பா.ஜ.க வேட்பாளர் நடிகை ராதிகாவின் வெற்றிக்காக துவா ஓதி, சர்ச்சையை கிளப்பிய விருதுநகர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள்..
Category:
தேசிய செய்திகள்
ராமநாதபுரம் பட்டணம் காத்தான் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ராமநாதபுரம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக, அமமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற வைக்க வேண்டுமென பேசினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்த நிலையில், பீகாரில் ராஷ்டிரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு..
by Askar
written by Askar
பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.இந்த தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், ராஷ்டிரீய ஜனதா தளம் சார்பில் மகாகத்பந்தன் கூட்டணியும் முதன்மையான அணிகளாக உள்ளன.இந்தியா கூட்டணிக்கு முக்கிய காரணமான பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார், சமீபத்தில் அந்தக் கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.இதையடுத்து ராஷ்டிரீய ஜனதா தளம் தலைமையிலான மகாகத்பந்தன் அணியில் தற்போது காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. பாராளுமன்ற தேர்தலுக்காக ராஷ்டிரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்தது.இந்நிலையில், பீகாரில் ராஷ்டிரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பீகாரில் ராஷ்டிரீய ஜனதா தளம் 26-ல் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 9 இடங்களிலும், இடதுசாரி கட்சிகள் 5 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. சிபிஐ எம்.எல். கட்சிக்கு 3 தொகுதிகளும், சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாஜகவின் தேர்தல் பத்திர முறைகேடு உலகிலேயே மிகப்பெரிய ஊழல்: பகீர் கிளப்பிய நிர்மலா சீதாராமனின் கணவர்..
by Askar
written by Askar
ஒன்றிய பாஜக அரசு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தேர்தல் பத்திரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், ஆகவே இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தேர்தல் பத்திர நடைமுறை ரத்து செய்யப்படுவதாக ஒருமித்த தீர்ப்பு வழங்கினர்.
மேலும், தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை SBI வங்கி வெளியிடவேண்டும் என்றும் உத்தரவிட்டனர். முதலில் இதற்கு காலஅவகாசம் கேட்ட SBI உச்சநீதிமன்றத்தின் கண்டிப்பைத் தொடர்ந்து அந்த ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் அளித்தது. அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் அந்த அறிக்கைகளை இணையதளத்தில் வெளியிட்டது.
இந்த அறிக்கையில் தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரம் வெளியானது. அதில் பாஜகவுக்கே அதிக நன்கொடை சென்றதும் உறுதியானது. அதனைத் தொடர்ந்து யார் யார் எந்த அரசியல் கட்சிக்கு நன்கொடை அளித்தது என்பது குறித்த விவரத்தையும் SBI வெளியிட்டது
இந்த நிலையில், தேர்தல் பத்திர முறைகேடு உலகிலேயே மிகப்பெரிய ஊழல் என ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் கூறியுள்ளார். பொருளாதார நிபுணராக பரகலா பிரபாகர், தனியார் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், தேர்தல் பத்திர விவகாரத்தில் பாஜக அரசு ஊழல் செய்துள்ளது. இது இந்தியாவில் மட்டும் அல்ல, உலகிலேயே மிகப்பெரிய ஊழல் என்பதை அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர்
வரும் காலத்தில் தேர்தல் பத்திர விவகாரம் இன்று இருப்பதை விட அதிக வேகம் பெறும். இது ஒரு முக்கிய பிரச்னையாக மக்கள் புரிந்துகொள்வார்கள். நடக்கவிருக்கும் தேர்தல் இந்தியா கூட்டணி – பாஜக இடையேயானது அல்ல. நடக்கும் தேர்தல் பாஜக – இந்திய மக்களுக்கு இடையேயானது. பாஜக அரசை இந்தியி மக்கள் தண்டிப்பார்கள் என்று கூறியுள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ! பொதுமக்கள் ஆவலுடன் கையொப்பம் !