அறிவிப்புகள்
அறிவிப்பு
தமிழகத்தில் பல சமுதாய பணிகள் செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், நாளை முதல் (09-01-2017) ஒரு லட்சம் மரக்கன்றகளை நடும் பணியிணை தொடங்குகிறார்கள்.
அறிவிப்புகள்
அறிவிப்பு
தமிழகத்தில் பல சமுதாய பணிகள் செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், நாளை முதல் (09-01-2017) ஒரு லட்சம் மரக்கன்றகளை நடும் பணியிணை தொடங்குகிறார்கள்.
ஐக்கிய அரபு அமீரகரத்தில் மழைத் தொழுகை 10-01-2017 அன்று காலை 07.30 மணியளவில் நடைபெறுகிறது. இந்த அழைப்பை அந்நாட்டின் ஜனாதிபதி. சேக் கலீஃபா பின் ஜயத் அல்நஹ்யான் விடுத்துள்ளார். இந்த மழைத் தொழுகையில் அமீரகத்தில் வாழும் நம் கீழக்கரை சகோதரர்களும் கலந்து கொள்ளுமாறு கீழை நியூஸ் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..
கீழக்கரை ஆடருத்தான் தெருவைச் சார்ந்த சவ்பான் என்ற சிறுவன் கடந்த ஒரு வாராமாக காணவில்லை. இச்சிறுவனைப் பற்றிய தகவல் அறிந்தால் 88837 96451 என்ற எண்ணில் அச்சிறுவனின் தகப்பனார் அப்பாஸ் அலிகான் அவர்களைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்.
சில தினங்களுக்கு முன்பு போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 19 மற்றும் பிப்ரவரி 23ம் தேதிகளில் நடைபெறும் என்று அரசாங்கத்தால் அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது. தற்பொழுது நாட்கள் மாற்றப்பட்டு மார்ச் 5 மற்றும் ஏப்ரல் 2நம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கீழக்கரையில் 06-01-2017 அன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. இதில் IT, Diploma, Arts & Science degree படித்தவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறும்படி கேட்டுக்கொள்ளபடிகிறார்கள்.
செய்தி உதவி:- Kilakkarai Classified..
உள்ளூர் விடுமுறை
இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை அருள்மிகு மங்களநாதசாமி கோவிலின் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு 11.01.2017 மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை நாளாகும். அதனை ஈடுகட்டும் வகையில் 28.01.2017 சனிக்கிழமை வேலை நாளாகும்.
– டாக்டர் நடராஜன்,
மாவட்ட ஆட்சியர், இராமநாதபுரம் மாவட்டம்.
கீழக்கரையில் 04.01.2017 மற்றம் 05.01.2017 ஆகிய இரண்டு நாட்கள் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வெற்றி நமதே எனும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி கருத்தரங்கம் காலை 10.30 மணி முதல் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியை பள்ளிக் கல்வித்துறை மற்றும் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்துகின்றனர். இந்நிகழ்ச்சியில் பல பாட வல்லுனர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் அனைத்து மாணவ மாணவிகளும் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
🕋 *ஹஜ் 2017/1438* 🕋
✈️ இவ் வருடம் அதாவது
ஹிஜ்ரீ 1438 = 2017 க் கான ஹஜ் யாத்திரை விண்ணப்பங்கள் அதாவது Haj Application Form இன்ஷா அல்லாஹ் *2/1/2017 திங்கள்கிழமை* முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது .
✈️ அதாவது ஹஜ் விண்ணப்பங்களை
1- 13/7 ரோசி டவர்
நுங்கம்பாக்கம் , சென்னை – யில் நேரிலோ
…… அல்லது
2- www.hajcommittee.gov. in
என்ற வெப்சைட் மூலம் பதிவிறக்கம் செய்தோ…..
……. அல்லது
3- ஆன் லைன் மூலமாக வோ
விண்ணப்பிக்கலாம் .
✈️ 2017/1438 ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் ஹாஜி களிடம் கண்டிப்பாக
📓 *24/01/2017* – க்கு முன் வழங்கப்பட்ட பாஸ்போர்ட் இருக்க வேண்டும் .
