என்.எம். நம்பூதிரி (Neelamana Madhavan Nampoothiri) கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள புலியூர் நீலமனா இல்லத்தில் ஏப்ரல் 17, 1943ல் பிறந்தார். இளநிலை இயற்பியல், மலையாளம் முதுநிலை ஆகிய பட்டப்படிப்புகளுக்கு பிறகு, முனைவர் கெ.ஏ. எழுத்தச்சன் மற்றும் டாக்டர் சி.பி. அச்சுதனுண்ணி ஆகியோரின் வழிகாட்டுதலில் இடப்பெயர் அடிப்படையில் கோழிக்கோடு (Toponomy) என்ற விஷயத்தில் முனைவர் பட்டம் பெற்றார். செங்ஙன்னூர் கிறிஸ்தவ கல்லூரி, தலச்சேரி அரசு பிரண்ணன் கல்லூரி, கோழிக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோழிக்கோடு மாலைக் கல்லூரி, பட்டாம்பி அரசு ஸமஸ்கிருத கல்லூரி ஆகிய கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.கேரளாவில் முதன்முதலாக இடப்பெயர்களின் மூலம் (Toponomy) கோழிக்கோடு நகரத்தின் வரலாற்றை ஆய்வு செய்தார். கோழிக்கோடு சாமூதிரி மன்னர் பரம்பரையின் ஓலைச்சுவடிகளை கண்டெடுத்து ஆய்வு செய்தார். நிளா ஆற்றுப்படுகை (பாரதப்புழா) ஆய்வு என கேரளாவின் வரலாற்று, சமூக, பரிணாமங்கள் குறித்து வெகு விமரிசையாக ஆய்வுகளை மேற்கொண்டார். 1993-ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற ஹெர்மன் குண்டர்ட் மாநாட்டில் பங்கேற்றார்.தமிழக மற்றும் கேரள வரலாறு பற்றி பல அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி சிறீ புன்னச்சேரி நீலகண்ட சர்மா நினைவு அரசு ஸமஸ்கிருத கல்லூரியில், மலையாளம் முதுகலைப் படிப்பு பிரிவின் தலைவராக இருந்து ஓய்வு பெற்றார்.கேரள வரலாறு குறித்த ஆங்கில குறும்புத்தகம் எழுதியுள்ளார். என்.எம். நம்பூதிரி மார்ச் 30, 2017ல் ஆலப்புழாவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.உணவுகளின் அரசன், உலக புகழ்பெற்ற நம்ம இட்லி தினம் இன்று (30 மார்ச்)தென்னிந்தியாவில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை சாப்பிடும் உணவு இட்லி. சவுத் இந்தியன் ஃபுட் என்று வடநாட்டவர்கள் மனதில் இருப்பது இட்லியும் தோசையும்தான். ஆனால் இட்லி இந்தியாவில் தோன்றிய உணவு இல்லை. இந்தோனேஷியாதான் இட்லிக்கு பூர்வீகம். உலக சுகாதார அமைப்பு, அதிக உட்டச்சத்து கொண்ட உணவுகளில் இட்லியையும் சேர்த்துள்ளது. இட்லியில் புரதம், நார்சத்து, கார்போஹைட்ரேட் அனைத்தும் உள்ளது. இது வேகவைத்த உணவு என்பதாலும் சாப்பிடுபவர்களுக்கு ஆரோக்கியாமானதாக இருப்பதாலும் உலகம் முழுக்க பிரபலமான உணவாக இருக்கிறது.மார்ச் 30-ஆம் தேதி உலக இட்லி தினம் கொண்டாடப்படுகிறது. கோவையை பூர்விகமாகக் கொண்ட இனியவன் என்பவர்தான் இந்த தினத்தை 2015ம் ஆண்டில் இருந்து கொண்டாடக் காரணமானவர். ’மல்லிப்பூ’ இட்லியின் நிறுவனரான இவர், இட்லி செய்வதில் கின்னஸ் சாதனை படைத்தவர். 124 கிலோவில் இட்லி செய்ததற்காக இவர் கின்னசில் இடம்பெற்றார். மேலும் 2000 வகையான இட்லிக்களை உருவாக்கியவர். இது குறித்து இனியவன் பேசுகையில், ‘சிறியவர் முதல் பெரியவர் வரை, அனைவருக்கும் ஏற்ற ஒரு பொதுவான உணவு இட்லிதான். தந்தையர் தினம், அன்னையர் தினம் என எல்லாவற்றுக்கும் ஒரு தினம் இருக்க, இட்லி குறித்தும் ஒரு தினம் இருக்க வேண்டும் என எண்ணினேன். இட்லிக்கென்று ஒருநாள் ஒதுக்கப்பட வேண்டும் என்று நினைத்தேன். அதன் நீட்சியே, மார்ச் 30, இட்லி தினமாக ஆனது’ என தினத்துக்கான காரணம் குறித்து விளக்குகிறார்.நகைச்சுவையாக ஒரு செய்தியை தமிழர்கள் சொல்வதுண்டு. அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில், வகுப்பில் பேராசிரியர் பாடம் நடத்திக்கொண்டு இருந்தபோது மாணவர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டுள்ளார். கேள்வி என்னவென்றால், திரவ நிலையில் உள்ள ஒரு பொருளை திடப் பொருளாக மாற்ற முடியுமா என்பது தான் அது. பேராசிரியரின் கேள்விக்கு பெரும்பாலான மாணவர்கள், இது சாத்தியமில்லாதது என்றே பதிலளித்தனர். ஆனால் நம் தமிழ்நாட்டு மாணவர் சளைக்காமல் நிச்சயம் முடியும் என்று பதில் கூறியுள்ளார். உடனே பேராசிரியர் அது எப்படி முடியும் என்று திரும்பவும் கேள்வி கேட்டார். உடனே தமிழ்நாட்டு மாணவர், இட்லி மாவு தான் அது என்றும், திரவ நிலையில் உள்ள இட்லி மாவை சில குறிப்பிட்ட நிமிடத்திற்கு வேக வைத்தால் அது தான் இட்லி என்றும் எங்கள் விருப்ப உணவு என்றும் பதிலளித்தார். பேராசிரியர், மாணவர்கள் அனைவரும் தமிழ்நாட்டு மாணவரின் பதிலைக் கேட்டு கைதட்டி பாராட்டு தெரிவித்தனர். இந்த சம்பவம் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.ஆனால் இட்லி சாப்பிட்டால் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும். எந்த விதமான அசவுகரியமும் ஏற்படாது என்று மருத்துவர்களும் இட்லிக்கு வக்காலத்து வாங்குகின்றனர். கன்னடத்தில் வடராதனே இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும். இட்லியின் பண்டையகால பெயர் இட்டரிக என்பதாகும். பழங்கால இந்திய இலக்கியங்களில் இட்லி பற்றிய முதல் குறிப்பு, கன்னட மொழியில், சிவகோட்டி ஆச்சாரியர் ‘வடராதனே’ என்னும் காவியத்தில் குறிப்பிட்டுள்ளார். 750 ஆண்டுகள் பழமையானது பண்டைய நூல்களில் குறிப்பிட்டுள்ள இட்லியின் செய்முறை வேறு, இப்போது தயாரிக்கும் இட்லியின் செய்முறை வேறு. நவீன முறை இட்லி, 1250ம் ஆண்டு பின் எழுதப்பட்ட நூல்களில் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவை ஆண்ட இந்து சமய அரசர்களின் நூல்களில் குறிப்பிட்டுள்ள செய்முறை தான் இப்போது பின்பற்றுவதாக, உணவு நிபுனர் அட்சயா தனது பதிப்பில் குறிப்பிட்டுள்ளார். உலக இட்லி தினம் எந்த நேரம் என்றில்லாமல் எந்த நேரமும் விரும்பி சாப்பிடலாம் என்ற காரணத்தினால் எல்லோரும் இட்லியை அரவணைத்துக்கொண்டனர்.தற்போது பெரும்பாலும் இட்லி மாவை கடைகளில்தான் வாங்குகிறோம். கடைகளில் சோடா உப்பு சேர்ப்பதால், அவசரத்துக்கு மட்டும் வாங்கிக்கொண்டு வீட்டிலேயே அரைத்துக்கொள்வது நல்லது. மிருதுவான இட்லி செய்ய இட்லி அரிசியுடன் பச்சரிசியையும் சேர்த்தால் இட்லி சாஃப்ட்டாக இருக்கும். மூன்று கப் இட்லி அரிசி எடுத்தால் 2 கப் பச்சரிசி சேருங்கள். மொத்தம் ஐந்து கப் அரிசிக்கு ஒரு கப் முழு உளுந்து போட்டால் போதும். உங்களின் உளுந்து எவ்வளவு உபரி தருகிறதோ அதெற்கேற்பவும் அளவை மாற்றிக்கொள்ளலாம். இட்லி இரண்டையும் ஐந்து மணிநேரம் ஊறவைக்கவேண்டும். உளுந்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு வெந்தையத்தைம் சேர்த்துக்கொள்ளலாம். அனைத்தையும் ஐந்து மணிநேரம் தனித்தனியாக ஊறவைத்து, முதலில் உளுந்தை, வெந்தையத்துடன் அதிகம் தண்ணீர் ஊற்றாமல், தெளித்து மட்டும் அரைத்து கெட்டியாக வைத்துக்கொள்ளவும். அதன்பின் அரிசியை அரைத்து, அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். 8-9 மணிநேரம் ஃபிரிட்ஜில் வைக்காமல் வெளியே வைத்திருந்தால் புளித்துவிடும். பிறகு இட்லி சுட்டால் மிகவும் சுவையாகவும் சாப்ட்டாகவும் இட்லி இருக்கும். இட்லிகளிலும் பலவகைகளில் சமைக்க துவங்கி விட்டனர். பொடி இட்லி, கொத்து இட்லி, ரவா இட்லி, ஸ்டப்டு இட்லி, இட்லி ப்ரை, இட்லி சாட், இட்லி கபாப், என நீங்கள் நினைத்துக்கூட பார்க்காத வகையிலான ஏராளான வகை இட்லிகள் இன்று ஓட்டல்களில் விற்பனையாகிறது. மும்பை பல்கலைக்கழக பேராசிரியையான வைஷாலி பம்போல், எந்தவொரு ரசாயன முறையையும் பயன்படுத்தாமல், இட்லியை சுமார் மூன்று ஆண்டுகள் வரை கெடாமல் பார்த்துக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார். மும்பை பல்கலைக்கழக பேராசிரியை கூறியதாவது, 2013 ஆம் ஆண்டிலிருந்து தனது குழுவுடன் வைஷாலி இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும். எலக்ட்ரானிக் பீம் ரேடியேஷன் முறையைப் பயன்படுத்தி உணவுப் பொருட்களைக் கெட்டுப்போகாமல் பதப்படுத்த முடியும் என்று கண்டுபிடித்துள்ளோம், என்று கூறியுள்ளார்.தமிழர்களின் பாரம்பரிய உணவான இட்லி அதிகம் விற்பனையாவது பெங்களூரு நகரில் தான். அதற்கு அடுத்தபடியாக மும்பையும் மூன்றாவது இடத்தில் சென்னையும் உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் புனே மற்றும் ஐதராபாத் நகரங்கள் உள்ளன. குழந்தைகள், நோயாளிகள், முதியவர்கள் என எவருக்கும் பக்க விளைவு ஏற்படுத்தாத உணவு இட்லி தான். எளிதில் செரிமானம் ஆகும் என்ற காரணத்தாலேயே குழந்தைகளுக்கும் நோயாளிகளுக்கும் மருத்துவர்கள் பரிந்துறைக்கும் ஒரே உணவு இட்லி என்பது தமிழர்களுக்கு பெருமைதான். இட்லி தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் உலகின் எல்லா இடங்களிலும் மக்களால் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவாக மாறி வருகிறது.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
உலக செய்திகள்
உடனடி காபி, வாஷிங்டன் காபி நிறுவனத்தை நிறுவிய ஜார்ஜ் வாஷிங்டன் நினைவு தினம் இன்று (மார்ச் 29, 1946).
ஜார்ஜ் கான்ஸ்டன்ட் லூயிஸ் வாஷிங்டன் மே 20, 1871ல் பெல்ஜியத்திலுள்ள கொர்த்ரிஜ்க் என்ற ஊரில் ஆங்கில தந்தைக்கும் பெல்ஜியத்தை சேர்ந்த தாயாருக்கும் பிறந்தார். மே மாதம் 1918 ஆம் ஆண்டு வாஷிங்டன் அமெரிக்கராகக் கருதப்படும் வரை, அவர் தற்போதைய தேசிய சட்டம் அடிப்படையில் பிரித்தானியராகக் கருதப்பட்டார். அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் (குறைந்தது ஆறுபேர்) அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் குடியேறினர். வாஷிங்டன் ஜெர்மனியின் பிரஸ்ஸல்சுக்குச் சென்று வசித்தார். அங்கு அவர் இரசாயனவியல் பட்ட படிப்பை ஜெர்மனியின் போன் பல்கலைக்கழகத்தில் முடித்தார். அவர் டிசம்பர் மாதம் 1895 ஆண்டு ஏஞ்சலின் செலின் விர்கினியை திருமணம் செய்தார். அவரது மனைவியும் பெல்ஜியத்தில் பிறந்தவராவார். அக்டோபர் 6, 1896 அன்று வாஷிங்டன் கப்பலில் அமெரிக்காவுக்கு ஆண்ட்வெர்ப் பெல்ஜியத்திற்கு வருகை தந்ததாக எல்லிஸ் தீவில் பதிவு செய்யப்பட்டது என்றாலும், 1900 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு, அவர்கள் 1897 ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார்கள் என்று கூறுகிறது. வாஷிங்டன் மற்றும் அவரது மனைவியும் தங்களது மூன்று குழந்தைகளுடன் நியூயார்க் பகுதியில் குடியேறினர்.
வாஷிங்டன் நியூயார்க் பகுதிக்கு வந்த பின்னர் மண்ணெண்ணெய் எரிவாயு சுடர்வலை உற்பத்தி நிறுவனம் ஒன்றை நிறுவினார். இந்த நேரத்தில், அவர்கள் ஸ்டேட்டன் தீவின் நியூ பிரைட்டனில் வசித்தார். ஆனால் அவரது நிறுவனமான ஜார்ஜ் வாஷிங்டன் விளக்கு நிறுவனம், அருகில் உள்ள ஜெர்ஸி சிட்டியை அடிப்படையாக கொண்டிருந்தது. இந்த வணிகமானது வெள்ளொளிர்வு விளக்குத் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் கைவிடப்பட்டது. ஒரு நேரத்தில் வாஷிங்டனிடம் நிழற்படக் கருவி நிறுவனம் இருந்தது. 1900 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு, 29 வயதாகிய வாஷிங்டன் ஒரு கண்டுபிடிப்பாளர் என்றும் அவருடன் அவரது 23 வயதாகிய மனைவி, மூன்று குழந்தைகள், 25 வயதாகிய அவரது இளைய சகோதரி, மூன்று வேலையாட்கள் மற்றும் இரண்டு வேலையாட்களின் ஒரு குழந்தை ஆகியோர் புரூக்ளினில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்ததாக பதிவு செய்திருந்தது. வாஷிங்டன் 1906, 1907 ஆம் ஆண்டு குவாத்தமாலாவில் கால்நடை பண்ணை வைப்பதற்கு முயற்சி செய்தார். இதற்கிடையில், அவரது உடனடி காபி உற்பத்தி முயற்சியையும் மேம்படுத்தினார். வாஷிங்டன் ஓராண்டு காலம் குவாதமாலாவில் இருந்த பின் நியூயார்க் நகரம் திரும்பி காபி உற்பத்தியை முக்கிய தொழிலாகத் தொடங்கினார்.
வாஷிங்டன் 1927 ஆம் ஆண்டு நியூ ஜெர்சியில் நிலம் வாங்கி அங்கு தனது நிறுவனத்தை இடமாற்றினார். மற்றும் அவர் மேந்தமிலுள்ள “ஃபிராக்ளின் பண்ணைத் தோட்டத்துக்கு” குடிபெயர்ந்தார். வாஷிங்டன் விலங்குப் பிரியரும் தோட்டப் பிரியருமாவார். தனது கிராமப்புற இடங்களில் (முதலில் பெல்போர்ட்டிலும் பிறகு மேந்தமிலும்) விலங்குக் காட்சிசாலைகளை அமைத்துப் பராமரித்தார். லாங் தீவில், அடிக்கடி தனது தோளில் ஒரு பறவை அல்லது குரங்குடன் அவர் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. வாஷிங்டன், அவரது விலங்குக் காட்சியங்களில், அரியவகைப் பறவைகளை பராமரித்து வந்தார். மேலும் மான், செம்மறி, வெள்ளாடுகள், மற்றும் மறிமான் போன்ற விலங்குகள் பெல்போர்ட்டிலும். மேந்தமிலில் பெரிய இடத்தில் நூற்றுக்கணக்கான மான், லாமாக்கள் மற்றும் வரிக்குதிரைகளும் வளர்க்கப்பட்டன. சமூகளவில், அவர் நியூயார்க் நகரின் லோட்டோஸ் சங்க (Lotos Club) உறுப்பினராக இருந்தார். 1920 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், “அமெரிக்க கட்சி” சார்பில் டகோட்டா மாகாணத்தின் வேட்பாளராக வாஷிங்டனை முன்னிறுத்த முயற்சிக்கப்பட்டதாகவும் ஆனால் ஆவணங்கள் மிகவும் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. உண்மையில் அவர் வேட்பாளராக முன்னிருத்தப்பட்டதற்கான எந்தக் குறிப்பும் இல்லை. ஜார்ஜ் வாஷிங்டன் வெளிநாட்டில் பிறந்தமையால் ஜனாதிபதி வேட்பாளராகத் தகுதி கிடையாது.
