தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி முகாமினை (10.01.22) திங்கள் கிழமை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் துவக்கி வைத்தார். தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 4038 பேருக்கு முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், சுகாதாரத்துறையில் உள்ள களப்பணியாளர்கள், பேரூராட்சி,ஊராட்சி பகுதியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், காவல் துறையினர், பத்திரிகையாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுள்ளபெரியவர்களுக்கான முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி முகாம் 10.01.22 திங்கள் கிழமை துவக்கி வைக்கப்பட்டது. மேலும், 2 டோஸ் முழுமையாக செலுத்திக் கொண்டு 9 மாதங்கள் பூர்த்திசெய்தவர்கள் முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆகவே தகுதியான நபர்கள் தங்களுக்கு அருகாமையில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களுக்கு ஆதார் எண் மற்றும் கைபேசி எண்ணுடன் சென்றுமுன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி செலுத்திக கொள்ளலாம். இந்நிகழ்ச்சியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பழனிநாடார் (தென்காசி), ஈ.ராஜா (சங்கரன்கோவில்), மரு.தி.சதன் திருமலைக்குமார் (வாசுதேவநல்லூர்), மாவட்ட செயலாளாகள் பொ.சிவபத்மநாதன் (தெற்கு),செல்லத்துரை (வடக்கு), மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் சு.தமிழ்ச் செல்வி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தி.உதய கிருஷ்ணன், தென்காசி ஊராட்சி மன்ற தலைவர் ஷேக் அப்துல்லா, இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.வெங்கட்ரங்கன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்),(பொ) மரு.போஸ்கோராஜ், அரசு தலைமை மருத்துவமனைகண்காணிப்பாளர் மரு.ஜெஸ்லின், அரசு அலுவலர்கள் உட்பட முன்களப் பணியாளர்க பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.