📓 *28/02/2018* வரை EXPIRY உள்ள பாஸ்போர்ட் இருக்க வேண்டும் .
📓 Machine Readable – எனும் புதிய வகை பாஸ்போர்ட் இருக்க வேண்டும் .
✈️ ஒரு ஹாஜி க்கு 300/- வீதம் திருப்பி அளிக்க முடியாத சேவை தொகை ( *non Refundable Processing Fee* ) செலுத்த வேண்டும் .
✈️ ஒரு கவரில் 5 பேர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் .
✈️ ஹஜ் – க்கு செலுத்த வேண்டிய அனைத்து பரிவர்த்தனை களை *SBI* அல்லது *UBI* ல் மட்டுமே செலுத்த வேண்டும் .
✈️ DD அல்லது CHEQUE ஏற்றுக் கொள்ள முடியாது .
✈️ கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து ( *அதாவது 2014/15/16* ) ஹஜ் யாத்திரை க்காக விண்ணப்பித்து குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படாதவர்கள் , இம்முறை குலுக்கல் இன்றி தேர்வு செய்ய ப்படுவார்கள் – ( அதாவது 4 th time எனும் *Reserve Categories*)
✈️ “`2/01/2017“` – அன்று 70 வயது பூர்த்தி யானவர்கள் மற்றும் அவருடன் இணைந்து செல்ல இரத்த பந்த உறவு உள்ள ஒரு துணை ( Campanian ) – குலுக்கல் இன்றி தேர்ந்தெடுக்க படுவார்கள் – அதாவது ( *70+* )
✈️📓 உங்கள் பாஸ்போர்ட் நகலுடன் Xerox – விண்ணப்பங்கள் சமர்பிக்க கடைசி தேதி = *24/01/2017*
☄☄☄☄
2017 ஹஜ் விண்ணப்பம் உடன் கண்டிப்பாக இணைக்க ப்பட வேண்டிய சான்று கள் – ( *Enclosure* )
1- 📝 பாஸ்போர்ட் நகல்
*Valid Passport Xerox*
2- 📝 முகவரி சான்று .
*Address*
3- 📝 இரத்து செய்ய ப்பட்ட வெற்று காசோலை .
*Canceled Bank Check*
4- 📝 *SBI அல்லது UBI வங்கி* யில் 300/- பணம் கட்டிய ரசீது – நகல் .
*300/- Bank Challan*
5- 📝 பொதுவகை {அ} General
*4th Timer*…{அ}
*70 +…………*{அ}
ஆகியோருக்கான சான்றிதழ் எனும் *அஃபிடவிட்*
*Affidavits*
✈️ விண்ணப்பம் அளிக்கும் ஹாஜி களின் பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோ .
*Passport size Color Photo*
📩 – 📩 – 📩
✈️ விண்ணப்பங்கள்
“`தமிழ்நாடு ஹஜ் கமிட்டி“` – சென்னைக்கு சமர்பிக்க வேண்டும் .
✈️ கடைசி தேதி
*24/01/2017* ஆகும் .
☄☄☄☄☄
அட்ரஸ் / விலாசம்
📩 தமிழ் நாடு ஹஜ் கமிட்டி
13/7 முதல் தளம் , ரோசி டவர்
{ நுங்கம்பாக்கம் ஹை ரோடு }
மகாத்மா காந்தி ரோடு
*சென்னை*
044-28252519
044-28227617
🕋☄🕋☄🕋
“`Issued for Public Awareness“`
– *பொது நலம் கருதி வெளியிடப்படுகிறது*
நாடு முழுவதும் ஜனவரி 19 மற்றும் பிப்ரவரி 23ம் தேதி தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது.