ஜார்ஜ் வாஷிங்டன் ஹைட்ரோகார்பன் விளக்குகள், ஒளிப்படக்கருவிகள் மற்றும் உணவு பதப்படுத்தல் போன்ற களங்களில் இரண்டு டஜன் காப்புரிமைகள் வைத்திருந்தார். உடனடி காபி செயல்முறையை முதலில் கண்டுபிடித்தவர் வாஷிங்டன் இல்லை. உடனடி காபி செயல்முறைகளில் சடோரி கரோவினுடைய செயல்முறை ஒரு முன்னோடியாக இருந்தது. எனினும் வாஷிங்டனின் கண்டுபிடிப்பு வணிக உற்பத்திக்கு வழிவகுப்பதில் முதல் முயற்சியாக இருந்தது. அவர் ஒரு வெள்ளி காபி பாத்திரத்தின் விளிம்பில் உலர்ந்த தூளைப் பார்த்து வாஷிங்டன் உந்துதல் அடைந்தார் என்ற கருத்தும் நிலவுகிறது. இதே சமயத்தில் ஒரு ஜெர்மன்- குவாத்திமாலனியரான, ஃபெடரிகோ லேஹ்ன்ஹோப்ப்வயலட் (Federico Lehnhoff Wyld) என்பவரால் உடனடி காபி செய்முறை உருவாக்கப்பட்டது. அது ஐரோப்பாவில் சந்தைப்படுத்தப்பட்டது. வாஷிங்டனின் தயாரிப்பு முதன் முறையாக 1909 ஆம் ஆண்டு Red E Coffee (“ready” -ஒரு சொல்விளையாட்டாக) என விற்பனை செய்யப்பட்டது. ஜி.வாஷிங்டனின் காபி சுத்திகரிப்பு நிறுவனம் 1910 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 147, 41வது தெரு, புரூக்ளின் புஷ் முனைய தொழிற்துறை வளாகத்தில் இருந்தது. பின்னர் 1927ல் 45, கிழக்கு ஹனோவர் அவென்யூ, மோரிஸ் சமவெளிகளில் அமைக்கப்பட்ட புதிய உற்பத்தி நிலையத்திற்காக நிலங்களை கையகப்படுத்தி அவரது நிறுவனச் செயற்பாடுகளை, நியூ ஜெர்சிக்கு மாற்றினார்.
நிறுவனத்தின் தயாரிப்பு, பயன்படுத்தும் வசதி, நவீன மாற்றம் மற்றும் தூய்மை என்பன விளம்பரம் மூலம் அடிக்கடி வலியுறுத்தப்பட்டது. காபி சமிபாட்டுக்கு நல்லது என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது. முதலாம் உலக போர் முடிவுக்கு வந்த பின்னர், அமெரிக்க இராணுவம் காபியை பாவிக்கத் தொடங்கியதால் விற்பனை பெருகியது. இந்த நிறுவனம் 1930லிருந்து 1935 வரை “செர்லக் ஓம்சு” வானொலி தொடரை வழங்கிய பின் இதன் விற்பனை வளர்ச்சி மேலும் பெருகியது. ஆனால் ஆரம்ப உடனடி காபியானது பெரும்பாலும் தரமற்ற, சுவையற்ற, சற்றே புதுமையான தயாரிப்பாகக் கருதப்பட்டது. மத்திய அதிகாரிகளினால் இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் இடையேயான நிதியுறவு தொடர்பாக வரி சிக்கல்களுக்கு ஆளானார். நவம்பர் 1918ல், தனது வர்த்தக ரகசியங்களை காபி உற்பத்திக்கு பயன்படுத்துவதற்கு ஒப்பந்தம் ஒன்றை நிறுவனத்தில் முன்வைத்தார் மற்றும் ஒரு மாதம் கழித்து 4/5 பங்குகளை அவரது குடும்பத்தினருக்கு கொடுத்தார். வாஷிங்டன் குடும்பத்தினர் குடும்ப வருமானத்தின்மீது வரிகட்டத் தேவையில்லை என்று வலியுறுத்தினர். இந்த வழக்கின் பலகட்டங்களிலும் இவர்களுக்கு எதிரான தீர்ப்பே கிட்டியது. வாஷிங்டன் மகன் தந்தையின் நிறுவனத்தில் பொருளாளராக பணியாற்றினார். தந்தையைப் போல் கண்டுபிடிப்புகள், காப்புரிமைகள் போன்றவற்றில் ஈடுபட்டார்.
முதலாம் உலக போரில் வாஷிங்டனின் அந்த நேர தயாரிப்பான உடனடி காபி உணவிற்கு முக்கிய பயன்பாடாக இருந்தது. காபியின் நுகர்வானது இராணுவ வீரர்களுக்கு காபின் ஊக்கத்தை கொடுத்தமையால் போர்க்களத்தில் பெறுமதிமிக்கதாகக் கருதப்பட்டது. அந்த நேரத்தில், அமெரிக்கப் போர் துறையில், காபி பிரிவின் தலைவராக இருந்த இ.எஃப்.ஹோல்புரோக், கடுகு வாயுவிலிருந்து மீட்படைவதற்கு காபி முக்கிய உதவியாக உள்ளதாகக் கருதினார். 1914ல் கனடிய படையால் இது பயன்படுத்தப்பட்டது. பின்னர் 1917ல் அமெரிக்கப் படை போரில் நுழைந்த பின் அமெரிக்க இராணுவப் பயன்பாட்டிற்காக எல்லா உற்பத்தியும் கொடுக்கப்பட்டது. தேசிய உற்பத்தி விநியோகமானது ஆறு முறை யுத்தத்தின் இறுதி காலத்திலிருந்தது மற்றும் புதிய சிறிய தயாரிப்பாளர்கள் கூட நம்பமுடியாத அளவு தேவைக்கு இராணுவத்தை சந்திக்க வேண்டியிருந்தது. “ஜார்ஜ் கப்” என்ற புனைப் பெயருடன் உடனடி காபி இராணுவத்தினர் மத்தியில் புகழ் பெற்றது. காபியானது அதன் மணத்தைவிட, காஃபின் ஊக்கத்தினால் பிரதான ஈர்ப்பாக இருந்தது, அது சில நேரங்களில் குளிர்நிலையிலும் அருந்தப்பட்டது.
எலிகள், மழை, மண், வரைவுகள் [sic], பீரங்கி கர்ஜனை, மற்றும் குண்டுகள் அலறல் போன்றன இருந்த போதிலும் நான் மிகவும் சந்தோஷமாக உள்ளேன். சிறிய எண்ணெய் சூடாக்கியை ஒளி ஏற்றுவதற்கும் ஜார்ஜ் வாஷிங்டனின் காபி செய்வதற்கும் ஒரு நிமிடம் தான் எடுக்கும். ஒவ்வொரு இரவும், நான் வாஷிங்டனின் சுகாதாரத்திற்கும் நல்வாழ்விற்கும் விசேட மனு ஒன்றை வழங்குகின்றேன்.” — அமெரிக்க படையினர், 1918 அகழிகளிடமிருந்து பெறப்பட்ட கடிதம். முதலாம் உலகப்போரில் அமெரிக்க இராணுவத்தில் அவசரகால பங்கீடாக ஒரு கால் அவுன்சு (7 கிராம்) இரட்டை வலிமையுடைய உடனடி காபி பாக்கெட் ஒரு நபருக்கு ஒன்றாக, இருபத்தி நான்கு பேருக்கான அளவில் வெவ்வேறு உணவுகள் அடைக்கப்பட்ட பெட்டிகளில் சேர்க்கப்பட்டிருந்தன. உடனடி காபியானது சேமிக்கப்பட்ட இருப்புகளிலும் மற்றும் அகழிகளிலும் பயன்படுத்தப்பட்டது. இரண்டாம் உலக போரின் போதும் அமெரிக்க இராணுவம் மீண்டும் வாஷிங்டனை நம்பியிருந்தது. எனினும் இரு உலகப் போர்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் பல உடனடி காபி வகைகள் (மிக குறிப்பாக நெஸ்கபே) சந்தையில் அறிமுகமாயிருந்தன. அவை அதிகரித்த இராணுவ தேவையைப் பூர்த்தி செய்தன.
1943 ஆம் ஆண்டு ஜி.வாஷிங்டனின் காபி சுத்திகரிப்பு நிறுவனமானது அமெரிக்க வீட்டு தயாரிப்பு உற்பத்தி மூலதனமாக வாங்கப்பட்டது மற்றும் ஜார்ஜ் வாஷிங்டன் ஓய்வு பெற்றார். வாங்கப்பட்ட நிறுவனமானது பெரும்பாலும் குடும்பத்தால் நடத்தப்பட்டது. அத்துடன் அமெரிக்க வீட்டு தயாரிப்பின் 29,860 பங்குகளுக்காக (அண்ணளவாக $ 1.7 மில்லியன்) இது மாற்றப்பட்டது. ஒரு நேரத்தில் அமெரிக்க வீட்டு தயாரிப்புகள் தீவிர கொள்முதலாகவும், எட்டு வருடமாக 34 பங்குகளை நிறுவனங்கள் வாங்குவதாகவும் இருந்தது. ஜி.வாஷிங்டனின் பொது முகாமையாளர் கிளாரன்ஸ் மார்க், வாஷிங்டனுடன் இணைக்கப்பட்ட அலகில் இயங்கி வெற்றி கண்டார். வாஷிங்டனுடைய இறுதிக் காலங்களில், அவர் “பிராங்கிளின் பண்ணைத் தோட்டம்” சொத்தை விற்பனை செய்துவிட்டு புதிய வெர்னான் சாலை, மேந்தமிலுள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார். அவரது நிறுவனம் விற்பனை செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின் மார்ச் 29, 1946 ஆம் ஆண்டு, தனது 74 ஆவது வயதில் நியூ செர்சியில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
வாஷிங்டனின் நியூ ஜெர்சி உற்பத்திநிலையம் கோ-கோலா நிறுவனத்தின் பிரிவான தென்கோவிற்கு விற்கப்பட்டதிலிருந்து. வாஷிங்டனின் காபி உற்பத்தியானது 1961ல் கைவிடப்பட்டது. 1938ல் தொடங்கப்பட்ட ’G. Washington’s Seasoning & Broth’ நிறுவனம் வாஷிங்டனின் இறுதிச் சொத்தாக இருந்தது. இதன் உற்பத்தி 2000 ஆம் ஆண்டு அமெரிக்க வீட்டு தயாரிப்பு நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டது. பின்னர் இரு நிறுவனங்களிடம் கைமாறிய பின் 2001 ஆம் ஆண்டு ஹோம்ஸ்டேட் ஃபார்ம் லிமிட்டடு ஆல் நடத்தப்பட்டது. வாஷிங்டனின் பெயர் இன்னும் G. Washington’s Seasoning & Broth என்ற பெயரில் விளங்குகிறது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ரஷ்ய வானியலாளர் கார்ல் பிரீட்ரிக் நோர் பிறந்த நாள் இன்று (மார்ச் 28, 1801).
கார்ல் கிறித்தோபொரோவிச் பிரீட்ரிக் நோர் (Karl Khristoforovich Friedrich Knorre) 28 மார்ச் 28, 1801ல் இன்றைய எசுதோனியாவைச் சேர்ந்த, அன்று ரஷ்சியப் பேரரசில் இருந்த தார்பாத்தில் பிறந்தார். இவரது தந்தையார் எர்னெசுட்டு பிரீட்ரிக் நோர் எனும் ஜெர்மனியில் பிறந்த வானியலாளர் ஆவார். இவரது மனைவி சென்ஃப் என்கிற சோப்ஃபி ஆவார். இவரது தந்தையார் 1810ல் இவர் ஒன்பதாம் அகவை அடையும்போதே இறந்தாலும், தந்தையாரின் வாழ்க்கை தாஒபாத் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியராகவும் தார்பாத் வான்காணக நோக்கீட்டாளராகவும் அமைந்தமை இவரைப் பெரிதும் கவர்ந்ததால் கணிதத்திலும் அறிவியலிலும் கல்வி கற்க சேர்ந்துள்ளார். ஏழ்மை வாய்ந்த தன் தாய் இவரது கல்விக்கான செலவை ஈடுசெய்ய இவர் பள்ளி மாணவருக்கும் பெரியவர்களுக்கும்கூட இலத்தீன் மொழியைக் கற்பித்துள்ளார்.
தார்பாத் பல்கலைக்கழகத்தில் ஓவியத் துறையில் இருந்த இவரது தாய்மாமன் கார்ல் ஆகத்து சென்ஃப் அவர்களது வீட்டில் தாயுடன் வாழும்போது தன் 15ம் அகவையில் அதே பல்கலைக்கழகத்தில் கல்விகற்க சேர்ந்துள்ளார். இவர் தன் தந்தையைப் போலவே வானியலாளராக விரும்பினார். அவர் தொட்டு முடிக்காமல் சென்ற பணிகளை முழுமைப்படுத்த எண்ணினார். ஆனால் இவரது மாமா இவரை சமயக் கல்வியில் செர்த்ததால் வாழ்க்கை வளரும் எனக் கருதியுள்ளார். எனவே இவரை இறையியலை எடுத்துப் படிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இவர் அதை ஏற்று இறையியலில் கல்வி கற்கும்போதும் தனியாக பல வானியல் விரிவுரைகளைக் கேட்டும் படித்தும் வானியலில் ஆர்வம் குன்றாமல் விளங்கினார்.
இவர் வான்காணகத்தின் புதிய தலைவராக விளங்கிய வில்கெல்ம் சுத்ரூவ அவர்களிடம் உதவியாளராகப் பணிபுரிய தன்னை ஒப்படைத்தார். சுத்ரூவ்வின் வழிகாட்டுதலின்கீழ், புவிப்புற அளவையியலில் திறம்பட்ட வல்லுனர் ஆனார். பத்தொன்பது அகவையில் இவரது திறமையைக் கண்டு வியந்த சுத்ரூவ இவரை கருங்கடலில் நிகோலயேவில் ஒரு வான்காணகம் நிறுவ, மதிநுட்பம் வாய்ந்த ஓர் இளம்வானியலாளரைத் தேடிக்கொண்டிருந்த அலெக்சேய் கிரெய்குவிடம் பரிந்துரைத்தார். வான்காணகத்துக்கான கருவிகளைத் தேர்வது நோருக்கு ஓர் அறைகூவலாக விளங்கியது. இவர் இதற்காக ஐரோப்பாவில் உள்ள வான்காணகங்களைப் பார்வையிட அலெக்சேய் கிரெய்கிடம் ஒப்புதல் கேட்டார். அவரும் இணங்கவே இவர் குதிரை வண்டியில் இரண்டாண்டுகள் ஐரோப்பாவில் பயணம் மேற்கொண்டார்.
ஜெர்மனியில் இவர் பிரீட்ர்க் பெசல், யோகான் பிரான்சு என்கே, ஈன்ரிச் கிறித்தியான் சுமாக்கர் ஆகிய வானியலாளர்களையும் பாரீசில் பிரான்கோயிசு அராகோ அவர்களையும் சந்தித்தார். பின்னர் அங்கிருந்து கிரீன்விச்சுக்கும் டர்பிலினுக்கும் சென்று காலவரைவியல் கருவிக் குழுமங்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். பயணத்தில் இருந்து திரும்பிய இவர் தன் மனப்பதிவுகளை அலெக்சேய் கிரெய்கிடம் பகிர்ந்துள்ளார். பிறகு வான்காணகத்துக்குத் தேவையான கருவிகளைக் கொள்முதல் செய்துள்ளார். இக்கருவிகளில் இதள் செயற்கைத் தொடுவான் ஆடியும் ஒன்றாகும். அளவைப் பொய்ப்புகளைத் தவிர்க்க முதலில் தொலைநோக்கி வழியாக விண்மீன்களை நேரடியாக நோக்குவதோடு இதல் ஆடி வழியாகவும் மறைமுகமாக நோக்கலாம்.
இவர் அரசு வானியல் கழக உறுப்பினர் ஆவார். இவர் மூன்று மனைவிகளை மணந்தவர். முதல் மனைவி எல்சபெத்) தியெதெரிக் குடும்பத்தினர் ஆவார். இவர் மூன்றே ஆண்டுகளில் இறந்துவிடவே, எலிசபெத்தின் தங்கையான டோரத்தியா வான் தியெதெரிக்கை நோர் 1833ல் மணந்தார். இவரும் தன் 37 ஆம் அகவையில் 13 குழந்தைகளைப் பெற்றுவிட்டு இறக்கவே, மூன்றாவதாக, எமிலி கேவ் அவர்களை 1852ல் மண்ந்தார். இவர் நோர் இறக்கையில் உயிருடன் இருந்தார். நோருக்கு 15 பிள்ளைகள் உண்டு. இவர்களில் இவரது ஐந்தாம் மகனான விக்தர் நோர் புகழ்பெற்ற வானியலாளர் ஆவார். இவர் வானியல் ஆய்வு செய்ய, 1862ல் பெர்லினுக்குச் சென்றார். நோர் 1871ல் நிகோலயேவ் வான்காணகத்தில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்றதும் இவர் தன் மகன் விக்தருடன் வாழ பெர்லினுக்குச் சென்றார்.
இவர் நிகோலயேவ் வான்கானத்தை 1821ல் நிறுவிப் பெயர்பெற்றவர். இவரது தந்தை, எர்னெசுட்டு பிரீட்ரிக் நோர் அவர்களும் இவர் மகன், விக்தர் நோர் அவர்களும் பெயர்பெற்ற வானியலாளர்கள் ஆவர். அண்மையில் நாசா நிறுவனம் இம்மூன்று தலைமுறை நோர் வானியலாலர்களின் நினைவாக ஒரு குறுங்கோளுக்குப் பெயரிட்டுள்ளது. வானியலாளர் கார்ல் பிரீட்ரிக் நோர் ஆகஸ்ட் 29, 1883 ல் பெர்லினில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ரஷ்ய வானியலாளர் கார்ல் பிரீட்ரிக் நோர் பிறந்த நாள் இன்று (மார்ச் 28, 1801).
