இனி வேளாண்மைக் கடன் சங்கம் மூலம் கிராமப்புற மக்களுக்கு கிடைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு..
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா திங்களன்று ஐந்து மாநிலங்களில் முதன்மை வேளாண்மைக் கடன் சங்கங்கள் (பிஏசிஎஸ்) மூலம் பிரதமரின் பாரதிய ஜன் ஔஷதி கேந்திரங்களின் செயல்பாட்டிற்கான ஸ்டோர் குறியீடுகளை விநியோகித்தார். “பிரதமர் ஜன் ஔஷதி கேந்திராக்களில் கிடைக்கும் மலிவு மற்றும் உயர்தர மருந்துகள் பிஏசிஎஸ் மூலம் கிராமப்புறங்களில் உள்ள வறியவர்களைச் சென்றடையும் என்று ஷா அடிக்கோடிட்டுக் காட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மற்றும் உள்துறை மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் அமித் ஷாவின் திறமையான வழிகாட்டுதலின் கீழ், பிஏசிஎஸ் பன்முகத்தன்மை கொண்டதாக மாற்றும் செயல்முறையை மேற்கொண்டு வருகிறது. கூட்டுறவு இயக்கத்தை ஊக்குவிப்பதற்காக அறியப்பட்ட ஷா, நாடு முழுவதும் 2,373 PACS இல் ஜன் ஔஷதி கேந்திராக்களை நிறுவுவதை மேற்பார்வையிடுகிறார்.
ஷாவின் தொலைநோக்கு நடவடிக்கை, மலிவு விலையில் கிடைக்கும் மருந்துகளின் பயன்கள் கிராமப்புற ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு பிஏசிஎஸ் மூலம் நீட்டிக்கப்படுவதை உறுதி செய்கிறது. முன்னதாக, முக்கியமாக நகர்ப்புறங்களில் அமைந்துள்ள ஜன் ஔஷதி கேந்திராக்களின் முதன்மைப் பயனாளிகளாக நகர்ப்புற ஏழைகள் இருந்தனர்.
மோடி அரசாங்கத்தின் கீழ், குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள் இந்தியாவின் மருந்துத் துறையை உலகளாவிய தலைவராக உயர்த்தியுள்ளன. உலகிற்கு மருந்துகளை அனுப்பும் இந்தியா, அதன் மக்கள்தொகைக்கு மருந்துகளை வாங்குவதற்கு தேசம் போராடிய அதன் கடந்த காலத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது. அமித் ஷாவின் கொள்கைகள் பாரதீய ஜன் ஔஷதி கேந்திராக்கள் மூலம் 60 கோடிக்கும் அதிகமான தாழ்த்தப்பட்ட நபர்களைச் சென்றடையும் வகையில், ஜெனரிக் மருந்துகளின் விநியோகத்தை முறைப்படுத்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
மோடியின் ஆட்சியில் கிராமப்புறங்களில் சுகாதாரம் கணிசமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது, கூட்டு முயற்சிகளில் வலுவான கவனம் செலுத்துகிறது. தற்போது, குஜராத், ஜம்மு மற்றும் காஷ்மீர், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு போன்ற மாநிலங்களில் கிராமப்புறங்களில் சுமார் 2,300 பிஏசிஎஸ் மலிவு விலையில் மருந்துகளை விநியோகித்து வருகிறது.
பிஏசிஎஸ் மூலம் ஜன் ஔஷதி கேந்திராக்களின் வரம்பை விரிவுபடுத்தும் உறுதியுடன், ஒத்துழைப்பு அமைச்சகத்துடன், ஷா ஒவ்வொரு பஞ்சாயத்திலும் அவர்களின் இருப்பை உறுதிசெய்யும் வகையில், 2 லட்சம் புதிய பிஏசிஎஸ்களை நிறுவுவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம்; அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பேரூராட்சிக்குட்பட்ட திருவேங்கடம் கூட்டுறவு சிறப்பு அங்காடியில் பொங்கல் பரிசு தொகுப்பினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பொதுமக்களுக்கு வழங்கினார். தமிழக மக்கள் வரும் பொங்கல் 2024-ஐ மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏதுவாக அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, 1 முழு கரும்பு மற்றும் ரொக்கம் ரூ.1000 ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்க தமிழக முதலமைச்சரால் ஆணையிடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் இத்திட்டத்தினை 10.01.2024 அன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமையேற்று திருவேங்கடம் கூட்டுறவு பண்டகசாலை நடத்தும் நியாய விலைக் கடையில் வைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
இத்திட்டத்தின் மூலம் தென்காசி மாவட்டத்தில் உள்ள 658 நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 4,71,543 குடும்ப அட்டைதாரர்கள் ரூ.5266 கோடி மதிப்புள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்று பயன் பெறுவார்கள். இவ்விழாவில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன் சோங்கம் ஐடக் சிரு, மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, மாவட்ட வழங்கல் அலுவலர் அனிதா, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் ஈ. ராஜா, திருவேங்கடம் தாசில்தார் பாஸ்கரன், கூட்டுறவுச் சங்கங்களின் தென்காசி மண்டல இணைப்பதிவாளர் கு.நரசிம்மன், முதுநிலை மண்டல மேலாளர்/இணைப்பதிவாளர் ராஜேஷ், துணைப்பதிவாளர் (பொவிதி) செல்வி. ரா.திவ்யா, கூட்டுறவு சார்பதிவாளர் சி.கு.விஜயகுமார், சங்கச் செயலாளர் ஆ.விஜய ராஜகுரு, மாவட்ட கூட்டறவு ஒன்றிய செயலாளர் மாரியப்பன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் சங்கப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.