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முக்கு ரோட்டில் இருந்து வள்ளல் சீதக்காதி சாலை வழியாக நடை பயணம் மேற்கொண்டு தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம் பாராளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தலில் 100% வாக்களிப்பது அவசியம் குறித்து ஆட்டோக்களில் பதாகை வைத்து பொதுமக்களிடம் கையொப்பம் பெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சி கீழக்கரை வட்டாட்சியர் பழனிகுமார் தலைமையில் நடைபெற்றது. பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024 தொடர்பாக 100% வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் , வாக்காளர்கள் மத்தியில் வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் , ஸ்டிக்கர்களை ஒட்டியும் துண்டு பிரசுரம் பொதுமக்களிடம் வழங்கியும் வாக்களிக்கும் செய்முறைகளை பற்றி விழிப்புணர்வு செய்தனர். பொதுமக்கள் ஆவலுடன் கையொப்பமிட்டு ஆதரவை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் துணை வட்டாட்சியர் பரமசிவம் , கீழக்கரை வருவாய் ஆய்வாளர் வேல்முருகன் கிராம நிர்வாக அலுவலர் வினோத் யசோதா மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திமுக கூட்டணி வேட்பாளரான நவாஸ்கனிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் ! அமைச்சர் ராஜகண்ணப்பன் வாக்கு சேகரிப்பு !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் தொகுதி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டும் திமுக கூட்டணி வேட்பாளரான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி இரண்டாவது முறையாக ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று காலை ராமேஸ்வரம் ராமநாதசவாமி திருக்கோவிலில் ராமநாதசாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து பின்னர் ராமேஸ்வரத்தில் காரியாளத்தை திறந்து வைத்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். ராமேஸ்வரத்தில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு நவாஸ்கனிக்கு ஆதரவாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் இணைந்து ராமேஸ்வரம் நகர் பகுதி, கடற்கரை துறைமுக வீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் பழங்கொட்டை தெருவில் வசித்து வரும் சேக் தாவுது என்பவரது வீட்டில் இன்று அதிகாலையிலேயே தேசிய பாதுகாப்பு முகமை டிஎஸ்பி முருகன் தலைமையில் 5க்கும் மேற்பட்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இவர் மீது ஏற்கனவே வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் இருந்து சேக்தாவூது வீடு மட்டுமின்றி அருகில் உள்ள அவருடைய அப்பா வீட்டிலும் என்.ஐ.ஏ. சோதனை நடந்துள்ளது. இதனால் தேவிப்பட்டினம் பகுதியில் பரபரப்பு நிலவியது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் தொகுதியில் ஓ . பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் வேட்பு மனு தாக்கல் !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நேற்றைய தினம் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அதே நாளில் உசிலம்பட்டி அருகே உள்ள மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த ஓ பன்னீர்செல்வம் என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்தார் . இந்த நிலையில் இன்று( 26.03.2024 )தெற்கு காட்டூரை சேர்ந்த ஓ பன்னீர்செல்வம், மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த ஓ பன்னீர்செல்வம், திருமங்கலத்தைச் சேர்ந்த ஓ பன்னீர்செல்வம் என்ற 3 பேர் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அது மட்டுமின்றி நேற்று வேட்புமனு தாக்கல் செய்த உசிலம்பட்டியை அடுத்த மேக்கிலார் பட்டி என்ற ஊரைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று மேலும் ஒரு வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மேலும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்த 3 ஓ பன்னீர்செல்வத்தை சேர்த்து இதுவரை 5 பேர் ஓ பன்னீர்செல்வம் என்ற பெயரில் ராமநாதபுரம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திர பிரபா ஜெயபால் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திர பிரபா ஜெயபால் பாரதி நகர் பகுதியில் இருந்து தாரை தப்பட்டை முழங்க கட்சியின் தொண்டர்களோடு ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி விஷ்ணு சந்திரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பாளர் உடன் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மாவட்ட தலைவர் கண். இளங்கோ மாவட்ட செயலாளர் நாகூர் கனி, தொகுதி பொறுப்பாளர் வெண்குளம் ராஜு உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்.! மாவட்ட எஸ்பியின் சிறப்பு பாதுகாப்பு பணி !