நாடு முழுவதும் ஜனவரி 19 மற்றும் பிப்ரவரி 23ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கும் மையம் செயல்படும். 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும். தமிழ் நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டு சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இம்முகாம்களில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கீழக்கரையில் 29-12-2016 அன்று மாலை 8.00 மணி அளவில் கீழை நியூஸ் இணைய தளம் ஆரம்பம், கீழக்கரை மக்கள் களம் அறிமுக நிகழ்ச்சி மற்றும் சட்டப்போராளிகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி வடக்கு தெரு இஸ்லாமிய அமைதி மையத்தில் குர்ஆன் கிராத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியை சாலிஹ் ஹுசைன் தொகுத்து வழங்கினார்.
மக்கள் களத்தின் பொருளாளர் மற்றும் அல் பையினா மெட்ரிகுலேசன் பள்ளியின் தாளாளர் ஜாஃபிர் சுலைமான் வரவேற்புரையாற்றினார்.
பின்னர் மக்கள் களத்தின் செயலாளர் மற்றும் கீழை நியுஸின் நிர்வாக குழு உறுப்பினர் முஜம்மில் கீழக்கரை மக்கள் களத்தின் அறிமுக உரையாற்றினார்.
மக்கள் களத்தின் தலைவர் மற்றும் கீழை நியுஸின் நிர்வாக குழு உறுப்பினர் அப்துல்லலா செய்யது ஆப்தீன் இணையதளத்தின் அறிமுக உரையாற்றினார்.
மக்கள் களத்தின் அரசியல் ஆலோசகர் ரஃபிக் கீழை நியூஸின் தினசரி காலண்டரை வெளியிட்டு வாழ்த்துரையாற்றினார்.
கீழக்கரையின் வரலாற்று ஆராய்ச்சியாளர் அ.மு சுல்தான் கீழை நியூஸின் இணையதளம் www.keelainews.com ஆரம்பம் செய்து கீழக்கரை உண்மை வரலாற்றை பகிர்ந்து கொண்டார்.
கீழக்கரை மக்கள் களத்தின் துணைத் தலைவர் மற்றும் கீழை நியுஸின் நிர்வாக குழு உறுப்பினர் சாலிஹ் ஹுசைன் சட்டப்போராளிகள் குழுமத்தின் செயல்பாடுகள் அதனால் ஏற்படும் நன்மைகளை விளக்கி கூறினார்.
சட்டப்போராளிகளுக்கான முதல் மூன்று பரிசுகள் மற்றும் மூன்று ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுகளை நாசா அறக்கட்டளையைச் சார்ந்த அகமது மிர்சா, மக்ரூஃப், ரஃபீக் மற்றும் PVM அறக்கட்டளையைச் சார்ந்த ரஜாக், கீழக்கரை வரலாற்று ஆய்வாளர் அ.மு சுல்தான், கீழக்கரை அமைதி மையத்தின் இமாம் ஆகியோர் பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.
மக்கள் நலப் பாதுகாப்பு கழகத்தின் செயலாளர் முகைதீன் இபுராஹீம் கடந்து வந்த பாதையையும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் நன்மைகளைப் பற்றியும் விளக்கினார்.
கீழக்கரை மக்கள் களத்தின் பொருளாளர் ஜாஃபிர் சுலைமான் கீழக்கரையில் ஆரம்பம் ஆக இருக்கும் சட்ட ஆலோசனை செயல்பாடுகள் மற்றும் அதனால் உள்ள பலன்களையும் விளக்கினார். வடக்குத் தெரு நாசா அறக்கட்டளை மூலம் 30-12-2016 ஆரம்பிக்க இருக்கும் வட்டியில்லா கடன் திட்டத்தின் விளக்கமும் அறிமுகமும் இந்நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியின் நன்றியுரையை சாலிஹ் ஹுசைன் வழங்கினார். இறுதியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சுகாதாரம் பற்றிய பிரசுரமும், கீழை நியுஸீன் தின காலண்டரும் வழங்கப்பட்டது.