கார்ல் கிறித்தோபொரோவிச் பிரீட்ரிக் நோர் (Karl Khristoforovich Friedrich Knorre) 28 மார்ச் 28, 1801ல் இன்றைய எசுதோனியாவைச் சேர்ந்த, அன்று ரஷ்சியப் பேரரசில் இருந்த தார்பாத்தில் பிறந்தார். இவரது தந்தையார் எர்னெசுட்டு பிரீட்ரிக் நோர் எனும் ஜெர்மனியில் பிறந்த வானியலாளர் ஆவார். இவரது மனைவி சென்ஃப் என்கிற சோப்ஃபி ஆவார். இவரது தந்தையார் 1810ல் இவர் ஒன்பதாம் அகவை அடையும்போதே இறந்தாலும், தந்தையாரின் வாழ்க்கை தாஒபாத் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியராகவும் தார்பாத் வான்காணக நோக்கீட்டாளராகவும் அமைந்தமை இவரைப் பெரிதும் கவர்ந்ததால் கணிதத்திலும் அறிவியலிலும் கல்வி கற்க சேர்ந்துள்ளார். ஏழ்மை வாய்ந்த தன் தாய் இவரது கல்விக்கான செலவை ஈடுசெய்ய இவர் பள்ளி மாணவருக்கும் பெரியவர்களுக்கும்கூட இலத்தீன் மொழியைக் கற்பித்துள்ளார்.
தார்பாத் பல்கலைக்கழகத்தில் ஓவியத் துறையில் இருந்த இவரது தாய்மாமன் கார்ல் ஆகத்து சென்ஃப் அவர்களது வீட்டில் தாயுடன் வாழும்போது தன் 15ம் அகவையில் அதே பல்கலைக்கழகத்தில் கல்விகற்க சேர்ந்துள்ளார். இவர் தன் தந்தையைப் போலவே வானியலாளராக விரும்பினார். அவர் தொட்டு முடிக்காமல் சென்ற பணிகளை முழுமைப்படுத்த எண்ணினார். ஆனால் இவரது மாமா இவரை சமயக் கல்வியில் செர்த்ததால் வாழ்க்கை வளரும் எனக் கருதியுள்ளார். எனவே இவரை இறையியலை எடுத்துப் படிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இவர் அதை ஏற்று இறையியலில் கல்வி கற்கும்போதும் தனியாக பல வானியல் விரிவுரைகளைக் கேட்டும் படித்தும் வானியலில் ஆர்வம் குன்றாமல் விளங்கினார்.
இவர் வான்காணகத்தின் புதிய தலைவராக விளங்கிய வில்கெல்ம் சுத்ரூவ அவர்களிடம் உதவியாளராகப் பணிபுரிய தன்னை ஒப்படைத்தார். சுத்ரூவ்வின் வழிகாட்டுதலின்கீழ், புவிப்புற அளவையியலில் திறம்பட்ட வல்லுனர் ஆனார். பத்தொன்பது அகவையில் இவரது திறமையைக் கண்டு வியந்த சுத்ரூவ இவரை கருங்கடலில் நிகோலயேவில் ஒரு வான்காணகம் நிறுவ, மதிநுட்பம் வாய்ந்த ஓர் இளம்வானியலாளரைத் தேடிக்கொண்டிருந்த அலெக்சேய் கிரெய்குவிடம் பரிந்துரைத்தார். வான்காணகத்துக்கான கருவிகளைத் தேர்வது நோருக்கு ஓர் அறைகூவலாக விளங்கியது. இவர் இதற்காக ஐரோப்பாவில் உள்ள வான்காணகங்களைப் பார்வையிட அலெக்சேய் கிரெய்கிடம் ஒப்புதல் கேட்டார். அவரும் இணங்கவே இவர் குதிரை வண்டியில் இரண்டாண்டுகள் ஐரோப்பாவில் பயணம் மேற்கொண்டார்.
ஜெர்மனியில் இவர் பிரீட்ர்க் பெசல், யோகான் பிரான்சு என்கே, ஈன்ரிச் கிறித்தியான் சுமாக்கர் ஆகிய வானியலாளர்களையும் பாரீசில் பிரான்கோயிசு அராகோ அவர்களையும் சந்தித்தார். பின்னர் அங்கிருந்து கிரீன்விச்சுக்கும் டர்பிலினுக்கும் சென்று காலவரைவியல் கருவிக் குழுமங்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். பயணத்தில் இருந்து திரும்பிய இவர் தன் மனப்பதிவுகளை அலெக்சேய் கிரெய்கிடம் பகிர்ந்துள்ளார். பிறகு வான்காணகத்துக்குத் தேவையான கருவிகளைக் கொள்முதல் செய்துள்ளார். இக்கருவிகளில் இதள் செயற்கைத் தொடுவான் ஆடியும் ஒன்றாகும். அளவைப் பொய்ப்புகளைத் தவிர்க்க முதலில் தொலைநோக்கி வழியாக விண்மீன்களை நேரடியாக நோக்குவதோடு இதல் ஆடி வழியாகவும் மறைமுகமாக நோக்கலாம்.
இவர் அரசு வானியல் கழக உறுப்பினர் ஆவார். இவர் மூன்று மனைவிகளை மணந்தவர். முதல் மனைவி எல்சபெத்) தியெதெரிக் குடும்பத்தினர் ஆவார். இவர் மூன்றே ஆண்டுகளில் இறந்துவிடவே, எலிசபெத்தின் தங்கையான டோரத்தியா வான் தியெதெரிக்கை நோர் 1833ல் மணந்தார். இவரும் தன் 37 ஆம் அகவையில் 13 குழந்தைகளைப் பெற்றுவிட்டு இறக்கவே, மூன்றாவதாக, எமிலி கேவ் அவர்களை 1852ல் மண்ந்தார். இவர் நோர் இறக்கையில் உயிருடன் இருந்தார். நோருக்கு 15 பிள்ளைகள் உண்டு. இவர்களில் இவரது ஐந்தாம் மகனான விக்தர் நோர் புகழ்பெற்ற வானியலாளர் ஆவார். இவர் வானியல் ஆய்வு செய்ய, 1862ல் பெர்லினுக்குச் சென்றார். நோர் 1871ல் நிகோலயேவ் வான்காணகத்தில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்றதும் இவர் தன் மகன் விக்தருடன் வாழ பெர்லினுக்குச் சென்றார்.
இவர் நிகோலயேவ் வான்கானத்தை 1821ல் நிறுவிப் பெயர்பெற்றவர். இவரது தந்தை, எர்னெசுட்டு பிரீட்ரிக் நோர் அவர்களும் இவர் மகன், விக்தர் நோர் அவர்களும் பெயர்பெற்ற வானியலாளர்கள் ஆவர். அண்மையில் நாசா நிறுவனம் இம்மூன்று தலைமுறை நோர் வானியலாலர்களின் நினைவாக ஒரு குறுங்கோளுக்குப் பெயரிட்டுள்ளது. வானியலாளர் கார்ல் பிரீட்ரிக் நோர் ஆகஸ்ட் 29, 1883 ல் பெர்லினில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற, எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள் இன்று (மார்ச் 27, 1845).
வில்லெம் கோன்ராடு ரோண்ட்கன் (Wilhelm Conrad Röntgen) மார்ச் 27, 1845ல் ஜெர்மனி, பவேரியா மாகாணத்தில், லென்னெப் என்ற ஊரில் ஒரு துணி தயாரிக்கும் வணிகரும் தொழிலதிபருமான பிரீட்ரிக் கான்ராட் ரோண்ட்கன் என்பவருக்கு ஒரே மகனாகப் பிறந்தார். இவரது தாயார் ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த சார்லொட் கொன்சிட்டாசு ஃபுரோவெயின் என்பவராவார். 1848 ல் வியாபார நிமித்தமாக நெதர்லாந்தின் அப்பெல்டூர்ன் நகருக்கு குடி பெயர்ந்தனர். ரோண்ட்கன் அப்பெல்டூர்னில் ஒரு தனியார் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் 1861 முதல் 1863 வரை உட்ரெக்ட்டு தொழில்நுட்பக் கல்லுரியில் உயர் கல்வியையும் பயின்றார். பள்ளி ஆசிரியர் ஒருவரின் படத்தை அவருக்கு மரியாதை இல்லாதவாறு, இவருடன் பயின்ற மாணவ்ர் ஒருவர் வரைந்தார் என்றும், அவர் யார் என்று இவர் அடையாளம் காட்ட மறுத்தார் என்று இவரைக் கல்லுரியில் இருந்து வெளியேற்றினார்கள். பிறகு இவரால், பிற டச்சு சிம்னாசியம் என்னும் பள்ளிகள் எதிலும் சேர இயலவில்லை. 1865ல், சூரிக்கில் உள்ள ஃபெடரல் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து பொறியியல் பயின்றார். 1869ல் சூரிக் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ஜூலை 7,1872ல் அன்னா பேர்த்தா லூடுவிகு என்பவரை மணந்தார். இவர்களுக்குப் பிள்ளைகள் இல்லாததால் அன்னாவின் சகோதரர் மகளான யோசபீன் பேர்த்தா லூடுவிகு என்பவரைத் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.
1874ல் பிரான்சு நாட்டின் ஸ்ட்ராஸ்பேர்க் பல்கலைக்கழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட இயற்பியல் துறையில் இராபர்ட் குண்ட் அவர்களுடன் பணியில் அமர்ந்தார். 1875ல் வூர்ட்டென்பர்கு, ஓகெனைம் பல்கலைக்கழகத்திலும், 1876ல் ஸ்ட்ராஸ்போர்க் பல்கலைக்கழகத்திலும், 1879 முதல் 1885 வரை செருமானியிலுள்ள கெயிசன் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றிய பின்னர் 1888ல் வூர்ட்ஃசுபர்கு பல்கலைக்கழத்திலும் இயற்பியல் துறைத் தலைவராக இருந்தார். 1900ல் மியூனிக் பல்கலைக்கழகத்தில் இணைந்து இறுதி வரையில் அங்கு இயற்பியல் துறைத் தலைவராக இருந்தார்.
பல ஆய்வகங்களிலும் அழுத்தம் குறைந்த வளிமங்களில் எவ்வாறு மின்னிறக்கம் நிகழ்கிறது என ஆய்வுகள் நடந்து கொண்டிருந்தன. 1895 ஆண்டு வெற்றிட குழாய் உபகரணங்களின் பல்வேறு வெளி விளைவுகளை ஆய்வு செய்துகொண்டிருக்கும் போது உருவாகும் எதிர்முனை கதிர்கள் அருகே உள்ள பேரியம் பிளாடினோசயனைடு பூசப்பட்ட அட்டையானது ஒளிர்வதை கண்டார். அதைத் தொடர்ந்து அவர் இருட்டு அறையில் மேலும் சில சோதனைகளை செய்து பார்த்தபோது இந்த ஒளிர்தலுக்கு கண்ணுக்கு தெரியாத ஒரு வகை கதிர்களே காரணம் என்று அறிந்தார். எனினும் அதன் பண்புகள் தெரியாததால் அதற்கு எக்ஸ் கதிர்கள் என்று பெயரிட்டார். பின்னர் அப்பெயரே நிலைத்துவிட்டது. இதை அவர் நவம்பர் 8, 1895 அன்று கண்டறிந்தார். அதற்கு இரண்டு வாரம் கழித்து தனது மனைவியின் கையை முதன்முதலின் ஊடுகதிர் படமெடுத்தார்.
ரோண்ட்கென் மூலக் கட்டுரையான ஒரு புது வகை கதிர்கள் என்ற தலைப்பில் டிசம்பர் 28, 1895ல் வெளியிட்டார். ஜனவரி 5, 1896ல் ஒரு ஆஸ்திரிய பத்திரிகை ரோண்ட்ஜென் புதிய வகை கதிர்வீச்சு கதிர்களை கண்டறிந்ததை வெளியிட்டது. அவர் 1895 முதல் 1897 வரை எக்ஸ் கதிர்கள் பற்றி மூன்று ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். இன்று ரோண்ட்ஜென் கதிர்வீச்சு மருத்துவ சோதனையின் தந்தை எனப்படுகிறார். ரோண்ட்கென் அவரது கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமைகள் கோரியதில்லை. இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு இவருக்கு 1901ல் வழங்கப்பட்டது. அவருக்கு நோபல் பரிசு மூலம் கிடைத்த பணத்தை வூர்ட்ஃசுபர்கு பல்கலைக்கழகத்திற்கு நன்கொடையாக அளித்தார். 1896ல் ரம்ஃபோர்ட் விருது மற்றும் மட்டூச்சி விருது (Matteucci Medal) போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.
முதல் உலகப் போரின் போது ஏற்பட்ட வறுமை காரணமாக ரோண்ட்கென் முனிச் அருகே உள்ள வெய்தீம் என்ற கிராமத்தில் தன் இறுதி ஆண்டுகளை கழித்தார். ரோண்ட்கென் பிப்ரவரி 10,1923ல் குடல் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார். அவரின் இறப்பிற்கு பின்னர் அவரது விருப்பத்திற்கு ஏற்ப அவரது தனிப்பட்ட மற்றும் அனைத்து அறிவியல் உபகரணங்களும் அழிக்கப்பட்டன.
இன்று டுசெல்டார்ஃப் நகருக்கு கிழக்கே 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ரெம்ஸ்கிட்-லென்நேப்ராண்ட்கென் பகுதியில் அவர் பிறந்த வீட்டில் டச்சு ரோண்ட்கென் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. பல மொழிகளில் ரோண்ட்கெனின் பெயர் கதிரியக்க சிகிச்சை மற்றும் அதன் தயாரிப்புகளை குறிக்க “எக்ஸ்ரே” என்ற பெயருக்கு பதில் பயன்படுத்தப்படுகிறது. ஜப்பானிய மொழியில் “ராண்டோகென்”, லித்துவேனிய மொழியில் “ராண்ட்கெனோ”, செர்பிய, குரோவேசிய மற்றும் ஈப்ருவில் “ரெண்ட்கென்”, மற்றும் துருக்கிய “ரோண்ட்கென்” ஆகியவாறு குறிக்கபடுகிறது. 2004 நவம்பரில் ரோண்ட்கனியம் தனிமத்துக்கு இவரது பெயர் வைக்கப்பட்டது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரர் யூரி ககாரின் (Yuri Gagarin) நினைவு நாள் இன்று (மார்ச் 27, 1968).
யூரி காகரின் (யூரி அலெக்ஸேய்விக் காகரின்) மார்ச் 9, 1934ல் கஜட்ஸ்க், குளூசினோ, இரசியாவில் பிறந்தார். அவர் பிறந்த இடமான கஜட்ஸ்க், அவர் மறைந்த பின் ‘ககாரின்’ எனும் அவரது பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படுகிறது. நான்கு குழந்தைகளில் மூன்றாவது குழந்தை யூரி அலெக்ஸிவிக் ககாரின். மாஸ்கோவில் இருந்து ஒரு நூறு மைல் தொலைவில் இருந்த ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். இளைஞனாக இருந்தபோது, காகரின் ஒரு ரஷ்ய யாக் போர் விமானம் தனது வீட்டிற்கு அருகே, அவசரகால தரையிறக்கம் செய்யப்பட்டதை கண்டார். ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு, பறக்கும் கிளப் ஒன்றில் சேர வாய்ப்பு வர, அவர் அதை ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டார். 1955-இல் தனது முதல் தனி விமானத்தை இயக்கினார். அதிலிருந்து சில ஆண்டுகளிலேயே, அவர் ஒரு விண்வெளி வீரராக தன்னை மேம்படுத்திக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டார்.
200-க்கும் மேற்பட்ட இரசிய விமானப்படை போர் விமானிகள் போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உயர் அழுத்த நிலைமைகளையும் சமாளிக்கும் அனுபவங்கள் காரணங்களாக கருதப்பட்டன. அந்த நேரத்தில் 27 வயதான மூத்த லெட்டினன்ட் காகரின், தேர்ந்தெடுக்கப்பட்ட விமானிகளில் ஒருவராவார்.
விண்வெளியில் பயணிப்பது, அதில் நல்ல தேர்ச்சி பெற்றுவிட்டதாக கருதும் இக்காலத்திலும் நாம் எதிர்கொண்டு கொண்டிருக்கும் சிக்கல்களை பார்ப்போம். முதல் சிக்கல் உடற்கூறியல். புவிஈர்ப்பு விசைக்கு எதிராக உந்தப்படும் போது ஏற்படும் அழுத்தம் மற்றும் அதிர்வினை தாங்கும் திறன் நம் உடலுக்கு வேண்டும். நிலத்திலிருந்து விண்கலனில் கிளம்பிய சில மணித்துளிகளிலேயே தொழில்நுட்பக்கோளாறுகளால், வெடித்துச்சிதரும் அபாயம். அதைத்தாண்டி விட்டால், நமது வளிமண்டல அடுக்கினை கடக்கும்போது ‘எஸ்கேப் வெளாசிட்டியால்’ ஏற்படும் அழுத்தம், அதையும் சமாளித்துவிட்டால், ‘வேன் ஆலன் ரேடியேஷன் பெல்ட்’ எனும் ஆற்றல்மிக்க துகள் பொருள் கொண்ட புவியின் காந்தப்புல பகுதி, அதன் பின்பு வெற்றிடத்தின் வரவேற்பு என விண்வெளியில் பயணம் மேற்கொள்வது என்பது ஒவ்வொரு நிலையிலும் மறுபிறப்பு எடுப்பதைப்போன்றதாகும்.
