மதுரை கோவலன் நகர் லட்சுமி நகர் ரமண மகரிஷி கார்டன் தெருவை சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் இவர் மற்றும் இவரது மனைவி மற்றும் மகன் வீட்டில் இருந்துள்ளனர் இன்று மதியம் அவர் வீட்டில் வளர்க்கப்படும் நாய் அதிக அளவு குறைக்க தொடங்கியது எப்பொழுதுமே நான் இந்த அளவிற்கு தொலைத்தது இல்லையே என்று வெளியே வந்து பார்த்தபோது அங்கு சுமார் 3 அடி உள்ள ஒரு நல்ல பாம்பு படமெடுத்து ஆடிக் கொண்டிருந்தது இதைக்கண்டு அதிர்ந்து போன வெங்கடகிருஷ்ணன். உடனடியாக ஈஷா பாம்பு பிடி நண்பர்களுக்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு வந்த ஈஷா பாம்பு பிடி நண்பர் இயக்கத்தைச் சேர்ந்த சிவா லாவகமாக அந்தப் பாம்பினை பிடித்து பத்திரமாக அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டார் வீட்டுக்குள் பாம்பு வருவதை கண்ட வளர்ப்பு நாய் அந்த பாம்பை தன் உயிரை துச்சமாக நினைத்து தன் உரிமையாளரை காப்பாற்ற நினைத்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மேலும் வெங்கடகிருஷ்ணன் கூறுகையில் நாங்கள் எக்காரணத்தை கொண்டும் பாம்பு இங்கு வந்தாலும் நாங்கள் அடிக்க மாட்டோம் எப்பொழுதாவது பாம்பு இங்கு வரும் ஆனால் இன்று பகல் நேரத்திலேயே வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது எனினும் நாங்கள் பாம்பை அடிக்க மாட்டோம் ஈஷா பாம்பு பிடி நண்பர்களுக்கு தகவல் கொடுக்கவும் அவர்கள் வந்து பாம்பை பத்திரமாக மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டுவிடுவார்கள் ஆனால் இன்று வீட்டுக்குள் வர இருந்த அதிக விஷத்தன்மை கொண்ட பாம்பு தனது உயிரை பணையம் வைத்து எங்களை காப்பாற்றுவது என்ன சொல்வது என்று எங்களுக்கு தெரியவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்தார்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.