உலக செய்திகள்
கடந்த சில மாதங்களாகவே உத்திரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களும், வன்முறை சம்பங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆட்சியாளர்களே தவறான வகையில் சட்டத்தை கையாள்வதால், சாமானிய மக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள்.
இந்நிலையில் எந்த திசையில் நோக்கினாலும் “காவி மயம்” என்று சொல்லும் வகையில் அனைத்திலும் காவி சித்தாந்தம் திணிக்கப்பட்டு, காவி நிறம் பூசப்பட்டு வருகிறது. அரசு கட்டிடங்கள் தொடங்கி ,போக்குவரத்து வாகனங்கள், மின் கம்பங்கள் என அனைத்திலும் காவிநிறம், ஆனால் நிறம் மாறினாலும் மனம் மாறாது என்பதை ஆட்சியாளர்கள் மறந்து விட்டார்கள்.
முப்பது கோடி முகமைடையாள் என்ற பாடலுக்கு சொந்தமான இந்திய திருநாட்டில், பன்முக தன்மை சமுதாயத்தை கொண்ட நம் நாட்டில், சகோதரத்துவத்துடன் வாழும் மக்கள் மத்தியில் இந்துத்துவா கொள்கையை புகுத்துவதன் மூலம் பிரிவினைவாதத்திற்கு இது ஒரு தூண்டுகோளாக அமையுமோ? என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இது போன்ற அசாதாரண சூழலுக்கு தீணி போடும் வகையில் அரசியல் மற்றும் ஜாதி தலைவர்கள் சிலைகளும் அவ்வப்போது உடைக்கப்பட்டுவதும், பின்னர் சிலையை பாதுகாக்க இரும்பு கூண்டில் வைப்பதும் வக்கிரத்தின் உச்சத்தை காட்டுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு உத்திர பிரதேச மாநிலம் பாதாவுன் கிராமத்தில் அம்பேத்கர் சிலை சமூக விரோதிகளால் உடைப்பப்பட்டது. உடனே அதே இடத்தில் காவி வண்ணம் பூசிய அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது.
காவி நிறத்தில் இருந்த அம்பேத்கர் சிலையின் புகைப்படங்கள் ஊடகம் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக தீயாக பரவியது. ஆனால் பதட்டத்தை தடுக்கும் வகையில் பகுஜன் சமாஜ்வாடி கட்சியை சார்ந்த ஒருவர் காவி நிறத்தில் இருந்த அம்பேத்கர் சிலைக்கு காவல் துறை முன்னிலையில் நீல நிறம் மாற்றப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது.
அந்த சர்ச்சைக்கு பிறகு சர்ச்சைக்கு தற்போது சஹஜான்பூர் மாவட்டத்திலுள்ள பந்தா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு காவி நிறம் பூசப்பட்டு பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
இந்நிலையில் போன வருடம் வரை அந்த காந்தி சிலையில் உடை வெள்ளை நிறத்திலும் கண்ணாடி கருப்பு நிறத்திலும் இருக்க தற்போது இரவோடு இரவாக காந்தி சிலையின் உடலில் உடுத்தியிருக்கும் உடைக்கு காவி நிறம் பூசப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் தரப்பு இது கண்டிப்பாக பாஜகவின் வேலையாகத்தான் இருக்கும் என அதிருப்தியையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அமீரகத்தில் நாளை (01/08/2018) முதல் மூன்று மாதங்கள் பொதுமன்னிப்பு தொடங்குகிறது..
அமீரகத்தில் நாளை முதல் (01/ஆகஸ்டு/2018) பொதுமன்னிப்பு நடைமுறைக்கு வருகிறது.இதையடுத்து நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரிவான சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு இந்த பொதுமன்னிப்பு நடைமுறையில் இருக்கும்.
இதன் முடில்படியாக தாயகம் திரும்ப தேவையான பொதுமன்னிப்பு ஆவணங்கள் சரிசெய்யும் நபர்கள் அதன் வேலைகள் முடிந்து 21 நாட்களுக்குள் அங்கிருந்து தங்கள் தாய்நாடு திரும்ப வேண்டும்.
இவர்கள் திரும்ப அமீரகத்தில் வேலைக்கு செல்ல எந்த தடையும் இருக்காது என்று துபாய் தொழிலாளர் துறை மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய பத்திரிகைகள் சந்திப்பில் தெரிவித்தார்.
1) அமீரகத்தில் முறைப்படியான விசா மூலம் வேலைக்கு வந்து, பின்னர் சட்டத்திற்கு புறம்பாக தங்கிவரும் தொழிலாளர்கள் தண்டனை தொகை செலுத்தாமல் தாயகம் திரும்பலாம்.
2) அல்லது புதிய (Sponsor)முதலாளியின் கீழ் விசா மாற்றமும் செய்யலாம்.
3)சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் சிக்கியுள்ள நபர்கள் அதன் நடவடிக்கைகள் முடிந்த பிறகு பொதுமன்னிப்பு பெற விண்ணப்பிக்க முடியும்.
4) சட்டத்திற்கு புறம்பாக அமீரகத்தில் நுழைய நபர்களும் தாயகம் திரும்ப முடியும் ஆனால் இரண்டு வருடங்களுக்கு திரும்ப வர முடியாது.
5) விண்ணப்பம் செய்யும் நபர்கள் அனைவரின் விண்ணப்பங்களும் மனிதாபிமான அடிப்படையில் தீர்வுகாண அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் பத்திரிகைகள் சந்திப்பில் தெரிவித்தார்.
6) Exit ஆவணங்கள் கிடைக்கும் நபர்கள் உடனடியாக தாயகம் திரும்பும் வேலைகளை செய்ய வேண்டும். இதற்கு 221 (Dirham) திர்ஹம் கட்டணம் வசூலிக்கப்படும்.
துபாய் தவிர மற்ற அமீரகத்தின் கிளை நாடுகளில் உள்ள நபர்களுக்கு பொதுமன்னிப்பு ஆவணங்கள் சரிசெய்ய அல் அவீர் ( Al Aweer) பகுதியில் விரிவான சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்திற்கு வருவதற்கு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் RTA வாகனங்களின் சேவைகள் கிடைக்கும் என்றும் மேலும் தெரிவித்துள்ளது.
Passport மற்றும் எந்த ஆவணங்களும் இல்லாத நபர்களுக்கு இந்த மையத்தில் விண்ணப்பம் கொடுக்கலாம்.
இந்த மையத்தில் அமீரகத்தில் உள்ள அனைத்து நாடுகளின் தூதரகங்களின் பிரதிநிதிகள் இந்த மையத்தில் சேவைகளை வழங்க தயார் நிலையில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Passport தங்கள் கைகளில் இல்லாமல் முதலாளியின் கையில் சிக்கியுள்ள நபர்கள் இது தொடர்பாக அந்தந்த நாட்டின் தூதரகங்களின் அதிகாரிகளிடம் முறையிடலாம் என்று அவர்கள் அதற்கு தேவையான உதவிகளை செய்வார்கள் என்றும் அதிகாரி தெரிவித்தார்.