ஏப்ரல் 12, 1961 அன்று, மாஸ்கோ நேரத்தில் காலை 9:07 மணிக்கு, ‘வோஸ்டாக் 1’ விண்கலன் சோவியத் ஏவு தளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது. உந்து விசையின் காரணமாக ஏற்படும் எடை இழப்பு ஒரு பைலட்டை எவ்வாறு பாதிக்கப் போகிறது, அதாவது விமானியால் அந்த அளவு அதிர்வு மற்றும் அழுத்தத்தில் விண்கலனை சரியாக கட்டுப்படுத்த முடியுமா? என்பது எவருக்கும் உறுதியாக தெரியாது என்பதால், விண்கலனில் அவர் இருந்த கோள வடிவ உறையினுள், தானாக இயங்கும்படி அல்லது தரைக்கட்டுப்பாட்டுத்தளம் நிலத்திலிருந்தே இயக்கும்படியாக அந்த விண்கலன் வடிவமைக்கப்பட்டிருந்தது.
ஒருவேளை விண்கலன் செல்லும்போது ஏதேனும் தவறு நேர்ந்தால், காகரின் விண்கலனை அவர் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர, தரைக்கட்டுப்பாட்டுத் தளத்திலிருந்து, தானியக்கத்தினை ரத்துசெய்யும் குறியீட்டை(Override Code) பெற அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், சோவியத் விண்வெளி திட்டத்தின் அப்போதைய தலைமை வடிவமைப்பாளர் ‘செர்கி கொரோலெவ்’ விதிமுறைகளை மீறி, காகரினிடம் அவர் விண்கலனில் ஏறும் முன்னரே அந்த குறியீட்டை கொடுத்திருந்தார். ஒருவேளை, எஞ்சினில் கோளாறு ஏற்பட்டு, சுற்றுவட்டப்பாதையில் இயற்கையாக அது சுற்ற ஆரம்பிக்க எடுக்கும் காலம் வரை காத்திருக்கும் நிலை வந்தால், காகரினுக்கு 10 நாட்களுக்கு தேவைப்படும் உணவு மற்றும் நீர் போன்றவையும் அக்கலனில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்பொருட்கள் காகரினுக்கு தேவைப்படவில்லை.
108 நிமிடங்களில், ‘வஸ்டோக் 1’ பூமியைச் ஒரு முழு சுற்று சுற்றியிருந்ததோடு, அதிகபட்சமாக புவியிலிருந்து சுமார் 203 மைல்கள் (327 கிலோமீட்டர்) உயரத்தை அடைந்திருந்தது. ககாரின் பூமிக்கு திரும்ப, புவியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும்போது, கூடுமான வரையில் சுயநினைவுடன் இருக்க முற்பட்டார். அப்போது, புவி ஈர்ப்பு விசையின் இழுவிசையானது, எட்டுமடங்கு அங்கே அதிகமாக இருப்பதை உணர்ந்தார்.
மீண்டும் பூமிக்கு திரும்பும்போது, விண்கலன் மெதுவாக இயக்கப்பட தேவைப்படும் எஞ்சின்களோ, பாதுகாப்பான முறையில் தரையிறக்கப்பட எந்த வழிமுறையினையோ ‘வோஸ்டாக் 1’ விண்கலன் கொண்டிருக்கவில்லை. தரையிலிருந்து 7 கி.மீ உயரத்தில், விண்கலனிலிருந்து வெளியேறி, காகரின் பாராச்சூட் மூலம் தரையிறங்கினார். ஃபெடெரேஷன் ஏரோநாட்டிக் இன்டர்நேஷனல்(FAI – Fédération Aéronautique Internationale) விண்வெளிவீரர், விண்கலத்துடன் தரையிறங்கினால்தான் அது ஒரு அங்கீகரிக்கப்பட்ட விண்வெளிப்பயணமாக கருதமுடியும் எனும் விதிமுறைகளைக் கொண்டிருந்தது. சோவியத்தின் தலைவர்கள் 1971 வரை காகரின் விண்கலனுடன் தரையிறங்கியதாகவே அறிவித்திருந்தனர். எது எப்படியாயினும், புவியின் சுற்றுவட்டப்பாதையிலிருந்து விடுபட்டு, விண்வெளியில் பயணம் செய்த முதல் நபர் காகரின் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
காகரின், விண்வெளியிலிருந்து திரும்பியதும் உலகமே கொண்டாடும் நாயகனாக புகழ்பெற்றார். அவரை, நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மக்கள் ஆரவாரத்துடனும் மகிழ்ச்சியுடனும் மாஸ்க்கோவின் ரெட் ஸ்கொயர் இடத்தில் வரவேற்றனர். சோவியத்தின் இந்த சாதனையை உலகமறிய, காகரின் உலகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் இரசியா திரும்பியதும், மிகப்பெரும் பதவியான, சோவியத் யூனியனின் துணை உச்ச சோவியத் பதவி வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. விண்வெளிவீரர்கள் பிரிவின் தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். பொதுமக்களிடையே நன்கு அறியப்பட்ட ஒருவராக காகரின் இருந்தமையால், அவர் உயிர் மிகவும் முக்கியம் எனக்கருதிய சோவியத் அரசு, அவரை மீண்டும் விண்வெளிக்கு அனுப்புவதை விரும்பவில்லை. ஆனால், அவர் விமானப்படையில் சோதனை விமானங்களை உருவாக்கும் பணியையும் செய்துகொண்டிருந்தார்.
ககாரின் விண்வெளிப் பயணம் செய்த 12 ஏப்ரல் தேதி, ஒரு சிறப்பு தேதியாக நினைவுகூரப்படுகிறது. 1962 ஆம் ஆண்டு முதல் இந்தத் நாள் சோவியத் ஒன்றியத்திலும் பின்னர் ரஷ்யாவிலும் மற்றும் பிற சோவியத் ஒன்றியத்தில்லிருந்து பிரிந்து சென்ற சில நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
2011 ஆம் ஆண்டில் இந்த நாள் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதன் விண்வெளி விமானத்தில் பயணம் செயத சர்வதேச தினமாக அறிவிக்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு முதல், யூரி இரவு என்று ஒரு சர்வதேச தினம் கொண்டாடப்படுகிறது, ஒவ்வொரு ஏப்ரல் 12 ம் தேதி விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல் கல் கடந்த நாளாக நினைவுகூரப்படுகிறது. பூமியில் பல கட்டிடங்கள் மற்றும் இதர தளங்கள் ககாரின் பெயரில் பெயரிடப்பட்டுள்ளன. 1969 ஆம் ஆண்டில் நட்சத்திர நகரத்தில் உள்ள விண்வெளி வீரர்களின் பயிற்சி மையம் ககாரின் பெயரால் பெயரிடப்பட்டது. பைக்கானூர் விண்கலம் ஏவுதளம் ககாரின் பெயரால் ககாரின் துவக்கம் என்று அழைக்கப்படுகிறது. சோவியத் ஒன்றியத்தின் காலத்தில் உக்ரைன்னில் உள்ள செவஸ்டோபல் நகரத்தின் பெயர் ககாரின் ஞாபகமாக பெயரிடப்பட்டது. விமானப்படை அகாடமி (கழகம்) 1968 ஆம் ஆண்டில் ககாரின் விமானப்படை அகாடமி என மறுபெயரிடப்பட்டது.
ககாரின்னை போற்றும் விதமாக விண்வெளி வீரர்களாலும், வானியலாளர்களாலும் அவரது பெயர் நிலவில் உள்ள ஒரு பள்ளத்தாக்கிற்கு வைக்கப்பட்டுள்ளது. 1969 ஆம் ஆண்டில் அமெரிக்க விண்வெளித் திட்டத்தின் அப்பல்லோ 11 விண்கலம் மூலம் நிலவிற்குப் பயண்ம் செயத விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்டிரின் ஆகியோரும் மற்றும் சக விண்வெளி வீரர்ரான விளாடிமிர் கொமரொவ் ககாரினின் நினைவாக பதக்கங்களை கொண்ட ஒரு நினைவு பையை நிலவின் மேற்பரப்பில் விட்டு சென்றுள்ளனர். 1971 ஆம் ஆண்டில், அப்போலோ 15 விண்கல விண்வெளி வீரர்கள் டேவிட் ஸ்காட் மற்றும் ஜேம்ஸ் இர்வின் மறைந்த விண்வெளி வீரர்களின் பட்டியலை தாங்கள் தரையிறங்கும் இடத்தில் விட்டுச் சென்றனர். இந்தப் பட்டியலில் அனைத்து அமெரிக்க விண்வெளி வீரர்கள் மற்றும் சோவியத் விண்வெளி வீரர்கள் விண்வெளி பந்தயத்தில் இறந்தவர்களின் பெயர்கள் உள்ளது. இதில் யூரி ககாரின் 14வது நபராக பட்டியலிடப்பட்டார்.
ககாரின்னை போற்றும் விதமாக அவரது உருவச் சிலைகள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று 2011 ஆம் ஆண்டில் இலண்டனில் உள்ள அட்மிரால்டி வளைவு அருகில் (இப்போது கிரீன்விச்சு), இலண்டன் வர்த்தக மையத்தில் இறுதியில் யூரி ககாரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. 2012 இல், அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் இல் உள்ள தெற்கு வேய்சைட் டிரைவில் நாசாவின் அசல் விண்வெளி தலைமையகத்தின் தளத்தில் ஒரு சிலை திறக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் கலைஞர் மற்றும் விண்வெளி வீரர்ரான அலெக்ஸ்சி லியோனோவ் ஆல் செய்யப்பட்ட சிற்பம் ஹூஸ்டனுக்கு பல்வேறு ரஷ்ய அமைப்புகளால் வழங்கப்பட்டது. இந்த சிலை திறப்பு விழாவில் ஹூஸ்டன் மேயர் அன்னிசி பார்கர் , நாசா நிர்வாகி சார்லஸ் போல்ன் மற்றும் ரஷ்ய தூதர் செர்ஜி சியோக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மார்ச் 27, 1968 மிக்-15 எனும் ஜெட் போர் விமானத்தினை சோதனை ஓட்டம் செய்யும்போது, சக விமானியான விளாடிமிர் செர்யோகின் எனும் ஒருவருடன் சேர்ந்து காகரின் உயிரிழந்தார். அந்த சமயத்தில், அவருக்கு இரு குழந்தைகள் இருந்தன. பறவை அல்லது வேறு ஏதோ ஒன்றின் மீது மோதலினை தவிர்க்கும் பொருட்டு, திடீரென விமானத்தினை தவறுதலாக இயக்க, ஜெட் விமானம் தரையில் மோதி விபத்திற்குள்ளானதாக, விபத்தினை விசாரித்த ஸ்டேட் கமிஷன் அப்போது கூறியது. புகழின் உச்சிக்கு சென்ற ஏழே ஆண்டுகளில், தான் இறக்கவிருப்பதை காகரின் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். இந்த கால மனித இனம் உள்ள வரை அவரது சாதனை என்றும் நினைவுபடுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும்.
Source By: Wikipedia.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மூலக்கூறு கட்டமைப்பு குறித்து ஆராய்ந்த, வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் அறிவியலாளர் ஓட்டோ வாலெக் (Otto Wallach) பிறந்த தினம் இன்று (மார்ச் 27, 1847).
ஓட்டோ வாலெக் ரஷ்யாவின் கோனிஸ்பர்க் நகரில் யூதக் குடும்பத்தில் மார்ச் 27, 1847ல் பிறந்தார். தந்தை, அரசு ஊழியர். போட்ஸ்டான் என்ற இடத்தில் ஜிம்னாசியம் பள்ளியில் பயின்றார். அப்போது பள்ளிகளில் இலக்கியம், கலை வரலாறு தான் பொதுவாக கற்றுத்தரப்படும். இவை இரண்டிலும் வாலெக் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். வீட்டில் தனிப்பட்ட முறையில் வேதியியல் பயின்றார். சுய ஆர்வத்தோடு வீட்டில் சில வேதியியல் பரிசோதனைகளையும் மேற்கொண்டார்.1867 ஆம் ஆண்டு கோட்டிங்கன், பெர்லின் பல்கலைக்கழகங்களில் வேதியியல் பயின்றார். பின்னர் கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் ‘டொலுயீன் ஐசோமெர்’ பற்றி ஆராய்ந்து 22-வது வயதில் முனைவர் பட்டம் பெற்றார். அரசு அழைப்பின்பேரில் ஃபிராங்கோ – பிரஷ்யன் போரில் கலந்து கொண்டார். போர் முடிந்த பிறகு, பெர்லினில் தங்க முடிவு செய்து, அங்குள்ள தொழிற்சாலையில் பணியாற்றத் தொடங்கினார். உடல்நிலை ஒத்துழைக்காததால், பான் நகருக்குச் சென்றார்.
முதலில் பான் பல்கலைக்கழகத்தின் கரிமப் பரிசோதனைக் கூடத்தில் உதவியாளராகச் சேர்ந்தார். பிறகு அங்கு விரிவுரையாளர், பேராசிரியராகவும் பணியாற்றினார். இங்கு சுமார் 19 ஆண்டுகள் பணியாற்றினார். முதலில் மருந்தியல் துறை பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அத்துறையில் தன்னை மெருகேற்றிக்கொள்வதற்காக, பல நூல்களைப் பயின்றார், பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டார். அமில அமைடுகளில் பாஸ்பரஸ் பென்டாகுளோரைடின் செயல்பாடுகள் மூலம் இமினோகுளோரைட்களை கண்டறிந்தார். கல்லூரியில் இவரது வழிகாட்டியாக இருந்த அறிவியலாளர் கூறியதன் பேரில், எண்ணெய்களில் உள்ள டர்பீன்ஸ் குறித்து ஆய்வு செய்தார். இவற்றின் மூலக்கூறு கட்டமைப்பு குறித்து ஆராய்ந்தார். உருகுநிலை ஒப்பீடு, கலவைகளின் அளவீடு உள்ளிட்ட பல முறைகளைப் பயன்படுத்தி இந்த ஆய்வை மேற்கொண்டார். டர்பீன்களின் எதிர்வினைகளை ஆராய்ந்தார். தன் ஆய்வுகள் குறித்து 600 பக்கங்கள் கொண்ட ‘டர்பீன் அண்ட் கேம்பர்’ என்ற நூலை எழுதினார். தொடர்ந்து பல ஆய்வுகளை மேற்கொண்டார். ரசாயனக் கோட்பாட்டு ஆராய்ச்சிகளிலும் முக்கியப் பங்காற்றினார்.
கோட்டிங்கன் வேதியியல் நிறுவன இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். வாலெக் விதி, வாலெக் சிதைவு, லுகார்ட்-வாலெக் வினை, வாலெக் மறுசீரமைப்பு ஆகியவை இவரது பெயரால் குறிக்கப்படுகின்றன. டர்பன்டைன் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். அத்தியாவசிய எண்ணெய்களைப் பயன்படுத்தி வாசனைப் பொருட்கள், உணவு தயாரிக்கும் ரசாயன தொழில் துறை இதன் மூலம் பலனடைந்தது. கொழுப்புவட்ட கலவை எனப்படும் அலிசைக்ளிக் கூட்டுப்பொருள் ஆராய்ச்சிகளுக்காகவும் கரிமவேதியியலில் இவரது பங்களிப்புக்காகவும் 1910ல் இவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1912ல் டேவி மெடல் விருது பெற்றார்.
ஜெர்மன் வேதியியல் கழகத்தில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். மான்செஸ்டர், லீப்சிக் உட்பட பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின. இறுதிவரை பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தார். ஜெர்மனியின் குறிப்பிடத்தக்க வேதியியல் அறிஞர்களில் ஒருவரான ஓட்டோ வாலெக் பிப்ரவரி 26, 1931ல் தனது 84வது வயதில் கோட்டினென், ஜெர்மனியில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகத்தின் தலைசிறந்த விஞ்ஞானி, பத்ம பூசண் விருது பெற்ற ரஞ்சன் ராய் டேனியல் நினைவு நாள் இன்று (மார்ச் 27, 2005).
ரஞ்சன் ராய் டேனியல் கன்னியாகுமாி மாவட்டத்தில் நாகர்கோவிலில் ஆகஸ்ட் 11, 1923ல் பிறந்தார். இவர் தனது தொடக்கப்பள்ளியை ஸ்காட் கிறிஸ்தவ பள்ளியில் பயின்றார். ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி, சென்னை லயோலா கல்லூரி போன்ற கல்லூரிகளில் இளநிலை இயற்பியல் பயின்றார். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர் சி வி ராமன் அவர்களின் தாக்கத்தால் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் முதுகலை இயற்பியல் பயின்றார். மேலும் டாட்டா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலாஜி ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டார்.நோபல் பரிசு பெற்ற சீன விஞ்ஞானிகள் இணைந்து ஆராய்ச்சி மேற்கொண்டு காஸ்மிக் கதிர்கள் போன்ற அறிவியல் துறைகளில் முக்கிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி உள்ளார். இந்தியா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தில் விஞ்ஞானியாக பணிக்கு சேர்ந்த இவர் பிரபஞ்ச இயற்பியல் மற்றும் விண்வெளி இயற்பியல் துறைகளில் பணி புரிந்தார். 1976 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்த இந்திரா காந்தி ஆலோசகராகவும் பணியாற்றினார். ஆராய்ச்சியின் தந்தை என்று புகழப்படும் ஹோமி ஜஹாங்கீர் பாபா அவர்களுடன் இணைந்து பிரபஞ்சத்தில் கதிாியக்கக் கதிர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக ஆலோசகர், உலக நாடுகளுக்கான விண்வெளி ஆராய்ச்சி ஆலோசகர் போன்ற பதவிகளை வகித்துள்ளார்காஸ்மிக் கதிர்கள் குறித்த அடிப்படை அறிவியல் மற்றும் பொறியியலுக்கான பங்களிப்பிற்காக 1992ம் ஆண்டில் இந்திய அரசு அவருக்குப் பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது. தமிழகத்தின் தலைசிறந்த விஞ்ஞானி ரஞ்சன் ராய் டேனியல் மார்ச் 27, 2005ல் தனது 81வது வயதில் நாகர்கோவிலில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கனிமவியலின் தந்தை, ஜெர்மன் அறிவியல் அறிஞர் சார்சியஸ் அகிரிகோலா பிறந்த நாள் இன்று (மார்ச் 24, 1494).