To view the video of the full program please click below link..
https://www.facebook.com/syedabdeen/videos/10208203615196403/
கீழக்கரை நடுத்தெருவச் சர்ந்த அ.மு.சுல்தான் செய்யது இபுராஹிம் ( அபுபக்கர் அவர்களின் தகப்பனார், மெட்ராஸ் மரைக்கா மாமா, A.M Chicken Shop உரிமையாளர்) இன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் நல்லடக்கம் நாளை மாலை ஜும்மா பள்ளியில் நடைபெற இருக்கிறது. அவருடைய மறுமை வாழ்வு சிறக்க பிரார்திக்கவும்.
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பார்ந்த சகோதரர்களே .
இன்ஷாஅல்லாஹ் நாளை (29-12-2016) அன்று இஷா தொழுகைக்கு பிறகு 8.00 மணி முதல் 09.00 மணி வரை வடக்குத் தெரு கீழக்கரை இஸ்லாமிக் அமைதி மையத்தில் ( Kilakkarai Islamic peace Centre) சட்டப்போராளிகளுக்கு பரிசு வழங்கும் விழா மற்றும் நம் கீழை நியூஸ் (www.keelainews.com) இணையதளத்தின் அறிமுக நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, தவறாமல் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறாம். மேலும் கீழை நியூஸின் நடுநிலைத்தன்மை, செயல்பாடுகள் பற்றிய கருத்து பரிமாற்றங்களும் வரவேற்கப்படுகிறது இந்நிகழ்ச்சியில்…
கீழக்கரையில் 28-12-2016 மற்றும் 29-12-2016ஆகிய இரண்டு நாட்கள் காவேரி மருத்துவமனை மற்றும் இஸ்லாமிய கல்வி நிறுவனம் இணைந்து நடத்தும் இருதய சிகிச்சை முகாம் இஸ்லாமிய மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 வரை தடைபெறும்.
இம்முகாமில் சகோ. MMK இபுராஹிம், இஸ்லாமிய பள்ளி தாளாளர் தலைமையுரையாற்றுகிறார். ஜனாப்.H. சிராஜுதீன், ஹமீதியா துவக்கப்பள்ளி தாளாளர் அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார். திரு. S.சர்வேஸ் ராஜ், IPS, இராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் விழாவை துவக்கி வைக்கிறார்.இந்திகழ்ச்சியில் டாக்டர். AS. கியாசுதீன், நிர்வாக இயக்குனர், பயோனியர் மருத்துவமனை அவர்கள் முன்னிலை வகிக்கிறார்.
மேலும் இந்த விழாவில் டாக்டர்.M. பிரேம் சேகர், மூத்த குழந்தைகள் இருதய சிகிச்சை நிபுணர், டாக்டர்.அமல்.அ.லூயிஸ், மூத்த இருதய சிகிச்சை நிபுணர், டாக்டர். விக்னேஷ் புஷ்பராஜ்,மூட்டு முதுகுத்தண்டு சிகிச்சை நிபுணர் ஆகியோர் பங்கேற்க உள்ளார்கள். நிகழ்ச்சியின் இறுதியாக டாக்டர்.ஹபிப் அஹமது அப்துல் கயூம் அவர்கள் நன்றியுரை வழங்குகிறார்கள். இம்முகாமில் அனைவரும் பங்கேற்று பயன் பெறுமாறு நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் கேட்டு கொண்டுள்ளார்கள்.
