குண்டர் தடுப்பு சட்டத்தில் கொலைக் குற்றவாளிகள் இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை வழக்கிலும், புளியங்குடி பகுதியில் மணல் திருட்டு போன்ற தொடர் குற்ற செயல்களிலும் ஈடுபட்டு வந்த சிந்தாமணி பகுதியை சேர்ந்த மாரிப்பாண்டி என்ற நபரையும்,சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கு மற்றும் தொடர் குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த கிடாரக்குளம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவரின் மகன் கோபால் @ நவநீத கோபாலகிருஷ்ணன் ஆகிய 02 நபர்கள் மீதும் பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ், விஜயகுமார் (கடையநல்லூர் காவல் ஆய்வாளருக்கு) தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS அறிவுறுத்தியதன் பேரில்,காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேற்படி நபர்களையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில், மேற்படி புளியங்குடி சிந்தாமணி பகுதியை சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன் மாரிபாண்டி என்ற நபர் மற்றும் கிடாரக்குளம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவரின் மகன் கோபால் @ நவநீத கோபாலகிருஷ்ணன் ஆகிய இரண்டு நபர்களையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை 19.01.2022 அன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் காவல் ஆய்வாளர் விஜயகுமார் சமர்பித்தார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.