சார்சியஸ் அகிரிகோலா (Georgius Agricola) மார்ச் 24, 1494 ஜெர்மனியில் பிறந்தார். சார்சியஸ் அகிரிகோலா என்ற பெயர் “சார்ச் பாயர்” என்ற இவரது இயற்பெயரின் இலத்தீன் வடிவமாகும். 1514ல் இருந்து 1518 வரை இவர் பழஞ்செம்மொழி இலக்கியம், தத்துவம் மொழியியல், ஆகிய பாடங்களை இலெப்சிக் பல்கலைக்கழகத்தில் பயின்றார். அப்போது அந்த காலத்து வழக்கப்படி அவர் தமது பெயரை இலத்தீன் வடிவில் அமைத்துக் கொண்டார். 1518ல் இருந்து 1522 வரை சுவிக்கா என்னும் பள்ளியில் இலத்தீனையும், கிரேக்கப் பாடங்களையும் கற்றார். பின்னர் அவர் இலெப்சிக்குக்குத் திரும்பி மருத்துவம் படிக்க தொடங்கினார். ஆனால் அங்கு நடந்த இறையியல் சண்டைகளால் பல்கலைக் கழகம் சரிவர நடக்காததால் அவரால் தொடர்ந்து அப்படிப்பை மேற்கொள்ள முடியவில்லை. காலம் முழுவதும் கத்தோலிக்கக் கிறித்துவராக இருந்த இவர் நல்லதொரு சூழ்நிலை நிலவிய இத்தாலி நாட்டுக்கு 1523ல் சென்றடைந்தார். அங்கு இவர் மருத்துவம், இயற்கை அறிவியல், தத்துவம் ஆகிய பாடங்களை பலோக்னா, பாடுவா ஆகிய இடங்களில் கற்றார். வெனிஸ் நகரத்தில் தமது மருத்துவ ஆய்வகப் படிப்புகளை முடித்தார்.
வெனிஸ் நகரத்தில் அல்டைன் அச்சகத்தில் இரண்டு ஆண்டுகள் பணி புரிந்து “காலென்” என்பவரின் மருத்துவ நூல் தொகுப்பைத் தயாரித்தார். இது 1525ல் வெளியிடப்பட்டது. இந்த பணியில் இவர் தாமஸ் மூர் மற்றும் அவருடைய செயலாளர் ஆக இருந்த சான் கிளமண்ட் என்பவருடன் இணைந்து செயல்பட்டார். மூரினுடைய “கற்பனை வாதம்” (உட்டோப்பியா) என்ற நுால் இவரை பெரிதும் கவர்ந்திருக்க வேண்டும். இது இவர் சாக்சன் சுரங்க மாவட்டத்தில் இருந்த போது சட்டத்தையும் சமூக வழக்கங்களையும் படிக்க உதவியது. உடலியலில் மாபெரும் அறிஞரான எராஸ்மஸைச் சந்தித்து அவரது நண்பர் ஆனார். ஏராஸ்மாஸ் அக்ரிகோலாவைப் பல நுால்கள் எழுதும்படி தூண்டிவிட்டார். இவர் ஏராஸ்மஸின் நுால்கள் பலவற்றை வெளியிட்டார். அக்ரிகோலாவின் கனிம இயல் நூலான பெர்மான்னஸ் என்ற நுாலுக்கு ஏராஸ்மஸ் முன்னுரை எழுதினார். அக்ரிகோலா, மூரும் பிற மூன்று அறிஞர்களுடன் மட்டுமே இம்மதிப்பைப் பெற்றார்.
1526ல் இவர் சாக்சனுக்குத் திரும்பி அங்கு 1527 முதல் 1533 வரை ஜோக்கிம்ஸ்தால் என்ற நகரில் நகர உடலியல் மருத்துவராகப் பணி புரிந்தார். இந்த நகரம் ஐரோப்பாவில் உள்ள உலோகக் கனிமங்கள் செரிந்த சுரங்கங்கள் நிறைந்த ஒரு மாவட்டத்தில் உள்ளது. கனிமங்களில் இருந்து புதிய மருந்தினங்களைக் கண்டறிய அந்த மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு சுரங்கங்களுக்கும் உருக்காலைகளுக்கும் சென்று நன்கு கல்வி கற்ற சுரங்க இயலாளர்களுடனும் பழகினார். சுரங்க இயலின் பழைய நுாலாசிரியர் எழுதிய நுால்களை எல்லாம் கற்றறிந்தார். இந்தப் பழக்கம் இவருடைய பிற்கால வாழ்க்கையையும், நுால்களையும் உருவாக்க உதவியது. பெர்மான்னஸ், சிவேடிரி மெட்டாலியா என்ற இவருடைய நுால்களில் இந்த அறிவு சுடர்விட்டுத் தெறிப்பதைக் காணலாம்.
இவருடைய நுாலில் சுரங்கத் தொழில் நோய்கள் பற்றிய பல குறிப்புகளைக் காணலாம். இவர் மிகத் தலைசிறந்த உடலியல் மருத்துவராகச் செயல்பட்டதால் 1532ல் செம்நிட்ஸ் நகரின் நகர உடலியல் மருத்துவர் ஆகி வாழ்நாள் முழுவதும் பணிபுரிந்தார். டிரிமெட்டாலியா 12 பகுதிகள் (சுரங்க இயல், உலோக இயல், புவி பொதி இயல் பற்றியவை), டிநேச்சுரா ஃபாசிலியம் பத்து தொகுதிகள் (கனிமவியல் பற்றியன), டிஆர்டுயட் காளிஸ் சப்டிடரான்யி ஓரம் 5 தொகுதிகள் (புவிபொதியியல் பற்றியன) போன்ற புகழ் பெற்ற நுால்களை எழுதினார்.
இவர்தம் 52வது வயதில் பொது வாழ்க்கையில் பர்காவாக (நகரமன்ற உறுப்பினர்) ஈடுபடத் தொடங்கினார். பின்னர் செம்நிட்ஸ் பர்கோமாஸ்டராக (நகரத் தலைவர்) உயர்ந்தார். அமெரிக்கச் சுரங்கப் பொறியாளர் ஹெர்பர்ட் ஹீவர் (பின்னர் அமெரிக்க ஒன்றிய நாட்டுக் குடியரசுத் தலைவர் ஆனவர்) இவருடைய டிரிமெட்டாலியா என்ற நுாலை 1912ல் மொழி பெயர்த்தார். அறிவியலின் செய்முறை அணுகுமுறையைக் கண்டுபிடித்த முன்னோடி அக்ரிகோலாதான் என இவர் தமது நுாலில் பாராட்டி எழுதி உள்ளார். இயற்கை அறிவியலார்களில் முன்னோடியாகத் திகழ்ந்த அகிரிகோலா நவம்பர் 21, 1555ல் ஜெர்மனியில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் கிருஸ்துவ மருத்துவ கல்லூரியில் 112 -வது செவிலியர் பட்டமளிப்பு விழா 306 பேர் பட்டம் பெற்றனர்.
வேலூர் சிஎம்சி மருத்துவ கல்லூரி பாகாயம் ஸ்கடர் ஆடிடோரீயத்தில் நர்சுகல்லூரியில் 112 -வது பட்டமளிப்பு விழா நடந்தது.சிறப்பு விருந்தினராக இந்திய நர்சிங் கவுன்சில், புதுடெல்லியின் தலைவரும் ஆன டாக்டர் திலீப்குமார் மொத்தம் 306 பேருக்கு நர்ஸ் பட்டங்களை வழங்கினார்.மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஜே.வி.பீட்டர் வரவேற்றார். முதல்வர் டாக்டர் சாலமன், செவிலியர் கல்லூரியின் டீன் டாக்டர் வத்சலாசதன், கல்லூரி இணைகண்காணிப்பாளர் ஜெயலிண்டா கிறிஸ்டோபர் உள்ளிட்ட பலர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இயற்கணித மாறுபாடுகள் மற்றும் எண்ணில் கோட்பாடுகளை அறிமுகப்படுத்திய ஜெர்மானிய கணிதவியலாளர் அமாலி எம்மி நோய்தர் பிறந்த தினம் இன்று (மார்ச் 23, 1882).
அமாலி எம்மி நோய்தர் (Amaliee Emmy Noether) மார்ச் 23, 1882ல் ஜெர்மனியில் பிறந்தார். தந்தை மேக்ஸ் நோய்தர் ஜெர்மனியில் மொத்த வியாபாரிகளின் குடும்பத்திலிருந்து வந்தவர். நோய்தர் 14 வயதில், அவர் போலியோவால் முடங்கிவிட்டார். பெரும்பாலும் சுய கற்பித்த அவருக்கு 1868ம் ஆண்டில் ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. அங்கு ஏழு ஆண்டுகள் கற்பித்தபின், பவேரிய நகரமான எர்லாங்கனில் ஒரு இடத்தைப் பிடித்தார். ஒரு பெண்ணாக, நோய்தர் மிகவும் விரும்பப்பட்டார். அவர் புத்திசாலி மற்றும் நட்பாக அறியப்பட்டாலும் அவர் கல்வி ரீதியாக தனித்து நிற்கவில்லை. அவள் குழந்தைப் பருவத்தில் அருகில் இருந்தாள் மற்றும் ஒரு சிறிய உதட்டோடு பேசினாள். ஒரு குடும்ப நண்பர் ஒரு கதையை ஒரு சிறுவர் விருந்தில் ஒரு மூளை டீஸரை விரைவாக தீர்ப்பது பற்றி விவரித்தார். அந்த சிறு வயதிலேயே தர்க்கரீதியான புத்திசாலித்தனத்தைக் காட்டினார். அக்கால பெரும்பாலான பெண்களைப் போலவே சமைக்கவும் சுத்தம் செய்யவும் அவள் கற்றுக் கொண்டாள். அவள் பியானோ பாடங்களையும் எடுத்தாள். எல்லாங்கென் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் கல்வி பெற்ற நோய்தர் கோட்டிங்கென் பல்கலைக்கழகத்தில் கல்வியாளராகப் பணியாற்றினார்.
பிரபலமான சுருக்க இயற்கணிதம் என்ற நூலை எழுதியவர். அவரது சுருக்க இயற்கணித பகுதிக்காக பெரும்பான்மையான நேரத்தை செலவிட்ட மிக முக்கியமான கணிதவியலாளர்களில் ஒருவர். அவர் இயற்கணித மாறுபாடுகள் மற்றும் எண்ணில் கோட்பாடுகளை அறிமுகப்படுத்தினார். நோட்ஹெரின் தாளில், தியரி ஆஃப் ஐடில்ஸ் இன் ரிங்க் களங்கள், அவர் தனது கருத்துக்களை வழங்கினார்.அவரின் “பரிமாற்ற விதி” இயற்கணிதத்தின் ஒரு சுருக்கமான துணை பகுதியாகும். 1908 முதல் 1919 வரை அவர் இயற்கணித மாற்றமிலிகள் குறித்தும் எண் புலங்கள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டார். அவரது நோய்தரின் தேற்றம் “தற்கால இயற்பியல் மேம்பாடிற்கு மிகவும் துணைபுரிந்த மிக முதன்மையான கணிதத் தேற்றங்களில் ஒன்றாக” கருதப்படுகின்றது. 1920 முதல் 1926 வரை அவர் பரிமாற்று வளையங்களில் சீர்மங்கள் குறித்த கருதுகோளை உருவாக்கினார்.
1927–35 காலகட்டத்தில் பரிமாற்ற மற்ற வளையங்களைக் குறித்தும் அதிபர சிக்கலெண்கள் குறித்தும் ஆய்வுக்கட்டுரைகள் எழுதினார். தவிரவும் பிற கணிதவியலாளர்களுக்கும் அவர்களது ஆய்விற்கு பல கருத்துருக்களை வழங்கி பல ஆய்வு கட்டுரைகளுக்கு வழிகாட்டியுள்ளார். ஏப்ரல் 1935ல் மருத்துவர்கள் நோய்தரின் இடுப்பில் ஒரு கட்டியைக் கண்டுபிடித்தனர். அறுவை சிகிச்சையிலிருந்து ஏற்படும் சிக்கல்களைப் பற்றி கவலைப்பட்ட அவர்கள் முதலில் இரண்டு நாட்கள் படுக்கை ஓய்வெடுக்க உத்தரவிட்டனர். மூன்று நாட்களுக்கு அவள் சாதாரணமாக குணமடைவதாகத் தோன்றினாள். ஏப்ரல் 14 அன்று அவர் மயக்கமடைந்தார், அவரது வெப்பநிலை 109 ° F (42.8 ° C) ஆக உயர்ந்தது. வெப்ப மையங்கள் அமைந்திருக்க வேண்டிய மூளையின் அடிப்பகுதியைத் தாக்கியது. எம்மி நோய்தர் ஏப்ரல் 14, 1935ல் தனது 53வது அகவையில் அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
துகள்களின் இருமைப் பண்பைப் பற்றிய எதிர்மின்னிகளின் அலை இயல்பினைக் கண்டுபிடித்ததற்காக, இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற லூயிஸ் டி ப்ரோக்லி லூயிஸ் டி ப்ரோக்லி நினைவு நாள் இன்று ( மார்ச் 19, 1987).
லூயிஸ் டி ப்ரோக்லி (Louis de Broglie) ஆகஸ்ட் 15, 1892ல் பிரான்ஸ்சில் பிறந்தார். ப்ரோக்லியின் விக்டரின் இளைய மகனான சீன்-மரைடைம், டிப்பேவில் ஒரு உன்னத குடும்பத்தில் பிறந்தார். டி ப்ரோக்லி மனிதநேயத்தில் ஒரு தொழிலை நோக்கமாகக் கொண்டிருந்தார், மேலும் வரலாற்றில் தனது முதல் பட்டத்தைப் பெற்றார். பின்னர் அவர் கணிதம் மற்றும் இயற்பியல் நோக்கி தனது கவனத்தைத் திருப்பி இயற்பியலில் பட்டம் பெற்றார். 1914 இல் முதல் உலகப் போர் வெடித்தவுடன், வானொலி தகவல்தொடர்புகளின் வளர்ச்சியில் இராணுவத்திற்கு தனது சேவைகளை வழங்கினார்.இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளில், அலை–துகள் இருமை அல்லது அலைகளின் இருமை நிலை (wave–particle duality) என்றால் எல்லாப் பொருட்களும் (அதாவது அந்த பொருட்களில் உள்ள எல்லா எதிர்மின்னிகளும்) அலை போன்ற தன்மையும் , துகள் போன்ற தன்மையும் கொண்டிருப்பன என்ற கருத்துரு ஆகும். குவாண்டம் பொறிமுறையின் மையக் கருத்துருவான இது, அலை, துகள் என்னும் கருத்துருக்களால் முழுமையாக விளக்கப்பட முடியாத பொருள்களின் நடத்தைகளை விளக்க முயல்கிறது. குவாண்டம் பொறிமுறையின் பல்வேறு விளக்கங்கள் இந்த முரண்பாட்டுத் தோற்றத் தன்மையை தெளிவாக்க முயல்கின்றன.இருமைத் தன்மை என்னும் எண்ணக்கரு, ஒளி, பொருள் என்பன தொடர்பாக 1600 களில், கிறிஸ்டியன் ஹூய்கென், ஐசாக் நியூட்டன் ஆகியோரால் ஒன்றுக்கொன்று எதிரான இரு கொள்கைகள் முன்வைக்கப் பட்டபோது இடம்பெற்ற விவாதங்களின் அடிப்படையில் உருவானது. அல்பர்ட் ஐன்ஸ்டீன், லூயிஸ் புரோக்லீ ஆகியோரின் ஆராய்ச்சிகளின் விளைவாக தற்கால அறிவியல் கொள்கைகள் எல்லாப் பொருட்களும், அலை, துகள் இயல்புகள் இரண்டையும் கொண்டுள்ளன என ஏற்றுக்கொள்கின்றன. இத் தோற்றப்பாடுகள் அடிப்படைத் துகள்களுக்கு மட்டுமன்றி, அணுக்கள், மூலக்கூறுகள் போன்ற கூட்டுத் துகள்களுக்கும் பொருந்துவதாக அறியப்பட்டுள்ளது.லூயிஸ் டி ப்ரோக்லி 1924ஆம் ஆண்டு தனது முனைவர் பட்டத்திற்காக எதிர்மின்னிகளின் அலை இயல்புகளை பற்றி ஆய்வு செய்தார். அலை-துகள்களின் இருமைப் பண்பைப் பற்றிய தனது கருத்தினை முதன்முதலாக பிரெஞ்சு அகாதெமியில் டி ப்ரோக்லி கருதுகோள் மூலம் கோடிட்டுக் காட்டினார். ஒளி மட்டுமல்லாமல், அனைத்து பருப்பொருள்களும், அலை-போன்ற தன்மை கொண்டுள்ளன, ஒரு குறிபிட்ட “m” திணிவு கொண்ட துகள், ஒரு குறிப்பிட்ட திசை வேகம் “v” இல் சென்றால், “λ” என்ற அலைநீளம் கொண்ட ஓர் அலை போன்று நடந்துகொள்ளும் என்று கூறினார். ( λ=h/p; p – உந்தம், h – பிளாங்க்கு மாறிலி)பொருள்களின் அலைகள் (matter waves) டி புறாக்ளி அலைகள் என்றும் இதன் அலைநீளம் டி ப்ரோக்லி அலைநீளம் என்றும் அழைக்கப்படுகிறது. இதுவே பொருள்களின் அலைக் கோட்பாடிற்கு முதல் படியாக அமைந்தது. டே பிராலியின் கோட்பாட்டிற்காக அவருக்கு 1929ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1952ல் கலிங்கா விருது வழங்கப்பட்டது. டி ப்ரோக்லி மார்ச் 19, 1987ல் தனது 94வது அகவையில் லவ்சினீஸ்ல் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல் : இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
துகள்களின் இருமைப் பண்பைப் பற்றிய எதிர்மின்னிகளின் அலை இயல்பினைக் கண்டுபிடித்ததற்காக, இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற லூயிஸ் டி ப்ரோக்லி லூயிஸ் டி ப்ரோக்லி நினைவு நாள் இன்று ( மார்ச் 19, 1987).
