மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஓம் சக்தி நகர் அடுத்த ஜெ.ஜெ.நகர் பகுதியில் இன்று காலை 9 மணி அளவில் மூன்று புள்ளி மான்கள் வந்தன அதனை அடுத்து அப்பகுதியில் உள்ள மக்கள் பரபரப்படைந்தனர். புள்ளிமான்கள்பகுதியைச் சேர்ந்த டிரைவர் பாலா என்பவர் வீட்டினுள் நுழைந்தது சிறிது நேரம் அங்கே நின்றது.புள்ளிமான்களை கண்ட நாய்கள் குறைக்கவும் மூன்று மான்களும் அங்கிருந்து தப்பி ஓடியது இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் காவல்துறை மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.நகர்ப்புறப் பகுதிகளான ஜே ஜே நகர் பகுதியில் திடீரென புள்ளிமான்கள் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.