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் தொகுதி மக்களவைத் தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் ராமேஸ்வரம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அதிமுக கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் மற்றும் அதிமுக கூட்டணி சார்பில் புதிய தமிழகம், தேமுதிக, எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளின் தொண்டர்கள் நிர்வாகிகள் இணைந்து ஆயிரக்கணக்கானோர் எழுச்சியுடன் திரண்டு பேரணியாக வெற்றிக் கோசமிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வேட்பாளர் ஜெயபெருமாளை அழைத்து வந்தனர். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரனை சந்தித்து வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதிமுக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆர்எஸ் மங்கலம் அதிமுக சிறுபான்மை நலபிரிவு ஒன்றிய செயலாளர் பஜருல் ஹக் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். மேலும் இப்பேரணியை மாவட்ட எஸ்பி சந்தீஷ் சிறந்த முறையில் பாதுகாப்புடன் வழிநடத்திச் சென்று வேட்பு மனு தாக்கல் முடியும் வரை செயல்பட்டது. மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் மாவட்ட கண்காணிப்பாளருக்கு மக்களிடையே பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்டத்தில் அஇஅதிமுக கழகத்தில் மாற்று கட்சியினர் இணைந்தனர் !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டத்தில் அஇஅதிமுக கழக அமைப்பு செயலாளர் அ அன்வர் ராஜா மாவட்ட கழக செயலாளர் MA முனியசாமி ஆர் எஸ் மங்களம் ஒன்றிய செயலாளர் SRG திருமலை ஆர் எஸ் மங்களம் ஒன்றிய சிறுபாண்மை நலப்பிரிவு செயலாளர் P பசுருருல் ஹக் ஆகியோர் முன்னிலையில் 50க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி அஇஅதிமுக கழகத்தின் இணைந்தனர். இந்நிகழ்வில் மாற்று கட்சி நிர்வாகிகளான EX. MP. ரித்தீஸ் PA டூயட் பாபு (எ) முகமது ரிலுவான் அமுமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சக்திமுகுந்தன் OPS அணி மாவட்ட சிறுபாண்மை பிரிவு செயலாளர் சீனிமுகமது அமமுக இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் நைனா முஹம்மது பால்குளம் சஞ்சய் சோழந்தூர் தேவாராஜ் திருப்பாலைக்குடி பழங்கோட்டை காளிதாஸ் காந்திநகர் அந்தோனி உட்பட பலர் இணைந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் செய்தியாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு ! மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்பி சந்தித்து வாழ்த்து !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் செய்தியாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் இன்று (23.03.2024 ) நடைபெற்றது . இக்கூட்டத்தில் சங்கத்தின் புதிய தலைவராக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தியாளர் கே.தனபாலன், செயலாளராக நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் கே கே. குமார், பொருளாளராக சத்தியம் டிவி செய்தியாளர் பி. மகேஸ்வரன், கௌரவ தலைவராக தினமலர் நாளிதழ் உதவி ஆசிரியர் பழனிச்சாமி, துணைத் தலைவராக வசந்த் தொலைக்காட்சி செய்தியாளர் ஜி இளங்கோவன் ,இணைச்செயலாளராக தினபூமி நாளிதழ் செய்தியாளர் ஆர் . ரமேஷ், பாலிமர் தொலைக்காட்சி செய்தியாளர்ஏ . பிரபு ராவ், நிர்வாக குழு உறுப்பினர்களாக ராஜ் டிவி பாகற் செழியன், நமது அம்மா பாலமுருகன்,நியூஸ் 18 டிவி செய்தியாளர் வீரக்குமரன் , தந்தி தொலைக்காட்சி செய்தியாளர் சோனை முத்தன், மாலை முரசு டிவி செய்தியாளர் கண்ணன் பாபு ஆகியோர்களை ஏகமனதாக பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஆகியோரே நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்றனர். தேர்வாகியுள்ள சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு ராமநாதபுரம் மாவட்ட அரசு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலு மனோகரன் கலை, அறிவியல் மகளிர் கல்லூரி முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் வேலு மனோகரன் கலை, அறிவியல் மகளிர் கல்லூரி முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி நிறுவனர் வி.