12
தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பாக திருமணம் முடிக்கும் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் என்ற திட்டத்தின் கீழ் 8கிராம் தங்கம் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது. இதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கிராமப்புற பகுதியிலுள்ள பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியயயய அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் ரஞ்சனி சுதந்திரம் தலைமையேற்று பெண்களுக்கு 8 கிராம் தங்கத்தை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.விழாவில் 105 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.