மேலும் Passport மற்றும் அமீரகத்தின் அடையாள அட்டை உள்ள நபர்கள் ஆமர் மையங்கள் வழியாகவும் பொதுமன்னிப்பு விண்ணப்பங்கள் பதிவு செய்ய முடியும்.
முதலாளி(Sponsor) மற்றும் கம்பெனி உரிமையாளர் பதிவு செய்துள்ள திருத்தமாக வெளியேறி வழக்குகளில் சிக்கியுள்ள நபர்களுக்கு இந்த பொதுமன்னிப்பை பயன் படுத்தலாம்.
1) இதற்கு முதலாளி(Sponsor) தனிப்பட்ட முறையில் பதிவு செய்துள்ள வீட்டை விட்டு வெளியே வழக்குகளில் சிக்கியுள்ள நபர்கள் இதற்கு தீர்வு காண 121 (Dirham) திர்ஹமும்
2) தனியார் கம்பெனி உரிமையாளர்கள் பதிவு செய்துள்ள வெளியேறி வழக்குகளில் சிக்கியுள்ள நபர்கள் 521 (Dirham) திர்ஹம் கட்டணமும்
3) அரசுத் துறைகளில் Man missing வழக்குகள் உள்ள நபர்கள் 71 (Dirham) திர்ஹமும் கட்டணமும்
4) முதலாளியின் உதவியின்றி வெளியேறி வழக்குகளில் சிக்கியுள்ள நபர்கள் தீர்வு காண ஆமர் மையங்கள் வழியாகவும விண்ணப்பம் செய்ய முடியும் இதற்கு 521 (Dirham) திர்ஹமும் கட்டணமும் செலுத்த வேண்டும். மேலும் புதிய வேலைக்கு மாறவும் முடியும்.
6) 6 மாதங்கள் செல்லுபடியாகும் விதத்திலுள்ள Visa பெறவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொதுமன்னிப்பு சேவை மையங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல வருடங்களுக்கு பிறகு கடந்த மாதமே இதற்கான முதல் அறிவிப்பு வந்த முதலே பொதுமன்னிப்பு காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அமீரகத்தில் இயங்கி வருகிற இந்த அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் இந்திய தூதரகங்க அதிகாரி பல்வேறு நடவடிக்கைகள் விழிப்புணர்வு அறிவிப்புகளை மக்களிடையே அறிவிப்பு செய்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் உதவினால் ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் பயன் அடைந்து தாய்நாடு திரும்ப முடியும் என்பதில் ஐயமில்லை.
கடந்த 2013 ஆம் ஆண்டு வழங்கி பொதுமன்னிப்பை 62,000 பேர் வரையில் பயன் படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமீரகத்தில் அரசின் (Help Center Numbers) உதவிக்கு எண்கள்:
1. Abu Dhabi: 023875667
2. Dubai: 043875777
(8:00 am to 8:00pm )
Source: Gulf News / Khaleejtimes / Various Websites)
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லிக்காய்களின் கொட்டைகளை எடுத்துவிட்டு, எலுமிச்சம் பழச்சாறு விட்டு அம்மியில் வைத்து அரைத்து, மாதம் ஒரு தடவை தலையில் தேய்த்து குளித்து வந்தால், முடி உதிர்வது நின்றுவிடும். இளநரை இருந்தாலும், சில நாட்களில் மறைய ஆரம்பிக்கும்.
நான்கு நாட்களுக்கு ஒரு முறை நீராவியில் முகத்தைக் காட்டினால், முகத்தின் நுண்ணிய வியர்வைத் துவாரங்களில் உள்ள அழுக்குகள் வெளியேறும். பருக்கள் வராது.
சிலருக்கு முன், பின் கழுத்து கருமையாக காணப்படும். இதைப் போக்க நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் பீர்க்கங்காய் கூடு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். குளிக்கும் போது கழுத்தில் நன்கு சோப்பு தடவி பீர்க்கங்காய் கூடால் நன்கு தேய்த்து வந்தால் நாளடைவில் கறுப்பு நிறம் மாறி இயற்கை நிறம் வந்துவிடும்.
வேப்பிலையை தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்க வைத்து அந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகம் பளபளப்பு அடையும். முக அழகை கொடுக்கும். தேமலை அகற்ற எலுமிச்சம் பழச்சாறுகள், துளசி இலைச்சாறை சேர்த்து தடவி வரவேண்டும்.
முகத்திற்கு ஒப்பனை போடுவதற்கு முன் லேசாக முகம் முழுவதும் பன்னீர் தடவினால், சருமம் மென்மையாக இருக்கும். நீண்ட நேரம் ஒப்பனை (Make up) கலையாமலும் இருக்கும்.
உப்பு கலந்த எலுமிச்சம்பழச் சாறை பற்களில் தேய்த்தால், பற்களில் உள்ள கறை மறையும், ஈறுகளில் உள்ள கறை மறையும். ஈறுகள் பலம் பெறும்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அனைத்து பணிக்கும் நகராட்சி தேவையில்லை – களத்தில் இறங்கிய அல் அமீன் சகோதரர்கள் ..
இன்று (30/07/2018) சில மணிக்கு முன்னால் சாக்கடையில் கலக்கும் குடிநீர் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அச்செய்தியை பார்த்தவுடன் கீழக்கரை வடக்குத் தெரு அல் அமீன் அமைப்பைச் சார்ந்த சகோதரர்கள் உடனடியாக நகராட்சியை எதிர்பார்க்காமல், கையில் இருந்து செலவு செய்து புதிய குழாய் பொறுத்தியுள்ளார்கள்.
மேலும் இது சம்பந்தமாக கூறிய அல் அமீன் அமைப்பு உறுப்பினர் ஒருவர், தற்காலிமாக குடிநீர் வீணாவதை தடுக்க ஏற்பாடு செய்துள்ளோம். இன்னும் ஒரு சில நாட்களில் நிரந்தரமாக தீர்வு காணும் வண்ணம், வாருகால் மூடியை சிமெண்ட் வைத்து மூடி, நல்ல தரமான இரும்பு குழாய் பதிக்க முயற்சி செய்துள்ளோம் என்றார்.
உடனடியாக பிரச்சினைக்கு தீர்வு கண்ட அல்அமீன் சகோதரர்களின் பணி நிச்சயமாக பாராட்ட பட வேண்டிய ஒன்று.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அமீரகத்தில் உள்ள துபை அரசாங்கத்தின் இஸ்லாமிய சமய மற்றும் அறநிலையத்துறை சார்பாக பன்முக கலாச்சார திருவிழா 27/07/2018 வெள்ளிக்கிழமை அன்று, துபை அல்குரைர் வணிக வளாகத்தில் நடைபெற்றது.
இத்திருவிழாவில், அரபி, சைனா, ஜெர்மன், ஃப்ரென்ச், ஸ்பானிஷ், ருமேனியா, ரஷ்யா, ஆப்ரிக்கா, தமிழ், மலையாளம், கன்னடம், உருது, பெங்காளி உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மொழிப்பற்றாளர்கள் பங்கேற்று தத்தமது மொழி மற்றும் கலாச்சார அடையாளங்களை காட்சிப்படுத்தி இருந்தனர். காலை 10 மணிக்கு தொடங்கிய இக்கண்காட்சி இரவு 10 மணி வரை நடைபெற்றது.
நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்களாக துபை அரசாங்கத்தின் இஸ்லாமிய சமய மற்றும் அறநிலையத்துறைச்சார்ந்த டாக்டர். அல் குபைசி, கலாச்சார துறை தலைவர் ருவையா கலந்து கொண்டு கண்காட்சியில் பங்குபெற்ற அனைத்து மொழி மற்றும் கலாச்சாரங்களைக் குறித்து கேட்டறிந்தனர். நிகழ்ச்சியின் நிறைவில், சிறந்த முதல் மூன்று மொழி மற்றும் கலாச்சார அமைவுகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ் முதலிடம் பெற்றது.
தமிழ் அரங்கத்தில், திருக்குறள், தமிழ் மொழி மற்றும் எழுத்துருக்களின் வரலாறு, தமிழ் வளர்ச்சி, தமிழர் நாகரிகம், தமிழ் கவிஞர்களின் பங்களிப்பு, சாதனைத் தமிழர்களின் வரிசை, தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள், தமிழர்களின் பாரம்பரிய-கலாச்சார பொருட்கள், தமிழ் நூல்கள் உள்ளிட்டவை காட்சிப் படுத்தப்பட்டிருந்தமை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பல்வேறு நாட்டைச் சேர்ந்த பார்வையாளர்களுக்கு தமிழ் மற்றும் தமிழர் பற்றிய தொன்மை வரலாறு விளக்கிக் கூறப்பட்டது.
மேலும், கண்காட்சியின் இரண்டாவது பரிசு எத்தியோப்பிய மொழி அரங்கத்திற்கும், மூன்றாவது பரிசு பெங்காளி மொழி அரங்கத்திற்கும் வழங்கப்பட்டது.
தமிழ் அரங்கத்தின் அமைப்பு ஏற்பாடுகளை திரு. முஹைதீன் அப்துல் காதர், திரு. ரஃபீக், திரு. வலசை ஃபைஸல், ஃபக்ருதீன் அஹமது மற்றும் நண்பர்கள் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
இந்த பன்மொழித் திருவிழாவில் ஏராளமான மக்கள் ஆர்வத்தோடு பங்கேற்று பயனடைந்தனர்.
தகவல் தூது ஆன்லைன்…
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழக மீனவர்களின் 50 விசைப்படகுகளை விடுவிக்க இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு..
இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 50 தமிழக படகுகளை முதல் கட்டமாக விடுவித்து இலங்கை ஊர்காவல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை வெளியுறவு அமைச்சக செயலரின் பரிந்துரையை அடுத்து 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை பறிமுதல் செய்யப்பட்ட 50 தமிழக படகுகளை விடுதலை செய்துள்ளது. இந்திய – இலங்கை மீனவர்களின் 5ம் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் துவங்கவுள்ளதால், எஞ்சிய 137 விசைப்படகுகளை இன்னும் ஒரு சில நாட்களில் விடுவிக்கப்படலாம் என இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அல்குத்புல் செய்யயது அபுபக்கர் பாதுஷா நாயகம் 844 ம் ஆண்டு சந்தனக் கூடு திருவிழா ஆகஸ்ட் 5 மாலை 5 மணி ஆரம்பமாகிறது. ஆகஸ்ட் 6 அதிகாலை சந்தனம் பூசும் நிகழ்வு நடக்கிறது.
இதையொட்டி ஆக., 6 (திங்கள் கிழமை) இராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து, இதற்கு மாற்றாக ஆக ., 18 ( சனிக்கிழமை) வேலை நாளாக மாவட்ட நிர்வாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமிக்கு மாவட்ட செயலாளர் காதர் பாட்சா உற்சாக வரவேற்பு…
திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமிக்கு இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கீழக்கரையில் இருந்து எச்.இல்யாஸ் தலைமையில் EX இளைஞர் அணி செயலாளரும், 14 வது வார்டு பொதுச் செயலாளருமான எ.எஸ்.ராஜா, EX இளைஞர் அணி துணைச் செயலாளர் நாகராஜன், தொண்டர் அணி செயலாளர் மக்புல் சுல்தான், தி.மு.க.பிரமுகர் 14வது வார்டு முஸ்தபா, EX கீழக்கரை தொண்டர் அணி செயலாளர் செய்யது சாகுல் ஹமீது (சிங்கப்பூர் டிராவல்ஸ்) மற்றும் கழக உடன் பிறப்புகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புகைப்பட தொகுப்பு
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தாஜ்மஹாலை பாதுக்காக முடியவில்லை என்றால் அதனை மூடிவிடுங்கள் அல்லது இடித்துதள்ளி விடுங்கள் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம்..
உலக அதிசயங்களில் ஒன்றான, இந்தியாவின் அரிய பொக்கிஷமான தாஜ்மஹாலை பாதுக்காக முடியவில்லை என்றால் அதனை மூடிவிடுங்கள் அல்லது இடித்துதள்ளி விடுங்கள் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் வருகை தருகின்றனர். தாஜ்மஹால் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உருவாகி வருவதால் காற்று மாசு ஏற்பட்டு தாஜ்மகாலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வெள்ளை பளிங்கு கல்லால் கட்டப்பட்ட தாஜ்மஹால், தற்போது செம்பழுப்பு நிறத்திற்கு மாறி விட்டது.
தாஜ்மஹாலை உரியமுறையில் தாஜ்மஹாலை பாதுக்காக முடியவில்லை என்றால் அதனை மூடிவிடுங்கள் அல்லது இடித்துதள்ளி விடுங்கள் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதாகவும், இதுகுறித்து மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கலானது. இந்த வழக்கு தொடர்பாக தொல்பொருள் ஆய்வுத்துறை உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு உத்தரவுகள் பிறக்கப்பட்ட போதிலும் அவற்றை செயல்படுத்தவில்லை.
தாஜ் காரிடார் என்ற பெயரில் அந்த பகுதியில் தொழிற்சாலைகளை அதிகரிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி லோகூர் மற்றும் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:‘‘உலகின் அரிய பொக்கிஷங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பார்க்க லட்சக்கணக்கானோர் உலகம் முழுவதும் இருந்து வருகை தருகின்றனர்.
இதன் மூலம் பெரிய அளவில் அந்நிய செலவாணியை மத்திய அரசு ஈட்டி வருகிறது. ஈபில் டவர் உட்பட பிறநாடுகளில் உள்ள உலக அதிசயங்களை பாதுகாக்க எந்த அளவிற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்பதை பார்க்கும்போது நமக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அதேசமயம் தாஜ்மஹாலை பாதுகாக்க அத்தகைய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.இந்தியாவில் எத்தனையோ அதிசய பொக்கிஷங்கள் இருந்தாலும், அவற்றில் தாஜ்மஹால் தனித்துவம் மிக்கது. தாஜ்மஹாலுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அது நமக்கு மட்டும் இழப்பல்ல. உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கும் இழப்புதான். தாஜ்மஹாலை உரிய முறையில் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். இல்லையென்றால் அதனை மூடி விடலாம் அல்லது இடித்து தள்ளி விடலாம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
1858 ஆம் ஆண்டு கர்நாடகாவில் ஒரு பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்து, பார்ப்பனீயத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து, சூத்திரன் என்று சொல்லப்பட்ட ஓர் இளைஞனைக் கைப்பிடித்து, வடநாடு முழுவதும் சுற்றித் திரிந்து, பெண் கல்வி, பெண் விடுதலைக்காகத் தன் வாழ்வையே அர்பணித்துக் கொண்டவர் ரமா பாய்.
