தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெளிநாட்டு வாழ் தமிழர்களின் பங்களிப்பு மிகுதியானது. அதிலும் முக்கியமாக அமீரக வாழ் மக்கள் பல்லாயிரத்திற்கும் மேலானோர் அங்கிருந்த படியே திமுக கூட்டணிக்காக பாடுபட்டனர். அதில் குறிப்பிட்டு செல்லும் வகையில் அமீரக காங்கிரஸ் பொருளாளர் கீழை.ஜமீல் சமூக வலை தளம் மற்றும் நேரடி களப் பணிகளும் தீவிரமாக செயல்பட்டு, தேர்தல் நேரத்தில் நேரடியாக தமிழகத்துக்கே சென்று தேர்தல் பணியில் ஈடுபட்டவர்.
இந்நிலையில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ் அழகிரியை அமீரக காங்கிரஸ் பொருளாளர் கீழை ஜமீல் முஹம்மது சென்னை சத்திய மூர்த்தி பவானில் மரியாதை நிமித்தம் சந்தித்தார். இச்சந்திப்பின் போது காங்கிரஸ் மூத்த நிர்வாகியும், அமீரக காங்கிரஸ் கமிட்டி ஆலோசகருமான அமீர்கான் உடனிருந்தார்.
You must be logged in to post a comment.