மனோகரன் தலைமையில் நடைபெற்றது. மதுரை யாதவா கல்லூரி முதல்வர் (ஓய்வு) கண்ணன், மதுரை ஆயிர வைஸ்யர் கல்லூரி முதல்வர் சிவாஜி கணேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இவ்விழாவில் 2019-22, ஆண்டில் பயின்று பல்வேறு பாடப் பிரிவுகளில் அழகப்பா பல்கலை அளவில் பயின்ற சிறப்பிடம் பிடித்த 8 மாணவியர் & 2020-23 ஆண்டில் பயின்று பல்வேறு பாடப்பிரிவுகளில் பல்கலை அளவில் சிறப்பிடம் பிடித்த 7 மாணவியர் உள்பட 423 மாணவியருக்கு அழகப்பா பல்கலை துணை வேந்தர் ரவி பட்டம் வழங்கினார். துணை சேர்மன் பார்த்தசாரதி, அறக்கட்டளை உறுப்பினர்கள் முத்துக்குமார், தேவகி, பத்மாவதி, செயலர் சகுந்தலா, முதல்வர் காஞ்சனா உள்பட பலர் பங்கேற்றனர். இதில் கல்லூரி நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவிகளின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் கேனிக்கரை அருகே தனியார் மஹாலில் திமுக சார்பில் அனைத்து கட்சிகளையும் அழைத்து இந்தியா கூட்டணியில் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி அறிமுகம் கூட்டம் திமுக மாவட்ட செயலாளர் மற்றும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். இதில் சென்ற பாராளுமன்ற தேர்தலை விட இந்த தேர்தலில் ஏணி சின்னத்தில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனிக்கு அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்டத்தில் துணை ராணுவ படையினரின் அணிவகுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் தலைமையில் பொதுமக்கள் பாராளுமன்ற தேர்தலில் நேர்மையாக அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒத்திகை நடைபெற்றது. குமரய்யா கோயிலில் தொடங்கி நகரின் முக்கிய பகுதியில் வலம் வந்து நிறைவடைந்தது. ஏப்ரல் 19ஆம் தேதி அன்று பாராளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் முதல் கட்டமாக நடைபெற உள்ளதால் இந்த ஒத்திகை நடைபெற்றது. மேலும் தேர்தல் ஆணையத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ,தேர்தலில் வாக்களிப்பது குறித்த ஒத்தியை நிகழ்வுகள் மற்றும் பாதுகாப்பு அணிவகுப்பு போன்றவை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் துணை ராணுவப்படையுடன் மாவட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ,இந்திய தேசிய லீக் கட்சி தனது ஆதரவு !
by Baker BAker
written by Baker BAker
இ
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலினை சந்தித்து இந்தியா கூட்டணிக்கு இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் பஷீர் அகமது ஆதரவைத்து தெரிவித்தார்.
பொதுச் செயலாளர் கவியருவி பேராசிரியர் தி.மு. அப்துல் காதர், மாநில பொருளாளர் குத்தூஸ் ராஜா, மாநில அமைப்புச் செயலாளர் ஷாஜகான், தென் மண்டல அமைப்புச் செயலாளர் அம்ஜத் கான், உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு இந்திய தேசிய லீக் கட்சியினர் ஆதரவை தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
16 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!-தேமுதிக-விற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு,புதிய தமிழகம், SDPI கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு..
by Askar
written by Askar
16 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!-தேமுதிக-விற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு,
புதிய தமிழகம், SDPI கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு..
வடசென்னை – ராயபுரம் மனோகரன்
தென் சென்னை – ஜெயவர்தன்
காஞ்சிபுரம் – ராஜசேகர்
அரக்கோணம் – விஜயன்
ஆரணி – கஜேந்திரன்
கிருஷ்ணகிரி – ஜெயப்பிரகாஷ்
விழுப்புரம் – பாக்கியராஜ்
சேலம் – விக்னேஷ்
நாமக்கல் – தமிழ்மணி
ஈரோடு – ஆற்றல் அசோக்குமார்
கரூர் – தங்கவேல்
சிதம்பரம் – சந்திரஹாசன்
மதுரை – சரவணன்
தேனி – நாராயணசாமி
நாகை – சுர்ஜித் சங்கர்
இராமநாதபுரம் – ஜெயபெருமாள்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் அதிரடி சோதனை !திருவாடனை அருகே சிக்கிய பணம் !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கருமொழி செக்போஸ்டில் நாடாளுமன்றத் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கோட்டைராஜா தலைமையிலான குழுவினர் அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த பௌசுல்லா என்பவர் காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.80 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் மற்றொரு காரில் கண்ணன் என்பவர் எடுத்து வந்த மு க ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட 5 டீசர்ட் பண்டில்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுபோல திணையத்தூர் அருகே தேர்தல் பறக்கும் படை நடத்திய வாகன சோதனையில் பாம்பன் பகுதியைச் சேர்ந்த கோமதி என்பவரது காரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ 97 ஆயிரத்து 100 ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வங்கியாளர்களுடனான ஆலோசனை கூட்டம் !