20ஆவது வயதில் தன் பெற்றோரையும், 25 ஆவது வதில் தன் கணவனையும் இழந்த பின்னும், நெஞ்சில் துணிவை இழக்காமல், அதற்குப் பிறகு 40 ஆண்டுகள் தன் இலட்சியத்திற்காகப் போராடி மறைந்தவர் அவர்.
ரிப்பன் பிரபுவுக்கு முன்னால் அவர் பெண் கல்வி குறித்து ஆற்றிய உரையால் ஈர்க்கப்பட்டு, இங்கிலாந்தும் அமெரிக்காவும் அவரை அரவணைத்தன. அவர் இந்தியாவில் கணவனை இழந்த இளம் பெண்களுக்காக ஓர் இல்லம் நிறுவி, அவர்களுக்குக் கல்வி கொடுத்து, ஊக்கம் கொடுத்து, அவர்களைச் சுய மரியாதையோடு வாழ வைத்தார். ஆனால் இவையெல்லாம், இந்து மதத்திற்கு எதிரானவை என்று கூறி திலகர் அவரைக் கண்டித்தார்.
நமக்கெல்லாம் திலகரைத்தான் தெரியும். ரமா பாயைத் தெரியாது!
நன்றி : பேராசிரியர் சுபவீ
தொகுப்பு
அ.சா.அலாவுதீன்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்து துரையேரி கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவிகள் தமிழ்செல்வி, கவிதா பாலாற்றில் தேங்கி இருக்கும் நீரில் முழ்கி இரண்டு சிறுமிகள் உயிர்ழப்பு கிராமிய போலீசார் விசாரனை.
இராமயந்தோப்பு அருகே சோலார் சிட்டி என்ற இடத்தில் நடந்த சம்பவம் இந்த உயிர்ழப்புக்கு காரணம் மணல் கொள்ளைகள் அதிக அளவில் நடப்பதால் ஏற்படும் பல்லத்தால் இந்த விபரிதம் என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஒழுக்கத்தின் மறுபெயர் ஜப்பான்.. தோல்வியிலும் ஓழுக்கத்தை கடைபிடித்த ஜப்பானியர்..
21 வது கல்பந்து உலகக் கோப்பை ரசியாவில் நடைப்பெற்று வருகிறது.லீக் மேட்ச் நிறைவடைந்ததை ஒட்டி கால் இறுதிக்கான தகுதிச் சுற்று இன்று நிறைவடைய உள்ளது. நேற்று ஜபபான்,பெல்ஜியம் நாடுகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவியது.
ஆட்டத்தின் முதல் பகுதியில் எந்த அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆனால் ஜப்பான் அணியினர் இரண்டாவது பகுதியில் முதல் 2 கோல்கள் அடித்து பலம் பொருந்திய பெல்ஜியம் அணியை அதிர்ச்சியடைய வைத்தனர்.
வாழ்வா?சாவா? என்ற நிலைக்கு தள்ளப்பட்ட பெல்ஜியம் அணி திறமையாக விளையாடி அடுத்தடுத்து 3 கோல்களை அடித்து கால் இறுதிக்கு தகுதி பெற்றனர். முதலில் 2 கோல் அடித்த ஜப்பான் அணியே வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் அனைவரும் எதிர்ப்பார்த்திருந்தனர்.
ஆனால் பெல்ஜியம் அணி 3க்கு 2 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை தோல்வியுற செய்தது. எதிர்ப்பாராத தோல்வி ஜப்பானியர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்த இந்த சோகமான நேரத்திலும் கூட விளையாட்டை காண வந்த ஜப்பான் நாட்டை சேர்ந்த பார்வையாளர்கள் போட்டி முடிந்து களைந்து செல்லும் முன் மைதானத்தின் இருக்கை பகுதிகளை வழக்கம் போல் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
இந்த சம்பவம் சக பார்வையாளர்களுக்கு மத்தியில் நெருடலை ஏற்படுத்தியதோடு, எந்த நேரத்திலும் சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதையும் ,ஜப்பானியர்களின் சமூக உணர்வுகளையும் நம் அனைவருக்கும் உணர்த்துகிறது. ஆனால் நம் நாட்டின் நிலையோ தலை கீழ் மாற்றம், அரசியல் கட்சிகள் மாநாடு நடத்தி முடிந்த பிறகு குப்பைகளின் கூடாரங்களாக பல நாட்கள் தேங்கிக்கிடப்பதை தான் பெரும்பாலும் பார்க்க முடிகிறது. இந்நிலை மாற வேண்டுமென்றால், எண்ணங்கள் மாறாத வரை நம் நிலை மாறுவதில்லை என்பது உணர்ந்து செயல்பட்டால் மாற்றம் நிச்சயம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
1. முதலில் இந்த விசயத்தை பத்திரப்படுத்தி வச்சுக்கங்க..
2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் குவாலிட்டியைக் கூட்டும்.
தண்ணீர் :
3.. தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெள்ள மெள்ள அரிமானத்துக்கு உள்ளாகும். அதற்காக குடிநீரில் வீடு கட்ட வேண்டும் என்றில்லை. அதிகம் உப்பில்லாமல் இருப்பது அவசியம்.
4. தண்ணீர் தேவைகளுக்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து, நீர்மூழ்கி மோட்டார்களைத் தேர்ந்தெடுக்கும்போது சில விக்ஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். தண்ணீர் கொஞ்சம் கூட உட்புக வாய்ப்பில்லாத மோட்டார் பம்புகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மின்கசிவால் பிரச்சனை இருக்காது.
5. இப்போதெல்லாம் அதிகபடியான வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் மோட்டார்கள் மார்க்கெட்டில் உள்ளன. வெப்பம் அதிகமாகிவிட்டது என்பதை உணர்த்தும் அலாரம் பொருத்தப்பட்ட மோட்டார்களைப் பொருத்திவிட்டால் அடிக்கடி ரிப்பேர் ஆவது தடுக்கப்படும்.
6. வெப்பத்தை உணர்ந்து மின் இணைப்பை தானே துண்டித்து விடும் வகையிலான ஏற்பாடுடைய மோட்டார்களைப் பொருத்துவது புத்திசாலித்தனம்.
சிமெண்ட் :
7. தரமான சிமெண்ட்டால்தான் வலுவான கட்டடத்தை உறுதி செய்ய முடியும். அந்தத் தரத்தை சிமெண்டின் நிறத்தைப் பார்த்தே ஓரளவு யூகித்துவிட முடியும். லேசான பசுமை நிறத்தில் இருப்பது நல்ல சிமெண்ட்.