கீழக்கரையில் உள்ள பழமையான சமுதாய அமைப்புகளில் மிக முக்கியமான ஒன்று நாசா(NASA) என்றழைக்கப்படும் வடக்குத் தெரு சமூக நல அமைப்பாகும். அந்த அமைப்பு சார்பாக வடக்கு தெரு சமூக நல தர்ம அறக்கட்டளை (NASA Trust) ஒன்று ஆரம்பம் செய்யப்பட்டு வட்டியில்லா கடன் திட்டம் ஆரம்பம் செய்யப்பட உள்ளது. அந்நிகழ்ச்சியின் விபரங்கள் கீழே:-
🗓நாள் : *30-12-2016* வெள்ளிக்கிழமை *🕔நேரம் :மாலை 4 மணி முதல்*
*🏢இடம்* “முஹ்யித்தீனியா ” பள்ளி
வடக்குத்தெரு
கீழக்கரை
*🔹நிகழ்ச்சி ஏற்பாடு*
*வடக்குத் தெரு சமூக நல அமைப்பு(NASA)*
வடக்குத்தெரு சமூக நல தர்ம அறக்கட்டளை
NORTH STREET ASSOCIATE for SOCIO-CHARITABLE ACTIVITIES TRUSTன் (NASA) கீழ் தொடங்கும்
*வட்டியில்லா அழகிய கடன் திட்டம் துவக்க விழா*
*🔹📜நிகழ்ச்சித் தொகுப்பு*
சகோ : முஸ்ஸம்மில்
(செயலாளர் IFL )
*திருக் குர் ஆன் வாசிப்பு*
*🔹🎙வரவேற்புரை*
சகோ.ஃபர்ஹான் பின் அஷ்ரப்
(துணை தலைவர் நாஷா)
*🔹🎙துவக்க உரை :*
இஜாஸ் முகம்மது (உறுப்பினர் நாஷா)
*தலைப்பு :*
நன்மையின் பக்கம் முன்னேறுவோம்
*மதரசா மாணவர்கள் நடத்தும் வட்டி குறித்த விழிப்புணர்வு நாடகம்*
*🔹🎙சிறப்புரை:*
*ஜனாப்.S.N.சிக்கந்தர்* (முன்னால் ஆசிரியர் சமரசம் பத்திரிக்கை,
மாநில தலைவர் Welfare Party of India)
*தலைப்பு*
*நபி(ஸல்) ஏற்படுத்திய முன்மாதிரி பொருளாதாரம்*
*சகோதிரி சாயிதா பானு*(MA..,B Ed..,)
(தாளாளர் அண்னை கதீஜா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி-அம்மா பட்டிணம்)
*தலைப்பு*
*பெண்களின் கடமைகளும் பொறுப்புகளும்*
*🔹நன்றியுரை:*
ஜனாப். மஹ்ரூப். (ஒருங்கினைப்பாளர் IFL )
குறிப்பு:பெண்களுக்கு தனி இட வசதி உண்டு
ஜனாசா அறிவிப்பு.
தெற்கு தெரு ஜமாஅத்தை சேர்ந்த நியாஸ் அவர்களின் தகப்பனாரும் தினமணி பத்திரிக்கை நிருபர் நிஸ்பர் அவர்களின் மாமனாருமாகிய SAH சர்புதின் (மாஸ்டர்) அவர்கள் வபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹிவ இன்னா இலைஹி ராஜிவூன்..
அவருடைய மறுமை வாழ்வுக்காக பிரார்திக்கவும்..
கீழக்கரையில் வரும் 31 டிசம்பர் 2016 அன்று இலவச கண் சிகிச்கை முகாம் நடைபெறுகிறது. கீழக்கரையில் உள்ள பழைய குத்பா ஜமா அத் மற்றும் இராமநாதபுரம் வாசன் கண் மருத்தவமனையும் இணைந்து இம்முகாமை நடத்துகிறார்கள். இம்முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சங்கு குளிகாரத் தெருவில் அமைந்துள்ள மஹ்தூமிய மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு மஹ்தூமிய பள்ளியின் தாளாளர் ஹாஜி. A.K.S ஹமீது சுல்தானி அவர்கள் தலைமை தாங்குகிறார்கள். இந்நிகழ்ச்சியின் ஒருங்கினைப்பு பணியை பழைய குத்பா பள்ளி ஜமாத் தலைவர் ஜனாப்.ஹாஜி H. முகைதீன் அவர்கள் செய்கிறார்கள். மேலும் கிழக்குத் தெரு ஜமாஅத் உதவிப் பொருளாளர் ஜனாப். M.முகம்மது அஜிஹர் அவர்கள் இம்முகாமை தொடங்கி வைக்கிறார்கள். இந்த முகாமில் கண் புரை, கண்ணில் நீர் அழுத்தம், கண்ணில் நீர் வடிதல், கண்ணில் சரை வளர்தல், ஒற்றை தலைவலி கண் பார்வை குறைபாடுகள் போன்ற நோய்களுக்கு ஆலேசானைகள் வழங்கப்படும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளார்கள். மேலும் இம்முகாம் சிறந்த முறையில் நடைபெற மக்கள் நல பாதுகாப்பு கழகம், கீழக்கரை மக்கள் களம் மற்றும் கீழக்கரை சட்டபோராளி இணையதள குழுமம் ஆகியோர் தங்களுடைய முழு ஆதரவை அளித்துள்ளார்கள்.