லூயிஸ் டி ப்ரோக்லி (Louis de Broglie) ஆகஸ்ட் 15, 1892ல் பிரான்ஸ்சில் பிறந்தார். ப்ரோக்லியின் விக்டரின் இளைய மகனான சீன்-மரைடைம், டிப்பேவில் ஒரு உன்னத குடும்பத்தில் பிறந்தார். டி ப்ரோக்லி மனிதநேயத்தில் ஒரு தொழிலை நோக்கமாகக் கொண்டிருந்தார், மேலும் வரலாற்றில் தனது முதல் பட்டத்தைப் பெற்றார். பின்னர் அவர் கணிதம் மற்றும் இயற்பியல் நோக்கி தனது கவனத்தைத் திருப்பி இயற்பியலில் பட்டம் பெற்றார். 1914 இல் முதல் உலகப் போர் வெடித்தவுடன், வானொலி தகவல்தொடர்புகளின் வளர்ச்சியில் இராணுவத்திற்கு தனது சேவைகளை வழங்கினார்.இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளில், அலை–துகள் இருமை அல்லது அலைகளின் இருமை நிலை (wave–particle duality) என்றால் எல்லாப் பொருட்களும் (அதாவது அந்த பொருட்களில் உள்ள எல்லா எதிர்மின்னிகளும்) அலை போன்ற தன்மையும் , துகள் போன்ற தன்மையும் கொண்டிருப்பன என்ற கருத்துரு ஆகும். குவாண்டம் பொறிமுறையின் மையக் கருத்துருவான இது, அலை, துகள் என்னும் கருத்துருக்களால் முழுமையாக விளக்கப்பட முடியாத பொருள்களின் நடத்தைகளை விளக்க முயல்கிறது. குவாண்டம் பொறிமுறையின் பல்வேறு விளக்கங்கள் இந்த முரண்பாட்டுத் தோற்றத் தன்மையை தெளிவாக்க முயல்கின்றன.இருமைத் தன்மை என்னும் எண்ணக்கரு, ஒளி, பொருள் என்பன தொடர்பாக 1600 களில், கிறிஸ்டியன் ஹூய்கென், ஐசாக் நியூட்டன் ஆகியோரால் ஒன்றுக்கொன்று எதிரான இரு கொள்கைகள் முன்வைக்கப் பட்டபோது இடம்பெற்ற விவாதங்களின் அடிப்படையில் உருவானது. அல்பர்ட் ஐன்ஸ்டீன், லூயிஸ் புரோக்லீ ஆகியோரின் ஆராய்ச்சிகளின் விளைவாக தற்கால அறிவியல் கொள்கைகள் எல்லாப் பொருட்களும், அலை, துகள் இயல்புகள் இரண்டையும் கொண்டுள்ளன என ஏற்றுக்கொள்கின்றன. இத் தோற்றப்பாடுகள் அடிப்படைத் துகள்களுக்கு மட்டுமன்றி, அணுக்கள், மூலக்கூறுகள் போன்ற கூட்டுத் துகள்களுக்கும் பொருந்துவதாக அறியப்பட்டுள்ளது.லூயிஸ் டி ப்ரோக்லி 1924ஆம் ஆண்டு தனது முனைவர் பட்டத்திற்காக எதிர்மின்னிகளின் அலை இயல்புகளை பற்றி ஆய்வு செய்தார். அலை-துகள்களின் இருமைப் பண்பைப் பற்றிய தனது கருத்தினை முதன்முதலாக பிரெஞ்சு அகாதெமியில் டி ப்ரோக்லி கருதுகோள் மூலம் கோடிட்டுக் காட்டினார். ஒளி மட்டுமல்லாமல், அனைத்து பருப்பொருள்களும், அலை-போன்ற தன்மை கொண்டுள்ளன, ஒரு குறிபிட்ட “m” திணிவு கொண்ட துகள், ஒரு குறிப்பிட்ட திசை வேகம் “v” இல் சென்றால், “λ” என்ற அலைநீளம் கொண்ட ஓர் அலை போன்று நடந்துகொள்ளும் என்று கூறினார். ( λ=h/p; p – உந்தம், h – பிளாங்க்கு மாறிலி)பொருள்களின் அலைகள் (matter waves) டி புறாக்ளி அலைகள் என்றும் இதன் அலைநீளம் டி ப்ரோக்லி அலைநீளம் என்றும் அழைக்கப்படுகிறது. இதுவே பொருள்களின் அலைக் கோட்பாடிற்கு முதல் படியாக அமைந்தது. டே பிராலியின் கோட்பாட்டிற்காக அவருக்கு 1929ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1952ல் கலிங்கா விருது வழங்கப்பட்டது. டி ப்ரோக்லி மார்ச் 19, 1987ல் தனது 94வது அகவையில் லவ்சினீஸ்ல் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல் : இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
போரியம், ஆசியம், மெய்ட்னீரியம், டார்ம்சிட்டாட்டியம், இரோயன்ட்கெனியம், கோப்பர்நீசியம் போன்ற தனிமங்களைக் கண்டறிந்த ஜெர்மன் இயற்பியலாளர் காட்பிரீடு மூன்சென்பெர்கு பிறந்தநாள் இன்று (மார்ச் 17, 1940).
காட்பிரீடு மூன்சென்பெர்கு (Gottfried Münzenberg) 1940 மார்ச் 17,1940ல் ஜெர்மனியின் சட்சோனி மாகாணத்தில் உள்ள நார்தாவுசென் நகரில் சீர்திருத்தத் திருச்சபை அமைச்சர்கள் குடும்பத்தில், பாட்டர் எயின்சு, எலன் மூன்சென்பெர்கு ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். தன் வாழ்க்கை முழுவதும் இவர் இறையியல், மெய்யியல் கோட்பாடுகளில் இயற்பியலின் தாக்கம் குறித்து ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இவர் செருமனியின் கெய்சன் நகரிலுள்ள சட்டசு-இலீபிகுப் பல்கலைக்கழகம், இன்சுபிரக்கு பிரான்சென்சுப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தன்னுடைய இயற்பியல் பட்டத்தையும் தொடர்ந்து 1971இல் ஜெர்மனியின் கெய்சன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் நிறைவு செய்தார்.1976ம் ஆண்டில் இவர், இடாமிட்டாட்டுத் தொழினுட்பப் பல்கலைக்கழகத்தில் பீட்டர் அம்புருசிடர் தலைமையில் இயங்கிய செருமனியின் சி.எசு.ஐ அணு வேதியியல் துறைக்கு இடம்பெயர்ந்தார். கனமான அயனிப் பொருள்களைப் பிரித்தெடுக்கும் பணியில் கப்பல் கட்டுமானத் தொழிலில் இவர் முக்கியப் பங்கு வகித்தார். பீட்டர் அம்புருசிடருடன் இணைந்து இவர் போரியம்(Bh Z=107), ஆசியம்(Hs Z=108), மெய்ட்னீரியம் (Mt Z=109), டார்ம்சிட்டாட்டியம் (Ds Z=110), இரோயன்ட்கெனியம்(Rg Z=111), கோப்பர்நீசியம்(Cn Z=112) போன்ற தனிமங்களைக் கண்டறிவதிலும் குளிர் கனவயனிப் பிணைப்புச் செயற்பாடுகளிலும் பெரும்பங்கு வகித்துள்ளார். 1984ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சி.எசு.ஐ. அமைப்பின் புதிய துண்டு பிரிப்புத் திட்டத்திற்கு இவர் தலைவரானார். இத்திட்டம் கன அயனிகளின் பொருண்மம் சார் இடைவினைகள், விந்தையான அணுக்கரு கற்றைகளை தோற்றுவித்தலும் பிரித்தலும், விந்தையான அணுக்கருக்களின் வடிவமைப்பு போன்ற பல ஆய்வுத் தலைப்புகளுக்கு அடிப்படையான வழிகளைத் திறந்து வைத்தது. மேலும் இவர் சி.எசு.ஐ அணு அமைப்பு, அணுக்கரு வேதியியலில் துறைகளின் இயக்குனராகவும் மார்ச்சு 2005இல் பணியோய்வு பெறும் வரை மைன்சுப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.1983இல் ஜெர்மனியின் கெய்சன் பல்கலைக்கழகம் இவருக்கு அளித்த உரோஞ்சன் விருதும் 1996ஆம் ஆண்டில் பிராங்கபேட்டு நகரில் சிகாடு ஆபுமான் என்பவருடன் இணைத்து இவருக்கு வழங்கப்பட்ட ஓட்டோ-ஆன் பரிசும் இவர் பெற்ற மிகவும் குறிப்பிடத்தக்க விருதுகளாகும்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மின்னழுத்தத்திற்கும், மின்னோட்டத்திற்கும் இடையேயான தொடர்பை கண்டறிந்த ஜெர்மன் இயற்பியலாளர் ஜார்ஜ் சைமன் ஓம் பிறந்த தினம் இன்று (மார்ச் 16, 1789).
ஜார்ஜ் சைமன் ஓம் (Georg Simon Ohm) மார்ச் 16, 1789ல் எர்லாங்கென், பிரான்டென்பர்கு-பேரெயத் ஜெர்மனியில் பிறந்தார். எர்லாங்கென் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும்போது ஓம் இத்தாலிய இயற்பியலாளர் வோல்ட்டாகண்டுபிடித்த மின்வேதி கலத்தைக் கொண்டு தமது ஆய்வுகளைத் துவங்கினார். தாமே உருவாக்கிய கருவிகளைக் கொண்டு ஒரு கடத்தியின் இரு முனைகளுக்கு இடையேயான நிலை வேறுபாட்டிற்கும் (மின்னழுத்தம்) அதனால் ஏற்படும் மின்னோட்டத்திற்கும் நேரடித் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்தார். இந்தத் தொடர்பை விவரிப்பதே ஓமின் விதி என அறியப்படுகிறது. அனைத்துலக அலகுகளில் மின்தடைக்கான அலகு இவரது பெயரைக் கொண்டு ஓம் (குறியீடு Ω) என வழங்கப்படுகிறது.ஒரு மின்கடத்தியில் மின்னழுத்ததைக் கொடுக்கும் போது, அதில் மின்னோட்டம் நடை பெறுகின்றது. அந்த மின்னோட்டத்தின் அளவு அதில் கொடுக்கப்படும் மின்னழுத்தத்தின் அளவைப் பொறுத்திருக்கும். எடுத்துக் காட்டாக, R என்ற மின்தடையம் கொண்ட ஒரு மின் கடத்தியின்(எ.கா. உலோகங்கள், மாழைகள்) இரு முனைகளுக்கிடையே, V என்ற அளவு மின்னழுத்தம்(voltage) கொடுக்கும் போது, I என்ற அளவு மின்னோட்டம்(current) பாய்கிறது என்றால், அந்த மின்னோட்டத்தின் அளவைக் கீழ்க் கண்டவாறு கணக்கிடலாம்: V=IR . இந்தக் கருத்தை ஜார்ஜ் ஓம் (Georg Ohm) என்ற செருமானிய அறிஞர் 1827-இல் முன் வைத்தார். அவர் கூறிய இக் கருத்து ஓமின் விதி என்று பின்னால் வழங்கப் பட்டது. சுருங்கக் கூறின், ஒரு மின்கடத்தியில் ஓடும் மின்னோட்டம் I அதன் இரு முனைகட்கு நடுவில் கொடுக்கப்படும் மின்னழுத்தம் V-இன் மீது நேர் விகிதச் சார்பு கொண்டிருக்கும் என்பதுதான் ஓமின் விதி.வேறுவிதமாகக் கூறுவதென்றால், மின்னழுத்தத்திற்கும், மின்னோட்டத்திற்கும் இடையேயான விகிதம் ஒரு மாறிலி ஆகும். அதாவது, இந்த மாறிலி எண் R என்பதே மின் தடை எனப்படும். மின்னோட்டத்தை நீரோட்டத்தோடு ஒப்பிட்டும், ஓமின் விதியை விளங்கிக் கொள்ளலாம். நீர் அழுத்தம் என்பது மின்னழுத்தம், நீரோட்டம் என்பது மின்னோட்டம், நீரோட்டத் தடை என்பது மின்தடை என்று கொண்டால், நீர் அழுத்தம் அதிகமானால் நீரோட்டமும் அதிகமாகும் என்பது மின்னழுத்தம் அதிகமாகும் போது மின்னோட்டம் அதிகமாகும் என்ற ஓமின் விதி போன்று உள்ளது எனலாம்.நீரோட்டத் தடை என்பது நீரோட்டத்தைக் குறைப்பதற்காக வைக்கப் படும் தடைகள் ஆகும்.ஜார்ஜ் ஓம் அவர்களுக்கு முன்னரே, 1781-இல், என்றி காவன்டிஷ்(Henry Cavendish) என்பவர், வேவ்வேறு அளவுள்ள கண்ணாடிக் குழாய்களில் உப்பு நீரை அடைத்து, அவற்றுள் மினசாரத்தைச் செலுத்தி, பல ஆய்வுகளைச் செய்தார். அதன் படி, மின்னழுத்த அளவு மாறினால் மின்னோட்டம் அளவும் மாறும் என்று கண்டறிந்தார். ஆனால், தம் கண்டுபிடிப்பை மற்ற ஆய்வாளர்கள் யாரிடமும் சொல்லாமல் விட்டு விடவே, இதைப் பற்றி யாருக்கும் தெரியாமல் போய் விட்டது. அதற்குப் பிறகு வந்த ஜேம்சு கிளார்க் மாக்சுவெல்(James Clerk Maxwell) என்ற அறிவியல் அறிஞர் அந்தக் கண்டுபிடிப்பை 1879ல் வெளியிட்டார். ஜார்ஜ் ஓம் அவர்களுக்கு 1841ல் கோப்லி பதக்கம் வழங்கப்பட்டது. மின்னழுத்தத்திற்கும், மின்னோட்டத்திற்கும் இடையேயான தொடர்பை கண்டறிந்த ஜெர்மன் இயற்பியலாளர் ஜார்ஜ் சைமன் ஓம் ஜூலை 6, 1854ல் தனது 65 வது அகவையில் மியூனிக், பவேரியாவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மின்காந்த அலைகளின் துகள்தன்மையை விளக்கும் காம்டன் விளைவு கண்டுபிடிக்கப்பட்டதற்கு நோபல் பரிசு வென்ற, ஆர்தர் ஹோலி காம்டன் நினைவு தினம் இன்று (மார்ச் 15, 1962).
ஆர்தர் ஹோலி காம்டன் (Arthur Holly Compton) செப்டம்பர் 10, 1892ல் உவூற்றர், ஒகியோ, அமெரிக்காவில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு, கல்லூரியில் பயின்று 1913 இல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார், அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பை 1914 இல் பெற்றார். 1916ல் முனைவர் பட்டம் பெற்றார். பிரின்ஸ்டனில் அவரது ஆரம்ப நாட்களில், காம்டன் பூமியின் சுழற்சியை நிரூபிக்க ஒரு நேர்த்தியான முறையைத் திட்டமிட்டார். ஆனால் அவர் விரைவில் எக்ஸ்-ரேஸ் துறையில் தனது ஆய்வைத் தொடங்கினார். அவர் எலக்ட்ரான்கள் மற்றும் அணுக்களின் ஏற்பாட்டைப் படிப்பதற்கான ஒரு கருவியாக படிகங்களிலிருந்து எக்ஸ்-ரே பிரதிபலிப்பு தீவிரத்தின் கோட்பாட்டை உருவாக்கியது. மேலும் 1918 ஆம் ஆண்டில் அவர் எக்ஸ்-ரே சிதறலை ஆய்வு செய்தார்.
1922 ஆம் ஆண்டில், எக்ஸ்ரே கதிர்வீச்சின் அதிகரிப்பு கண்டுபிடிக்கப்பட்டதற்கு, இலவச எலக்ட்ரான்கள் (Free Electron) மூலம் நிகழும் கதிர்வீச்சின் சிதறல் காரணமாக, சிதறிய குவாண்டா அசல் கற்றைக் கோட்டை விட குறைவான ஆற்றலைக் கொண்டிருப்பதை இது குறிக்கிறது. இந்த விளைவை, இப்போது “காம்டன் விளைவு” என அழைக்கப்படும். இது மின்காந்த கதிர்வீச்சின் துகள் கருத்தை தெளிவாக விளக்குகிறது. அதன் பிறகு சி.டி.ஆர்.வில்சன், அவரது கிளவுட் சேம்பரில் மறுபடியும் எலக்ட்ரான்களின் தடங்கள் இருப்பதைக் காட்ட முடியும். இந்த நிகழ்வின் யதார்த்தத்தின் மற்றொரு நிரூபணம் தற்செயலான முறை (காம்டன் மற்றும் ஏ.வி. சைமன் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. மேலும் ஜெர்மனியில் டபிள்யூ.போடே மற்றும் ஹெச்.ஜெய்கர் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.
காம்ப்டன் சிதறலும், எக்ஸ்ரே பொருளால் சிதறடிக்கப்படும்போது, எக்ஸ்ரேயை விட அலைநீளம் நீளமான பக்கத்திற்கு மாற்றப்படும் ஒரு நிகழ்வு உள்ளது. கூடுதலாக நிகழ்வு எக்ஸ்ரே போன்ற அதே அலைநீளத்தைக் கொண்டிருக்கும். 1923 ஆம் ஆண்டில் ஏ.எச். காம்ப்டன் ஒரு ஃபோட்டான் கருதுகோளை பயன்படுத்தி பொறிமுறையைக் கண்டுபிடித்து அதன் வலுவான சோதனை அடிப்படையில் கொடுத்தார். அதாவது, எக்ஸ்ரேயின் ஃபோட்டான் பொருளில் உள்ள எலக்ட்ரானுடன் மோதுகையில், எலக்ட்ரான் ஃபோட்டானின் ஆற்றலின் ஒரு பகுதியைப் பெற்று அணுவிலிருந்து வெளியேறுகிறது (எலக்ட்ரான் மீண்டும்) மற்றும் ஃபோட்டான் குறைந்து வரும் ஆற்றலால் குறைகிறது (அலைநீளம் அதிகரிக்கிறது). எக்ஸ்-கதிர்கள் ஒரு பொருளில் நிகழ்ந்தால், தாம்சன் சிதறல் அலைநீளத்தின் மாற்றத்துடன் சேர்ந்து காம்ப்டன் சிதறலுக்கும் கூடுதலாக நிகழ்கிறது. ஆனால் அலைநீளம் நீளமாகும்போது, தாம்சன் சிதறல் பெரிதாகிறது.