8. மூட்டைக்குள் இருக்கும் சிமெண்ட்டுக்குள் கையை விடும்போது சிலுசிலுவென்று குளுமையாக இருக்க வேண்டும். தண்ணீர் இருக்கும் வாளிக்குள் சிமெண்ட்டைப் போடும்போது அது மிதந்தால் தரத்தில் கோளாறானது என்று அர்த்தம். அதேபோல் தட்டி இருந்தாலும் தரமற்றது.
9. சிமெண்ட் மூட்டையின் அளவு 50 கிலோ இருக்க வேண்டும். எடை வேறுபாடு ஒரு கிலோ வரை அனுமதிக்கலாம். அதற்கு மேல் போனால், உரிய வகையில் விசாரித்து ஒழுங்கான அளவுள்ள மூட்டைகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் இறங்குங்கள்.
மணல் :
10. மணலில் அதிக தூசு துரும்பு இல்லாமல் இருக்க வேண்டும். அதிக அளவு வண்டல் கலந்திருந்தால் அதன் நிறமே காட்டிக் கொடுத்துவிடும்.
11. மணலின் மொத்த எடையில் 8% வண்டல் இருந்தால் பயன்படுத்தலாம். பார்வையாலேயே இதைக் கண்டுபிடித்துவிட முடியும். அதற்கு மேல் இருந்தால் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
12. கடல் மணலைக் கொடுத்து ஏமாற்றும் வேலைகள் நடக்கின்றன. அந்த மணலைக் கொஞ்சம் வாயில் எடுத்துப் போட, உப்புக் கரித்தால் அது கடல் மணல். இந்த மணலை பயன்படுத்திக் கட்டப்படும் சுவர்கள் பெரும்பாலும் ஈரமாகவே இருக்கும். சீக்கிரம் உதிர்ந்துவிடும். மழை பெய்தால் சீக்கிரம் அரித்து விடும். ஆகையால். கடல் மணலுக்கு கண்டிப்பாக நோ சொல்லிவிடுங்கள்.
13. மணலில் தவிடு போல் நொறுங்கிப் போகக்கூடிய சிலிக்கா அதிகம் இருந்தாலும் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால், இது சிமென்ட்டுடனான பிணைப்பை உறுதியாக உருவாக்காது.
இரும்புக் கம்பிகள் :
14. கான்கிரீட்டுக்கு வலு சேர்க்க இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு எந்த வகை இரும்புகளைப் பயன்படுத்தினாலும் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
15. ஆலையில் இருந்து தயாரிக்கப்பட்டு வரும் கம்பிகள், பட்டைகள், சட்டங்கள், சுருள்கள் போன்றவற்றில் சிறு பிசிறுகள் இருக்கக்கூடும். இவற்றை அகற்றிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.
16. இரும்பின் மேல் கொஞ்சம் கூட துரு இருக்கக் கூடாது. அடையாளங்களுக்காக சிறு அளவில் பெயிண்ட் தடவப்பட்டாலும் நீக்கிவிட வேண்டும். எண்ணெய், அழுக்கு, பிசுக்கு, சேறு, மண், மணல் போன்ற எந்த வித அசுத்தமும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பிணைப்பு வலுவில்லாமல் போய்விடக் கூடும்.
செங்கல் :
17. வீட்டின் உறுதியை நிர்ணயிப்பதில் செங்கற்களுக்கு பிரதான இடம் உண்டு. பாரம்பரிய முறையிலான சூளை மற்றும் நவீன முறையிலான சேம்பர் என இரண்டு வகையில் செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டு தயாரிப்புகளையுமே வாங்கிப் பயன்படுத்தலாம்.
18. செங்கல் தரமானதாக இருக்கிறதா என்பதைக் கண்டறிய நாலைந்து செங்கற்களை எடுத்து 24 மணி நேரம் நீரில் ஊறப்போட வேண்டும். பிறகு, விரலால் சுரண்டிப் பாருங்கள் பிசிறு பிசிறாக வந்தால் தரம் குறைவான செங்கல் என்று அர்த்தம்.
19. இப்போதெல்லாம் ‘இன்டர்லாக் செங்கல்கள்’ என்றொரு வகையும் பயன்பாட்டில் இருக்கிறது. நிலக்கரி சாம்பல், சுண்ணாம்பு, ஜிப்சம் கலந்து தயாரிக்கப்படும் இந்தக் கல் ஒன்றின் விலை 16 முதல் 20 ரூபாய் வரை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தக் கல், மூன்று செங்கற்களுக்கு இணையானது. வேலையைச் சுலபமாக்கும்.
20. கட்டுமானப் பொருட்களின் சேதாரத்தை குறையுங்கள். கொண்டு வரும்போதோ, கையாளும்போதோ, பயன்படுத்தும்போதோ ஆகும் சேதாரத்தில் மட்டும் 5 சதவீத கட்டுமானப் பொருட்கள் வீணாகிவிடும். நீங்கள் களத்தில் இருந்தால்தான் இந்த சேதாரத்தை கண்காணிக்க முடியும். அலுவலகத்திற்கு விடுமுறை போட்டால் லாஸ் ஆஃப் பே ஆயிற்றே என நீங்கள் கணக்குப் போட்டால் இங்கு அதைவிட அதிக அளவு பொருட்கள் நட்டமாகும்.
21. கான்ட்ராக்டரிடம் வேலையை ஒப்படைக்கும் போது அவரது முந்தைய வேலைகள், அவருக்கும், அவரது தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள நல்லுறவு, அவரது வளைந்து கொடுக்கும் தன்மை, எல்லாவற்றையும் விட நேர்மை ஆகியவற்றை விசாரியுங்கள்.
22. மூலப் பொருட்களை ஒரேயடியாக வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்வது தவறு. கட்டுநர்களுக்கு இது சரியானது. ஆனால், முன்கூட்டியே ஒரு பெரிய அளவிலான கட்டுமானப் பொருட்களை வாங்குவதன் மூலம் நமது பணம் மறைமுகமாக ஒரே இடத்தில் முடக்கப்படுகிறது.
23. அதே சமயம் அவ்வப்போது பொருட்களை வாங்கினால், அன்றன்றைய சந்தை நிலவரம் பொறுத்துதான் நாம் பொருட்களை வாங்க முடியும். இதற்கு என்ன வழி? முன்கூட்டியே, பின் தேதியிட்ட காசோலைகளை டீலர்களிடம் கொடுத்துவிட்டு, அந்தந்த தேதியில்தேவையான பொருட்களை இன்றைய மார்க்கெட் விலைக்கு இறக்கும்படி ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள்.
24. சமீபத்திய தொழிற்நுட்பங்களையும், நவீன கட்டுமானப் பொருட்களையும் பயன்படுத்துவதன் மூலம் நேரமும் கூலியும் மிச்சமாகும்.
25. செங்கற்களுக்கு மாற்றாக வந்துள்ள கட்டுமானக் கற்களை பயன்படுத்தலாம். இது விலையும் குறைவு, சேதாரமும் குறைவாகும்.