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வங்கியாளர்கள் உடன் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், நாடாளுமன்ற பொதுத்தேர்தல்- 2024க்காண தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்ததையொட்டி வங்கியாளர்கள் பண பரிவர்த்தனைகள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதலை பின்பற்றி செயல்பட வேண்டும்.ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கும் அதே போல் ஏடிஎம் இயந்திரங்களுக்கு பணம் எடுத்துச் செல்லும் போது உரிய ஆவணங்களுடன் அனுமதிக்கப்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் அடையாள அட்டையுடன் பணிமேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். மேலும் ஒவ்வொரு நாளும் வங்கிகளில் வாடிக்கையாளர்கள் பண பரிவர்த்தனையின் போது சந்தேகத்திற்குரிய கண்டறிந்தால் உடனடியாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.அதேபோல் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பங்கேற்கவுள்ள வேட்பாளர்களுக்கான தேர்தல் வங்கி கணக்கு துவங்கும் போது அவர்களிடம் தேர்தல் நடத்தை விதிகளை கடைபிடித்து செயல்பட வங்கியாளர்கள் அறிவுறுத்த வேண்டும். தேர்தல் முடிவுறும் வரை வங்கிகளில் தேர்தல் ஆணைய வழிமுறைகளை பின்பற்றி சிறப்பாக செயல் பெற்றிட வேண்டுமென மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு, கூடுதல் ஆட்சியர் ஊரக வளர்ச்சி முகமை வீர் பிரதாப் சிங், பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கெளர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) இளங்கோவன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரத்தில் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள் ! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !!
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவிக்கையில் :- இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி 2024 நாடாளுமன்ற பொது தேர்தல் அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் 20.03.2024 அன்று வேட்புமனு தாக்கல் தொடங்கவும், 27.03.2024 அன்று வேட்புமனு கடைசி நாளாகவும், 28.03.2024 அன்று வேட்புமனு பரிசீலனையும் மேற்கொள்ளப்பட்டு 19.04.2024 வாக்குப்பதிவும், 04.06.2024 அன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப் பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி, இன்று முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறைக்கு உட்படுத்தப் பட்டுள்ளது. இதிலிருந்து 24 மணி நேரத்திற்குள் அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்படவும் மற்றும் அரசு இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் அனுமதியின்றி உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள் அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது. 1950 மற்றும் 1800 425 7092 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையும் மற்றும் 04567-230410, 04567-230411, 04657-230412, 04567-230413 என்ற எண்ணிலும் பொதுமக்கள் தேர்தல் விதிமுறைகளை மீறுவோர்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம். அதன் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதையொட்டி, 48 பறக்கும் படை குழு, 24 நிலையான கண்காணிப்பு குழு என கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு, தேர்தல் விதிமுறைகள் மீறுவது கண்டறிந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல் பொதுமக்கள் ரூபாய் 50,000/க்கும் மேல் கொண்டு செல்வதாக இருந்தால் உரிய ஆவணங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும். காவல்துறை மற்றும் துணை இராணுவம் ஐந்து கம்பெனிகள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளார்கள். மாவட்டத்தை பொருத்தவரை நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து தேர்தல் சிறந்த முறையில்நடத்திட உறுதுணையாக இருந்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு , பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கௌர், உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவானந்தம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்)இளங்கோ மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..
You must be logged in to post a comment.