காம்ப்டன் இரண்டாம் உலகப் போரின்போது முதலாவது அணுக்கரு ஆயுதங்களைத் தயாரிப்பதில் ஈடுபட்ட மன்காட்டன் குழுவில் பெரும் பங்காற்றினார். 1942ல் இவர் உலோகவியல் ஆய்வுகூடத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். யுரேனியத்தை புளூட்டோனியமாக மாற்றும் அணுக்கரு உலைகள் தயாரிப்பில் இவ்வாய்வுகூடம் முக்கிய பங்களிப்பு செய்தது. காம்ப்டன் 1945ல் ஜப்பானுக்கு எதிராக அணுகுண்டு பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கும் குழுவில் இருந்தார். 1945 முதல் 1953 வரை செயிண்ட் லூயிஸில் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் செயலாளராக பணியாற்றினார். மின்காந்த அலைகளின் துகள்தன்மையை விளக்கும் இவருடைய கண்டுபிடிப்பான காம்ப்டன் விளைவிற்காக 1927ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார். மட்டூச்சி பதக்கம்(1930), பிராங்கிளின் பதக்கம்1940), இயூசு பதக்கம்(1940), போன்ற பதக்கங்களை பெற்றார்.
நோபல் பரிசு வென்ற, அமெரிக்க இயற்பியலாளர் ஆர்தர் ஹோலி காம்டன் மார்ச் 15, 1962ல், பெருக்கலி, கலிபோர்நியா, அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். சந்திரனில் உள்ள காம்ப்டன் பள்ளம் காம்ப்டன் மற்றும் அவரது சகோதரர் கார்லுக்காக பெயரிடப்பட்டது. செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் ஆராய்ச்சி கட்டிடம் அவரது நினைவாக பெயரிடப்பட்டது. நாசாவின் காம்ப்டன் காமா ரே ஆய்வகம் காம்ப்டனின் நினைவாக பெயரிடப்பட்டது. காம்ப்டன் விளைவு காமா கதிர் கண்டறிதல் கருவிகளுக்கு மையமாக உள்ளது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அணுசக்தி எதிர்வினைகள் பற்றிய தத்துவார்த்த ஆய்வுகள் செய்த, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அணுக்கரு இயற்பியலாளர் வில்லியம் ஆல்பிரெட் வில்லீ ஃபோலர் நினைவு தினம் இன்று (மார்ச் 14, 1995).
வில்லியம் ஆல்பிரெட் வில்லீ ஃபோலர் (William Alfred “Willie” Fowler) ஆகஸ்ட் 9, 1911ல் பென்சில்வேனியாவின் பிட்ஸ்பர்க்கில் பிறந்தார். ஃபோலரின் பெற்றோர் ஜான் மேக்லியோட் ஃபோலர் மற்றும் ஜென்னி சம்மர்ஸ் வாட்சன். ஃபோலர் அவரது உடன்பிறப்புகளான ஆர்தர் மற்றும் நெல்டா ஆகியோர்களில் மூத்தவர். ஃபோலருக்கு இரண்டு வயதாக இருந்தபோது, குடும்பம் ஓஹியோ, நீராவி இரயில் பாதை நகரமான லிமாவுக்கு குடிபெயர்ந்தது. பென்சில்வேனியா ரயில்வே யார்டுக்கு அருகில் வளர்ந்தது, ஃபோலரின் என்ஜின்களில் ஆர்வத்தை பதித்தது. பின்னர் 1973 ஆம் ஆண்டில், டிரான்ஸ் சைபீரியன் ரயில்வேயை இயக்கும் நீராவி இயந்திரத்தை கண்காணிப்பதற்காக அவர் சோவியத் ஒன்றியத்திற்கு பயணிப்பார். இது கபரோவ்ஸ்க் மற்றும் மாஸ்கோவை இணைக்கும் கிட்டத்தட்ட 2,500 கிலோமீட்டர் பாதையை இயக்குகிறது. இவர் ஓகியோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அப்போது இவர் டௌ கப்பா எப்சிலான் அமைப்பில் உறுப்பினராக இருந்தார். இவர் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் அணுக்கரு இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
ஃபோலர் நீராவிப் பொறி இயங்கிகளில் தொடர்ந்து ஆர்வம் கொண்டிருந்தார். பல நீராவிப் பொறி இயங்கிகளை பல அளவுகளில் தன்னிடம் வைத்திருந்தார். 1936 ஆம் ஆண்டில், ஃபோலர் கால்டெக்கில் ஒரு ஆராய்ச்சி சக ஊழியரானார். 1939ல், ஃபோலர் கால்டெக்கில் உதவி பேராசிரியரானார். ஒரு சோதனை அணு இயற்பியலாளர் என்றாலும், ஃபோலரின் மிகவும் பிரபலமான கட்டுரை “நட்சத்திரங்களின் கூறுகளின் தொகுப்பு” ஆகும். இது கேம்பிரிட்ஜ் அண்டவியல் நிபுணர் பிரெட் ஹோயலுடன் இணைந்து பணியாற்றியது மற்றும் இரண்டு இளம் கேம்பிரிட்ஜ் வானியலாளர்களான ஈ. மார்கரெட் பர்பிட்ஜ் மற்றும் ஜெஃப்ரி பர்பிட்ஜ் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டது. நவீன இயற்பியலின் விமர்சனங்கள் இல் 1957 ஆம் ஆண்டு எழுதிய கட்டுரை, நட்சத்திரங்களின் லேசான வேதியியல் கூறுகளைத் தவிர மற்ற அனைத்தையும் தோற்றுவிப்பதற்கான பெரும்பாலான அணுசக்தி செயல்முறைகளை வகைப்படுத்தியது. இது பி 2 எஃப் ஹெச் பேப்பர் என்று பரவலாக அறியப்படுகிறது.
1942 ஆம் ஆண்டில், ஃபோலர் கால்டெக்கில் இணை பேராசிரியரானார். 1946ல், ஃபோலர் கால்டெக்கில் பேராசிரியரானார். ஃபோலெர் கால்டெக்கில் உள்ள கெல்லாக் கதிர்வீச்சு ஆய்வகத்தின் இயக்குநராக சார்லஸ் லாரிட்சனுக்குப் பின் வந்தார். பின்னர் ஸ்டீவன் ஈ. கூனின் வெற்றி பெற்றார். ஜனாதிபதி ஜெரால்ட் ஃபோர்டால் ஃபோலருக்கு தேசிய அறிவியல் பதக்கம் வழங்கப்பட்டது. ஃபோலர் 1963 ஆம் ஆண்டில் அமெரிக்க வானியல் சங்கத்தின் ஹென்றி நோரிஸ் ரஸ்ஸல் விரிவுரை, 1973ல் வெட்லெசன் பரிசு, 1978 இல் எடிங்டன் பதக்கம், 1979 இல் பசிபிக் வானியல் சங்கத்தின் புரூஸ் பதக்கம் மற்றும் 1983ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஆகியவற்றை வென்றார். பிரபஞ்சத்தில் வேதியியல் கூறுகளை உருவாக்குவதில் முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி எதிர்வினைகள் பற்றிய தத்துவார்த்த மற்றும் சோதனை ஆய்வுகள் (சுப்ரமண்யன் சந்திரசேகருடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. அமெரிக்க அணுக்கரு இயற்பியலாளர் வில்லியம் ஆல்பிரெட் வில்லீ ஃபோலர் மார்ச் 14, 1995 ல் தனது 83வது வயதில், கலிபோர்னியாவில் உள்ள பசதேனாவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தொலைபேசி இல்லாத உலகை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா!! ஒவ்வொரு இல்லத்திலும் ஒவ்வொரு அலுவலக மேசையிலும் அதன் கண்டுபிடிப்பாளரின் நினைவுச்சின்னமாக வீற்றிருக்கின்றன தொலைபேசிகள். அந்த உன்னத கருவியை உலகுக்கு தந்தவர் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்.mஅலெக்சாண்டர் கிரகாம் பெல் மார்ச் 10, 1876ல் உலகின் முதல் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார். தன் உதவியாளரை தொலைபேசி மூலம் அழைத்து “மிஸ்டர் வட்ஸன் இங்கே வாருங்கள் உங்களைக் காண வேண்டும்” “(Watson, come here, I want to see you) என்றார். அவைதான் தொலைபேசியில் பேசப்பட்ட முதல் வார்த்தைகள். இந்த சொற்களை வாட்சனால் தெளிவாகக் கேட்க முடிந்தது. ஆனால் பெல் கண்டுபிடித்த தொலைபேசியைப் பற்றி யாரும் அக்கறை கொள்ளவில்லை அதனால் அவர் மிகவும் சோர்வடைந்தார்.
பிலெடெல்பியாவில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் தனது தொலைபேசியைப் பார்வைக்கு வைத்தார். அங்கு வந்த பிரேசில் நாட்டு மன்னர் அதை வியப்போடு எடுத்துப் பயன்படுத்திய பின்னர் தான் தொலைபேசியின் பெருமை எங்கும் பரவியது. அமெரிக்காவில் உள்ள தனது மாமனாரின் உதவியுடன் 1876 மார்ச்சு 7 ஆம் தேதி தொலைபேசிக்கான காப்புரிமையைப் பெற்றார். ஹலோ’ என்ற வார்த்தையை முதலில் தாமஸ் எடிசன் தொலைபேசியில் பதிலளித்தார். பின்னர் அது அழைப்புகளுக்கு பதிலளிப்பதற்கான தரமாக மாறியது. அமெரிக்காவில் ஏறக்குறைய ஒரே காலத்தில் மூன்று படைப்பாளிகள் தொலைபேசியை ஆக்க முற்பட்டனர் யார் முதலில் படைத்தவர் என்ற வழக்குப் போட்டியில் பெல் ஒருவரே வெற்றி பெற்றார். அவரே தொலைபேசியின் முதல் படைப்பாளர் என்றும் உலகத்தில் கருதப் படுகிறார். தனது புதிய கருவியைப் பெல் விரைவில் வர்த்தகத் தொழிற்துறை உற்பத்திக்குப் பயன்படப் பதிவு உரிமை பெற்றார்.
அவ்வாறு அவர் முதன் முதலில் உருவாக்கிப் பயன்படுத்திய தொலைபேசிக் கருவியில் பல குறைபாடுகள் இருந்தன. அவை பிற்காலத்தில் படிப்படியாக சரி செய்யப் பெற்று தொலைபேசி முன்னேற்றம் பெற்றது. தொலைபேசி கண்டுபிடித்த பின் 9 வருடம் கழித்து அவர் புதிய முயற்சியாக, குரலை பதிவு செய்யும் கண்டுபிடிப்பில் ஈடுபட்ட இவர் 1885-ம் வருடம் ஏப்ரல் 15-ம் தேதி அவரது குரலை மெழுகு தடவிய காட்போர்ட் தகட்டில் பதிவு செய்துள்ளார். இது அமெரிக்காவில் உள்ள சுமித் சோனியன் அருங்காட்சியகத்தில் பழமையான ஒலித் தகடுகள் பாதுகாக்கும் பிரிவில் 138 வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த தகட்டில் பதியப்பட்டிருக்கும் கிரகாம் பெல்லின் குரலை, கம்ப்யூட்டரின் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மீட்டெடுத்துள்ளனர். அதில் அவர், ‘கேளுங்கள் என் குரலை – அலெக்சாண்டர் கிரகாம் பெல்’ என்று கூறியுள்ளார்.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரர் யூரி ககாரின் (Yuri Gagarin) பிறந்தநாள் இன்று (மார்ச் 9, 1934).
யூரி காகரின் (யூரி அலெக்ஸேய்விக் காகரின்) மார்ச் 9, 1934ல் கஜட்ஸ்க், குளூசினோ, இரசியாவில் பிறந்தார். அவர் பிறந்த இடமான கஜட்ஸ்க், அவர் மறைந்த பின் ‘ககாரின்’ எனும் அவரது பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படுகிறது. நான்கு குழந்தைகளில் மூன்றாவது குழந்தை யூரி அலெக்ஸிவிக் ககாரின். மாஸ்கோவில் இருந்து ஒரு நூறு மைல் தொலைவில் இருந்த ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். இளைஞனாக இருந்தபோது, காகரின் ஒரு ரஷ்ய யாக் போர் விமானம் தனது வீட்டிற்கு அருகே, அவசரகால தரையிறக்கம் செய்யப்பட்டதை கண்டார். ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு, பறக்கும் கிளப் ஒன்றில் சேர வாய்ப்பு வர, அவர் அதை ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டார். 1955-இல் தனது முதல் தனி விமானத்தை இயக்கினார். அதிலிருந்து சில ஆண்டுகளிலேயே, அவர் ஒரு விண்வெளி வீரராக தன்னை மேம்படுத்திக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டார். 200-க்கும் மேற்பட்ட இரசிய விமானப்படை போர் விமானிகள் போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உயர் அழுத்த நிலைமைகளையும் சமாளிக்கும் அனுபவங்கள் காரணங்களாக கருதப்பட்டன.
அந்த நேரத்தில் 27 வயதான மூத்த லெட்டினன்ட் காகரின், தேர்ந்தெடுக்கப்பட்ட விமானிகளில் ஒருவராவார். விண்வெளியில் பயணிப்பது, அதில் நல்ல தேர்ச்சி பெற்றுவிட்டதாக கருதும் இக்காலத்திலும் நாம் எதிர்கொண்டு கொண்டிருக்கும் சிக்கல்களை பார்ப்போம். முதல் சிக்கல் உடற்கூறியல். புவிஈர்ப்பு விசைக்கு எதிராக உந்தப்படும் போது ஏற்படும் அழுத்தம் மற்றும் அதிர்வினை தாங்கும் திறன் நம் உடலுக்கு வேண்டும். நிலத்திலிருந்து விண்கலனில் கிளம்பிய சில மணித்துளிகளிலேயே தொழில்நுட்பக்கோளாறுகளால், வெடித்துச்சிதரும் அபாயம். அதைத்தாண்டி விட்டால், நமது வளிமண்டல அடுக்கினை கடக்கும்போது ‘எஸ்கேப் வெளாசிட்டியால்’ ஏற்படும் அழுத்தம், அதையும் சமாளித்துவிட்டால், ‘வேன் ஆலன் ரேடியேஷன் பெல்ட்’ எனும் ஆற்றல்மிக்க துகள் பொருள் கொண்ட புவியின் காந்தப்புல பகுதி, அதன் பின்பு வெற்றிடத்தின் வரவேற்பு என விண்வெளியில் பயணம் மேற்கொள்வது என்பது ஒவ்வொரு நிலையிலும் மறுபிறப்பு எடுப்பதைப்போன்றதாகும்.
ஏப்ரல் 12, 1961 அன்று, மாஸ்கோ நேரத்தில் காலை 9:07 மணிக்கு, ‘வோஸ்டாக் 1’ விண்கலன் சோவியத் ஏவு தளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது. உந்து விசையின் காரணமாக ஏற்படும் எடை இழப்பு ஒரு பைலட்டை எவ்வாறு பாதிக்கப் போகிறது, அதாவது விமானியால் அந்த அளவு அதிர்வு மற்றும் அழுத்தத்தில் விண்கலனை சரியாக கட்டுப்படுத்த முடியுமா? என்பது எவருக்கும் உறுதியாக தெரியாது என்பதால், விண்கலனில் அவர் இருந்த கோள வடிவ உறையினுள், தானாக இயங்கும்படி அல்லது தரைக்கட்டுப்பாட்டுத்தளம் நிலத்திலிருந்தே இயக்கும்படியாக அந்த விண்கலன் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஒருவேளை விண்கலன் செல்லும்போது ஏதேனும் தவறு நேர்ந்தால், காகரின் விண்கலனை அவர் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர, தரைக்கட்டுப்பாட்டுத் தளத்திலிருந்து, தானியக்கத்தினை ரத்துசெய்யும் குறியீட்டை(Override Code) பெற அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், சோவியத் விண்வெளி திட்டத்தின் அப்போதைய தலைமை வடிவமைப்பாளர் ‘செர்கி கொரோலெவ்’ விதிமுறைகளை மீறி, காகரினிடம் அவர் விண்கலனில் ஏறும் முன்னரே அந்த குறியீட்டை கொடுத்திருந்தார். ஒருவேளை, எஞ்சினில் கோளாறு ஏற்பட்டு, சுற்றுவட்டப்பாதையில் இயற்கையாக அது சுற்ற ஆரம்பிக்க எடுக்கும் காலம் வரை காத்திருக்கும் நிலை வந்தால், காகரினுக்கு 10 நாட்களுக்கு தேவைப்படும் உணவு மற்றும் நீர் போன்றவையும் அக்கலனில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்பொருட்கள் காகரினுக்கு தேவைப்படவில்லை.