26. மர வேலைகள் நமது கட்டுமானச் செலவை பெரிதும் கபளீகரம் செய்யக்கூடியவை. எங்கள் வீட்டு வாசற்கதவு மட்டுமே 1 லட்ச ரூபாய் ஆனது என எத்தனை நாள் சொல்லிக்கொண்டிருப்பீர்கள்?. குறைந்தபட்சம் கிரகப்பிரவேச நாளில் இருந்து 10 நாட்கள் சொல்லப் போகிறீர்கள். அதற்கு ஏன் 1 லட்ச ரூபாய் ஃபீஸ் தரவேண்டும்?.
27. எல்லா வேலைகளுக்கும் மரத்தையே நாடாமல், UPVC மற்றும் அலுமினிய ஜன்னல் கதவுகளைப் பயன்படுத்துங்கள். மர லுக்கினைத் தரும் ஸ்டீல் கதவுகளைக் கூட நாம் பயன்படுத்தலாம்.
28. பரண் அமையும் இடத்தில் அதனுடைய தொடர்ச்சியாக சுவற்றின் வெளிப்புறத்தில் சன்க்ஷேடுகளை அமைத்தால் செலவு குறையும்.
29. ஆற்று மணலை வெளியில் ஒரு வார காலம் போட்டு வைத்து, பின்பு அதனை கசடுகள் நீக்கி, சலித்து பயன்படுத்துவதற்கு பதில், நன்றாக பேக் செய்யப்பட்ட M.சேண்டை பூச்சு வேலைக்குப் பயன்படுத்தலாம். சென்னை போன்ற நகரங்களில் வசிப்பவர்களுக்கு ஆற்று மணலைவிட M.சேண்ட் விலைகுறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.
30. க்ஷட்டரிங் பிளைவுட் கொண்டு சென்ட்ரிங் செய்யும் பட்சத்தில், சீலிங் பூச்சு வேலை முற்றிலும் தவிர்க்கலாம். இதன் மூலம் 1000 சதுர அடி கட்டிடத்தில் ரூ.30,000 வரை மிச்சப்படுத்தலாம்.
31. எந்த வேலைக்கு, எந்த அளவிலான கம்பி என்பதை பொறியாளர் மூலமாக பார் பென்டருக்கு உணர்த்திவிடுங்கள். பொதுவாக அஸ்திவாரம், பில்லர்கள், தளங்கள் இந்த வேலைகளின் போதுதான் பொறியாளர்களின் பேச்சை பார்பென்டர்கள் கேட்கிறார்கள். ஸ்லாபு போன்ற மற்ற வேலைகளுக்கு அதிக அளவில் கம்பிகள் செலவாவதை நாம் தடுக்க வேண்டும்.
32. முடிந்த அளவு மறுசுழற்சிப் பொருட்களை பயன்படுத்த முன்வர வேண்டும். பழைய பொருட்களாயிற்றே என்ற தயக்கத்தை நீங்கள் களைந்தால், கணிசமான அளவு பணத்தை மிச்சம் செய்யலாம்.
33. உங்களது புராஜெக்டு நடத்தும் இடத்தைச் சுற்றி வலுவான காவலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இன்றைய நிலையில் கட்டுமானப் பொருட்களைவிட காஸ்ட்லியானது எதுவுமில்லை.
34. தேவையற்ற பார்ட்டீசியன் சுவர்களுக்கு அதிக கனமுடைய சுவர்களை அமைக்காதீர்கள்.
35. கட்டுமானப்பணி முடியும் வரை, செங்கல், சிமெண்ட், ரசாயனங்கள் போன்ற கட்டுமானப் பொருட்களை கவனமாகக் கையாளுங்கள்.
36. செலவானாலும் பரவாயில்லை என்று தரமிக்க மின் கேபிள்கள், மின் சாதனங்களையே வாங்குங்கள். இது ஒன்டைம் இன்வெஸ்ட்மென்ட்தான். இதற்குப் பிறகு ஆகும் மின் செலவை இது பெருமளவு குறைக்கும்.
37. நான் பிராண்டட் பெயிண்ட்களை உங்கள் கட்டுமானத்
திற்குப் பயன்படுத்தாதீர்கள். தரமற்ற பெயிண்ட்கள் உங்கள் பர்ஸை சிக்கனப்படுத்தும். ஆனால், கட்டிடத்தை நீண்டகாலம் பாதுகாக்காது.
38. வீட்டை சுற்றிலும் முறைப்படி அளந்து, எல்லைகளை கவன
மாக வேலியிட்டு பாதுகாத்துக் கொள்வது சிறந்தது.
39. சிமெண்ட் கட்டிட சாமான்கள், கருவிகள் இவற்றை பாதுகாக்க ஒரு சிறிய குடோன் அமைப்பது நல்லது.
40. கட்டுமான பணிக்காக முதலில் குடிநீர் தொட்டி கட்டிக் கொள்வது நல்லது அல்லது செப்டிக் டேங்க் கட்டி, கட்டிட வேலைக்கான நீர் தொட்டியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
41. போர்வெல் போட்டு, மின் இணைப்பு பெற்ற பிறகு, கட்டிட வேலையை துவங்குவது வரவேற்கத்தக்கதாகும்.
42. அதி நவீன கட்டுமான நுட்பங்கள், பொருட்களை பயன்படுத்திக் கொள்ளுதல், மிக பிரபலமாகி வரும் ரெடிமிக்ஸ் கான்கிரீட்டுகள் போன்ற அதிநவீன கட்டுமான வசதிகளை பயன்படுத்திக் கொண்டால் கட்டுமான காலம், நேரம் குறையும்.
43. அஸ்திவாரம் போட மண்வெட்டி எடுத்த உடனே மண்ணின் தன்மை தரம் பற்றி பரிசோதித்து இந்த இடத்திற்கு ஏற்ற அஸ்திவார முறையை பொறியாளர் அறிவுரையுடன் முடிவு செய்ய வேண்டும்.
44. பேஸ்மெண்ட் லெவல் கட்டி முடித்த பிறகு சாலையின் உயரத்திற்கும், வீட்டின் உயரத்திற்கும் பொருத்தமான அளவில் கட்டிடத்தை உயர்த்த வேண்டும்.
45. லிண்டல் லெவல் வந்த பிறகு, போர்ட்டிகோ. சிட் அவுட், சன்க்ஷேஷட் பொருட்கள் வைக்க, சுவரின் பக்கவாட்டில் உயரத்தில் லக்கேஜ் லாஃப்ட், சுவற்றிற்குள் வைக்கக்கூடிய ஒயர்களுக்கு இட அமைப்பு பற்றி பொறியாளருடன் ஓர் ஆய்வு செய்ய வேண்டும்.
கீழ்க்கண்ட விவரங்களை தெரிந்து கொள்ளல் அவசியம் :
46. ரூஃப் லெவல் முடிந்த பிறகு எலெக்ட்ரிக் ஸ்விட்ச் பாக்ஸ் அமைவிடங்கள் கண்ட்ரோல் பேனலுக்கு இடம் குறித்து ஆய்வு எதிர்காலத்தில் கூடுதலாக மின்வசதி தேவைப்பட்டால் அதற்கான ஸ்விட்ச் பாக்ஸ் அமைவிடங்கள் பற்றிய விவரங்கள்.