கீழக்கரை, பழைய குத்பா பள்ளி ஜமாஅத்தை சேர்ந்த மர்ஹூம். ச. முகம்மது அசனா லெப்பை ( ச.மு) அவர்களின் மகனாரும். மர்ஹூம். A.S.A முகம்மது சேகு நெய்னா அவர்களின் மருமகனும். மர்ஹூம் இபுராகிம் கணி என்ற வசந்த மாளிகை சுல்தான், மர்ஹூம். அகமது தம்பி, மர்ஹூம். ச.மு. லத்தீப் (கல்கத்தா ஸ்டோர்) , ஜனாப். ச.மு. மஜீத் (இந்தியன் ஸ்டோர்) , மர்ஹூம். ச.மு. சாகுல் ஹமீது கல்கத்தா பிலாஸ்டிக் ஆகியோரின் தம்பியும், ஜனாப். அகமது சுல்தான், ஜனாப். சபீர் அலி ஆகியோரின் மச்சானுமாகிய ச.மு. முகம்மது (கல்கத்தா முகம்மது) அவர்கள் 22/12/2016 மாலை 5.30 மணியளவில் சென்னையில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னாஇலைகி ராஜிஹூன். அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் சென்னை ராயப்பேட்டை மையவாடியில் காலை 10.00 மணியளவில் நல்லடக்கம் செய்யபடும்.
அன்னாரின் பிழைகளை மண்ணித்து ஜன்னத்துல் ஃபிர்தவுஸ் என்னும் சொற்க்கத்தை வளங்கி, கபுரை விசாலமாக்கி, மருமை வாழ்க்கை சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புறிவானாக..
கீழக்கரை வடக்குத் தெருவைச் சார்ந்த யூசுப் சித்திக் அலி (57) எனும் முதியவர் இன்று காலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாசலில் பணம் எடுக்க வரிசையில் காத்து நின்ற பொழுது மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றபோதும் சிகிச்சை பலன் அளிக்காமல் வபாத்தாகிவிட்டடார்கள். இன்னும் இந்த அரசாங்கத்தின் அவசரகோல திட்டம் எத்தனை அப்பாவி மக்களை பலி வாங்கப் போகிறதோ தெரியவில்லை..
கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியாகும் மாலாக்குண்டு. இந்த இடத்தில் கீழை நகரக்கு குடீ நீர் கொண்டு செல்லப்படும் நீர் இறைக்கும் (Pumping station) நிலையம் செயல்பட்டு வந்தது. ஆனால் சரியான பராமரிப்பு இல்லாததால் கடந்த பல மாதங்களாக சிதிலமாகி உபயோகமற்ற நிலையில் இருந்து வந்தது. இன்று கீழக்கரை நகராட்சி ஆணையர் திரு. சந்திரசேகர் (பொறுப்பு), சுகாதார ஆய்வாளர் திரு. திண்ணாயிரமூர்த்தி, சுகாதார மேற்பார்வையாளர் திரு. மனோகரன் மற்றும் பல நகராட்சி ஊழியர்கள் இந்நிலையத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்கள். இதை சரி செய்வதன் மூலம் கீழக்கரை மக்களுக்கு சுகாதாரமான முறையில் குடி நீர் கிடைக்க வழிவகுக்கப்படுகிறது. இதுபோல் மக்களுக்கு உபயோகமான செயல்களை கண்டறிந்து சரி படுத்தினால் மக்கள் நல்ல முறையில் பயனடைய வாய்ப்பு இருக்கிறது.
You must be logged in to post a comment.