108 நிமிடங்களில், ‘வஸ்டோக் 1’ பூமியைச் ஒரு முழு சுற்று சுற்றியிருந்ததோடு, அதிகபட்சமாக புவியிலிருந்து சுமார் 203 மைல்கள் (327 கிலோமீட்டர்) உயரத்தை அடைந்திருந்தது. ககாரின் பூமிக்கு திரும்ப, புவியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும்போது, கூடுமான வரையில் சுயநினைவுடன் இருக்க முற்பட்டார். அப்போது, புவி ஈர்ப்பு விசையின் இழுவிசையானது, எட்டுமடங்கு அங்கே அதிகமாக இருப்பதை உணர்ந்தார். மீண்டும் பூமிக்கு திரும்பும்போது, விண்கலன் மெதுவாக இயக்கப்பட தேவைப்படும் எஞ்சின்களோ, பாதுகாப்பான முறையில் தரையிறக்கப்பட எந்த வழிமுறையினையோ ‘வோஸ்டாக் 1’ விண்கலன் கொண்டிருக்கவில்லை. தரையிலிருந்து 7 கி.மீ உயரத்தில், விண்கலனிலிருந்து வெளியேறி, காகரின் பாராச்சூட் மூலம் தரையிறங்கினார். ஃபெடெரேஷன் ஏரோநாட்டிக் இன்டர்நேஷனல்(FAI – Fédération Aéronautique Internationale) விண்வெளிவீரர், விண்கலத்துடன் தரையிறங்கினால்தான் அது ஒரு அங்கீகரிக்கப்பட்ட விண்வெளிப்பயணமாக கருதமுடியும் எனும் விதிமுறைகளைக் கொண்டிருந்தது. சோவியத்தின் தலைவர்கள் 1971 வரை காகரின் விண்கலனுடன் தரையிறங்கியதாகவே அறிவித்திருந்தனர். எது எப்படியாயினும், புவியின் சுற்றுவட்டப்பாதையிலிருந்து விடுபட்டு, விண்வெளியில் பயணம் செய்த முதல் நபர் காகரின் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
காகரின், விண்வெளியிலிருந்து திரும்பியதும் உலகமே கொண்டாடும் நாயகனாக புகழ்பெற்றார். அவரை, நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மக்கள் ஆரவாரத்துடனும் மகிழ்ச்சியுடனும் மாஸ்க்கோவின் ரெட் ஸ்கொயர் இடத்தில் வரவேற்றனர். சோவியத்தின் இந்த சாதனையை உலகமறிய, காகரின் உலகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் இரசியா திரும்பியதும், மிகப்பெரும் பதவியான, சோவியத் யூனியனின் துணை உச்ச சோவியத் பதவி வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. விண்வெளிவீரர்கள் பிரிவின் தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். பொதுமக்களிடையே நன்கு அறியப்பட்ட ஒருவராக காகரின் இருந்தமையால், அவர் உயிர் மிகவும் முக்கியம் எனக்கருதிய சோவியத் அரசு, அவரை மீண்டும் விண்வெளிக்கு அனுப்புவதை விரும்பவில்லை. ஆனால், அவர் விமானப்படையில் சோதனை விமானங்களை உருவாக்கும் பணியையும் செய்துகொண்டிருந்தார்.
ககாரின் விண்வெளிப் பயணம் செய்த 12 ஏப்ரல் தேதி, ஒரு சிறப்பு தேதியாக நினைவுகூரப்படுகிறது. 1962 ஆம் ஆண்டு முதல் இந்தத் நாள் சோவியத் ஒன்றியத்திலும் பின்னர் ரஷ்யாவிலும் மற்றும் பிற சோவியத் ஒன்றியத்தில்லிருந்து பிரிந்து சென்ற சில நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. 2011 ஆம் ஆண்டில் இந்த நாள் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதன் விண்வெளி விமானத்தில் பயணம் செயத சர்வதேச தினமாக அறிவிக்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு முதல், யூரி இரவு என்று ஒரு சர்வதேச தினம் கொண்டாடப்படுகிறது, ஒவ்வொரு ஏப்ரல் 12 ம் தேதி விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல் கல் கடந்த நாளாக நினைவுகூரப்படுகிறது. பூமியில் பல கட்டிடங்கள் மற்றும் இதர தளங்கள் ககாரின் பெயரில் பெயரிடப்பட்டுள்ளன. 1969 ஆம் ஆண்டில் நட்சத்திர நகரத்தில் உள்ள விண்வெளி வீரர்களின் பயிற்சி மையம் ககாரின் பெயரால் பெயரிடப்பட்டது. பைக்கானூர் விண்கலம் ஏவுதளம் ககாரின் பெயரால் ககாரின் துவக்கம் என்று அழைக்கப்படுகிறது. சோவியத் ஒன்றியத்தின் காலத்தில் உக்ரைன்னில் உள்ள செவஸ்டோபல் நகரத்தின் பெயர் ககாரின் ஞாபகமாக பெயரிடப்பட்டது. விமானப்படை அகாடமி (கழகம்) 1968 ஆம் ஆண்டில் ககாரின் விமானப்படை அகாடமி என மறுபெயரிடப்பட்டது.
ககாரின்னை போற்றும் விதமாக விண்வெளி வீரர்களாலும், வானியலாளர்களாலும் அவரது பெயர் நிலவில் உள்ள ஒரு பள்ளத்தாக்கிற்கு வைக்கப்பட்டுள்ளது. 1969 ஆம் ஆண்டில் அமெரிக்க விண்வெளித் திட்டத்தின் அப்பல்லோ 11 விண்கலம் மூலம் நிலவிற்குப் பயண்ம் செயத விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்டிரின் ஆகியோரும் மற்றும் சக விண்வெளி வீரர்ரான விளாடிமிர் கொமரொவ் ககாரினின் நினைவாக பதக்கங்களை கொண்ட ஒரு நினைவு பையை நிலவின் மேற்பரப்பில் விட்டு சென்றுள்ளனர். 1971 ஆம் ஆண்டில், அப்போலோ 15 விண்கல விண்வெளி வீரர்கள் டேவிட் ஸ்காட் மற்றும் ஜேம்ஸ் இர்வின் மறைந்த விண்வெளி வீரர்களின் பட்டியலை தாங்கள் தரையிறங்கும் இடத்தில் விட்டுச் சென்றனர். இந்தப் பட்டியலில் அனைத்து அமெரிக்க விண்வெளி வீரர்கள் மற்றும் சோவியத் விண்வெளி வீரர்கள் விண்வெளி பந்தயத்தில் இறந்தவர்களின் பெயர்கள் உள்ளது. இதில் யூரி ககாரின் 14வது நபராக பட்டியலிடப்பட்டார்.
ககாரின்னை போற்றும் விதமாக அவரது உருவச் சிலைகள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று 2011 ஆம் ஆண்டில் இலண்டனில் உள்ள அட்மிரால்டி வளைவு அருகில் (இப்போது கிரீன்விச்சு), இலண்டன் வர்த்தக மையத்தில் இறுதியில் யூரி ககாரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. 2012 இல், அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் இல் உள்ள தெற்கு வேய்சைட் டிரைவில் நாசாவின் அசல் விண்வெளி தலைமையகத்தின் தளத்தில் ஒரு சிலை திறக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் கலைஞர் மற்றும் விண்வெளி வீரர்ரான அலெக்ஸ்சி லியோனோவ் ஆல் செய்யப்பட்ட சிற்பம் ஹூஸ்டனுக்கு பல்வேறு ரஷ்ய அமைப்புகளால் வழங்கப்பட்டது. இந்த சிலை திறப்பு விழாவில் ஹூஸ்டன் மேயர் அன்னிசி பார்கர் , நாசா நிர்வாகி சார்லஸ் போல்ன் மற்றும் ரஷ்ய தூதர் செர்ஜி சியோக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மார்ச் 27, 1968, MiG-15 எனும் ஜெட் போர் விமானத்தினை சோதனை ஓட்டம் செய்யும்போது, சக விமானியான விளாடிமிர் செர்யோகின் எனும் ஒருவருடன் சேர்ந்து காகரின் உயிரிழந்தார். அந்த சமயத்தில், அவருக்கு இரு குழந்தைகள் இருந்தன. பறவை அல்லது வேறு ஏதோ ஒன்றின் மீது மோதலினை தவிர்க்கும் பொருட்டு, திடீரென விமானத்தினை தவறுதலாக இயக்க, ஜெட் விமானம் தரையில் மோதி விபத்திற்குள்ளானதாக, விபத்தினை விசாரித்த ஸ்டேட் கமிஷன் அப்போது கூறியது. புகழின் உச்சிக்கு சென்ற ஏழே ஆண்டுகளில், தான் இறக்கவிருப்பதை காகரின் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். இந்த கால மனித இனம் உள்ள வரை அவரது சாதனை என்றும் நினைவுபடுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும்.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முதன்முதலில் குவையத் துளையிடல் நிகழ்வால் ஆல்பா சிதைவைக் கண்டுபிடித்த ஜார்ஜ் காமோவ் பிறந்த தினம் இன்று (மார்ச் 4, 1904).
ஜார்ஜ் காமோவ் (George Gamow) மார்ச் 4, 1904ல் இரசியா பேரரசில் ஒதேசாவில் பிறந்தார். இவர் தந்தையார் பள்ளியில் இரசியா மொழியும் இலக்கியமும் பயிற்றுபவராகவும், தாயார் பெண்களுக்கு புவிப்பரப்பியலும் வரலாறும் பயிற்றுபவராகவும் இருந்துள்ளனர். இவர் இரசியா மொழியுடன் தாயாரிடம் பிரெஞ்சும் தன் பயிற்சி ஆசிரியரிடம் செருமானிய மொழியும் இளமையிலேயே கற்றுக்கொண்டுள்ளார். இவர் தொடக்க காலத்தில் பெரும்பாலான வெளியீடுகளை பிரெஞ்சிலும் இரசியத்திலுமே வெளியிட்டுள்ளார். பின்னர் தொழில்நுட்ப நூல்களை எழுதவும் மக்கள் அறிவியல் நூல்களை எழுதவும் ஆங்கிலத்தைப் பின்பற்றத் தொடங்கியுள்ளார். ஒடெசாவில் உள்ள இயற்பியல் மற்றும் கணித நிறுவனத்திலும் லெனின்கிராட் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார். காமோவ் அலெக்சாண்டர் ப்ரீட்மேனின் கீழ் 1925ல் ப்ரீட்மேனின் ஆரம்பகால மரணம் வரை லெனின்கிராட்டில் சிறிது காலம் படித்தார்.
ப்ரீட்மேனின் கீழ் தனது முனைவர் பட்ட ஆய்வை செய்ய அவர் விரும்பினார். ஆனால் ஆய்வுக் ஆலோசகர்களை மாற்ற வேண்டியிருந்தது. பல்கலைக்கழகத்தில், காமோவ் தத்துவார்த்த இயற்பியலின் மற்ற மூன்று மாணவர்களான லெவ் லாண்டவு, டிமிட்ரி இவானென்கோ மற்றும் மேட்வி ப்ரோன்ஸ்டைன் ஆகியோருடன் நட்பு கொண்டார். நால்வரும் மூன்று மஸ்கடியர்ஸ் என்று அழைக்கப்படும் ஒரு குழுவை உருவாக்கினர். அந்த ஆண்டுகளில் வெளியிடப்பட்ட குவாண்டம் இயக்கவியல் குறித்த தரை உடைக்கும் ஆவணங்களை விவாதிக்கவும் பகுப்பாய்வு செய்யவும் கூடினர். பின்னர் அவர் ஆல்பர், ஹெர்மன் மற்றும் காமோ குழுவை விவரிக்க அதே சொற்றொடரைப் பயன்படுத்தினார். பட்டப்படிப்பில், அவர் கோட்டிங்கனில் குவாண்டம் கோட்பாட்டில் பணியாற்றினார். அங்கு அணுக்கரு பற்றிய அவரது ஆராய்ச்சி அவரது முனைவர் பட்டத்திற்கான அடிப்படையை வழங்கியது. பின்னர் அவர் 1928 முதல் 1931 வரை கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் தத்துவார்த்த இயற்பியல் நிறுவனத்தில் பணியாற்றினார்.
கேம்பிரிட்ஜில் உள்ள கேவென்டிஷ் ஆய்வகத்தில் எர்னஸ்ட் ரதர்ஃபோர்டுடன் பணிபுரிந்தார். அவர் அணுக்கருவை “திரவ துளி” மாதிரியை (liquid drop” model) தொடர்ந்து ஆய்வு செய்தார். ஆனால் ராபர்ட் அட்கின்சன் மற்றும் ஃபிரிட்ஸ் ஹூட்டர்மேன்ஸுடன் நட்சத்திர இயற்பியலிலும் பணியாற்றினார். 1931 ஆம் ஆண்டில், காமோவ் 28 வயதில் சோவியத் ஒன்றியத்தின் அகாடமி ஆஃப் சயின்ஸின் தொடர்புடைய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐரோப்பாவின் முதல் சைக்ளோட்ரான் இகோர் குர்ச்சடோவ், லெவ் மைசோவ்ஸ்கி மற்றும் காமோவின் வழிகாட்டுதல் மற்றும் நேரடி பங்கேற்பின் கீழ் வடிவமைக்கப்பட்டது. 1932 ஆம் ஆண்டில், கமோவ் மற்றும் மைசோவ்ஸ்கி ஆகியோர் ரேடியம் நிறுவனத்தின் கல்வி கவுன்சிலால் பரிசீலிக்க ஒரு வரைவு வடிவமைப்பை சமர்ப்பித்தனர். அது ஒப்புதல் அளித்தது. சைக்ளோட்ரான் 1937 வரை முடிக்கப்படவில்லை.
20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், கதிரியக்க பொருட்கள் பண்பு அதிவேக சிதைவு விகிதங்கள் அல்லது அரை ஆயுளைக் கொண்டிருப்பதாக அறியப்பட்டது. அதே நேரத்தில், கதிர்வீச்சு உமிழ்வுகள் சில சிறப்பியல்பு ஆற்றல்களைக் கொண்டிருப்பதாக அறியப்பட்டது. 1928 வாக்கில், கோட்டிங்கனில் உள்ள காமோவ் ஒரு கருவின் ஆல்பா சிதைவு கோட்பாட்டை சுரங்கப்பாதை வழியாக நிக்கோலாய் கொச்சினின் கணித உதவியுடன் தீர்த்துக் கொண்டார். ரொனால்ட் டபிள்யூ.கர்னி மற்றும் எட்வர்ட் யு.காண்டன் ஆகியோரால் இந்த பிரச்சினை சுயாதீனமாக தீர்க்கப்பட்டது. இருப்பினும், கர்னி மற்றும் காண்டன் ஆகியோர் காமோவால் அடையப்பட்ட அளவு முடிவுகளை அடையவில்லை. கிளாசிக்கல் ரீதியாக, துகள் கருவுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் மிகவும் வலுவான அணுசக்தி ஆற்றலில் இருந்து தப்பிக்க அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. மேலும் கிளாசிக்கல் ரீதியாக, கருவைத் தவிர்ப்பதற்கு ஏராளமான ஆற்றல் தேவைப்படுகிறது. இது தன்னிச்சையாக நிகழாது. இருப்பினும், குவாண்டம் இயக்கவியலில், துகள் சாத்தியமான கிணற்றின் சுவரை “சுரங்கப்பாதை” செய்து தப்பிக்கக்கூடிய நிகழ்தகவு உள்ளது.
காமோவ் கருவுக்கு ஒரு மாதிரி திறனைத் தீர்த்தார். முதல் கொள்கைகளிலிருந்து ஆல்பா-சிதைவு நிகழ்வு செயல்முறையின் அரை ஆயுளுக்கும் உமிழ்வின் ஆற்றலுக்கும் இடையிலான உறவைப் பெற்றார். இது முன்னர் அனுபவ ரீதியாக கண்டுபிடிக்கப்பட்டு கீகர்-நுட்டால் விதி (Geiger–Nuttall law) என்று அறியப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, காமோ காரணி அல்லது காமோ-சோமர்ஃபெல்ட் காரணி என்ற பெயர் உள்வரும் அணு துகள்கள் மின்னியல் கூலொம்ப் தடையின் வழியாக சுரங்கப்பாதை மற்றும் அணுசக்தி எதிர்வினைகளுக்கு உட்படுத்தப்படுவதற்கான நிகழ்தகவுக்கு பயன்படுத்தப்பட்டது. இவர் ஜார்ஜசு இலமைத்ரே பெருவெடிப்புக் கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தவர். முதன்முதலில் குவையத் துளையிடல் நிகழ்வால் ஆல்பா சிதைவைக் கண்டுபிடித்து விளக்கியவர். அணுக்கருவின் கதிரியக்கச் சிதைவு, விண்மீன் படிமலர்ச்சி, விண்மீன் அணுக்கருத் தொகுப்பு வினை, பெருவெடிப்பு அணுக்கருத் தொகுப்பு வினை, மூலக்கூற்று மரபியல் ஆய்வுகளில் ஈடுபட்டவர். இவர் இவற்றின் தொகுப்பு நிகழ்வை அணுக்கருசார் அண்டத் தோற்ற நிகழ்வாக வரையறுத்தார்.
தன் வாழ்வின் நடுப்பகுதியிலும் கடைசிப்பகுதியிலும் கல்வி பயிற்றுவதில் நாட்டம் செலுத்தியுள்ளார். பல மக்கள் அறிவியல் நூல்களை இயற்றியுள்ளார். இவற்றில் ஒன்று இரண்டு மூன்று … ஈறிலி , திருவாளர் தோம்ப்கின் … நூல் தொடர் ஆகியவை மிகவும் பெயர்பெற்றவை. இன்னமும் முதல் வெளியீட்டுக்கு அரைநூற்றாண்டுக்குப் பின்னரும் அவரது நூல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு விற்பனையாகின்றன. இவை அறிவியலின் அடிப்படைகளையும் கணிதவியலையும் அறிமுகப்படுத்துவதிலும் விளக்குவதிலும் திறமை மிக்கனவாய் அமைகின்றன. ஆல்பா சிதைவைக் கண்டுபிடித்த ஜார்ஜ் காமோவ் ஆகஸ்டு 19, 1968ல் தனது 64வது அகவையில், கொலராடோ, அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
You must be logged in to post a comment.