47. கதவு, நிலவு, ஜன்னல்கள் ஆகியவற்றிற்குத் தேவையான மரங்கள் அலுமினிய ஸ்டீல் கிரில்கள், ஃபர்னிச்சர் ஃபிட்டிங்ஸ், பூட்டுகள், கைப்பிடிகள், அலமாரிகள், ரூம் தடுப்புகள், வெண்ட்டிலேட்டர் அமைப்புகள், உள் அலங்கார பொருட்களுக்கான அமைவிடங்கள் பற்றிய அனைத்து விவரங்கள்.
48. தளத்திற்கு மொசைக் மார்பிள்ஸ், செராமிக் டைல்ஸ், சுவரில் பதிக்கும் டைல்ஸ், அலங்காரக் கூரை, ஓடுகள், பளபளக்கும் சமைலயறைப் பலகைகள், ஸ்டோர் ரேக்ஸ் பலகைகள் பற்றிய விவரங்கள்.
49. வண்ணப்பூச்சு உட்புறத்துக்கு ஏற்ற வண்ணம், வெளிச்சுவர்களுக்குரிய வண்ணம் கேட் டிசைனில் இருக்க வேண்டும். என்ன வண்ணம் அடிக்கலாம் என்பதைப் பற்றிய விவரங்கள்.
50. உள் அலங்கார அறையின் உள் அலங்கார அமைப்பிலும் அந்த அறையின் தன்மைக்கேற்ப வண்ணமும், உள் அலங்காரமும் இருப்பது பற்றிய விபரங்கள்.
தொகுப்பு. அ.சா.அலாவுதீன்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் (Gottfried Wilhelm Leibniz) என்பவர் ஜெர்மனியை சேர்ந்த தத்துவவாதியும், பல்கலை வல்லுனரும் ஆவார். இவரின் 372-ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு கூகுள் இவராய் தனது சிறப்பு கூகுள் டூடுல் மூலம் சிறப்பித்துள்ளது
இவர் கணித வரலாற்றிலும், தத்துவ வரலாற்றிலும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளார். டிஜிட்டல் கணினிக்கு அடித்தளமான பைனரி முறைமையை (0 & 1) செம்மைப்படுத்தினார். இதைக்குறிக்கும் விதமாக இன்றைய கூகுள் டூடுல் படம் இருக்கிறது.
கோட்பிரீடு இலைபுனிட்சு அல்லது கோட்பிரீடு வில்கெலம் இலைபுனிட்சு, (Gottfried Wilhelm Leibniz) (1646 – 1716) ஒரு இடாய்ச்சுலாந்திய மெய்யியலாளராவார். இவரின் பெயரை இலீபுநிட்சு என்றும் சொல்வார்கள் மெய்யியலின் வரலாற்றிலும் கணித வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க இடம் வகிக்கும் இவர் பல்துறை அறிவு கொண்டவர். இவர் பெரும்பாலும், இலத்தீன் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலேயே எழுதியுள்ளார்.
சட்டம், தத்துவம் ஆகியவற்றைக் கற்ற இலை புனிட்சு, இடாய்ச்சுலாந்து நாட்டுப் பிரபுக்கள் இருவர் குடும்பங்களில் பல விதமான பணிகளையும் செய்யும் ஒருவராக இருந்தார். இக் குடும்பங்களில் ஒன்று இவர் பணி புரியும் காலத்திலேயே இங்கிலாந்தில் அரச குடும்பம் ஆகியது. அக் காலத்தில் இலைபுநிட்சு ஐரோப்பிய அரசியலிலும், அரசத் தந்திரத் துறையிலும், பெரும் பங்கு வகித்தார். அத்துடன், தத்துவவியலின் வரலாற்றிலும், கணித வரலாற்றிலும், இதே போன்ற பெரும் பங்கு இவருக்கு உண்டு. நியூட்டனுக்குப் வேறாக இவரும் நுண்கணிதத்தைக் (Calculus) கண்டு பிடித்தார். இதில் இவரது குறியீடுகளே இன்றுவரை பயன்பாட்டில் உள்ளன.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஐக்கிய அரபு அமீரகத்தில் கவனம்.. அடுத்தவர் விவகாரத்தில் தலையிட்டால் 1 வருட சிறை தண்டனை மற்றும் திர்ஹம் 500,000 வரை அபராதம்…
ஐக்கிய அரபு அமீரகத்தில் வேறு நபருடைய வீடியோவை எடுத்து சமூக வலை தளங்களில் வெளியிட்டவருக்கு 500000 திர்ஹம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் சமூக வலைதளங்களில் அடுத்தவர்களின் எந்த சம்மதமும் இல்லாமல் புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிடுவது அதிகரித்து வருகிறது. இதனால் சமுதாயத்தில் பல பிரச்சினைகளை சந்திக்கவும் பல தவறான கண்ணோட்டங்களுக்கும் வித்திட்டு வருகிறது.
கடந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு நபர் போக்குவரத்து துறை வாடிக்கையாளர் அலுவலகத்தில் கண்ணீர் வடிப்பது போன்ற வீடியோ வெளியாகி தவறயான பரபரப்பான கருத்தை பொதுமக்கள் மத்தியில் உருவாக்கியது. இது போன்ற பிரச்சினைகளை கட்டுக்கு கொண்டு வரும் நோக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகம் சம்பந்தப்பட்டவருக்கு ஒரு வருட சிறை தண்டனையும் திர்ஹம் 500,000 அபராதம் விதித்துள்ளது.
மேலும் இச்சம்பவத்தை தொடர்ந்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற செயல்களில் உண்மைத் தன்மை அறியாமல் சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுக்கு அமீரக சட்ட விதி 5/2012 படி திர்ஹம் 150,000 முதல் 500,000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
News Source – Gulf News
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் முதல் தேதியை தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடகின்றனர். 1991 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. சமூகம் மற்றும் தனிமனிதருக்கு மருத்துவர்கள் செய்யும் சேவையை அங்கீரிக்க உருவாக்கப்பட்டதே தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctors’ Day) ஆகும். இந்த நினைவு நாள் கொண்டாடப்படும் தேதி காரணங்களைப் பொறுத்து நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. சில நாடுகள் இதை விடுமுறை தினமாகவும் அறிவிக்கிறது. பெரும்பாலும் மருத்துவ நிறுவனங்களே இத்தினத்தைக் கொண்டாடுகின்றன.
வரலாற்று புகழ்மிக்க மருத்துவரும் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சருமான மருத்துவர் பிதான் சந்திர ராய் நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. 1882 சூலை திங்கள் முதல் தேதி பிறந்த அவர், சரியாக 80 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் மறைந்தார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 4, பிப்ரவரி 1961 ஆம் ஆண்டு பெற்றார். இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் இந்நாளானது இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.
நோயாளிகளிடம் அன்பு காட்டுங்கள்..
ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் கனகசபை கூறியதாவது: மருத்துவ பணியை டாக்டர்கள் சேவையாக செய்வதில்லை. அவர்கள் வருமானத்தில் மட்டுமே குறியாக உள்ளனர். அதனால், ஏழை நோயாளிகளை சரியாக கண்டு கொள்வதில்லை என்ற எண்ணம் மக்களிடம் பரவலாக இருந்து வருகிறது. மருத்துவ பணி என்பது புனிதமானது. நோயாளிகளை மருந்து, மாத்திரைகள் மூலமாக மட்டும் குணப்படுத்திவிட முடியாது. நோயாளிகளிடம் அன்பு, பாசத்தையும் காட்ட வேண்டும். இதன் மூலமே நோயாளிகளிடம் உள்ள பாதி நோய் குணமாகிவிடும். நோயாளிகளின் தேவை அறிந்து பணியாற்ற வேண்டும். நோயாளிகளின் மனம் புண்படும் விதத்தில் டாக்டர்கள் நடந்து கொள்ளக் கூடாது. இவ்வாறு டீன் கனகசபை தெரிவித்தார்.
டாக்டர்கள் எண்ணிக்கை போதாது.
இந்தியாவில் டாக்டர்கள் எண்ணிக்கை போதாது என்று மருத்துவ துறையினர் கூறுகின்றனர். மருத்துவத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியாவில் தற்போது சுமார் 10 ஆயிரம் பேருக்கு ஒரு டாக்டர் என்ற விகிதமே உள்ளது. நாட்டில் பல கிராமங்கள் மற்றும் மலைப்பிரதேசங்களில் ஆரம்ப சுகாதார வசதிகள் கூட இல்லை. இதனால், அங்குள்ள மக்கள் அவசர சிகிச்சை பெற முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
மருத்துவம் படிக்கும் மாணவர்கள், கிராமங்களில் பணி செய்ய முன்வர வேண்டும். அமெரிக்கா, சீனா போன்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் டாக்டர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப டாக்டர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
துபாயில் வாகன நிறுத்த கட்டணத்தின் ரசீதை வண்டியில் வைக்க அவசியமில்லை ..
ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் ஸ்மார்ட் பார்க்கிங் (SMART PARKING) மீட்டர்களை சாலை மற்றும் போக்குவரத்து துறை அறிமுகப்படுத்தி உள்ளது. பொதுவாக சாலையோரங்களின் வாகனம் நிறுத்துவதற்கு தேவையான தொகையை செலுத்தி ரசீது பெற்று வாகனம் நிறுத்தும் போது வாகனத்தின் முகப்புறத்தில் வைக்க வேண்டும் என்பது அவசியமான ஒன்றாகும்.
ஆனால் தற்போது சோதனைக்காக ஒரு சில பகுதிகளில் மட்டும் ஸ்மார்ட் பார்க்கிங் மீட்டர்கள் பொறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வகையான பார்க்கிங் மீட்டர்களில் வாகனத்தின் எண்களை எளிதில் பதிவு செய்யும் வகையில் தொடுத்திரை (Touch Screen) தொழில் நுட்பம் அடங்கியுள்ளது.
அதன் மூலம் பணம் செலுத்தி வாகனத்தின் எண்களை பதிவு செய்து ரசீது பெற்றுக் கொண்டால் போதுமானது, அதனை வாகனத்தில் வைக்க வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
இது போன்ற புது வகையான சேவையின் மூலம் பார்க்கிங் மீட்டர்கள் இருக்கும் இடத்திலிருந்து வாகன நிறுத்துமிடத்திற்கு வர வேண்டிய நேரம் சேமிக்கப்படுகிறது. மேலும் இந்த டிக்கட்கள் மற்ற வாகனங்களுக்கு பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அம்மா எவ்ளோ திட்டினாலும்
இந்த மனசு அத லேசா எடுத்துக்கும்..
அப்பா ஒரு வார்த்தை சொல்லிட்டாருனா
அவ்ளோ தான்..
மனசுல பாரம் நிரம்பி போகும்..
கண்ணுல கண்ணீர் தேங்கி போகும்..
இது தான் அப்பாக்களுக்கே உரிய சிறப்பு !
உனக்கு இது செஞ்சேன்
அது செஞ்சேன்..
உன்ன இப்படி வளர்த்தேன்..
அப்படி வளர்த்தேன்..
என்று அம்மா அடிக்கடி கூறும் போது
கலங்காத நம்ம மனசு..
அப்பா ஒரே ஒரு தடவ
கண்கள் சுருக்கி நம்மள பாத்துட்டார்னா..
அதுல தான் எவ்ளோ அர்த்தம்..
கரைஞ்சு போகுது இந்த மனசு..
அவ்ளோ ருசியா சமைச்சு போடுவா அம்மா..
நம்மள ரசிச்சு ரசிச்சு கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்குவா அம்மா..
ஒரே ஒரு முறை தலையை வருடி செல்லும் அப்பாவின் கைக்கும் மட்டும் ஒரு மகிமை..
அந்த ஒரு வருடலில் காணாமல் போகும் வலி..
எதுவும் சொல்லவே மாட்டார்..
சில நேரம் கத்தவும் செய்வார்..
புகழ்ந்து பேச காசு கேப்பாரு..
நாம இல்லாத போது
என் மகளுக்கு ஈடு இணை ஏது..
என் மகனுக்கு ஈடு இணை எது..
என்று பெருமை பேசும் அப்பாவின் முன்னே
பறந்தே போகுது இந்த செல்ல கோபங்கள்..
நமக்கு அழகழகாய் ஆடை அணிய செய்து
அழகு பார்க்கும் அப்பாக்கள்..
தனக்கென்ன விலை உயர்ந்த ஆடைகளை எடுப்பதே இல்லை..
அதே சமயம் நாம் ஆசையாக வாங்கி கொடுத்தால்..
அவரின் முகத்தில் வந்து விடும்
மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..
பிள்ளைகளின் பரிசை பொக்கிஷமாக
பாதுகாக்கும் அப்பாக்கள்..
பூமியில் பிறந்த அனைவருக்கும்
இதயத்தை படைத்த இறைவன்..
அப்பாக்களுக்கு மட்டும் கனவுகள் படைத்தான்..
அதில் தன் பிள்ளைகளின்
எதிர்காலத்தை மட்டுமே
அழுத்தமாய் பதித்தான்..
அப்பாவின் விழியோரம் நீர்த்துளிகள்..
பிள்ளைகளுக்காவே..
ஆனந்த கண்ணீராக..
காலங்கள் ஓடி விடும்..
வருடங்கள் ஓடி விடும்..
பிஞ்சு விரல் பிடித்து..
தோள் மீது நம்மை சுமந்து..
தன் காயங்கள் மறைத்து..
நம் முன்னே என்றும் சிரித்து..
நம் வளர்ச்சியை பார்த்து பார்த்து
நிறைவு கொள்ளும் அப்பாக்களின்
அன்பு மட்டும் என்றென்றும் மாறுவதில்லை..
இணையத்தில் படித்ததில் பிடித்தது..
You must be logged in to post a comment.